< 2 கொரிந்தியர் 2 >

1 ஆகவே, நான் உங்களுக்கு வேதனையை உண்டாக்கும் இன்னுமொரு சந்திப்பை ஏற்படுத்தாமலிருக்க என் மனதில் தீர்மானித்தேன்.
ମଃତର୍‌ ତୁମାର୍‌ ତଃୟ୍‌ ମର୍‌ ଜାତାର୍‌ ଜଃନ୍‌କଃରି ଆରେକ୍‌ ତରେକ୍‌ ଦୁକାର୍‌ କଃତା ନୟେ, ଇରି ମୁୟ୍‌ଁ ମଃନେ ତିର୍‌ କଃଲେ ।
2 நான் உங்களைத் துக்கப்படுத்தினால் என்னை மகிழ்விப்பவர்கள் யார்? என்னை துக்கப்படுத்தியது நீங்கள்தானே.
କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ମୁୟ୍‌ଁ ଜଦି ତୁମିମଃନ୍‌କେ ଦୁକ୍‌ ଦଃୟ୍‌ନ୍ଦ୍, ତଃବେ କେ ମକ୍‌ ସଃର୍ଦା କଃରେଦ୍‌? ଅଃବ୍‌କା ତୁମିମଃନ୍‌କେ ହଃକା ମୁୟ୍‌ଁ ଦୁକ୍‌ ଦଃୟ୍‌ ଆଚି ।
3 இதனாலேயே, நான் இவ்வாறு உங்களுக்குக் கடிதம் எழுதினேன். நான் உங்களிடம் வரும்போது, என்னை மகிழ்விக்க வேண்டியவர்களால் நான் துக்கமடைய விரும்பவில்லை. நீங்கள் எல்லோரும் என் சந்தோஷத்தில் பங்கு கொள்வீர்கள் என்று, நான் உங்கள் எல்லோரையும் குறித்து மனவுறுதியுள்ளவனாய் இருந்தேன்.
ଆରେକ୍‌ ତୁମାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ମର୍‌ ସଃର୍ଦା ହାଉତା ଲଳା, ସେମଃନାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ମୁୟ୍‌ଁ ଆସି ଜଃନ୍‌କଃରି ଦୁକ୍‌ ନଃହାୟ୍‌, ଇତାର୍‌ ଗିନେ ମୁୟ୍‌ଁ ଇ କଃତା ଲେକିରିଲେ, ଜୁୟ୍‌ତାର୍‌ ଗିନେ ମର୍‌ ସଃର୍ଦାୟ୍‌ ଜେ ତୁମିମଃନାର୍‌ ସଃର୍ଦା, ଇରି ତୁମି ସଃବୁଲକାର୍‌ କଃତାୟ୍‌ ମର୍‌ ବିସ୍ୱାସ୍‌ ଆଚେ ।
4 நான் மிகுந்த துன்பத்தோடும், உள்ளத்தின் வேதனையோடும், அதிக கண்ணீரோடும் உங்களுக்கு அந்தக் கடிதத்தை எழுதினேன். ஆனால், உங்களைத் துக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல, நான் உங்கள்மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை நீங்கள் அறிந்துகொள்ளும்படியாகவே நான் அப்படி எழுதினேன்.
କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ଗାଦେକ୍‌ କଃସ୍ଟ୍‌ ଆର୍‌ ମଃନାର୍‌ ବେଦ୍‌ନା ତଃୟ୍‌ ବୁତେକ୍‌ ଆସୁ ସଃଙ୍ଗ୍ ମୁୟ୍‌ଁ ତୁମିମଃନ୍‌କେ ଲେକି ରିଲେ; ଜଃନ୍‌କଃରି ତୁମିମଃନ୍‌କେ ଦୁକି ଅଃଉଆସ୍‌, ଇବାନ୍ୟା ନାୟ୍‌, ମଃତର୍‌ ତୁମିମଃନାର୍‌ ଗିନେ ମର୍‌ ଜେ ଅଃଦିକ୍‌ ବୁତେକ୍‌ ଲାଡ୍‌ ଆଚେ, ଇରି ଜଃନ୍‌କଃରି ତୁମିମଃନ୍‌ ଜାଣାସ୍‌ ।
5 யாராகிலும் ஒருவன் துக்கம் உண்டாக்கி இருந்தால், அவன் என்னை மட்டுமல்ல, ஓரளவுக்கு உங்களெல்லோரையுமே துக்கப்படுத்தியிருக்கிறான். இதை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை.
