< 1 யோவான் 4 >

1 அன்பான நண்பரே, நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் இறைவனிடம் இருந்துதான் வந்தனவா என்று அவர்களைச் சோதித்துப் பாருங்கள். ஏனெனில் பல பொய் தீர்க்கதரிசிகள் உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள்.
ଏ ଲାଡାର୍‌ ବାୟ୍‌ମଃନ୍ ସଃବୁ ଆତ୍ମାକେ ବିସ୍ୱାସ୍‌ କଃରାନାୟ୍‌ ମଃତର୍‌ ଆତ୍ମାମଃନ୍ ଇସ୍ୱରାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ଆସି ଆଚ୍‌ତି କି ନାୟ୍‌ ଇରି ସେମଃନ୍‌କେ ପରିକ୍ୟା କଃରି ଦଃକା କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ଜଃଗତେ ଅଃନେକ୍‌ ମିଚ୍ ବାବ୍‌ବାଦି ବାରାୟ୍‌ ଆଚ୍‌ତି ।
2 இறைவனுடைய ஆவியை நீங்கள் இவ்விதமாக அறிந்துகொள்ள முடியும்: இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வந்தார் என்று ஏற்றுக்கொள்கிற எந்த ஆவியும் இறைவனிடமிருந்தே வந்திருக்கிறது.
ଇତାର୍‌ ଗିନେ ତୁମିମଃନ୍ ଇସ୍ୱରାର୍‌ ଆତ୍ମାକେ ଚିନୁ ହାରାସ୍‌, ଜିସୁ କ୍ରିସ୍ଟ ଜେ ମାନାୟ୍‌ ଗଃଗାଳ୍‌ ଦଃରି ଆସି ଆଚେ ଇରି ଜୁୟ୍‌ ଆତ୍ମା ମାନେଦ୍‌ ସେ ଇସ୍ୱରାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ଆସି ଆଚେ
3 மாம்சத்தில் வந்த இயேசுவை ஏற்றுக்கொள்ளாத எந்த ஆவியும் இறைவனிடமிருந்து வரவில்லை. இதுவே கிறிஸ்து விரோதியின் ஆவி; இந்த ஆவி வரும் என்று நீங்கள் கேள்விப்பட்டீர்கள். அது இப்பொழுதே உலகத்தில் வந்திருக்கிறது.
ଆର୍‌ ଜୁୟ୍‌ ଆତ୍ମା ଜିସୁକେ ନଃମାନେ, ସେ ଇସ୍ୱରାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ନାସେ; ଇରି ମିଚ୍ କ୍ରିସ୍ଟର୍‌ ଆତ୍ମା ଜାର୍‌ ଆସ୍ତା ବିସୟ୍‌ ତୁମିମଃନ୍ ସୁଣି ଆଚାସ୍‌, ଆରେକ୍‌ ସେରି ଅଃବେ ହେଁ ଜଃଗତେ ଆସିଆଚେ ।
4 அன்பான பிள்ளைகளே, இறைவனுக்குரிய நீங்கள் அந்த பொய் தீர்க்கதரிசிகளை ஜெயித்தீர்கள். ஏனெனில் உலகத்தில் இருக்கிறவனைவிட உங்களில் இருக்கிறவர் மிகப்பெரியவராய் இருக்கிறார்.
ଏ ଲାଡାର୍‌ ହିଲାମଃନ୍ ତୁମିମଃନ୍ ଇସ୍ୱରାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ଜାତ୍‌ ଆର୍‌ ତୁମିମଃନ୍ ମିଚ୍ ବାବ୍‌ବାଦିମଃନ୍‌କେ ଜିଣି ଆଚାସ୍‌ କାୟଃତାକ୍‌ବଃଲେକ୍‌ ତୁମାର୍‌ତଃୟ୍‌ ବାସ୍‌ କଃର୍ତି ରିଲା ଆତ୍ମା, ଜଃଗତେ ବାସ୍‌ କଃର୍ତା ଆତ୍ମା ତଃୟ୍‌ ହୁଣି ତାର୍‌ତଃୟ୍‌ହୁଣି ବଃଡ୍ ।
5 இந்தப் பொய் தீர்க்கதரிசிகள் உலகத்திற்குரியவர்கள். ஆகவே, அவர்கள் உலக நோக்கத்தின்படியே பேசுகிறார்கள். உலகமும் அவர்களுக்கு செவிகொடுக்கிறது.
