< 2 கொரிந்தியர் 5 >
1 இப்பொழுது எங்கள் கண்களுக்குத் தெரிகின்றபடி, நாம் வாழும் பூமிக்குரிய கூடாரமாகிய நமது உடல் அழிந்துபோனாலும், நமக்கு இறைவனிடமிருந்து கிடைக்கும் ஒரு கட்டடம் உண்டு. அது மனித கைகளினால் கட்டப்படாத, பரலோகத்தில் உள்ள ஒரு நித்திய வீடு. (aiōnios )
১অপৰম্ অস্মাকম্ এতস্মিন্ পাৰ্থিৱে দূষ্যৰূপে ৱেশ্মনি জীৰ্ণে সতীশ্ৱৰেণ নিৰ্ম্মিতম্ অকৰকৃতম্ অস্মাকম্ অনন্তকালস্থাযি ৱেশ্মৈকং স্ৱৰ্গে ৱিদ্যত ইতি ৱযং জানীমঃ| (aiōnios )
2 அதுவரைக்கும் நாங்கள் எங்கள் பரலோகக் குடியிருப்பை, தவிப்புடன் உடையைப்போல் அணிந்துகொள்ள வாஞ்சையாய் இருக்கிறோம்.
২যতো হেতোৰেতস্মিন্ ৱেশ্মনি তিষ্ঠন্তো ৱযং তং স্ৱৰ্গীযং ৱাসং পৰিধাতুম্ আকাঙ্ক্ষ্যমাণা নিঃশ্ৱসামঃ|
3 ஏனெனில் நாம் அவ்விதம் உடுத்தியிருக்கும்போது, நாங்கள் நிர்வாணிகளாய் காணப்படமாட்டோம்.
৩তথাপীদানীমপি ৱযং তেন ন নগ্নাঃ কিন্তু পৰিহিতৱসনা মন্যামহে|
4 இந்த உடலாகிய கூடாரத்தில் இருக்கும்வரையில் நாங்கள் அவதியுற்றுத் தவிக்கிறோம். நாங்கள் செத்து உடையற்றவர்களாய் இருக்கவேண்டும் என்பதல்ல. நாங்கள் பரலோகக் குடியிருப்பை உடையைப்போல் அணிந்துகொள்ள வேண்டுமென்றே விரும்புகிறோம். அப்பொழுது சாகும் தன்மையுள்ள இந்த உடல் வாழ்வினால் ஆட்கொள்ளப்படும்.
৪এতস্মিন্ দূষ্যে তিষ্ঠনতো ৱযং ক্লিশ্যমানা নিঃশ্ৱসামঃ, যতো ৱযং ৱাসং ত্যক্তুম্ ইচ্ছামস্তন্নহি কিন্তু তং দ্ৱিতীযং ৱাসং পৰিধাতুম্ ইচ্ছামঃ, যতস্তথা কৃতে জীৱনেন মৰ্ত্যং গ্ৰসিষ্যতে|
5 இந்த முக்கிய நோக்கத்திற்காகவே, இறைவன் எங்களை உண்டாக்கியிருக்கிறார். அவரே வரவேண்டியவற்றிற்கு உத்தரவாதமாக, தனது ஆவியானவரை நிலையான வைப்பாக எங்களுக்குத் தந்திருக்கிறார்.
৫এতদৰ্থং ৱযং যেন সৃষ্টাঃ স ঈশ্ৱৰ এৱ স চাস্মভ্যং সত্যঙ্কাৰস্য পণস্ৱৰূপম্ আত্মানং দত্তৱান্|
6 ஆகையால் நாங்கள் எப்பொழுதும் மனத்தைரியத்தோடு இருக்கிறோம். எங்கள் உடலாகிய வீட்டில் குடியிருக்கும் காலம்வரை, கர்த்தரிடமிருந்து புறம்பாயிருக்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம்.
৬অতএৱ ৱযং সৰ্ৱ্ৱদোৎসুকা ভৱামঃ কিঞ্চ শৰীৰে যাৱদ্ অস্মাভি ৰ্ন্যুষ্যতে তাৱৎ প্ৰভুতো দূৰে প্ৰোষ্যত ইতি জানীমঃ,
7 ஏனெனில் நாம் காண்பதினால் அல்ல, விசுவாசிப்பதினாலேயே வாழ்கிறோம்.
৭যতো ৱযং দৃষ্টিমাৰ্গে ন চৰামঃ কিন্তু ৱিশ্ৱাসমাৰ্গে|
8 நாங்கள் மனத்தைரியத்துடனே இருக்கிறோம். ஆனால் இந்த உடலைவிட்டு வெளியேறி, கர்த்தரோடு குடியிருக்கவே அதிகமாய் விரும்புகிறோம்.
