< 1 சாமுவேல் 30 >
1 தாவீதும் அவன் மனிதரும் மூன்றாவது நாள் சிக்லாக்கை அடைந்தார்கள். அமலேக்கியர் பெலிஸ்திய நாட்டின் நெகேப் பகுதியையும், சிக்லாகையும் சூறையாடியிருந்தார்கள். அவர்கள் சிக்லாக்கைத் தாக்கி அதை எரித்து,
Tukun len luo, David ac mwet lal elos sun acn Ziklag. Mwet Amalek elos mweuni acn eir in acn Judah, ac elos utyak tari nu Ziklag. Elos esukak acn we,
2 அங்குள்ள பெண்கள், சிறியவர், முதியவர் உட்பட அனைவரையும் சிறைப்பிடித்துக் கொண்டுபோயிருந்தார்கள். போகும்போது ஒருவரையும் கொலைசெய்யாமல், எல்லோரையும் தங்களுடன் கொண்டுபோய்விட்டார்கள்.
ac sruokya mutan nukewa. Elos tia uniya kutena mwet, tusruk elos usla mwet nukewa welulos ke elos som liki acn we.
3 தாவீதும் அவன் ஆட்களும் சிக்லாகுக்கு வந்தபோது, அது நெருப்பினால் அழிக்கப்பட்டிருப்பதையும், தங்கள் மனைவியரும், மகன்களும், மகள்களும் கைதிகளாகக் கொண்டுபோகப்பட்டிருப்பதையும் கண்டார்கள்.
Ke David ac mwet lal tuku, elos liye tuh na siti sac firiryak, na sruhu ac utukla mutan kialos ac tulik natulos, mukul ac mutan.
4 எனவே தாவீதும் அவனுடனிருந்த மனிதரும் அழுவதற்குப் பெலனற்றுப் போகுமட்டும் கதறி அழுதார்கள்.
David ac mwet lal elos mutawauk in tung, ac elos tung nwe mas na.
5 அவர்களோடு யெஸ்ரயேல் ஊராளான அகினோவாம், கர்மேல் ஊராளான நாபாலின் விதவையாயிருந்த அபிகாயில் ஆகிய தாவீதின் மனைவியர் இருவரும்கூட கைதிகளாகக் கொண்டுபோகப்பட்டிருந்தார்கள்.
Finne Ahinoam ac Abigail, su eltal mutan kial David, elos utukla pac.
6 தங்கள் மகன்களையும், மகள்களையும் இழந்த ஒவ்வொருவரும் மனங்கசந்ததினால் தாவீதைக் கல்லால் அடிக்க வேண்டுமெனப் பேசிக்கொண்டார்கள். அதை அறிந்த தாவீது மிகவும் மனவேதனையடைந்தான். தாவீதோ தன் இறைவனாகிய யெகோவாவுக்குள் பெலன் கொண்டான்.
David el muta in fosrnga lulap, mweyen mwet lal elos toasr na pwaye lah utukla tulik natulos, pwanang elos oru elos in tanglal David. Tusruktu David el ngetak nu sin LEUM GOD tuh Elan akkeyal.
7 அதன்பின் தாவீது அகிமெலேக்கின் மகனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனிடம், “ஏபோத்தை என்னிடம் கொண்டுவா” என்றான். அபியத்தார் ஏபோத்தைத் தாவீதிடம் கொண்டுவந்தான்.
David el fahk nu sin mwet tol Abiathar, wen natul Ahimelech, “Use nuknuk ephod lun mwet tol,” na Abiathar el use ac sang nu sel.
8 அப்பொழுது தாவீது யெகோவாவிடம், “நான் அந்த கொள்ளைக்காரரை துரத்திப் போகட்டுமா? என்னால் அவர்களைப் பிடிக்க முடியுமா?” என்று கேட்டான். அதற்கு யெகோவா, “அவர்களைத் துரத்திப்போ. நிச்சயமாக அவர்களைப் பிடித்து, கைதிகளைத் தப்புவிப்பாய்” என்றார்.
Na David el siyuk sin LEUM GOD, “Ya fal nga in som ukwe mwet su aklokoalokye kut? Nga ac ku in sruokolosi?” Na LEUM GOD El topuk, “Aok, ukwalos! Kom ac fah sruokolosi, ac kom fah molela mwet ma sruhu.”