ମିଚ୍ ବାବ୍‌ବାଦିମଃନ୍ ଇ ଜଃଗତାର୍‌, ସେମଃନ୍ ଜଃଗତାର୍‌ କଃତା କଃଉତି ଆର୍‌ ଜଃଗତାର୍‌ ଲକ୍‌ମଃନ୍ ସେମଃନାର୍‌ କଃତା ସୁଣ୍‌ତି ।
6 நாம் இறைவனுக்குரியவர்கள். இறைவனை அறிந்தவர்கள் யாரோ அவர்கள் நாம் சொல்வதைச் செவிகொடுத்துக் கேட்கிறார்கள்; இறைவனிடமிருந்து வராதவர்கள் நாம் சொல்வதைக் கேட்கமாட்டார்கள். இவ்விதமே, சத்திய ஆவியானவரைப் பெற்றிருக்கிறவர்கள் யார் என்றும் ஏமாற்றும் ஆவியைப் பெற்றிருக்கிறவர்கள் யார் என்றும், நாம் அறிந்துகொள்கிறோம்.
ମଃତର୍‌ ଅଃମିମଃନ୍‌ ଇସ୍ୱରାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ଜାତ୍‌, ଜେ ଇସ୍ୱର୍‌କେ ଜାଣେଦ୍‌, ସେ ଅଃମାର୍‌ କଃତା ସୁଣେଦ୍‌, ଜେ ଇସ୍ୱରାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ଜାତ୍‌ନଃକେରେ ସେ ଅଃମାର୍‌ କଃତା ନଃସୁଣେ, ଇତାର୍‌ ଗିନେ ଅଃମିମଃନ୍‌ ସଃତ୍‌କାରି ଆତ୍ମା ଆର୍‌ ମିଚ୍ ଆତ୍ମାକେ ଚିନୁକେ ହାରୁନ୍ଦ୍ ।
7 அன்பான நண்பரே, நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருப்போமாக. ஏனெனில், அன்பு இறைவனிடமிருந்து வருகிறது. அன்பாயிருக்கிற ஒவ்வொருவரும் இறைவனால் பிறந்திருக்கிறார்கள், அவர்கள் இறைவனை அறிந்திருக்கிறார்கள்.
ଏ ଲାଡାର୍‌ ବାୟ୍‌ବେଣିମଃନ୍ ଆସା ଅଃମିମଃନ୍‌ ଏକ୍‌ଆରେକ୍‌ ଲାଡ୍‌ କଃରୁଆଁ, ବଃଲେକ୍‌ ଲାଡ୍‌ ଇସ୍ୱରାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ଜଃଲମ୍‌, ଆର୍‌ ଜୁୟ୍‌ଲକ୍‌ ଲାଡ୍‌ କଃରେଦ୍‌, ସେ ଇସ୍ୱରାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ଜଃଲମ୍‌ ଆର୍‌ ସେ ଇସ୍ୱର୍‌କେ ଜାଣେଦ୍‌ ।
8 அன்பாயிருக்காதவர்கள், இறைவனை அறியாதிருக்கிறார்கள். ஏனெனில், இறைவன் அன்பாகவே இருக்கிறார்.
ଜେ ଏକ୍‌ଆରେକ୍‌କେ ଲାଡ୍‌ ନଃକେରେ, ସେ ଇସ୍ୱର୍‌କେ ନଃଜାଣେ, କାୟଃତାକ୍‌ବଃଲେକ୍‌ ଇସ୍ୱର୍‌ ତ ଲାଡ୍‌କାରି
9 இறைவன் நம்மில் வைத்திருக்கும் அன்பினால், நாம் அவர்மூலம் வாழ்வடையும்படி, அவர் தமது ஒரே பேறான மகனை இந்த உலகத்திற்கு அனுப்பினார். இவ்விதமாய், அவர் தனது அன்பைக் காட்டினார்.
