< ලූකඃ 1 >

1 ප්‍රථමතෝ යේ සාක්‍ෂිණෝ වාක්‍යප්‍රචාරකාශ්චාසන් තේ(අ)ස්මාකං මධ්‍යේ යද්‍යත් සප්‍රමාණං වාක්‍යමර්පයන්ති ස්ම
மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, நமது மத்தியில் நிறைவேறிய நிகழ்வுகளின் விவரத்தை ஒழுங்காக எழுத, அநேகர் முன்வந்தார்கள்.
2 තදනුසාරතෝ(අ)න්‍යේපි බහවස්තද්වෘත්තාන්තං රචයිතුං ප්‍රවෘත්තාඃ|
துவக்கத்திலிருந்து கண்கண்ட சாட்சிகளாகவும், வார்த்தையை அறிவிக்கும் ஊழியர்களாகவும் இருந்த அவர்கள், எங்களுக்குக் கொடுக்கப்பட்டபடியே எழுதினார்கள்.
3 අතඒව හේ මහාමහිමථියඵිල් ත්වං යා යාඃ කථා අශික්‍ෂ්‍යථාස්තාසාං දෘඪප්‍රමාණානි යථා ප්‍රාප්නෝෂි
நானும் உமக்கு அவற்றை ஒழுங்காக எழுதுவதற்குத் தீர்மானித்தேன். துவக்கத்திலிருந்து நடந்த எல்லாவற்றையும் கவனமாய் விசாரித்தறிந்து, இதை எழுதுகிறேன்.
4 තදර්ථං ප්‍රථමමාරභ්‍ය තානි සර්ව්වාණි ඥාත්වාහමපි අනුක්‍රමාත් සර්ව්වවෘත්තාන්තාන් තුභ්‍යං ලේඛිතුං මතිමකාර්ෂම්|
இதனால் உமக்குப் போதிக்கப்பட்ட விஷயங்கள் நிச்சயமாக உண்மையானவை என்பதை நீர் அறிந்துகொள்ளலாம்.
5 යිහූදාදේශීයහේරෝද්නාමකේ රාජත්වං කුර්ව්වති අබීයයාජකස්‍ය පර‍්‍ය්‍යායාධිකාරී සිඛරියනාමක ඒකෝ යාජකෝ හාරෝණවංශෝද්භවා ඉලීශේවාඛ්‍යා
ஏரோது அரசன் யூதேயாவை ஆட்சி செய்த காலத்தில், சகரியா என்னும் பெயருடைய ஒரு ஆசாரியன் இருந்தான். இவன் அபியாவின் ஆசாரியப் பிரிவைச் சேர்ந்தவன். இவனுடைய மனைவி எலிசபெத்தும், ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியைச் சேர்ந்தவள்.
6 තස්‍ය ජායා ද්වාවිමෞ නිර්දෝෂෞ ප්‍රභෝඃ සර්ව්වාඥා ව්‍යවස්ථාශ්ච සංමන්‍ය ඊශ්වරදෘෂ්ටෞ ධාර්ම්මිකාවාස්තාම්|
அவர்கள் இருவரும் இறைவனின் பார்வையில் நீதிமான்களாக இருந்தார்கள். மற்றவர்களால் குற்றஞ்சாட்டப்பட இடமில்லாமல், கர்த்தருடைய எல்லாக் கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் கைக்கொண்டார்கள்.
7 තයෝඃ සන්තාන ඒකෝපි නාසීත්, යත ඉලීශේවා බන්ධ්‍යා තෞ ද්වාවේව වෘද්ධාවභවතාම්|
ஆனாலும் எலிசபெத் மலடியாக இருந்ததினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; அவர்கள் இருவரும், இப்பொழுது வயது சென்றவர்களாய் இருந்தார்கள்.
8 යදා ස්වපර‍්‍ය්‍යානුක්‍රමේණ සිඛරිය ඊශ්වාස්‍ය සමක්‍ෂං යාජකීයං කර්ම්ම කරෝති
ஒருமுறை அபியாவின் பிரிவை சேர்ந்தவர்கள், ஆலயத்தில் பணிபுரிந்தபோது, சகரியாவும் இறைவனுக்கு முன்பாக ஆசாரியப் பணியைச் செய்தான்.
