< మథిః 15 >

1 అపరం యిరూశాలమ్నగరీయాః కతిపయా అధ్యాపకాః ఫిరూశినశ్చ యీశోః సమీపమాగత్య కథయామాసుః,
அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் இயேசுவினிடத்தில் வந்து:
2 తవ శిష్యాః కిమర్థమ్ అప్రక్షాలితకరై ర్భక్షిత్వా పరమ్పరాగతం ప్రాచీనానాం వ్యవహారం లఙ్వన్తే?
உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் சாப்பிடுகிறார்களே! என்றார்கள்.
3 తతో యీశుః ప్రత్యువాచ, యూయం పరమ్పరాగతాచారేణ కుత ఈశ్వరాజ్ఞాం లఙ్వధ్వే|
அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
4 ఈశ్వర ఇత్యాజ్ఞాపయత్, త్వం నిజపితరౌ సంమన్యేథాః, యేన చ నిజపితరౌ నిన్ద్యేతే, స నిశ్చితం మ్రియేత;
உன் தகப்பனையும் உன் தாயையும் மதித்து நடப்பாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கட்டளை கொடுத்திருக்கிறாரே.
5 కిన్తు యూయం వదథ, యః స్వజనకం స్వజననీం వా వాక్యమిదం వదతి, యువాం మత్తో యల్లభేథే, తత్ న్యవిద్యత,
நீங்களோ, எவனாவது தகப்பனையாவது தாயையாவது பார்த்து உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதை தேவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது மதிக்காமற்போனாலும், அவனுடைய கடமை முடிந்ததென்று போதித்து,
6 స నిజపితరౌ పున ర్న సంమంస్యతే| ఇత్థం యూయం పరమ్పరాగతేన స్వేషామాచారేణేశ్వరీయాజ్ఞాం లుమ్పథ|
உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை அவமாக்கிவருகிறீர்கள்.
7 రే కపటినః సర్వ్వే యిశయియో యుష్మానధి భవిష్యద్వచనాన్యేతాని సమ్యగ్ ఉక్తవాన్|
மாயக்காரர்களே, உங்களைக்குறித்து:
8 వదనై ర్మనుజా ఏతే సమాయాన్తి మదన్తికం| తథాధరై ర్మదీయఞ్చ మానం కుర్వ్వన్తి తే నరాః|
இந்த மக்கள் தங்களுடைய உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து, தங்களுடைய உதடுகளினால் என்னை மதிக்கிறார்கள்; அவர்கள் இருதயமோ என்னைவிட்டு தூரமாக விலகியிருக்கிறது;
9 కిన్తు తేషాం మనో మత్తో విదూరఏవ తిష్ఠతి| శిక్షయన్తో విధీన్ న్రాజ్ఞా భజన్తే మాం ముధైవ తే|
மனிதர்களுடைய கட்டளைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாகச் சொல்லியிருக்கிறான் என்றார்.”
10 తతో యీశు ర్లోకాన్ ఆహూయ ప్రోక్తవాన్, యూయం శ్రుత్వా బుధ్యధ్బం|
௧0பின்பு அவர் மக்களை வரவழைத்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்டு உணருங்கள்.
11 యన్ముఖం ప్రవిశతి, తత్ మనుజమ్ అమేధ్యం న కరోతి, కిన్తు యదాస్యాత్ నిర్గచ్ఛతి, తదేవ మానుషమమేధ్యీ కరోతీ|
௧௧வாய்க்குள்ளே போகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும்என்றார்.
12 తదానీం శిష్యా ఆగత్య తస్మై కథయాఞ్చక్రుః, ఏతాం కథాం శ్రుత్వా ఫిరూశినో వ్యరజ్యన్త, తత్ కిం భవతా జ్ఞాయతే?
௧௨அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர்கள் இந்த வசனத்தைக்கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.
13 స ప్రత్యవదత్, మమ స్వర్గస్థః పితా యం కఞ్చిదఙ్కురం నారోపయత్, స ఉత్పావ్ద్యతే|
௧௩அவர் மறுமொழியாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்.
