< 1 கொரிந்தியர் 9 >

1 நான் ஒரு சுதந்திரமுடைய மனிதன் அல்லவா? நான் ஒரு அப்போஸ்தலன் அல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுவை நான் காணவில்லையா? நான் கர்த்தரில் செய்த ஊழியத்தின் கிரியையாய் நீங்கள் இருக்கிறீர்கள் அல்லவோ?
ମୁୟ୍‌ଁ କାୟ୍‌ ମର୍‌ ଇଚାୟ୍‌ ନାୟ୍‌କି? ମୁୟ୍‌ଁ କାୟ୍‌ ପେରିତ୍‌ ନୟ୍‌କି? ମୁୟ୍‌ଁ କାୟ୍‌ ଅଃମାର୍‌ ମାପ୍ରୁ ଜିସୁକ୍‌ ନଃଦେକି? ତୁମିମଃନ୍ କାୟ୍‌ ମାପ୍ରୁର୍‌ ତଃୟ୍‌ ମୁୟ୍‌ଁ କଃଲା କାମାର୍‌ ହଃଳ୍‌ ନୟ୍‌କି?
2 நான் மற்றவர்களுக்கு ஒருவேளை அப்போஸ்தலனாய் இல்லாதிருக்கலாம். ஆனால் நிச்சயமாக, உங்களுக்கு, நான் அப்போஸ்தலன்தான்; ஏனெனில், கர்த்தரில் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு நீங்களே அடையாளமாய் இருக்கிறீர்கள்.
ଅୟ୍‌ଲେକ୍‌ ହେଁ ମୁୟ୍‌ଁ ବିନ୍ କାର୍‌ ତଃୟ୍‌ ଗଟ୍‌ ପେରିତ୍‌ ନୟ୍‌ଲେକ୍‌ ହେଁ ତୁମିମଃନାର୍‌ ହାକ୍‌ ଗଟ୍‌ ପେରିତ୍‌, କାୟ୍‌ତାକ୍‌ ବଃଲେକ୍‌ ମାପ୍ରୁର୍‌ ତଃୟ୍‌ ତୁମିମଃନ୍‌କେ ମର୍‌ ପେରିତ୍‌ ହଃଦାର୍‌ ମୁଦ୍ରାମାର୍‌ଲାର୍‌ ।
3 என்மேல் நியாயந்தீர்க்கிறவர்களுக்கு, நான் கொடுக்கும் பதில் இதுவே.
ମର୍‌ ବିରଦେ ହଃଚାର୍ଲା ଲକ୍‌ମଃନ୍‌କେ ମଃର୍‌ ବିଚାର୍‌ ଇରି ।
4 உணவையும் பானத்தையும் உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் உரிமை எங்களுக்கு இல்லையோ?
କାତାର୍‌ କାୟ୍‌ ଅଃମିମଃନାର୍‌ ଅଃଦିକାର୍‌ ନାୟ୍‌?
5 மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தருடைய சகோதரர்களும், கேபாவும் அவனவன் விசுவாசியான தன்தன் மனைவியைக் கூட்டிக் கொண்டுபோகிறதுபோல், நாங்களும் செய்வதற்கு எங்களுக்கும் உரிமை இல்லையோ?
ବିନ୍ ସଃବୁ ପେରିତ୍‌, ମାପ୍ରୁର୍‌ ବାୟ୍‌ବେଣିମଃନ୍‌ ଆର୍‌ ପିତର୍‌ ହଃର୍‌ ବିସ୍ୱାସିନି ମାୟ୍‌ଜି ବିବା କଃରି ମିସ୍‌ଣେ ନଃୟ୍‌ ବୁଲୁକ୍‌ କାୟ୍‌ ଅଃମାର୍‌ ଅଃଦିକାର୍‌ ନାୟ୍‌?
6 அல்லது வாழ்க்கைச் செலவுக்காக நானும் பர்னபாவும் மட்டும்தான் வேலைசெய்ய வேண்டுமோ?
କଃସ୍ଟକଃରି ବଚୁକ୍‌ କାୟ୍‌ ମର୍‌ ଆର୍‌ ବର୍ନବାର୍‌ ଅଃଦିକାର୍‌ ନାୟ୍‌?
