< 1 பேதுரு 4 >

1 எனவே, கிறிஸ்து தமது மாம்சத்தில் துன்பத்தை அனுபவித்ததினால், நீங்களும் அதேவிதமான மனநிலை உடையவர்களாய் இருங்கள். ஏனெனில், மாம்சத்தில் துன்பப்படுகிறவர்கள் பாவத்துடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறார்கள்.
କ୍ରିସ୍ଟନ୍‌ ଡଅଙ୍‌ଲୋଙନ୍‌ ପରାନ୍‌ଡଣ୍ଡନ୍‌ ଡେଏନ୍‌, ତିଆସନ୍‌ ମନ୍ନବେନ୍‌ ଆନିନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଅମ୍ମେନାବା; ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଅଙ୍ଗା ମନ୍‌ରା କ୍ରିସ୍ଟନ୍‌ ଆସନ୍‌ ଡଅଙ୍‌ଲୋଙନ୍‌ ପରାନ୍‌ଡଣ୍ଡନ୍‌ ଡେତେ, ଆନିନ୍‌ ଇର୍ସେନ୍‌ ସିଲଡ୍‌ ସବ୍‌ଙାଲନ୍‌ ଡକୋତନେ ।
2 அதன் பிரதிபலனாகவே, அவர்கள் பூமியில் தொடர்ந்து தாங்கள் வாழும் வாழ்க்கையை, மாம்சத்தில் எழும் தீய ஆசைகளுக்காக வாழ்வதில்லை. இறைவனுடைய சித்தத்தைச் செய்வதற்காகவே, அவர்கள் வாழ்வார்கள்.
ଆମ୍ୱେଞ୍ଜି ନମି ସିଲଡ୍‌ ଡିଅଙ୍ଗା ଡିନ୍ନା ଜାୟ୍‌ ପୁର୍ତିଲୋଙନ୍‌ ଆମେଙ୍‌ ଏଡକୋତନ୍‌, ଡିୟ୍‌ତେ ଡିନ୍ନା ଜାୟ୍‌ ଡଅଙ୍‌ଡାଗୋ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଏର୍‌ଲନୁମନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ଇସ୍ସୁମ୍‌ ବାତ୍ତେ ଲନୁମ୍‌ନାବା ।
3 கடந்த காலத்தில் போதிய அளவு நேரத்தை இறைவனை அறியாத மக்கள் செய்யும் செயல்களில் ஈடுபட்டுக் கழித்தீர்களே! காமவேறிகளிலும், பேராசைகளிலும், மதுவெறியிலும், கேளிக்கைகளிலும், மதுபான விருந்துகளிலும், அருவருப்பான விக்கிரக வழிபாட்டிலும் வாழ்ந்தீர்கள்.
ଆମ୍ମୁଙ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଏର୍‌ଡର୍ନେମରଞ୍ଜି ଅନ୍ତମ୍‌ ଏଞଣ୍ଡ୍ରମ୍‌ଲନ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ଡାରିନେନ୍‌, ମନଙ୍‌ତଡନ୍‌ ଆନିଃୟମ୍‌, ଗାସାଲନ୍‌, ଲେଙ୍‌ନେନ୍‌ ଜୟ୍‍ନେନ୍‍, ମନଗାଡନ୍‍ ଡ ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ସନୁମ୍‍ପୁରନ୍‍ ଏଲୁମେନ୍‍ ।
4 ஆனால் உங்கள் பழைய நண்பர்களோ, நீங்கள் இப்பொழுது தொடர்ந்து அதேவிதமான ஊதாரித்தனம் நிறைந்த வாழ்க்கையில், அவர்களுடன் சேர்ந்து அமிழ்ந்து போகாதிருப்பதைக் கண்டு வியப்படைகிறார்கள். அதனால் அவர்கள் உங்களைக்குறித்து அவதூறாய் பேசுகிறார்கள்.
ନମି ଆମ୍ୱେଞ୍ଜି ଆନିଞ୍ଜି ସରିନ୍‌ ମାୟ୍‌ଲନ୍‌ ତି ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଏଃଲ୍ଲୁମେ, ତିଆସନ୍‌ ଆନିଞ୍ଜି ସାନ୍ନି ଡେତଜି କି ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ନିଣ୍ଡୟ୍‌ତବେଞ୍ଜି ।
5 ஆனால் அவர்கள் உயிர் வாழ்கிறவர்களையும் இறந்து போனவர்களையும் நியாயந்தீர்க்க ஆயத்தமாய் இருப்பவருக்கு கணக்குக் கொடுக்கவேண்டும்.