9 තදා යඥස්‍ය දිනපරිපාය්‍යා පරමේශ්වරස්‍ය මන්දිරේ ප්‍රවේශකාලේ ධූපජ්වාලනං කර්ම්ම තස්‍ය කරණීයමාසීත්|
ஒரு நாள் ஆசாரியர்களின் வழக்கத்தின்படி கடமைகளைச் செய்வதற்கு சீட்டு போட்டபோது, கர்த்தருடைய ஆலயத்திற்குள் போய் தூபங்காட்டும் பணியைச் செய்வதற்கு சகரியா தெரிந்தெடுக்கப்பட்டான்.
10 තද්ධූපජ්වාලනකාලේ ලෝකනිවහේ ප්‍රාර්ථනාං කර්තුං බහිස්තිෂ්ඨති
தூபங்காட்டும் வேளை வந்தபோது வழிபாட்டிற்கு கூடிவந்த மக்கள் வெளியே மன்றாடிக்கொண்டிருந்தார்கள்.
11 සති සිඛරියෝ යස්‍යාං වේද්‍යාං ධූපං ජ්වාලයති තද්දක්‍ෂිණපාර්ශ්වේ පරමේශ්වරස්‍ය දූත ඒක උපස්ථිතෝ දර්ශනං දදෞ|
அப்பொழுது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான்.
12 තං දෘෂ්ට්වා සිඛරිය උද්විවිජේ ශශඞ්කේ ච|
சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டுப் பயந்தான்.
13 තදා ස දූතස්තං බභාෂේ හේ සිඛරිය මා භෛස්තව ප්‍රාර්ථනා ග්‍රාහ්‍යා ජාතා තව භාර‍්‍ය්‍යා ඉලීශේවා පුත්‍රං ප්‍රසෝෂ්‍යතේ තස්‍ය නාම යෝහන් ඉති කරිෂ්‍යසි|
அந்தத் தூதனோ அவனைப் பார்த்து: “சகரியாவே, பயப்படாதே; உனது மன்றாட்டு கேட்கப்பட்டது. உனது மனைவி எலிசபெத் உனக்கு ஒரு மகனைப் பெறுவாள், நீ அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும்.
14 කිඤ්ච ත්වං සානන්දඃ සහර්ෂශ්ච භවිෂ්‍යසි තස්‍ය ජන්මනි බහව ආනන්දිෂ්‍යන්ති ච|
அவன் உனக்கு மகிழ்ச்சியும் மனக்களிப்புமாய் இருப்பான். அவனுடைய பிறப்பின் நிமித்தம், அநேகர் பெருமகிழ்ச்சியடைவார்கள்;
15 යතෝ හේතෝඃ ස පරමේශ්වරස්‍ය ගෝචරේ මහාන් භවිෂ්‍යති තථා ද්‍රාක්‍ෂාරසං සුරාං වා කිමපි න පාස්‍යති, අපරං ජන්මාරභ්‍ය පවිත්‍රේණාත්මනා පරිපූර්ණඃ
அவன் கர்த்தருடைய பார்வையில் பெரியவனாயிருப்பான். அவன் ஒருபோதும் திராட்சை இரசத்தையோ, மதுபானத்தையோ அருந்த மாட்டான், அவன் தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவான்.
16 සන් ඉස්‍රායේල්වංශීයාන් අනේකාන් ප්‍රභෝඃ පරමේශ්වරස්‍ය මාර්ගමානේෂ්‍යති|
அவன் இஸ்ரயேல் மக்களில் பலரை அவர்களுடைய இறைவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பவும் கொண்டுவருவான்.
17 සන්තානාන් ප්‍රති පිතෘණාං මනාංසි ධර්ම්මඥානං ප්‍රත්‍යනාඥාග්‍රාහිණශ්ච පරාවර්ත්තයිතුං, ප්‍රභෝඃ පරමේශ්වරස්‍ය සේවාර්ථම් ඒකාං සජ්ජිතජාතිං විධාතුඤ්ච ස ඒලියරූපාත්මශක්තිප්‍රාප්තස්තස්‍යාග්‍රේ ගමිෂ්‍යති|
அவன் எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் கர்த்தருக்கு முன்பாகப் போவான்; தந்தையரின் இருதயத்தைப் பிள்ளைகள் பக்கமாகத் திருப்புவான், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்குத் திருப்புவான். இவ்விதமாய் கர்த்தருக்காக முன்னேற்பாடு செய்திருக்கிற மக்களை அவன் ஆயத்தம் செய்வான்” என்றான்.
18 තදා සිඛරියෝ දූතමවාදීත් කථමේතද් වේත්ස්‍යාමි? යතෝහං වෘද්ධෝ මම භාර‍්‍ය්‍යා ච වෘද්ධා|
அப்பொழுது சகரியா அந்தத் தூதனிடம், “இது நடக்கும் என்று நான் எப்படி நம்பலாம்? நான் கிழவனாய் இருக்கிறேன், என் மனைவியும் வயது சென்றவளாய் இருக்கிறாளே” என்றான்.