ମଃତର୍‌ ଜଦି କେ ଦୁକ୍‌ ଦଃୟ୍‌ଆଚେ, ସେ ମକ୍‌ ଦୁକ୍‌ ନଃଦେୟ୍‌, ମଃତର୍‌ କଃତେକ୍‌ ଇସାବେ ତୁମି ସଃବୁ ଲକ୍‌କେ ଦୁକ୍‌ ଦଃୟ୍‌ଆଚେ । ମୁୟ୍‌ଁ ଅଃଦିକ୍‌ ଅଃଟୁଆ ଅଃଉଁକେ ମଃନ୍ ନଃକେରୁଲେ ।
6 அப்படிப்பட்டவன் உங்கள் அநேகரால் தண்டனை பெற்றிருக்கிறான். அது போதுமானது.
କଃତେକ୍‌ ଲକାର୍‌ ଗିନେ ଇବାନ୍ୟା ଲକ୍‌ ଜୁୟ୍‌ ଡଃଣ୍ଡ୍‌ ହାୟ୍‌ଆଚେ, ସେରି ତାର୍‌ ଗିନେ ସଃରି ।
7 ஆதலால், நீங்கள் இப்பொழுது அவனை மன்னித்து ஆறுதல்படுத்தவேண்டும். இல்லையெனில், அவன் அதிகமான துக்கத்தில் மூழ்கிவிடுவான்.
ଇତାର୍‌ ଗିନେ କଃନ୍‌ସ୍‌ ଅୟ୍‌ଲେକ୍‌ ଇବାନ୍ୟା ଲକ୍‌ ଉବ୍ରି ରିଲା ଦୁକେ ବୁଡି ଜାୟ୍‌ଦ୍‌, ଇତାର୍‌ ଗିନେ ଅଃବେ ତୁମିମଃନ୍‌କେ ତାକେ କେମା କଃରା ଆର୍‌ ସୁସ୍ତା ଦିଆସ୍‌ ।
8 ஆனபடியால் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், மீண்டும் நீங்கள் அவனுக்கு உங்கள் அன்பை உறுதிப்படுத்துங்கள்.
ତଃବେ, ସେ ଜଃନ୍‌କଃରି ତୁମି ଲାଡ୍‌ କଃରୁଲାସ୍‌ ଜାଣେଦ୍‌, ଇତାର୍‌ ଗିନେ ଲାଡ୍‌ ବେବାର୍‌ ତିର୍‌ କଃରୁକେ ମୁୟ୍‌ଁ ତୁମିମଃନ୍‌କେ ଗଃଉଆରି କଃରୁଲେ ।
9 நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிகிறீர்களா என்று உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே இப்படி எழுதினேன்.
କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ତୁମିମଃନ୍‌କେ ସଃବୁ କଃତା ଜେ ମାନୁକ୍‌ ସଃବୁବଃଳ୍‌ ଜଃଗ୍ରାତ୍‌ ଆଚାସ୍‌ କି ନାୟ୍‌, ତୁମିମଃନାର୍‌ କଃତାୟ୍‌ ସେତାର୍‌ ହଃର୍ମାଣ୍‌ ଜଃନ୍‌କଃରି ମୁୟ୍‌ଁ ହାୟ୍‌ନ୍ଦ୍, ଇତାର୍‌ ଗିନେ ହେଁ ସେ ଚିଟି ଲେକିରିଲେ ।
10 நீங்கள் யாரையாவது மன்னித்தால், நானும் அவனை மன்னிக்கிறேன். நான் மன்னிக்கவேண்டியது ஏதேனும் இருந்தால், அதை நான் உங்கள் நிமித்தம் கிறிஸ்துவினுடைய சமுகத்தில் மன்னித்திருக்கிறேன்.