ବନ୍‌ଡ ଅଙ୍ଗା ଆ ଇସ୍ୱର ଆମେଙ୍‌ମରଞ୍ଜି ଡ ଆରବୁମରଞ୍ଜିଆଡଙ୍‌ ବିସାରନ୍‌ ଆସନ୍‌ ଅବ୍‌ଜାଡାଲନ୍‌ ଡକୋତନ୍‌, ତି ଆ ମୁକ୍କାବାନ୍‍ ଆନିଞ୍ଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ଇସାବ ତିୟ୍‌ତଜି ।
6 இதன் காரணமாகவே, இப்பொழுது இறந்துபோனவர்களுக்குங்கூட, அவர்கள் உயிரோடிருக்கையில் நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டது. அதனால் அவர்களின் உடலைப் பொறுத்தவரையில், எல்லா மனிதருக்கும் ஏற்படுகிற நியாயத்தீர்ப்பின்படி அவர்கள் மரணம் அடைந்திருந்தாலும், ஆவியைப் பொறுத்தவரையில் அவர்கள் இறைவனுடைய சித்தப்படி இன்னும் வாழமுடியும்.
ଏଙ୍ଗାଲ୍‌ଡେନ୍‌ ଆରବୁମରଞ୍ଜି ମନ୍‌ରାଞ୍ଜି ଅନ୍ତମ୍‌ ଆମେଙ୍‌ ଡଅଙ୍‌ଲୋଙନ୍‌ ବିସାରନ୍‌ ଅଃଡ୍ଡେଲଜି ଜନଙ୍‌ଡେନ୍‌, ଇସ୍ୱରନ୍‌ ଅନ୍ତମ୍‌ ପୁରାଡ଼ାଲୋଙନ୍‌ ଅମେଙ୍‌ତଜି, ତିଆସନ୍‌ ଆରବୁମରଞ୍ଜି ଆମଙ୍‌ ନିୟ୍‌ ମନଙ୍‌ବରନ୍‌ ଅନପ୍ପୁଙନ୍‌ ଡେଏନ୍‌ ।
7 எல்லாக் காரியங்களுக்கும் முடிவு நெருங்கிவிட்டது. ஆகையால் நீங்கள் மன்றாடுவதற்கு ஏற்றவாறு மனத்தெளிவுடையவர்களாயும், தன்னடக்கமுடையவர்களாயும் இருங்கள்.
ଅଡ଼୍‌କୋନ୍‌ଆତେ ଆସନ୍‌ ଅନଞିଡ୍‌ ଡିନ୍ନାନ୍‌ ତୁୟାୟ୍‌ଲାୟ୍‌ । ତିଆସନ୍‌ ଆବ୍ବୟ୍‌ଡମ୍‌ଲନ୍‌ ଡକୋନାବା, ଆରି ପାର୍ତନାନେନ୍‌ ଆସନ୍‌ ଜାଗର୍ତ ଡକୋନାବା ।
8 எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவரில் ஒருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள். ஏனெனில் அன்பு, அநேக பாவங்களை மூடுகிறது.
ଆରି ସମ୍ପରା ଉଗରନ୍‌ ବାତ୍ତେ ତର୍ଡମ୍‌ ଅଲ୍‌ଡୁଙ୍‌ୟମ୍‌ବା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଡନୁଙ୍‌ୟମନ୍‌ ଗୋଗୋୟ୍‌ ଇର୍ସେନ୍‌ ୟୁମ୍‍ତେ ।
9 முறுமுறுக்காமல் ஒருவரையொருவர் உபசரித்து நடவுங்கள்.
ଏକୁସ୍ସାଡଙ୍‌ନେ, ତର୍ଡମ୍‌ ଅଲ୍‌ସାକ୍କେବା,
10 நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட வரத்தை உபயோகித்து, ஒருவருக்கொருவர் பணிசெய்யுங்கள். இவ்வாறு, வெவ்வேறு விதங்களில் வரும் இறைவனுடைய கிருபையை, உண்மையுடன் நிர்வகிக்கிறவர்களாக இருங்கள்.