19 තතෝ දූතඃ ප්‍රත්‍යුවාච පශ්‍යේශ්වරස්‍ය සාක්‍ෂාද්වර්ත්තී ජිබ්‍රායේල්නාමා දූතෝහං ත්වයා සහ කථාං ගදිතුං තුභ්‍යමිමාං ශුභවාර්ත්තාං දාතුඤ්ච ප්‍රේෂිතඃ|
அதற்கு அந்தத் தூதன், “நான் இறைவனின் சமுகத்தில் நிற்கின்ற காபிரியேல்; உன்னுடன் பேசுவதற்காகவும், இந்த நற்செய்தியை உனக்கு அறிவிப்பதற்காகவும் நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்.
20 කින්තු මදීයං වාක්‍යං කාලේ ඵලිෂ්‍යති තත් ත්වයා න ප්‍රතීතම් අතඃ කාරණාද් යාවදේව තානි න සේත්ස්‍යන්ති තාවත් ත්වං වක්තුංමශක්තෝ මූකෝ භව|
நீயோ எனது வார்த்தைகளை நம்பவில்லை, ஆதலால் இவை நிகழும் நாள்வரைக்கும் நீ பேச முடியாமல் ஊமையாயிருப்பாய்; நான் சொன்னவையோ நியமித்த காலத்தில் நிறைவேறும்” என்றான்.
21 තදානීං යේ යේ ලෝකාඃ සිඛරියමපෛක්‍ෂන්ත තේ මධ්‍යේමන්දිරං තස්‍ය බහුවිලම්බාද් ආශ්චර‍්‍ය්‍යං මේනිරේ|
அதேவேளையில், சகரியாவின் வருகைக்காக வெளியே காத்துக்கொண்டிருந்த மக்கள், அவன் ஏன் ஆலயத்தில் நீண்ட நேரமாய் இருக்கிறான் என யோசிக்கத் தொடங்கினார்கள்.
22 ස බහිරාගතෝ යදා කිමපි වාක්‍යං වක්තුමශක්තඃ සඞ්කේතං කෘත්වා නිඃශබ්දස්තස්‍යෞ තදා මධ්‍යේමන්දිරං කස්‍යචිද් දර්ශනං තේන ප්‍රාප්තම් ඉති සර්ව්වේ බුබුධිරේ|
அவன் வெளியே வந்தபோது, அவர்களோடு பேச அவனால் முடியவில்லை. அவன் அவர்களுக்கு சைகை காட்டியதால், அவன் ஆலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டிருக்கிறான் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவன் பேசமுடியாதவனாகவே இருந்தான்.
23 අනන්තරං තස්‍ය සේවනපර‍්‍ය්‍යායේ සම්පූර්ණේ සති ස නිජගේහං ජගාම|
அவனது பணிசெய்யும் காலம் முடிவடைந்தபோது, அவன் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
24 කතිපයදිනේෂු ගතේෂු තස්‍ය භාර‍්‍ය්‍යා ඉලීශේවා ගර්බ්භවතී බභූව
இந்த நாட்களுக்குப்பின் அவன் மனைவி எலிசபெத் கருத்தரித்தாள், அவள் ஐந்து மாதங்களாக பிறர் கண்களில் படாதிருந்தாள்.
25 පශ්චාත් සා පඤ්චමාසාන් සංගෝප්‍යාකථයත් ලෝකානාං සමක්‍ෂං මමාපමානං ඛණ්ඩයිතුං පරමේශ්වරෝ මයි දෘෂ්ටිං පාතයිත්වා කර්ම්මේදෘශං කෘතවාන්|
அப்பொழுது அவள், “கர்த்தரே இதைச் செய்தார், இந்த நாட்களில் அவர் எனக்குத் தயவுகாட்டி, என் மக்களிடையே எனக்கிருந்த அவமானத்தை நீக்கிவிட்டார்” என்றாள்.