7 எவன் தன் செலவுக்கான பணத்தைத் தானே செலுத்தி படைவீரனாய்ப் பணிபுரிவான்? எவன் திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி அதன் பழங்களைச் சாப்பிடாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து அதன் பாலைக் குடியாதிருப்பான்?
କେ ନିଜାର୍‌ କଃର୍ଚ୍ କଃରି ସଃୟ୍‌ନ୍‌ କାମ୍‌ କଃରେଦ୍‌? କେ ଅଙ୍ଗୁର୍‌ ବାଳ୍‌ କଃରି ସେତିର୍‌ ହଃଳ୍‌ ନଃକାୟ୍‌? କି କେ ମେଣ୍ଡାମଃନ୍ଦା ହାଳି ତାକାର୍‌ ଦୁଦ୍‌ ନଃକାୟ୍‌?
8 இதை மனித வழக்கத்தின்படி மட்டும் சொல்கிறேனோ? மோசேயின் சட்டமும் இதைச் சொல்லவில்லையா?
ମୁୟ୍‌ଁ ମାନାୟଃର୍‌ ଗିନେ କାୟ୍‌ ଇସାବ୍‌ କଃତା ନଃକଃଉଁଲେ? ମସାର୍‌ ବିଦି ହେଁ କାୟ୍‌ ଇସାବ୍‌ କଃତା ନଃକୟ୍‌?
9 “தானியக்கதிரை போரடிக்கும் எருதின் வாயைக் கட்டவேண்டாம்” என்று மோசேயின் சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறதே. இவைகளை மாடுகளைக்குறித்தா, இறைவன் கவலைப்படுகிறார்?
କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ମସାର୍‌ ସାସ୍ତରେ ଇରି ଲେକାଆଚେ, “ଦାନ୍‌ ମାଡାଉତା ବଃଳ୍‌ ବଃଇଲ୍‌ ମୁୟେ କତ୍ରା ବାନ୍ଦାନାୟ୍‌ ।” ଇସ୍ୱର୍‌ କାୟ୍‌ରି ବଃୟ୍‌ଲାର୍‌ କଃତା ଚିତା କଃରୁଲା?
10 நிச்சயமாக இதை அவர் நமக்காகத்தான் சொல்லியிருக்கிறார். ஆம், அது நமக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. ஏனெனில் உழுகிறவனும், போரடிக்கிறவனும் விளைச்சலில் தங்களுக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்வோம் என்ற எதிர்பார்ப்பில்தானே தங்கள் வேலையைச் செய்யவேண்டும்.
ସେ କାୟ୍‌ ଅଃବ୍‌କା ଅଃମାର୍‌ ଗିନେ କୟ୍‌ ନଃକେରେକି? ହେଁ ଅଃମାର୍‌ ଗିନେ ଇରି ଲେକା ଅୟ୍‌ଆଚେ, ଜଃନ୍‌କଃରି ଜେ କାମାଉଣି କଃରେଦ୍‌, ବଃର୍ସାକଃରି ତାର୍‌ କାମାଉଣି କଃର୍ତା ଲଳା, ଆର୍‌ ଜେ ମାଡାଉଁକେ ଗଃଣା ହଃକାୟ୍‌ଦ୍‌, ବାଗ୍ ହାଉଁକ୍‌ ଆସା କଃରି ତାର୍‌ ମାଡାଉଁକେ ଗଃଣା ହଃକାଉତା ଲଳା ।
11 நாங்கள் உங்கள் மத்தியில் ஆவிக்குரிய விதையை விதைத்தோமே. அப்படியிருக்க, உங்களிடமிருந்து எங்களுக்குத் தேவையானவற்றை அறுவடை செய்வது நியாயமற்றதோ?
ଜଦି ଅଃମିମଃନ୍‌ ଅଃମାର୍‌ ଗିନେ ଆତ୍ମାର୍‌ ବିଆନ୍ ବୁଣି ଆଚୁ, ତଃବେ ତୁମିମଃନ୍‌କାର୍‌ ଇ ଜଃଗତାର୍‌ ତାସ୍‌ ହାଉଁକେ ଆସା ନଃକେରୁ କି?
