< 1 யோவான் 3 >
1 நாம் இறைவனுடைய பிள்ளைகள் என அழைக்கப்பட பிதா எவ்வளவு பெரிதான அன்பை நம்மேல் நிறைவாய்ப் பொழிந்திருக்கிறார். உண்மையாய் நாம் அவரின் பிள்ளைகளே! உலகம் நாம் யார் என்று அறியாதிருப்பதற்கான காரணம், உலகம் இறைவனை அறியாதிருப்பதே.
১পশ্যত ৱযম্ ঈশ্ৱৰস্য সন্তানা ইতি নাম্নাখ্যামহে, এতেন পিতাস্মভ্যং কীদৃক্ মহাপ্ৰেম প্ৰদত্তৱান্, কিন্তু সংসাৰস্তং নাজানাৎ তৎকাৰণাদস্মান্ অপি ন জানাতি|
2 அன்பான நண்பரே, இப்பொழுது நாம் இறைவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். ஆனால் இனிமேல், நாம் எப்படிப்பட்டவர்களாய் இருப்போம் என்பது, இன்னும் தெளிவாக்கப்படவில்லை. ஆனால் கிறிஸ்து மீண்டும் வரும்போது நாம் அவரைப்போலவே இருப்போம் என்பதை அறிந்திருக்கிறோம். ஏனெனில், அவர் உண்மையாய் இருக்கின்றபடியே, நாம் அவரைக் காணப்போகிறோம்.
২হে প্ৰিযতমাঃ, ইদানীং ৱযম্ ঈশ্ৱৰস্য সন্তানা আস্মহে পশ্চাৎ কিং ভৱিষ্যামস্তদ্ অদ্যাপ্যপ্ৰকাশিতং কিন্তু প্ৰকাশং গতে ৱযং তস্য সদৃশা ভৱিষ্যামি ইতি জানীমঃ, যতঃ স যাদৃশো ঽস্তি তাদৃশো ঽস্মাভিৰ্দৰ্শিষ্যতে|
3 அவரில் இவ்விதமான நம்பிக்கையுடைய ஒவ்வொருவனும், கிறிஸ்து தூய்மையாய் இருக்கிறது போலவே, தன்னையும் தூய்மையாக வைத்துக்கொள்கிறான்.
৩তস্মিন্ এষা প্ৰত্যাশা যস্য কস্যচিদ্ ভৱতি স স্ৱং তথা পৱিত্ৰং কৰোতি যথা স পৱিত্ৰো ঽস্তি|
4 பாவம் செய்கிற எவரும் மோசேயின் சட்டத்தை மீறுகிறார்கள்; ஏனெனில், மோசேயின் சட்டத்தை மீறுதலே பாவம்.
৪যঃ কশ্চিৎ পাপম্ আচৰতি স ৱ্যৱস্থালঙ্ঘনং কৰোতি যতঃ পাপমেৱ ৱ্যৱস্থালঙ্ঘনং|
5 ஆனால், நம்முடைய பாவங்களை நீக்கும்படியே கிறிஸ்து வந்தார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவரிலோ, ஒரு பாவமும் இல்லை.
৫অপৰং সো ঽস্মাকং পাপান্যপহৰ্ত্তুং প্ৰাকাশতৈতদ্ যূযং জানীথ, পাপঞ্চ তস্মিন্ ন ৱিদ্যতে|
6 ஆகவே கிறிஸ்துவில் வாழ்பவன் தொடர்ந்து பாவம் செய்துகொண்டிருப்பதில்லை. தொடர்ந்து பாவம் செய்துகொண்டிருப்பவனோ, கிறிஸ்துவைக் காணவும் இல்லை, அவரை அறியவும் இல்லை.
