< මාර්කඃ 9 >
1 අථ ස තානවාදීත් යුෂ්මභ්යමහං යථාර්ථං කථයාමි, ඊශ්වරරාජ්යං පරාක්රමේණෝපස්ථිතං න දෘෂ්ට්වා මෘත්යුං නාස්වාදිෂ්යන්තේ, අත්ර දණ්ඩායමානානාං මධ්යේපි තාදෘශා ලෝකාඃ සන්ති|
பின்பு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர், இறைவனுடைய அரசு வல்லமையுடன் வருவதைக் காணுமுன், மரணமடைய மாட்டார்கள்” என்றார்.
2 අථ ෂඩ්දිනේභ්යඃ පරං යීශුඃ පිතරං යාකූබං යෝහනඤ්ච ගෘහීත්වා ගිරේරුච්චස්ය නිර්ජනස්ථානං ගත්වා තේෂාං ප්රත්යක්ෂේ මූර්ත්යන්තරං දධාර|
ஆறு நாட்களுக்குபின் இயேசு தம்முடன் பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, உயரமான மலைக்கு ஏறிப்போனார். அங்கே அவர்கள் தனிமையாய் இருக்கையில், அவர்களுக்கு முன்பாக இயேசு மறுரூபமடைந்தார்.
3 තතස්තස්ය පරිධේයම් ඊදෘශම් උජ්ජ්වලහිමපාණඩරං ජාතං යද් ජගති කෝපි රජකෝ න තාදෘක් පාණඩරං කර්ත්තාං ශක්නෝති|
அவருடைய உடைகள் மிகவும் பிரகாசமான வெண்மையாயிருந்தன. அவை இந்தப் பூமியிலுள்ள எவராலும், வெளுக்க முடியாத அளவுக்கு வெண்மையாயிருந்தன.
4 අපරඤ්ච ඒලියෝ මූසාශ්ච තේභ්යෝ දර්ශනං දත්ත්වා යීශුනා සහ කථනං කර්ත්තුමාරේභාතේ|
அத்துடன் எலியாவும் மோசேயும் அவர்களுக்குமுன் தோன்றி, இயேசுவுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.
5 තදා පිතරෝ යීශුමවාදීත් හේ ගුරෝ(අ)ස්මාකමත්ර ස්ථිතිරුත්තමා, තතඒව වයං ත්වත්කෘතේ ඒකාං මූසාකෘතේ ඒකාම් ඒලියකෘතේ චෛකාං, ඒතාස්තිස්රඃ කුටී ර්නිර්ම්මාම|
உடனே பேதுரு இயேசுவிடம், “போதகரே, நாம் இங்கே இருப்பது நல்லது. ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக, நாம் மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றான்.
6 කින්තු ස යදුක්තවාන් තත් ස්වයං න බුබුධේ තතඃ සර්ව්වේ බිභයාඤ්චක්රුඃ|
அவர்கள் மிகவும் பயமடைந்திருந்தபடியால், என்ன சொல்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை.
7 ඒතර්හි පයෝදස්තාන් ඡාදයාමාස, මමයාං ප්රියඃ පුත්රඃ කථාසු තස්ය මනාංසි නිවේශයතේති නභෝවාණී තන්මේද්යාන්නිර්යයෞ|
அப்பொழுது ஒரு மேகம் தோன்றி, அவர்களை மூடிக்கொண்டது. அந்த மேகத்திலிருந்து ஒரு குரல் கேட்டது: “இவர் என் மகன், நான் இவரில் அன்பாயிருக்கிறேன். இவர் கூறுவதைக் கேளுங்கள்.”
8 අථ හඨාත්තේ චතුර්දිශෝ දෘෂ්ට්වා යීශුං විනා ස්වෛඃ සහිතං කමපි න දදෘශුඃ|
திடீரென அவர்கள் சுற்றிப் பார்த்தபோது, இயேசுவைத் தவிர தங்களோடு வேறு எவரையும் அவர்கள் காணவில்லை.