ଇସ୍ୱରନ୍‌ ଡିଲେ ମନ୍‌ରାନ୍‌ଆଡଙ୍‌ ମନଙ୍‌ ମନଙ୍‌ ତନିୟ୍‌ତିୟଞ୍ଜି ତିୟ୍‌ଲବେନ୍‌, ଆନା ଅଙ୍ଗା ତନିୟ୍‌ତିୟ୍‌ ଏଞାଙେନ୍‌, ତିଆତେ ବୟନ୍‌ ତର୍ଡମ୍‌ ଅଲ୍‌ସାକ୍କେନ୍‌ ଆସନ୍‌ ଅବୟ୍‌ ବୁଡ୍ଡିମର୍‌ ଗୁମୁସ୍ତାନ୍‌ ଅନ୍ତମ୍‌ ତିଆତେ ଞଣ୍ଡ୍ରମ୍‌ନାବା ।
11 பேசுகின்ற வரத்தையுடையவன், இறைவனுடைய சொந்த வார்த்தையைப் பேசுகிறேன் என்றே பேசவேண்டும். ஊழியம் செய்கிறவன் இறைவன் கொடுக்கும் பெலத்தின்படியே அதைச் செய்யவேண்டும். அப்பொழுது எல்லாக் காரியங்களிலும், இயேசுகிறிஸ்துவின் மூலமாக இறைவன் துதிக்கப்படுவார். அவருக்கே மகிமையும் வல்லமையும் என்றென்றும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
ଆନା ଅପ୍ପୁଙ୍‌ବର୍ତେ, ଆନିନ୍‌ ଇସ୍ୱର ଆ ବର୍ନେ ଆରପ୍ପୁଙ୍‌ବର୍‌ତେନ୍‌ ଆ ମନ୍‌ରା ଅନ୍ତମ୍‌ ଅପ୍ପୁଙ୍‍ବରେତୋ; ଆନା ସେବା କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଲୁମ୍‌ତେ, ଆନିନ୍‌ ଇସ୍ୱର ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ବୋର୍ସାନ୍‌ ଆଞ୍ରାଙେନ୍‌ ଆ ମନ୍‌ରା ଅନ୍ତମ୍‌ ସେବାଏତୋ; ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଅମ୍ମେଲେ ଇସ୍ୱରନ୍‌ ଗନୁଗୁ ପନେମେଙନ୍‌ ଡେତେ; ଆଏଡ଼ର୍‌ ଗନୁଗୁ ପନେମେଙନ୍‌ ଡ ରନପ୍ତିନ୍‌ ଆନିନ୍‌ଆତେ । ଆମେନ୍‌ । (aiōn g165)
12 பிரியமானவர்களே, நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களைக்குறித்து, ஏதோ விசித்திரமான ஒரு காரியம் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டதென எண்ணி வியப்படைய வேண்டாம்.
ଏ ଡନୁଙ୍‌ୟମ୍‌ଡମ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି, ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ମନାଲ୍‌ମାଲନ୍‌ ଆସନ୍‌ ଅଙ୍ଗା ଡନଣ୍ଡାୟ୍‌ ତଗୋନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଅମଙ୍‌ବେନ୍‌ ଅଡ଼ୋତାୟ୍‍, ତିଆତେ ବରନ୍ତଙ୍‌ଡାନ୍‌ ଆ ଗନଡେଲ୍‌ଜି ଗାମ୍‌ଲେ ସାନ୍ନି ଡେଡଙ୍‌ବେନ୍‌ ତଡ୍‌ ।
13 கிறிஸ்துவினுடைய துன்பங்களில் நீங்களும் பங்குகொள்கிறீர்கள் என்று சந்தோஷப்படுங்கள். அப்பொழுது அவருடைய மகிமை வெளிப்படுகையில், நீங்கள் இன்னும் அதிக மகிழ்ச்சியடைவீர்கள்.
ଆର୍ପାୟ୍‌ ସର୍ଡାନାବା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ କ୍ରିସ୍ଟନ୍‌ ଏଙ୍ଗାଲେ ଡନଣ୍ଡାୟନ୍‌ ଞାଙେନ୍‌, ଏତ୍ତେଲେମା ଆନିନ୍‌ ସରିନ୍‌ ମାୟ୍‌ଲନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ନିୟ୍‌ ଡନଣ୍ଡାୟନ୍‌ ଏଞାଙ୍‌ତେ; ଆରି ଆ ଗନୁଗୁ ପନେମେଙନ୍‌ ଆଗ୍ରିୟ୍‌ତାତେନ୍‌ ଆ ଡିନ୍ନା ଆମ୍ୱେଞ୍ଜି ମାଡ୍ଡ ସର୍ଡାତବେନ୍‌ ।
14 கிறிஸ்துவின் பெயருக்காக நீங்கள் அவமதிக்கப்பட்டால், நீங்கள் ஆசீர்வதிகப்பட்டவர்கள்; ஏனெனில் இறைவனின் ஆவியானவர் மகிமையுடன் உங்களில் தங்கி வாழ்கிறாரே.
କ୍ରିସ୍ଟନ୍‌ ଆଞୁମ୍‌ ଆସନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ନିଣ୍ଡୟ୍‌ଲବେଞ୍ଜି ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଆସିର୍ବାଦନ୍‌ ଏଞାଙ୍‌ତେ, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଗନୁଗୁଡମ୍‍ ଇସ୍ୱରନ୍‌ ଆ ପୁରାଡ଼ା ଅମଙ୍‌ବେନ୍‌ ଡକୋତନେ ।
15 ஆதலால் நீங்கள் ஒரு கொலைகாரனாகவோ, திருடனாகவோ, வேறுவிதமான குற்றம் செய்தவனாகவோ அல்லது தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையிட்டவனாகவோ துன்பம் அனுபவிக்கக்கூடாது.