26 අපරඤ්ච තස්‍යා ගර්බ්භස්‍ය ෂෂ්ඨේ මාසේ ජාතේ ගාලීල්ප්‍රදේශීයනාසරත්පුරේ
ஆறாம் மாதத்தில், கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் ஒரு பட்டணத்திற்கு இறைவன் காபிரியேல் தூதனை,
27 දායූදෝ වංශීයාය යූෂඵ්නාම්නේ පුරුෂාය යා මරියම්නාමකුමාරී වාග්දත්තාසීත් තස්‍යාඃ සමීපං ජිබ්‍රායේල් දූත ඊශ්වරේණ ප්‍රහිතඃ|
ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்; அவள் தாவீதின் சந்ததியானாகிய யோசேப்பு என்னும் பெயருள்ள ஒருவனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அந்தக் கன்னிகையின் பெயர் மரியாள்.
28 ස ගත්වා ජගාද හේ ඊශ්වරානුගෘහීතකන්‍යේ තව ශුභං භූයාත් ප්‍රභුඃ පරමේශ්වරස්තව සහායෝස්ති නාරීණාං මධ්‍යේ ත්වමේව ධන්‍යා|
கர்த்தருடைய தூதன் அவளிடம் போய், “மிகவும் தயவு பெற்றவளே வாழ்க! கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்” என்றான்.
29 තදානීං සා තං දෘෂ්ට්වා තස්‍ය වාක්‍යත උද්විජ්‍ය කීදෘශං භාෂණමිදම් ඉති මනසා චින්තයාමාස|
தூதன் சொன்ன வார்த்தையைக் கேட்ட மரியாள் மிகவும் கலக்கமடைந்து, இந்த வாழ்த்துதல் எத்தகையதோ என்று யோசிக்கத் தொடங்கினாள்.
30 තතෝ දූතෝ(අ)වදත් හේ මරියම් භයං මාකාර්ෂීඃ, ත්වයි පරමේශ්වරස්‍යානුග්‍රහෝස්ති|
ஆனால் அந்தத் தூதன் அவளிடம், “மரியாளே, பயப்படாதே! நீ இறைவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய்.
31 පශ්‍ය ත්වං ගර්බ්භං ධෘත්වා පුත්‍රං ප්‍රසෝෂ්‍යසේ තස්‍ය නාම යීශුරිති කරිෂ්‍යසි|
நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும்.
32 ස මහාන් භවිෂ්‍යති තථා සර්ව්වේභ්‍යඃ ශ්‍රේෂ්ඨස්‍ය පුත්‍ර ඉති ඛ්‍යාස්‍යති; අපරං ප්‍රභුඃ පරමේශ්වරස්තස්‍ය පිතුර්දායූදඃ සිංහාසනං තස්මෛ දාස්‍යති;
அவர் பெரியவராயிருப்பார், மகா உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார்.
33 තථා ස යාකූබෝ වංශෝපරි සර්ව්වදා රාජත්වං කරිෂ්‍යති, තස්‍ය රාජත්වස්‍යාන්තෝ න භවිෂ්‍යති| (aiōn g165)
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவுபெறாது” என்றான். (aiōn g165)
34 තදා මරියම් තං දූතං බභාෂේ නාහං පුරුෂසඞ්ගං කරෝමි තර්හි කථමේතත් සම්භවිෂ්‍යති?
அப்பொழுது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எப்படியாகும், நான் கன்னியாய் இருக்கிறேனே?” என்றாள்.
35 තතෝ දූතෝ(අ)කථයත් පවිත්‍ර ආත්මා ත්වාමාශ්‍රායිෂ්‍යති තථා සර්ව්වශ්‍රේෂ්ඨස්‍ය ශක්තිස්තවෝපරි ඡායාං කරිෂ්‍යති තතෝ හේතෝස්තව ගර්බ්භාද් යඃ පවිත්‍රබාලකෝ ජනිෂ්‍යතේ ස ඊශ්වරපුත්‍ර ඉති ඛ්‍යාතිං ප්‍රාප්ස්‍යති|
அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார், மகா உன்னதமானவரின் வல்லமை உன்மேல் நிழலிடும். எனவே பிறக்கும் பரிசுத்த குழந்தை இறைவனின் மகன் என அழைக்கப்படுவார்.
36 අපරඤ්ච පශ්‍ය තව ඥාතිරිලීශේවා යාං සර්ව්වේ බන්ධ්‍යාමවදන් ඉදානීං සා වාර්ද්ධක්‍යේ සන්තානමේකං ගර්බ්භේ(අ)ධාරයත් තස්‍ය ෂෂ්ඨමාසෝභූත්|
உனது உறவினராகிய எலிசபெத்தும் தனது முதிர்வயதில் ஒரு குழந்தையைப் பெற இருக்கிறாள். மலடி எனப்பட்டவள் இப்பொழுது கருத்தரித்து ஆறு மாதங்களாகின்றன.
