< మథిః 3 >
1 తదానోం యోహ్న్నామా మజ్జయితా యిహూదీయదేశస్య ప్రాన్తరమ్ ఉపస్థాయ ప్రచారయన్ కథయామాస,
அந்நாட்களில் யோவான் ஸ்நானகன் யூதேயாவின் பாலைவனப் பகுதியில் வந்து,
2 మనాంసి పరావర్త్తయత, స్వర్గీయరాజత్వం సమీపమాగతమ్|
“மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபித்திருக்கிறது” எனப் பிரசங்கித்தான்.
3 పరమేశస్య పన్థానం పరిష్కురుత సర్వ్వతః| తస్య రాజపథాంశ్చైవ సమీకురుత సర్వ్వథా| ఇత్యేతత్ ప్రాన్తరే వాక్యం వదతః కస్యచిద్ రవః||
“‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்காக பாதைகளை நேராக்குங்கள்’ என்று பாலைவனத்தில் ஒரு குரல் கூப்பிடுகிறது,” என்று இறைவாக்கினன் ஏசாயாவின் மூலம் கூறப்பட்டவன் இவனே.
4 ఏతద్వచనం యిశయియభవిష్యద్వాదినా యోహనముద్దిశ్య భాషితమ్| యోహనో వసనం మహాఙ్గరోమజం తస్య కటౌ చర్మ్మకటిబన్ధనం; స చ శూకకీటాన్ మధు చ భుక్తవాన్|
யோவானின் உடைகள் ஒட்டக முடியினால், செய்யப்பட்டிருந்தன. அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான். அவனது உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனுமாய் இருந்தது.
5 తదానీం యిరూశాలమ్నగరనివాసినః సర్వ్వే యిహూదిదేశీయా యర్ద్దన్తటిన్యా ఉభయతటస్థాశ్చ మానవా బహిరాగత్య తస్య సమీపే
மக்கள் எருசலேமிலிருந்தும், யூதேயா முழுவதிலிருந்தும், யோர்தான் பகுதி முழுவதிலிருந்தும் அவனிடம் சென்றார்கள்.
6 స్వీయం స్వీయం దురితమ్ అఙ్గీకృత్య తస్యాం యర్ద్దని తేన మజ్జితా బభూవుః|
அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் ஆற்றிலே அவனால் திருமுழுக்கு பெற்றார்கள்.
7 అపరం బహూన్ ఫిరూశినః సిదూకినశ్చ మనుజాన్ మంక్తుం స్వసమీపమ్ ఆగచ్ఛ్తో విలోక్య స తాన్ అభిదధౌ, రే రే భుజగవంశా ఆగామీనః కోపాత్ పలాయితుం యుష్మాన్ కశ్చేతితవాన్?
அப்பொழுது, அநேக பரிசேயரும் சதுசேயரும் திருமுழுக்கு கொடுக்கும் இடத்திற்கு வருவதை யோவான் கண்டு அவர்களிடம் சொன்னதாவது: “விரியன் பாம்புக் குட்டிகளே! வரப்போகும் கடுங்கோபத்திலிருந்து தப்பியோடும்படி உங்களை எச்சரித்தது யார்?
8 మనఃపరావర్త్తనస్య సముచితం ఫలం ఫలత|
நீங்கள் மனந்திரும்பியிருந்தால், அதற்கேற்ற கனியைக் காண்பியுங்கள்.
9 కిన్త్వస్మాకం తాత ఇబ్రాహీమ్ అస్తీతి స్వేషు మనఃసు చీన్తయన్తో మా వ్యాహరత| యతో యుష్మాన్ అహం వదామి, ఈశ్వర ఏతేభ్యః పాషాణేభ్య ఇబ్రాహీమః సన్తానాన్ ఉత్పాదయితుం శక్నోతి|
‘ஆபிரகாம் எங்களுக்கு தகப்பனாக இருக்கிறார்’ என்று உங்களால் சொல்லமுடியும் என நினைக்கவேண்டாம். இந்தக் கற்களிலிருந்துங்கூட ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்க இறைவனால் முடியும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
10 అపరం పాదపానాం మూలే కుఠార ఇదానీమపి లగన్ ఆస్తే, తస్మాద్ యస్మిన్ పాదపే ఉత్తమం ఫలం న భవతి, స కృత్తో మధ్యేఽగ్నిం నిక్షేప్స్యతే|
கோடாரி ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டுள்ளது, நல்ல கனிகொடாத ஒவ்வொரு மரமும் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும்.
