< లూకః 22 >

1 అపరఞ్చ కిణ్వశూన్యపూపోత్సవస్య కాల ఉపస్థితే
பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நெருங்கிற்று.
2 ప్రధానయాజకా అధ్యాయకాశ్చ యథా తం హన్తుం శక్నువన్తి తథోపాయామ్ అచేష్టన్త కిన్తు లోకేభ్యో బిభ్యుః|
அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, மக்களுக்குப் பயந்தபடியினால், எவ்விதமாக இதைச்செய்யலாமென்று வகைதேடினார்கள்.
3 ఏతస్తిన్ సమయే ద్వాదశశిష్యేషు గణిత ఈష్కరియోతీయరూఢిమాన్ యో యిహూదాస్తస్యాన్తఃకరణం శైతానాశ్రితత్వాత్
அப்பொழுது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபெயர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.
4 స గత్వా యథా యీశుం తేషాం కరేషు సమర్పయితుం శక్నోతి తథా మన్త్రణాం ప్రధానయాజకైః సేనాపతిభిశ్చ సహ చకార|
அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் படைத்தலைவர்களிடத்திலும்போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் விதத்தைக்குறித்து அவர்களோடு ஆலோசனை செய்தான்.
5 తేన తే తుష్టాస్తస్మై ముద్రాం దాతుం పణం చక్రుః|
அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள்.
6 తతః సోఙ్గీకృత్య యథా లోకానామగోచరే తం పరకరేషు సమర్పయితుం శక్నోతి తథావకాశం చేష్టితుమారేభే|
அதற்கு அவன் சம்மதித்து, மக்கள்கூட்டமில்லாத நேரத்தில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான்.
7 అథ కిణ్వశూన్యపూపోత్మవదినే, అర్థాత్ యస్మిన్ దినే నిస్తారోత్సవస్య మేషో హన్తవ్యస్తస్మిన్ దినే
பஸ்கா ஆட்டைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது.
8 యీశుః పితరం యోహనఞ్చాహూయ జగాద, యువాం గత్వాస్మాకం భోజనార్థం నిస్తారోత్సవస్య ద్రవ్యాణ్యాసాదయతం|
அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிப்பதற்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம் செய்யுங்கள் என்றார்.
9 తదా తౌ పప్రచ్ఛతుః కుచాసాదయావో భవతః కేచ్ఛా?
அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள்.
10 తదా సోవాదీత్, నగరే ప్రవిష్టే కశ్చిజ్జలకుమ్భమాదాయ యువాం సాక్షాత్ కరిష్యతి స యన్నివేశనం ప్రవిశతి యువామపి తన్నివేశనం తత్పశ్చాదిత్వా నివేశనపతిమ్ ఇతి వాక్యం వదతం,
௧0அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் நுழையும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனிதன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்னேசென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும்போய்,
11 యత్రాహం నిస్తారోత్సవస్య భోజ్యం శిష్యైః సార్ద్ధం భోక్తుం శక్నోమి సాతిథిశాలా కుత్ర? కథామిమాం ప్రభుస్త్వాం పృచ్ఛతి|
௧௧அந்த வீட்டெஜமானைப் பார்த்து: நான் என் சீடர்களோடு பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச்சொன்னார் என்று சொல்லுங்கள்.
12 తతః స జనో ద్వితీయప్రకోష్ఠీయమ్ ఏకం శస్తం కోష్ఠం దర్శయిష్యతి తత్ర భోజ్యమాసాదయతం|
௧௨அவன் கம்பளம் முதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம் செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
13 తతస్తౌ గత్వా తద్వాక్యానుసారేణ సర్వ్వం దృష్ద్వా తత్ర నిస్తారోత్సవీయం భోజ్యమాసాదయామాసతుః|
௧௩அவர்கள்போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள்.
14 అథ కాల ఉపస్థితే యీశు ర్ద్వాదశభిః ప్రేరితైః సహ భోక్తుముపవిశ్య కథితవాన్
௧௪நேரம் வந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் பந்தியிருந்தார்கள்.
15 మమ దుఃఖభోగాత్ పూర్వ్వం యుభాభిః సహ నిస్తారోత్సవస్యైతస్య భోజ్యం భోక్తుం మయాతివాఞ్ఛా కృతా|
௧௫அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களோடுகூட இந்த பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாக இருந்தேன்.
