< ලූකඃ 11 >
1 අනන්තරං ස කස්මිංශ්චිත් ස්ථානේ ප්රාර්ථයත තත්සමාප්තෞ සත්යාං තස්යෛකඃ ශිෂ්යස්තං ජගාද හේ ප්රභෝ යෝහන් යථා ස්වශිෂ්යාන් ප්රාර්ථයිතුම් උපදිෂ්ටවාන් තථා භවානප්යස්මාන් උපදිශතු|
ஒரு நாள் இயேசு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மன்றாடிக்கொண்டிருந்தார். அவர் மன்றாடி முடித்தபோது, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரிடம், “ஆண்டவரே, யோவான் தனது சீடருக்கு மன்றாடப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்கு மன்றாடப் போதியும்” என்றான்.
2 තස්මාත් ස කථයාමාස, ප්රාර්ථනකාලේ යූයම් ඉත්ථං කථයධ්වං, හේ අස්මාකං ස්වර්ගස්ථපිතස්තව නාම පූජ්යං භවතු; තව රාජත්වං භවතු; ස්වර්ගේ යථා තථා පෘථිව්යාමපි තවේච්ඡයා සර්ව්වං භවතු|
அப்பொழுது இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்படியாக மன்றாடுங்கள், “‘பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உமது பெயர் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய அரசு வருவதாக. உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலும் செய்யப்படுவதாக.
3 ප්රත්යහම් අස්මාකං ප්රයෝජනීයං භෝජ්යං දේහි|
எங்கள் அன்றாட ஆகாரத்தை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்.
4 යථා වයං සර්ව්වාන් අපරාධිනඃ ක්ෂමාමහේ තථා ත්වමපි පාපාන්යස්මාකං ක්ෂමස්ව| අස්මාන් පරීක්ෂාං මානය කින්තු පාපාත්මනෝ රක්ෂ|
எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். நாங்களும் எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களுக்கு மன்னிக்கிறோமே. எங்களைச் சோதனைக்கு உட்படப்பண்ணாமல். எங்களைத் தீமையிலிருந்து விடுவியும்,’” என்றார்.
5 පශ්චාත් සෝපරමපි කථිතවාන් යදි යුෂ්මාකං කස්යචිද් බන්ධුස්තිෂ්ඨති නිශීථේ ච තස්ය සමීපං ස ගත්වා වදති,
அதற்குப் பின்பு இயேசு அவர்களிடம் சொன்னதாவது, “உங்களில் ஒருவனுக்கு ஒரு நண்பன் இருக்கிறான் என வைத்துக்கொள்வோம். இவன் தன் நண்பனிடம் நள்ளிரவில் போய், ‘நண்பனே, எனக்கு மூன்று அப்பங்களைக் கடனாகக் கொடு.
6 හේ බන්ධෝ පථික ඒකෝ බන්ධු ර්මම නිවේශනම් ආයාතඃ කින්තු තස්යාතිථ්යං කර්ත්තුං මමාන්තිකේ කිමපි නාස්ති, අතඒව පූපත්රයං මහ්යම් ඍණං දේහි;
பயணம் செய்துகொண்டிருக்கும் எனது நண்பன் ஒருவன், என் வீட்டிற்கு வந்திருக்கிறான். அவனுக்கு உணவு கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை’ என்று சொன்னால்,
7 තදා ස යදි ගෘහමධ්යාත් ප්රතිවදති මාං මා ක්ලිශාන, ඉදානීං ද්වාරං රුද්ධං ශයනේ මයා සහ බාලකාශ්ච තිෂ්ඨන්ති තුභ්යං දාතුම් උත්ථාතුං න ශක්නෝමි,
அப்பொழுது உள்ளே இருக்கிற அவன், தன் நண்பனுக்கு மறுமொழியாக, ‘என்னைத் தொந்தரவு செய்யாதே. கதவு ஏற்கெனவே பூட்டப்பட்டுவிட்டது. என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். என்னால் எழுந்து, எதையும் உனக்குக் கொடுக்க முடியாது’ என்பானோ?
