< 1 தீமோத்தேயு 5 >
1 முதியவர்களை கடுமையாகக் கண்டிக்காதே, அவரை உன் தந்தையைப்போல் மதித்து, அறிவுரை கூறு. இளைஞரை உனது சகோதரர்களைப் போலவும்,
ଏପେଙ୍ଗ୍ ପ୍ରାଚିନାର୍ ଇନସ୍ତା କିମାଟ୍, ମାତର୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଆବା ଇଞ୍ଜି ବାବି ଗୱାରି କିୟାଟ୍; ବେଣ୍ଡିୟାରିଂ ଟଣ୍ଡାର୍ ଲାକେ,
2 பெண்களில் முதியவர்களைத் தாய்களைப் போலவும், இளம்பெண்களைச் சகோதரிகளைப்போலவும் எண்ணி, முழுமையான தூய்மையோடு அவர்களிடம் நடந்துகொள்.
ପ୍ରାଚିନାର୍ କଗ୍ଲେକାଂ ଆୟା ଆରି ଜିପଲିକାଂ ପୁଇପୁୟା ବାବ୍ରେ ତଣ୍ଦେଲ୍ ଇଞ୍ଜି ଗିଆନ୍ କିଜ଼ି ହେ ଲାକେ ବେବାର୍ କିୟାଟ୍ ।
3 உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு ஏற்ற ஆதரவைக்கொடு.
ଆହ୍ର ହିଲ୍ୱି ରାଣ୍ଡିକାଂ ଜାତୁନ୍ ଅୱାଟ୍ ।
4 ஆனால் ஒரு விதவைக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருந்தால், முதலாவது அவர்கள் தங்களுடைய சொந்தக் குடும்பத்தைப் பராமரிப்பதின் மூலம், இறை பக்தியை நடைமுறைப்படுத்தக் கற்றுக்கொள்ளட்டும்; இப்படித் தங்கள் பெற்றோருக்கும், பெற்றோரின் பெற்றோருக்கும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யட்டும். ஏனெனில், இதுவே இறைவனுக்குப் பிரியமாயிருக்கிறது.
ମାତର୍ ଏଚେକାଡ଼୍ଦ ଇମ୍ଣି ରାଣ୍ଡିତି କାଡ଼୍ଦେ ଗାଡ଼୍ଚେ କି ନାତିନାତିଣି ମାଚିସ୍, ବାଟିଙ୍ଗ୍ ହେୱେକ୍ ପର୍ତୁମ୍ ଜାର୍ କୁଟୁମ୍ କାଜିଂ ବକ୍ତି ଚଚ୍ଚେଙ୍ଗ୍ ଆରି ଆୟାଆବା କାଜିଂ ଉପ୍କାର୍ କିଦେଙ୍ଗ୍ ହିକ୍ୟା କିଏର୍; ଇନେକିଦେଂକି ଇଦାଂ ତ ଇସ୍ୱର୍ତି କାଣ୍କୁତାଂ ହାର୍ଇଟ୍ୟା ଆନାର୍ ।
5 ஒரு விதவை உண்மையாகவே தேவையுடையவளாக இருந்து, கைவிடப்பட்டுத் தனிமையாக இருந்தால், அவள் தனது எதிர்பார்ப்பை இறைவனிலேயே வைத்திருக்கிறாள். அவள் இரவும் பகலும் இறைவனிடம் மன்றாடுவதிலும், உதவி கேட்பதிலும் நிலைத்திருப்பாள்.
ଇମ୍ଣି ରାଣ୍ଡି ଆହ୍ରହିଲ୍ୱାକା ଆନାତ୍ ଆରି ସାକାହିଲ୍ୱାକା, ହେଦେଲ୍ ଇସ୍ୱର୍ ଜପି ବାର୍ସି ଇଡ଼୍ଜି ୱେଡ଼ାନାଣା ଗୱାରି ଲାହାଂ ପାର୍ତାନାତ ଲାଗିସ୍ ମାନେତ୍;
6 ஆனால் ஒரு விதவை உலக இன்பத்தில் வாழ்வதை விரும்பினால், அவள் வாழ்ந்தாலும் நடைபிணமே.
