< 1 கொரிந்தியர் 9 >
1 நான் ஒரு சுதந்திரமுடைய மனிதன் அல்லவா? நான் ஒரு அப்போஸ்தலன் அல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுவை நான் காணவில்லையா? நான் கர்த்தரில் செய்த ஊழியத்தின் கிரியையாய் நீங்கள் இருக்கிறீர்கள் அல்லவோ?
୧ଆଇଙ୍ଗ୍ ଚିନାଃ ତନଲ୍ହେତେ ରାଡ଼ାକାନ୍ ହଡ଼ ନାହାଁଲାଇଙ୍ଗ୍? ଆଇଙ୍ଗ୍ ଚିନାଃ ପ୍ରେରିତ୍ ନାହାଁଲାଇଙ୍ଗ୍? ଆବୁଆଃ ପ୍ରାଭୁ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍କେ ଆଇଙ୍ଗ୍ ଚିନାଃ କାଇଙ୍ଗ୍ ନେଲ୍? ଆଇଙ୍ଗ୍ ପ୍ରାଭୁଆଃ ନାଗେନ୍ତେ କାମିକାଦ୍ କାମିରେୟାଃ ଜ, ଆପେ ଚିନାଃ ନାହାଁଲାପେ?
2 நான் மற்றவர்களுக்கு ஒருவேளை அப்போஸ்தலனாய் இல்லாதிருக்கலாம். ஆனால் நிச்சயமாக, உங்களுக்கு, நான் அப்போஸ்தலன்தான்; ஏனெனில், கர்த்தரில் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு நீங்களே அடையாளமாய் இருக்கிறீர்கள்.
୨ଏଟାଃକ ଆଇଙ୍ଗ୍କେ ପ୍ରେରିତ୍ ତାନିଃ ମେନ୍ତେ କାକ କାଜିରେୟ, ଆପେ ଆଇଙ୍ଗ୍କେ ପ୍ରେରିତ୍ ମେନ୍ତେପେ କାଜିଙ୍ଗ୍ ତାନା, ଚିୟାଃଚି ଆପେୟାଃ ଜୀଦାନ୍ ପ୍ରାଭୁଲଃ ମେସାକାନ୍ ହରାତେ ଆପେଗି ଆଇଙ୍ଗ୍ ପ୍ରେରିତ୍ ତାନିଙ୍ଗ୍ ମେନ୍ତେପେ ଉଦୁବେତାନା ।
3 என்மேல் நியாயந்தீர்க்கிறவர்களுக்கு, நான் கொடுக்கும் பதில் இதுவே.
୩ଆଇଙ୍ଗ୍କେ କାଜିକଟଙ୍ଗ୍ତାନ୍ ହଡ଼କକେ, ଆଇଙ୍ଗ୍ ନେ ଲେକାତେଇଙ୍ଗ୍ କାଜିରୁହାଡ଼୍କଆ ।
4 உணவையும் பானத்தையும் உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் உரிமை எங்களுக்கு இல்லையோ?
୪ଆଇଁୟାଃ କାମିରାଃ ହରାତେ ଜମ୍ ନୁଁ ନାଗେନ୍ତେୟ ଚିନାଃ ଆଇଁୟାଃ ଆକ୍ତେୟାର୍ ବାନଃଆ?
5 மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தருடைய சகோதரர்களும், கேபாவும் அவனவன் விசுவாசியான தன்தன் மனைவியைக் கூட்டிக் கொண்டுபோகிறதுபோல், நாங்களும் செய்வதற்கு எங்களுக்கும் உரிமை இல்லையோ?
୫ଏଟାଃ ପ୍ରେରିତ୍କ, ପାତ୍ରାସ୍, ଆଡଃ ପ୍ରାଭୁଆଃ ହାଗାକ ଲେକା ବିଶ୍ୱାସୀ ମିଶିକେ ଆଣ୍ଦିକେଦ୍ତେ ଆୟାଃଲଃ ହରାସେନ୍ ନାଗେନ୍ତେ ଚିନାଃ ଆଇଁୟାଃ ଆକ୍ତେୟାର୍ ବାନଃଆ?
6 அல்லது வாழ்க்கைச் செலவுக்காக நானும் பர்னபாவும் மட்டும்தான் வேலைசெய்ய வேண்டுமோ?