8 තර්හි යුෂ්මානහං වදාමි, ස යදි මිත්රතයා තස්මෛ කිමපි දාතුං නෝත්තිෂ්ඨති තථාපි වාරං වාරං ප්රාර්ථනාත උත්ථාපිතඃ සන් යස්මින් තස්ය ප්රයෝජනං තදේව දාස්යති|
நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவன் தன்னுடைய நண்பனாய் இருப்பதன் நிமித்தம் எழுந்து அப்பத்தைக் கொடுக்காவிட்டாலும், வெட்கப்படாமல் அவன் கேட்டுக்கொண்டிருப்பதன் நிமித்தமாவது எழுந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான்.
9 අතඃ කාරණාත් කථයාමි, යාචධ්වං තතෝ යුෂ්මභ්යං දාස්යතේ, මෘගයධ්වං තත උද්දේශං ප්රාප්ස්යථ, ද්වාරම් ආහත තතෝ යුෂ්මභ්යං ද්වාරං මෝක්ෂ්යතේ|
“ஆகவே, நான் உங்களுக்குச் சொல்கிறதாவது: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டுகொள்வீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது கதவு உங்களுக்குத் திறக்கப்படும்.
10 යෝ යාචතේ ස ප්රාප්නෝති, යෝ මෘගයතේ ස ඒවෝද්දේශං ප්රාප්නෝති, යෝ ද්වාරම් ආහන්ති තදර්ථං ද්වාරං මෝච්යතේ|
ஏனெனில், கேட்கிற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கிறான்; தேடுகிறவர்கள் கண்டடைகின்றனர்; தட்டுகிறவனுக்குக் கதவு திறக்கப்படுகிறது.
11 පුත්රේණ පූපේ යාචිතේ තස්මෛ පාෂාණං දදාති වා මත්ස්යේ යාචිතේ තස්මෛ සර්පං දදාති
“உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடம் மீனைக் கேட்கும் மகனுக்கு யார் பாம்பைக் கொடுப்பான்?
12 වා අණ්ඩේ යාචිතේ තස්මෛ වෘශ්චිකං දදාති යුෂ්මාකං මධ්යේ ක ඒතාදෘශඃ පිතාස්තේ?
அல்லது அவன் ஒரு முட்டையைக் கேட்டால், யாராவது அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?
13 තස්මාදේව යූයමභද්රා අපි යදි ස්වස්වබාලකේභ්ය උත්තමානි ද්රව්යාණි දාතුං ජානීථ තර්හ්යස්මාකං ස්වර්ගස්ථඃ පිතා නිජයාචකේභ්යඃ කිං පවිත්රම් ආත්මානං න දාස්යති?
தீயவர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியிருக்க, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு, பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பது எவ்வளவு நிச்சயம்!”
14 අනන්තරං යීශුනා කස්මාච්චිද් ඒකස්මින් මූකභූතේ ත්යාජිතේ සති ස භූතත්යක්තෝ මානුෂෝ වාක්යං වක්තුම් ආරේභේ; තතෝ ලෝකාඃ සකලා ආශ්චර්ය්යං මේනිරේ|
ஒரு நாள், ஊமையாய் இருந்த ஒருவனிடமிருந்து இயேசு பிசாசை துரத்தினார். பிசாசு பிடித்தவனிலிருந்து பிசாசு வெளியேறியபோது, ஊமையாயிருந்தவன் பேசத் தொடங்கினான். கூடியிருந்த மக்கள் அதைக்கண்டு வியப்படைந்தார்கள்.
15 කින්තු තේෂාං කේචිදූචු ර්ජනෝයං බාලසිබූබා අර්ථාද් භූතරාජේන භූතාන් ත්යාජයති|
ஆனால் அவர்களில் சிலர், “பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலினாலேயே இவன் பிசாசுகளைத் துரத்துகிறான்” என்றார்கள்.
16 තං පරීක්ෂිතුං කේචිද් ආකාශීයම් ඒකං චිහ්නං දර්ශයිතුං තං ප්රාර්ථයාඤ්චක්රිරේ|
வேறுசிலர் வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று கேட்டு, அவரைச் சோதித்தார்கள்.