9 තතඃ පරං ගිරේරවරෝහණකාලේ ස තාන් ගාඪම් දූත්යාදිදේශ යාවන්නරසූනෝඃ ශ්මශානාදුත්ථානං න භවති, තාවත් දර්ශනස්යාස්ය වාර්ත්තා යුෂ්මාභිඃ කස්මෛචිදපි න වක්තව්යා|
அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, மானிடமகனாகிய தான் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்திருக்கும் வரைக்கும், அவர்கள் பார்த்ததை வேறு ஒருவருக்கும் சொல்லக்கூடாது, என்று இயேசு அவர்களுக்கு உத்தரவிட்டார்.
10 තදා ශ්මශානාදුත්ථානස්ය කෝභිප්රාය ඉති විචාර්ය්ය තේ තද්වාක්යං ස්වේෂු ගෝපායාඤ්චක්රිරේ|
அவர்கள் இந்தக் காரியத்தைத் தங்களுக்குள்ளேயே வைத்து, “இறந்தோரில் இருந்து உயிர்த்தெழுவது என்றால் என்ன?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
11 අථ තේ යීශුං පප්රච්ඡුඃ ප්රථමත ඒලියේනාගන්තව්යම් ඉති වාක්යං කුත උපාධ්යායා ආහුඃ?
அவர்கள் இயேசுவிடம், “முதலாவது எலியா வரவேண்டும் என்று மோசேயின் சட்ட ஆசிரியர்கள் சொல்கிறார்களே; அது ஏன்?” என்று கேட்டார்கள்.
12 තදා ස ප්රත්යුවාච, ඒලියඃ ප්රථමමේත්ය සර්ව්වකාර්ය්යාණි සාධයිෂ්යති; නරපුත්රේ ච ලිපි ර්යථාස්තේ තථෛව සෝපි බහුදුඃඛං ප්රාප්යාවඥාස්යතේ|
அதற்கு இயேசு, “உண்மையாக எலியாவே முதலாவதாய் வந்து, எல்லா காரியங்களையும், முந்தைய நிலைக்குக் கொண்டுவருவான். அப்படியானால் மானிடமகனாகிய நான் அதிகமாகத் துன்பப்பட்டு, புறக்கணிக்கப்படவேண்டும் என்று எழுதியிருக்கிறதே அது ஏன்?
13 කින්ත්වහං යුෂ්මාන් වදාමි, ඒලියාර්ථේ ලිපි ර්යථාස්තේ තථෛව ස ඒත්ය යයෞ, ලෝකා: ස්වේච්ඡානුරූපං තමභිව්යවහරන්ති ස්ම|
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எலியா வந்துவிட்டான். அவனைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, மக்கள் தாங்கள் விரும்பியபடியெல்லாம் அவனுக்குச் செய்தார்கள்” என்றார்.
14 අනන්තරං ස ශිෂ්යසමීපමේත්ය තේෂාං චතුඃපාර්ශ්වේ තෛඃ සහ බහුජනාන් විවදමානාන් අධ්යාපකාංශ්ච දෘෂ්ටවාන්;
அவர்கள் மற்றச் சீடர்களிடம் வந்தபோது, அவர்களைச் சுற்றி ஒரு பெருங்கூட்டமான மக்கள் சூழ்ந்திருப்பதையும், மோசேயின் சட்ட ஆசிரியர்கள் சீடர்களுடன் விவாதித்துக் கொண்டிருப்பதையும் கண்டார்கள்.
15 කින්තු සර්ව්වලෝකාස්තං දෘෂ්ට්වෛව චමත්කෘත්ය තදාසන්නං ධාවන්තස්තං ප්රණේමුඃ|
மக்கள் எல்லோரும் இயேசுவைக் கண்ட உடனே வியப்பு நிறைந்தவர்களாய், ஓடிப்போய் அவரை வாழ்த்தினார்கள்.
16 තදා යීශුරධ්යාපකානප්රාක්ෂීද් ඒතෛඃ සහ යූයං කිං විවදධ්වේ?
இயேசு அவர்களிடம், “நீங்கள் எதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
17 තතෝ ලෝකානාං කශ්චිදේකඃ ප්රත්යවාදීත් හේ ගුරෝ මම සූනුං මූකං භූතධෘතඤ්ච භවදාසන්නම් ආනයං|
மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன், “போதகரே, நான் என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். அவனை ஒரு தீய ஆவி பிடித்திருப்பதால், அவன் பேசும் ஆற்றலை இழந்துவிட்டான்.
