< මථිඃ 12 >
1 අනන්තරං යීශු ර්විශ්රාමවාරේ ශ්ස්යමධ්යේන ගච්ඡති, තදා තච්ඡිෂ්යා බුභුක්ෂිතාඃ සන්තඃ ශ්ස්යමඤ්ජරීශ්ඡත්වා ඡිත්වා ඛාදිතුමාරභන්ත|
அக்காலத்தில் ஓய்வுநாளில், இயேசு தானியம் விளைந்திருந்த வயல் வழியாகச் சென்றார். அவருடைய சீடர்கள் பசியாயிருந்ததினால், அவர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறித்துச் சாப்பிடத் தொடங்கினார்கள்.
2 තද් විලෝක්ය ඵිරූශිනෝ යීශුං ජගදුඃ, පශ්ය විශ්රාමවාරේ යත් කර්ම්මාකර්ත්තව්යං තදේව තව ශිෂ්යාඃ කුර්ව්වන්ති|
பரிசேயர்கள் இதைக் கண்டபோது, அவர்கள் இயேசுவிடம், “இதோ, உமது சீடர்கள் ஓய்வுநாளில் மோசேயின் சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட காரியத்தைச் செய்கிறார்களே” என்றார்கள்.
3 ස තාන් ප්රත්යාවදත, දායූද් තත්සඞ්ගිනශ්ච බුභුක්ෂිතාඃ සන්තෝ යත් කර්ම්මාකුර්ව්වන් තත් කිං යුෂ්මාභි ර්නාපාඨි?
இயேசு அதற்குப் பதிலாக, “தாவீதும், அவனுடைய கூட்டாளிகளும் பசியாயிருந்தபோது, அவன் செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?
4 යේ දර්ශනීයාඃ පූපාඃ යාජකාන් විනා තස්ය තත්සඞ්ගිමනුජානාඤ්චාභෝජනීයාස්ත ඊශ්වරාවාසං ප්රවිෂ්ටේන තේන භුක්තාඃ|
அவன் இறைவனுடைய வீட்டிற்குள் போய், அவனும் அவனோடிருந்தவர்களும் மோசேயின் சட்டத்தின்படி ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய தேவசமுகத்து அப்பத்தைச் சாப்பிட்டார்கள். அவர்கள் அப்படிச் செய்தது மோசேயின் சட்டத்திற்கு முரணாயிருந்தது.
5 අන්යච්ච විශ්රාමවාරේ මධ්යේමන්දිරං විශ්රාමවාරීයං නියමං ලඞ්වන්තෝපි යාජකා නිර්දෝෂා භවන්ති, ශාස්ත්රමධ්යේ කිමිදමපි යුෂ්මාභි ර්න පඨිතං?
மேலும், ஆசாரியர்கள் ஓய்வுநாளில் ஆலயத்திலுள்ள தங்கள் வேலையினால் ஓய்வுநாளையே வேலை நாளாக்கினாலும் குற்றமற்றவர்களாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மோசேயின் சட்டத்தில் வாசிக்கவில்லையா?
6 යුෂ්මානහං වදාමි, අත්ර ස්ථානේ මන්දිරාදපි ගරීයාන් ඒක ආස්තේ|
ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆலயத்தைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார்.
7 කින්තු දයායාං මේ යථා ප්රීති ර්න තථා යඥකර්ම්මණි| ඒතද්වචනස්යාර්ථං යදි යුයම් අඥාසිෂ්ට තර්හි නිර්දෝෂාන් දෝෂිණෝ නාකාර්ෂ්ට|
ஆனால், ‘நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்ற இறைவார்த்தையின் கருத்து உங்களுக்குத் தெரிந்திருந்தால், நீங்கள் குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திருக்கமாட்டீர்கள்.
8 අන්යච්ච මනුජසුතෝ විශ්රාමවාරස්යාපි පතිරාස්තේ|
ஏனெனில், மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்.
9 අනන්තරං ස තත්ස්ථානාත් ප්රස්ථාය තේෂාං භජනභවනං ප්රවිෂ්ටවාන්, තදානීම් ඒකඃ ශුෂ්කකරාමයවාන් උපස්ථිතවාන්|
இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர்களுடைய ஜெப ஆலயத்திற்குள் சென்றார்.
