< 1 தீமோத்தேயு 5 >

1 முதியவர்களை கடுமையாகக் கண்டிக்காதே, அவரை உன் தந்தையைப்போல் மதித்து, அறிவுரை கூறு. இளைஞரை உனது சகோதரர்களைப் போலவும்,
ବୁଡାକୋଜଞ୍ଜିଆଡଙ୍‌ ଆପେୟନ୍‌ ଅନ୍ତମ୍‌ ମାନ୍ନେଆ, ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ କଁୟ୍‌ଡଙ୍‌ଜି, ଲଗଡ୍‌ ବୁଡ୍ଡିନ୍‌ ବାତ୍ତେ ବରାଜି, ବେଣ୍ଡିଆମରଞ୍ଜିଆଡଙ୍‌ ବୋଞାଙନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଞଣ୍ଡ୍ରମାଜି ।
2 பெண்களில் முதியவர்களைத் தாய்களைப் போலவும், இளம்பெண்களைச் சகோதரிகளைப்போலவும் எண்ணி, முழுமையான தூய்மையோடு அவர்களிடம் நடந்துகொள்.
ବୁଡିକୋଜଞ୍ଜି ଅୟୋଙନ୍‌ ଅନ୍ତମ୍‌, ଆରି ଡାଙ୍ଗଡ଼ିବଜଞ୍ଜି ମଡ଼ିର୍‌ ଗାମ୍‌ଲେ ତନାନଞ୍ଜି ଅନ୍ତମ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ମାନ୍ନେଆଜି ।
3 உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு ஏற்ற ஆதரவைக்கொடு.
ଆତିନ୍‌ସଜନ୍‌ ଆଡ୍ରକୋତନେଞ୍ଜି ଆ ଜୁଆର୍‌ବଜଞ୍ଜିଆଡଙ୍‌ ମାନ୍ନେଆଜି ।
4 ஆனால் ஒரு விதவைக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருந்தால், முதலாவது அவர்கள் தங்களுடைய சொந்தக் குடும்பத்தைப் பராமரிப்பதின் மூலம், இறை பக்தியை நடைமுறைப்படுத்தக் கற்றுக்கொள்ளட்டும்; இப்படித் தங்கள் பெற்றோருக்கும், பெற்றோரின் பெற்றோருக்கும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யட்டும். ஏனெனில், இதுவே இறைவனுக்குப் பிரியமாயிருக்கிறது.
ଅନ୍ନିଙ୍‌ ଆଜୁଆର୍‌ବୟ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ କି ଆ ଡାଙ୍ଗଡ଼ିଅନ୍‌ ଆରି ଆ ଉଲ୍ଲେଙଞ୍ଜି ଡକୋଏଞ୍ଜି ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ପର୍ତମ୍ମୁ ଆସିଂମରଞ୍ଜି ଆୟୋଙଞ୍ଜି, ଆପେୟଞ୍ଜି, ଜୋଜୋନ୍‌ ଡ ୟାୟୋନ୍‌ଆଡଙ୍‌ ମାନ୍ନେଏତଜି, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ କେନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା ମା ଇସ୍ୱରନ୍‌ ଆଗନିୟ୍‌ଗିୟ୍‌ଲୋଙ୍‌ ମନଙ୍‌ ଗିୟ୍‌ତାତେ ।
5 ஒரு விதவை உண்மையாகவே தேவையுடையவளாக இருந்து, கைவிடப்பட்டுத் தனிமையாக இருந்தால், அவள் தனது எதிர்பார்ப்பை இறைவனிலேயே வைத்திருக்கிறாள். அவள் இரவும் பகலும் இறைவனிடம் மன்றாடுவதிலும், உதவி கேட்பதிலும் நிலைத்திருப்பாள்.
ଅଙ୍ଗା ଆଜୁଆର୍‌ବୟ୍‌ ଆତିନସଜନ୍‌ ଡକୋତନ୍‌ ଆରି ଆକୋନ୍‌ରା, ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ଆସାଲନ୍‌ ଡକୋତନ୍‌, ଆରି ଆନିନ୍‌ ତଗଲ୍‌ ତମ୍‌ବା ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ପାର୍ତନାତନ୍‌;
6 ஆனால் ஒரு விதவை உலக இன்பத்தில் வாழ்வதை விரும்பினால், அவள் வாழ்ந்தாலும் நடைபிணமே.