16 యుష్మాన్ వదామి, యావత్కాలమ్ ఈశ్వరరాజ్యే భోజనం న కరిష్యే తావత్కాలమ్ ఇదం న భోక్ష్యే|
௧௬தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறும்வரைக்கும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
17 తదా స పానపాత్రమాదాయ ఈశ్వరస్య గుణాన్ కీర్త్తయిత్వా తేభ్యో దత్వావదత్, ఇదం గృహ్లీత యూయం విభజ్య పివత|
௧௭அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்;
18 యుష్మాన్ వదామి యావత్కాలమ్ ఈశ్వరరాజత్వస్య సంస్థాపనం న భవతి తావద్ ద్రాక్షాఫలరసం న పాస్యామి|
௧௮தேவனுடைய ராஜ்யம் வரும்வரைக்கும் நான் திராட்சைரசத்தைப் பருகுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
19 తతః పూపం గృహీత్వా ఈశ్వరగుణాన్ కీర్త్తయిత్వా భఙ్క్తా తేభ్యో దత్వావదత్, యుష్మదర్థం సమర్పితం యన్మమ వపుస్తదిదం, ఏతత్ కర్మ్మ మమ స్మరణార్థం కురుధ్వం|
௧௯பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாக இருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார்.
20 అథ భోజనాన్తే తాదృశం పాత్రం గృహీత్వావదత్, యుష్మత్కృతే పాతితం యన్మమ రక్తం తేన నిర్ణీతనవనియమరూపం పానపాత్రమిదం|
௨0போஜனம்செய்தபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய ஒப்பந்தமாக இருக்கிறது என்றார்.
21 పశ్యత యో మాం పరకరేషు సమర్పయిష్యతి స మయా సహ భోజనాసన ఉపవిశతి|
௨௧பின்பு: இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது.
22 యథా నిరూపితమాస్తే తదనుసారేణా మనుష్యపుత్రస్య గతి ర్భవిష్యతి కిన్తు యస్తం పరకరేషు సమర్పయిష్యతి తస్య సన్తాపో భవిష్యతి|
௨௨தீர்மானிக்கப்பட்டபடியே மனிதகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனிதனுக்கு ஐயோ என்றார்.
23 తదా తేషాం కో జన ఏతత్ కర్మ్మ కరిష్యతి తత్ తే పరస్పరం ప్రష్టుమారేభిరే|
௨௩அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள்.
24 అపరం తేషాం కో జనః శ్రేష్ఠత్వేన గణయిష్యతే, అత్రార్థే తేషాం వివాదోభవత్|
௨௪அன்றியும் தங்களில் எவன் பெரியவனாக இருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டானது.
25 అస్మాత్ కారణాత్ సోవదత్, అన్యదేశీయానాం రాజానః ప్రజానాముపరి ప్రభుత్వం కుర్వ్వన్తి దారుణశాసనం కృత్వాపి తే భూపతిత్వేన విఖ్యాతా భవన్తి చ|
௨௫அவர் அவர்களைப் பார்த்து: யூதரல்லாத இனத்தாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் நற்பணியாளர்கள் என்று எண்ணப்படுகிறார்கள்.
26 కిన్తు యుష్మాకం తథా న భవిష్యతి, యో యుష్మాకం శ్రేష్ఠో భవిష్యతి స కనిష్ఠవద్ భవతు, యశ్చ ముఖ్యో భవిష్యతి స సేవకవద్భవతు|
௨௬உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் சேவைசெய்கிறவனைப்போலவும் இருக்கவேண்டும்.
27 భోజనోపవిష్టపరిచారకయోః కః శ్రేష్ఠః? యో భోజనాయోపవిశతి స కిం శ్రేష్ఠో న భవతి? కిన్తు యుష్మాకం మధ్యేఽహం పరిచారకఇవాస్మి|
௨௭பந்தியில் உட்கார்ந்திருக்கிறவனோ, சேவைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்களுடைய நடுவிலே சேவைசெய்கிறவனைப்போல இருக்கிறேன்.
28 అపరఞ్చ యుయం మమ పరీక్షాకాలే ప్రథమమారభ్య మయా సహ స్థితా
௨௮மேலும் எனக்கு ஏற்பட்ட சோதனைகளில் என்னோடுகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே.
29 ఏతత్కారణాత్ పిత్రా యథా మదర్థం రాజ్యమేకం నిరూపితం తథాహమపి యుష్మదర్థం రాజ్యం నిరూపయామి|
௨௯ஆகவே, என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.