18 යදාසෞ භූතස්තමාක්රමතේ තදෛව පාතසති තථා ස ඵේණායතේ, දන්තෛර්දන්තාන් ඝර්ෂති ක්ෂීණෝ භවති ච; තතෝ හේතෝස්තං භූතං ත්යාජයිතුං භවච්ඡිෂ්යාන් නිවේදිතවාන් කින්තු තේ න ශේකුඃ|
அது அவனைப் பிடிக்கும் போதெல்லாம், அவனைத் தரையில் வீழ்த்துகிறது. அவன் வாயில் நுரைதள்ளி, பல்லைக்கடித்து நெரிக்கிறான், அவனது உடல் விறைத்துப் போகிறது. நான் அந்தத் தீய ஆவியைத் துரத்தும்படி, உமது சீடர்களிடம் கேட்டேன்; ஆனால் அவர்களால் அதைத் துரத்த முடியவில்லை” என்றான்.
19 තදා ස තමවාදීත්, රේ අවිශ්වාසිනඃ සන්තානා යුෂ්මාභිඃ සහ කති කාලානහං ස්ථාස්යාමි? අපරාන් කති කාලාන් වා ව ආචාරාන් සහිෂ්යේ? තං මදාසන්නමානයත|
அப்பொழுது இயேசு, “விசுவாசமில்லாத தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? அந்தச் சிறுவனை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார்.
20 තතස්තත්සන්නිධිං ස ආනීයත කින්තු තං දෘෂ්ට්වෛව භූතෝ බාලකං ධෘතවාන්; ස ච භූමෞ පතිත්වා ඵේණායමානෝ ලුලෝඨ|
எனவே அவர்கள், அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அந்த தீய ஆவி இயேசுவைக் கண்டவுடனே, சிறுவனை வலிப்புறச் செய்து, அவனைக் கீழே வீழ்த்தியது. அவன் தரையில் விழுந்து புரண்டான். அவன் வாயிலிருந்து நுரை வந்தது.
21 තදා ස තත්පිතරං පප්රච්ඡ, අස්යේදෘශී දශා කති දිනානි භූතා? තතඃ සෝවාදීත් බාල්යකාලාත්|
இயேசு அந்தச் சிறுவனுடைய தகப்பனிடம், “இது எவ்வளவு காலமாக இப்படியிருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு அவன், “இவனுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே இப்படி இருக்கிறது” என்றான்.
22 භූතෝයං තං නාශයිතුං බහුවාරාන් වහ්නෞ ජලේ ච න්යක්ෂිපත් කින්තු යදි භවාන කිමපි කර්ත්තාං ශක්නෝති තර්හි දයාං කෘත්වාස්මාන් උපකරෝතු|
“இந்த தீய ஆவி இவனைக் கொல்லும்படி நெருப்புக்குள்ளும், தண்ணீருக்குள்ளும் பலமுறை வீழ்த்தியிருக்கிறது. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால், எங்கள்மேல் இரக்கங்கொண்டு, எங்களுக்கு உதவிசெய்யும்” என்றான்.
23 තදා යීශුස්තමවදත් යදි ප්රත්යේතුං ශක්නෝෂි තර්හි ප්රත්යයිනේ ජනාය සර්ව්වං සාධ්යම්|
அதற்கு இயேசு, “சாத்தியமா என்று கேட்கிறாயோ? விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் சாத்தியம்” என்றார்.
24 තතස්තත්ක්ෂණං තද්බාලකස්ය පිතා ප්රෝච්චෛ රූවන් සාශ්රුනේත්රඃ ප්රෝවාච, ප්රභෝ ප්රත්යේමි මමාප්රත්යයං ප්රතිකුරු|
உடனே அந்தச் சிறுவனின் தகப்பன், “நான் விசுவாசிக்கிறேன்; ஆனால், என் அவிசுவாசம் நீங்க எனக்கு உதவிசெய்யும்” என்றான்.