17 තදා ස තේෂාං මනඃකල්පනාං ඥාත්වා කථයාමාස, කස්යචිද් රාජ්යස්ය ලෝකා යදි පරස්පරං විරුන්ධන්ති තර්හි තද් රාජ්යම් නශ්යති; කේචිද් ගෘහස්ථා යදි පරස්පරං විරුන්ධන්ති තර්හි තේපි නශ්යන්ති|
இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களுக்குச் சொன்னதாவது: “தனக்குத்தானே விரோதமாய் பிளவுபட்டிருக்கிற எந்த அரசும் பாழாய்ப்போகும். தனக்குத்தானே விரோதமாய் பிளவுபட்டிருக்கிற எந்தக் குடும்பமும் விழுந்துபோகும்.
18 තථෛව ශෛතානපි ස්වලෝකාන් යදි විරුණද්ධි තදා තස්ය රාජ්යං කථං ස්ථාස්යති? බාලසිබූබාහං භූතාන් ත්යාජයාමි යූයමිති වදථ|
சாத்தான் தனக்குத்தானே விரோதமாய்ப் பிளவுபட்டால், எப்படி அவனுடைய அரசு நிலைநிற்கும்? நான் பெயல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறேன் என்று நீங்கள் சொல்வதனாலேயே நான் இதை உங்களுக்குச் சொல்கிறேன்.
19 යද්යහං බාලසිබූබා භූතාන් ත්යාජයාමි තර්හි යුෂ්මාකං සන්තානාඃ කේන ත්යාජයන්ති? තස්මාත් තඒව කථායා ඒතස්යා විචාරයිතාරෝ භවිෂ්යන්ති|
நான் பெயல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்தினால், உங்களைப் பின்பற்றுகிறவர்கள் யாரைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறார்கள்? அப்படியானால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாய் இருப்பார்கள்.
20 කින්තු යද්යහම් ඊශ්වරස්ය පරාක්රමේණ භූතාන් ත්යාජයාමි තර්හි යුෂ්මාකං නිකටම් ඊශ්වරස්ය රාජ්යමවශ්යම් උපතිෂ්ඨති|
ஆனால், நான் பிசாசுகளை இறைவனுடைய விரலினால் துரத்துகிறேன் என்றால், இறைவனுடைய அரசு உங்களிடம் வந்துள்ளது.
21 බලවාන් පුමාන් සුසජ්ජමානෝ යතිකාලං නිජාට්ටාලිකාං රක්ෂති තතිකාලං තස්ය ද්රව්යං නිරුපද්රවං තිෂ්ඨති|
“ஒரு பலமுள்ளவன் ஆயுதம் தாங்கியவனாய் தன் வீட்டைக் காவல் காக்கும்போது, அவனுடைய உடைமைகள் பாதுகாப்பாய் இருக்கும்.
22 කින්තු තස්මාද් අධිකබලඃ කශ්චිදාගත්ය යදි තං ජයති තර්හි යේෂු ශස්ත්රාස්ත්රේෂු තස්ය විශ්වාස ආසීත් තානි සර්ව්වාණි හෘත්වා තස්ය ද්රව්යාණි ගෘහ්ලාති|
இவனைப் பார்க்கிலும் பலமுள்ள வேறொருவன் வந்து இவனைத் தாக்கி மேற்கொள்ளும்போது, அவன் சார்ந்திருந்த எல்லா ஆயுதங்களையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருட்களையும் பங்கிட்டுக் கொள்வான்.
23 අතඃ කාරණාද් යෝ මම සපක්ෂෝ න ස විපක්ෂඃ, යෝ මයා සහ න සංගෘහ්ලාති ස විකිරති|
“என்னோடே இராதவன் எனக்கு எதிராக இருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
24 අපරඤ්ච අමේධ්යභූතෝ මානුෂස්යාන්තර්නිර්ගත්ය ශුෂ්කස්ථානේ භ්රාන්ත්වා විශ්රාමං මෘගයතේ කින්තු න ප්රාප්ය වදති මම යස්මාද් ගෘහාද් ආගතෝහං පුනස්තද් ගෘහං පරාවෘත්ය යාමි|
“தீய ஆவி ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அது வறண்ட இடங்களில் ஓய்வைத் தேடிப்போகிறது, ஆனாலும் அது அந்த ஓய்வைக் கண்டடையாததால், ‘நான் முன்பு விட்டுவந்த வீட்டிற்கே திரும்பவும் போவேன்’ என்று சொல்லும்.