12 உங்களிடத்திலிருந்து உதவியைப் பெற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உரிமை இருக்குமாயின், எங்களுக்கு இன்னும் அதிகமான உரிமை இருக்காதோ? அப்படியிருந்தும், இந்த உரிமையை நாங்கள் உபயோகிக்கவில்லை. மாறாக நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்திக்குத் தடை ஏற்படாதவாறு, எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிறோம்.
ଜଦି ବିନ୍‌ ଲକ୍‌ମଃନ୍ ତୁମିମଃନ୍‌କାର୍‌ ବାଗାର୍‌ ଅଃଦିକାରି ଅଃଉତି, ତଃବେ ଅଃମିମଃନ୍‌ କାୟ୍‌ ଆରେକ୍‌ ଅଃଦିକ୍‌ ନଃଉଁ? ଅୟ୍‌ଲେକ୍‌ ହେଁ ସେ ଅଃଦିକାର୍‌ ଦଃକାୟ୍‌ ନଃକେରୁ; ମଃତର୍‌ ଜଃନ୍‌କଃରି କ୍ରିସ୍ଟର୍‌ ନିକ କବୁରାର୍‌ କାୟ୍‌ ବାଦା ନଃଉଅ ବଃଲି ସଃବୁ ସଃମ୍ବାଳ୍‌ଲୁ ।
13 ஆலயத்தில் ஊழியம் செய்கிறவர்கள் ஆலயத்திலிருந்தே தங்கள் உணவைப் பெறுகிறார்கள் என்பதையும், பலிபீடத்தில் பணிசெய்கிறவர்கள் பலியிடப்படும் காணிக்கைகளில் ஒரு பங்கைப் பெறுகிறார்கள் என்பதையும் நீங்கள் அறியாதிருக்கிறீர்களா?
ଜୁୟ୍‌ମଃନ୍‌ ମନ୍ଦିରାର୍‌ ସେବା କଃର୍ତି, ସେମଃନ୍ ଜେ, ମନ୍ଦିରାର୍‌ କାଦି ହାଉତି, ଆର୍‌ ଜୁୟ୍‌ମଃନ୍‌ ବେଦିର୍‌ ସେବାୟ୍‌ ଲାଗିରେତି, ସେମଃନ୍ ଜେ, ବେଦି ସଃଙ୍ଗାର୍‌ ବାଗ୍ ହାଉତି, ଇରି କାୟ୍‌ ନଃଜାଣାସ୍‌?
14 அப்படியே நற்செய்தியைப் பிரசங்கிக்கிறவர்கள் நற்செய்தி ஊழியத்திலிருந்தே தங்கள் வாழ்க்கைக்குரிய தேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று, கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்.
ସେରଃକମ୍‌ ଜୁୟ୍‌ମଃନ୍‌ ନିକ କବୁର୍‌ ପର୍ଚାର୍‌ କଃର୍ତି, ସେମଃନ୍ ଜେ ନିକ କବୁର୍‌ ତଃୟ୍‌ ଜିବନ୍‌ କାଟ୍‌ତି, ଇରି ମାପ୍ରୁ କୟ୍‌ ଆଚେ ।
15 ஆனாலும் இந்த உரிமை எதையும் நான் அனுபவிக்கவில்லை. மேலும், அத்தகைய காரியங்களை நீங்கள் எனக்குச் செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்பிலும் நான் இதை எழுதவில்லை. இப்பொழுது எனக்கிருக்கும் இத்தகைய எனது பெருமித உணர்வை ஒருவன் அவத்தமாக்குகிறதைப் பார்க்கிலும், நான் சாவதே நலமாயிருக்கும்.
ମଃତର୍‌ ମୁୟ୍‌ଁ ଅଃଦିକାର୍‌ ବେବାର୍‌ ନଃକେରି, ଆର୍‌ ମକେ ଜେ ଅଃନ୍‌ କଃରା ଅୟ୍‌ଦ୍‌, ଇତାର୍‌ ଗିନେ ମୁଁୟ୍‌ ଇରିମଃନ୍‌ ଲେକୁ ନଃଚୁଲେ; କାୟ୍‌ତାକ୍‌ ବଃଲେକ୍‌ କେ ମର୍‌ ଇ ଗଃର୍ବ୍‌କେ ତିନିହଲ୍ୟା କଃର୍ତା ବାଦୁଲେ ମୁୟ୍‌ଁ ମଃର୍ତାର୍‌ ନିକ ।
16 எனினும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்பொழுது நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், நான் பிரசங்கிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நற்செய்தியை நான் பிரசங்கிக்காவிட்டால், எனக்கு ஐயோ, கேடு வரும்.
କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ମୁୟ୍‌ଁ ଜଦି ନିକ କବୁର୍‌ ପର୍ଚାର୍‌ କଃରିନ୍ଦ୍‌, ସେତାକ୍‌ ମୁୟ୍‌ଁ ଗଃର୍ବ୍‌ କଃର୍ତାର୍‌ ଲଳାନାୟ୍‌ଁ, ଜଃନ୍‌କଃରି ହେଁ ମୁୟ୍‌ଁ ସେରି କଃର୍ତା ଲଳା; ଆର୍‌ ଜଦି ମୁୟ୍‌ଁ ନିକ କବୁର୍‌ ପର୍ଚାର୍‌ ନଃକେଲେକ୍‌ ଚି, ମୁୟ୍‌ଁ ଦଃଣ୍ଡାର୍‌ ଜୟଃଗ୍ ।
17 நான் பிரசங்கிப்பதை ஒரு தொண்டாக செய்வேனாயின், எனக்கு அதற்கான வெகுமதி உண்டு; மனவிருப்பம் இன்றி நான் இதைச் செய்தாலும், எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பொறுப்பையே செய்து முடிக்கிறேன்.
ଜଦି ମୁୟ୍‌ଁ ନିଜାର୍‌ ଇଚାୟ୍‌ ଇ କାମ୍‌ କଃରିନ୍ଦ୍‌, ତଃବେ ମର୍‌ ପୁରିସ୍କାର୍‌ ଆଚେ; ମଃତର୍‌ ଜଦି ନିଜାର୍‌ ଇଚାୟ୍‌ ନଃକେରି, ତଃବେହେଁ ସେବାକଃର୍ତା ହଃଦାର୍‌ ବଜ୍‌ ମକେ ସଃହ୍ରି ଦିଆ ଅୟ୍‌ଆଚେ ।
18 அப்படியானால், எனக்குக் கிடைக்கும் வெகுமதி என்ன? நான் எனக்குரிய உரிமைகளை பெற்றுக்கொள்ளாமலும், எவரிடமிருந்தும் எதையும் எதிர்பாராமலும், நற்செய்தியை இலவசமாக பிரசங்கிப்பதில் கிடைக்கும் மனத்திருப்தியே எனக்குரிய வெகுமதி.
ତଃବେ ମର୍‌ ପୁରିସ୍କାର୍‌ କାୟ୍‌ରି ନାୟ୍‌, ସେତାର୍‌ ଗିନେ ନିକ କବୁର୍‌ ପର୍ଚାର୍‌ କଃରୁକେ ମୁୟ୍‌ଁ କାୟ୍‌ ହେଁ ଅଃଦିକାର୍‌ ବଗ୍ କଃରୁକେ ବେବାର୍‌ ନଃକେରି ।
19 நான் சுதந்திரமான மனிதன். எந்த ஒரு மனிதனுக்கும் என்மேல் உரிமையில்லாதிருந்தும், அநேகரை கிறிஸ்துவுக்குள்ளாக ஆதாயப்படுத்திக்கொள்ள, எல்லோருக்கும் என்னை அடிமையாக்கிக்கொள்கிறேன்.
କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ମୁଁୟ୍‌ ଜଃବର୍‌ ଲକେ ଲାବ୍‌ କଃରୁକେ ହାରି, ଇତାର୍‌ ଗିନେ ମୁୟ୍‌ଁ କାର୍‌ ତଃଳେ ଗତି ନଃରିଲେକ୍‌ ହେଁ ନିଜ୍‌କେ ସଃବୁ ଲକାର୍‌ ସେବାକାରି ଅୟ୍‌ ଆଚି
20 யூதர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, நான் யூதருக்கு யூதனைப் போலானேன். மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு, நானும் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவனைப் போலானேன். அவ்வாறே, நான் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படாதவனைப் போலானேன்.
