< 2 நாளாகமம் 29 >

1 எசேக்கியா அரசனானபோது இருபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். இவன் எருசலேமில் இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் சகரியாவின் மகளான அபியாள் என்பவள்.
Ezekias var fem og tyve År gammel, da han blev Konge, og han herskede ni og tyve År i Jerusalem. Hans Moder hed Abija og var en Datter af Zekarja.
2 அவன் தனது முற்பிதா தாவீது செய்ததுபோல, யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்தான்.
Han gjorde, hvad der var ret i HERRENs Øjne, ganske som hans Fader David.
3 அவனுடைய ஆட்சியின் முதலாம் வருடம், முதல் மாதத்தில் அவன் யெகோவாவின் ஆலயத்தின் கதவுகளைத் திறந்து அவற்றைப் பழுதுபார்த்தான்.
I sit første Regeringsårs første Måned lod han HERRENs Hus's Porte åbne og sætte i Stand.
4 அவன் ஆசாரியர்களையும், லேவியர்களையும் கொண்டுவந்து, கிழக்குப் பக்கத்திலுள்ள சதுக்கத்தில் அவர்களை ஒன்றுகூட்டினான்.
Derpå lod han Præsterne og Leviterne komme, samlede dem på den åbne Plads mod Øst
5 அவர்களிடம், “லேவியர்களே, எனக்கு செவிகொடுங்கள். நீங்கள் இப்பொழுது உங்களைப் பரிசுத்தப்படுத்துங்கள்; அத்துடன் உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்தையும் பரிசுத்தப்படுத்துங்கள். பரிசுத்த இடத்திலிருந்து எல்லா அசுத்தத்தையும் அகற்றிப்போடுங்கள்.
og sagde til dem: "Hør mig, Leviter! Helliger nu eder selv og helliger HERRENs, eders Fædres Guds, Hus og få det urene ud af Helligdommen.
6 எனது முற்பிதாக்கள் உண்மையற்றவர்களாய் இருந்தார்கள். அவர்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்து, அவரைவிட்டு விலகினார்கள். அவர்கள் யெகோவாவின் உறைவிடத்திற்கு தங்கள் முகத்தை விலக்கி, அவருக்குத் தங்கள் முதுகைக் காட்டினார்கள்.
Thi vore Fædre var troløse og gjorde, hvad der var ondt i HERREN vor Guds Øjne, de forlod ham, idet de vendte Ansigtet bort fra HERRENs Bolig og vendte den Ryggen;
7 அத்துடன் அவர்கள் ஆலயத்தின் முன்மண்டபக் கதவுகளையும் பூட்டி, விளக்குகளை அணைத்துப் போட்டார்கள். அவர்கள் இஸ்ரயேலின் இறைவனின் பரிசுத்த இடத்தில் தூபங்காட்டவோ, தகன காணிக்கைகளைச் செலுத்தவோ இல்லை.
de lukkede endog Forhallens Porte, slukkede Lamperne, brændte ikke Røgelse og bragte ikke Israels Gud Brændofre i Helligdommen.
8 அதனால் யெகோவாவின் கோபம் யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் இறங்கியது. அவர் அவர்களைப் பயங்கரத்திற்கும், திகிலிற்கும், இகழ்ச்சிக்கும் உரிய பொருளாக வைத்திருக்கிறார். அதையே இன்று நீங்கள் உங்கள் சொந்தக் கண்களால் காண்கிறீர்கள்.
Derfor kom HERRENs Vrede over Juda og Jerusalem, og han gjorde dem til Rædsel, Forfærdelse og Skændsel, som I kan se med egne Øjne.
9 இதனாலேயே நமது தந்தையர்கள் வாளினால் மடிந்தார்கள்; நம்முடைய மகன்களும், மகள்களும், நம்முடைய மனைவிகளும் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
Se, vore Fædre er faldet for Sværdet, vore Sønner, Døtre og Hustruer ført i Fangenskab for den Sags Skyld.
