< 2 யோவான் 1 >

1 சபைத்தலைவனாகிய நான், இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மதிப்புக்குரிய அம்மையார் அவர்களுக்கும், அவளுடைய பிள்ளைகளுக்கும் எழுதுகிறதாவது, சத்தியத்திற்காக, நான் உங்களில் அன்பாயிருக்கிறேன். நான் மட்டுமல்ல, இறைவனின் சத்தியத்தை அறிந்த அனைவருமே உங்களில் அன்பாயிருக்கிறார்கள்.
ಹೇ ಅಭಿರುಚಿತೇ ಕುರಿಯೇ, ತ್ವಾಂ ತವ ಪುತ್ರಾಂಶ್ಚ ಪ್ರತಿ ಪ್ರಾಚೀನೋಽಹಂ ಪತ್ರಂ ಲಿಖಾಮಿ|
2 நம்மில் குடிகொண்டிருக்கும் சத்தியத்தின் நிமித்தமாகவே நாங்கள் இவ்விதமாய் அன்பு செலுத்துகிறோம். இந்த சத்தியம் நம்முடன் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்: (aiōn g165)
ಸತ್ಯಮತಾದ್ ಯುಷ್ಮಾಸು ಮಮ ಪ್ರೇಮಾಸ್ತಿ ಕೇವಲಂ ಮಮ ನಹಿ ಕಿನ್ತು ಸತ್ಯಮತಜ್ಞಾನಾಂ ಸರ್ವ್ವೇಷಾಮೇವ| ಯತಃ ಸತ್ಯಮತಮ್ ಅಸ್ಮಾಸು ತಿಷ್ಠತ್ಯನನ್ತಕಾಲಂ ಯಾವಚ್ಚಾಸ್ಮಾಸು ಸ್ಥಾಸ್ಯತಿ| (aiōn g165)
3 பிதாவாகிய இறைவனாலும் பிதாவின் மகனாகிய இயேசுகிறிஸ்துவினாலும் வரும் கிருபையும், இரக்கமும், சமாதானமும், சத்தியத்தை அறிந்து, அன்பில் நடக்கும் நம்முடன் இருப்பதாக.
ಪಿತುರೀಶ್ವರಾತ್ ತತ್ಪಿತುಃ ಪುತ್ರಾತ್ ಪ್ರಭೋ ರ್ಯೀಶುಖ್ರೀಷ್ಟಾಚ್ಚ ಪ್ರಾಪ್ಯೋ ಽನುಗ್ರಹಃ ಕೃಪಾ ಶಾನ್ತಿಶ್ಚ ಸತ್ಯತಾಪ್ರೇಮಭ್ಯಾಂ ಸಾರ್ದ್ಧಂ ಯುಷ್ಮಾನ್ ಅಧಿತಿಷ್ಠತು|
4 பிதா நமக்குக் கட்டளையிட்டபடி, உங்களது பிள்ளைகளில் சிலர் சத்திய வழியில் நடப்பதைக் குறித்து அறிந்தபோது, அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
ವಯಂ ಪಿತೃತೋ ಯಾಮ್ ಆಜ್ಞಾಂ ಪ್ರಾಪ್ತವನ್ತಸ್ತದನುಸಾರೇಣ ತವ ಕೇಚಿದ್ ಆತ್ಮಜಾಃ ಸತ್ಯಮತಮ್ ಆಚರನ್ತ್ಯೇತಸ್ಯ ಪ್ರಮಾಣಂ ಪ್ರಾಪ್ಯಾಹಂ ಭೃಶಮ್ ಆನನ್ದಿತವಾನ್|
5 இப்பொழுதும் அன்பான அம்மையாரே, நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையை எழுதவில்லை. நாம் ஆரம்பத்தில் பெற்றுக்கொண்ட அதே கட்டளையையே எழுதுகிறேன். நாம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும் என்றே நான் கேட்டுக்கொள்கிறேன்.
ಸಾಮ್ಪ್ರತಞ್ಚ ಹೇ ಕುರಿಯೇ, ನವೀನಾಂ ಕಾಞ್ಚಿದ್ ಆಜ್ಞಾಂ ನ ಲಿಖನ್ನಹಮ್ ಆದಿತೋ ಲಬ್ಧಾಮ್ ಆಜ್ಞಾಂ ಲಿಖನ್ ತ್ವಾಮ್ ಇದಂ ವಿನಯೇ ಯದ್ ಅಸ್ಮಾಭಿಃ ಪರಸ್ಪರಂ ಪ್ರೇಮ ಕರ್ತ್ತವ್ಯಂ|
6 நாம் இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதே அன்பு. நீங்கள் ஆரம்பத்தில் கேள்விப்பட்டிருக்கிறபடி, நாம் அன்பிலே நடக்கவேண்டும் என்பதே அவருடைய கட்டளை.
ಅಪರಂ ಪ್ರೇಮೈತೇನ ಪ್ರಕಾಶತೇ ಯದ್ ವಯಂ ತಸ್ಯಾಜ್ಞಾ ಆಚರೇಮ| ಆದಿತೋ ಯುಷ್ಮಾಭಿ ರ್ಯಾ ಶ್ರುತಾ ಸೇಯಮ್ ಆಜ್ಞಾ ಸಾ ಚ ಯುಷ್ಮಾಭಿರಾಚರಿತವ್ಯಾ|
7 ஏனெனில் பல ஏமாற்றுக்காரர்கள் புறப்பட்டு உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள், அவர்கள் இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வந்தார் என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள். இப்படிப்பட்ட எவரும் ஏமாற்றுக்காரரும் கிறிஸ்துவின் விரோதியுமாய் இருக்கிறார்கள்.