ମାତର୍ ଇମ୍ଣି ରାଣ୍ଡିକ୍ ସୁକ୍ବଗି କିନିକ୍ ଆହା, ହେୱେକ୍ ଜିବୁନ୍ ମାଚିସ୍ପା ହାତିକ୍ନ୍ନା ।
7 ஒருவர் மேலும் குற்றஞ்சாட்டப்படாதபடி, இந்த அறிவுறுத்தலையும் எல்லா மக்களுக்கும் கொடு.
ହେୱେକ୍ ଇନେସ୍ ଦସିଆୱାଦାଂ ଆନିକ୍, ଇଦାଂ କାଜିଂ ଇ ସବୁ ପା ହେୱେକାଂ ବଲ୍ ହିୟାଟ୍ ।
8 யாராவது தனது உறவினர்களுக்கு, குறிப்பாக தன் சொந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவிசெய்யாவிட்டால், அவன் தனது விசுவாசத்தையே மறுதலிக்கிறான். அவன் விசுவாசம் இல்லாதவனைவிடக் கேவலமானவன்.
ମାତର୍ ଜଦି ଇନେର୍ ଜାର୍ ୱାସ୍କିନି, ବେସିକିଜ଼ି ଜାର୍ କୁଟୁମ୍ନି ଜାତୁନ୍ ଅୱିତିସ୍, ହେୱାନ୍ ପାର୍ତିକିୱାକାର୍ତାଂ ପାର୍ତି କିଉନ୍, ଆରେ ହେୱାନ୍ ପାର୍ତିକିୱାକାନ୍ତାଂ ଦରମ୍ ହିଲାକାନ୍ ଆନାନ୍ ।
9 ஒரு விதவை அறுபது வயதிற்கு மேற்பட்டவளாயும், ஒரே கணவனுக்கு உண்மையுள்ள மனைவியாகவும் இருந்திருந்தால் மட்டுமே, அவளை விதவைகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
ଇମ୍ଣି ରାଣ୍ଡିନି ବୈସ୍ ସାଟେ ବାର୍ହୁ ତାଙ୍ଗ୍ ଉଣା ଆକାୟ୍,
10 அத்துடன் அவள் தனது நல்ல செயல்களினால், அதாவது தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்தல், உபசரிக்கும் பண்பு, பரிசுத்தவான்களின் பாதங்களைக் கழுவுதல், கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்கு உதவி செய்தல் போன்ற எல்லா விதமான நல்ல செயல்களிலும் தன்னை ஈடுபடுத்தியவளாக, மற்றவர்களால் நற்சாட்சி பெற்றிருக்கவேண்டும்.
ଆରେ ଇନ୍ଦେଲ୍ ର ଆଣ୍ଡ୍ରେନ୍ନି କଗ୍ଲେ ଆରି ହାର୍ଦି ପୁଇପୁୟା କାମାୟ୍ କାଜିଂ ଡାକ୍ପୁଟାଆଜ଼ି, ଇଚିସ୍, ହେଦେଲ୍ ଜଦି ହିମ୍ଣାକାଙ୍ଗ୍ ପହାକିଜ଼ି, ୱିଜ଼ାରିଂ ସସ୍, ଚେଲାରିଂ ପାନା ନୁଜ଼୍ନାକା, ଦୁକ୍ଲୁଗାର୍ତି ବଜ୍ ପିଣ୍ଡି କିଜ଼ି ମାନାତ୍, ଆରେ ୱିଜ଼ୁ ହାତ୍ପା କାମାୟ୍ତ ତିକ୍ତିକା ଆଜ଼ି ମାନାତ୍, ବାଟିଙ୍ଗ୍ ହେଦେଲ୍ତି ତର୍ ରାଣ୍ଡି ଇଞ୍ଜି ଲେକାଏତ୍ ।
11 இந்தப் பட்டியலில் இளம் விதவைகளைச் சேர்த்துக்கொள்ளாதே. ஏனெனில் அவர்களுடைய உடல் இச்சைகள், அவர்களை கிறிஸ்துவின் அர்ப்பணிப்பிலிருந்து பிரிக்கும்போது, அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள்.
