< మథిః 18 >

1 తదానీం శిష్యా యీశోః సమీపమాగత్య పృష్టవన్తః స్వర్గరాజ్యే కః శ్రేష్ఠః?
அந்த நேரத்திலே சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாக இருப்பான் என்று கேட்டார்கள்.
2 తతో యీశుః క్షుద్రమేకం బాలకం స్వసమీపమానీయ తేషాం మధ్యే నిధాయ జగాద,
இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி:
3 యుష్మానహం సత్యం బ్రవీమి, యూయం మనోవినిమయేన క్షుద్రబాలవత్ న సన్తః స్వర్గరాజ్యం ప్రవేష్టుం న శక్నుథ|
நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல மாறாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
4 యః కశ్చిద్ ఏతస్య క్షుద్రబాలకస్య సమమాత్మానం నమ్రీకరోతి, సఏవ స్వర్గరాజయే శ్రేష్ఠః|
ஆகவே, இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாக இருப்பான்.
5 యః కశ్చిద్ ఏతాదృశం క్షుద్రబాలకమేకం మమ నామ్ని గృహ్లాతి, స మామేవ గృహ్లాతి|
இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்.
6 కిన్తు యో జనో మయి కృతవిశ్వాసానామేతేషాం క్షుద్రప్రాణినామ్ ఏకస్యాపి విధ్నిం జనయతి, కణ్ఠబద్ధపేషణీకస్య తస్య సాగరాగాధజలే మజ్జనం శ్రేయః|
என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாக இருக்கும்.
7 విఘ్నాత్ జగతః సన్తాపో భవిష్యతి, విఘ్నోఽవశ్యం జనయిష్యతే, కిన్తు యేన మనుజేన విఘ్నో జనిష్యతే తస్యైవ సన్తాపో భవిష్యతి|
இடறல்களினிமித்தம் உலகத்திற்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனிதனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
8 తస్మాత్ తవ కరశ్చరణో వా యది త్వాం బాధతే, తర్హి తం ఛిత్త్వా నిక్షిప, ద్వికరస్య ద్విపదస్య వా తవానప్తవహ్నౌ నిక్షేపాత్, ఖఞ్జస్య వా ఛిన్నహస్తస్య తవ జీవనే ప్రవేశో వరం| (aiōnios g166)
உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாக, அல்லது இரண்டு காலுடையவனாக நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைவிட, முடவனாக, அல்லது ஊனனாக, நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (aiōnios g166)
9 అపరం తవ నేత్రం యది త్వాం బాధతే, తర్హి తదప్యుత్పావ్య నిక్షిప, ద్వినేత్రస్య నరకాగ్నౌ నిక్షేపాత్ కాణస్య తవ జీవనే ప్రవేశో వరం| (Geenna g1067)
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாக எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
10 తస్మాదవధద్ధం, ఏతేషాం క్షుద్రప్రాణినామ్ ఏకమపి మా తుచ్ఛీకురుత,
௧0இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அற்பமாக எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
11 యతో యుష్మానహం తథ్యం బ్రవీమి, స్వర్గే తేషాం దూతా మమ స్వర్గస్థస్య పితురాస్యం నిత్యం పశ్యన్తి| ఏవం యే యే హారితాస్తాన్ రక్షితుం మనుజపుత్ర ఆగచ్ఛత్|
௧௧மனிதகுமாரன் இழந்துபோனதை இரட்சிக்க வந்தார்.
12 యూయమత్ర కిం వివింగ్ఘ్వే? కస్యచిద్ యది శతం మేషాః సన్తి, తేషామేకో హార్య్యతే చ, తర్హి స ఏకోనశతం మేషాన్ విహాయ పర్వ్వతం గత్వా తం హారితమేకం కిం న మృగయతే?
௧௨உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று காணாமற்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப்போய் காணாமற்போனதைத் தேடாமலிருப்பானோ?