ଜଃନ୍‌କଃରି ମୁୟ୍‌ଁ ଜିଉଦିମଃନ୍‌କେ କ୍ରିସ୍ଟର୍‌ ଗିନେ ଲାବ୍‌ କଃରୁକେ ହାରି, ଇତାର୍‌ ଗିନେ ଜିଉଦିମଃନାର୍‌ ହାକ୍‌ ମୁୟ୍‌ଁ ଜିଉଦି ହର୍‌ ଅୟ୍‌ଲେ; ଜଃନ୍‌କଃରି ମସାର୍‌ ବିଦି ତଃଳେ ରିଲା ଲକ୍‌ମଃନ୍‌କେ କ୍ରିସ୍ଟର୍‌ ଗିନେ ଲାବ୍‌ କଃରୁହାରି ଇତାର୍‌ ଗିନେ ମସାର୍‌ ବିଦିର୍‌ ତଃଳେ ନୟ୍‌ଲେକ୍‌ ହେଁ ବିଦି ତଃଳେ ରିଲା ଲକ୍‌ମଃନ୍‌କାର୍‌ ହାକ୍‌ ବିଦି ତଃଳାର୍‌ ହଃର୍‌ ଅୟ୍‌ଲେ
21 மோசேயின் சட்டம் இல்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, நானும் மோசேயின் சட்டம் இல்லாதவன் போலானேன். ஆனால் நான் இறைவனுடைய சட்டத்திற்கு உட்படாதவனல்ல, நான் கிறிஸ்துவின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவன்.
ଜଃନ୍‌କଃରି ମୁୟ୍‌ଁ ମସାର୍‌ ଅଜିଉଦି ଲକ୍‌ମଃନ୍‌କେ ଲାବ୍‌ କଃରୁହାରି, ଇତାର୍‌ ଗିନେ ମୁଁୟ୍‌ ଇସ୍ୱରାର୍‌ ବିଦି ନଃଚାଡି କ୍ରିସ୍ଟର୍‌ ବିଦିକେ ମାନ୍‌ଲେକ୍‌ ହେଁ ବିଦିନୟ୍‌ଲା ଲକ୍‌ମଃନାର୍‌ ହାକ୍‌ ମସାର୍‌ ବିଦିନୟ୍‌ଲା ହର୍‌ ଅୟ୍‌ଲେ ।
22 பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ள, நான் பலவீனருக்கு பலவீனனானேன். எப்படியாவது சிலரையாவது இரட்சிப்புக்குள் வழிநடத்தும்படி, நான் எல்லோருக்கும் எல்லாமானேன்.
ଜଃନ୍‌କଃରି ମୁୟ୍‌ଁ ବିସ୍ୱାସେ ଦୁର୍ବୁଳ୍‌ ମଃନ୍‌କେ ଲାବ୍‌ କଃରୁହାରି, ଇତାର୍‌ ଗିନେ ମୁଁୟ୍‌ ଦୁର୍ବୁଳ୍‌ ମଃନ୍‌କାର୍‌ ହାକ୍‌ ଦୁର୍ବୁଳ୍‌ ହର୍‌ ଅୟ୍‌ଲେ, ମୁୟ୍‌ଁ ଜଃନ୍‌କଃରି ହେଁ କଃତି ଲକ୍‌କେ ବଚାଉଁ ହାରି, ଇତାର୍‌ ଗିନେ ମୁଁୟ୍‌ଁ ସଃବୁ ଲକାର୍‌ ହାକ୍‌ ସଃବୁ ରଃକମ୍‌ ଚାଲାଚାଲ୍‌ତି କଃଲେ ।
23 நற்செய்தியின் ஆசீர்வாதங்களில் நான் பங்கு பெறும்படியாகவே நற்செய்தியின் நிமித்தமே இவை எல்லாவற்றையும் நான் செய்கிறேன்.
ମୁୟ୍‌ଁ ଜଃନ୍‌କଃରି ନିକ କବୁରାର୍‌ ଆସିର୍ବାଦାର୍‌ ବାଗିଦାରି ଅୟ୍‌ନ୍ଦ୍, ଇତାର୍‌ ଗିନେ ନିକ କବୁରାର୍‌ ଗିନେ ସଃବୁ କଃରିନ୍ଦ୍‌ ।
24 ஓட்டப் பந்தயத்தில் எல்லோரும் ஓடுகிறார்கள். ஆனால் ஒருவனே பரிசைப் பெறுவான். இது உங்களுக்குத் தெரியாதா? பரிசைப் பெற்றுக்கொள்ளத்தக்க விதத்திலே ஓடுங்கள்.
