< මාර්කඃ 11 >
1 අනන්තරං තේෂු යිරූශාලමඃ සමීපස්ථයෝ ර්බෛත්ඵගීබෛථනීයපුරයෝරන්තිකස්ථං ජෛතුනනාමාද්රිමාගතේෂු යීශුඃ ප්රේෂණකාලේ ද්වෞ ශිෂ්යාවිදං වාක්යං ජගාද,
௧இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேமுக்கு அருகில் வந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சென்றபோது, அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:
2 යුවාමමුං සම්මුඛස්ථං ග්රාමං යාතං, තත්ර ප්රවිශ්ය යෝ නරං නාවහත් තං ගර්ද්දභශාවකං ද්රක්ෂ්යථස්තං මෝචයිත්වානයතං|
௨உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; அங்கு சென்றவுடன், மனிதர்கள் ஒருவனும் ஒருநாளும் ஏறாத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைப் பார்ப்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள்.
3 කින්තු යුවාං කර්ම්මේදං කුතඃ කුරුථඃ? කථාමිමාං යදි කෝපි පෘච්ඡති තර්හි ප්රභෝරත්ර ප්රයෝජනමස්තීති කථිතේ ස ශීඝ්රං තමත්ර ප්රේෂයිෂ්යති|
௩ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று யாராவது உங்களிடம் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்லுங்கள்; உடனே அதை இந்த இடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
4 තතස්තෞ ගත්වා ද්විමාර්ගමේලනේ කස්යචිද් ද්වාරස්ය පාර්ශ්වේ තං ගර්ද්දභශාවකං ප්රාප්ය මෝචයතඃ,
௪அவர்கள்போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைப் பார்த்து, அதை அவிழ்த்தார்கள்.
5 ඒතර්හි තත්රෝපස්ථිතලෝකානාං කශ්චිද් අපෘච්ඡත්, ගර්ද්දභශිශුං කුතෝ මෝචයථඃ?
௫அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் இந்தக் குட்டியை எதற்கு அவிழ்க்கிறீர்கள் என்றுக் கேட்டார்கள்.
6 තදා යීශෝරාඥානුසාරේණ තේභ්යඃ ප්රත්යුදිතේ තත්ක්ෂණං තමාදාතුං තේ(අ)නුජඥුඃ|
௬இயேசு சொன்னபடியே அவர்களுக்குப் பதில் சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள்.
7 අථ තෞ යීශෝඃ සන්නිධිං ගර්ද්දභශිශුම් ආනීය තදුපරි ස්වවස්ත්රාණි පාතයාමාසතුඃ; තතඃ ස තදුපරි සමුපවිෂ්ටඃ|
௭அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து, அதன்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார்.
8 තදානේකේ පථි ස්වවාසාංසි පාතයාමාසුඃ, පරෛශ්ච තරුශාඛාශ්ඡිතවා මාර්ගේ විකීර්ණාඃ|
௮அநேகர் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி சாலைகளில் போட்டார்கள்.
9 අපරඤ්ච පශ්චාද්ගාමිනෝ(අ)ග්රගාමිනශ්ච සර්ව්වේ ජනා උචෛඃස්වරේණ වක්තුමාරේභිරේ, ජය ජය යඃ පරමේශ්වරස්ය නාම්නාගච්ඡති ස ධන්ය ඉති|
௯முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர்;
10 තථාස්මාකමං පූර්ව්වපුරුෂස්ය දායූදෝ යද්රාජ්යං පරමේශ්වරනාම්නායාති තදපි ධන්යං, සර්ව්වස්මාදුච්ඡ්රායේ ස්වර්ගේ ඊශ්වරස්ය ජයෝ භවේත්|
௧0கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
11 ඉත්ථං යීශු ර්යිරූශාලමි මන්දිරං ප්රවිශ්ය චතුර්දික්ස්ථානි සර්ව්වාණි වස්තූනි දෘෂ්ටවාන්; අථ සායංකාල උපස්ථිතේ ද්වාදශශිෂ්යසහිතෝ බෛථනියං ජගාම|
௧௧அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்திற்குச் சென்று, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து, மாலைநேரத்தில், பன்னிரண்டு சீடர்களுடன் பெத்தானியாவிற்குப் போனார்.
12 අපරේහනි බෛථනියාද් ආගමනසමයේ ක්ෂුධාර්ත්තෝ බභූව|
௧௨அடுத்தநாளில் அவர்கள் பெத்தானியாவிலிருந்து திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது.
