< ఫిలిపినః 2 >

1 ఖ్రీష్టాద్ యది కిమపి సాన్త్వనం కశ్చిత్ ప్రేమజాతో హర్షః కిఞ్చిద్ ఆత్మనః సమభాగిత్వం కాచిద్ అనుకమ్పా కృపా వా జాయతే తర్హి యూయం మమాహ్లాదం పూరయన్త
ஆகவே, கிறிஸ்துவிற்குள் எந்தவொரு ஆறுதலும், அன்பினாலே எந்தவொரு தேறுதலும், ஆவியின் எந்தவொரு ஐக்கியமும், எந்தவொரு உருக்கமான பரிவும் இரக்கங்களும் உண்டானால்,
2 ఏకభావా ఏకప్రేమాణ ఏకమనస ఏకచేష్టాశ్చ భవత|
நீங்கள் ஒரே சிந்தையும் ஒரே அன்பும் உள்ளவர்களாக இருந்து, இசைந்த ஆத்துமாக்களாக ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.
3 విరోధాద్ దర్పాద్ వా కిమపి మా కురుత కిన్తు నమ్రతయా స్వేభ్యోఽపరాన్ విశిష్టాన్ మన్యధ్వం|
ஒன்றையும் சுயநலத்தினாலோ, வீண்பெருமையினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் உங்களைவிட மேன்மையானவர்களாக நினைக்கவேண்டும்.
4 కేవలమ్ ఆత్మహితాయ న చేష్టమానాః పరహితాయాపి చేష్టధ్వం|
அவனவன் தன்னுடைய காரியங்களை மட்டுமல்ல, மற்றவர்களுடைய காரியங்களிலும் உதவிசெய்யவேண்டும்.
5 ఖ్రీష్టస్య యీశో ర్యాదృశః స్వభావో యుష్మాకమ్ అపి తాదృశో భవతు|
கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே உங்களுக்கும் இருக்கவேண்டும்;
6 స ఈశ్వరరూపీ సన్ స్వకీయామ్ ఈశ్వరతుల్యతాం శ్లాఘాస్పదం నామన్యత,
அவர் தேவனுடைய உருவமாக இருந்தும், தேவனுக்குச் சமமாக இருப்பதைக் கொள்ளையாடின பொருளாக நினைக்காமல்,
7 కిన్తు స్వం శూన్యం కృత్వా దాసరూపీ బభూవ నరాకృతిం లేభే చ|
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் உருவமெடுத்து, மனிதனின் சாயல் ஆனார்.
8 ఇత్థం నరమూర్త్తిమ్ ఆశ్రిత్య నమ్రతాం స్వీకృత్య మృత్యోరర్థతః క్రుశీయమృత్యోరేవ భోగాయాజ్ఞాగ్రాహీ బభూవ|
அவர் மனித உருவமாக வெளிப்பட்டு, மரணம்வரைக்கும், அதாவது சிலுவையின் மரணம்வரைக்கும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
9 తత్కారణాద్ ఈశ్వరోఽపి తం సర్వ్వోన్నతం చకార యచ్చ నామ సర్వ్వేషాం నామ్నాం శ్రేష్ఠం తదేవ తస్మై దదౌ,
ஆகவே, தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
10 తతస్తస్మై యీశునామ్నే స్వర్గమర్త్యపాతాలస్థితైః సర్వ్వై ర్జానుపాతః కర్త్తవ్యః,
௧0இயேசுவின் நாமத்தில் வானத்தில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும், பூமியின் கீழ் உள்ளவைகளுடைய முழங்கால்கள் எல்லாம் முடங்கும்படிக்கும்,
11 తాతస్థేశ్వరస్య మహిమ్నే చ యీశుఖ్రీష్టః ప్రభురితి జిహ్వాభిః స్వీకర్త్తవ్యం|
௧௧பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்துவே கர்த்தர் என்று நாக்குகளெல்லாம் அறிக்கைபண்ணுவதற்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
12 అతో హే ప్రియతమాః, యుష్మాభి ర్యద్వత్ సర్వ్వదా క్రియతే తద్వత్ కేవలే మమోపస్థితికాలే తన్నహి కిన్త్విదానీమ్ అనుపస్థితేఽపి మయి బహుతరయత్నేనాజ్ఞాం గృహీత్వా భయకమ్పాభ్యాం స్వస్వపరిత్రాణం సాధ్యతాం|
௧௨ஆகவே, எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்கு அருகில் இருக்கும்பொழுது மட்டுமில்லை, நான் தூரத்தில் இருக்கும்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்களுடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
13 యత ఈశ్వర ఏవ స్వకీయానురోధాద్ యుష్మన్మధ్యే మనస్కామనాం కర్మ్మసిద్ధిఞ్చ విదధాతి|
௧௩ஏனென்றால், தேவனே தம்முடைய தயவுள்ள விருப்பத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராக இருக்கிறார்.