25 අථ යීශු ර්ලෝකසඞ්ඝං ධාවිත්වායාන්තං දෘෂ්ට්වා තමපූතභූතං තර්ජයිත්වා ජගාද, රේ බධිර මූක භූත ත්වමේතස්මාද් බහිර්භව පුනඃ කදාපි මාශ්රයෛනං ත්වාමහම් ඉත්යාදිශාමි|
மக்கள் திரண்டு, அவ்விடத்திற்கு ஓடிவருவதை இயேசு கண்டார். அப்போது, அவர் அந்த அசுத்த ஆவியைப் பார்த்து, “செவிடும், ஊமையுமான ஆவியே, இவனைவிட்டு வெளியே போ; இனி ஒருபோதும் இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்றார்.
26 තදා ස භූතශ්චීත්ශබ්දං කෘත්වා තමාපීඩ්ය බහිර්ජජාම, තතෝ බාලකෝ මෘතකල්පෝ බභූව තස්මාදයං මෘතඉත්යනේකේ කථයාමාසුඃ|
அந்தத் தீய ஆவி கூச்சலிட்டு, அவனை அதிகமாய் வலிப்புக்குள்ளாக்கி, அவனைவிட்டு வெளியே வந்தது. பலர் அவனைப் பார்த்து, “இவன் இறந்துவிட்டான்” என்று சொல்லுமளவிற்கு அவன் இறந்தவனைப்போல கிடந்தான்.
27 කින්තු කරං ධෘත්වා යීශුනෝත්ථාපිතඃ ස උත්තස්ථෞ|
ஆனால் இயேசுவோ அவனது கையைப் பிடித்து, அவனைத் தூக்கி நிறுத்தினார். அவன் எழுந்து நின்றான்.
28 අථ යීශෞ ගෘහං ප්රවිෂ්ටේ ශිෂ්යා ගුප්තං තං පප්රච්ඡුඃ, වයමේනං භූතං ත්යාජයිතුං කුතෝ න ශක්තාඃ?
பின்பு இயேசு வீட்டிற்குள் போனபோது, அவருடைய சீடர்கள் தனியாக அவரிடம், “எங்களால் ஏன் அதைத் துரத்த முடியவில்லை?” என்று கேட்டார்கள்.
29 ස උවාච, ප්රාර්ථනෝපවාසෞ විනා කේනාප්යන්යේන කර්ම්මණා භූතමීදෘශං ත්යාජයිතුං න ශක්යං|
அதற்கு இயேசு, “இவ்வகையான தீய ஆவி மன்றாட்டினாலும், உபவாசத்தினாலும் மட்டுமே வெளியேறும்” என்றார்.
30 අනන්තරං ස තත්ස්ථානාදිත්වා ගාලීල්මධ්යේන යයෞ, කින්තු තත් කෝපි ජානීයාදිති ස නෛච්ඡත්|
அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயா வழியாகக் கடந்து சென்றார்கள். தாம் எங்கே இருக்கிறோம் என்று, யாரும் அறிவதை இயேசு விரும்பவில்லை.
31 අපරඤ්ච ස ශිෂ්යානුපදිශන් බභාෂේ, නරපුත්රෝ නරහස්තේෂු සමර්පයිෂ්යතේ තේ ච තං හනිෂ්යන්ති තෛස්තස්මින් හතේ තෘතීයදිනේ ස උත්ථාස්යතීති|
ஏனெனில் இயேசு, தமது சீடருக்குப் போதித்துக் கொண்டிருந்தார். அவர் அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் மானிடமகனாகிய என்னைக் கொலைசெய்வார்கள், மூன்று நாட்களுக்குப்பின் நான் உயிருடன் எழுந்திருப்பேன்” என்று சொன்னார்.
32 කින්තු තත්කථාං තේ නාබුධ්යන්ත ප්රෂ්ටුඤ්ච බිභ්යඃ|
ஆனால் அவர்களோ, இயேசு சொன்னதை விளங்கிக்கொள்ளவில்லை. அவர் சொன்னதைக்குறித்து அவரிடம் கேட்கவும் பயந்தார்கள்.
33 අථ යීශුඃ කඵර්නාහූම්පුරමාගත්ය මධ්යේගෘහඤ්චේත්ය තානපෘච්ඡද් වර්ත්මමධ්යේ යූයමන්යෝන්යං කිං විවදධ්වේ ස්ම?