13 තතෝ දූරේ සපත්රමුඩුම්බරපාදපං විලෝක්ය තත්ර කිඤ්චිත් ඵලං ප්රාප්තුං තස්ය සන්නිකෘෂ්ටං යයෞ, තදානීං ඵලපාතනස්ය සමයෝ නාගච්ඡති| තතස්තත්රෝපස්ථිතඃ පත්රාණි විනා කිමප්යපරං න ප්රාප්ය ස කථිතවාන්,
௧௩அப்பொழுது இலைகள் உள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலேப் பார்த்து, அதில் அத்திப்பழம் கிடைக்குமா? என்று பார்க்க வந்தார். அது அத்திப்பழக் காலமாக இல்லாததினால், அவர் மரத்தின் அருகில் வந்தபோது அதில் இலைகளைத்தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை.
14 අද්යාරභ්ය කෝපි මානවස්ත්වත්තඃ ඵලං න භුඤ්ජීත; ඉමාං කථාං තස්ය ශිෂ්යාඃ ශුශ්රුවුඃ| (aiōn )
௧௪அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள். (aiōn )
15 තදනන්තරං තේෂු යිරූශාලමමායාතේෂු යීශු ර්මන්දිරං ගත්වා තත්රස්ථානාං බණිජාං මුද්රාසනානි පාරාවතවික්රේතෘණාම් ආසනානි ච න්යුබ්ජයාඤ්චකාර සර්ව්වාන් ක්රේතෘන් වික්රේතෘංශ්ච බහිශ්චකාර|
௧௫அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்திற்குச் சென்று, ஆலயத்தில் விற்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரர்களுடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய இருக்கைகளையும் கவிழ்த்து,
16 අපරං මන්දිරමධ්යේන කිමපි පාත්රං වෝඪුං සර්ව්වජනං නිවාරයාමාස|
௧௬ஒருவனும் தேவாலயத்தின்வழியாக எந்தவொரு பொருளையும் கொண்டுபோகவிடாமல்:
17 ලෝකානුපදිශන් ජගාද, මම ගෘහං සර්ව්වජාතීයානාං ප්රාර්ථනාගෘහම් ඉති නාම්නා ප්රථිතං භවිෂ්යති ඒතත් කිං ශාස්ත්රේ ලිඛිතං නාස්ති? කින්තු යූයං තදේව චෝරාණාං ගහ්වරං කුරුථ|
௧௭என்னுடைய வீடு எல்லா மக்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர்களின் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார்.
18 ඉමාං වාණීං ශ්රුත්වාධ්යාපකාඃ ප්රධානයාජකාශ්ච තං යථා නාශයිතුං ශක්නුවන්ති තථෝපායං මෘගයාමාසුඃ, කින්තු තස්යෝපදේශාත් සර්ව්වේ ලෝකා විස්මයං ගතා අතස්තේ තස්මාද් බිභ්යුඃ|
௧௮அதை வேதபண்டிதர்களும் பிரதான ஆசாரியர்களும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வழிதேடினார்கள்; ஆனாலும் மக்களெல்லோரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டதினாலே அவருக்கு பயந்திருந்தார்கள்.
19 අථ සායංසමය උපස්ථිතේ යීශුර්නගරාද් බහිර්වව්රාජ|
௧௯மாலைநேரத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் நகரத்திலிருந்து புறப்பட்டு வெளியே போனார்கள்.
20 අනන්තරං ප්රාතඃකාලේ තේ තේන මාර්ගේණ ගච්ඡන්තස්තමුඩුම්බරමහීරුහං සමූලං ශුෂ්කං දදෘශුඃ|
௨0அடுத்தநாள் காலையிலே அவர்கள் அந்தவழியாக போகும்போது, அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைப் பார்த்தார்கள்.
21 තතඃ පිතරඃ පූර්ව්වවාක්යං ස්මරන් යීශුං බභාෂං, හේ ගුරෝ පශ්යතු ය උඩුම්බරවිටපී භවතා ශප්තඃ ස ශුෂ්කෝ බභූව|
௨௧பேதுரு நினைத்துப்பார்த்து, இயேசுவிடம்: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போனது என்றான்.
22 තතෝ යීශුඃ ප්රත්යවාදීත්, යූයමීශ්වරේ විශ්වසිත|
௨௨இயேசு அவர்களைப் பார்த்து: தேவனிடம் விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள்.