ଇରି ହଃକା ଇସ୍ୱରାର୍‌ ଲାଡ୍‌ ଅଃମାର୍‌ ତଃୟ୍‌ ଜାଣା ହଃଳିଆଚେ ଜେ, ଇସ୍ୱର୍‌ ଅଃହ୍‌ଣାର୍‌ ଗଟେକ୍‌ବଃଲି ହୟ୍‌ସିକେ ଜଃଗତେ ହଃଟାୟ୍‌ଲା, ଜଃନ୍‌କଃରିକି ଅଃମିମଃନ୍‌ ଜିସୁର୍‌ ଗିନେ ଅଃମାର୍‌ ଜିବନ୍ ହାଉନ୍ଦ୍ ।
10 இதுவே அன்பு: நாம் இறைவனிடம் அன்பாயிருக்கவில்லை. ஆனால் அவர் நம்மில் அன்புகாட்டி, நம்முடைய பாவங்களுக்கான நிவாரண பலியாகத் தமது மகனை அனுப்பினார்.
ଅଃମିମଃନ୍‌ ଜେ, ଇସ୍ୱର୍‌କେ ଲାଡ୍‌ କଃଲୁ ସେରି ନଃୟ୍‌, ମଃତର୍‌ ସେ ଅଃମିମଃନ୍‌କ୍‌ ଲାଡ୍‌ କଃଲା, ଆରେକ୍‌ ଅଃହ୍‌ଣାର୍‌ ହୟ୍‌ସିକେ ଅଃମିମଃନାର୍‌ ହାହ୍‌ ବୟ୍‌ନେଉଁକେ ହଃଟାୟ୍‌ଲା ଇତି ଇସ୍ୱରାର୍‌ ଲାଡ୍‌ ଜାଣାହଃଳୁଲି ।
11 அன்பான நண்பரே, இறைவன் நம்மேல் இவ்வளவு அன்பாயிருந்தபடியால், நாமும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும்.
ଏ ଲାଡାର୍‌ ବାୟ୍‌ବେଣିମଃନ୍, ଇସ୍ୱର୍‌ ଜଦି ଅଃମିକ୍‌ ଇରଃକମ୍‌ ଲାଡ୍‌ କଃଲା, ତଃବେ ଅଃମି ହେଁ ଏକ୍‌ଆରେକ୍‌କେ ଲାଡ୍‌ କଃର୍ତା ଲଳା ଆଚେ ।
12 ஒருவனும் இறைவனை ஒருபோதும் கண்டதில்லை: ஆனால் நாம், ஒருவரில் ஒருவர் அன்பாயிருந்தால், இறைவன் நம்மில் குடிகொண்டிருக்கிறார். அவருடைய அன்பும் நம்மில் முழுநிறைவாகிறது.
କେ ହେଁ କଃବେ ଇସ୍ୱର୍‌କେ ନଃଦେକେ; ଅଃମିମଃନ୍‌ ଜଦି ଏକ୍‌ଆରେକ୍‌କେ ଲାଡ୍‌ କଃରୁନ୍ଦ୍‌ ତଃନ୍‌ଅୟ୍‌ଲେକ୍‌ ଇସ୍ୱର୍‌ ଅଃମାର୍‌ ତଃୟ୍‌ ଆଚେ ଆର୍‌ ତାର୍‌ ଲାଡ୍‌ ଅଃମାର୍‌ ଟାଣେ ହୁରୁଣ୍‌ ଅୟ୍‌ଆଚେ ।
13 இறைவன் தமது ஆவியானவரை நமக்குக் கொடுத்திருக்கிறதினால், நாம் இறைவனில் வாழுகிறோம் என்றும், அவர் நம்மில் வாழுகிறார் என்றும்: நாம் அறிகிறோம்.