10 இப்பொழுது நான் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுடன் ஒரு உடன்படிக்கையை செய்ய எண்ணியுள்ளேன். அப்பொழுதுதான் அவரது கோபம் நம்மைவிட்டுத் திரும்பும்.
Men nu har jeg i Sinde at slutte en Pagt med HERREN, Israels Gud, for at hans glødende Vrede må vende sig fra os.
11 என் மகன்களே, இப்பொழுது நீங்கள் அசட்டையாய் இராதீர்கள். ஏனெனில் அவர் முன்நின்று அவருக்குப் பணிசெய்வதற்கும் அவர் முன்னிலையில் ஊழியம் செய்து தூபங்காட்டுவதற்குமே யெகோவா உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறார்” என்றான்.
Så lad det nu, mine Sønner, ikke skorte på Iver, thi eder har HERREN udvalgt til at stå for hans Åsyn og tjene ham og til at være hans Tjenere og tænde Offerild for ham!"
12 எனவே வேலையைச் செய்யத் தொடங்கிய லேவியர்கள்: கோகாத்தியரிலிருந்து: அமசாயின் மகன் மாகாத், அசரியாவின் மகன் யோயேல்; மெராரியரிலிருந்து: அப்தியின் மகன் கீஷ், எகலேலின் மகன் அசரியா; கெர்சோனியரிலிருந்து: சிம்மாவின் மகன் யோவா, யோவாவின் மகன் ஏதேன்.
Da rejste følgende Leviter sig: Mahat, Amasajs Søn, og Joel, Azarjas Søn, af Kehatiternes Sønner; af Merariterne Kisj, Abdis Søn, og Azarja, Jehallel'els Søn; af Gersoniterne Joa, Zimmas Søn, og Eden, Joas Søn;
13 எலிசாபானின் சந்ததிகளிலிருந்து: சிம்ரி, ஏயேல்; ஆசாப்பின் சந்ததிகளிலிருந்து: சகரியா, மத்தனியா;
af Elizafans Sønner Sjimri og Je'uel; af Asafs Sønner Zekarja og Mattanja;
14 ஏமானின் சந்ததிகளிலிருந்து: யெகியேல், சிமேயி; எதுத்தூனின் சந்ததிகளிலிருந்து: செமாயா, ஊசியேல்.
af Hemans Sønner Jehiel og Sjim'i; og af Jedutuns Sønner Sjemaja og Uzziel;
15 இந்த லேவியர்கள் தங்கள் சகோதரர்களை ஒன்றுசேர்த்து, அவர்களைச் சுத்திகரித்தபின் யெகோவாவின் வார்த்தையைப் பின்பற்றி அரசன் கட்டளையிட்டபடியே, யெகோவாவின் ஆலயத்தை தூய்மைப்படுத்துவதற்காக உள்ளே சென்றனர்.
og de samlede deres Brødre, og de helligede sig og skred så efter Kongens Befaling til at rense HERRENs Hus i Henhold til HERRENs Forskrifter.
16 ஆசாரியர்கள் யெகோவாவின் பரிசுத்த இடத்தை தூய்மைப்படுத்துவதற்காக அதற்குள்ளே சென்றார்கள். அவர்கள் யெகோவாவின் ஆலயத்திற்குள் அசுத்தமாகக் கண்ட யாவற்றையும் யெகோவாவின் ஆலயத்தின் வெளிமுற்றத்திற்குக் கொண்டுவந்தார்கள். அதை லேவியர்கள் எடுத்து கீதரோன் பள்ளத்தாக்கிற்கு சுமந்துகொண்டு போனார்கள்.
Og Præsterne gik ind i det indre af HERRENS Hus for at rense det, og alt det urene, de fandt i HERRENs Tempel, bragte de ud i HERRENs Hus's Forgård, hvor Leviterne tog imod det for at bringe det ud i Kedrons Dal.