୬ଜୀନିଦ୍ ତାଇନ୍ ନାଗେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍କେ ଆଡଃ ବର୍ଣ୍ଣବାସ୍କେ ଏସ୍କାର୍ କାମି ଲାଗାତିଙ୍ଗ୍ୟାଁଃଚି?
7 எவன் தன் செலவுக்கான பணத்தைத் தானே செலுத்தி படைவீரனாய்ப் பணிபுரிவான்? எவன் திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி அதன் பழங்களைச் சாப்பிடாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து அதன் பாலைக் குடியாதிருப்பான்?
୭ମିଆଁଦ୍ ପାଲ୍ଟାନ୍ ଆୟାଃ ଖାର୍ଚା ଆଇଃକ୍ଗି ଏମେୟାଚି? ଚାଷିହଡ଼ ଚିନାଃ ଆୟାଃ ଦାଖ୍ବାକ୍ଡ଼ିରାଃ ଜ କାଏ ଜମେୟାଁ? ଚାଏ ମିଣ୍ଡିଗୁପିନିଃ ଆୟାଃ ମିଣ୍ଡିରାଃ ତଆ କାଏ ନୁଁଏୟା?
8 இதை மனித வழக்கத்தின்படி மட்டும் சொல்கிறேனோ? மோசேயின் சட்டமும் இதைச் சொல்லவில்லையா?
୮ଚିନାଃ ଆଇଙ୍ଗ୍ ନେ କାଜିକ ମାନୱା ଲେକାଇଙ୍ଗ୍ କାଜିତାନା? ଚିନାଃ ମୁଶା ନାବୀଆଃ ଆନ୍ଚୁ ପୁଥିରେ ନେଆଁଁ କା ଅଲାକାନା?
9 “தானியக்கதிரை போரடிக்கும் எருதின் வாயைக் கட்டவேண்டாம்” என்று மோசேயின் சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறதே. இவைகளை மாடுகளைக்குறித்தா, இறைவன் கவலைப்படுகிறார்?
୯ଆବୁଆଃ ମୁଶା ନାବୀଆଃ ଆନ୍ଚୁରେ ଅଲାକାନା, ବାବା ଦାଉଁରିତାନ୍ ଉରିଃକ୍କେ, ମଚାରେ ଆଲମ୍ ତଲିୟା । ପାର୍ମେଶ୍ୱାର୍ ଚିନାଃ ଉରିଃକ୍ ବିଷାଏରେ ଉଡ଼ୁଃତାନା?
10 நிச்சயமாக இதை அவர் நமக்காகத்தான் சொல்லியிருக்கிறார். ஆம், அது நமக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. ஏனெனில் உழுகிறவனும், போரடிக்கிறவனும் விளைச்சலில் தங்களுக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்வோம் என்ற எதிர்பார்ப்பில்தானே தங்கள் வேலையைச் செய்யவேண்டும்.
୧୦ଇନିଃ ଚିନାଃ ଆବୁ ନାଗେନ୍ତେ ନେଆଁଁ କାଏ କାଜିତାନା? ହେଗି, ନେଆଁଁ ଆବୁ ନାଗେନ୍ତେ ଅଲାକାନା, ଜେତାଏ ସିହୁଃକାମି ରିକାଏନିଃ ଆଡଃ ଇରୋଃକାମି ରିକାଏନିଃ ଜ ନାମେରେୟାଃ ଆସ୍ରାରେ କାମିୟା ।
11 நாங்கள் உங்கள் மத்தியில் ஆவிக்குரிய விதையை விதைத்தோமே. அப்படியிருக்க, உங்களிடமிருந்து எங்களுக்குத் தேவையானவற்றை அறுவடை செய்வது நியாயமற்றதோ?
୧୧ଆଲେ ଆପେ ଥାଲାରେ ଆତ୍ମାରେୟାଃ ହିତା ହେରାକାଦାଲେ, ଏନାତେ ଆଲେ ଚିନାଃ ଆପେତାଃଏତେ ଅତେରେୟାଃ ଜ ନାମେ ନାଗେନ୍ତେ କାଲେଚି ଆସ୍ରାଏୟା?