37 කිමපි කර්ම්ම නාසාධ්‍යම් ඊශ්වරස්‍ය|
இறைவனால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை” என்றான்.
38 තදා මරියම් ජගාද, පශ්‍ය ප්‍රභේරහං දාසී මහ්‍යං තව වාක්‍යානුසාරේණ සර්ව්වමේතද් ඝටතාම්; අනනතරං දූතස්තස්‍යාඃ සමීපාත් ප්‍රතස්ථේ|
அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை; நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவளைவிட்டுப் போனான்.
39 අථ කතිපයදිනාත් පරං මරියම් තස්මාත් පර්ව්වතමයප්‍රදේශීයයිහූදායා නගරමේකං ශීඝ්‍රං ගත්වා
அந்நாட்களில் மரியாள் புறப்பட்டு யூதேயாவின் மலைநாட்டிலுள்ள ஒரு பட்டணத்திற்கு விரைவாகப் போனாள்;
40 සිඛරියයාජකස්‍ය ගෘහං ප්‍රවිශ්‍ය තස්‍ය ජායාම් ඉලීශේවාං සම්බෝධ්‍යාවදත්|
அங்கே அவள் சகரியாவின் வீட்டிற்குள் போய், எலிசபெத்தை வாழ்த்தினாள்.
41 තතෝ මරියමඃ සම්බෝධනවාක්‍යේ ඉලීශේවායාඃ කර්ණයෝඃ ප්‍රවිෂ්ටමාත්‍රේ සති තස්‍යා ගර්බ්භස්ථබාලකෝ නනර්ත්ත| තත ඉලීශේවා පවිත්‍රේණාත්මනා පරිපූර්ණා සතී
மரியாளுடைய வாழ்த்துதலை எலிசபெத் கேட்டபோது, அவளுடைய கருப்பையில் இருந்த குழந்தை துள்ளியது. அப்பொழுது எலிசபெத் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,
42 ප්‍රෝච්චෛර්ගදිතුමාරේභේ, යෝෂිතාං මධ්‍යේ ත්වමේව ධන්‍යා, තව ගර්බ්භස්ථඃ ශිශුශ්ච ධන්‍යඃ|
உரத்த குரலில் சொன்னதாவது: “நீ பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள். நீ பெற்றெடுக்கப்போகும் பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டது!
43 ත්වං ප්‍රභෝර්මාතා, මම නිවේශනේ ත්වයා චරණාවර්පිතෞ, මමාද්‍ය සෞභාග්‍යමේතත්|
என் கர்த்தரின் தாய் என்னிடம் வருவதற்கு, நான் இவ்வளவாய் தயவுபெற்றேன்.
44 පශ්‍ය තව වාක්‍යේ මම කර්ණයෝඃ ප්‍රවිෂ්ටමාත්‍රේ සති මමෝදරස්ථඃ ශිශුරානන්දාන් නනර්ත්ත|
உனது வாழ்த்துதலின் சத்தம் எனது காதில்பட்டதுமே, எனது கருப்பையில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியினால் துள்ளிற்று.
45 යා ස්ත්‍රී ව්‍යශ්වසීත් සා ධන්‍යා, යතෝ හේතෝස්තාං ප්‍රති පරමේශ්වරෝක්තං වාක්‍යං සර්ව්වං සිද්ධං භවිෂ්‍යති|
கர்த்தர் தனக்குச் சொன்னது நிறைவேறும் என்று விசுவாசித்தவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே!” என்றாள்.
46 තදානීං මරියම් ජගාද| ධන්‍යවාදං පරේශස්‍ය කරෝති මාමකං මනඃ|
அப்பொழுது மரியாள் சொன்னதாவது: “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,
47 මමාත්මා තාරකේශේ ච සමුල්ලාසං ප්‍රගච්ඡති|
என் ஆவி என் இரட்சகராகிய இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறது.
48 අකරෝත් ස ප්‍රභු ර්දුෂ්ටිං ස්වදාස්‍යා දුර්ගතිං ප්‍රති| පශ්‍යාද්‍යාරභ්‍ය මාං ධන්‍යාං වක්‍ෂ්‍යන්ති පුරුෂාඃ සදා|
ஏனெனில், அவர் தமது அடிமையின் தாழ்மை நிலையைத் தயவுடன் பார்த்தார். இப்பொழுதிலிருந்து எல்லாத் தலைமுறையினரும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று அழைப்பார்கள்;
49 යඃ සර්ව්වශක්තිමාන් යස්‍ය නාමාපි ච පවිත්‍රකං| ස ඒව සුමහත්කර්ම්ම කෘතවාන් මන්නිමිත්තකං|
வல்லமையுள்ளவர் எனக்கு அரும்பெரும் காரியங்களைச் செய்தார்; பரிசுத்தர் என்பது அவருடைய பெயர்.