17 அவர்கள் தங்கள் சுத்திகரிப்பு வேலையை முதலாம் மாதம், முதலாம் நாளில் ஆரம்பித்து, மாதத்தின் எட்டாம் நாளில் யெகோவாவுக்குமுன் மண்டபத்திற்கு வந்தார்கள். யெகோவாவினுடைய ஆலயத்தை இன்னும் எட்டு நாட்களுக்கு பரிசுத்தப்படுத்தினார்கள். இவ்வாறு அதை முதலாம் மாதம் பதினாறாம் நாளில் செய்துமுடித்தனர்.
På den første Dag i den første Måned begyndte de at hellige, og på den ottende Dag i Måneden var de kommet til HERRENs Forhal; så helligede de HERRENs Hus i otte Dage, og på den sekstende Dag i den første Måned var de færdige.
18 அதன்பின்பு அவர்கள் எசேக்கியா அரசனிடம் போய், “நாங்கள் யெகோவாவின் ஆலயம் முழுவதையும் தூய்மைப்படுத்திவிட்டோம். தகன பலிபீடம், அதன் பாத்திரங்கள், இறைசமுக அப்பங்களை ஒழுங்குபடுத்தும் மேஜை, அதன் பொருட்கள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்திவிட்டோம்.
Derpå gik de ind til Kong Ezekias og sagde: "Vi har nu renset hele HERRENs Hus, Brændofferalteret med alt, hvad der hører dertil, og Skuebrødsbordet med alt, hvad der hører dertil;
19 அத்துடன் ஆகாஸ் அரசன் தான் அரசனாயிருந்த காலத்தில் உண்மையற்றவனாய் அவன் அகற்றிப்போட்ட பொருட்களையெல்லாம் கொண்டுவந்து, பரிசுத்தப்படுத்தி இருக்கிறோம். அவை இப்பொழுது யெகோவாவின் பீடத்தின்முன் இருக்கின்றன” என்று அறிவித்தார்கள்.
og alle de Kar, som Kong Akaz i sin Troløshed vanhelligede, da han var Konge, dem har vi bragt på Plads og helliget; se, de står nu foran HERRENs Alter!"
20 அடுத்தநாள் அதிகாலையில் எசேக்கியா அரசன் பட்டணத்தின் அதிகாரிகள் எல்லோரையும் ஒன்றுசேர்த்துக்கொண்டு யெகோவாவினுடைய ஆலயத்திற்குப் போனான்.
Næste Morgen tidlig samlede Kong Ezekias Byens Øverster og gik op til HERRENs Hus.
21 அவர்கள் அரசிற்காகவும், பரிசுத்த இடத்திற்காகவும், யூதாவுக்காகவும் பாவநிவாரண காணிக்கையாக ஏழு காளைகளையும், ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஏழு வெள்ளாட்டுக் கடாக்களையும் கொண்டுவந்தார்கள். அரசன் ஆசாரியர்களான ஆரோனின் சந்ததிகளிடம், “யெகோவாவின் பலிபீடத்தில் இதைப் பலியிடுங்கள்” எனக் கட்டளையிட்டான்.
Derpå bragte man syv Tyre, syv Vædre, syv Lam og syv Gedebukke til Syndoffer for Riget, Helligdommen og Juda; og han bød Arons Sønner Præsterne ofre dem på HERRENs Alter.
22 எனவே அவர்கள் காளைகளை வெட்டினார்கள். ஆசாரியர்கள் இரத்தத்தை எடுத்து பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள். அடுத்ததாக அவர்கள் செம்மறியாட்டுக் கடாக்களை வெட்டி அதன் இரத்தத்தை பலிபீடத்தில் தெளித்தார்கள். அதன்பின் செம்மறியாட்டுக் குட்டிகளை வெட்டி, அதன் இரத்தத்தையும் பலிபீடத்தில் தெளித்தனர்.