30 తస్మాన్ మమ రాజ్యే భోజనాసనే చ భోజనపానే కరిష్యధ్వే సింహాసనేషూపవిశ్య చేస్రాయేలీయానాం ద్వాదశవంశానాం విచారం కరిష్యధ్వే|
௩0நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் சாப்பிட்டுக் குடித்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகச் சிங்காசனங்களின்மேல் அமருவீர்கள் என்றார்.
31 అపరం ప్రభురువాచ, హే శిమోన్ పశ్య తితఉనా ధాన్యానీవ యుష్మాన్ శైతాన్ చాలయితుమ్ ఐచ్ఛత్,
௩௧பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையை முறத்தினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு அனுமதி கேட்டுக்கொண்டான்.
32 కిన్తు తవ విశ్వాసస్య లోపో యథా న భవతి ఏతత్ త్వదర్థం ప్రార్థితం మయా, త్వన్మనసి పరివర్త్తితే చ భ్రాతృణాం మనాంసి స్థిరీకురు|
௩௨நானோ உன் நம்பிக்கை இழந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரர்களைத் திடப்படுத்து என்றார்.
33 తదా సోవదత్, హే ప్రభోహం త్వయా సార్ద్ధం కారాం మృతిఞ్చ యాతుం మజ్జితోస్మి|
௩௩அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாக இருக்கிறேன் என்றான்.
34 తతః స ఉవాచ, హే పితర త్వాం వదామి, అద్య కుక్కుటరవాత్ పూర్వ్వం త్వం మత్పరిచయం వారత్రయమ్ అపహ్వోష్యసే|
௩௪அவர் அவனைப் பார்த்து: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
35 అపరం స పప్రచ్ఛ, యదా ముద్రాసమ్పుటం ఖాద్యపాత్రం పాదుకాఞ్చ వినా యుష్మాన్ ప్రాహిణవం తదా యుష్మాకం కస్యాపి న్యూనతాసీత్? తే ప్రోచుః కస్యాపి న|
௩௫பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களைப் பணப்பையும் சாமான் பையும் காலணிகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாவது உங்களுக்குக் குறைவாக இருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாக இருந்ததில்லை என்றார்கள்.
36 తదా సోవదత్ కిన్త్విదానీం ముద్రాసమ్పుటం ఖాద్యపాత్రం వా యస్యాస్తి తేన తద్గ్రహీతవ్యం, యస్య చ కృపాణో నాస్తి తేన స్వవస్త్రం విక్రీయ స క్రేతవ్యః|
௩௬அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான் பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்; பட்டயம் இல்லாதவன் தன் ஆடையை விற்று ஒரு பட்டயத்தை வாங்கவேண்டும்.
37 యతో యుష్మానహం వదామి, అపరాధిజనైః సార్ద్ధం గణితః స భవిష్యతి| ఇదం యచ్ఛాస్త్రీయం వచనం లిఖితమస్తి తన్మయి ఫలిష్యతి యతో మమ సమ్బన్ధీయం సర్వ్వం సేత్స్యతి|
௩௭அக்கிரமக்காரர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் நிறைவேறும் காலம் வந்திருக்கிறது என்றார்.
38 తదా తే ప్రోచుః ప్రభో పశ్య ఇమౌ కృపాణౌ| తతః సోవదద్ ఏతౌ యథేష్టౌ|
௩௮அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.
39 అథ స తస్మాద్వహి ర్గత్వా స్వాచారానుసారేణ జైతుననామాద్రిం జగామ శిష్యాశ్చ తత్పశ్చాద్ యయుః|
௩௯பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீடர்களும் அவரோடுகூடப்போனார்கள்.
40 తత్రోపస్థాయ స తానువాచ, యథా పరీక్షాయాం న పతథ తదర్థం ప్రార్థయధ్వం|
௪0அந்த இடத்தை அடைந்தபொழுது அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்செய்யுங்கள் என்று சொல்லி,
41 పశ్చాత్ స తస్మాద్ ఏకశరక్షేపాద్ బహి ర్గత్వా జానునీ పాతయిత్వా ఏతత్ ప్రార్థయాఞ్చక్రే,
௪௧அவர்களைவிட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:
42 హే పిత ర్యది భవాన్ సమ్మన్యతే తర్హి కంసమేనం మమాన్తికాద్ దూరయ కిన్తు మదిచ్ఛానురూపం న త్వదిచ్ఛానురూపం భవతు|
௪௨பிதாவே, உமக்கு விருப்பமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.