ବନ୍‌ଡ ଅଙ୍ଗା ଜୁଆର୍‌ବୟ୍‌ ଜୋମ୍‌ଲେ ଗାଲେ ମଗାଡ୍‌ଲନ୍‌ ଡକୋତନ୍‌, ଆନିନ୍‌ ଆମେଙ୍‌ ଡକୋଲନ୍‌ ଜନଙ୍‌ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଆରବୁ ।
7 ஒருவர் மேலும் குற்றஞ்சாட்டப்படாதபடி, இந்த அறிவுறுத்தலையும் எல்லா மக்களுக்கும் கொடு.
ଜୁଆର୍‌ବଜଞ୍ଜି ଏଙ୍ଗାଲ୍‌ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ଏର୍‌ଡୋସା ଡେତେଜି, ତିଆସନ୍‌ କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଞଙ୍‌ଞଙାଜି।
8 யாராவது தனது உறவினர்களுக்கு, குறிப்பாக தன் சொந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவிசெய்யாவிட்டால், அவன் தனது விசுவாசத்தையே மறுதலிக்கிறான். அவன் விசுவாசம் இல்லாதவனைவிடக் கேவலமானவன்.
ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଆକୁଲମଞ୍ଜି କି ଆସିଂମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଅଃସାକ୍କେଏ, ଆନିନ୍‌ ଡର୍ନେବରନ୍‌ ଆଲ୍ଲେତେ, ଆରି ଆନିନ୍‌ ଏର୍‌ଡର୍ନେମରଞ୍ଜି ସିଲଡ୍‌ ଗୋଗୋୟ୍‌ ନିଣ୍ଡୟ୍‌ଡାତେ ।
9 ஒரு விதவை அறுபது வயதிற்கு மேற்பட்டவளாயும், ஒரே கணவனுக்கு உண்மையுள்ள மனைவியாகவும் இருந்திருந்தால் மட்டுமே, அவளை விதவைகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
ଅଙ୍ଗା ଆଜୁଆର୍‌ବୟ୍‌ ୟାକୁଡ଼ି ବର୍ସେଙ୍‌ ସିଲଡ୍‌ ଗୋଗୋୟ୍‌ ତଡ୍‌, ଆରି ଆନିନ୍‌ ଆବତରନ୍‌ ସୁଉଂଲନ୍‌,
10 அத்துடன் அவள் தனது நல்ல செயல்களினால், அதாவது தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்தல், உபசரிக்கும் பண்பு, பரிசுத்தவான்களின் பாதங்களைக் கழுவுதல், கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்கு உதவி செய்தல் போன்ற எல்லா விதமான நல்ல செயல்களிலும் தன்னை ஈடுபடுத்தியவளாக, மற்றவர்களால் நற்சாட்சி பெற்றிருக்கவேண்டும்.
ଆନିନ୍‌ ମନଙ୍‌ ଲନୁମ୍‌ତନ୍‌ ଗାମ୍‌ଲେ ମନ୍‌ରାଞ୍ଜି ଆଜନାଜି, ଆନିନ୍‌ ଆ ପସିଜଞ୍ଜିଆଡଙ୍‌ ସାକ୍କେତେ, ସାକ୍କେକୁଲନ୍‌ ଜନା, ବୟ୍‌ଲେମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଅନବ୍ବାଜଙନ୍‌, ଡୁକ୍କମରନ୍‌ଆଡଙ୍‌ ସାୟ୍‌ସିତେ ଆରି ଅଡ଼୍‌କୋନ୍‌ ମନଙ୍‌ କାବ୍ବାଡ଼ାନେନ୍‌ ଆସନ୍‌ ଲଡୟ୍‌ଡମ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଜୁଆର୍‌ବୟ୍‌ ଗାମ୍‌ଲେ ଆଞୁମନ୍‌ ଅନିଡନ୍‌ ଡେଏତୋ ।
11 இந்தப் பட்டியலில் இளம் விதவைகளைச் சேர்த்துக்கொள்ளாதே. ஏனெனில் அவர்களுடைய உடல் இச்சைகள், அவர்களை கிறிஸ்துவின் அர்ப்பணிப்பிலிருந்து பிரிக்கும்போது, அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள்.