25 තතෝ ගත්වා තද් ගෘහං මාර්ජිතං ශෝභිතඤ්ච දෘෂ්ට්වා
அது அந்த வீட்டிற்குத் திரும்பி வரும்பொழுது, அந்த வீடு கூட்டிச் சுத்தப்படுத்தப்பட்டு, ஒழுங்காக இருப்பதைக் காணும்.
26 තත්ක්ෂණම් අපගත්ය ස්වස්මාදපි දුර්ම්මතීන් අපරාන් සප්තභූතාන් සහානයති තේ ච තද්ගෘහං පවිශ්ය නිවසන්ති| තස්මාත් තස්ය මනුෂ්යස්ය ප්රථමදශාතඃ ශේෂදශා දුඃඛතරා භවති|
அப்பொழுது அந்தத் தீய ஆவி போய், தன்னைப் பார்க்கிலும் பொல்லாத ஏழு தீய ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து அவை அங்கேபோய் வசிக்கின்றன. அதனால் அந்த மனிதனின் இறுதி நிலைமை ஆரம்ப நிலைமையைவிட மோசமானதாகும்.”
27 අස්යාඃ කථායාඃ කථනකාලේ ජනතාමධ්යස්ථා කාචින්නාරී තමුච්චෛඃස්වරං ප්රෝවාච, යා යෝෂිත් ත්වාං ගර්බ්භේ(අ)ධාරයත් ස්තන්යමපායයච්ච සෛව ධන්යා|
இயேசு இந்தக் காரியங்களைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து ஒரு பெண் குரலெழுப்பி, “உம்மைப் பெற்றெடுத்துப் பாலூட்டிய தாய் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்றாள்.
28 කින්තු සෝකථයත් යේ පරමේශ්වරස්ය කථාං ශ්රුත්වා තදනුරූපම් ආචරන්ති තඒව ධන්යාඃ|
அவர் அதற்குப் பதிலாக, “ஆம்; ஆனால், இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதற்குக் கீழ்ப்படிகிறவர்களே, அதிலும் மேலாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.
29 තතඃ පරං තස්යාන්තිකේ බහුලෝකානාං සමාගමේ ජාතේ ස වක්තුමාරේභේ, ආධුනිකා දුෂ්ටලෝකාශ්චිහ්නං ද්රෂ්ටුමිච්ඡන්ති කින්තු යූනස්භවිෂ්යද්වාදිනශ්චිහ්නං විනාන්යත් කිඤ්චිච්චිහ්නං තාන් න දර්ශයිෂ්යතේ|
மக்கள் இன்னும் அதிகமாய்க் கூடிவந்தபோது, இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “இவர்கள் ஒரு கொடிய தலைமுறையினர். இவர்கள் ஒரு அற்புத அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனால், இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர, வேறு எதுவும் கொடுக்கப்படுவதில்லை.
30 යූනස් තු යථා නීනිවීයලෝකානාං සමීපේ චිහ්නරූපෝභවත් තථා විද්යමානලෝකානාම් ඒෂාං සමීපේ මනුෂ්යපුත්රෝපි චිහ්නරූපෝ භවිෂ්යති|
நினிவே பட்டணத்தைச் சேர்ந்தவர்களுக்கு யோனா அடையாளமாய் இருந்ததுபோல, இந்தத் தலைமுறையினருக்கு மானிடமகனாகிய நானும் அடையாளமாய் இருப்பேன்.
31 විචාරසමයේ ඉදානීන්තනලෝකානාං ප්රාතිකූල්යේන දක්ෂිණදේශීයා රාඥී ප්රෝත්ථාය තාන් දෝෂිණඃ කරිෂ්යති, යතඃ සා රාඥී සුලේමාන උපදේශකථාං ශ්රෝතුං පෘථිව්යාඃ සීමාත ආගච්ඡත් කින්තු පශ්යත සුලේමානෝපි ගුරුතර ඒකෝ ජනෝ(අ)ස්මින් ස්ථානේ විද්යතේ|
நியாயத்தீர்ப்பின்போது, தென்நாட்டு அரசியும்கூட இந்தத் தலைமுறை மக்களோடே எழுந்து, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். ஏனெனில், அவள் பூமியின் கடைமுனையிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கும்படி வந்தாளே. ஆனால் சாலொமோனைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார்.