13 యది చ కదాచిత్ తన్మేషోద్దేశం లమతే, తర్హి యుష్మానహం సత్యం కథయామి, సోఽవిపథగామిభ్య ఏకోనశతమేషేభ్యోపి తదేకహేతోరధికమ్ ఆహ్లాదతే|
௧௩அவன் அதைக் கண்டுபிடித்தால், காணாமல்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறதைவிட, அந்த ஒன்றைக்குறித்து அதிக மகிழ்ச்சியாக இருப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
14 తద్వద్ ఏతేషాం క్షుద్రప్రాఏనామ్ ఏకోపి నశ్యతీతి యుష్మాకం స్వర్గస్థపితు ర్నాభిమతమ్|
௧௪இவ்விதமாக, இந்தச் சிறியவரில் ஒருவன்கூட, அழிந்துபோவது பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவின் விருப்பமல்ல.
15 యద్యపి తవ భ్రాతా త్వయి కిమప్యపరాధ్యతి, తర్హి గత్వా యువయోర్ద్వయోః స్థితయోస్తస్యాపరాధం తం జ్ఞాపయ| తత్ర స యది తవ వాక్యం శృణోతి, తర్హి త్వం స్వభ్రాతరం ప్రాప్తవాన్,
௧௫உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனிமையாக இருக்கும்போது, அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.
16 కిన్తు యది న శృణోతి, తర్హి ద్వాభ్యాం త్రిభి ర్వా సాక్షీభిః సర్వ్వం వాక్యం యథా నిశ్చితం జాయతే, తదర్థమ్ ఏకం ద్వౌ వా సాక్షిణౌ గృహీత్వా యాహి|
௧௬அவன் செவிகொடுக்காமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய ஒப்புதல்களினாலே காரியங்களெல்லாம் உறுதிப்படும்படி இரண்டொருவரை உன்னுடனே அழைத்துக்கொண்டு போ.
17 తేన స యది తయో ర్వాక్యం న మాన్యతే, తర్హి సమాజం తజ్జ్ఞాపయ, కిన్తు యది సమాజస్యాపి వాక్యం న మాన్యతే, తర్హి స తవ సమీపే దేవపూజకఇవ చణ్డాలఇవ చ భవిష్యతి|
௧௭அவர்களுக்கும் அவன் செவிகொடுக்காமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடுக்காமற்போனால், அவன் உனக்கு வேறுமார்க்கத்தான்போலவும் வரி வசூலிப்பவனைப்போலவும் இருப்பானாக.
18 అహం యుష్మాన్ సత్యం వదామి, యుష్మాభిః పృథివ్యాం యద్ బధ్యతే తత్ స్వర్గే భంత్స్యతే; మేదిన్యాం యత్ భోచ్యతే, స్వర్గేఽపి తత్ మోక్ష్యతే|
௧௮உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
19 పునరహం యుష్మాన్ వదామి, మేదిన్యాం యుష్మాకం యది ద్వావేకవాక్యీభూయ కిఞ్చిత్ ప్రార్థయేతే, తర్హి మమ స్వర్గస్థపిత్రా తత్ తయోః కృతే సమ్పన్నం భవిష్యతి|
௧௯அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாவது பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
20 యతో యత్ర ద్వౌ త్రయో వా మమ నాన్ని మిలన్తి, తత్రైవాహం తేషాం మధ్యేఽస్మి|
௨0ஏனென்றால், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
21 తదానీం పితరస్తత్సమీపమాగత్య కథితవాన్ హే ప్రభో, మమ భ్రాతా మమ యద్యపరాధ్యతి, తర్హి తం కతికృత్వః క్షమిష్యే?
௨௧அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்துவந்தால், நான் எத்தனைமுறை மன்னிக்கவேண்டும்? ஏழுமுறை மட்டுமோ என்று கேட்டான்.
22 కిం సప్తకృత్వః? యీశుస్తం జగాద, త్వాం కేవలం సప్తకృత్వో యావత్ న వదామి, కిన్తు సప్తత్యా గుణితం సప్తకృత్వో యావత్|
௨௨அதற்கு இயேசு: ஏழுமுறை மாத்திரமல்ல, ஏழெழுபதுமுறைமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
23 అపరం నిజదాసైః సహ జిగణయిషుః కశ్చిద్ రాజేవ స్వర్గరాజయం|
௨௩எப்படியென்றால், பரலோகராஜ்யம் தன் வேலைக்காரர்களிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது.
24 ఆరబ్ధే తస్మిన్ గణనే సార్ద్ధసహస్రముద్రాపూరితానాం దశసహస్రపుటకానామ్ ఏకోఽఘమర్ణస్తత్సమక్షమానాయి|
௨௪அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பத்தாயிரம் வெள்ளிப்பணம் கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.