ତିଆସନ୍‌ ଅମଙ୍‌ଲୋଙ୍‌ବେନ୍‌ ଆନ୍ନିଙ୍‌ ମନ୍‌ରାନ୍‌ ସମ୍ୱବ୍‌ଡାଲେ, ରାଉଡାଲନ୍‌, ଡୋସାନ୍‌ ଲୁମ୍‌ଲେ, ଗୋଡ଼େନ୍‌ ଅମ୍‌ଡୁଙ୍‌ଡାଲେ ଡନଣ୍ଡାୟନ୍‌ ଞାଙ୍‌ଡଙେ ତଡ୍‌ ।
16 ஆனால் கிறிஸ்துவைப் பின்பற்றும் காரணத்திற்காக நீங்கள் வேதனையை அனுபவித்தால், அதைக்குறித்து வெட்கமடைய வேண்டாம். அந்தப் பெயருடையவர்களாய் நீங்கள் இருப்பதைக்குறித்து இறைவனைத் துதியுங்கள்.
ବନ୍‌ଡ ଆମ୍ୱେଞ୍ଜି କ୍ରିସ୍ଟାନୁନ୍‌ ଏମ୍ରାୟ୍‌ଲନ୍‌ ଆସନ୍‌ ଡନଣ୍ଡାୟନ୍‌ ଏଞାଙେନ୍‌ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଗରୟ୍‍ଡଙ୍‍ବେନ୍‌; ଆର୍ପାୟ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି କ୍ରିସ୍ଟନ୍‌ ଆଞୁମ୍‌ ଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ସେଙ୍କେବା ।
17 ஏனெனில், நியாயத்தீர்ப்பு தொடங்கும் காலம் வந்துவிட்டது. அது இறைவனுடைய குடும்பத்தினரிடமே முதலில் தொடங்கும்; நியாயத்தீர்ப்பு நம்மிடத்தில் தொடங்குமானால், இறைவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னவாயிருக்கும்!
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆସିଂ ସିଲଡ୍‌ ବିସାରନ୍‌ ଉନେନ୍‌ ଆସନ୍‌ ଡିନ୍ନାନ୍‌ ଅଡ଼ୋଲାୟ୍‌, ଆରି ପର୍ତମ୍ମୁ ଅମଙ୍‌ଲେନ୍‌ ସିଲଡ୍‌ ବିସାରନ୍‌ ଉଲନ୍‌ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଅଙ୍ଗା ମନ୍‌ରାଜି ଇସ୍ୱରନ୍‌ ଆ ବର୍ନେ ଆଲ୍ଲେତଜି, ଆନିଞ୍ଜି ଆତନିକ୍କି ପନବ୍‌ରଡନ୍‌ ଏଙ୍ଗାଗୋ ଡେତଜି?
18 வேதவசனத்தின்படி, “நீதியுள்ளவர்கள் இரட்சிக்கப்படுவது கஷ்டம் என்றால், இறை பக்தியற்றவர்களுக்கும், பாவிகளுக்குமான நிலை என்னவாகும்?”
ଆରି ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍‌ ଆଇଡିଡ୍‌, “ଡରମ୍ମମରଞ୍ଜି ଅନୁରନ୍‌ ଆଞନାଙ୍‌ ଆସନ୍‌ ଡିୟ୍‌ନେ ଆ ଡଣ୍ଡ ଡେନ୍‌, ଏର୍‌ଡରମ୍ମମରଞ୍ଜି ଡ ଇର୍ସେମରଞ୍ଜି ଡିଅଙ୍ଗା ଆ ଡଣ୍ଡ ଅରଃ ଡେଏଞ୍ଜି?”
19 ஆகவே இறைவனுடைய திட்டத்தின்படி துன்பம் அனுபவிக்கிறவர்கள், உண்மையுள்ளவரான தங்களைப் படைத்த இறைவனிடம் தங்களை ஒப்புக்கொடுத்து, தொடர்ந்து நன்மை செய்யவேண்டும்.
ତିଆସନ୍‌ ଅଙ୍ଗା ମନ୍‌ରାଜି ଇସ୍ୱରନ୍‌ ଆ ଇସ୍ସୁମ୍‌ ବାତ୍ତେ ଡନଣ୍ଡାୟନ୍‌ ଞାଙ୍‌ତଜି, ଆନିଞ୍ଜି ଅରାସାନେଡମ୍‌ ଗନବ୍‌ଡେଲ୍‌ମର୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ସୋରୋପ୍ପାୟ୍‌ଡମ୍‌ଲନ୍‌ ମନଙ୍‌ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଲୁମ୍‌ଲେ ଡକୋନେତଜି ।

< 1 பேதுரு 4 >