அவர்கள் கப்பர்நகூமுக்கு வந்தார்கள். இயேசு வீட்டில் இருந்தபோது, சீடர்களிடம், “வழியிலே நீங்கள் என்னத்தைப்பற்றி விவாதித்துக்கொண்டு வந்தீர்கள்?” என்று கேட்டார்.
34 කින්තු තේ නිරුත්තරාස්තස්ථු ර්යස්මාත්තේෂාං කෝ මුඛ්ය ඉති වර්ත්මානි තේ(අ)න්යෝන්යං ව්යවදන්ත|
அவர்கள் வழியில், தங்களில் யார் பெரியவன் என்று வாக்குவாதமும் பண்ணிக்கொண்டு வந்தபடியால், மவுனமாய் இருந்தார்கள்.
35 තතඃ ස උපවිශ්ය ද්වාදශශිෂ්යාන් ආහූය බභාෂේ යඃ කශ්චිත් මුඛ්යෝ භවිතුමිච්ඡති ස සර්ව්වේභ්යෝ ගෞණඃ සර්ව්වේෂාං සේවකශ්ච භවතු|
இயேசு உட்கார்ந்து, பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடம் வரும்படி கூப்பிட்டு, “யாராவது முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவனே எல்லாரிலும் கடைசியானவனாக இருக்கவேண்டும். அவன் எல்லோருக்கும் வேலைக்காரனாகவும் இருக்கவேண்டும்” என்றார்.
36 තදා ස බාලකමේකං ගෘහීත්වා මධ්යේ සමුපාවේශයත් තතස්තං ක්රෝඩේ කෘත්වා තානවාදාත්
இயேசு ஒரு சிறுபிள்ளையைத் தூக்கியெடுத்து, அவர்கள் நடுவில் நிறுத்தி, தமது கைகளால் அணைத்துக்கொண்டு, அவர்களுக்குச் சொன்னதாவது:
37 යඃ කශ්චිදීදෘශස්ය කස්යාපි බාලස්යාතිථ්යං කරෝති ස මමාතිථ්යං කරෝති; යඃ කශ්චින්මමාතිථ්යං කරෝති ස කේවලම් මමාතිථ්යං කරෝති තන්න මත්ප්රේරකස්යාප්යාතිථ්යං කරෝති|
“எனது பெயரில், இந்தப் பிள்ளைகளில் ஒருவரை ஏற்றுக்கொள்கிறவன் யாரோ, அவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்” என்றார்.
38 අථ යෝහන් තමබ්රවීත් හේ ගුරෝ, අස්මාකමනනුගාමිනම් ඒකං ත්වාන්නාම්නා භූතාන් ත්යාජයන්තං වයං දෘෂ්ටවන්තඃ, අස්මාකමපශ්චාද්ගාමිත්වාච්ච තං න්යෂේධාම|
அப்பொழுது யோவான் அவரிடம், “போதகரே, ஒருவன் உமது பெயரினால் பிசாசுகளைத் துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் எங்களில் ஒருவன் அல்லாதபடியினால், நாங்கள் அவனைத் தடை செய்தோம்” என்றான்.
39 කින්තු යීශුරවදත් තං මා නිෂේධත්, යතෝ යඃ කශ්චින් මන්නාම්නා චිත්රං කර්ම්ම කරෝති ස සහසා මාං නින්දිතුං න ශක්නෝති|
இயேசு அவர்களிடம், “அவனைத் தடைசெய்ய வேண்டாம். எனது பெயரினால் அற்புதத்தைச் செய்கிறவன், சீக்கிரமாய் என்னைக்குறித்துத் தீமையாய்ப் பேசமாட்டான்.
40 තථා යඃ කශ්චිද් යුෂ්මාකං විපක්ෂතාං න කරෝති ස යුෂ්මාකමේව සපක්ෂඃ|
ஏனெனில் நமக்கு விரோதமாய் இல்லாதவன், நமக்குச் சாதகமாகவே இருக்கிறான்.
41 යඃ කශ්චිද් යුෂ්මාන් ඛ්රීෂ්ටශිෂ්යාන් ඥාත්වා මන්නාම්නා කංසෛකේන පානීයං පාතුං දදාති, යුෂ්මානහං යථාර්ථං වච්මි, ස ඵලේන වඤ්චිතෝ න භවිෂ්යති|
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்ற காரணத்தால், யாராவது என் பெயரில் உங்களுக்கு ஒரு குவளை தண்ணீர் கொடுத்தால், அவன் தனக்குரிய வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டான்” என்றார்.