23 යුෂ්මානහං යථාර්ථං වදාමි කෝපි යද්යේතද්ගිරිං වදති, ත්වමුත්ථාය ගත්වා ජලධෞ පත, ප්රෝක්තමිදං වාක්යමවශ්යං ඝටිෂ්යතේ, මනසා කිමපි න සන්දිහ්ය චේදිදං විශ්වසේත් තර්හි තස්ය වාක්යානුසාරේණ තද් ඝටිෂ්යතේ|
௨௩யாராவது இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, கடலில் தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே நடக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
24 අතෝ හේතෝරහං යුෂ්මාන් වච්මි, ප්රාර්ථනාකාලේ යද්යදාකාංක්ෂිෂ්යධ්වේ තත්තදවශ්යං ප්රාප්ස්යථ, ඉත්ථං විශ්වසිත, තතඃ ප්රාප්ස්යථ|
௨௪எனவே, நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.
25 අපරඤ්ච යුෂ්මාසු ප්රාර්ථයිතුං සමුත්ථිතේෂු යදි කෝපි යුෂ්මාකම් අපරාධී තිෂ්ඨති, තර්හි තං ක්ෂමධ්වං, තථා කෘතේ යුෂ්මාකං ස්වර්ගස්ථඃ පිතාපි යුෂ්මාකමාගාංමි ක්ෂමිෂ්යතේ|
௨௫நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்மேல் உங்களுக்கு ஏதாவது குறை உண்டாயிருக்கும் என்றால், பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதா உங்களுடைய தவறுகளை உங்களுக்கு மன்னிப்பதற்காக, அந்தக் குறையை நீங்கள் அவனுக்கு மன்னியுங்கள்.
26 කින්තු යදි න ක්ෂමධ්වේ තර්හි වඃ ස්වර්ගස්ථඃ පිතාපි යුෂ්මාකමාගාංසි න ක්ෂමිෂ්යතේ|
௨௬நீங்கள் மன்னிக்காமலிருந்தால், பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதாவும் உங்களுடைய தவறுகளை மன்னிக்கமாட்டார் என்றார்.
27 අනන්තරං තේ පුන ර්යිරූශාලමං ප්රවිවිශුඃ, යීශු ර්යදා මධ්යේමන්දිරම් ඉතස්තතෝ ගච්ඡති, තදානීං ප්රධානයාජකා උපාධ්යායාඃ ප්රාඤ්චශ්ච තදන්තිකමේත්ය කථාමිමාං පප්රච්ඡුඃ,
௨௭அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கும்போது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அவரிடம் வந்து:
28 ත්වං කේනාදේශේන කර්ම්මාණ්යේතානි කරෝෂි? තථෛතානි කර්ම්මාණි කර්ත්තාං කේනාදිෂ්ටෝසි?
௨௮நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள்.
29 තතෝ යීශුඃ ප්රතිගදිතවාන් අහමපි යුෂ්මාන් ඒකකථාං පෘච්ඡාමි, යදි යූයං තස්යා උත්තරං කුරුථ, තර්හි කයාඥයාහං කර්ම්මාණ්යේතානි කරෝමි තද් යුෂ්මභ්යං කථයිෂ්යාමි|
௨௯இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு பதில் சொல்லுங்கள், அப்பொழுது நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லுவேன்.
30 යෝහනෝ මජ්ජනම් ඊශ්වරාත් ජාතං කිං මානවාත්? තන්මහ්යං කථයත|
௩0யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டானதா அல்லது மனிதர்களால் உண்டானாதா என்று எனக்கு பதில் சொல்லுங்கள் என்றார்.
31 තේ පරස්පරං විවේක්තුං ප්රාරේභිරේ, තද් ඊශ්වරාද් බභූවේති චේද් වදාමස්තර්හි කුතස්තං න ප්රත්යෛත? කථමේතාං කථයිෂ්යති|
௩௧அதற்கு அவர்கள்: தேவனால் உண்டானது என்று சொன்னால், பின்பு ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.
32 මානවාද් අභවදිති චේද් වදාමස්තර්හි ලෝකේභ්යෝ භයමස්ති යතෝ හේතෝඃ සර්ව්වේ යෝහනං සත්යං භවිෂ්යද්වාදිනං මන්යන්තේ|
௩௨எல்லோரும் யோவானை உண்மையான தீர்க்கதரிசி என்று நினைக்கிறார்கள். எனவே மக்களுக்குப் பயப்பட்டதினால், மனிதர்களால் உண்டானது என்று சொல்லமுடியாமல், தங்களுக்குள் ஆலோசனைபண்ணி;
33 අතඒව තේ යීශුං ප්රත්යවාදිෂු ර්වයං තද් වක්තුං න ශක්නුමඃ| යීශුරුවාච, තර්හි යේනාදේශේන කර්ම්මාණ්යේතානි කරෝමි, අහමපි යුෂ්මභ්යං තන්න කථයිෂ්යාමි|
௩௩இயேசுவிற்கு மறுமொழியாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது இயேசு: நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லமாட்டேன் என்றார்.