< 1 தெசலோனிக்கேயர் 1 >
1 பவுல், சில்வான், தீமோத்தேயு, ஆகிய நாங்கள் பிதாவாகிய இறைவனிலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலும் இருக்கிற தெசலோனிக்கேயரின் திருச்சபைக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக.
เปาล: สิลฺวานสฺตีมถิยศฺจ ปิตุรีศฺวรสฺย ปฺรโภ รฺยีศุขฺรีษฺฏสฺย จาศฺรยํ ปฺราปฺตา ถิษลนีกียสมิตึ ปฺรติ ปตฺรํ ลิขนฺติฯ อสฺมากํ ตาต อีศฺวร: ปฺรภุ รฺยีศุขฺรีษฺฏศฺจ ยุษฺมานฺ ปฺรตฺยนุคฺรหํ ศานฺติญฺจ กฺริยาสฺตำฯ
2 நாங்கள் எங்களுடைய மன்றாட்டுகளில் உங்களையும் நினைவுகூர்ந்து, உங்கள் எல்லோருக்காகவும் இறைவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துகிறோம்.
วยํ สรฺเวฺวษำ ยุษฺมากํ กฺฤเต อีศฺวรํ ธนฺยํ วทาม: ปฺรารฺถนาสมเย ยุษฺมากํ นาโมจฺจารยาม: ,
3 நமது இறைவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு முன்பாக, உங்கள் விசுவாசத்தினால் வரும் செயலையும், அன்பினால் உண்டாகிய வேலையையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலுள்ள எதிர்பார்ப்பினால் உங்களுக்குண்டான சகிப்புத்தன்மையையும் நாங்கள் நினைவுகூருகிறோம்.
อสฺมากํ ตาตเสฺยศฺวรสฺย สากฺษาตฺ ปฺรเภา ยีศุขฺรีษฺเฏ ยุษฺมากํ วิศฺวาเสน ยตฺ การฺยฺยํ เปฺรมฺนา ย: ปริศฺรม: ปฺรตฺยาศยา จ ยา ติติกฺษา ชายเต
4 இறைவனால் அன்பு செலுத்தப்படுகிற பிரியமானவர்களே, அவர் உங்களைத் தெரிந்துகொண்டார் என்று எங்களுக்குத் தெரியும்.
ตตฺ สรฺวฺวํ นิรนฺตรํ สฺมรามศฺจฯ เห ปิยภฺราตร: , ยูยมฺ อีศฺวเรณาภิรุจิตา โลกา อิติ วยํ ชานีม: ฯ
5 ஏனெனில், எங்களுடைய நற்செய்தி உங்களிடம் வெறும் வார்த்தைகளோடு வரவில்லை. அந்த நற்செய்தி வல்லமையுடனும், பரிசுத்த ஆவியானவருடனும், உறுதியான நம்பிக்கையுடனும் உங்களிடத்தில் வந்தது. உங்களுக்காக நாங்களும் உங்களிடையே எப்படி வாழ்ந்தோம் என்பதும் உங்களுக்குத் தெரியும்.
ยโต'สฺมากํ สุสํวาท: เกวลศพฺเทน ยุษฺมานฺ น ปฺรวิศฺย ศกฺตฺยา ปวิเตฺรณาตฺมนา มโหตฺสาเหน จ ยุษฺมานฺ ปฺราวิศตฺฯ วยนฺตุ ยุษฺมากํ กฺฤเต ยุษฺมนฺมเธฺย กีทฺฤศา อภวาม ตทฺ ยุษฺมาภิ รฺชฺญายเตฯ
6 உங்களுக்கு ஏற்பட்ட கடுந்துன்பத்தையும் பொருட்படுத்தாமல், நற்செய்தியை பரிசுத்த ஆவியானவர் கொடுத்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள். நீங்கள் எங்களையும் கர்த்தரையும் பின்பற்றி நடக்கிறவர்களானீர்கள்.
ยูยมปิ พหุเกฺลศโภเคน ปวิเตฺรณาตฺมนา ทตฺเตนานนฺเทน จ วากฺยํ คฺฤหีตฺวาสฺมากํ ปฺรโภศฺจานุคามิโน'ภวตฯ
7 இவ்விதமாய் நீங்கள் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள எல்லா விசுவாசிகளுக்கும் ஒரு முன்மாதிரிகளானீர்கள்.
เตน มากิทนิยาขายาเทศโย รฺยาวนฺโต วิศฺวาสิโน โลกา: สนฺติ ยูยํ เตษำ สรฺเวฺวษำ นิทรฺศนสฺวรูปา ชาตา: ฯ
8 உங்களிடமிருந்தே கர்த்தரின் செய்தி மக்கெதோனியாவுக்கும் அகாயாவுக்கும் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் தெரிய வந்திருக்கிறது. இறைவனில் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசமும் எங்கும் தெரிய வந்திருக்கிறது. எனவே, அதைக்குறித்து நாங்கள் எதையும் சொல்லவேண்டியதில்லை.
ยโต ยุษฺมตฺต: ปฺรตินาทิตยา ปฺรโภ รฺวาณฺยา มากิทนิยาขายาเทเศา วฺยาปฺเตา เกวลเมตนฺนหิ กินฺตฺวีศฺวเร ยุษฺมากํ โย วิศฺวาสสฺตสฺย วารฺตฺตา สรฺวฺวตฺราศฺราวิ, ตสฺมาตฺ ตตฺร วากฺยกถนมฺ อสฺมากํ นิษฺปฺรโยชนํฯ
9 ஏனெனில் அவ்விடத்திலுள்ள மக்களே நீங்கள் எப்படி வரவேற்றீர்கள் என்பதைப்பற்றி அவர்களே அறிவிக்கிறார்கள். நீங்கள் எவ்விதமாய் உண்மையான உயிருள்ள இறைவனுக்கு ஊழியம் செய்யும்படி, இறைவன் அல்லாதவைகளைக் கைவிட்டு இறைவனிடம் திரும்பினீர்கள் என்பது பற்றியும் அறிவிக்கிறார்கள்.
ยโต ยุษฺมนฺมเธฺย วยํ กีทฺฤศํ ปฺรเวศํ ปฺราปฺตา ยูยญฺจ กถํ ปฺรติมา วิหาเยศฺวรํ ปฺรตฺยาวรฺตฺตธฺวมฺ อมรํ สตฺยมีศฺวรํ เสวิตุํ
10 அத்துடன், இறைவன் இறந்தோரிலிருந்து எழுப்பிய தமது மகனாகிய இயேசு, பரலோகத்திலிருந்து வரும்வரை நீங்கள் காத்திருப்பதைப் பற்றியும் அறிவிக்கிறார்கள். இந்த இயேசுவே வரப்போகும் கோபத்திலிருந்து நம்மை இரட்சிக்கிறவர்.
มฺฤตคณมธฺยาจฺจ เตโนตฺถาปิตสฺย ปุตฺรสฺยารฺถต อาคามิโกฺรธาทฺ อสฺมากํ นิสฺตารยิตุ รฺยีโศ: สฺวรฺคาทฺ อาคมนํ ปฺรตีกฺษิตุมฺ อารภธฺวมฺ เอตตฺ สรฺวฺวํ เต โลกา: สฺวยมฺ อสฺมานฺ ชฺญาปยนฺติฯ