50 යේ බිභ්‍යති ජනාස්තස්මාත් තේෂාං සන්තානපංක්තිෂු| අනුකම්පා තදීයා ච සර්ව්වදෛව සුතිෂ්ඨති|
அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு, தலைமுறை தலைமுறையாக அவர் இரக்கம் காண்பிக்கிறார்.
51 ස්වබාහුබලතස්තේන ප්‍රාකාශ්‍යත පරාක්‍රමඃ| මනඃකුමන්ත්‍රණාසාර්ද්ධං විකීර‍්‍ය්‍යන්තේ(අ)භිමානිනඃ|
அவர் தமது புயத்தினால் வல்லமையான செயல்களை நிறைவேற்றினார்; தங்களுடைய உள்ளத்தில் அகந்தையான நினைவு கொண்டவர்களை அவர் சிதறடித்தார்.
52 සිංහාසනගතාල්ලෝකාන් බලිනශ්චාවරෝහ්‍ය සඃ| පදේෂූච්චේෂු ලෝකාංස්තු ක්‍ෂුද්‍රාන් සංස්ථාපයත්‍යපි|
ஆளுநர்களை அவர்களுடைய அரியணைகளில் இருந்து கீழே வீழ்த்தினார். ஆனால், தாழ்மையானவர்களையோ அவர் உயர்த்தினார்.
53 ක්‍ෂුධිතාන් මානවාන් ද්‍රව්‍යෛරුත්තමෛඃ පරිතර්ප්‍ය සඃ| සකලාන් ධනිනෝ ලෝකාන් විසෘජේද් රික්තහස්තකාන්|
அவர் பசியாய் இருந்தவர்களை நன்மைகளால் நிரப்பினார். ஆனால் செல்வந்தர்களையோ வெறுமையாய் அனுப்பினார்.
54 ඉබ්‍රාහීමි ච තද්වංශේ යා දයාස්ති සදෛව තාං| ස්මෘත්වා පුරා පිතෘණාං නෝ යථා සාක්‍ෂාත් ප්‍රතිශ්‍රුතං| (aiōn g165)
அவர் தமது வேலைக்காரனாகிய இஸ்ரயேலுக்கு உதவி செய்தார்.
55 ඉස්‍රායේල්සේවකස්තේන තථෝපක්‍රියතේ ස්වයං||
நம்முடைய தந்தையர்களுக்கு அவர் வாக்களித்தபடியே, ஆபிரகாமுக்கும் அவனுடைய தலைமுறையினருக்கும் என்றென்றுமுள்ள இரக்கத்தை அவர் நினைத்தபடியே செய்திருக்கிறார்” என்று பாடினாள். (aiōn g165)
56 අනන්තරං මරියම් ප්‍රායේණ මාසත්‍රයම් ඉලීශේවයා සහෝෂිත්වා ව්‍යාඝුය්‍ය නිජනිවේශනං යයෞ|
மரியாள் எலிசபெத்துடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, அதற்குப் பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப் போனாள்.
57 තදනන්තරම් ඉලීශේවායාඃ ප්‍රසවකාල උපස්ථිතේ සති සා පුත්‍රං ප්‍රාසෝෂ්ට|
எலிசபெத்திற்குப் பிள்ளைபெறும் காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றாள்.
58 තතඃ පරමේශ්වරස්තස්‍යාං මහානුග්‍රහං කෘතවාන් ඒතත් ශ්‍රුත්වා සමීපවාසිනඃ කුටුම්බාශ්චාගත්‍ය තයා සහ මුමුදිරේ|
அவளுடைய அயலவர்களும் உறவினர்களும் கர்த்தர் அவளுக்குப் பெரிதான இரக்கம் காண்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அவளுடன்கூட மகிழ்ச்சி அடைந்தார்கள்.
59 තථාෂ්ටමේ දිනේ තේ බාලකස්‍ය ත්වචං ඡේත්තුම් ඒත්‍ය තස්‍ය පිතෘනාමානුරූපං තන්නාම සිඛරිය ඉති කර්ත්තුමීෂුඃ|
அவர்களுடைய அயலவர்களும் உறவினர்களும் எட்டாம் நாளில் அந்தப் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யும்படி வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குழந்தைக்கு அவனுடைய தகப்பனின் பெயரின்படியே சகரியா என்று பெயரிட நினைத்தார்கள்.
