< 1 థిషలనీకినః 5 >
1 హే భ్రాతరః, కాలాన్ సమయాంశ్చాధి యుష్మాన్ ప్రతి మమ లిఖనం నిష్ప్రయోజనం,
௧சகோதரர்களே, இவைகள் நடக்கும் நாட்களையும் நேரங்களையும்குறித்து உங்களுக்கு எழுதவேண்டியதில்லை.
2 యతో రాత్రౌ యాదృక్ తస్కరస్తాదృక్ ప్రభో ర్దినమ్ ఉపస్థాస్యతీతి యూయం స్వయమేవ సమ్యగ్ జానీథ|
௨இரவிலே திருடன் வருகிறவிதமாகக் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாக அறிந்திருக்கிறீர்கள்.
3 శాన్తి ర్నిర్వ్విన్ఘత్వఞ్చ విద్యత ఇతి యదా మానవా వదిష్యన్తి తదా ప్రసవవేదనా యద్వద్ గర్బ్భినీమ్ ఉపతిష్ఠతి తద్వద్ అకస్మాద్ వినాశస్తాన్ ఉపస్థాస్యతి తైరుద్ధారో న లప్స్యతే|
௩சமாதானமும் பாதுகாப்பும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு திடீரென அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.
4 కిన్తు హే భ్రాతరః, యూయమ్ అన్ధకారేణావృతా న భవథ తస్మాత్ తద్దినం తస్కర ఇవ యుష్మాన్ న ప్రాప్స్యతి|
௪சகோதரர்களே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் இருளில் இருக்கிறவர்களில்லையே.
5 సర్వ్వే యూయం దీప్తేః సన్తానా దివాయాశ్చ సన్తానా భవథ వయం నిశావంశాస్తిమిరవంశా వా న భవామః|
௫நீங்களெல்லோரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாக இருக்கிறீர்கள்; நாம் இரவிற்கும் இருளுக்கும் உரியவர்களல்ல.
6 అతో ఽపరే యథా నిద్రాగతాః సన్తి తద్వద్ అస్మాభి ర్న భవితవ్యం కిన్తు జాగరితవ్యం సచేతనైశ్చ భవితవ్యం|
௬ஆகவே, மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாமும் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாக இருக்கக்கடவோம்.
7 యే నిద్రాన్తి తే నిశాయామేవ నిద్రాన్తి తే చ మత్తా భవన్తి తే రజన్యామేవ మత్తా భవన్తి|
௭தூங்குகிறவர்கள் இரவிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இரவிலே வெறிகொள்ளுவார்கள்.
8 కిన్తు వయం దివసస్య వంశా భవామః; అతో ఽస్మాభి ర్వక్షసి ప్రత్యయప్రేమరూపం కవచం శిరసి చ పరిత్రాణాశారూపం శిరస్త్రం పరిధాయ సచేతనై ర్భవితవ్యం|
௮பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாக இருந்து, விசுவாசம், அன்பு என்னும் மார்புக்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைக்கவசத்தையும் அணிந்துகொண்டிருக்கக்கடவோம்.
9 యత ఈశ్వరోఽస్మాన్ క్రోధే న నియుజ్యాస్మాకం ప్రభునా యీశుఖ్రీష్టేన పరిత్రాణస్యాధికారే నియుక్తవాన్,
௯தேவன் நம்மைத் தண்டிப்பதற்காக நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.
10 జాగ్రతో నిద్రాగతా వా వయం యత్ తేన ప్రభునా సహ జీవామస్తదర్థం సోఽస్మాకం కృతే ప్రాణాన్ త్యక్తవాన్|
௧0நாம் உயிரோடிருக்கிறவர்களானாலும், மரித்தவர்களானாலும், அவரோடு நாம் ஒன்றாகப் பிழைத்திருப்பதற்காக அவர் நமக்காக மரித்தாரே.
11 అతఏవ యూయం యద్వత్ కురుథ తద్వత్ పరస్పరం సాన్త్వయత సుస్థిరీకురుధ్వఞ్చ|
௧௧ஆகவே, நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவளர்ச்சி உண்டாகும்படிச் செய்யுங்கள்.