43 తదా తస్మై శక్తిం దాతుం స్వర్గీయదూతో దర్శనం దదౌ|
௪௩அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரை திடப்படுத்தினான்.
44 పశ్చాత్ సోత్యన్తం యాతనయా వ్యాకులో భూత్వా పునర్దృఢం ప్రార్థయాఞ్చక్రే, తస్మాద్ బృహచ్ఛోణితబిన్దవ ఇవ తస్య స్వేదబిన్దవః పృథివ్యాం పతితుమారేభిరే|
௪௪அவர் மிகவும் வேதனைப்பட்டு, அதிக ஊக்கத்தோடு ஜெபம்செய்தார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாகத் தரையிலே விழுந்தது.
45 అథ ప్రార్థనాత ఉత్థాయ శిష్యాణాం సమీపమేత్య తాన్ మనోదుఃఖినో నిద్రితాన్ దృష్ట్వావదత్
௪௫அவர் ஜெபம்செய்து முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே தூங்குகிறதைக் கண்டு:
46 కుతో నిద్రాథ? పరీక్షాయామ్ అపతనార్థం ప్రర్థయధ్వం|
௪௬நீங்கள் தூங்குகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்செய்யுங்கள் என்றார்.
47 ఏతత్కథాయాః కథనకాలే ద్వాదశశిష్యాణాం మధ్యే గణితో యిహూదానామా జనతాసహితస్తేషామ్ అగ్రే చలిత్వా యీశోశ్చుమ్బనార్థం తదన్తికమ్ ఆయయౌ|
௪௭அவர் அப்படிப் பேசும்போது மக்கள் கூட்டமாக வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தம் செய்வதற்காக அவரிடத்தில் நெருங்கினான்.
48 తదా యీశురువాచ, హే యిహూదా కిం చుమ్బనేన మనుష్యపుత్రం పరకరేషు సమర్పయసి?
௪௮இயேசு அவனைப் பார்த்து: யூதாசே, முத்தத்தினாலேயா மனிதகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.
49 తదా యద్యద్ ఘటిష్యతే తదనుమాయ సఙ్గిభిరుక్తం, హే ప్రభో వయం కి ఖఙ్గేన ఘాతయిష్యామః?
௪௯அவரைச் சுற்றி நின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.
50 తత ఏకః కరవాలేనాహత్య ప్రధానయాజకస్య దాసస్య దక్షిణం కర్ణం చిచ్ఛేద|
௫0அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காது அறுந்து விழும்படி வெட்டினான்.
51 అధూనా నివర్త్తస్వ ఇత్యుక్త్వా యీశుస్తస్య శ్రుతిం స్పృష్ట్వా స్వస్యం చకార|
௫௧அப்பொழுது இயேசு: போதும் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனை சுகப்படுத்தினார்.
52 పశ్చాద్ యీశుః సమీపస్థాన్ ప్రధానయాజకాన్ మన్దిరస్య సేనాపతీన్ ప్రాచీనాంశ్చ జగాద, యూయం కృపాణాన్ యష్టీంశ్చ గృహీత్వా మాం కిం చోరం ధర్త్తుమాయాతాః?
௫௨பின்பு இயேசு தமக்கு விரோதமாக வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்து படைத்தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து: ஒரு திருடனைப்பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே.
53 యదాహం యుష్మాభిః సహ ప్రతిదినం మన్దిరేఽతిష్ఠం తదా మాం ధర్త్తం న ప్రవృత్తాః, కిన్త్విదానీం యుష్మాకం సమయోన్ధకారస్య చాధిపత్యమస్తి|
௫௩நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களோடுகூட இருக்கும்போது நீங்கள் என்னைப் பிடிக்கக் முற்படவில்லை; இதுதான் உங்களுடைய நேரமும் இருளின் அதிகாரமுமாக இருக்கிறது என்றார்.
54 అథ తే తం ధృత్వా మహాయాజకస్య నివేశనం నిన్యుః| తతః పితరో దూరే దూరే పశ్చాదిత్వా
௫௪அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய்விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்னேசென்றான்.
55 బృహత్కోష్ఠస్య మధ్యే యత్రాగ్నిం జ్వాలయిత్వా లోకాః సమేత్యోపవిష్టాస్తత్ర తైః సార్ద్ధమ్ ఉపవివేశ|
௫௫அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்.
56 అథ వహ్నిసన్నిధౌ సముపవేశకాలే కాచిద్దాసీ మనో నివిశ్య తం నిరీక్ష్యావదత్ పుమానయం తస్య సఙ్గేఽస్థాత్|
௫௬அப்பொழுது ஒரு வேலைக்காரி அவன் நெருப்பின் அருகிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடு இருந்தான் என்றாள்.