12 உங்களிடத்திலிருந்து உதவியைப் பெற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உரிமை இருக்குமாயின், எங்களுக்கு இன்னும் அதிகமான உரிமை இருக்காதோ? அப்படியிருந்தும், இந்த உரிமையை நாங்கள் உபயோகிக்கவில்லை. மாறாக நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்திக்குத் தடை ஏற்படாதவாறு, எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிறோம்.
୧୨ନେଲେକା ଆପେତାଃଏତେ ଆସ୍ରାଏ ନାଗେନ୍ତେ ଏଟାଃକଆଃ ଆକ୍ତେୟାର୍ ମେନାଃରେଦ, ଆବୁଆଃ ଆକ୍ତେୟାର୍ ଚିନାଃ ଇନ୍କୁତାଃଏତେ ଆଦ୍କା ବାନଃଆ? ଆବୁ ନେ ଆକ୍ତେୟାର୍କେ କାବୁ ବେଭାର୍କାଦା । ମେନ୍ଦ ଖ୍ରୀଷ୍ଟ୍ଆଃ ସୁକୁକାଜି ଉଦୁବ୍ ନାଙ୍ଗ୍ ହରା ଆଲକା ଛେକାଦଃକା ମେନ୍ତେ ଆଲେ ସବେନାଃଲେ ସାହାତିଙ୍ଗ୍ ତାନା ।
13 ஆலயத்தில் ஊழியம் செய்கிறவர்கள் ஆலயத்திலிருந்தே தங்கள் உணவைப் பெறுகிறார்கள் என்பதையும், பலிபீடத்தில் பணிசெய்கிறவர்கள் பலியிடப்படும் காணிக்கைகளில் ஒரு பங்கைப் பெறுகிறார்கள் என்பதையும் நீங்கள் அறியாதிருக்கிறீர்களா?
୧୩ମାନ୍ଦିର୍ ଅଡ଼ାଃରେ କାମିତାନ୍କ, ମାନ୍ଦିର୍ ଅଡ଼ାଃଏତେ ଜମେୟାଃଁକ ନାମେୟା, ଦାଣେଁ ରାକାବ୍ତାନ୍ ହଡ଼, ଦାଣେଁ ରାକାବ୍କାନ୍ତେୟାରାଃ ହିସାକ ନାମେୟା, ଏନା ଚିନାଃ ଆପେ କାପେ ସାରିତାନା?
14 அப்படியே நற்செய்தியைப் பிரசங்கிக்கிறவர்கள் நற்செய்தி ஊழியத்திலிருந்தே தங்கள் வாழ்க்கைக்குரிய தேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று, கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்.
୧୪ଏନ୍ଲେକାଗି, ସୁକୁକାଜି ଉଦୁବ୍ତାନ୍ ହଡ଼କ, ସୁକୁକାଜି ଉଦୁବ୍କେଦ୍ତେ ଜୀୱାନ୍ ବିତାଏକାକ ମେନ୍ତେ ପ୍ରାଭୁ ଆଚୁକାଦା ।
15 ஆனாலும் இந்த உரிமை எதையும் நான் அனுபவிக்கவில்லை. மேலும், அத்தகைய காரியங்களை நீங்கள் எனக்குச் செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்பிலும் நான் இதை எழுதவில்லை. இப்பொழுது எனக்கிருக்கும் இத்தகைய எனது பெருமித உணர்வை ஒருவன் அவத்தமாக்குகிறதைப் பார்க்கிலும், நான் சாவதே நலமாயிருக்கும்.
୧୫ମେନ୍ଦ ଆଇଁୟାଃ ଅକନ୍ ଆକ୍ତେୟାର୍ ମେନାଃ ଏନା ଆଇଙ୍ଗ୍ ମିଆଁଦ୍ହଁ କାଇଙ୍ଗ୍ ବେଭାର୍କାଦା, ଚାଏ ଏନ୍ ସବେନାଃ ଆଇଁୟାଃ ନାଗେନ୍ତେ ହବାଅଃକା ମେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ଆପେତାଃତେ କାଇଙ୍ଗ୍ ଅଲେତାନା, ଜେତାଏ ଆଇଁୟାଃ ନେ ମାନାରାଙ୍ଗ୍କେ ସାମା ଏଣ୍ଡାଗେତେଦ, ଗଜଃତେୟାଃ ଆଇଁୟାଃ ନାଗେନ୍ତେ ବୁଗିନାଃ ହବାଅଃଆ ।
16 எனினும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்பொழுது நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், நான் பிரசங்கிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நற்செய்தியை நான் பிரசங்கிக்காவிட்டால், எனக்கு ஐயோ, கேடு வரும்.
