< 1 கொரிந்தியர் 16 >
1 இறைவனுடைய மக்களுக்காகக் காணிக்கை சேகரிப்பதைக் குறித்து நான் சொல்கிறதாவது: கலாத்தியாவிலுள்ள திருச்சபைகளுக்கு செய்யவேண்டும் என்று நான் சொன்னதை நீங்களும் செய்யுங்கள்.
১পৱিত্ৰলোকানাং কৃতে যোঽৰ্থসংগ্ৰহস্তমধি গালাতীযদেশস্য সমাজা মযা যদ্ আদিষ্টাস্তদ্ যুষ্মাভিৰপি ক্ৰিযতাং|
2 ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளில் நீங்கள் ஒவ்வொருவரும், அவரவருடைய வருமானத்துக்கு ஏற்றபடி, ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை சேர்த்து வைத்துக்கொள்ளும்படி. அதை சேமித்து வையுங்கள். அப்படிச் செய்தால், நான் வரும்போது பணம் சேகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
২মমাগমনকালে যদ্ অৰ্থসংগ্ৰহো ন ভৱেৎ তন্নিমিত্তং যুষ্মাকমেকৈকেন স্ৱসম্পদানুসাৰাৎ সঞ্চযং কৃৎৱা সপ্তাহস্য প্ৰথমদিৱসে স্ৱসমীপে কিঞ্চিৎ নিক্ষিপ্যতাং|
3 நான் அங்கு வரும்போது, நீங்கள் அங்கீகரிக்கும் மனிதருக்கு அறிமுகக் கடிதங்களைக் கொடுத்து, உங்களது நன்கொடையுடன் அவர்களை எருசலேமுக்கு அனுப்புவேன்.
৩ততো মমাগমনসমযে যূযং যানেৱ ৱিশ্ৱাস্যা ইতি ৱেদিষ্যথ তেভ্যোঽহং পত্ৰাণি দত্ত্ৱা যুষ্মাকং তদ্দানস্য যিৰূশালমং নযনাৰ্থং তান্ প্ৰেষযিষ্যামি|
4 நான் போவது நல்லது என்று காணப்பட்டால், அவர்களும் என்னோடு வரலாம்.
৪কিন্তু যদি তত্ৰ মমাপি গমনম্ উচিতং ভৱেৎ তৰ্হি তে মযা সহ যাস্যন্তি|
5 எனவே, நான் மக்கெதோனியா நாட்டின் வழியாகப்போக இருக்கிறேன். மக்கெதோனியாவின் வழியாக நான் போனபின், நான் உங்களிடம் வருவேன்.
৫সাম্প্ৰতং মাকিদনিযাদেশমহং পৰ্য্যটামি তং পৰ্য্যট্য যুষ্মৎসমীপম্ আগমিষ্যামি|
6 சிறிதுகாலம் நான் உங்களுடன் தங்குவேன். ஒருவேளை குளிர்க்காலத்தை நான் உங்களுடனேயே கழிக்கலாம். இதனால், நான் எங்குபோக வேண்டியிருந்தாலும் எனது பயணத்தில் நீங்கள் உதவிசெய்யலாம்.
৬অনন্তৰং কিং জানামি যুষ্মৎসন্নিধিম্ অৱস্থাস্যে শীতকালমপি যাপযিষ্যামি চ পশ্চাৎ মম যৎ স্থানং গন্তৱ্যং তত্ৰৈৱ যুষ্মাভিৰহং প্ৰেৰযিতৱ্যঃ|
7 இப்பொழுது உங்களைப் பார்த்துப்போக எனக்கு விருப்பமில்லை. ஏனெனில், உங்களோடு செலவிட எனக்கு நாட்கள் போதாது. கர்த்தர் அனுமதிப்பாரென்றால், கொஞ்சக்காலம் உங்களுடன் கழிக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.
৭যতোঽহং যাত্ৰাকালে ক্ষণমাত্ৰং যুষ্মান্ দ্ৰষ্টুং নেচ্ছামি কিন্তু প্ৰভু ৰ্যদ্যনুজানীযাৎ তৰ্হি কিঞ্চিদ্ দীৰ্ঘকালং যুষ্মৎসমীপে প্ৰৱস্তুম্ ইচ্ছামি|
8 ஆனால், பெந்தெகொஸ்தே பண்டிகை வரைக்கும் நான் எபேசுவிலேயே தங்கியிருப்பேன்.