৬যঃ কশ্চিৎ তস্মিন্ তিষ্ঠতি স পাপাচাৰং ন কৰোতি যঃ কশ্চিৎ পাপাচাৰং কৰোতি স তং ন দৃষ্টৱান্ ন ৱাৱগতৱান্|
7 அன்பான பிள்ளைகளே, ஒருவனும் உங்களை வழிவிலகப்பண்ணுவதற்கு இடங்கொடுக்க வேண்டாம். நீதியானதைச் செய்கிறவன், கிறிஸ்து நீதியுள்ளவராய் இருக்கிறதுபோல, நீதியுள்ளவனாய் இருக்கிறான்.
৭হে প্ৰিযবালকাঃ, কশ্চিদ্ যুষ্মাকং ভ্ৰমং ন জনযেৎ, যঃ কশ্চিদ্ ধৰ্ম্মাচাৰং কৰোতি স তাদৃগ্ ধাৰ্ম্মিকো ভৱতি যাদৃক্ স ধাম্মিকো ঽস্তি|
8 ஆனால் பாவம் செய்கிறவனோ, பிசாசுக்குரியவனாகவே இருக்கிறான். ஏனெனில், பிசாசு ஆரம்பத்திலிருந்தே பாவம் செய்துகொண்டே இருக்கிறான். ஆனால் பிசாசின் செய்கைகளை அழிப்பதற்காகவே இறைவனின் மகன் தோன்றினார்.
৮যঃ পাপাচাৰং কৰোতি স শযতানাৎ জাতো যতঃ শযতান আদিতঃ পাপাচাৰী শযতানস্য কৰ্ম্মণাং লোপাৰ্থমেৱেশ্ৱৰস্য পুত্ৰঃ প্ৰাকাশত|
9 இறைவனால் பிறந்த எவரும், தொடர்ந்து பாவம் செய்யமாட்டான். ஏனெனில் இறைவனுடைய வித்து, அவனுள் குடிகொண்டிருக்கிறது. அவன் இறைவனால் பிறந்திருப்பதினால், தொடர்ந்து பாவம் செய்து கொண்டிருக்க முடியாது.
৯যঃ কশ্চিদ্ ঈশ্ৱৰাৎ জাতঃ স পাপাচাৰং ন কৰোতি যতস্তস্য ৱীৰ্য্যং তস্মিন্ তিষ্ঠতি পাপাচাৰং কৰ্ত্তুঞ্চ ন শক্নোতি যতঃ স ঈশ্ৱৰাৎ জাতঃ|
10 இறைவனுடைய பிள்ளைகள் யார் என்றும், பிசாசின் பிள்ளைகள் யார் என்றும்: இவ்விதமாகவே நாம் அறிந்துகொள்கிறோம். நீதியைச் செய்யாத யாரும் இறைவனுக்குப் பிள்ளைகள் அல்ல; தனது சகோதரனில் அன்பு செலுத்தாத யாரும் இறைவனுடைய பிள்ளைகள் அல்ல.
১০ইত্যনেনেশ্ৱৰস্য সন্তানাঃ শযতানস্য চ সন্তানা ৱ্যক্তা ভৱন্তি| যঃ কশ্চিদ্ ধৰ্ম্মাচাৰং ন কৰোতি স ঈশ্ৱৰাৎ জাতো নহি যশ্চ স্ৱভ্ৰাতৰি ন প্ৰীযতে সো ঽপীশ্ৱৰাৎ জাতো নহি|
11 நாம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும் என்பதே ஆரம்பத்திலிருந்து நீங்கள் கேட்ட செய்தியாய் இருக்கிறது.
১১যতস্তস্য য আদেশ আদিতো যুষ্মাভিঃ শ্ৰুতঃ স এষ এৱ যদ্ অস্মাভিঃ পৰস্পৰং প্ৰেম কৰ্ত্তৱ্যং|
12 காயீனைப்போல் இருக்கவேண்டாம். அவன் தீயவனுக்குரியவனாயிருந்து, தன் சகோதரனைக் கொலைசெய்தான். அவன் ஏன் தன் சகோதரனைக் கொலைசெய்தான்? ஏனெனில் தனது செயல்கள் தீமையாய் இருந்தபடியினாலும், தனது சகோதரனுடைய செயல்கள் நீதியாய் இருந்தபடியினாலும் அவன் அப்படிச் செய்தான்.