ଅଃମିମଃନ୍‌ ଜେ, ତାର୍‌ ତୟ୍‌ ଆଚୁ ଆର୍‌ ସେ ଅଃମାର୍‌ ତଃୟ୍‌ ଆଚେ, ଇରି ଅଃମିମଃନ୍‌ ଜାଣୁଲୁ, କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ଇସ୍ୱରାର୍‌ ଅଃମିମଃନ୍‌କ୍‌ ଅଃହ୍‌ଣାର୍‌ ପବିତ୍ର ଆତ୍ମାକେ ଦିଲା ଆଚେ ।
14 பிதா, தமது மகனை உலகத்தின் இரட்சகராக அனுப்பினார் என்பதை நாம் கண்டிருக்கிறோம்; அதற்கு நாங்கள் சாட்சியாகவும் இருக்கிறோம்.
ଉବା ଜେ ହୟ୍‌ସିକେ ଜଃଗତାର୍‌ ମୁକ୍ତିକାରି ଅଃଉତା ଗିନେ ହଃଟାୟ୍‌ଲା ଆଚେ, ଇରି ଅଃମିମଃନ୍‌ ଦଃକି ଆଚୁ ଆର୍‌ ସାକି ଦେଉଁଲୁ ।
15 யாராவது இயேசுவை இறைவனுடைய மகன் என்று ஏற்றுக்கொண்டால், இறைவன் அவனில் வாழ்கிறார்; அவனும் இறைவனில் வாழ்கின்றான்.
ଜେ ଜିସୁକେ ଇସ୍ୱରାର୍‌ ହୟ୍‌ସି ବଃଲି ମାନେଦ୍‌ ଇସ୍ୱର୍‌ ତାର୍‌ ତଃୟ୍‌ ଆଚେ ଆର୍‌ ସେ ଇସ୍ୱରାର୍‌ ତଃୟ୍‌ ଆଚେ ।
16 இவ்வாறு இறைவன் நம்மேல் வைத்திருக்கும் அன்பை, நாம் அறிந்தும் இருக்கிறோம். அதை நாம் நம்பியும் இருக்கிறோம். இறைவன் அன்பாகவே இருக்கிறார். அன்பில் வாழ்கிறவன், இறைவனில் வாழ்கிறான், இறைவனும் அவனில் வாழ்கிறார்.
ଆରେକ୍‌ ଅଃମିମଃନାର୍‌ ଗିନେ ଇସ୍ୱରାର୍‌ ଜୁୟ୍‌ ଲାଡ୍‌ ଆଚେ, ସେରି ଅଃମିମଃନ୍‌ ଜାଣି ଆଚୁ, ଆର୍‌ ବିସ୍ୱାସ୍‌ କଃରି ଆଚୁ । ଇସ୍ୱର୍‌ ତ ଲାଡ୍‌; ଜେ ଲାଳେ ରଃୟ୍‌ଦ୍‌ ସେ ଇସ୍ୱରାର୍‌ ତଃୟ୍‌ ରଃୟ୍‌ଦ୍‌ ଆର୍‌ ଇସ୍ୱର୍‌ ତାର୍‌ ତଃୟ୍‌ ରଃୟ୍‌ଦ୍‌ ।
17 இவ்விதமாய், அன்பு நமக்குள் முழுநிறைவாய் வளர்கிறது. இதனால், நாம் நியாயத்தீர்ப்பு நாளில் மனவுறுதியுடையவர்களாய் இருப்போம். ஏனெனில், இந்த உலகத்தில் நாம் இயேசுவைப் போலவே இருக்கிறோம்.