৮তথাপি নিস্তাৰোৎসৱাৎ পৰং পঞ্চাশত্তমদিনং যাৱদ্ ইফিষপুৰ্য্যাং স্থাস্যামি|
9 ஏனெனில், ஒரு பயனுள்ள பணிக்கான ஒரு பெரியவாசல் எனக்காகத் திறந்திருக்கிறது. ஆனால், என்னை எதிர்க்கிற அநேகர் அங்கிருக்கிறார்கள்.
৯যস্মাদ্ অত্ৰ কাৰ্য্যসাধনাৰ্থং মমান্তিকে বৃহদ্ দ্ৱাৰং মুক্তং বহৱো ৱিপক্ষা অপি ৱিদ্যন্তে|
10 தீமோத்தேயு உங்களிடத்தில் வந்தால், அவன் உங்களுடன் இருக்கையில் பயமின்றி வசதியாய் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், நான் செய்கிறதுபோலவே அவனும் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்கிறானே.
১০তিমথি ৰ্যদি যুষ্মাকং সমীপম্ আগচ্ছেৎ তৰ্হি যেন নিৰ্ভযং যুষ্মন্মধ্যে ৱৰ্ত্তেত তত্ৰ যুষ্মাভি ৰ্মনো নিধীযতাং যস্মাদ্ অহং যাদৃক্ সোঽপি তাদৃক্ প্ৰভোঃ কৰ্ম্মণে যততে|
11 ஆகவே, ஒருவனும் அவனை ஏற்றுக்கொள்ள மறுக்கக்கூடாது. அவன் என்னிடம் திரும்பிவரும்படி, அவனைச் சமாதானத்துடன் வழியனுப்பி வையுங்கள். மற்றச் சகோதரருடன், அவனையும் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
১১কোঽপি তং প্ৰত্যনাদৰং ন কৰোতু কিন্তু স মমান্তিকং যদ্ আগন্তুং শক্নুযাৎ তদৰ্থং যুষ্মাভিঃ সকুশলং প্ৰেষ্যতাং| ভ্ৰাতৃভিঃ সাৰ্দ্ধমহং তং প্ৰতীক্ষে|
12 நம்முடைய சகோதரனான அப்பொல்லோவைக் குறித்து நான் சொல்கிறதாவது: மற்றச் சகோதரரோடு அவனும் உங்களிடத்திற்கு வர, அவனை நான் அதிகமாய் ஊக்குவித்தேன். ஆனால் இப்பொழுதோ, உங்களிடத்தில் வர அவனுக்கு விருப்பமில்லை. ஆனால், தக்க வாய்ப்பு கிடைக்கும்போது அவன் உங்களிடத்தில் வருவான்.
১২আপল্লুং ভ্ৰাতৰমধ্যহং নিৱেদযামি ভ্ৰাতৃভিঃ সাকং সোঽপি যদ্ যুষ্মাকং সমীপং ৱ্ৰজেৎ তদৰ্থং মযা স পুনঃ পুনৰ্যাচিতঃ কিন্ত্ৱিদানীং গমনং সৰ্ৱ্ৱথা তস্মৈ নাৰোচত, ইতঃপৰং সুসমযং প্ৰাপ্য স গমিষ্যতি|
13 கவனமாயிருங்கள். உங்கள் விசுவாசத்தில் உறுதியாய் நில்லுங்கள். துணிவுள்ள மனிதராய் இருங்கள்; பலமுள்ளவர்களாய் செயல்படுங்கள்.
১৩যূযং জাগৃত ৱিশ্ৱাসে সুস্থিৰা ভৱত পৌৰুষং প্ৰকাশযত বলৱন্তো ভৱত|
14 நீங்கள் செய்வதை எல்லாம் அன்பிலேயே செய்யுங்கள்.