9 எனவே தாவீதும், அவனுடனிருந்த அறுநூறு மனிதரும் பேசோர் கணவாய்க்கு வந்தபோது சிலர் அங்கேயே தங்கிவிட்டார்கள்.
Ouinge David ac mwet onfoko lal elos som in ukwalos, ac ke elos sun Infacl srisrik Besor, kutu selos mutana we.
10 ஏனெனில் இருநூறுபேர் அதிக களைப்படைந்திருந்ததால் அவர்களாலே கணவாய்க்கு கடந்துபோக முடியவில்லை. ஆனால் தாவீதும் நானூறுபேரும் அவர்களைத் தொடர்ந்து துரத்திச் சென்றார்கள்.
David ac mwet angfoko lal sifilpa som. Mwet luofoko saya elos arulana totola ac tia ku in wi tupalla Infacl soko ah, oru elos mutana tia wi som.
11 இவ்வாறு அவர்கள் போகும் வழியில் எகிப்தியன் ஒருவன் வயலில் கிடப்பதைக் கண்டு அவனைத் தாவீதிடம் கொண்டுவந்தார்கள். அவர்கள் அவனுக்குக் குடிக்கத் தண்ணீரும், சாப்பிட உணவும் கொடுத்தார்கள்.
Mwet ma welul David elos konauk tulik mukul Egypt se yen mwesis ah, na elos usalu nu yorol David. Elos sang kutu bread nal ac kof nimal,
12 அவனுக்கு அத்திப்பழ அடையில் ஒரு துண்டையும், இரண்டு திராட்சைப்பழ அடைகளையும் கொடுத்தார்கள். அவன் மூன்று நாட்களாக இரவும் பகலும் தண்ணீர் குடியாமலும், உணவு சாப்பிடாமலும் இருந்தான். எனவே அவர்கள் கொடுத்த உணவைச் சாப்பிட்டவுடன் களைப்பு நீங்கிப் பெலனடைந்தான்.
ac fig paola, ac tun in grape pao luo. Ke el mongo tari na el kui. El tuh tia mongo ku nim ke lusen len tolu.
13 அதன்பின் தாவீது அவனிடம், “நீ யாரைச் சேர்ந்தவன்? நீ எங்கிருந்து வந்தாய்?” என்று கேட்டான். அதற்கு அவன், “நான் ஒரு அமலேக்கியனுடைய அடிமையான எகிப்தியன். மூன்று நாட்களுக்குமுன் நான் வியாதிப்பட்டபோது, என் தலைவன் என்னை கைவிட்டுவிட்டார்.
David el siyuk sel, “Ku su leum lom uh, ac kom mwet oya?” Tulik sac fahk nu sel, “Nga mwet Egypt. Nga mwet kohs lun sie mwet Amalek. Leum luk ah som likiyu len tolu lac pa inge, mweyen nga luman mas kutu.
14 நாங்கள் கிரேத்தியருடைய நெகேப் பகுதியையும், யூதாவுக்குச் சொந்தமான பிரதேசத்தையும், காலேப்பின் நெகேப் பகுதியையும் முற்றுகையிட்டு, சிக்லாக்கைத் தீக்கிரையாக்கினோம்” என்றான்.
Kut tuh som mweuni acn lun mwet Chereth ma oan eir in acn Judah, oayapa acn lun mwet in sou lal Caleb, ac kut esukak pac acn Ziklag.”
15 அப்பொழுது தாவீது அவனிடம், “நீ எங்களைச் சூறையாடிய கூட்டத்திடம் போக வழிகாட்டுவாயா?” என்று கேட்டான். அதற்கு அவன், “நீர் என்னைக் கொல்வதில்லையென்றும், என் தலைவனிடம் ஒப்படைப்பதில்லை என்றும் இறைவன் பேரில் ஆணையிட்டால், நான் உம்மை அவர்களிடம் கூட்டிக்கொண்டு போவேன்” என்றான்.
Na David el siyuk sel, “Kom ku in pwen kut nu yurin u se ingan?” Tulik sac topuk, “Aok, kom fin wulela nu sik ye mutun God lah kom ac tia uniyuwi, ku usyula nu yurin leum luk.”