De slagtede så Tyrene, og Præsterne tog imod Blodet og sprængte det på Alteret; så slagtede de Vædrene og sprængte Blodet på Alteret; så slagtede de Lammene og sprængte Blodet på Alteret;
23 அதன்பின் பாவநிவாரண காணிக்கைக்கான வெள்ளாடுகள் அரசனுக்கும், கூடியிருந்தவர்களுக்கும் முன்பாக கொண்டுவரப்பட்டன. அவர்கள் அவற்றின்மேல் தங்கள் கைகளை வைத்தனர்.
endelig bragte de Syndofferbukkene frem for Kongen og Forsamlingen, og de lagde Hænderne på dem;
24 இஸ்ரயேல் முழுவதற்கும் பாவநிவர்த்தி செய்வதற்காக ஆசாரியர்கள் வெள்ளாடுகளை வெட்டி, அதன் இரத்தத்தைப் பாவநிவாரண காணிக்கையாக பலிபீடத்தில் படைத்தார்கள். ஏனெனில் அரசன் எல்லா இஸ்ரயேலுக்குமாக தகன காணிக்கைகளையும், பாவநிவாரண காணிக்கைகளையும் செலுத்தும்படி கட்டளையிட்டிருந்தான்.
så slagtede Præsterne dem og bragte Blodet på Alteret som Syndoffer for at skaffe hele Israel Soning; thi Kongen havde sagt, at Brændofferet og Syndofferet skulde være for hele Israel.
25 தாவீது, அரசனின் தரிசனக்காரனான காத், இறைவாக்கினன் நாத்தான் ஆகியவர்கள் கற்பித்தவிதமாகவே, அரசன் லேவியர்களை கைத்தாளம், யாழ், வீணை ஆகியவற்றுடன் யெகோவாவின் ஆலயத்தில் நிறுத்தினான்; இது யெகோவாவினால் அவரது இறைவாக்கினர்கள் மூலமாய்க் கட்டளையிடப்பட்டிருந்தது.
Og han opstillede Leviterne ved HERRENs Hus med Cymbler, Harper og Citre efter Davids, Kongens Seer Gads og Profeten Natans Bud, thi Budet var givet af HERREN gennem hans Profeter.
26 எனவே லேவியர்கள் தாவீதின் வாத்தியக் கருவிகளுடனும், ஆசாரியர்கள் தங்கள் எக்காளங்களுடனும் ஆயத்தமாக நின்றனர்.
Og Leviterne stod med Davids Instrumenter og Præsterne med Trompeterne.
27 எசேக்கியா பலிபீடத்தின்மேல் தகன காணிக்கைகளைப் பலியிடும்படி கொடுத்தான். காணிக்கை செலுத்தத் தொடங்கியவுடனே, எக்காளங்களுடனும் இஸ்ரயேலின் அரசன் தாவீதின் இசைக் கருவிகளுடனும் யெகோவாவுக்கான துதிபாடல்களும் ஆரம்பித்தன.
Derpå bød Ezekias, at Brændofferet skulde ofres på Alteret, og samtidig med Ofringen begyndte også HERRENs Sang og Trompeterne, ledsaget af Kong David af Israels Instrumenter.
28 தகன காணிக்கை செலுத்துமட்டும் பாடகர் பாட, எக்காளம் முழங்க, சபையோர் எல்லோரும் தலைகுனிந்து வழிபட்டார்கள்.
Da kastede hele Forsamlingen sig til Jorden, medens Sangen lød og Trompeterne klang, og alt dette varede, til man var færdig med Brændofferet.
29 பலிசெலுத்தி முடிவடைந்ததும் அரசனும் அவனுடன் வந்திருந்த எல்லோரும் தரையில் முழங்காற்படியிட்டு வழிபட்டார்கள்.
Så snart man var færdig med Brændofferet, knælede Kongen og alle, der var hos ham, ned og tilbad.
30 அரசன் எசேக்கியாவும், அவனுடைய அதிகாரிகளும், தாவீதும், தரிசனக்காரனான ஆசாப்பும் பாடிய வார்த்தைகளால் யெகோவாவைத் துதிக்கும்படி லேவியர்களுக்குக் கட்டளையிட்டார்கள். எனவே அவர்கள் மகிழ்ச்சியுடன் துதித்து பாடி தலைகுனிந்து வழிபட்டார்கள்.
Derpå bød Kong Ezekias og Øversterne Leviterne at lovsynge HERREN med Davids og Seeren Asafs Ord; og de sang Lovsangen med Jubel og bøjede sig og tilbad.