৮অপৰঞ্চ শৰীৰাদ্ দূৰে প্ৰৱস্তুং প্ৰভোঃ সন্নিধৌ নিৱস্তুঞ্চাকাঙ্ক্ষ্যমাণা উৎসুকা ভৱামঃ|
9 எனவே நாங்கள் உடலில் குடியிருந்தாலும், அல்லது உடலைவிட்டு வெளியே போனாலும், அவருக்கு பிரியமாய் வாழ்வதையே எங்கள் குறிக்கோளாகும்.
৯তস্মাদেৱ কাৰণাদ্ ৱযং তস্য সন্নিধৌ নিৱসন্তস্তস্মাদ্ দূৰে প্ৰৱসন্তো ৱা তস্মৈ ৰোচিতুং যতামহে|
10 ஏனெனில், நாம் எல்லோருமே கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பின் அரியணைக்கு முன்பாக நிற்கவேண்டும். அப்பொழுது நாம் ஒவ்வொருவரும் உடலில் குடியிருந்தபோது செய்த நன்மையினாலும் தீமையினாலும், அவற்றிற்கு ஏற்ற பலனைப் பெற்றுக்கொள்வோம்.
১০যস্মাৎ শৰীৰাৱস্থাযাম্ একৈকেন কৃতানাং কৰ্ম্মণাং শুভাশুভফলপ্ৰাপ্তযে সৰ্ৱ্ৱৈস্মাভিঃ খ্ৰীষ্টস্য ৱিচাৰাসনসম্মুখ উপস্থাতৱ্যং|
11 ஆகவே நாங்கள், கர்த்தருக்குப் பயப்படுதல் என்றால் என்ன என்பதை அறிந்திருக்கிறபடியால், இறைவனிடம் திரும்பும்படி மனிதரை இணங்கவைக்க முயலுகிறோம். நாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று இறைவன் நன்கு அறிவார். அதுபோலவே, உங்களுடைய மனசாட்சிக்கும் தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.
১১অতএৱ প্ৰভো ৰ্ভযানকৎৱং ৱিজ্ঞায ৱযং মনুজান্ অনুনযামঃ কিঞ্চেশ্ৱৰস্য গোচৰে সপ্ৰকাশা ভৱামঃ, যুষ্মাকং সংৱেদগোচৰেঽপি সপ্ৰকাশা ভৱাম ইত্যাশংসামহে|
12 நாங்களோ மறுபடியும் எங்களை உங்களுக்கு முன்பாக சிபாரிசு செய்ய முயற்சிக்கவில்லை. ஆனால் எங்களைக் குறித்து நீங்கள் பெருமையடையத்தக்க ஒரு சந்தர்ப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம். அப்போது இருதயத்தில் இருப்பதைப் பார்க்கிலும், வெளித்தோற்றத்தில் காணப்படுவதைக் குறித்து பெருமையடைவோருக்கு நீங்களே தகுந்த பதில் கூறமுடியும்.
১২অনেন ৱযং যুষ্মাকং সন্নিধৌ পুনঃ স্ৱান্ প্ৰশংসাম ইতি নহি কিন্তু যে মনো ৱিনা মুখৈঃ শ্লাঘন্তে তেভ্যঃ প্ৰত্যুত্তৰদানায যূযং যথাস্মাভিঃ শ্লাঘিতুং শক্নুথ তাদৃশম্ উপাযং যুষ্মভ্যং ৱিতৰামঃ|
13 நாங்கள் பைத்தியக்காரராக இருக்கிறோம் என்றால், இறைவனுக்காகவே நாங்கள் அப்படியிருக்கிறோம். நாங்கள் தெளிந்த மனதையுடையவர்களாக இருக்கிறோம் என்றால், உங்களுக்காகவே நாங்கள் அப்படியிருக்கிறோம்.
১৩যদি ৱযং হতজ্ঞানা ভৱামস্তৰ্হি তদ্ ঈশ্ৱৰাৰ্থকং যদি চ সজ্ঞানা ভৱামস্তৰ্হি তদ্ যুষ্মদৰ্থকং|
14 கிறிஸ்துவின் அன்பு எங்களை வலியுறுத்தி ஏவுகிறது. ஏனெனில், நம் எல்லோருக்காகவும் ஒருவர் இறந்தார்; இதனால் நாம் எல்லோருமே இறந்தோம் என்று நாங்கள் நிச்சயமாகவே நம்புகிறோம்.
১৪ৱযং খ্ৰীষ্টস্য প্ৰেম্না সমাকৃষ্যামহে যতঃ সৰ্ৱ্ৱেষাং ৱিনিমযেন যদ্যেকো জনোঽম্ৰিযত তৰ্হি তে সৰ্ৱ্ৱে মৃতা ইত্যাস্মাভি ৰ্বুধ্যতে|
15 அவர் எல்லோருக்காகவுமே இறந்தார், இதனால் வாழ்கிறவர்கள் இனிமேல் தங்களுக்கென வாழக்கூடாது. அவர்கள் தங்களுக்காக இறந்து, மீண்டும் உயிருடன் எழுப்பப்பட்டவருக்காகவே வாழவேண்டும்.
