< 1 தீமோத்தேயு 5 >

1 முதியவர்களை கடுமையாகக் கண்டிக்காதே, அவரை உன் தந்தையைப்போல் மதித்து, அறிவுரை கூறு. இளைஞரை உனது சகோதரர்களைப் போலவும்,
တွံ ပြာစီနံ န ဘရ္တ္သယ ကိန္တု တံ ပိတရမိဝ ယူနၑ္စ ဘြာတၖနိဝ
2 பெண்களில் முதியவர்களைத் தாய்களைப் போலவும், இளம்பெண்களைச் சகோதரிகளைப்போலவும் எண்ணி, முழுமையான தூய்மையோடு அவர்களிடம் நடந்துகொள்.
ဝၖဒ္ဓါး သ္တြိယၑ္စ မာတၖနိဝ ယုဝတီၑ္စ ပူရ္ဏၑုစိတွေန ဘဂိနီရိဝ ဝိနယသွ၊
3 உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு ஏற்ற ஆதரவைக்கொடு.
အပရံ သတျဝိဓဝါး သမ္မနျသွ၊
4 ஆனால் ஒரு விதவைக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருந்தால், முதலாவது அவர்கள் தங்களுடைய சொந்தக் குடும்பத்தைப் பராமரிப்பதின் மூலம், இறை பக்தியை நடைமுறைப்படுத்தக் கற்றுக்கொள்ளட்டும்; இப்படித் தங்கள் பெற்றோருக்கும், பெற்றோரின் பெற்றோருக்கும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யட்டும். ஏனெனில், இதுவே இறைவனுக்குப் பிரியமாயிருக்கிறது.
ကသျာၑ္စိဒ် ဝိဓဝါယာ ယဒိ ပုတြား ပေါ်တြာ ဝါ ဝိဒျန္တေ တရှိ တေ ပြထမတး သွီယပရိဇနာန် သေဝိတုံ ပိတြေား ပြတျုပကရ္တ္တုဉ္စ ၑိက္ၐန္တာံ ယတသ္တဒေဝေၑွရသျ သာက္ၐာဒ် ဥတ္တမံ ဂြာဟျဉ္စ ကရ္မ္မ၊
5 ஒரு விதவை உண்மையாகவே தேவையுடையவளாக இருந்து, கைவிடப்பட்டுத் தனிமையாக இருந்தால், அவள் தனது எதிர்பார்ப்பை இறைவனிலேயே வைத்திருக்கிறாள். அவள் இரவும் பகலும் இறைவனிடம் மன்றாடுவதிலும், உதவி கேட்பதிலும் நிலைத்திருப்பாள்.
အပရံ ယာ နာရီ သတျဝိဓဝါ နာထဟီနာ စာသ္တိ သာ ဤၑွရသျာၑြယေ တိၐ္ဌန္တီ ဒိဝါနိၑံ နိဝေဒနပြာရ္ထနာဘျာံ ကာလံ ယာပယတိ၊
6 ஆனால் ஒரு விதவை உலக இன்பத்தில் வாழ்வதை விரும்பினால், அவள் வாழ்ந்தாலும் நடைபிணமே.
ကိန္တု ယာ ဝိဓဝါ သုခဘောဂါသက္တာ သာ ဇီဝတျပိ မၖတာ ဘဝတိ၊
7 ஒருவர் மேலும் குற்றஞ்சாட்டப்படாதபடி, இந்த அறிவுறுத்தலையும் எல்லா மக்களுக்கும் கொடு.
အတဧဝ တာ ယဒ် အနိန္ဒိတာ ဘဝေယူသ္တဒရ္ထမ် ဧတာနိ တွယာ နိဒိၑျန္တာံ၊
8 யாராவது தனது உறவினர்களுக்கு, குறிப்பாக தன் சொந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவிசெய்யாவிட்டால், அவன் தனது விசுவாசத்தையே மறுதலிக்கிறான். அவன் விசுவாசம் இல்லாதவனைவிடக் கேவலமானவன்.
ယဒိ ကၑ္စိတ် သွဇာတီယာန် လောကာန် ဝိၑေၐတး သွီယပရိဇနာန် န ပါလယတိ တရှိ သ ဝိၑွာသာဒ် ဘြၐ္ဋော 'ပျဓမၑ္စ ဘဝတိ၊
9 ஒரு விதவை அறுபது வயதிற்கு மேற்பட்டவளாயும், ஒரே கணவனுக்கு உண்மையுள்ள மனைவியாகவும் இருந்திருந்தால் மட்டுமே, அவளை விதவைகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
ဝိဓဝါဝရ္ဂေ ယသျာ ဂဏနာ ဘဝတိ တယာ ၐၐ္ဋိဝတ္သရေဘျော နျူနဝယသ္ကယာ န ဘဝိတဝျံ; အပရံ ပူရွွမ် ဧကသွာမိကာ ဘူတွာ
10 அத்துடன் அவள் தனது நல்ல செயல்களினால், அதாவது தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்தல், உபசரிக்கும் பண்பு, பரிசுத்தவான்களின் பாதங்களைக் கழுவுதல், கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்கு உதவி செய்தல் போன்ற எல்லா விதமான நல்ல செயல்களிலும் தன்னை ஈடுபடுத்தியவளாக, மற்றவர்களால் நற்சாட்சி பெற்றிருக்கவேண்டும்.