ମାତର୍ ଉଣା ବାର୍ହୁନି ଜିପଲି ରାଣ୍ଡିକାଂ ପିହାଟ୍, ଇନାକିଦେଂକି ହେୱେକ୍ ବାନ୍ୟାକାମ୍ ଆହାତିଂ ମାନ୍ କିଜ଼ି କ୍ରିସ୍ଟ ତାକେନ୍ଣ୍ଡାଙ୍ଗ୍ ଏଡ଼ା ଆଜ଼ି ବିବା କିଦେଙ୍ଗ୍ ଇଚା କିନିକ୍;
12 இப்படி அவர்கள் முதலில் செய்த வாக்குறுதியை மீறுவதனால், அவர்கள் தங்களுக்கே நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவார்கள்.
ହେୱେକ୍ ହେୱେକ୍ତି ଆଗେ ପାର୍ମାଣ୍ ପିହିନି କାଜିଂ ଡାଣ୍ଡ୍ପାୟାନିକ୍ ।
13 அதுத்தவிர அவர்கள் சோம்பல்தனமுள்ளவர்களாகி, வீட்டுக்கு வீடு போகப் பழகிக்கொள்வார்கள். அவர்கள் சோம்பேறிகளாக மட்டுமல்ல, பிறர் காரியங்களில் தலையிடுகிறவர்களாகவும், தேவையற்ற காரியங்களில் தலையிடுகிறவர்களாகவும் இருந்து, வீணான காரியங்களைப் பேசித்திரிவார்கள்.
ଆରେ ପା ହେୱେକ୍ ଇଲ୍କୁ ଇଲ୍କୁ ବୁଲାଆଜ଼ି ଆଡ଼୍ସିୟା ଆଦେଙ୍ଗ୍ ହିକାଆନିକ୍, ଆରେ କେବଲ୍ ଆଡ଼୍ସିୟା ଆକାୟ୍, ମତର୍ ଆହାର୍ କାତା ଆରି ଲକାର୍ ଗାଣ୍ଜୁ କିଜ଼ି ଅରାହିଲ୍ୱି କାତାବାର୍ତା କିନିକ୍
14 எனவே இளம் விதவைகள் திருமணம் செய்து, பிள்ளைகளைப் பெற்று, தங்களுடைய குடும்பத்தை நடத்தவேண்டும் என்பதே நான் அவர்களுக்குக் கொடுக்கும் ஆலோசனை. அப்பொழுது இதன் நிமித்தம் பகைவன் அவதூறு பேசுவதற்கு இடமில்லாமல் போகும்.
ଲାଗିଂ, ନା ଇଚା, ଜିପଲି ରାଣ୍ଡିକ୍ ବିବା ଆୟେକ୍, ହିମ୍ଣା ଗାଟାଆୟେକ୍, ଇଲ୍କାମାୟ୍ ଚଲାୟ୍କିୟେକ୍, ନିନ୍ଦା କିନି କାଜିଂ ସାତ୍ରୁଙ୍ଗ୍ ଇନାକାପା ଉପାୟ୍ ହିମେକ୍;
15 ஏனெனில் சிலர் ஏற்கெனவே வழிதவறி சாத்தானின் பின்னே போய்விட்டார்கள்.
ଇନେକିଦେଂକି ନଙ୍ଗ୍ ପା ଇନ୍ଦେକ୍ ଇନ୍ଦେକ୍ କ୍ରିସ୍ଟତାକେ ଦେହା ଆଜ଼ି ସୟ୍ତାନ୍ନି ପାଚେ ହାନିକା ।
16 ஒரு விசுவாச பெண்ணின் குடும்பத்தில் விதவைகள் இருந்தால், அந்த விசுவாசியே அவர்களைப் பராமரிக்க வேண்டும். திருச்சபையின்மேல் இந்தப் பாரத்தைச் சுமத்தக் கூடாது. அப்பொழுதுதான், உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு திருச்சபை உதவிசெய்ய முடியும்.