ମଃତର୍‌ ତୁମିମଃନ୍‌କେ ଜାର୍‌ କାୟ୍‌ରି କେମା କଃରାସ୍‌, ମୁୟ୍‌ଁ ହେଁ ତାକେ କେମା କଃରିନ୍ଦ୍‌; କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ମୁୟ୍‌ଁ ଜଦି କାୟ୍‌ରି କେମା କଃରିଆଚି, ତଃବେ ଜାୟ୍‌ରି କେମା କଃରିଆଚି, ସେରି କ୍ରିସ୍ଟର୍‌ ମୁଏଁ ତୁମିମଃନାର୍‌ ଗିନେ କେମା କଃରି ଆଚି,
11 சாத்தான் நம்மைத் தனது தந்திரத்தால் வஞ்சிக்காதபடி அவ்வாறு செய்தேன். ஏனெனில், சாத்தானின் வஞ்சகதிட்டங்களை நாம் அறியாதவர்கள் அல்ல.
ଜୁୟ୍‌ତାର୍‌ ଗିନେ ସୟ୍‌ତାନ୍‌ ଅଃମିମଃନାର୍‌ ନଃସ୍ଟ୍‌ କଃରୁକେ ବାଟ୍‌ ନାହାୟ୍‌ । କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ଅଃମିମଃନ୍‌ ତାର୍‌ ସଃବୁ ଜଃଜ୍‌ନା କଃତା ଜାଣି ଆଚୁ ।
12 நான் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காகத் துரோவா பட்டணத்துக்குப் போனபோது, கர்த்தர் எனக்கு ஒரு கதவு திறந்ததைக் கண்டேன்.
ଆରେକ୍‌ କ୍ରିସ୍ଟ ନିକ କବୁର୍‌ ପର୍ଚାର୍‌ କଃରୁକେ ମୁୟ୍‌ଁ ତ୍ରୟାକ୍‌ ଆୟ୍‌ଲା ହଃଚେ ମାପ୍ରୁର୍‌ କାମ୍‌ ଗିନେ ବାଟ୍‌ ହର୍‌ ଦୁଆର୍‌ ଉଗାଳି ଅୟ୍‌ଆଚେ ବଃଲି ଜାଣ୍‌ଲେ ।
13 ஆனாலும், அங்கே என் சகோதரன் தீத்துவைக் காணாதபடியால், என் உள்ளத்தில் சமாதானம் இல்லாதிருந்தது. ஆதலால், நான் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போனேன்.
ମଃତର୍‌ ଅଃମାର୍‌ ବାୟ୍‌ ତିତସ୍‌କେ ନଃଦେକି ମୁୟ୍‌ଁ ଆତ୍ମାୟ୍‌ ସୁସ୍ତା ନଃହାୟ୍‌ଲାକେ, ସେମଃନାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ସେଲ ମାଗି ମାକିଦନିଆକ୍‌ ଗଃଲେ ।
14 இறைவனுக்கே நன்றி. அவர் எப்பொழுதும் எங்களைக் கரம்பிடித்து, கிறிஸ்துவின் வெற்றி பவனிக்குள் வழிநடத்துகிறார். இப்படி அவரைப்பற்றிய அறிவின் நறுமணம்போல் எங்கள் மூலமாக எல்லா இடங்களிலும் பரவச்செய்கிறார்.