သာ ယတ် ၑိၑုပေါၐဏေနာတိထိသေဝနေန ပဝိတြလောကာနာံ စရဏပြက္ၐာလနေန က္လိၐ္ဋာနာမ် ဥပကာရေဏ သရွွဝိဓသတ္ကရ္မ္မာစရဏေန စ သတ္ကရ္မ္မကရဏာတ် သုချာတိပြာပ္တာ ဘဝေတ် တဒပျာဝၑျကံ၊
11 இந்தப் பட்டியலில் இளம் விதவைகளைச் சேர்த்துக்கொள்ளாதே. ஏனெனில் அவர்களுடைய உடல் இச்சைகள், அவர்களை கிறிஸ்துவின் அர்ப்பணிப்பிலிருந்து பிரிக்கும்போது, அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள்.
ကိန္တု ယုဝတီ ရွိဓဝါ န ဂၖဟာဏ ယတး ခြီၐ္ဋသျ ဝဲပရီတျေန တာသာံ ဒရ္ပေ ဇာတေ တာ ဝိဝါဟမ် ဣစ္ဆန္တိ၊
12 இப்படி அவர்கள் முதலில் செய்த வாக்குறுதியை மீறுவதனால், அவர்கள் தங்களுக்கே நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவார்கள்.
တသ္မာစ္စ ပူရွွဓရ္မ္မံ ပရိတျဇျ ဒဏ္ဍနီယာ ဘဝန္တိ၊
13 அதுத்தவிர அவர்கள் சோம்பல்தனமுள்ளவர்களாகி, வீட்டுக்கு வீடு போகப் பழகிக்கொள்வார்கள். அவர்கள் சோம்பேறிகளாக மட்டுமல்ல, பிறர் காரியங்களில் தலையிடுகிறவர்களாகவும், தேவையற்ற காரியங்களில் தலையிடுகிறவர்களாகவும் இருந்து, வீணான காரியங்களைப் பேசித்திரிவார்கள்.
အနန္တရံ တာ ဂၖဟာဒ် ဂၖဟံ ပရျျဋန္တျ အာလသျံ ၑိက္ၐန္တေ ကေဝလမာလသျံ နဟိ ကိန္တွနရ္ထကာလာပံ ပရာဓိကာရစရ္စ္စာဉ္စာပိ ၑိက္ၐမာဏာ အနုစိတာနိ ဝါကျာနိ ဘာၐန္တေ၊
14 எனவே இளம் விதவைகள் திருமணம் செய்து, பிள்ளைகளைப் பெற்று, தங்களுடைய குடும்பத்தை நடத்தவேண்டும் என்பதே நான் அவர்களுக்குக் கொடுக்கும் ஆலோசனை. அப்பொழுது இதன் நிமித்தம் பகைவன் அவதூறு பேசுவதற்கு இடமில்லாமல் போகும்.
အတော မမေစ္ဆေယံ ယုဝတျော ဝိဓဝါ ဝိဝါဟံ ကုရွွတာမ် အပတျဝတျော ဘဝန္တု ဂၖဟကရ္မ္မ ကုရွွတာဉ္စေတ္ထံ ဝိပက္ၐာယ ကိမပိ နိန္ဒာဒွါရံ န ဒဒတု၊
15 ஏனெனில் சிலர் ஏற்கெனவே வழிதவறி சாத்தானின் பின்னே போய்விட்டார்கள்.
ယတ ဣတး ပူရွွမ် အပိ ကာၑ္စိတ် ၑယတာနသျ ပၑ္စာဒ္ဂါမိနျော ဇာတား၊
16 ஒரு விசுவாச பெண்ணின் குடும்பத்தில் விதவைகள் இருந்தால், அந்த விசுவாசியே அவர்களைப் பராமரிக்க வேண்டும். திருச்சபையின்மேல் இந்தப் பாரத்தைச் சுமத்தக் கூடாது. அப்பொழுதுதான், உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு திருச்சபை உதவிசெய்ய முடியும்.
အပရံ ဝိၑွာသိနျာ ဝိၑွာသိနော ဝါ ကသျာပိ ပရိဝါရာဏာံ မဓျေ ယဒိ ဝိဓဝါ ဝိဒျန္တေ တရှိ သ တား ပြတိပါလယတု တသ္မာတ် သမိတော် ဘာရေ 'နာရောပိတေ သတျဝိဓဝါနာံ ပြတိပါလနံ ကရ္တ္တုံ တယာ ၑကျတေ၊
17 திருச்சபையை நன்றாய் நடத்தும் தலைவர்கள் இரட்டிப்பான மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்பட வேண்டும். விசேஷமாக பிரசங்கம் பண்ணுவதிலும், போதிப்பதிலும் ஈடுபடும் தலைவர்களை பாத்திரராக எண்ணவேண்டும்.