12 హే భ్రాతరః, యుష్మాకం మధ్యే యే జనాః పరిశ్రమం కుర్వ్వన్తి ప్రభో ర్నామ్నా యుష్మాన్ అధితిష్ఠన్త్యుపదిశన్తి చ తాన్ యూయం సమ్మన్యధ్వం|
௧௨அன்றியும், சகோதரர்களே, உங்களுக்குள்ளே கடுமையாக உழைத்து, கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாக இருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து,
13 స్వకర్మ్మహేతునా చ ప్రేమ్నా తాన్ అతీవాదృయధ్వమితి మమ ప్రార్థనా, యూయం పరస్పరం నిర్వ్విరోధా భవత|
௧௩அவர்களுடைய செயல்களின் அடிப்படையில் அவர்களை மிகவும் அன்பாக நினைத்துக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாக இருங்கள்.
14 హే భ్రాతరః, యుష్మాన్ వినయామహే యూయమ్ అవిహితాచారిణో లోకాన్ భర్త్సయధ్వం, క్షుద్రమనసః సాన్త్వయత, దుర్బ్బలాన్ ఉపకురుత, సర్వ్వాన్ ప్రతి సహిష్ణవో భవత చ|
௧௪மேலும், சகோதரர்களே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லோரிடத்திலும் நீடியசாந்தமாக இருங்கள்.
15 అపరం కమపి ప్రత్యనిష్టస్య ఫలమ్ అనిష్టం కేనాపి యన్న క్రియేత తదర్థం సావధానా భవత, కిన్తు పరస్పరం సర్వ్వాన్ మానవాంశ్చ ప్రతి నిత్యం హితాచారిణో భవత|
௧௫ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற அனைவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய விரும்புங்கள்.
௧௬எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்.
17 నిరన్తరం ప్రార్థనాం కురుధ్వం|
௧௭இடைவிடாமல் ஜெபம்செய்யுங்கள்.
18 సర్వ్వవిషయే కృతజ్ఞతాం స్వీకురుధ్వం యత ఏతదేవ ఖ్రీష్టయీశునా యుష్మాన్ ప్రతి ప్రకాశితమ్ ఈశ్వరాభిమతం|
௧௮எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவிற்குள் உங்களைக்குறித்து தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
19 పవిత్రమ్ ఆత్మానం న నిర్వ్వాపయత|
௧௯ஆவியை அவித்துப்போடாமலிருங்கள்.
20 ఈశ్వరీయాదేశం నావజానీత|
௨0தீர்க்கதரிசனங்களை சாதாரணமாக எண்ணாதிருங்கள்.
21 సర్వ్వాణి పరీక్ష్య యద్ భద్రం తదేవ ధారయత|
௨௧எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
22 యత్ కిమపి పాపరూపం భవతి తస్మాద్ దూరం తిష్ఠత|
௨௨தீமையாகத் தோன்றுகிற எல்லாவற்றையும்விட்டு விலகுங்கள்.
23 శాన్తిదాయక ఈశ్వరః స్వయం యుష్మాన్ సమ్పూర్ణత్వేన పవిత్రాన్ కరోతు, అపరమ్ అస్మత్ప్రభో ర్యీశుఖ్రీష్టస్యాగమనం యావద్ యుష్మాకమ్ ఆత్మానః ప్రాణాః శరీరాణి చ నిఖిలాని నిర్ద్దోషత్వేన రక్ష్యన్తాం|
௨௩சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
24 యో యుష్మాన్ ఆహ్వయతి స విశ్వసనీయోఽతః స తత్ సాధయిష్యతి|
௨௪உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.
25 హే భ్రాతరః, అస్మాకం కృతే ప్రార్థనాం కురుధ్వం|
௨௫சகோதரர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
26 పవిత్రచుమ్బనేన సర్వ్వాన్ భ్రాతృన్ ప్రతి సత్కురుధ్వం|
௨௬சகோதரர்கள் எல்லோரையும் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
27 పత్రమిదం సర్వ్వేషాం పవిత్రాణాం భ్రాతృణాం శ్రుతిగోచరే యుష్మాభిః పఠ్యతామితి ప్రభో ర్నామ్నా యుష్మాన్ శపయామి|
௨௭இந்தக் கடிதம் பரிசுத்தமான சகோதரர்கள் எல்லோருக்கும் வாசிக்கப்படவேண்டுமென்று கர்த்தரின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.
28 అస్మాకం ప్రభో ర్యీశుఖ్రీష్టస్యానుగ్రతే యుష్మాసు భూయాత్| ఆమేన్|
௨௮நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.