১৪যুষ্মাভিঃ সৰ্ৱ্ৱাণি কৰ্ম্মাণি প্ৰেম্না নিষ্পাদ্যন্তাং|
15 ஸ்தேவானுடைய குடும்பத்தினரே அகாயா நாட்டில் முதல் முதலாய் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள். பரிசுத்தவான்களுக்குப் பணிசெய்வதற்கென அவர்கள் தங்களையே ஒப்புவித்திருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பிரியமானவர்களே, இப்பொழுதும் நான் உங்களை வேண்டிக்கொள்கிறதாவது:
১৫হে ভ্ৰাতৰঃ, অহং যুষ্মান্ ইদম্ অভিযাচে স্তিফানস্য পৰিজনা আখাযাদেশস্য প্ৰথমজাতফলস্ৱৰূপাঃ, পৱিত্ৰলোকানাং পৰিচৰ্য্যাযৈ চ ত আত্মনো ন্যৱেদযন্ ইতি যুষ্মাভি ৰ্জ্ঞাযতে|
16 இப்படிப்பட்டவர்களுக்கு மதிப்புக்கொடுத்து நடவுங்கள். கர்த்தருடைய ஊழியத்தில் அவர்களுடன் இணைந்து பிரயாசப்படுகிற ஒவ்வொருவருக்கும் மதிப்புக்கொடுத்து நடவுங்கள்.
১৬অতো যূযমপি তাদৃশলোকানাম্ অস্মৎসহাযানাং শ্ৰমকাৰিণাঞ্চ সৰ্ৱ্ৱেষাং ৱশ্যা ভৱত|
17 ஸ்தேவானும், பொர்த்துனாத்தும், அகாயுவும் இங்கு வந்தபோது, நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனெனில், நீங்கள் இல்லாத குறையை அவர்கள் தீர்த்து வைத்தார்கள்.
১৭স্তিফানঃ ফৰ্ত্তূনাত আখাযিকশ্চ যদ্ অত্ৰাগমন্ তেনাহম্ আনন্দামি যতো যুষ্মাভিৰ্যৎ ন্যূনিতং তৎ তৈঃ সম্পূৰিতং|
18 அவர்கள் உங்களுடைய ஆவியை உற்சாகப்படுத்தியது போலவே, என்னுடைய ஆவியையும் உற்சாகப்படுத்தினார்கள். இப்படிப்பட்ட மனிதர்களை உயர்வாய் மதிக்கவேண்டும்.
১৮তৈ ৰ্যুষ্মাকং মম চ মনাংস্যাপ্যাযিতানি| তস্মাৎ তাদৃশা লোকা যুষ্মাভিঃ সম্মন্তৱ্যাঃ|
19 ஆசியா பகுதியிலுள்ள திருச்சபைகளும், உங்களுக்கும் வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள். ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும், அவர்களுடைய வீட்டில் கூடிவருகிற திருச்சபையோரும், கர்த்தருக்குள்ளான தங்கள் மனப்பூர்வமான வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள்.
১৯যুষ্মভ্যম্ আশিযাদেশস্থসমাজানাং নমস্কৃতিম্ আক্কিলপ্ৰিস্কিল্লযোস্তন্মণ্ডপস্থসমিতেশ্চ বহুনমস্কৃতিং প্ৰজানীত|
20 இங்குள்ள எல்லாச் சகோதரரும் உங்களுக்கு வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
২০সৰ্ৱ্ৱে ভ্ৰাতৰো যুষ্মান্ নমস্কুৰ্ৱ্ৱন্তে| যূযং পৱিত্ৰচুম্বনেন মিথো নমত|
21 பவுலாகிய நான், இந்த வாழ்த்துதலை என் சொந்தக் கையினாலேயே எழுதுகிறேன்.
২১পৌলোঽহং স্ৱকৰলিখিতং নমস্কৃতিং যুষ্মান্ ৱেদযে|
22 யாராவது கர்த்தரில் அன்பாயிருக்காவிட்டால், அவன் சபிக்கப்பட்டவன். கர்த்தாவே வாரும்!
২২যদি কশ্চিদ্ যীশুখ্ৰীষ্টে ন প্ৰীযতে তৰ্হি স শাপগ্ৰস্তো ভৱেৎ প্ৰভুৰাযাতি|
23 நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்களுடன் இருப்பதாக.
২৩অস্মাকং প্ৰভো ৰ্যীশুখ্ৰীষ্টস্যানুগ্ৰহো যুষ্মান্ প্ৰতি ভূযাৎ|
24 கிறிஸ்து இயேசுவில் இருக்கும் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆமென்.
২৪খ্ৰীষ্টং যীশুম্ আশ্ৰিতান্ যুষ্মান্ প্ৰতি মম প্ৰেম তিষ্ঠতু| ইতি||