ယေ ပြာဉ္စး သမိတိံ သမျဂ် အဓိတိၐ္ဌန္တိ ဝိၑေၐတ ဤၑွရဝါကျေနောပဒေၑေန စ ယေ ယတ္နံ ဝိဒဓတေ တေ ဒွိဂုဏသျာဒရသျ ယောဂျာ မာနျန္တာံ၊
18 ஏனெனில், “தானியக்கதிரை போரடிக்கும் எருதின் வாயைக் கட்டவேண்டாம்” என்றும் “வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரவானாயிருக்கிறான்” என்றும், வேதவசனம் சொல்லுகிறதே.
ယသ္မာတ် ၑာသ္တြေ လိခိတမိဒမာသ္တေ, တွံ ၑသျမရ္ဒ္ဒကဝၖၐသျာသျံ မာ ဗဓာနေတိ, အပရမပိ ကာရျျကၖဒ် ဝေတနသျ ယောဂျော ဘဝတီတိ၊
19 ஒரு சபைத்தலைவனுக்கு எதிரான குற்றச்சாட்டு, இரண்டு அல்லது மூன்று பேருடைய சாட்சியங்களுடன் கொண்டுவரப்பட்டாலன்றி, அதை ஏற்றுக்கொள்ளாதே.
ဒွေါ် တြီန် ဝါ သာက္ၐိဏော ဝိနာ ကသျာစိတ် ပြာစီနသျ ဝိရုဒ္ဓမ် အဘိယောဂသ္တွယာ န ဂၖဟျတာံ၊
20 பாவம் செய்கிற சபைத்தலைவர்களை எல்லோர் முன்னிலையிலும் கடிந்துகொள். அப்பொழுது மற்றவர்களுக்கு அது ஒரு எச்சரிக்கையாயிருக்கும்.
အပရံ ယေ ပါပမာစရန္တိ တာန် သရွွေၐာံ သမက္ၐံ ဘရ္တ္သယသွ တေနာပရေၐာမပိ ဘီတိ ရ္ဇနိၐျတေ၊
21 இறைவனின் முன்னிலையிலும், கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும், தெரிந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் முன்னிலையிலும் நான் உனக்குக் கட்டளையிடுவதாவது: பட்சபாதமாக எதையும் செய்யாமல், நடுநிலையினின்று, இந்த அறிவுறுத்தல்களைக் கைக்கொள்.
အဟမ် ဤၑွရသျ ပြဘော ရျီၑုခြီၐ္ဋသျ မနောနီတဒိဝျဒူတာနာဉ္စ ဂေါစရေ တွာမ် ဣဒမ် အာဇ္ဉာပယာမိ တွံ ကသျာပျနုရောဓေန ကိမပိ န ကုရွွန ဝိနာပက္ၐပါတမ် ဧတာန ဝိဓီန် ပါလယ၊
22 ஊழியத்தில் அமர்த்துவதற்கு அவசரப்பட்டு ஒருவன்மேலும் கைகளை வைக்காதே. மற்றவர்களுடைய பாவங்களில் பங்குகொள்ளாதே. உன்னைத் தூய்மையுள்ளவனாய் காத்துக்கொள்.
ကသျာပိ မူရ္ဒ္ဓိ ဟသ္တာပရ္ဏံ တွရယာ မာကာရ္ၐီး၊ ပရပါပါနာဉ္စာံၑီ မာ ဘဝ၊ သွံ ၑုစိံ ရက္ၐ၊
23 நீ தொடர்ந்து தண்ணீர் மட்டும் குடிப்பதைவிட்டு, உனது வயிற்றின் நலனுக்காகவும், அடிக்கடி உனக்கு வருகிற வருத்தத்திற்காகவும், திராட்சைரசத்தையும் கொஞ்சம் குடி.
အပရံ တဝေါဒရပီဍာယား ပုနး ပုန ဒုရ္ဗ္ဗလတာယာၑ္စ နိမိတ္တံ ကေဝလံ တောယံ န ပိဝန် ကိဉ္စိန် မဒျံ ပိဝ၊
24 சிலரின் பாவங்கள் வெளிப்படையானதாய் இருப்பதால், நியாயத்தீர்ப்பிற்கு, அவர்கள் போகுமுன்பே அவை போய் சேருகின்றன; மற்றவர்களுடைய பாவங்களோ அவர்களுக்குப் பின்னால் வந்து சேருகின்றன.
ကေၐာဉ္စိတ် မာနဝါနာံ ပါပါနိ ဝိစာရာတ် ပူရွွံ ကေၐာဉ္စိတ် ပၑ္စာတ် ပြကာၑန္တေ၊
25 அதுபோலவே, நல்ல செயல்களும் வெளிப்படையாய் இருக்கின்றன. அப்படி வெளிப்படாதவையும் தொடர்ந்து மறைந்திருப்பதில்லை.
တထဲဝ သတ္ကရ္မ္မာဏျပိ ပြကာၑန္တေ တဒနျထာ သတိ ပြစ္ဆန္နာနိ သ္ထာတုံ န ၑက္နုဝန္တိ၊

< 1 தீமோத்தேயு 5 >