57 కిన్తు స తద్ అపహ్నుత్యావాదీత్ హే నారి తమహం న పరిచినోమి|
௫௭அதற்கு அவன்: பெண்ணே, அவனை எனக்குத் தெரியாது என்று மறுதலித்தான்.
58 క్షణాన్తరేఽన్యజనస్తం దృష్ట్వాబ్రవీత్ త్వమపి తేషాం నికరస్యైకజనోసి| పితరః ప్రత్యువాచ హే నర నాహమస్మి|
௫௮சிறிதுநேரத்திற்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனிதனே, நான் இல்லை என்றான்.
59 తతః సార్ద్ధదణ్డద్వయాత్ పరం పునరన్యో జనో నిశ్చిత్య బభాషే, ఏష తస్య సఙ్గీతి సత్యం యతోయం గాలీలీయో లోకః|
௫௯ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான்.
60 తదా పితర ఉవాచ హే నర త్వం యద్ వదమి తదహం బోద్ధుం న శక్నోమి, ఇతి వాక్యే కథితమాత్రే కుక్కుటో రురావ|
௬0அதற்குப் பேதுரு: மனிதனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவியது.
61 తదా ప్రభుణా వ్యాధుట్య పితరే నిరీక్షితే కృకవాకురవాత్ పూర్వ్వం మాం త్రిరపహ్నోష్యసే ఇతి పూర్వ్వోక్తం తస్య వాక్యం పితరః స్మృత్వా
௬௧அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை உடனே பேதுரு நினைத்து,
62 బహిర్గత్వా మహాఖేదేన చక్రన్ద|
௬௨வெளியேபோய், மனங்கசந்து அழுதான்.
63 తదా యై ర్యీశుర్ధృతస్తే తముపహస్య ప్రహర్త్తుమారేభిరే|
௬௩இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனிதர்கள் அவரைக் கேலிசெய்து, அடித்து,
64 వస్త్రేణ తస్య దృశౌ బద్ధ్వా కపోలే చపేటాఘాతం కృత్వా పప్రచ్ఛుః, కస్తే కపోలే చపేటాఘాతం కృతవాన? గణయిత్వా తద్ వద|
௬௪அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை தீர்க்கதரிசனத்தினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி,
65 తదన్యత్ తద్విరుద్ధం బహునిన్దావాక్యం వక్తుమారేభిరే|
௬௫மற்றும் அநேக அவதூறான வார்த்தைகளையும் அவருக்கு எதிராகப் பேசினார்கள்.
66 అథ ప్రభాతే సతి లోకప్రాఞ్చః ప్రధానయాజకా అధ్యాపకాశ్చ సభాం కృత్వా మధ్యేసభం యీశుమానీయ పప్రచ్ఛుః, త్వమ్ అభిషికతోసి న వాస్మాన్ వద|
௬௬விடியற்காலமானபோது மக்களின் மூப்பர்களும் பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் கூடிவந்து, தங்களுடைய ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:
67 స ప్రత్యువాచ, మయా తస్మిన్నుక్తేఽపి యూయం న విశ్వసిష్యథ|
௬௭நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்.
68 కస్మింశ్చిద్వాక్యే యుష్మాన్ పృష్టేఽపి మాం న తదుత్తరం వక్ష్యథ న మాం త్యక్ష్యథ చ|
௬௮நான் உங்களிடம் கேள்வி கேட்டாலும் எனக்கு பதில் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலையும் செய்யமாட்டீர்கள்.
69 కిన్త్వితః పరం మనుజసుతః సర్వ్వశక్తిమత ఈశ్వరస్య దక్షిణే పార్శ్వే సముపవేక్ష్యతి|
௬௯இதுமுதல் மனிதகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பார் என்றார்.
70 తతస్తే పప్రచ్ఛుః, ర్తిహ త్వమీశ్వరస్య పుత్రః? స కథయామాస, యూయం యథార్థం వదథ స ఏవాహం|
௭0அதற்கு அவர்களெல்லோரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்.
71 తదా తే సర్వ్వే కథయామాసుః, ర్తిహ సాక్ష్యేఽన్సస్మిన్ అస్మాకం కిం ప్రయోజనం? అస్య స్వముఖాదేవ సాక్ష్యం ప్రాప్తమ్|
௭௧அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.

< లూకః 22 >