ମଃତର୍‌ ଇସ୍ୱର୍‌କେ ଦନ୍ୟବାଦ୍‌, କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ସେ ସଃବୁବଃଳ୍‌ ଅଃମିମଃନ୍‌ କ୍ରିସ୍ଟର୍‌ ସଃଙ୍ଗ୍ ମିସି ଆଚୁ, ସେତାର୍‌ ଗିନେ ଇସ୍ୱର୍‌ ଅଃମିକ୍‌ ଜିଣ୍‌ଲା ହଃର୍ବ୍‌ ମାନୁକ୍‌ ବାଟ୍‌ କାଡାୟ୍‌ ନେଉଁଲା, ଆର୍‌ ସଃବୁ ଟାଣେ କ୍ରିସ୍ଟର୍‌ ଗ୍ୟାନ୍ ହର୍‌ ବାସ୍ନା ଅଃମାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ଜାଣାଉଁଲା ।
15 ஏனெனில், இரட்சிக்கப்படுகிறவர்கள் மத்தியிலும், அழிந்து போகிறவர்கள் மத்தியிலும் நாம் இறைவனுக்கு கிறிஸ்துவின் நறுமணமாயிருக்கிறோம்.
କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ମୁକ୍ତି ହାଉତାର୍‌ ଆର୍‌ ନାସ୍‌ ଅଃଉତା ଲକ୍‌ମଃନାର୍‌ ବିତ୍ରେ ଉର୍ଜି ଅଃଉତା ଅଃମିମଃନ୍‌ ଇସ୍ୱରାର୍‌ ଆକାୟ୍‌ କ୍ରିସ୍ଟର୍‌ ନିକ ବାସ୍ନା ହର୍‌ ।
16 ஒரு சிலருக்கு மரணத்தை ஏற்படுத்தும் துர்நாற்றமாகவும் மற்றவருக்கு வாழ்வளிக்கும் நறுமணமாகவும் இருக்கிறோம். இப்படிப்பட்ட பணியை செய்யும் ஆற்றலுள்ளவன் யார்?
କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ଜୁୟ୍‌ ଲକ୍‌ମଃନ୍ ନାସ୍‌ ଅୟ୍‌ଲାୟ୍‌ ଆଚ୍‌ତି, ଇତି ସେମଃନାର୍‌ ଗିନେ ମଃର୍ନ୍‌ ଦେଉଁକେ କଃରାବ୍‌ ବାସ୍ନା ହର୍‌, ମଃତର୍‌ ଜୁୟ୍‌ ଲକ୍‌ମଃନ୍ ମୁକ୍‌ଳି ଆଚ୍‌ତି, ସେମଃନାର୍‌ ଗିନେ ଇତି ଜିବନ୍ ଦେଉଁକେ ସୁନ୍ଦୁର୍‌ ବାସ୍ନା ହର୍‌ । ଆର୍‌ ଇରଃକମ୍‌ କଃସ୍ଟ୍‌ କାମ୍‌ କେ କଃରୁ ହାରେ?
17 அநேகர் இறைவனுடைய வார்த்தையை, மலிவான கடைச்சரக்காக கருதி இலாபம் பெற விற்கிறார்கள். நாங்கள் அவர்களைப் போன்றவர்கள் அல்ல. மாறாக, நாங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட மனிதரைப்போல், கிறிஸ்துவில் இறைவனுக்கு முன்பாக நேர்மையுடன் அதைப் பேசுகிறோம்.
ଅଃମି ବିନ୍ ଲକାର୍‌ ହର୍‌ ଅଃମିମଃନ୍‌ ନିଜାର୍‌ ଲାବ୍‌ ଗିନେ ଇସ୍ୱରାର୍‌ କଃତା ପର୍ଚାର୍‌ ନଃକେରୁ, ମଃତର୍‌ ଅଃମି କ୍ରିସ୍ଟର୍‌ ଦଃଙ୍ଗ୍‌ଳା ହର୍‌ ଇସ୍ୱର୍‌ ଦିରା ବାବେ ଇସ୍ୱରାର୍‌ ସଃତ୍‌ କଃତା ପର୍ଚାର୍‌ କଃରୁଲୁ ।

< 2 கொரிந்தியர் 2 >