ଆ ଡାଙ୍ଗଡ଼ି ଜୁଆର୍‌ବଜଞ୍ଜିଆଡଙ୍‌ ଏଜାଡଙ୍‌ଜି, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ଡଅଙ୍‌ଡାଗୋ ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଲୁମ୍‌ଲୁମନ୍‌ ଆସନ୍‌ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ସବ୍‌ଙାୟ୍‌ଲନ୍‌ ସୁଉଂନେନ୍‌ ସାୟ୍‌ତଜି ।
12 இப்படி அவர்கள் முதலில் செய்த வாக்குறுதியை மீறுவதனால், அவர்கள் தங்களுக்கே நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவார்கள்.
ଆନିଞ୍ଜି ପ୍ରବୁ ଜିସୁନ୍‌ ଆମଙ୍‌ ଆବ୍ରାସାଲଞ୍ଜି ଆ ବର୍ନେ ଆଲ୍ଲେତଜି, ତିଆସନ୍‌ ଆନିଞ୍ଜି ପନବ୍‌ରଡନ୍‌ ଞାଙ୍‌ତଜି ।
13 அதுத்தவிர அவர்கள் சோம்பல்தனமுள்ளவர்களாகி, வீட்டுக்கு வீடு போகப் பழகிக்கொள்வார்கள். அவர்கள் சோம்பேறிகளாக மட்டுமல்ல, பிறர் காரியங்களில் தலையிடுகிறவர்களாகவும், தேவையற்ற காரியங்களில் தலையிடுகிறவர்களாகவும் இருந்து, வீணான காரியங்களைப் பேசித்திரிவார்கள்.
ଆରି ରୟଙନ୍‌ ଞାଙେଞ୍ଜି ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ଗଙ୍ଗନ୍‌ସିଂଲନ୍‌ ପାଙ୍‌ତଜି, ଆରି ଆଡ଼ସିତଞ୍ଜି; ଆନିଞ୍ଜି ସତ୍ତର୍‌ ଅଃନ୍ନାଡ଼୍‌ସିନେଜି, ପୁର୍ବାବରଞ୍ଜି ଆ ବର୍ନେ ଡ ବନର୍‌ଡୋଙନ୍‌ ଆରି ଅତ୍ତେ ଅନ୍ନେ ଆ ବର୍ନେଜି କଡାଡ଼ିତଞ୍ଜି ।
14 எனவே இளம் விதவைகள் திருமணம் செய்து, பிள்ளைகளைப் பெற்று, தங்களுடைய குடும்பத்தை நடத்தவேண்டும் என்பதே நான் அவர்களுக்குக் கொடுக்கும் ஆலோசனை. அப்பொழுது இதன் நிமித்தம் பகைவன் அவதூறு பேசுவதற்கு இடமில்லாமல் போகும்.
ତିଆସନ୍‌ ଞେନ୍‌ ଗାମ୍‌ତାୟ୍‌, ଡାଙ୍ଗଡ଼ି ଜୁଆର୍‌ବଜଞ୍ଜି ସୁଉଂନେତଜି, ପସିଜନ୍‌ କୋଡେତଜି, ଆରି ଅସିଙନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା ଲୁମେତଜି, ଅନବ୍‌ଡୋସାନ୍‌ ଡ ବନର୍‌ଡୋଙନ୍‌ ଆସନ୍‌ ସନୁମନ୍‌ଆଡଙ୍‌ ରୟଙନ୍‌ ତିୟ୍‌ଡଙେଜି ତଡ୍‌ ।
15 ஏனெனில் சிலர் ஏற்கெனவே வழிதவறி சாத்தானின் பின்னே போய்விட்டார்கள்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଲାଙ୍‌ଲେଡ୍‌ ଜୁଆର୍‌ବଜଞ୍ଜି କ୍ରିସ୍ଟନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ସଙାୟ୍‌ଡାଲେ ସନୁମନ୍‌ ଆ ବର୍ନେ ବାତ୍ତେ ଞଣ୍ଡ୍ରମ୍‌ତଞ୍ଜି ।
16 ஒரு விசுவாச பெண்ணின் குடும்பத்தில் விதவைகள் இருந்தால், அந்த விசுவாசியே அவர்களைப் பராமரிக்க வேண்டும். திருச்சபையின்மேல் இந்தப் பாரத்தைச் சுமத்தக் கூடாது. அப்பொழுதுதான், உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு திருச்சபை உதவிசெய்ய முடியும்.