ಯತೋ ಬಹವಃ ಪ್ರವಞ್ಚಕಾ ಜಗತ್ ಪ್ರವಿಶ್ಯ ಯೀಶುಖ್ರೀಷ್ಟೋ ನರಾವತಾರೋ ಭೂತ್ವಾಗತ ಏತತ್ ನಾಙ್ಗೀಕುರ್ವ್ವನ್ತಿ ಸ ಏವ ಪ್ರವಞ್ಚಕಃ ಖ್ರೀಷ್ಟಾರಿಶ್ಚಾಸ್ತಿ|
8 ஆகவே நீங்கள் உங்கள் கடும் உழைப்பின் பலனை இழந்துபோகாமல் கவனமாயிருங்கள். அந்த வெகுமதியை நீங்கள் முழுநிறைவாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ಅಸ್ಮಾಕಂ ಶ್ರಮೋ ಯತ್ ಪಣ್ಡಶ್ರಮೋ ನ ಭವೇತ್ ಕಿನ್ತು ಸಮ್ಪೂರ್ಣಂ ವೇತನಮಸ್ಮಾಭಿ ರ್ಲಭ್ಯೇತ ತದರ್ಥಂ ಸ್ವಾನಧಿ ಸಾವಧಾನಾ ಭವತಃ|
9 கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திருக்காமல், வரம்புமீறிச் செல்கின்ற எவரோடும் இறைவன் இருப்பதில்லை. ஆனால் கிறிஸ்துவின் போதனைகளில் தொடர்ந்து நிலைத்திருக்கிறவன், பிதாவையும் அவருடைய மகனையும் உடையவனாயிருக்கிறான்.
ಯಃ ಕಶ್ಚಿದ್ ವಿಪಥಗಾಮೀ ಭೂತ್ವಾ ಖ್ರೀಷ್ಟಸ್ಯ ಶಿಕ್ಷಾಯಾಂ ನ ತಿಷ್ಠತಿ ಸ ಈಶ್ವರಂ ನ ಧಾರಯತಿ ಖ್ರೀಷ್ಟಸ್ಯ ಶಿಜ್ಞಾಯಾಂ ಯಸ್ತಿಷ್ಠತಿ ಸ ಪಿತರಂ ಪುತ್ರಞ್ಚ ಧಾರಯತಿ|
10 உங்களிடம் வருகிற யாராகிலும் இந்த போதனையைக் கொண்டுவராவிட்டால், அவனை உங்களுடைய வீட்டிற்குள் ஏற்றுக்கொள்ளவோ, வரவேற்கவோ வேண்டாம்.
ಯಃ ಕಶ್ಚಿದ್ ಯುಷ್ಮತ್ಸನ್ನಿಧಿಮಾಗಚ್ಛನ್ ಶಿಕ್ಷಾಮೇನಾಂ ನಾನಯತಿ ಸ ಯುಷ್ಮಾಭಿಃ ಸ್ವವೇಶ್ಮನಿ ನ ಗೃಹ್ಯತಾಂ ತವ ಮಙ್ಗಲಂ ಭೂಯಾದಿತಿ ವಾಗಪಿ ತಸ್ಮೈ ನ ಕಥ್ಯತಾಂ|
11 ஏனெனில், யாராவது அப்படிப்பட்ட ஒருவனை வரவேற்றால், இவர்களும் அவனுடைய கொடிய செயலுக்குப் பங்காளியாகிறார்கள்.
ಯತಸ್ತವ ಮಙ್ಗಲಂ ಭೂಯಾದಿತಿ ವಾಚಂ ಯಃ ಕಶ್ಚಿತ್ ತಸ್ಮೈ ಕಥಯತಿ ಸ ತಸ್ಯ ದುಷ್ಕರ್ಮ್ಮಣಾಮ್ ಅಂಶೀ ಭವತಿ|
12 உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; ஆனால் நான் அவற்றை மையினால் காகிதங்களில் எழுத விரும்பவில்லை. நான் உங்களைச் சந்தித்து, நேரடியாகவே அவற்றைக்குறித்துப் பேச விரும்புகிறேன். அப்பொழுதே நமது சந்தோஷம் முழுநிறைவுபெறும்.
ಯುಷ್ಮಾನ್ ಪ್ರತಿ ಮಯಾ ಬಹೂನಿ ಲೇಖಿತವ್ಯಾನಿ ಕಿನ್ತು ಪತ್ರಮಸೀಭ್ಯಾಂ ತತ್ ಕರ್ತ್ತುಂ ನೇಚ್ಛಾಮಿ, ಯತೋ ಽಸ್ಮಾಕಮ್ ಆನನ್ದೋ ಯಥಾ ಸಮ್ಪೂರ್ಣೋ ಭವಿಷ್ಯತಿ ತಥಾ ಯುಷ್ಮತ್ಸಮೀಪಮುಪಸ್ಥಾಯಾಹಂ ಸಮ್ಮುಖೀಭೂಯ ಯುಷ್ಮಾಭಿಃ ಸಮ್ಭಾಷಿಷ್ಯ ಇತಿ ಪ್ರತ್ಯಾಶಾ ಮಮಾಸ್ತೇ|
13 தெரிந்துகொள்ளப்பட்ட உங்கள் சகோதரியின் பிள்ளைகளும் தங்களுடைய வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள்.
ತವಾಭಿರುಚಿತಾಯಾ ಭಗಿನ್ಯಾ ಬಾಲಕಾಸ್ತ್ವಾಂ ನಮಸ್ಕಾರಂ ಜ್ಞಾಪಯನ್ತಿ| ಆಮೇನ್|

< 2 யோவான் 1 >