10 තතෝ යීශුම් අපවදිතුං මානුෂාඃ පප්රච්ඡුඃ, විශ්රාමවාරේ නිරාමයත්වං කරණීයං න වා?
அங்கு சுருங்கிய கையுடைய ஒருவன் இருந்தான். இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும்படி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவரிடம், “ஓய்வுநாளில் குணமாக்குவது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள்.
11 තේන ස ප්රත්යුවාච, විශ්රාමවාරේ යදි කස්යචිද් අවි ර්ගර්ත්තේ පතති, තර්හි යස්තං ඝෘත්වා න තෝලයති, ඒතාදෘශෝ මනුජෝ යුෂ්මාකං මධ්යේ ක ආස්තේ?
இயேசு அவர்களிடம், “உங்களில் யாரிடமாவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் ஒரு குழியில் விழுந்தால், நீங்கள் அதைப்பிடித்து வெளியே தூக்கியெடுக்கமாட்டீர்களா?
12 අවේ ර්මානවඃ කිං නහි ශ්රේයාන්? අතෝ විශ්රාමවාරේ හිතකර්ම්ම කර්ත්තව්යං|
ஆட்டைவிட ஒரு மனிதன் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவன்! ஆதலால் ஓய்வுநாளிலே மோசேயினுடைய சட்டத்தின்படி நன்மை செய்வது உகந்ததே” என்றார்.
13 අනන්තරං ස තං මානවං ගදිතවාන්, කරං ප්රසාරය; තේන කරේ ප්රසාරිතේ සෝන්යකරවත් ස්වස්ථෝ(අ)භවත්|
அதற்குப் பின்பு இயேசு, அந்த மனிதனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவன் அப்படியே தன் கையை நீட்டினான். உடனே அது மற்ற கையைப்போல முற்றிலுமாக குணமடைந்தது.
14 තදා ඵිරූශිනෝ බහිර්භූය කථං තං හනිෂ්යාම ඉති කුමන්ත්රණාං තත්ප්රාතිකූල්යේන චක්රුඃ|
அப்பொழுது பரிசேயர் வெளியே போய், இயேசுவைக் கொலை செய்யும்படி சதி செய்தார்கள்.
15 තතෝ යීශුස්තද් විදිත්වා ස්ථනාන්තරං ගතවාන්; අන්යේෂු බහුනරේෂු තත්පශ්චාද් ගතේෂු තාන් ස නිරාමයාන් කෘත්වා ඉත්යාඥාපයත්,
இதை அறிந்த இயேசுவோ, அந்த இடத்தைவிட்டுச் சென்றார். அநேகர் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்களில் எல்லா நோயாளிகளையும் இயேசு குணப்படுத்தினார்.
அவர், தான் யாரென ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என அவர்களை எச்சரித்தார்.
17 තස්මාත් මම ප්රීයෝ මනෝනීතෝ මනසස්තුෂ්ටිකාරකඃ| මදීයඃ සේවකෝ යස්තු විද්යතේ තං සමීක්ෂතාං| තස්යෝපරි ස්වකීයාත්මා මයා සංස්ථාපයිෂ්යතේ| තේනාන්යදේශජාතේෂු ව්යවස්ථා සංප්රකාශ්යතේ|
இறைவாக்கினன் ஏசாயா மூலமாகக் கூறப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி இது நடந்தது:
18 කේනාපි න විරෝධං ස විවාදඤ්ච කරිෂ්යති| න ච රාජපථේ තේන වචනං ශ්රාවයිෂ්යතේ|
“இவர் நான் தெரிந்துகொண்ட எனது ஊழியராயிருக்கிறார்; நான் அன்பு செலுத்துகிறவரும் என் மகிழ்ச்சிக்குரியவரும் இவரே. இவர்மேல் என் ஆவியானவரை அமரப்பண்ணுவேன். இவர் யூதரல்லாதவர்களுக்கு நீதியை பிரசித்தப்படுத்துவார்.
19 ව්යවස්ථා චලිතා යාවත් නහි තේන කරිෂ්යතේ| තාවත් නලෝ විදීර්ණෝ(අ)පි භංක්ෂ්යතේ නහි තේන ච| තථා සධූමවර්ත්තිඤ්ච න ස නිර්ව්වාපයිෂ්යතේ|
இவர் வாக்குவாதம் செய்யமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; யாரும் வீதிகளில் இவருடைய குரலைக் கேட்கவுமாட்டார்கள்.