୧୬ସୁକୁକାଜି ଉଦୁବ୍ତାନାଇଙ୍ଗ୍ ମେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ଆପାନ୍କେ କାଇଙ୍ଗ୍ ମାରାଙ୍ଗ୍ୟେଁନ୍ ତାନା, ନେ ବାହାରମ୍ ମାନାତିଙ୍ଗ୍ ନାଗେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍କେ ଆଚୁକାନା । ଏନାତେ ସୁକୁକାଜି କାଇଙ୍ଗ୍ ଉଦୁବେରେଦ, ହାଏ, ଆଇଁୟାଃ ପୁରାଃ ଦୁକୁ ହବାଅଃଆ ।
17 நான் பிரசங்கிப்பதை ஒரு தொண்டாக செய்வேனாயின், எனக்கு அதற்கான வெகுமதி உண்டு; மனவிருப்பம் இன்றி நான் இதைச் செய்தாலும், எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பொறுப்பையே செய்து முடிக்கிறேன்.
୧୭ଆଇଙ୍ଗ୍ ଏନ୍ ସୁକୁକାଜିକେ ବେଗାର୍ ଆଚୁତେ ଆଇଙ୍ଗ୍ଗିଇଙ୍ଗ୍ କାମିରେଦ, ଆଇଙ୍ଗ୍ ନାଲା ନାମେ ନାଗେନ୍ତେଇଙ୍ଗ୍ ତାଙ୍ଗିକାତେତେୟାଃ, ମେନ୍ଦ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆଇଙ୍ଗ୍କେ ନେ କାମି ରିକାରେୟାଃ ବାହାରମ୍ ଏମାକାଦିଙ୍ଗ୍ ହରାତେ ଆଇଙ୍ଗ୍କେ ନେ କାମି ରିକା ଲାଗାତିୟାଁ ।
18 அப்படியானால், எனக்குக் கிடைக்கும் வெகுமதி என்ன? நான் எனக்குரிய உரிமைகளை பெற்றுக்கொள்ளாமலும், எவரிடமிருந்தும் எதையும் எதிர்பாராமலும், நற்செய்தியை இலவசமாக பிரசங்கிப்பதில் கிடைக்கும் மனத்திருப்தியே எனக்குரிய வெகுமதி.
୧୮ଏନାରେ ଆଇଙ୍ଗ୍ ଚିଲ୍କାତେ ନାଲାଇଙ୍ଗ୍ ନାମେୟା? ସବେନ୍କତାଃରେ ବେଗାର୍ ଗନଙ୍ଗ୍ତେ ସୁକୁକାଜିଇଙ୍ଗ୍ ଉଦୁବ୍ତାନା, ନେଆଁଁଗି ଆଇଁୟାଃ ନାଲାତାନାଃ । ଏନାତେ ସୁକୁକାଜି ଉଦୁବ୍ ନାଗେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ଆଇଁୟାଃ ଜେତାନ୍ ଆକ୍ତେୟାର୍ କାଇଙ୍ଗ୍ ବେଭାର୍କାଦା ।
19 நான் சுதந்திரமான மனிதன். எந்த ஒரு மனிதனுக்கும் என்மேல் உரிமையில்லாதிருந்தும், அநேகரை கிறிஸ்துவுக்குள்ளாக ஆதாயப்படுத்திக்கொள்ள, எல்லோருக்கும் என்னை அடிமையாக்கிக்கொள்கிறேன்.
