< 1 கொரிந்தியர் 12 >
1 இப்பொழுது பிரியமானவர்களே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாமல் இருப்பதை நான் விரும்பவில்லை.
১হে ভ্ৰাতৰঃ, যূযং যদ্ আত্মিকান্ দাযান্ অনৱগতাস্তিষ্ঠথ তদহং নাভিলষামি|
2 நீங்கள் இறைவனை அறியாதவர்களாய் இருந்தபோது, ஏவப்பட்டபடியே பேசமுடியாத விக்கிரகங்களை வணங்கும்படிக்கு, தவறாக வழிநடத்தப்பட்டிருந்தீர்கள்.
২পূৰ্ৱ্ৱং ভিন্নজাতীযা যূযং যদ্ৱদ্ ৱিনীতাস্তদ্ৱদ্ অৱাক্প্ৰতিমানাম্ অনুগামিন আধ্বম্ ইতি জানীথ|
3 ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், இறைவனின் ஆவியானவரால் பேசுகிற யாரும், “இயேசு சபிக்கப்பட்டவர்” என்று சொல்லமாட்டான். அவ்வாறே பரிசுத்த ஆவியானவராலேயன்றி யாரும், “இயேசுவே கர்த்தர்” என்று அறிக்கை செய்யவுமாட்டான்.
৩ইতি হেতোৰহং যুষ্মভ্যং নিৱেদযামি, ঈশ্ৱৰস্যাত্মনা ভাষমাণঃ কোঽপি যীশুং শপ্ত ইতি ন ৱ্যাহৰতি, পুনশ্চ পৱিত্ৰেণাত্মনা ৱিনীতং ৱিনান্যঃ কোঽপি যীশুং প্ৰভুৰিতি ৱ্যাহৰ্ত্তুং ন শক্নোতি|
4 பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்படும் பல்வேறு வகையான ஆவிக்குரிய வரங்கள் உண்டு. ஆனால் ஆவியானவர் ஒருவரே அவற்றைக் கொடுக்கிறார்.
৪দাযা বহুৱিধাঃ কিন্ত্ৱেক আত্মা
5 இறைபணிகளும் பல்வேறு வகையானவை. ஆனால், ஒரே கர்த்தருக்கே அவற்றைச் செய்கிறோம்.
৫পৰিচৰ্য্যাশ্চ বহুৱিধাঃ কিন্ত্ৱেকঃ প্ৰভুঃ|
6 இறைசெயல்களும் பல்வேறு வகையானவை. ஆனால், இறைவன் ஒருவரே எல்லா மனிதரிலும், எல்லாவற்றையும் செயல்படுத்துகிறார்.
৬সাধনানি বহুৱিধানি কিন্তু সৰ্ৱ্ৱেষু সৰ্ৱ্ৱসাধক ঈশ্ৱৰ একঃ|
7 பொதுவான நன்மைக்காக, ஒவ்வொருவருக்கும் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடு கொடுக்கப்படுகிறது.
৭একৈকস্মৈ তস্যাত্মনো দৰ্শনং পৰহিতাৰ্থং দীযতে|
8 பரிசுத்த ஆவியானவர்மூலம் ஒருவருக்கு ஞானமுள்ள வார்த்தையை வெளிப்படுத்தும் வரமும், இன்னொருவருக்கு அதே ஆவியானவர்மூலம் அறிவை வெளிப்படுத்தும் வரமும் கொடுக்கப்படுகிறது.
৮একস্মৈ তেনাত্মনা জ্ঞানৱাক্যং দীযতে, অন্যস্মৈ তেনৈৱাত্মনাদিষ্টং ৱিদ্যাৱাক্যম্,
9 அதே ஆவியானவர் மூலமாக, மற்றொருவருக்கு விசுவாசம் கொடுக்கப்படுகிறது. அதே ஆவியானவர்மூலம், இன்னொருவருக்கு சுகமளிக்கும் வரங்கள் கொடுக்கப்படுகின்றன.
৯অন্যস্মৈ তেনৈৱাত্মনা ৱিশ্ৱাসঃ, অন্যস্মৈ তেনৈৱাত্মনা স্ৱাস্থ্যদানশক্তিঃ,
10 மற்றொருவருக்கு அற்புதங்களைச் செய்யும் வல்லமைகளும், வேறொருவருக்கு இறைவாக்கு உரைக்கவும், இன்னொருவருக்கு ஆவிகளைப் பகுத்தறியும் ஆற்றலும் கொடுக்கப்படுகின்றன. ஒருவருக்கும் ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்று மொழிகளும், மற்றொருவருக்கு அந்தப் பல்வகையான வேற்று மொழிகளை விளக்கிச்சொல்லும் ஆற்றலும் கொடுக்கப்படுகிறது.