১২পাপাত্মতো জাতো যঃ কাবিল্ স্ৱভ্ৰাতৰং হতৱান্ তৎসদৃশৈৰস্মাভি ৰ্ন ভৱিতৱ্যং| স কস্মাৎ কাৰণাৎ তং হতৱান্? তস্য কৰ্ম্মাণি দুষ্টানি তদ্ভ্ৰাতুশ্চ কৰ্ম্মাণি ধৰ্ম্মাণ্যাসন্ ইতি কাৰণাৎ|
13 எனக்கு பிரியமானவர்களே, உலகம் உங்களை வெறுத்தால், அதைக்குறித்து நீங்கள் வியப்படையாதீர்கள்.
১৩হে মম ভ্ৰাতৰঃ, সংসাৰো যদি যুষ্মান্ দ্ৱেষ্টি তৰ্হি তদ্ আশ্চৰ্য্যং ন মন্যধ্ৱং|
14 நாம் சகோதரரில் அன்பாயிருக்கிறபடியால், மரணத்தைக் கடந்து, வாழ்வுக்கு உட்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்கிறோம். அன்பாயிராத எவரும் மரணத்திலேயே இன்னும் இருக்கிறான்.
১৪ৱযং মৃত্যুম্ উত্তীৰ্য্য জীৱনং প্ৰাপ্তৱন্তস্তদ্ ভ্ৰাতৃষু প্ৰেমকৰণাৎ জানীমঃ| ভ্ৰাতৰি যো ন প্ৰীযতে স মৃত্যৌ তিষ্ঠতি|
15 தனது சகோதர சகோதரியை வெறுக்கிற எவரும் கொலைகாரனாயிருக்கிறான். கொலைகாரன் எவனுக்குள்ளும் நித்தியவாழ்வு இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். (aiōnios )
১৫যঃ কশ্চিৎ স্ৱভ্ৰাতৰং দ্ৱেষ্টি সং নৰঘাতী কিঞ্চানন্তজীৱনং নৰঘাতিনঃ কস্যাপ্যন্তৰে নাৱতিষ্ঠতে তদ্ যূযং জানীথ| (aiōnios )
16 இவ்விதமாகவே, அன்பு என்ன என்பதை நாம் அறிந்து கொண்டிருக்கிறோம்: இயேசுகிறிஸ்து தமது உயிரை நமக்காகக் கொடுத்ததின் மூலமாக நாமும் நமது சகோதரருக்காக அல்லது சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.
১৬অস্মাকং কৃতে স স্ৱপ্ৰাণাংস্ত্যক্তৱান্ ইত্যনেন ৱযং প্ৰেম্নস্তত্ত্ৱম্ অৱগতাঃ, অপৰং ভ্ৰাতৃণাং কৃতে ঽস্মাভিৰপি প্ৰাণাস্ত্যক্তৱ্যাঃ|
17 யாராவது உலகப்பொருட்கள் உடையவனாயிருக்கையில், தனது சகோதரன் அல்லது சகோதரி கஷ்டத்தில் இருப்பதைக் கண்டும், அனுதாபம் கொள்ளாதிருந்தால், அவனில் இறைவனுடைய அன்பு இருப்பது எப்படி?
১৭সাংসাৰিকজীৱিকাপ্ৰাপ্তো যো জনঃ স্ৱভ্ৰাতৰং দীনং দৃষ্ট্ৱা তস্মাৎ স্ৱীযদযাং ৰুণদ্ধি তস্যান্তৰ ঈশ্ৱৰস্য প্ৰেম কথং তিষ্ঠেৎ?
18 அன்பான பிள்ளைகளே, நாம் வார்த்தையிலும் பேச்சிலும் மட்டும் அன்பாய் இருக்கிறவர்களாயிராமல், செயல்களிலும் சத்தியத்திலும் அன்பை காட்டுவோமாக.