32 අපරඤ්ච විචාරසමයේ නීනිවීයලෝකා අපි වර්ත්තමානකාලිකානාං ලෝකානාං වෛපරීත්යේන ප්රෝත්ථාය තාන් දෝෂිණඃ කරිෂ්යන්ති, යතෝ හේතෝස්තේ යූනසෝ වාක්යාත් චිත්තානි පරිවර්ත්තයාමාසුඃ කින්තු පශ්යත යූනසෝතිගුරුතර ඒකෝ ජනෝ(අ)ස්මින් ස්ථානේ විද්යතේ|
நியாயத்தீர்ப்பின்போது நினிவே பட்டணத்து மனிதரும், இந்தத் தலைமுறையினரோடு எழுந்து, இவர்கள்மீது குற்றம் சுமத்துவார்கள்; ஏனெனில், அவர்கள் யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பினார்கள். ஆனால் இப்பொழுதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்” என்றார்.
33 ප්රදීපං ප්රජ්වාල්ය ද්රෝණස්යාධඃ කුත්රාපි ගුප්තස්ථානේ වා කෝපි න ස්ථාපයති කින්තු ගෘහප්රවේශිභ්යෝ දීප්තිං දාතං දීපාධාරෝපර්ය්යේව ස්ථාපයති|
“யாரும் விளக்கைக் கொளுத்தி, அதை மறைந்திருக்கும்படி ஒரு இடத்திலோ, அல்லது ஒரு பாத்திரத்தால் மூடியோ வைப்பதில்லை. ஆனால் உள்ளே வருகிறவர்கள் வெளிச்சத்தைக் காணும்படி, அதை விளக்குத்தண்டின் மேல் வைப்பார்கள்.
34 දේහස්ය ප්රදීපශ්චක්ෂුස්තස්මාදේව චක්ෂු ර්යදි ප්රසන්නං භවති තර්හි තව සර්ව්වශරීරං දීප්තිමද් භවිෂ්යති කින්තු චක්ෂු ර්යදි මලීමසං තිෂ්ඨති තර්හි සර්ව්වශරීරං සාන්ධකාරං ස්ථාස්යති|
உன்னுடைய கண் உன் உடலின் விளக்காய் இருக்கிறது. உனது கண்கள் நல்லதாய் இருக்கும்போது, உன் முழு உடலும் வெளிச்சம் நிறைந்ததாய் இருக்கும். ஆனால் அவை கெட்டதாய் இருந்தால், உன் உடலும் இருள் நிறைந்ததாய் இருக்கும்.
35 අස්මාත් කාරණාත් තවාන්තඃස්ථං ජ්යෝති ර්යථාන්ධකාරමයං න භවති තදර්ථේ සාවධානෝ භව|
ஆகவே, உனக்குள்ளே இருக்கும் வெளிச்சம் இருள் அடையாதபடி பார்த்துக்கொள்.
36 යතඃ ශරීරස්ය කුත්රාප්යංශේ සාන්ධකාරේ න ජාතේ සර්ව්වං යදි දීප්තිමත් තිෂ්ඨති තර්හි තුභ්යං දීප්තිදායිප්රෝජ්ජ්වලන් ප්රදීප ඉව තව සවර්වශරීරං දීප්තිමද් භවිෂ්යති|
உன் முழு உடலும் வெளிச்சம் நிறைந்ததாய் இருந்து, அதன் ஒரு பகுதியும் இருள் அடையாதிருக்குமானால், விளக்கின் வெளிச்சம் உங்களில் பிரகாசிப்பது போல், உனது முழு உடலும் வெளிச்சம் உடையதாய் இருக்கும்” என்றார்.