60 කින්තු තස්‍ය මාතාකථයත් තන්න, නාමාස්‍ය යෝහන් ඉති කර්ත්තව්‍යම්|
ஆனால் குழந்தையின் தாயோ, “இல்லை! அவன் யோவான் என்றே அழைக்கப்பட வேண்டும்” என்று சொன்னாள்.
61 තදා තේ ව්‍යාහරන් තව වංශමධ්‍යේ නාමේදෘශං කස්‍යාපි නාස්ති|
அதற்கு அவர்கள் அவளிடம், “உனது உறவினரில் அந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்றார்கள்.
62 තතඃ පරං තස්‍ය පිතරං සිඛරියං ප්‍රති සඞ්කේත්‍ය පප්‍රච්ඡුඃ ශිශෝඃ කිං නාම කාරිෂ්‍යතේ?
அப்பொழுது அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறான் என்று அறிவதற்கு, அவனிடம் சைகை மூலம் கேட்டார்கள்.
63 තතඃ ස ඵලකමේකං යාචිත්වා ලිලේඛ තස්‍ය නාම යෝහන් භවිෂ්‍යති| තස්මාත් සර්ව්වේ ආශ්චර‍්‍ය්‍යං මේනිරේ|
அவன் ஒரு கற்பலகையைக் கேட்டுவாங்கி, அவர்கள் எல்லோரும் வியப்படையத்தக்கதாக, “இவனுடைய பெயர் யோவான்” என்று எழுதினான்.
64 තත්ක්‍ෂණං සිඛරියස්‍ය ජිහ්වාජාඩ්‍යේ(අ)පගතේ ස මුඛං ව්‍යාදාය ස්පෂ්ටවර්ණමුච්චාර‍්‍ය්‍ය ඊශ්වරස්‍ය ගුණානුවාදං චකාර|
உடனே அவனது வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் இறைவனைப் புகழ்ந்து பேசத் தொடங்கினான்.
65 තස්මාච්චතුර්දික්ස්ථාඃ සමීපවාසිලෝකා භීතා ඒවමේතාඃ සර්ව්වාඃ කථා යිහූදායාඃ පර්ව්වතමයප්‍රදේශස්‍ය සර්ව්වත්‍ර ප්‍රචාරිතාඃ|
அயலவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்தக் காரியங்களைக்குறித்து, யூதேயாவின் மலைநாடு எங்கும் மக்கள் பேசிக்கொண்டார்கள்.
66 තස්මාත් ශ්‍රෝතාරෝ මනඃසු ස්ථාපයිත්වා කථයාම්බභූවුඃ කීදෘශෝයං බාලෝ භවිෂ්‍යති? අථ පරමේශ්වරස්තස්‍ය සහායෝභූත්|
இதைக் கேள்விப்பட்ட எல்லோரும் வியப்படைந்து, “இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாய் இருக்குமோ?” என்றார்கள் கர்த்தருடைய கரம் அந்த பிள்ளையோடு இருந்தது.
67 තදා යෝහනඃ පිතා සිඛරියඃ පවිත්‍රේණාත්මනා පරිපූර්ණඃ සන් ඒතාදෘශං භවිෂ්‍යද්වාක්‍යං කථයාමාස|
அந்தப் பிள்ளையின் தகப்பனான சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு இறைவாக்கு உரைத்ததாவது:
68 ඉස්‍රායේලඃ ප්‍රභු ර‍්‍යස්තු ස ධන්‍යඃ පරමේශ්වරඃ| අනුගෘහ්‍ය නිජාල්ලෝකාන් ස ඒව පරිමෝචයේත්|
“இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தருக்குத் துதி உண்டாவதாக, அவர் வந்து தம்முடைய மக்களை மீட்டுக்கொண்டார்.
69 විපක්‍ෂජනහස්තේභ්‍යෝ යථා මෝච්‍යාමහේ වයං| යාවජ්ජීවඤ්ච ධර්ම්මේණ සාරල්‍යේන ච නිර්භයාඃ|
அவர் தமது தாசனாகிய தாவீதின் வம்சத்திலிருந்து, நாம் இரட்சிப்பு அடைவதற்கான இரட்சணியக்கொம்பை எழுப்பியிருக்கிறார்.