16 அவ்வாறே அவன் தாவீதைக் கூட்டிக்கொண்டு அவர்களிடம் போனான். அங்கே அவர்கள், நாட்டுப்புறமெங்கும் சிதறுண்டு சாப்பிட்டு, குடித்து ஆடிப்பாடிக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் பெலிஸ்திய நாடுகளிலிருந்தும் யூதா நாட்டிலிருந்தும் பெருந்தொகையான பொருட்களைக் கொள்ளையடித்து வந்த மகிழ்ச்சியிலே, இப்படிச் செய்துகொண்டிருந்தார்கள்.
Ac el pwanul David nu yurin u se ma orek lokoalok. Mwet inge elos oalik acn se elos muta we ah. Elos mongo ac nimnim ac orek engan in akfulatye lah arulana pus ma elos sruokya in facl lun mwet Philistia ac Judah.
17 அப்பொழுது தாவீது அன்று இரவு நேரம் தொடங்கி மறுநாள் மாலைவரை அவர்களுடன் சண்டையிட்டான். ஒட்டகங்களில் ஏறித் தப்பி ஓடிப்போன நானூறு வாலிபரைத் தவிர வேறு ஒருவனும் தப்பவில்லை.
Toang in len tok ah, David el mweun lainulos. El mweunelos nwe ke na ekela. Oasr mwet angfoko sroang nu fin camel natulos ac kaingla, a funu mwet nukewa saya uh elos tiana kaingla.
18 தாவீது அமலேக்கியர் கொள்ளையிட்டுக் கொண்டுபோன தன் இரு மனைவியர் உட்பட அனைத்தையும் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
David el molela mwet nukewa ac ma nukewa ma mwet Amalek elos tuh usla, wi mutan luo kial sifacna.
19 அவர்கள் சிறைப்பிடித்தவர்களில் வாலிபரோ, முதியவரோ, ஆண் பிள்ளைகளோ, பெண் பிள்ளைகளோ ஒருவருமே தவறவில்லை. கொள்ளையடித்த பொருட்கள் அனைத்தையும், ஒன்றுமே குறையாமல் தாவீது மீட்டுக்கொண்டு போனான்.
Wangin ma tuhlac. David el folokonma tulik mukul ac tulik mutan nukewa nutin mwet lal ah, oayapa ma nukewa mwet Amalek elos tuh usla.
20 தாவீது அங்குள்ள ஆடு மாடுகளனைத்தையும் கைப்பற்றினான். அவற்றை அவன் மனிதர் மற்ற மந்தைகளுக்கு முன்னாக ஒட்டிச்சென்று, “இது தாவீதின் கொள்ளைப்பொருள்” என்று சொன்னார்கள்.
El oayapa folokonma un sheep ac cow ma utukla. Mwet lal elos oru kosro inge fahsr meet lukelos, ac elos fahk, “Ma inge nukewa ma lal David!”
21 அதன்பின் தாவீது பேசோர் கணவாய்க்கு வந்தான். அங்கே அதிக களைப்பினால் அவனுடன் போகமுடியாமல் இருந்த இருநூறு பேரும் இருந்தார்கள். அந்த மனிதர், தாவீதையும் அவனுடன் வந்த மனிதரையும் சந்திப்பதற்காக எதிர்கொண்டு வந்தார்கள். தாவீது அவர்களின் சுகசெய்தியை விசாரித்தான்.
Na David el folokla nu yurin mwet luofoko ma tuh mutana Infacl srisrik Besor ke sripen elos arulana munas ac kofla welul. Elos tuyak in osun nu sel ac mwet lal, ac David el paingulos ke kas kulang.
22 அப்பொழுது தாவீதைப் பின்பற்றியவர்களில் குழப்பக்காரரும், தீய குணங்கள் கொண்டவர்களும் இருந்தார்கள். அவர்கள் தாவீதிடம், “அவர்கள் எங்களுடன் வராதபடியால் நாங்கள் மீட்டுக் கொண்டுவந்த கொள்ளைப்பொருட்களில் ஒரு பங்கையேனும் அவர்களுக்குக் கொடுக்கமாட்டோம். அவர்கள் ஒவ்வொருவரும் தன்தன் மனைவிகளையும், பிள்ளைகளையும் மட்டும் அழைத்துக் கொண்டுபோகட்டும்” என்றார்கள்.