১০অন্যস্মৈ দুঃসাধ্যসাধনশক্তিৰন্যস্মৈ চেশ্ৱৰীযাদেশঃ, অন্যস্মৈ চাতিমানুষিকস্যাদেশস্য ৱিচাৰসামৰ্থ্যম্, অন্যস্মৈ পৰভাষাভাষণশক্তিৰন্যস্মৈ চ ভাষাৰ্থভাষণসামৰ্যং দীযতে|
11 இவையெல்லாம், ஒரே ஆவியானவரின் செயல்பாடுகளே. அவர் தாம் தீர்மானிக்கிறபடியே, ஒவ்வொருவருக்கும் இவற்றைக் கொடுக்கிறார்.
১১একেনাদ্ৱিতীযেনাত্মনা যথাভিলাষম্ একৈকস্মৈ জনাযৈকৈকং দানং ৱিতৰতা তানি সৰ্ৱ্ৱাণি সাধ্যন্তে|
12 உடல் ஒன்று, ஆனாலும் அது பல உறுப்புகளால் ஆக்கப்பட்டிருக்கிறது. உடலின் உறுப்புகள் பலவாயினும், அது ஒரே உடல்தான். அதுபோலவே, கிறிஸ்துவும் ஒரே உடலாகவே இருக்கிறார்.
১২দেহ একঃ সন্নপি যদ্ৱদ্ বহ্ৱঙ্গযুক্তো ভৱতি, তস্যৈকস্য ৱপুষো ঽঙ্গানাং বহুৎৱেন যদ্ৱদ্ একং ৱপু ৰ্ভৱতি, তদ্ৱৎ খ্ৰীষ্টঃ|
13 நாம் யூதராகவோ, கிரேக்கராகவோ, அடிமைகளாகவோ, சுதந்திர உரிமை உள்ளவர்களாகவோ இருந்தாலும், எல்லோரும் ஒரே ஆவியானவராலே, ஒரே உடலுக்குள்ளாக திருமுழுக்கு பெற்றிருக்கிறோம். நாம் எல்லோரும் அனுபவிக்கும்படி, ஒரே ஆவியானவரே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறார்.
১৩যতো হেতো ৰ্যিহূদিভিন্নজাতীযদাসস্ৱতন্ত্ৰা ৱযং সৰ্ৱ্ৱে মজ্জনেনৈকেনাত্মনৈকদেহীকৃতাঃ সৰ্ৱ্ৱে চৈকাত্মভুক্তা অভৱাম|
14 ஏனெனில், உடல் ஒரு உறுப்பினால் மட்டும் ஆனதல்ல. அது பல உறுப்புகளைக் கொண்டது.
১৪একেনাঙ্গেন ৱপু ৰ্ন ভৱতি কিন্তু বহুভিঃ|
15 காலானது, நான் கையாக இல்லாததினால், நான் உடலுக்குச் சொந்தமல்ல என்று சொன்னால், அந்தக் காரணத்தினால் அது உடலுக்குச் சொந்தமாகாமல் போவதில்லை.
১৫তত্ৰ চৰণং যদি ৱদেৎ নাহং হস্তস্তস্মাৎ শৰীৰস্য ভাগো নাস্মীতি তৰ্হ্যনেন শৰীৰাৎ তস্য ৱিযোগো ন ভৱতি|
16 காதானது, “நான் கண்ணாக இல்லாததினால், நான் உடலுக்குச் சொந்தமல்ல” என்று சொன்னால், அந்தக் காரணத்தினாலும் அது உடலுக்குச் சொந்தமாகாமல் போகாது.
১৬শ্ৰোত্ৰং ৱা যদি ৱদেৎ নাহং নযনং তস্মাৎ শৰীৰস্যাংশো নাস্মীতি তৰ্হ্যনেন শৰীৰাৎ তস্য ৱিযোগো ন ভৱতি|
17 முழு உடலுமே ஒரு கண்ணாயிருக்குமானால், அந்த உடலுக்குக் கேட்கும் உணர்வு எங்கிருக்கும்? முழு உடலுமே ஒரு காதாய் இருக்குமானால், அதற்கு முகர்ந்து பார்க்கும் உணர்வு எங்கிருக்கும்?