ଅନ୍ନିଙ୍‌ ଆ ଡର୍ନେବୟ୍‌ ଆସିଂଲୋଙ୍‌ ଜୁଆର୍‌ବଜନ୍‌ ଡକୋଏନ୍‌ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ସାୟ୍‌ସିଏତୋ, ଆରି ମଣ୍ଡଡ଼ିନ୍‌ କେନ୍‌ ଆନିଞ୍ଜି ଆସନ୍‌ ବାଉଲ୍ଲି ଡେଡଙ୍‌ ତଡ୍‌, ବନ୍‌ଡ ମଣ୍ଡଡ଼ିନ୍‌ ଆକୋନ୍‌ରା ଜୁଆର୍‌ବଜଞ୍ଜିଆଡଙ୍‌ ସାକ୍କେଏତୋ ।
17 திருச்சபையை நன்றாய் நடத்தும் தலைவர்கள் இரட்டிப்பான மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்பட வேண்டும். விசேஷமாக பிரசங்கம் பண்ணுவதிலும், போதிப்பதிலும் ஈடுபடும் தலைவர்களை பாத்திரராக எண்ணவேண்டும்.
ଅଙ୍ଗା ପାପୁର୍‌ମର୍‌ଜି ବର୍ନେନ୍‌ ଅପ୍ପୁଙ୍‌ବର୍‌ତଜି ଆରି ଞନଙନ୍‌ ତିୟ୍‌ତଜି, ଆନିଞ୍ଜି ଆ ଲନୁମ୍‌କୁଜଞ୍ଜି ବାଗୁ ଗୁନ ବର୍ତନ୍ନାନ୍‌ ଞାଙ୍‌ତଜି ।
18 ஏனெனில், “தானியக்கதிரை போரடிக்கும் எருதின் வாயைக் கட்டவேண்டாம்” என்றும் “வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரவானாயிருக்கிறான்” என்றும், வேதவசனம் சொல்லுகிறதே.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍‌ ଆଇଡିଡନ୍‌ ଡକୋ, “ଅବ୍‌ଞାଇଙନ୍‌ ତାଙ୍‌ଲିୟନ୍‌ ଏଡାମୁଡଙ୍‌” ଆରି “କାବ୍ବାଡ଼ାମରନ୍‌ ଲନୁମ୍‌କୁଜନ୍‌ ଆସନ୍‌ ବର୍ତନ୍ନାନ୍‌ ଞାଙେତୋ ।”
19 ஒரு சபைத்தலைவனுக்கு எதிரான குற்றச்சாட்டு, இரண்டு அல்லது மூன்று பேருடைய சாட்சியங்களுடன் கொண்டுவரப்பட்டாலன்றி, அதை ஏற்றுக்கொள்ளாதே.
ବାଗୁ କି ୟାଗି ମନ୍‌ରା ସାକିମରନ୍‌ ଅଃଡ୍ଡୁଙ୍‌ଲନାଜି ଡେନ୍‌, ଆମ୍ମୁଙ୍‌ଗଡ୍‌ମରଞ୍ଜି ଆ ବିରୁଦଲୋଙ୍‌ ଇନ୍ନିଙ୍‌ କନାୟ୍‌କାୟ୍‌ବରନ୍‌ ଅଡ଼ୋଲାୟ୍‌ ଡେନ୍‌ ତିଆତେ ଏଜାଡଙ୍‌ ।
20 பாவம் செய்கிற சபைத்தலைவர்களை எல்லோர் முன்னிலையிலும் கடிந்துகொள். அப்பொழுது மற்றவர்களுக்கு அது ஒரு எச்சரிக்கையாயிருக்கும்.
ବନ୍‌ଡ ଆନାଜି ଇର୍ସେ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଲୁମ୍‌ତଜି, ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାଞ୍ଜି ଆତେମଡ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ସାଞେଙ୍‌ଲେ ଞଙ୍‌ଞଙ୍‌ବାଜି, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନ୍ନାମରଞ୍ଜି ନିୟ୍‌ ବତଙ୍‌ତଜି ।
21 இறைவனின் முன்னிலையிலும், கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும், தெரிந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் முன்னிலையிலும் நான் உனக்குக் கட்டளையிடுவதாவது: பட்சபாதமாக எதையும் செய்யாமல், நடுநிலையினின்று, இந்த அறிவுறுத்தல்களைக் கைக்கொள்.