20 ප්රත්යාශාඤ්ච කරිෂ්යන්ති තන්නාම්නි භින්නදේශජාඃ|
நீதிக்கு வெற்றி கிடைக்கும்வரை, அவர் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார், மங்கி எரிகின்ற திரியை அணைத்துவிடவுமாட்டார்.
21 යාන්යේතානි වචනානි යිශයියභවිෂ්යද්වාදිනා ප්රෝක්තාන්යාසන්, තානි සඵලාන්යභවන්|
இவருடைய பெயரில் யூதரல்லாதவர்கள் தங்கள் நம்பிக்கையை வைப்பார்கள்.”
22 අනන්තරං ලෝකෛ ස්තත්සමීපම් ආනීතෝ භූතග්රස්තාන්ධමූකෛකමනුජස්තේන ස්වස්ථීකෘතඃ, තතඃ සෝ(අ)න්ධෝ මූකෝ ද්රෂ්ටුං වක්තුඤ්චාරබ්ධවාන්|
அப்பொழுது சிலர், பிசாசு பிடித்த ஒருவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்; அவன் பார்வையற்றவனும், ஊமையுமாய் இருந்தான். இயேசு அவனை குணமாக்கினார்; அவனால் பேசவும் பார்க்கவும் முடிந்தது.
23 අනේන සර්ව්වේ විස්මිතාඃ කථයාඤ්චක්රුඃ, ඒෂඃ කිං දායූදඃ සන්තානෝ නහි?
மக்கள் எல்லோரும் வியப்படைந்து, “இவர் தாவீதின் மகனாய் இருப்பாரோ?” என்றார்கள்.
24 කින්තු ඵිරූශිනස්තත් ශ්රුත්වා ගදිතවන්තඃ, බාල්සිබූබ්නාම්නෝ භූතරාජස්ය සාහාය්යං විනා නායං භූතාන් ත්යාජයති|
ஆனால் பரிசேயர் இதைக் கேட்டபோது, “இந்த ஆள் பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலினாலேயே பிசாசுகளை விரட்டுகிறான்” என்றார்கள்.
25 තදානීං යීශුස්තේෂාම් ඉති මානසං විඥාය තාන් අවදත් කිඤ්චන රාජ්යං යදි ස්වවිපක්ෂාද් භිද්යතේ, තර්හි තත් උච්ඡිද්යතේ; යච්ච කිඤ්චන නගරං වා ගෘහං ස්වවිපක්ෂාද් විභිද්යතේ, තත් ස්ථාතුං න ශක්නෝති|
இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து அவர்களிடம், “தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுகிற எந்த அரசும் பாழாய்ப்போகும். தனக்குத்தானே எதிராகப் பிளவுபடுகிற எந்த ஒரு பட்டணமும் குடும்பமும் நிலைக்காது.
26 තද්වත් ශයතානෝ යදි ශයතානං බහිඃ කෘත්වා ස්වවිපක්ෂාත් පෘථක් පෘථක් භවති, තර්හි තස්ය රාජ්යං කේන ප්රකාරේණ ස්ථාස්යති?
சாத்தானை சாத்தான் விரட்டினால், அவன் தனக்குத்தானே பிளவுபடுகிறவனாய் இருப்பான். அப்படியானால், எப்படி அவனுடைய அரசு நிலைநிற்கும்?
27 අහඤ්ච යදි බාල්සිබූබා භූතාන් ත්යාජයාමි, තර්හි යුෂ්මාකං සන්තානාඃ කේන භූතාන් ත්යාජයන්ති? තස්මාද් යුෂ්මාකම් ඒතද්විචාරයිතාරස්ත ඒව භවිෂ්යන්ති|
நான் பெயல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் மக்கள் யாரைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறார்கள்? எனவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாய் இருப்பார்கள்.
28 කින්තවහං යදීශ්වරාත්මනා භූතාන් ත්යාජයාමි, තර්හීශ්වරස්ය රාජ්යං යුෂ්මාකං සන්නිධිමාගතවත්|
ஆனால் நானோ, பிசாசுகளை இறைவனின் ஆவியானவரால் விரட்டுகிறேன் என்றால், இறைவனுடைய அரசு உங்களிடம் வந்துள்ளது.