31 அப்பொழுது எசேக்கியா, “நீங்கள் இப்பொழுது உங்களை யெகோவாவுக்கென்று அர்ப்பணித்திருக்கிறீர்கள். வாருங்கள், பலிகளையும் நன்றியறிதல் காணிக்கைகளையும் யெகோவாவின் ஆலயத்திற்குக் கொண்டுவாருங்கள்” என்று சொன்னான். எனவே கூடியிருந்தவர்கள் பலிகளையும், நன்றியறிதல் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள். அத்துடன் யாருடைய இருதயம் ஏவப்பட்டதோ அவர்கள் சர்வாங்க தகன காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்.
Ezekias tog da til Orde og sagde: "I har nu indviet eder til HERREN; så træd da frem og bring Slagtofre og Lovprisningsofre til HERRENs Hus!" Så bragte Forsamlingen Slagtofre og Lovprisningsofre, og enhver, hvis Hje1te tilskyndede ham dertil, bragte Brændofre.
32 சபையோர் கொண்டுவந்த தகன காணிக்கைகளின் எண்ணிக்கை: எழுபது காளைகள், நூறு செம்மறியாட்டுக் கடாக்கள், இருநூறு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகள் ஆகியனவாகும். இவையெல்லாம் யெகோவாவுக்காகத் தகன காணிக்கையாகக் கொண்டுவரப்பட்டன.
De Brændofre, Forsamlingen bragte, udgjorde 70 Stykker Hornkvæg, 100 Vædre og 200 Lam, alt som Brændofre til HERREN;
33 பலிகளாக அர்ப்பணிக்கப்பட்ட மிருகங்களின் தொகை அறுநூறு காளைகளும், மூவாயிரம் செம்மறியாடுகளும், வெள்ளாடுகளுமாகும்.
og Helligofrene udgjorde 600 Stykker Hornkvæg og 3000 Stykker Småkvæg.
34 ஆனால் தகன காணிக்கைக்கான மிருகங்களைத் தோல் உரிப்பதற்கு ஆசாரியர்கள் மிகக் குறைவாகவேயிருந்தனர். மற்ற ஆசாரியர்கள் தங்களைப் பரிசுத்தப்படுத்தும் வரைக்கும் அவர்கள் உறவினர்களான லேவியர்கள் அந்த வேலை முடியும்வரைக்கும் உதவிசெய்தனர். ஏனெனில் லேவியர்கள் தங்களைப் பரிசுத்தப்படுத்துவதில் ஆசாரியர்களைவிட கவனமுள்ளவர்களாக இருந்தனர்.
Dog var Præsterne for få til at flå Huden af alle Brændofrene, derfor hjalp deres Brødre Leviterne dem, indtil Arbejdet var fuldført og Præsterne havde helliget sig; thi Leviterne viste redeligere Vilje til at hellige sig end Præsterne.
35 இவ்வாறு தகன காணிக்கைகள் ஏராளமாயிருந்தன; அத்துடன் சமாதான காணிக்கைகளின் கொழுப்பும், சமாதான காணிக்கைகளோடு செலுத்தப்பட்ட பான காணிக்கைகளும் ஏராளமாய் இருந்தன. எனவே யெகோவாவினுடைய ஆலய ஆராதனை திரும்பவும் நிலைநிறுத்தப்பட்டது.
Desuden var der en Mængde Brændofre, hvortil kom Fedtstykkerne af Takofrene og Drikofrene til Brændofrene. Således bragtes Tjenesten i HERRENs Hus i Orden.
36 இறைவன் தனது மக்களுக்காய் செய்து முடித்ததைக்குறித்து எசேக்கியாவும் எல்லா மக்களும் அகமகிழ்ந்தனர். ஏனெனில் இது மிகவும் விரைவாய் செய்யப்பட்டது.
Og Ezekias og alt Folket glædede sig over, hvad Gud havde beredt Folkel, thi det hele var sket så hurtigt.

< 2 நாளாகமம் 29 >