ଇସ୍ୱର୍‌କେ ମାନି ଜିବନ୍ କାଟ୍‌ତାର୍‌ ଗିନେ ଇସ୍ୱରାର୍‌ ଲାଡ୍‌ ଅଃମାର୍‌ ତଃୟ୍‌ ସିଦ୍‌ ଅୟ୍‌ଆଚେ । ଇତି ଲାଡ୍‌ ଅଃମାର୍‌ ବିତ୍ରେ ହୁରା ଅୟ୍‌ଆଚେ ଜେ, ବିଚାର୍‌ ଦିନ୍ ଅଃମିମଃନ୍‌ ସାସ୍‌ ହାଉନ୍ଦ୍ ବଃଲେକ୍‌ ସେ ଜଃନ୍‌କଃରି ଆଚେ, ଅଃମିମଃନ୍‌ ହେଁ ଇ ଜଃଗତେ ସେନ୍ କଃରିଆଚୁ ।
18 இப்படிப்பட்ட அன்பு இருக்கையில் பயத்திற்கு இடமில்லை. ஏனெனில், முழுநிறைவான அன்பு பயத்தை விரட்டிவிடும். ஆனால், பயம் தண்டனைத் தீர்ப்புடன் சம்பந்தப்படுகிறது. எனவே பயப்படுகிறவன் அன்பில் முழுநிறைவு பெற்றவனல்ல என்று காட்டுகிறது.
ଲାଳେ ଡିର୍‌ ନଃରେୟ୍‌; ମଃତର୍‌ ହୁରା ଲାଡ୍‌ ଡିର୍‌କେ ଦୁର୍‌ କଃରେଦ୍‌, ବଃଲେକ୍‌ ଡିର୍‌ ସଃଙ୍ଗ୍ ଡଃଣ୍ଡ୍‌ ମିସିଆଚେ ଆର୍‌ ଜେ ଡିରେଦ୍‌, ସେ ଲାଡେ ହୁର୍ନ୍‌ ନାୟ୍‌ ।
19 முதலில், அவர் நம்மில் அன்பாய் இருந்ததினாலேயே, நாமும் அவரில் அன்பாயிருக்கிறோம்.
ଇସ୍ୱର୍‌ ହଃର୍ତୁମ୍‌ ଅଃମିମଃନ୍‌କ୍‌ ଲାଡ୍‌ କଃଲାକ୍‌ ଅଃମିମଃନ୍‌ କଃଲୁ ।
20 “நான் இறைவனில் அன்பாயிருக்கிறேன்” என்று சொல்லுகிற யாராவது தனது சகோதரனை வெறுத்தால், அவன் ஒரு பொய்யன். ஏனெனில், தான் காண்கின்ற தன் சகோதரனில் அன்பாயிராத ஒருவனால், தான் காணாத இறைவனில் அன்பாயிருக்க முடியாது.
ଇସ୍ୱର୍‌କେ ଲାଡ୍‌ କଃରୁଲେ ବଃଲି କୟ୍‌କଃରି ଜଦି କେ ବିସ୍ୱାସି ବାୟ୍‌ବେଣିକେ ଗିଣ୍ କଃରେଦ୍‌ ତଃନ୍‌ଅଲେ ସେ ମିଚୁଆ, ତଃବେ ଜୁୟ୍‌ ବାୟ୍‌କ୍‌ ଦଃକୁଲା, ଜଦି ତାକେ ଲାଡ୍‌ ନଃକେରେ, ତଃବେ ଜୁୟ୍‌ ଇସ୍ୱର୍‌କେ ସେ ନଃଦେକେ, ତାକ୍‌ ଲାଡ୍‌ କଃରୁ ନାହାରେ ।
21 இதனாலேயே, இறைவனிடத்தில் அன்பாயிருக்கிறவன் யாரோ அவன் தன் சகோதரனிடத்திலும் சகோதரியிடத்திலும் அன்பாயிருக்கவேண்டும் என்கிற கட்டளையை இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிறார்.
ଜେ ଇସ୍ୱର୍‌କେ ଲାଡ୍‌ କଃରେଦ୍‌ ସେ ଅଃହ୍‌ଣାର୍‌ ବାୟ୍‌ବେଣିକେ ହେଁ ଲାଡ୍‌ କଃର ଇ ବିଦି ଅଃମିମଃନ୍‌ ତାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ହାୟ୍‌ ଆଚୁ ।

< 1 யோவான் 4 >