29 අන්යඤ්ච කෝපි බලවන්ත ජනං ප්රථමතෝ න බද්ව්වා කේන ප්රකාරේණ තස්ය ගෘහං ප්රවිශ්ය තද්ද්රව්යාදි ලෝඨයිතුං ශක්නෝති? කින්තු තත් කෘත්වා තදීයගෘස්ය ද්රව්යාදි ලෝඨයිතුං ශක්නෝති|
“மேலும் ஒரு பலமுள்ளவனைக் கட்டிப்போடாமல், எப்படி ஒருவனால் அவனுடைய வீட்டிற்குள் நுழைந்து அவனது உடைமைகளை எடுத்துக் கொண்டுபோக முடியும்? அவனைக் கட்டிப்போட்ட பின்பே, அவனுடைய வீட்டைக் கொள்ளையிடமுடியும்.
30 යඃ කශ්චිත් මම ස්වපක්ෂීයෝ නහි ස විපක්ෂීය ආස්තේ, යශ්ච මයා සාකං න සංගෘහ්ලාති, ස විකිරති|
“என்னோடே இராதவன் எனக்கு எதிராக இருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
31 අතඒව යුෂ්මානහං වදාමි, මනුජානාං සර්ව්වප්රකාරපාපානාං නින්දායාශ්ච මර්ෂණං භවිතුං ශක්නෝති, කින්තු පවිත්රස්යාත්මනෝ විරුද්ධනින්දායා මර්ෂණං භවිතුං න ශක්නෝති|
நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒவ்வொரு பாவமும், நிந்தனையும் மனிதருக்கு மன்னிக்கப்படும். ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்திப்பது மன்னிக்கப்படாது.
32 යෝ මනුජසුතස්ය විරුද්ධාං කථාං කථයති, තස්යාපරාධස්ය ක්ෂමා භවිතුං ශක්නෝති, කින්තු යඃ කශ්චිත් පවිත්රස්යාත්මනෝ විරුද්ධාං කථාං කථයති නේහලෝකේ න ප්රේත්ය තස්යාපරාධස්ය ක්ෂමා භවිතුං ශක්නෝති| (aiōn )
மானிடமகனாகிய எனக்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை பேசினால், அவர்களுக்கு அது மன்னிக்கப்படும்; ஆனால் யாராவது பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசினால் அது அவர்களுக்கு மன்னிக்கப்படவே மாட்டாது. இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் அது மன்னிக்கப்பட மாட்டாது. (aiōn )
33 පාදපං යදි භද්රං වදථ, තර්හි තස්ය ඵලමපි සාධු වක්තව්යං, යදි ච පාදපං අසාධුං වදථ, තර්හි තස්ය ඵලමප්යසාධු වක්තව්යං; යතඃ ස්වීයස්වීයඵලේන පාදපඃ පරිචීයතේ|
“ஒரு நல்ல மரத்தை நடுங்கள், அப்பொழுது அதன் கனிகளும் நல்லதாய் இருக்கும். ஒரு கெட்ட மரத்தை நீங்கள் நட்டால், அதன் கனிகளும் கெட்டதாய் இருக்கும். ஏனெனில் ஒரு மரம், அதன் கனிகளினாலேயே இனங்காணப்படுகிறது.
34 රේ භුජගවංශා යූයමසාධවඃ සන්තඃ කථං සාධු වාක්යං වක්තුං ශක්ෂ්යථ? යස්මාද් අන්තඃකරණස්ය පූර්ණභාවානුසාරාද් වදනාද් වචෝ නිර්ගච්ඡති|
விரியன் பாம்புக் குட்டிகளே! தீயவர்களாகிய நீங்கள் நன்மையானதை எப்படிப் பேசுவீர்கள்? ஏனெனில் இருதயத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும்.
