< ప్రేరితాః 6 >

1 తస్మిన్ సమయే శిష్యాణాం బాహుల్యాత్ ప్రాత్యహికదానస్య విశ్రాణనై ర్భిన్నదేశీయానాం విధవాస్త్రీగణ ఉపేక్షితే సతి ఇబ్రీయలోకైః సహాన్యదేశీయానాం వివాద ఉపాతిష్ఠత్|
அந்த நாட்களிலே, சீடர்களின் எண்ணிக்கை அதிகமானபோது, கிரேக்கர்களானவர்கள், தங்களுடைய விதவைகள் அன்றாட பராமரிப்பில் சரியாக பராமரிக்கப்படவில்லையென்று, எபிரெயர்களுக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள்.
2 తదా ద్వాదశప్రేరితాః సర్వ్వాన్ శిష్యాన్ సంగృహ్యాకథయన్ ఈశ్వరస్య కథాప్రచారం పరిత్యజ్య భోజనగవేషణమ్ అస్మాకమ్ ఉచితం నహి|
அப்பொழுது பன்னிரண்டு சீடர்களும் மற்ற சீடர்கள் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதிக்காமல், பந்திவிசாரிப்பு செய்வது தகுதியல்ல.
3 అతో హే భ్రాతృగణ వయమ్ ఏతత్కర్మ్మణో భారం యేభ్యో దాతుం శక్నుమ ఏతాదృశాన్ సుఖ్యాత్యాపన్నాన్ పవిత్రేణాత్మనా జ్ఞానేన చ పూర్ణాన్ సప్ప్రజనాన్ యూయం స్వేషాం మధ్యే మనోనీతాన్ కురుత,
ஆதலால் சகோதரர்களே, பரிசுத்த ஆவியும், ஞானமும், நற்சாட்சியும் பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக நியமிப்போம்.
4 కిన్తు వయం ప్రార్థనాయాం కథాప్రచారకర్మ్మణి చ నిత్యప్రవృత్తాః స్థాస్యామః|
நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிப்பதிலும் இடைவிடாமல் உறுதியாகத் தரித்திருப்போம் என்றார்கள்.
5 ఏతస్యాం కథాయాం సర్వ్వే లోకాః సన్తుష్టాః సన్తః స్వేషాం మధ్యాత్ స్తిఫానః ఫిలిపః ప్రఖరో నికానోర్ తీమన్ పర్మ్మిణా యిహూదిమతగ్రాహీ-ఆన్తియఖియానగరీయో నికలా ఏతాన్ పరమభక్తాన్ పవిత్రేణాత్మనా పరిపూర్ణాన్ సప్త జనాన్
இந்த யோசனை சபையாரெல்லோருக்கும் பிரியமாக இருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூத மதத்தைச் சேர்ந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,
6 ప్రేరితానాం సమక్షమ్ ఆనయన్, తతస్తే ప్రార్థనాం కృత్వా తేషాం శిరఃసు హస్తాన్ ఆర్పయన్|
அவர்களை அப்போஸ்தலர்களுக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கரங்களை வைத்தார்கள்.
7 అపరఞ్చ ఈశ్వరస్య కథా దేశం వ్యాప్నోత్ విశేషతో యిరూశాలమి నగరే శిష్యాణాం సంఖ్యా ప్రభూతరూపేణావర్ద్ధత యాజకానాం మధ్యేపి బహవః ఖ్రీష్టమతగ్రాహిణోఽభవన్|
தேவவசனம் அதிகமாகப் பரவியது; சீடருடைய எண்ணிக்கை எருசலேமில் மிகவும் பெருகியது; ஆசாரியர்களில் அநேகர் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள்.
8 స్తిఫానో విశ్వాసేన పరాక్రమేణ చ పరిపూర్ణః సన్ లోకానాం మధ్యే బహువిధమ్ అద్భుతమ్ ఆశ్చర్య్యం కర్మ్మాకరోత్|
ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாக மக்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
9 తేన లిబర్త్తినీయనామ్నా విఖ్యాతసఙ్ఘస్య కతిపయజనాః కురీణీయసికన్దరీయ-కిలికీయాశీయాదేశీయాః కియన్తో జనాశ్చోత్థాయ స్తిఫానేన సార్ద్ధం వ్యవదన్త|
அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானோடு வாக்குவாதம்பண்ணினார்கள்.
10 కిన్తు స్తిఫానో జ్ఞానేన పవిత్రేణాత్మనా చ ఈదృశీం కథాం కథితవాన్ యస్యాస్తే ఆపత్తిం కర్త్తుం నాశక్నువన్|
௧0அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் முடியாமல்போனது.
11 పశ్చాత్ తై ర్లోభితాః కతిపయజనాః కథామేనామ్ అకథయన్, వయం తస్య ముఖతో మూసా ఈశ్వరస్య చ నిన్దావాక్యమ్ అశ్రౌష్మ|
௧௧அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் எதிராக இவன் அவதூறான வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டோம் என்று சொல்லச்சொல்லி மனிதர்களைத் தூண்டிவிட்டு;
12 తే లోకానాం లోకప్రాచీనానామ్ అధ్యాపకానాఞ్చ ప్రవృత్తిం జనయిత్వా స్తిఫానస్య సన్నిధిమ్ ఆగత్య తం ధృత్వా మహాసభామధ్యమ్ ఆనయన్|
௧௨மக்களையும் மூப்பர்களையும் வேதபண்டிதரையும் ஏவி; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தினர்களுக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;
13 తదనన్తరం కతిపయజనేషు మిథ్యాసాక్షిషు సమానీతేషు తేఽకథయన్ ఏష జన ఏతత్పుణ్యస్థానవ్యవస్థయో ర్నిన్దాతః కదాపి న నివర్త్తతే|
௧௩பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனிதன் இந்தப் பரிசுத்த இடத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் எதிராக அவதூறான வார்த்தைகளையே எப்பொழுதும் பேசுகிறான்;
14 ఫలతో నాసరతీయయీశుః స్థానమేతద్ ఉచ్ఛిన్నం కరిష్యతి మూసాసమర్పితమ్ అస్మాకం వ్యవహరణమ్ అన్యరూపం కరిష్యతి తస్యైతాదృశీం కథాం వయమ్ అశృణుమ|
௧௪எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த இடத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த வழக்கங்களை மாற்றுவானென்று இவன் சொல்வதைக் கேட்டோம் என்றார்கள்.
15 తదా మహాసభాస్థాః సర్వ్వే తం ప్రతి స్థిరాం దృష్టిం కృత్వా స్వర్గదూతముఖసదృశం తస్య ముఖమ్ అపశ్యన్|
௧௫ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவனை உற்றுப்பார்த்து, அவனுடைய முகம் தேவதூதனுடைய முகத்தைப்போல இருப்பதைக் கண்டார்கள்.

< ప్రేరితాః 6 >