11 అపరమ్ అహం మనఃపరావర్త్తనసూచకేన మజ్జనేన యుష్మాన్ మజ్జయామీతి సత్యం, కిన్తు మమ పశ్చాద్ య ఆగచ్ఛతి, స మత్తోపి మహాన్, అహం తదీయోపానహౌ వోఢుమపి నహి యోగ్యోస్మి, స యుష్మాన్ వహ్నిరూపే పవిత్ర ఆత్మని సంమజ్జయిష్యతి|
“நான் மனந்திரும்புதலுக்கென்று தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன். ஆனால் என்னிலும் வல்லமையுள்ளவர் எனக்குப்பின் வருகிறார். அவரது பாதரட்சைகளைச் சுமக்கக்கூட நான் தகுதியற்றவன். அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியாலும் திருமுழுக்கு கொடுப்பார்.
12 తస్య కారే సూర్ప ఆస్తే, స స్వీయశస్యాని సమ్యక్ ప్రస్ఫోట్య నిజాన్ సకలగోధూమాన్ సంగృహ్య భాణ్డాగారే స్థాపయిష్యతి, కింన్తు సర్వ్వాణి వుషాణ్యనిర్వ్వాణవహ్నినా దాహయిష్యతి|
அவர் தமது கரத்தில் தூற்றுக்கூடை ஏந்தி, தமது களத்தைச் சுத்தம் செய்வார். அவர் தன் தானியங்களை களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணைந்து போகாத நெருப்பில் எரித்துப்போடுவார்” என்றான்.
13 అనన్తరం యీశు ర్యోహనా మజ్జితో భవితుం గాలీల్ప్రదేశాద్ యర్ద్దని తస్య సమీపమ్ ఆజగామ|
அப்பொழுது இயேசு, கலிலேயாவிலிருந்து யோவானால் திருமுழுக்கு பெறும்படி யோர்தானுக்கு வந்தார்.
14 కిన్తు యోహన్ తం నిషిధ్య బభాషే, త్వం కిం మమ సమీపమ్ ఆగచ్ఛసి? వరం త్వయా మజ్జనం మమ ప్రయోజనమ్ ఆస్తే|
ஆனால் யோவான் அவரிடம், “நான் உம்மிடம் திருமுழுக்கு பெற வேண்டியிருக்க, நீர் என்னிடம் வருகிறீரா?” என்று சொல்லி, அவரைத் தடுக்க முயற்சித்தான்.
15 తదానీం యీశుః ప్రత్యవోచత్; ఈదానీమ్ అనుమన్యస్వ, యత ఇత్థం సర్వ్వధర్మ్మసాధనమ్ అస్మాకం కర్త్తవ్యం, తతః సోఽన్వమన్యత|
அதற்கு இயேசு, “இப்பொழுது இடங்கொடு; இவ்விதமாக எல்லா நீதியையும் முழுவதுமாய் நிறைவேற்றுவது நமக்குத் தகுதியாய் இருக்கிறது” எனப் பதிலளித்தார். அப்பொழுது யோவான் அதற்கு ஒப்புக்கொண்டான்.
16 అనన్తరం యీశురమ్మసి మజ్జితుః సన్ తత్క్షణాత్ తోయమధ్యాద్ ఉత్థాయ జగామ, తదా జీమూతద్వారే ముక్తే జాతే, స ఈశ్వరస్యాత్మానం కపోతవద్ అవరుహ్య స్వోపర్య్యాగచ్ఛన్తం వీక్షాఞ్చక్రే|
இயேசு திருமுழுக்கு பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே பரலோகம் திறக்கப்பட்டு, இறைவனின் ஆவியானவர் ஒரு புறாவைப்போன்று இறங்கி, அவர்மேல் அமர்வதைக் கண்டார்.
17 అపరమ్ ఏష మమ ప్రియః పుత్ర ఏతస్మిన్నేవ మమ మహాసన్తోష ఏతాదృశీ వ్యోమజా వాగ్ బభూవ|
அப்பொழுது பரலோகத்திலிருந்து ஒரு குரல், “இவர் என் மகன், நான் இவரில் அன்பாயிருக்கிறேன்; இவரில் நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்” என்று உரைத்தது.