35 තේන සාධුර්මානවෝ(අ)න්තඃකරණරූපාත් සාධුභාණ්ඩාගාරාත් සාධු ද්රව්යං නිර්ගමයති, අසාධුර්මානුෂස්ත්වසාධුභාණ්ඩාගාරාද් අසාධුවස්තූනි නිර්ගමයති|
நல்ல மனிதன் தன்னில் நிறைந்திருக்கும் நன்மையிலிருந்து நல்ல காரியங்களை வெளியே கொண்டுவருவான். தீய மனிதன் தன்னில் நிறைந்திருக்கும் தீமையிலிருந்து தீய காரியங்களை வெளியே கொண்டுவருவான்.
36 කින්ත්වහං යුෂ්මාන් වදාමි, මනුජා යාවන්ත්යාලස්යවචාංසි වදන්ති, විචාරදිනේ තදුත්තරමවශ්යං දාතව්යං,
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனிதர் தாங்கள் வீணாகப் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும்.
37 යතස්ත්වං ස්වීයවචෝභි ර්නිරපරාධඃ ස්වීයවචෝභිශ්ච සාපරාධෝ ගණිෂ්යසේ|
உங்கள் வார்த்தைகளினாலேயே நீங்கள் குற்றமற்றவர்களாய்த் தீர்க்கப்படுவீர்கள். உங்கள் வார்த்தைகளினாலேயே நீங்கள் குற்றவாளிகளாயும் தீர்க்கப்படுவீர்கள்.”
38 තදානීං කතිපයා උපාධ්යායාඃ ඵිරූශිනශ්ච ජගදුඃ, හේ ගුරෝ වයං භවත්තඃ කිඤ්චන ලක්ෂ්ම දිදෘක්ෂාමඃ|
அப்பொழுது சில பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியரும் அவரிடம் வந்து, “போதகரே, நாங்கள் உம்மிடமிருந்து ஓர் அடையாளத்தைப் பார்க்க விரும்புகிறோம்” என்று கேட்டார்கள்.
39 තදා ස ප්රත්යුක්තවාන්, දුෂ්ටෝ ව්යභිචාරී ච වංශෝ ලක්ෂ්ම මෘගයතේ, කින්තු භවිෂ්යද්වාදිනෝ යූනසෝ ලක්ෂ්ම විහායාන්යත් කිමපි ලක්ෂ්ම තේ න ප්රදර්ශයිෂ්යන්තේ|
அதற்கு இயேசு, “பொல்லாத, வேசித்தனம் நிறைந்த இந்த தலைமுறையினர் அற்புத அடையாளத்தைக் கேட்கிறார்கள். ஆனால், இறைவாக்கினன் யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
40 යතෝ යූනම් යථා ත්ර්යහෝරාත්රං බෘහන්මීනස්ය කුක්ෂාවාසීත්, තථා මනුජපුත්රෝපි ත්ර්යහෝරාත්රං මේදින්යා මධ්යේ ස්ථාස්යති|
யோனா இரவும் பகலும் மூன்று நாட்கள் பெரியதொரு மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மானிடமகனாகிய நானும் மூன்று நாட்கள் இரவும் பகலும் பூமியின் இருதயத்தில் இருக்கவேண்டும்.
41 අපරං නීනිවීයා මානවා විචාරදින ඒතද්වංශීයානාං ප්රතිකූලම් උත්ථාය තාන් දෝෂිණඃ කරිෂ්යන්ති, යස්මාත්තේ යූනස උපදේශාත් මනාංසි පරාවර්ත්තයාඤ්චක්රිරේ, කින්ත්වත්ර යූනසෝපි ගුරුතර ඒක ආස්තේ|
நியாயத்தீர்ப்பின்போது, நினிவே பட்டணத்து மனிதரும், இந்தத் தலைமுறையினரோடு எழுந்து நின்று, இவர்கள்மீது குற்றஞ் சுமத்துவார்கள்; ஏனெனில் அவர்கள் யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பினார்கள். ஆனால் இப்பொழுதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்.
42 පුනශ්ච දක්ෂිණදේශීයා රාඥී විචාරදින ඒතද්වංශීයානාං ප්රතිකූලමුත්ථාය තාන් දෝෂිණඃ කරිෂ්යති යතඃ සා රාඥී සුලේමනෝ විද්යායාඃ කථාං ශ්රෝතුං මේදින්යාඃ සීම්න ආගච්ඡත්, කින්තු සුලේමනෝපි ගුරුතර ඒකෝ ජනෝ(අ)ත්ර ආස්තේ|
நியாயத்தீர்ப்பின்போது, தென்நாட்டு அரசியும் இந்தத் தலைமுறையினரோடே எழுந்து, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். ஏனெனில், அவள் பூமியின் கடைமுனையிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கும்படி வந்தாளே. ஆனால் சாலொமோனைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார்.