25 తస్య పరిశోధనాయ ద్రవ్యాభావాత్ పరిశోధనార్థం స తదీయభార్య్యాపుత్రాదిసర్వ్వస్వఞ్చ విక్రీయతామితి తత్ప్రభురాదిదేశ|
௨௫கடனைத்தீர்க்க அவனால் முடியாதபடியால், அவனுடைய எஜமான் அவனையும் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும், அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் விற்று, கடனைத்தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.
26 తేన స దాసస్తస్య పాదయోః పతన్ ప్రణమ్య కథితవాన్, హే ప్రభో భవతా ఘైర్య్యే కృతే మయా సర్వ్వం పరిశోధిష్యతే|
௨௬அப்பொழுது, அந்த வேலைக்காரன் காலில் விழுந்து வணங்கி: எஜமானனே! என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத்தீர்க்கிறேன் என்றான்.
27 తదానీం దాసస్య ప్రభుః సకరుణః సన్ సకలర్ణం క్షమిత్వా తం తత్యాజ|
௨௭அந்த வேலைக்காரனுடைய எஜமான் மனமிரங்கி, அவனை விடுதலைசெய்து, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.
28 కిన్తు తస్మిన్ దాసే బహి ర్యాతే, తస్య శతం ముద్రాచతుర్థాంశాన్ యో ధారయతి, తం సహదాసం దృష్ద్వా తస్య కణ్ఠం నిష్పీడ్య గదితవాన్, మమ యత్ ప్రాప్యం తత్ పరిశోధయ|
௨௮அப்படியிருக்க, அந்த வேலைக்காரன் புறப்பட்டுப்போகும்போது, தன்னிடத்தில் நூறு வெள்ளிக்காசுகள் கடன்பட்டிருந்தவனாகிய தன்னுடைய உடன்வேலைக்காரர்களில் ஒருவனைப் பார்த்து, அவனைப் பிடித்து, கழுத்தை நெரித்து: நீ வாங்கின கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.
29 తదా తస్య సహదాసస్తత్పాదయోః పతిత్వా వినీయ బభాషే, త్వయా ధైర్య్యే కృతే మయా సర్వ్వం పరిశోధిష్యతే|
௨௯அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.
30 తథాపి స తత్ నాఙగీకృత్య యావత్ సర్వ్వమృణం న పరిశోధితవాన్ తావత్ తం కారాయాం స్థాపయామాస|
௩0அவனோ சம்மதிக்காமல், போய், அவன் வாங்கின கடனைக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் அவனைச் சிறைச்சாலையில் வைத்தான்.
31 తదా తస్య సహదాసాస్తస్యైతాదృగ్ ఆచరణం విలోక్య ప్రభోః సమీపం గత్వా సర్వ్వం వృత్తాన్తం నివేదయామాసుః|
௩௧நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர்கள் பார்த்து, மிகவும் துக்கப்பட்டு, எஜமானிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.
32 తదా తస్య ప్రభుస్తమాహూయ జగాద, రే దుష్ట దాస, త్వయా మత్సన్నిధౌ ప్రార్థితే మయా తవ సర్వ్వమృణం త్యక్తం;
௩௨அப்பொழுது அவனுடைய எஜமான் அவனை அழைப்பித்து: பொல்லாத வேலைக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.
33 యథా చాహం త్వయి కరుణాం కృతవాన్, తథైవ త్వత్సహదాసే కరుణాకరణం కిం తవ నోచితం?
௩௩நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,
34 ఇతి కథయిత్వా తస్య ప్రభుః క్రుద్ధ్యన్ నిజప్రాప్యం యావత్ స న పరిశోధితవాన్, తావత్ ప్రహారకానాం కరేషు తం సమర్పితవాన్|
௩௪அவனுடைய எஜமான் கோபமடைந்து, அவன் வாங்கின கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் தண்டிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
35 యది యూయం స్వాన్తఃకరణైః స్వస్వసహజానామ్ అపరాధాన్ న క్షమధ్వే, తర్హి మమ స్వర్గస్యః పితాపి యుష్మాన్ ప్రతీత్థం కరిష్యతి|
௩௫நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாக மன்னிக்காமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

< మథిః 18 >