ଜଦି ଇମ୍ଣି ପାର୍ତିନିକାଦେଲ୍ କଗ୍ଲେକ୍ ଇଞ୍ଜ ରାଣ୍ଡିକ୍ ମାନିକ୍, ଲାଗିଂ ହେଦେଲ୍ ହେୱେକ୍ତି ଦୁକ୍ ପଚିକିଏକ୍, ଆରେ ମଣ୍ଡ୍ଲି ଜପି ବଜ୍ ଆମେତ୍, ଇନେସ୍କି ମଣ୍ଡ୍ଲି ଆହ୍ର ହିଲ୍ୱି ରାଣ୍ଡିକାଂ ଦୁକ୍ ପଚି କିଦେଙ୍ଗ୍ ଆଡ୍ନାତ୍ ।
17 திருச்சபையை நன்றாய் நடத்தும் தலைவர்கள் இரட்டிப்பான மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்பட வேண்டும். விசேஷமாக பிரசங்கம் பண்ணுவதிலும், போதிப்பதிலும் ஈடுபடும் தலைவர்களை பாத்திரராக எண்ணவேண்டும்.
ଇମ୍ଣି ପ୍ରାଚିନାର୍ ହାର୍ ଚାଲାୟ୍ କିତାର୍, ବେସି କିଜ଼ି ଇମ୍ଣାକାର୍ ବଚନ୍ ପର୍ଚାର୍ ଆରି ହିକ୍ୟାତ କସ୍ଟ କିତାର୍, ହେୱାର୍ ରି ଗୁଣ୍ ୱାରି ପାୟାନି ଜଗ୍ ଇଞ୍ଜି ଗାଣା କିୟା ଆନାର୍,
18 ஏனெனில், “தானியக்கதிரை போரடிக்கும் எருதின் வாயைக் கட்டவேண்டாம்” என்றும் “வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரவானாயிருக்கிறான்” என்றும், வேதவசனம் சொல்லுகிறதே.
ଇନେକିଦେଂକି ଦରମ୍ ସାସ୍ତର୍ ଇନାତା, “ତାସ୍ ତ୍ରେସ୍ନି ୱାଡ଼ାଂ ବଇଲା ୱେଇଦ କତ୍ରା ଗାଚ୍ମାଟ୍ ।” ଆରେ କାମାୟ୍ କିନାକାନ୍ ଜାର୍ କୁଲି ଡାବୁଂ ପାୟାନି ହକ୍ ।
19 ஒரு சபைத்தலைவனுக்கு எதிரான குற்றச்சாட்டு, இரண்டு அல்லது மூன்று பேருடைய சாட்சியங்களுடன் கொண்டுவரப்பட்டாலன்றி, அதை ஏற்றுக்கொள்ளாதே.
ରିୟାର୍ କି ତିନ୍ଜାଣ୍ ସାକି ପିସ୍ସି ଇମ୍ଣି ପ୍ରାଚିନାର୍ ବିରୁତ୍ତ କାତା ମାନି କିମାଟ୍ ।
20 பாவம் செய்கிற சபைத்தலைவர்களை எல்லோர் முன்னிலையிலும் கடிந்துகொள். அப்பொழுது மற்றவர்களுக்கு அது ஒரு எச்சரிக்கையாயிருக்கும்.
ମାତର୍ ଇନେର୍ ପାପ୍ କିଜ଼ି ମାନାର୍, ହେୱାରିଂ ୱିଜ଼ାର୍ ତାକେ କେତାଟ୍, ଇନେସ୍କି ଅଲ୍ଗା ଲଗୁ ପା ପାଣ୍ଡ୍ରୁ ଆନାର୍ ।
21 இறைவனின் முன்னிலையிலும், கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும், தெரிந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் முன்னிலையிலும் நான் உனக்குக் கட்டளையிடுவதாவது: பட்சபாதமாக எதையும் செய்யாமல், நடுநிலையினின்று, இந்த அறிவுறுத்தல்களைக் கைக்கொள்.