୧୯ଆଇଙ୍ଗ୍ ମିହୁଡ଼୍ ତନଲ୍ହେତେ ରାଡ଼ାକାନ୍ ହଡ଼ ତାନିଙ୍ଗ୍, ଜେତାଏୟାଃ ଦାସି ନାହାଁଲିଙ୍ଗ୍, ଏନ୍ରେୟ ଖ୍ରୀଷ୍ଟ୍ରେ ସବେନ୍କକେ ନାମ୍କ ନାଗେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ସବେନ୍କଆଃ କିରିଙ୍ଗ୍ଦାସିଙ୍ଗ୍ ହବାକାନା ।
20 யூதர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, நான் யூதருக்கு யூதனைப் போலானேன். மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு, நானும் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவனைப் போலானேன். அவ்வாறே, நான் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படாதவனைப் போலானேன்.
୨୦ଆଇଙ୍ଗ୍ ଯିହୁଦୀ ହଡ଼କକେ ଖ୍ରୀଷ୍ଟ୍ରେ ନାମ୍କ ନାଗେନ୍ତେ ଇନ୍କୁଲଃ ଯିହୁଦୀକ ଲେକା ଚାଇଲ୍ ଚାଲାନ୍ ରିକାତାନିଙ୍ଗ୍ । ମୁଶା ନାବୀଆଃ ଆନ୍ଚୁ ମାନାତିଙ୍ଗ୍ତାନ୍କକେ ଖ୍ରୀଷ୍ଟ୍ରେ ନାମ୍କ ନାଗେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ଜେତାନ୍ ଆନ୍ଚୁରେୟାଃ ଆକ୍ତେୟାର୍ରେ ବାଙ୍ଗାଇଙ୍ଗ୍ରେୟ ଆନ୍ଚୁରେୟାଃ ଆକ୍ତେୟାର୍ରେ ମେନାଇଙ୍ଗ୍ଲେକା ଚାଇଲ୍ ଚାଲାନ୍ ରିକାତାନିଙ୍ଗ୍ ।
21 மோசேயின் சட்டம் இல்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, நானும் மோசேயின் சட்டம் இல்லாதவன் போலானேன். ஆனால் நான் இறைவனுடைய சட்டத்திற்கு உட்படாதவனல்ல, நான் கிறிஸ்துவின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவன்.
୨୧ଏନ୍ଲେକାଗି ଆଇଙ୍ଗ୍ ଆନ୍ଚୁ ବାନଃ ହଡ଼କକେ ଖ୍ରୀଷ୍ଟ୍ରେ ନାମ୍କ ନାଗେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ଇନ୍କୁ ଥାଲାରେ କାମିତାନ୍ ଇମ୍ତା ସାଅଁସାର୍କ ଲେକା ଜୀୱାନ୍ ବିତାଅତାନାଇଙ୍ଗ୍ । ନେଆଁଁରାଃ ମୁଣ୍ଡି ନାହାଁଲାଃ ଯେ, ଆଇଙ୍ଗ୍ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ନିୟାମ୍ କାଇଙ୍ଗ୍ ମାନାତିଙ୍ଗ୍ତାନା । ସାର୍ତିଗି ଆଇଙ୍ଗ୍ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ଆଃ ନିୟାମ୍ରାଃ ଆକ୍ତେୟାର୍ରେ ମେନାଇୟାଁ ।
22 பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ள, நான் பலவீனருக்கு பலவீனனானேன். எப்படியாவது சிலரையாவது இரட்சிப்புக்குள் வழிநடத்தும்படி, நான் எல்லோருக்கும் எல்லாமானேன்.
୨୨ଅକନ୍କ ବିଶ୍ଵାସ୍ରେ ନାରାଦୁରା ମେନାକଆ ଇନ୍କୁକେ ଖ୍ରୀଷ୍ଟ୍ରେ ନାମ୍କ ନାଗେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍ହଁ ଇନ୍କୁଲେକା ହବାୟାନାଇଙ୍ଗ୍ । ଏନାତେ ଆଇଙ୍ଗ୍ ଇନ୍କୁକେ ବାଞ୍ଚାଅକ ନାଗେନ୍ତେ ସବେନ୍କତାଃରେ ହବାସାକାଅଃ ଲେକା ଜୀୱାନ୍ ବିତାଅକେଦାଇଙ୍ଗ୍ ।
23 நற்செய்தியின் ஆசீர்வாதங்களில் நான் பங்கு பெறும்படியாகவே நற்செய்தியின் நிமித்தமே இவை எல்லாவற்றையும் நான் செய்கிறேன்.