14 యూయం కలహవివాదర్విజతమ్ ఆచారం కుర్వ్వన్తోఽనిన్దనీయా అకుటిలా
௧௪நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதும் இல்லை என்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,
15 ఈశ్వరస్య నిష్కలఙ్కాశ్చ సన్తానాఇవ వక్రభావానాం కుటిలాచారిణాఞ్చ లోకానాం మధ్యే తిష్ఠత,
௧௫கோணலும் மாறுபாடுமான வம்சத்தின் நடுவிலே குற்றம் இல்லாதவர்களும் கபடு இல்லாதவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாக இருப்பதற்கு,
16 యతస్తేషాం మధ్యే యూయం జీవనవాక్యం ధారయన్తో జగతో దీపకా ఇవ దీప్యధ్వే| యుష్మాభిస్తథా కృతే మమ యత్నః పరిశ్రమో వా న నిష్ఫలో జాత ఇత్యహం ఖ్రీష్టస్య దినే శ్లాఘాం కర్త్తుం శక్ష్యామి|
௧௬எல்லாவற்றையும் முறுமுறுப்பு இல்லாமலும் வாக்குவாதம் இல்லாமலும் செய்யுங்கள்.
17 యుష్మాకం విశ్వాసార్థకాయ బలిదానాయ సేవనాయ చ యద్యప్యహం నివేదితవ్యో భవేయం తథాపి తేనానన్దామి సర్వ్వేషాం యుష్మాకమ్ ఆనన్దస్యాంశీ భవామి చ|
௧௭மேலும், உங்களுடைய விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் பானபலியாக வார்க்கப்பட்டுப் போனாலும், நான் மகிழ்ந்து, உங்கள் அனைவரோடும் சேர்ந்து சந்தோஷப்படுவேன்.
18 తద్వద్ యూయమప్యానన్దత మదీయానన్దస్యాంశినో భవత చ|
௧௮இதினால் நீங்களும் மகிழ்ந்து, என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்.
19 యుష్మాకమ్ అవస్థామ్ అవగత్యాహమపి యత్ సాన్త్వనాం ప్రాప్నుయాం తదర్థం తీమథియం త్వరయా యుష్మత్సమీపం ప్రేషయిష్యామీతి ప్రభౌ ప్రత్యాశాం కుర్వ్వే|
௧௯அன்றியும், நானும் உங்களுடைய செய்திகளைத் தெரிந்து மன ஆறுதல் அடைவதற்குச் சீக்கிரமாகத் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பலாம் என்று கர்த்தராகிய இயேசுவிற்குள் நம்பியிருக்கிறேன்.
20 యః సత్యరూపేణ యుష్మాకం హితం చిన్తయతి తాదృశ ఏకభావస్తస్మాదన్యః కోఽపి మమ సన్నిధౌ నాస్తి|
௨0ஆகவே, உங்களுடைய காரியங்களை உண்மையாகக் கவனிப்பதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனைத்தவிர வேறுயாரும் என்னிடம் இல்லை.
21 యతోఽపరే సర్వ్వే యీశోః ఖ్రీష్టస్య విషయాన్ న చిన్తయన్త ఆత్మవిషయాన్ చిన్తయన్తి|
௨௧மற்ற எல்லோரும் கிறிஸ்து இயேசுவிற்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.