14 తే తిష్ఠన్తు, తే అన్ధమనుజానామ్ అన్ధమార్గదర్శకా ఏవ; యద్యన్ధోఽన్ధం పన్థానం దర్శయతి, తర్హ్యుభౌ గర్త్తే పతతః|
௧௪அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடர்களுக்கு வழிகாட்டுகிற குருடர்களாக இருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
15 తదా పితరస్తం ప్రత్యవదత్, దృష్టాన్తమిమమస్మాన్ బోధయతు|
௧௫அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இந்த உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டும் என்றான்.
16 యీశునా ప్రోక్తం, యూయమద్య యావత్ కిమబోధాః స్థ?
௧௬அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாக இருக்கிறீர்களா?
17 కథామిమాం కిం న బుధ్యధ్బే? యదాస్యం ప్రేవిశతి, తద్ ఉదరే పతన్ బహిర్నిర్యాతి,
௧௭வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றுக்குள் சென்று ஆசனவழியாகக் கழிந்துபோகும் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?
18 కిన్త్వాస్యాద్ యన్నిర్యాతి, తద్ అన్తఃకరణాత్ నిర్యాతత్వాత్ మనుజమమేధ్యం కరోతి|
௧௮வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்.
19 యతోఽన్తఃకరణాత్ కుచిన్తా బధః పారదారికతా వేశ్యాగమనం చైర్య్యం మిథ్యాసాక్ష్యమ్ ఈశ్వరనిన్దా చైతాని సర్వ్వాణి నిర్య్యాన్తి|
௧௯எப்படியென்றால், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், அவதூறுகளும் புறப்பட்டுவரும்.
20 ఏతాని మనుష్యమపవిత్రీ కుర్వ్వన్తి కిన్త్వప్రక్షాలితకరేణ భోజనం మనుజమమేధ్యం న కరోతి|
௨0இவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்; கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.
21 అనన్తరం యీశుస్తస్మాత్ స్థానాత్ ప్రస్థాయ సోరసీదోన్నగరయోః సీమాముపతస్యౌ|
௨௧பின்பு, இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.
22 తదా తత్సీమాతః కాచిత్ కినానీయా యోషిద్ ఆగత్య తముచ్చైరువాచ, హే ప్రభో దాయూదః సన్తాన, మమైకా దుహితాస్తే సా భూతగ్రస్తా సతీ మహాక్లేశం ప్రాప్నోతి మమ దయస్వ|
௨௨அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியப் பெண் ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
23 కిన్తు యీశుస్తాం కిమపి నోక్తవాన్, తతః శిష్యా ఆగత్య తం నివేదయామాసుః, ఏషా యోషిద్ అస్మాకం పశ్చాద్ ఉచ్చైరాహూయాగచ్ఛతి, ఏనాం విసృజతు|
௨௩அவளுக்கு மறுமொழியாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
24 తదా స ప్రత్యవదత్, ఇస్రాయేల్గోత్రస్య హారితమేషాన్ వినా కస్యాప్యన్యస్య సమీపం నాహం ప్రేషితోస్మి|
௨௪அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேதவிர, மற்றவர்களுக்கல்ல என்றார்.
25 తతః సా నారీసమాగత్య తం ప్రణమ్య జగాద, హే ప్రభో మాముపకురు|
௨௫அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.
26 స ఉక్తవాన్, బాలకానాం భక్ష్యమాదాయ సారమేయేభ్యో దానం నోచితం|
௨௬அவர் அவளைப் பார்த்து: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
27 తదా సా బభాషే, హే ప్రభో, తత్ సత్యం, తథాపి ప్రభో ర్భఞ్చాద్ యదుచ్ఛిష్టం పతతి, తత్ సారమేయాః ఖాదన్తి|
௨௭அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும் நாய்க்குட்டிகள் தங்களுடைய எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் அப்பத்துணிக்கைகளைச் சாப்பிடுமே என்றாள்.
28 తతో యీశుః ప్రత్యవదత్, హే యోషిత్, తవ విశ్వాసో మహాన్ తస్మాత్ తవ మనోభిలషితం సిద్య్యతు, తేన తస్యాః కన్యా తస్మిన్నేవ దణ్డే నిరామయాభవత్|
௨௮இயேசு அவளுக்கு மறுமொழியாக: பெண்ணே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நேரமே அவளுடைய மகள் ஆரோக்கியமானாள்.