୨୩ଆଇଙ୍ଗ୍ ସୁକୁକାଜି ଉଦୁବ୍କେଦ୍ତେ ଆଶିଷ୍ରାଃ ହିସା ନାମେ ନାଗେନ୍ତେ ନେ ସବେନାଃଇଙ୍ଗ୍ ରିକାତାନା ।
24 ஓட்டப் பந்தயத்தில் எல்லோரும் ஓடுகிறார்கள். ஆனால் ஒருவனே பரிசைப் பெறுவான். இது உங்களுக்குத் தெரியாதா? பரிசைப் பெற்றுக்கொள்ளத்தக்க விதத்திலே ஓடுங்கள்.
୨୪ଜିନିତାଅରେୟାଃ ଏନେଃରେ ପୁରାଃ ହଡ଼କ ମେସାନାଃ ମେନ୍ଦ ମିହୁଡ଼୍ଗି ନାଲାଏ ନାମେୟା, ଏନା ଚିନାଃ ଆପେ କାପେ ସାରିତାନା? ଆପେ ନାଲାପେ ନାମେ ଲେକା ନିରେପେ ।
25 விளையாட்டுக்களில் பங்குபெறும் ஒவ்வொருவரும், கடுமையான சுயக்கட்டுப்பாடு பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் அழிந்துபோகும் ஒரு கிரீடத்தைப் பெறுவதற்காகவே அவ்வாறு செய்கிறார்கள்; ஆனால் நாமோ, அழியாத ஒரு கிரீடத்தைப் பெறுவதற்காக அப்படிச் செய்கிறோம்.
୨୫ଜିନିତାଅରେୟାଃ ଏନେଃ ନାଗେନ୍ତେ ଇତୁକାନ୍ ହଡ଼କ ସବେନ୍ ଲେକାନ୍ ଇନିତୁତେ ସେକାଡ଼ାକାନ୍ଗିକ ତାଇନାଃ, ଇନ୍କୁ ଜିୟନଃ ବାହାମାଲା ନାମେ ନାଗେନ୍ତେକ କାମିୟାଃ, ମେନ୍ଦ ଆବୁ କା ଜିୟନଃ ନାଲା ନାମେ ନାଗେନ୍ତେବୁ କାମିୟା ।
26 ஆதலால், நான் குறிக்கோள் இல்லாமல் ஓடும் மனிதனைப்போல ஓடமாட்டேன்; நான் காற்றில் குத்துகிற மனிதனைப்போல, குத்துச் சண்டையிடமாட்டேன்.
୨୬ଏନାମେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ନିର୍ ସେଟେରେ ଠାୟାଦ୍କେ ନେଲ୍କେଦ୍ତେ ଏନ୍ତାଃତେ ନିର୍ ସେଟେରେ ନାଗେନ୍ତେ ସିଧାଗିଙ୍ଗ୍ ନିରେତାନା । ମୁକାଲାଡ଼ାଇତାନ୍ ହଡ଼ ଲେକା ଆଇଙ୍ଗ୍ ଆଇଁୟାଃ ମୁକାକେ ସାମା ହୟରେ ମୁକା କାଇଙ୍ଗ୍ ସାନାଙ୍ଗ୍ତାନା ।
27 நான் என் உடலை அடக்கி, எனக்கு அடிமையாக்கிக்கொள்கிறேன். ஏனெனில் நான் மற்றவர்களுக்குப் பிரசங்கித்தபின், அதன் பரிசுக்குத் தகுதியில்லாதவனாய் விழுந்துபோகாதபடி இப்படிச் செய்கிறேன்.
୨୭ଏଟାଃକତାଃରେ ସୁକୁକାଜି ଉଦୁବ୍କେଦ୍ରେୟ ଆଇଙ୍ଗ୍ ଆଲକାଇଙ୍ଗ୍ ବାଗ୍ଡ଼ାଅଃ ମେନ୍ତେ ଦୁକୁ ସାହାତିଙ୍ଗ୍କେଦ୍ତେ ହଡ଼୍ମକେଇଙ୍ଗ୍ କେଟେଦ୍କେଦା ଆଡଃ ଆଇଁୟାଃ ଥାବର୍ରେଇଙ୍ଗ୍ ଦହକାଦା ।