ଇସ୍ୱରନ୍‌, କ୍ରିସ୍ଟ ଜିସୁନ୍‌ ଡ ଆସନେଡା ପାଙ୍‌ଲଙ୍‌ବର୍‌ମରଞ୍ଜି ଆତେମଡ୍‌ଲୋଙ୍‌ ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଆକ୍ରାନ୍‌ ବର୍ତମ୍‌, ଆମନ୍‌ କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ବର୍ନେଞେନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଲନୁମ୍‌ନା, ଆରି ଅଙ୍ଗା ଜନଙ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା ଲୁମେନ୍‌ ଡେନ୍‌ ଅଲ୍‌ଡୁଲ୍‌ମଡ୍‌ଡାଲେ ଲୁମ୍‌ଡଙ୍‌ ।
22 ஊழியத்தில் அமர்த்துவதற்கு அவசரப்பட்டு ஒருவன்மேலும் கைகளை வைக்காதே. மற்றவர்களுடைய பாவங்களில் பங்குகொள்ளாதே. உன்னைத் தூய்மையுள்ளவனாய் காத்துக்கொள்.
ଇନ୍ନିଙ୍‌ ଏର୍‌ନିଃୟମନ୍‌ ଅବ୍ବାମ୍ମୁଙ୍‌ ଆନ୍ନିଙ୍‌ ଆ ଡଅଙ୍‌ଲୋଙ୍‌ ଅସିନମ୍‌ ଡକ୍କୋଡଙ୍‌, ଆନ୍ନାମରଞ୍ଜି ଆ ଇର୍ସେଲୋଙ୍‌ ଆମନ୍‌ ମାୟ୍‌ଡଙ୍‌ନେ, ଆମନ୍‌ ମବ୍‌ଡ଼ିର୍‌ଲନ୍‌ ଡକୋନା ।
23 நீ தொடர்ந்து தண்ணீர் மட்டும் குடிப்பதைவிட்டு, உனது வயிற்றின் நலனுக்காகவும், அடிக்கடி உனக்கு வருகிற வருத்தத்திற்காகவும், திராட்சைரசத்தையும் கொஞ்சம் குடி.
ଆରି ଆମନ୍‌ ସତ୍ତର୍‌ ଡାଆନ୍‌ ଗାଡଙ୍‌, କିମ୍ପୋଙ୍‌ ବତ୍ତାନମ୍‌ ଡ ଡିତାନ୍‌ ଆରସୁତମନ୍‌ ଆସନ୍‌ ଅଜିଡ୍‌ ଦ୍ରାକ୍ୟାଡାନ୍‌ ଗାଆ ।
24 சிலரின் பாவங்கள் வெளிப்படையானதாய் இருப்பதால், நியாயத்தீர்ப்பிற்கு, அவர்கள் போகுமுன்பே அவை போய் சேருகின்றன; மற்றவர்களுடைய பாவங்களோ அவர்களுக்குப் பின்னால் வந்து சேருகின்றன.
ଲାଙ୍‌ଲେନ୍ନେ ଆ ଇର୍ସେ ପନ୍‌ସୁଆତିନ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଡେଏନ୍‌ ରାଙ୍‌ଡାତେ, ଆରି ଲାଙ୍‌ଲେନ୍ନେ ଆ ଇର୍ସେ ତିକ୍କି ଡିଙ୍‌ତେ ।
25 அதுபோலவே, நல்ல செயல்களும் வெளிப்படையாய் இருக்கின்றன. அப்படி வெளிப்படாதவையும் தொடர்ந்து மறைந்திருப்பதில்லை.
ଏତ୍ତେଲେମା ଲାଙ୍‌ଲେନ୍ନେ ଆ ଡରମ୍ମ କାବ୍ବାଡ଼ାଜି ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଆମୁକ୍କାଲୋଙ୍‌ ଲରାଙ୍‌ଡାତେ, ବନ୍‌ଡ ଆରି ଲାଙ୍‌ଲେନ୍ନେ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଏତ୍ତେଲେ ଅଃର୍ରାଙ୍‌ଡାଲୋ ଜନଙ୍‌ଡେନ୍‌ ତିଆତେ ସଲନ୍‌ ଅଃଡ୍ଡକୋନେ ।

< 1 தீமோத்தேயு 5 >