29 అనన్తరం యీశస్తస్మాత్ స్థానాత్ ప్రస్థాయ గాలీల్సాగరస్య సన్నిధిమాగత్య ధరాధరమారుహ్య తత్రోపవివేశ|
௨௯இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
30 పశ్చాత్ జననివహో బహూన్ ఖఞ్చాన్ధమూకశుష్కకరమానుషాన్ ఆదాయ యీశోః సమీపమాగత్య తచ్చరణాన్తికే స్థాపయామాసుః, తతః సా తాన్ నిరామయాన్ అకరోత్|
௩0அப்பொழுது, முடவர்கள், குருடர்கள், ஊமையர்கள், ஊனர்கள் முதலிய அநேகரை திரளான மக்கள் இயேசுவினிடத்தில் அழைத்துவந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் குணப்படுத்தினார்.
31 ఇత్థం మూకా వాక్యం వదన్తి, శుష్కకరాః స్వాస్థ్యమాయాన్తి, పఙ్గవో గచ్ఛన్తి, అన్ధా వీక్షన్తే, ఇతి విలోక్య లోకా విస్మయం మన్యమానా ఇస్రాయేల ఈశ్వరం ధన్యం బభాషిరే|
௩௧ஊமையர் பேசுகிறதையும், ஊனர்கள் குணமடைகிறதையும், கைகால்கள் முடங்கியவர்கள் நடக்கிறதையும், குருடர்கள் பார்க்கிறதையும் மக்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
32 తదానీం యీశుః స్వశిష్యాన్ ఆహూయ గదితవాన్, ఏతజ్జననివహేషు మమ దయా జాయతే, ఏతే దినత్రయం మయా సాకం సన్తి, ఏషాం భక్ష్యవస్తు చ కఞ్చిదపి నాస్తి, తస్మాదహమేతానకృతాహారాన్ న విస్రక్ష్యామి, తథాత్వే వర్త్మమధ్యే క్లామ్యేషుః|
௩௨பின்பு, இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து: மக்களுக்காக மனதுருகுகிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாக அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியிலே சோர்ந்துபோவார்களே என்றார்.
33 తదా శిష్యా ఊచుః, ఏతస్మిన్ ప్రాన్తరమధ్య ఏతావతో మర్త్యాన్ తర్పయితుం వయం కుత్ర పూపాన్ ప్రాప్స్యామః?
௩௩அதற்கு அவருடைய சீடர்கள்: இவ்வளவு திரளான மக்களுக்குத் திருப்தியுண்டாகும்படி தேவையான அப்பங்கள் இந்த வனாந்திரத்திலே நமக்கு எப்படி கிடைக்கும் என்றார்கள்.
34 యీశురపృచ్ఛత్, యుష్మాకం నికటే కతి పూపా ఆసతే? త ఊచుః, సప్తపూపా అల్పాః క్షుద్రమీనాశ్చ సన్తి|
௩௪அதற்கு இயேசு: உங்களிடம் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
35 తదానీం స లోకనివహం భూమావుపవేష్టుమ్ ఆదిశ్య
௩௫அப்பொழுது அவர் மக்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,
36 తాన్ సప్తపూపాన్ మీనాంశ్చ గృహ్లన్ ఈశ్వరీయగుణాన్ అనూద్య భంక్త్వా శిష్యేభ్యో దదౌ, శిష్యా లోకేభ్యో దదుః|
௩௬அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, நன்றிசெலுத்தி, பிட்டுத் தம்முடைய சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள்.
37 తతః సర్వ్వే భుక్త్వా తృప్తవన్తః; తదవశిష్టభక్ష్యేణ సప్తడలకాన్ పరిపూర్య్య సంజగృహుః|
௩௭எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளை ஏழு கூடைகள்நிறைய எடுத்தார்கள்.
38 తే భోక్తారో యోషితో బాలకాంశ్చ విహాయ ప్రాయేణ చతుఃసహస్రాణి పురుషా ఆసన్|
௩௮பெண்களும் பிள்ளைகளும்தவிர, சாப்பிட்ட ஆண்கள் நான்காயிரம்பேராக இருந்தார்கள்.
39 తతః పరం స జననివహం విసృజ్య తరిమారుహ్య మగ్దలాప్రదేశం గతవాన్|
௩௯அவர் மக்களை அனுப்பிவிட்டு படகில் ஏறி, மக்தலாவின் எல்லைகளுக்கு வந்தார்.

< మథిః 15 >