70 සේවාමහෛ තමේවෛකම් ඒතත්කාරණමේව ච| ස්වකීයං සුපවිත්‍රඤ්ච සංස්මෘත්‍ය නියමං සදා|
அவர் தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாய், நெடுங்காலத்திற்கு முன்பே சொல்லியிருந்தார். (aiōn g165)
71 කෘපයා පුරුෂාන් පූර්ව්වාන් නිකෂාර්ථාත්තු නඃ පිතුඃ| ඉබ්‍රාහීමඃ සමීපේ යං ශපථං කෘතවාන් පුරා|
நம்முடைய பகைவரிடமிருந்தும், நம்மை வெறுக்கும் எல்லோருடைய கைகளிலிருந்தும் நமக்கு விடுதலையை ஏற்படுத்துவேன் என்றும்,
72 තමේව සඵලං කර්ත්තං තථා ශත්‍රුගණස්‍ය ච| ඍතීයාකාරිණශ්චෛව කරේභ්‍යෝ රක්‍ෂණාය නඃ|
அவருடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, நம்முடைய தந்தையருக்கு இரக்கம் காண்பிப்பேன் என்றும் சொல்லியிருந்தார்.
73 සෘෂ්ටේඃ ප්‍රථමතඃ ස්වීයෛඃ පවිත්‍රෛ ර්භාවිවාදිභිඃ| (aiōn g165)
அவர் நமது தந்தையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டு:
74 යථෝක්තවාන් තථා ස්වස්‍ය දායූදඃ සේවකස්‍ය තු|
நம்முடைய பகைவருடைய கையினின்று நம்மைத் தப்புவித்து, நமது நாட்களெல்லாம் பயமின்றிப் பணிசெய்யும்படி,
75 වංශේ ත්‍රාතාරමේකං ස සමුත්පාදිතවාන් ස්වයම්|
பரிசுத்தத்திலும் நீதியிலும் அவருக்கு முன்பாக என்றும் வாக்குக் கொடுத்திருந்தார்.
76 අතෝ හේ බාලක ත්වන්තු සර්ව්වේභ්‍යඃ ශ්‍රේෂ්ඨ ඒව යඃ| තස්‍යෛව භාවිවාදීති ප්‍රවිඛ්‍යාතෝ භවිෂ්‍යසි| අස්මාකං චරණාන් ක්‍ෂේමේ මාර්ගේ චාලයිතුං සදා| ඒවං ධ්වාන්තේ(අ)ර්ථතෝ මෘත්‍යෝශ්ඡායායාං යේ තු මානවාඃ|
“என் பிள்ளையே, நீயோ, உன்னதமானவருடைய இறைவாக்கினன் என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி, அவருக்கு முன்பாகப் போவாய்.
77 උපවිෂ්ටාස්තු තානේව ප්‍රකාශයිතුමේව හි| කෘත්වා මහානුකම්පාං හි යාමේව පරමේශ්වරඃ|
நம்முடைய இறைவனின் மிகுந்த இரக்கத்தின் நிமித்தம் அவருடைய மக்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படுவதன் மூலமாய், இரட்சிப்பின் அறிவைக் கொடுப்பாய்.
78 ඌර්ද්ව්වාත් සූර‍්‍ය්‍යමුදාය්‍යෛවාස්මභ්‍යං ප්‍රාදාත්තු දර්ශනං| තයානුකම්පයා ස්වස්‍ය ලෝකානාං පාපමෝචනේ|
இருளில் வாழ்கிறவர்களுக்கும் மரண இருளில் இருக்கிறவர்களுக்கும் ஒளியைத் தருவதற்கும்,
79 පරිත්‍රාණස්‍ය තේභ්‍යෝ හි ඥානවිශ්‍රාණනාය ච| ප්‍රභෝ ර්මාර්ගං පරිෂ්කර්ත්තුං තස්‍යාග්‍රායී භවිෂ්‍යසි||
நமது கால்களை சமாதானத்தின் வழியில் நடத்துவதற்கும், பரலோகத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது.”
80 අථ බාලකඃ ශරීරේණ බුද්ධ්‍යා ච වර්ද්ධිතුමාරේභේ; අපරඤ්ච ස ඉස්‍රායේලෝ වංශීයලෝකානාං සමීපේ යාවන්න ප්‍රකටීභූතස්තාස්තාවත් ප්‍රාන්තරේ න්‍යවසත්|
அந்தப் பிள்ளை வளர்ந்து ஆவியில் வலிமையடைந்தது; அவன் வெளியரங்கமாக இஸ்ரயேலரின்முன் வரும் காலம்வரைக்கும் பாலைவனத்தில் வாழ்ந்தான்.

< ලූකඃ 1 >