ଇସ୍ୱର୍ତି ସାକି ଇଡ଼୍ଜି, କ୍ରିସ୍ଟ ଜିସୁତି ଆରି ବାଚିକିତି ଦୁତକ୍ ମୁମ୍ଦ ଆନ୍ ଆଟ୍ୱା ଲାକେ ବଲ୍ ହିଦ୍ନାଙ୍ଗା, ଏପେଙ୍ଗ୍ ଆଗେନି ଦାରା ମେରା ହୁକେ ଚାଲାୱାଦାଂ ଇ ୱିଜ଼ୁ ପାଲି କିୟାଟ୍, ଆରେ, ଡାରା ବାବ୍ରେ ଇମ୍ଣି କାମାୟ୍ ପା କିମାଟ୍ ।
22 ஊழியத்தில் அமர்த்துவதற்கு அவசரப்பட்டு ஒருவன்மேலும் கைகளை வைக்காதே. மற்றவர்களுடைய பாவங்களில் பங்குகொள்ளாதே. உன்னைத் தூய்மையுள்ளவனாய் காத்துக்கொள்.
ତ୍ରିପ୍କୁ ଇନେର୍ ଜପି କେଇ ଇଟ୍ମାଟ୍, କି ଦସିନିକାର୍ ପାପ୍ତ ମେହାଆମାଟ୍; ଜାର୍ତିଂ ପୁଇପୁୟା କିଜ଼ି ଇଟାଟ୍ ।
23 நீ தொடர்ந்து தண்ணீர் மட்டும் குடிப்பதைவிட்டு, உனது வயிற்றின் நலனுக்காகவும், அடிக்கடி உனக்கு வருகிற வருத்தத்திற்காகவும், திராட்சைரசத்தையும் கொஞ்சம் குடி.
ଆରେ କେବଲ୍ ଏସୁଙ୍ଗ୍ ଉଣ୍ୱାଦାଙ୍ଗ୍ ମି ପଟନି ରଗ୍ ଆରି ନିତ୍ରେ ବେମାର୍ କାଜିଂ ଅଲପ୍ ଅଙ୍ଗୁର୍ ରାସ୍ ଉଣାଟ୍ ।
24 சிலரின் பாவங்கள் வெளிப்படையானதாய் இருப்பதால், நியாயத்தீர்ப்பிற்கு, அவர்கள் போகுமுன்பே அவை போய் சேருகின்றன; மற்றவர்களுடைய பாவங்களோ அவர்களுக்குப் பின்னால் வந்து சேருகின்றன.
କେତେକ୍ ଜାଣ୍ତି ବାନ୍ୟା କାମାୟ୍ ଅଲପ୍ତିଂ ହନାତ୍, ହେୱାର୍ ହେଦାଂ କାଜିଂ କରଟ୍ନି ମୁମ୍ ମାମ୍ ଆଦେଂ ଆନାତ୍, ଆରେ କେତେକ୍ ଅପ୍ରାଦ୍ତି ବେସି ବିଲମ୍ତାଂ ଦାରାପଡ଼ା ଆନାର୍ ।
25 அதுபோலவே, நல்ல செயல்களும் வெளிப்படையாய் இருக்கின்றன. அப்படி வெளிப்படாதவையும் தொடர்ந்து மறைந்திருப்பதில்லை.
ହେ ଲାକେ ପା ହାତ୍ପା କାମାୟ୍ ହିଗ୍ଦାଙ୍ଗ୍ ହନାତ୍, ଆରେ ଇନାକା ହଉତ୍, ହେଦାଂ ଡ଼ୁକ୍ଚି ଇଟ୍ୟାଜ଼ି ମାଞ୍ଜେଙ୍ଗ୍ ଆଡୁତ୍ ।