22 కిన్తు తస్య పరీక్షితత్వం యుష్మాభి ర్జ్ఞాయతే యతః పుత్రో యాదృక్ పితుః సహకారీ భవతి తథైవ సుసంవాదస్య పరిచర్య్యాయాం స మమ సహకారీ జాతః|
௨௨தகப்பனுக்குப் பிள்ளை ஊழியம் செய்வதுபோல, அவன் என்னோடு சேர்ந்து நற்செய்திக்காக ஊழியம் செய்தான் என்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.
23 అతఏవ మమ భావిదశాం జ్ఞాత్వా తత్క్షణాత్ తమేవ ప్రేషయితుం ప్రత్యాశాం కుర్వ్వే
௨௩ஆகவே, என் காரியங்கள் எப்படி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறேன்.
24 స్వయమ్ అహమపి తూర్ణం యుష్మత్సమీపం గమిష్యామీత్యాశాం ప్రభునా కుర్వ్వే|
௨௪அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேன் என்று கர்த்தருக்குள் விசுவாசமாக இருக்கிறேன்.
25 అపరం య ఇపాఫ్రదీతో మమ భ్రాతా కర్మ్మయుద్ధాభ్యాం మమ సహాయశ్చ యుష్మాకం దూతో మదీయోపకారాయ ప్రతినిధిశ్చాస్తి యుష్మత్సమీపే తస్య ప్రేషణమ్ ఆవశ్యకమ్ అమన్యే|
௨௫மேலும், என் சகோதரனும், உடன்வேலைக்காரனும், கிறிஸ்துவின் படைவீரனும், உங்களுடைய தூதுவனாகவும், என்னுடைய குறைவில் உதவி செய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடம் அனுப்பவேண்டும் என்று நினைத்தேன்.
26 యతః స యుష్మాన్ సర్వ్వాన్ అకాఙ్క్షత యుష్మాభిస్తస్య రోగస్య వార్త్తాశ్రావీతి బుద్ధ్వా పర్య్యశోచచ్చ|
௨௬அவன் உங்கள் எல்லோர்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே அதிக மனச்சோர்வு அடைந்தவனாகவும் இருக்கிறான்.
27 స పీడయా మృతకల్పోఽభవదితి సత్యం కిన్త్వీశ్వరస్తం దయితవాన్ మమ చ దుఃఖాత్ పరం పునర్దుఃఖం యన్న భవేత్ తదర్థం కేవలం తం న దయిత్వా మామపి దయితవాన్|
௨௭அவன் வியாதிப்பட்டு மரணத்திற்கு அருகில் இருந்தது உண்மைதான். ஆனாலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமட்டுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடி, எனக்கும் இரங்கினார்.
28 అతఏవ యూయం తం విలోక్య యత్ పునరానన్దేత మమాపి దుఃఖస్య హ్రాసో యద్ భవేత్ తదర్థమ్ అహం త్వరయా తమ్ అప్రేషయం|
௨௮ஆகவே, நீங்கள் அவனை மீண்டும் பார்த்து சந்தோஷப்படவும், என் துக்கம் குறையவும், அவனை சீக்கிரமாக அனுப்பினேன்.
29 అతో యూయం ప్రభోః కృతే సమ్పూర్ణేనానన్దేన తం గృహ్లీత తాదృశాన్ లోకాంశ్చాదరణీయాన్ మన్యధ్వం|
௨௯ஆனபடியால் நீங்கள் கர்த்தருக்குள் அதிகமான சந்தோஷத்தோடு அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனம்பண்ணுங்கள்.
30 యతో మమ సేవనే యుష్మాకం త్రుటిం పూరయితుం స ప్రాణాన్ పణీకృత్య ఖ్రీష్టస్య కార్య్యార్థం మృతప్రాయేఽభవత్|
௩0ஏனென்றால், நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்களுடைய குறைவை நிறைவாக்குவதற்கு, அவன் தன் உயிரையும் பெரிதாக நினைக்காமல், கிறிஸ்துவின் ஊழியத்திற்காக மரணத்திற்கு அருகில் இருந்தான்.

< ఫిలిపినః 2 >