১৫অপৰঞ্চ যে জীৱন্তি তে যৎ স্ৱাৰ্থং ন জীৱন্তি কিন্তু তেষাং কৃতে যো জনো মৃতঃ পুনৰুত্থাপিতশ্চ তমুদ্দিশ্য যৎ জীৱন্তি তদৰ্থমেৱ স সৰ্ৱ্ৱেষাং কৃতে মৃতৱান্|
16 எனவே, இனிமேலும் நாங்கள் உலக நோக்கத்தின்படி ஒருவரையும் மதிப்பீடு செய்வதில்லை. முன்பு கிறிஸ்துவையும் நாங்கள் அப்படியே மதிப்பிட்டோம். ஆனால் இனி ஒருபோதும், நாங்கள் அவரை அவ்வாறு மதிப்பிடுவதில்லை.
১৬অতো হেতোৰিতঃ পৰং কোঽপ্যস্মাভি ৰ্জাতিতো ন প্ৰতিজ্ঞাতৱ্যঃ| যদ্যপি পূৰ্ৱ্ৱং খ্ৰীষ্টো জাতিতোঽস্মাভিঃ প্ৰতিজ্ঞাতস্তথাপীদানীং জাতিতঃ পুন ৰ্ন প্ৰতিজ্ঞাযতে|
17 ஆகவே, யாராவது கிறிஸ்துவில் இருந்தால், புதிய படைப்பு வந்திருக்கிறது: பழையவைகள் ஒழிந்து போனது, எல்லாம் புதியவைகள் ஆனது.
১৭কেনচিৎ খ্ৰীষ্ট আশ্ৰিতে নূতনা সৃষ্টি ৰ্ভৱতি পুৰাতনানি লুপ্যন্তে পশ্য নিখিলানি নৱীনানি ভৱন্তি|
18 இவையெல்லாம் இறைவனிடமிருந்தே வருகிறது. அவரே கிறிஸ்துவின் மூலமாய், எங்களைத் தம்முடனே ஒப்புரவாக்கிக் கொண்டார். அவரே, இந்த ஒப்புரவாக்குகின்ற ஊழியத்தையும் எங்களுக்குக் கொடுத்தார்:
১৮সৰ্ৱ্ৱঞ্চৈতদ্ ঈশ্ৱৰস্য কৰ্ম্ম যতো যীশুখ্ৰীষ্টেন স এৱাস্মান্ স্ৱেন সাৰ্দ্ধং সংহিতৱান্ সন্ধানসম্বন্ধীযাং পৰিচৰ্য্যাম্ অস্মাসু সমৰ্পিতৱাংশ্চ|
19 “இப்பொழுது இறைவன் மனிதருடைய பாவங்களை அவர்களுக்கெதிராகக் கணக்கு வைக்காமல், கிறிஸ்துவின் மூலமாக உலகத்தைத் தம்முடன் ஒப்புரவாக்கினார்.” இந்த ஒப்புரவாக்கும் செய்தியையே, அவர் எங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்.
১৯যতঃ ঈশ্ৱৰঃ খ্ৰীষ্টম্ অধিষ্ঠায জগতো জনানাম্ আগাংসি তেষাম্ ঋণমিৱ ন গণযন্ স্ৱেন সাৰ্দ্ধং তান্ সংহিতৱান্ সন্ধিৱাৰ্ত্তাম্ অস্মাসু সমৰ্পিতৱাংশ্চ|
20 ஆகவே இறைவன், எங்கள் மூலமாகவே தமது வேண்டுகோளைத் தெரிவிக்கிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாக இருக்கிறோம். ஆகவே நீங்கள் இறைவனுடன் ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பாக நாங்கள் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம்.
২০অতো ৱযং খ্ৰীষ্টস্য ৱিনিমযেন দৌত্যং কৰ্ম্ম সম্পাদযামহে, ঈশ্ৱৰশ্চাস্মাভি ৰ্যুষ্মান্ যাযাচ্যতে ততঃ খ্ৰীষ্টস্য ৱিনিমযেন ৱযং যুষ্মান্ প্ৰাৰ্থযামহে যূযমীশ্ৱৰেণ সন্ধত্ত|
21 நமக்காக இறைவன் பாவமே இல்லாதவரை பாவமாக்கினார். நாம் அவரில் இறைவனின் நீதியாகும்படிக்கே அவர் இப்படிச் செய்தார்.
২১যতো ৱযং তেন যদ্ ঈশ্ৱৰীযপুণ্যং ভৱামস্তদৰ্থং পাপেন সহ যস্য জ্ঞাতেযং নাসীৎ স এৱ তেনাস্মাকং ৱিনিমযেন পাপঃ কৃতঃ|