১৭কৃৎস্নং শৰীৰং যদি দৰ্শনেন্দ্ৰিযং ভৱেৎ তৰ্হি শ্ৰৱণেন্দ্ৰিযং কুত্ৰ স্থাস্যতি? তৎ কৃৎস্নং যদি ৱা শ্ৰৱণেন্দ্ৰিযং ভৱেৎ তৰ্হি ঘ্ৰণেন্দ্ৰিযং কুত্ৰ স্থাস্যতি?
18 ஆனால், இறைவனோ தாம் விரும்பியபடியே, உடலின் ஒவ்வொரு உறுப்பையும், அதில் ஒரு அங்கமாக அமைத்திருக்கிறார்.
১৮কিন্ত্ৱিদানীম্ ঈশ্ৱৰেণ যথাভিলষিতং তথৈৱাঙ্গপ্ৰত্যঙ্গানাম্ একৈকং শৰীৰে স্থাপিতং|
19 முழு உடலுமே ஒரே உறுப்பாக மட்டும் இருக்குமானால், அது உடலாய் இருக்கமுடியாது.
১৯তৎ কৃৎস্নং যদ্যেকাঙ্গৰূপি ভৱেৎ তৰ্হি শৰীৰে কুত্ৰ স্থাস্যতি?
20 உறுப்புகள் பலவாய் இருப்பினும், உடல் ஒன்றாகவே இருக்கிறது.
২০তস্মাদ্ অঙ্গানি বহূনি সন্তি শৰীৰং ৎৱেকমেৱ|
21 எனவே கண்ணானது கையைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்லமுடியாது. அல்லது தலையானது காலைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்லமுடியாது.
২১অতএৱ ৎৱযা মম প্ৰযোজনং নাস্তীতি ৱাচং পাণিং ৱদিতুং নযনং ন শক্নোতি, তথা যুৱাভ্যাং মম প্ৰযোজনং নাস্তীতি মূৰ্দ্ধা চৰণৌ ৱদিতুং ন শক্নোতিঃ;
22 உண்மையாகவே, பலவீனமாய் காணப்படுகின்ற உடலின் உறுப்புகளே நமக்கு மிகவும் தேவையானவைகளாய் இருக்கின்றன.
২২ৱস্তুতস্তু ৱিগ্ৰহস্য যান্যঙ্গান্যস্মাভি ৰ্দুৰ্ব্বলানি বুধ্যন্তে তান্যেৱ সপ্ৰযোজনানি সন্তি|
23 உடலின் மதிப்புக்குறைந்த உறுப்புகள் என்று நாம் எவற்றை நினைக்கிறோமோ, அவற்றையே நாம் அதிக மதிப்புடன் பராமரிக்கிறோம். உடலில் மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் என நாம் எவற்றை எண்ணுகிறோமோ, அவற்றை அதிக கவனத்துடன் மறைத்துப் பராமரிக்கிறோம்.
২৩যানি চ শৰীৰমধ্যেঽৱমন্যানি বুধ্যতে তান্যস্মাভিৰধিকং শোভ্যন্তে| যানি চ কুদৃশ্যানি তানি সুদৃশ্যতৰাণি ক্ৰিযন্তে
24 அப்படியான விசேஷ பராமரிப்பு, உடலின் மறைந்திராத உறுப்புகளுக்குத் தேவையில்லை. ஆனால் இறைவனோ, மதிப்புக்குறைந்த உறுப்புகளுக்கு, அதிக மதிப்பைக் கொடுக்கும் வகையில் உடலின் உறுப்புகளை அமைத்திருக்கிறார்,
২৪কিন্তু যানি স্ৱযং সুদৃশ্যানি তেষাং শোভনম্ নিষ্প্ৰযোজনং|
25 ஆகவே உடலில் பிரிவினை இல்லாமல், உடலின் பல உறுப்புகளும் ஒன்றுக்கொன்று, ஒரேவிதமான அக்கறையுடன் இருக்கவேண்டும்.