ଜୁୟ୍‌ ଲକ୍‌ମଃନ୍ କେଲ୍‌ତା ହଃଦାୟ୍‌ ଦଃବୁଳ୍‌ତି, ସେମଃନ୍ ଦଃବୁଳ୍‌ତି ସଃତ୍‌, ମଃତର୍‌ ଏକ୍ଲା ହ୍‌କା ପୁରିସ୍କାର୍‌ ଜିଣେଦ୍‌, ଇରିକାୟ୍‌ ତୁମିମଃନ୍‌ ନଃଜାଣାସ୍‌? ତୁମିମଃନ୍‌ ଜଃନ୍‌କଃରି ପୁରିସ୍କାର୍‌ ହାଉଆସ୍‌, ଇତାର୍‌ ଗିନେ ସେନ୍‌କଃରି ଦଃବ୍‌ଳା ।
25 விளையாட்டுக்களில் பங்குபெறும் ஒவ்வொருவரும், கடுமையான சுயக்கட்டுப்பாடு பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் அழிந்துபோகும் ஒரு கிரீடத்தைப் பெறுவதற்காகவே அவ்வாறு செய்கிறார்கள்; ஆனால் நாமோ, அழியாத ஒரு கிரீடத்தைப் பெறுவதற்காக அப்படிச் செய்கிறோம்.
କୁଣ୍ ଲକ୍‌ କେଲ୍‌ତା ତଃୟ୍‌ କେଲୁକ୍‌ ସିକ୍‌ତାବଃଳ୍‌ ସେ ସଃବୁ କଃତାୟ୍‌ ବିଦି ହଃର୍‌କାରେ କଃରୁକେ ଅୟ୍‌ଦ୍‌; ସେମଃନ୍ ନଃସ୍ଟ୍‌ଅଃଉତା ଜିତ୍‌ଲା ପୁରିସ୍କାର୍‌ ହାଉଁକ୍‌ ସେରି କଃର୍ତି, ମଃତର୍‌ ଅଃମିମଃନ୍‌ ନଃସ୍ଟ୍‌ ନଃଉତାର୍‌ ପୁରିସ୍କାର୍‌ ହାଉଁକେ ସେରି କଃରୁଲୁ ।
26 ஆதலால், நான் குறிக்கோள் இல்லாமல் ஓடும் மனிதனைப்போல ஓடமாட்டேன்; நான் காற்றில் குத்துகிற மனிதனைப்போல, குத்துச் சண்டையிடமாட்டேன்.
ସେତାକ୍‌ ମୁୟ୍‌ଁ ଏଣେ ତେଣେ ନାୟ୍‌, ସଃଳ୍‌କେ ଦଃବ୍‌ଳୁଲେ, ମୁଁୟ୍‌ ବିଦାମାରୁଲେ, ମଃତର୍‌ ବାଉକେ ମାର୍‌ଲା ଲକ୍‌ ହର୍‌ ନୟ୍‌ ।
27 நான் என் உடலை அடக்கி, எனக்கு அடிமையாக்கிக்கொள்கிறேன். ஏனெனில் நான் மற்றவர்களுக்குப் பிரசங்கித்தபின், அதன் பரிசுக்குத் தகுதியில்லாதவனாய் விழுந்துபோகாதபடி இப்படிச் செய்கிறேன்.
ମୁୟ୍‌ଁ କଃସ୍ଟ୍‌ ସଃମ୍ୱାଳି ଗଃଗାଳକେ ଅଃଟୁଆ କଃରି ଆଚି ଆର୍‌ ନିଜାର୍‌ ଆୟ୍‌ତ୍‌ ତଃଳେ ସଃଙ୍ଗାୟ୍‌ ଆଚି କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ବିନ୍‌ ଲକ୍‌ମଃନାର୍‌ ତଃୟ୍‌ ନିକ କବୁର୍‌ ପର୍ଚାର୍‌ କଃରି ରିଲେକ୍‌ ହେଁ ମୁୟ୍‌ଁ ନିଜେ ଜଃନ୍‌କଃରି ହଲ୍ୟାୟ୍‌ ପୁରିସ୍କାର୍‌ ଆରାୟ୍‌ ନଃକେରି ।

< 1 கொரிந்தியர் 9 >