Tusruktu, kutu mukul srangesroa ac lusrongten sin mwet ma welul David som ah, elos fahk, “Mwet inge tiana wi kut som, na pa kut ac tiana sang nu selos ma kut eis inge. Elos in eis mutan kialos ac tulik natulos, ac fahla liki kut.”
23 அதற்குத் தாவீது, “என் சகோதரரே யெகோவா நமக்குத் தந்தவற்றை அப்படிச் செய்யக்கூடாது. யெகோவா நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாய் வந்த கூட்டத்தை எங்களிடம் ஒப்படைத்தாரே.
A David el fahk, “Ma lik, kowos tia ku in oru ouinge nu ke ma LEUM GOD El ase nu sesr! El molikutla, ac El ase kutangla nu sesr fin mwet lokoalok lasr.
24 நீங்கள் சொல்வதை யார்தான் ஏற்றுக்கொள்வார்கள். யுத்த களத்துக்கு வந்தவர்களுக்கு எவ்வளவு பங்கு கிடைக்குமோ, அதே அளவே யுத்தத்துக்குரிய பொருட்களுடன் தங்கியிருக்கிறவர்களுக்கும் கிடைக்கவேண்டும். எனவே எல்லோருக்கும் சமமான பங்கே கிடைக்கவேண்டும்” என்றான்.
Wanginna mwet ku in insese nu ke ma kowos fahk inge! Mwet nukewa in eis oana sie. Ip se lun mwet su muta taran ma lasr, ac fah oana ip se lun mwet ma som wi mweun.”
25 தாவீது இதை ஒரு ஒழுங்குவிதியாகவும், நியமமாகவும் ஏற்படுத்தினான். இப்படியே இது இன்றுவரை இஸ்ரயேலில் நடந்து வருகிறது.
David el oakiya ma sap se inge, ac mwet Israel elos fahsrna kac nwe misenge.
26 தாவீது சிக்லாக்கிற்கு வந்தபோது, “யெகோவாவின் பகைவர்களிடமிருந்து கொள்ளையடித்த பொருட்களில் உங்களுக்கும் அன்பளிப்பு இங்கே இருக்கிறது” என்று சொல்லி, தான் கொள்ளையடித்த பொருட்களில் சிலவற்றைத் தன் நண்பர்களான யூதாவின் முதியவர்களுக்கு அனுப்பிவைத்தான்.
Ke David el folokla nu Ziklag, el supwala kutu ma wap inge nu sin mwet kawuk lal, su mwet kol in acn Judah, wi kas inge, “Mwe lung nu suwos inge, ma kut eisla sin mwet lokoalok lun LEUM GOD.”
27 அவற்றைத் தாவீது பெத்தேல், ராமாத் நெகேப், யாத்தீரில் இருந்தவர்களுக்கும்,
El supu ma inge nu sin mwet su muta Bethel, ac mwet su muta Ramah su oan eir in Judah, ac nu sin mwet su muta Jattir,
28 அரோயேர், சிப்மோத், எஸ்தெமோவாவில் இருந்தவர்களுக்கும்,
Aroer, Siphmoth, Eshtemoa,
29 ராக்கா, யெராமியேலியரின் பட்டணங்களில் இருந்தவர்களுக்கும், கேனியரின் பட்டணங்கள்,
ac Racal; ac nu sin sou lal Jerahmeel, ac nu sin mwet Ken,
30 ஓர்மா, கொராசான் ஆத்தாகில் இருந்தவர்களுக்கும்,
ac nu sin mwet su muta in siti Hormah, Borashan, Athach,
31 எப்ரோனில் இருந்தவர்களுக்கும், மற்றும் தாவீதும் அவன் மனிதரும் போய்வந்த எல்லா இடங்களிலுமுள்ளவர்களுக்கும் அன்பளிப்பாக அனுப்பினான்.
ac Hebron. El supu ma inge nu in acn nukewa ma el, ac mwet lal, elos tuh fufahsryesr we.