২৫শৰীৰমধ্যে যদ্ ভেদো ন ভৱেৎ কিন্তু সৰ্ৱ্ৱাণ্যঙ্গানি যদ্ ঐক্যভাৱেন সৰ্ৱ্ৱেষাং হিতং চিন্তযন্তি তদৰ্থম্ ঈশ্ৱৰেণাপ্ৰধানম্ আদৰণীযং কৃৎৱা শৰীৰং ৱিৰচিতং|
26 உடலின் ஒரு உறுப்பு வேதனைப்படும்போது, எல்லா உறுப்புகளுமே வேதனைப்படுகின்றன; ஒரு உறுப்பு கனத்தைப் பெறும்போது, மற்றெல்லா உறுப்புகளுமே அதனுடன் மகிழ்ச்சியடைகின்றன.
২৬তস্মাদ্ একস্যাঙ্গস্য পীডাযাং জাতাযাং সৰ্ৱ্ৱাণ্যঙ্গানি তেন সহ পীড্যন্তে, একস্য সমাদৰে জাতে চ সৰ্ৱ্ৱাণি তেন সহ সংহৃষ্যন্তি|
27 இப்பொழுது, நீங்கள் கிறிஸ்துவின் உடலாய் இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும், அந்த உடலின் ஒரு பகுதியாய் இருக்கிறீர்கள்.
২৭যূযঞ্চ খ্ৰীষ্টস্য শৰীৰং, যুষ্মাকম্ একৈকশ্চ তস্যৈকৈকম্ অঙ্গং|
28 ஆகவேதான் திருச்சபையிலே, இறைவன் முதலாவதாக அப்போஸ்தலர்களையும், இரண்டாவதாக இறைவாக்கினர்களையும், மூன்றாவதாக ஆசிரியர்களையும் நியமித்தார். அதற்குப் பின்பு அற்புதங்களைச் செய்கிறவர்களையும், சுகம் கொடுக்கும் வரங்களைப் பெற்றவர்களையும் நியமித்தார். அத்துடன் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்களையும், நிர்வகிக்கும் வரங்களைப் பெற்றவர்களையும், பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்று மொழிகளைப் பேசுகிறவர்களையும் நியமித்தார்.
২৮কেচিৎ কেচিৎ সমিতাৱীশ্ৱৰেণ প্ৰথমতঃ প্ৰেৰিতা দ্ৱিতীযত ঈশ্ৱৰীযাদেশৱক্তাৰস্তৃতীযত উপদেষ্টাৰো নিযুক্তাঃ, ততঃ পৰং কেভ্যোঽপি চিত্ৰকাৰ্য্যসাধনসামৰ্থ্যম্ অনামযকৰণশক্তিৰুপকৃতৌ লোকশাসনে ৱা নৈপুণ্যং নানাভাষাভাষণসামৰ্থ্যং ৱা তেন ৱ্যতাৰি|
29 எல்லோரும் அப்போஸ்தலர்களா? எல்லோரும் இறைவாக்கினர்களா? அல்லது எல்லோரும் ஆசிரியர்களா? எல்லோரும் அற்புதங்களைச் செய்கிறார்களா?
২৯সৰ্ৱ্ৱে কিং প্ৰেৰিতাঃ? সৰ্ৱ্ৱে কিম্ ঈশ্ৱৰীযাদেশৱক্তাৰঃ? সৰ্ৱ্ৱে কিম্ উপদেষ্টাৰঃ? সৰ্ৱ্ৱে কিং চিত্ৰকাৰ্য্যসাধকাঃ?
30 எல்லோரும் சுகம் கொடுக்கும் வரங்களைப் பெற்றிருக்கிறார்களா? எல்லோரும் ஆவியானவரால் வேற்று மொழிகளைப் பேசுகிறார்களா? எல்லோரும் அவற்றை மொழிபெயர்க்கும் ஆற்றலுடையவர்களா? இல்லையே.
৩০সৰ্ৱ্ৱে কিম্ অনামযকৰণশক্তিযুক্তাঃ? সৰ্ৱ্ৱে কিং পৰভাষাৱাদিনঃ? সৰ্ৱ্ৱে ৱা কিং পৰভাষাৰ্থপ্ৰকাশকাঃ?
31 ஆனால், நீங்கள் ஒவ்வொருவரும் மேன்மையான வரங்களைப் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். இன்னும், நான் உங்களுக்கு அதிக மேன்மையான வழியைக் காண்பிக்கிறேன்.
৩১যূযং শ্ৰেষ্ঠদাযান্ লব্ধুং যতধ্ৱং| অনেন যূযং মযা সৰ্ৱ্ৱোত্তমমাৰ্গং দৰ্শযিতৱ্যাঃ|