42 කින්තු යදි කශ්චින් මයි විශ්වාසිනාමේෂාං ක්ෂුද්රප්රාණිනාම් ඒකස්යාපි විඝ්නං ජනයති, තර්හි තස්යෛතත්කර්ම්ම කරණාත් කණ්ඨබද්ධපේෂණීකස්ය තස්ය සාගරාගාධජල මජ්ජනං භද්රං|
யாராவது என்னில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியவரில் ஒருவரைப் பாவத்தில் விழப்பண்ணினால், அவனுடைய கழுத்திலே பெரிய திரிகைக் கல்லொன்றைக் கட்டி, கடலின் ஆழத்தில் அவன் தள்ளப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும்.
43 අතඃ ස්වකරෝ යදි ත්වාං බාධතේ තර්හි තං ඡින්ධි;
உனது கை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கைகளுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் போவதைப் பார்க்கிலும், ஊனமுள்ளவனாய் நித்திய வாழ்விற்குள் போவது சிறந்தது. (Geenna )
44 යස්මාත් යත්ර කීටා න ම්රියන්තේ වහ්නිශ්ච න නිර්ව්වාති, තස්මින් අනිර්ව්වාණානලනරකේ කරද්වයවස්තව ගමනාත් කරහීනස්ය ස්වර්ගප්රවේශස්තව ක්ෂේමං| (Geenna )
நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. ()
45 යදි තව පාදෝ විඝ්නං ජනයති තර්හි තං ඡින්ධි,
உனது கால் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கால்களுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், முடவனாய் நித்திய வாழ்விற்குள் போவது உனக்குச் சிறந்தது. (Geenna )
46 යතෝ යත්ර කීටා න ම්රියන්තේ වහ්නිශ්ච න නිර්ව්වාති, තස්මින් (අ)නිර්ව්වාණවහ්නෞ නරකේ ද්විපාදවතස්තව නික්ෂේපාත් පාදහීනස්ය ස්වර්ගප්රවේශස්තව ක්ෂේමං| (Geenna )
நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. ()
47 ස්වනේත්රං යදි ත්වාං බාධතේ තර්හි තදප්යුත්පාටය, යතෝ යත්ර කීටා න ම්රියන්තේ වහ්නිශ්ච න නිර්ව්වාති,
உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எடுத்துவிடு. நீ இரண்டு கண்களுடையவனாய் நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஒரு கண்ணுடன் இறைவனின் அரசிற்குள் போவது உனக்குச் சிறந்தது. (Geenna )
48 තස්මින (අ)නිර්ව්වාණවහ්නෞ නරකේ ද්විනේත්රස්ය තව නික්ෂේපාද් ඒකනේත්රවත ඊශ්වරරාජ්යේ ප්රවේශස්තව ක්ෂේමං| (Geenna )
நரகத்தில், “‘அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைந்து போவதுமில்லை.’
49 යථා සර්ව්වෝ බලි ර්ලවණාක්තඃ ක්රියතේ තථා සර්ව්වෝ ජනෝ වහ්නිරූපේණ ලවණාක්තඃ කාරිෂ්යතේ|
ஒவ்வொரு பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, ஒவ்வொருவரும் நெருப்பினால் சோதிக்கப்படுவார்கள்.
50 ලවණං භද්රං කින්තු යදි ලවණේ ස්වාදුතා න තිෂ්ඨති, තර්හි කථම් ආස්වාද්යුක්තං කරිෂ්යථ? යූයං ලවණයුක්තා භවත පරස්පරං ප්රේම කුරුත|
“உப்பு நல்லது, ஆனால் அது அதன் உவர்ப்புத் தன்மையை இழந்துபோனால் மீண்டும் அதை எப்படி உவர்ப்பு உடையதாக்க முடியும்? உங்களுக்குள்ளே சாரமுள்ள உறவு உடையவர்களாயிருங்கள். ஒருவரோடொருவர் சமாதானமாயும் இருங்கள்” என்றார்.