43 අපරං මනුජාද් බහිර්ගතෝ (අ)පවිත්රභූතඃ ශුෂ්කස්ථානේන ගත්වා විශ්රාමං ගවේෂයති, කින්තු තදලභමානඃ ස වක්ති, යස්මා; නිකේතනාද් ආගමං, තදේව වේශ්ම පකාවෘත්ය යාමි|
“தீய ஆவி ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அது வறண்ட இடங்களில் ஓய்வைத் தேடிப்போகிறது. ஆனாலும் அது அந்த ஓய்வைக் கண்டடையாததால்,
44 පශ්චාත් ස තත් ස්ථානම් උපස්ථාය තත් ශූන්යං මාර්ජ්ජිතං ශෝභිතඤ්ච විලෝක්ය ව්රජන් ස්වතෝපි දුෂ්ටතරාන් අන්යසප්තභූතාන් සඞ්ගිනඃ කරෝති|
‘நான் முன்பு விட்டுவந்த வீட்டிற்கே திரும்பவும் போவேன்’ என்று சொல்லும். அது அங்கு போகிறபோது, அந்த வீடு வெறுமையாயும், கூட்டிச் சுத்தமாக்கப்பட்டும், ஒழுங்காக இருப்பதைக் காணும்.
45 තතස්තේ තත් ස්ථානං ප්රවිශ්ය නිවසන්ති, තේන තස්ය මනුජස්ය ශේෂදශා පූර්ව්වදශාතෝතීවාශුභා භවති, ඒතේෂාං දුෂ්ටවංශ්යානාමපි තථෛව ඝටිෂ්යතේ|
அப்பொழுது அந்தத் தீய ஆவி போய், தன்னைப் பார்க்கிலும் பொல்லாத ஏழு தீய ஆவிகளைத் தன்னுடன் கூட்டிக்கொண்டுவந்து அவை அங்கேபோய் வசிக்கின்றன. அதனால் அந்த மனிதனின் இறுதி நிலைமை ஆரம்ப நிலைமையைவிட மோசமானதாகும். இவ்விதமாகவே, இந்த பொல்லாத தலைமுறையினருக்கும் நடக்கும்” என்றார்.
46 මානවේභ්ය ඒතාසාං කථනාං කථනකාලේ තස්ය මාතා සහජාශ්ච තේන සාකං කාඤ්චිත් කථාං කථයිතුං වාඤ්ඡන්තෝ බහිරේව ස්ථිතවන්තඃ|
இயேசு மக்கள் கூட்டத்தோடு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், அவருடைய தாயும், சகோதரர்களும் அவருடன் பேச விரும்பி, வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள்.
47 තතඃ කශ්චිත් තස්මෛ කථිතවාන්, පශ්ය තව ජනනී සහජාශ්ච ත්වයා සාකං කාඤ්චන කථාං කථයිතුං කාමයමානා බහිස්තිෂ්ඨන්ති|
அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “உமது தாயும், உமது சகோதரர்களும் உம்முடன் பேச விரும்பி வெளியே நிற்கிறார்கள்” என்றான்.
48 කින්තු ස තං ප්රත්යවදත්, මම කා ජනනී? කේ වා මම සහජාඃ?
இயேசு அவனிடம், “யார் எனது தாய்? யார் எனது சகோதரர்கள்?” என்று கேட்டார்.
49 පශ්චාත් ශිෂ්යාන් ප්රති කරං ප්රසාර්ය්ය කථිතවාන්, පශ්ය මම ජනනී මම සහජාශ්චෛතේ;
பின்பு அவர் தமது சீடரைச் சுட்டிக்காட்டி, “இவர்களே என் தாயும், என் சகோதரர்களுமாய் இருக்கிறார்கள்.
50 යඃ කශ්චිත් මම ස්වර්ගස්ථස්ය පිතුරිෂ්ටං කර්ම්ම කුරුතේ, සඒව මම භ්රාතා භගිනී ජනනී ච|
எனது பரலோக பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்களே எனது சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்றார்.