১৮হে মম প্ৰিযবালকাঃ, ৱাক্যেন জিহ্ৱযা ৱাস্মাভিঃ প্ৰেম ন কৰ্ত্তৱ্যং কিন্তু কাৰ্য্যেণ সত্যতযা চৈৱ|
19 நாம் சத்தியத்திற்கு உரியவர்கள் என்று அறிவதும், இறைவனுடைய முன்னிலையில் நம்முடைய இருதயங்களை ஆறுதல்படுத்திக்கொள்வதும் இவ்விதமே:
১৯এতেন ৱযং যৎ সত্যমতসম্বন্ধীযাস্তৎ জানীমস্তস্য সাক্ষাৎ স্ৱান্তঃকৰণানি সান্ত্ৱযিতুং শক্ষ্যামশ্চ|
20 நம்முடைய இருதயங்களே நம்மைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தாலும், இறைவன் நமது இருதயங்களைப் பார்க்கிலும், பெரியவராயிருக்கிறார் என்றும், அவர் எல்லாவற்றையும் அறிவார் என்றும், நம்மை ஆறுதல்படுத்திக்கொள்வோம்.
২০যতো ঽস্মদন্তঃকৰণং যদ্যস্মান্ দূষযতি তৰ্হ্যস্মদন্তঃ কৰণাদ্ ঈশ্ৱৰো মহান্ সৰ্ৱ্ৱজ্ঞশ্চ|
21 அன்பான நண்பரே, நம்முடைய இருதயங்கள் நம்மைக் குற்றவாளிகளாய் தீர்க்காதிருந்தாலும், இறைவனுக்கு முன்பாக நிற்க தைரியங்கொண்டிருக்க முடியும்.
২১হে প্ৰিযতমাঃ, অস্মদন্তঃকৰণং যদ্যস্মান্ ন দূষযতি তৰ্হি ৱযম্ ঈশ্ৱৰস্য সাক্ষাৎ প্ৰতিভান্ৱিতা ভৱামঃ|
22 மேலும் நாம் இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறதினாலும், அவருக்கு பிரியமானவைகளைச் செய்கிறதினாலும், நாம் கேட்கிற எதையும் அவரிடத்தில் இருந்து கேட்டுப் பெற்றுக்கொள்வோம்.
২২যচ্চ প্ৰাৰ্থযামহে তৎ তস্মাৎ প্ৰাপ্নুমঃ, যতো ৱযং তস্যাজ্ঞাঃ পালযামস্তস্য সাক্ষাৎ তুষ্টিজনকম্ আচাৰং কুৰ্ম্মশ্চ|
23 இறைவனுடைய கட்டளை இதுவே: தமது மகனாகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில் விசுவாசமாய் இருக்கவேண்டும் என்பதும், அவர் கட்டளையின்படி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும் என்பதுமே.
২৩অপৰং তস্যেযমাজ্ঞা যদ্ ৱযং পুত্ৰস্য যীশুখ্ৰীষ্টস্য নাম্নি ৱিশ্ৱসিমস্তস্যাজ্ঞানুসাৰেণ চ পৰস্পৰং প্ৰেম কুৰ্ম্মঃ|
24 இறைவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவர்கள் அவரில் வாழ்கிறார்கள். அவரும் அவர்களில் வாழ்கிறார். இவ்விதத்திலேயே இறைவன் நமக்குள் வாழ்கிறார் என்பதை அறிந்திருக்கிறோம்: அவர் நமக்குத்தந்த பரிசுத்த ஆவியானவராலே அதை அறிந்திருக்கிறோம்.
২৪যশ্চ তস্যাজ্ঞাঃ পালযতি স তস্মিন্ তিষ্ঠতি তস্মিন্ সোঽপি তিষ্ঠতি; স চাস্মান্ যম্ আত্মানং দত্তৱান্ তস্মাৎ সো ঽস্মাসু তিষ্ঠতীতি জানীমঃ|