37 ඒතත්කථායාඃ කථනකාලේ ඵිරුශ්යේකෝ භේජනාය තං නිමන්ත්රයාමාස, තතඃ ස ගත්වා භෝක්තුම් උපවිවේශ|
இயேசு பேசி முடித்தபோது, பரிசேயன் ஒருவன் இயேசுவைத் தன்னுடன் உணவு சாப்பிடவரும்படி அழைத்தான்; அப்படியே அவர் அவனுடைய வீட்டிற்குச் சென்று சாப்பாட்டுப் பந்தியில் உட்கார்ந்தார்.
38 කින්තු භෝජනාත් පූර්ව්වං නාමාඞ්ක්ෂීත් ඒතද් දෘෂ්ට්වා ස ඵිරුශ්යාශ්චර්ය්යං මේනේ|
சாப்பிடுவதற்கு முன்பு, இயேசு தன் கையைக் கழுவாததைக் கவனித்த பரிசேயன் ஆச்சரியம் அடைந்தான்.
39 තදා ප්රභුස්තං ප්රෝවාච යූයං ඵිරූශිලෝකාඃ පානපාත්රාණාං භෝජනපාත්රාණාඤ්ච බහිඃ පරිෂ්කුරුථ කින්තු යුෂ්මාකමන්ත ර්දෞරාත්ම්යෛ ර්දුෂ්ක්රියාභිශ්ච පරිපූර්ණං තිෂ්ඨති|
அப்பொழுது கர்த்தர் அவனிடம் சொன்னதாவது, “பரிசேயரே, நீங்களோ போஜனபாத்திரத்தின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்கிறீர்கள். ஆனால், உங்களுடைய உட்புறமோ பேராசைகளினாலும், கொடுமைகளினாலும் நிறைந்திருக்கிறது.
40 හේ සර්ව්වේ නිර්බෝධා යෝ බහිඃ සසර්ජ ස ඒව කිමන්ත ර්න සසර්ජ?
மூடர்களே! வெளிப்புறத்தை உண்டாக்கியவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ?
41 තත ඒව යුෂ්මාභිරන්තඃකරණං (ඊශ්වරාය) නිවේද්යතාං තස්මින් කෘතේ යුෂ්මාකං සර්ව්වාණි ශුචිතාං යාස්යන්ති|
பாத்திரத்தின் உள்ளே இருப்பதை ஏழைகளுக்குக் கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கு எல்லாம் சுத்தமாயிருக்கும்.
42 කින්තු හන්ත ඵිරූශිගණා යූයං න්යායම් ඊශ්වරේ ප්රේම ච පරිත්යජ්ය පෝදිනායා අරුදාදීනාං සර්ව්වේෂාං ශාකානාඤ්ච දශමාංශාන් දත්ථ කින්තු ප්රථමං පාලයිත්වා ශේෂස්යාලඞ්ඝනං යුෂ්මාකම් උචිතමාසීත්|
“பரிசேயரே உங்களுக்கு ஐயோ, ஏனெனில் நீங்கள் உங்களுடைய புதினா கீரையிலும், கறிவேப்பிலையிலும், தோட்டத்தின் மரக்கறிவகையிலும் பத்திலொன்றை இறைவனுக்குக் கொடுக்கிறீர்கள். ஆனால் நீதி செய்வதையும், இறைவனிடம் அன்பு கூறுவதையும், அலட்சியம் செய்கிறீர்கள். இதையே, நீங்கள் முதலில் செய்திருக்கவேண்டும். முன்பு செய்ததையும் கைவிடக்கூடாது.
43 හා හා ඵිරූශිනෝ යූයං භජනගේහේ ප්රෝච්චාසනේ ආපණේෂු ච නමස්කාරේෂු ප්රීයධ්වේ|
“பரிசேயரே உங்களுக்கு ஐயோ! ஏனெனில், நீங்கள் ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இருக்கைகளையும், சந்தைகூடும் இடங்களில் வாழ்த்துக்களையும் பெற விரும்புகிறீர்கள்.
44 වත කපටිනෝ(අ)ධ්යාපකාඃ ඵිරූශිනශ්ච ලෝකායත් ශ්මශානම් අනුපලභ්ය තදුපරි ගච්ඡන්ති යූයම් තාදෘගප්රකාශිතශ්මශානවාද් භවථ|
“உங்களுக்கு ஐயோ! ஏனெனில், நீங்கள் அடையாளச்சின்னம் இல்லாமலே, மூடப்பட்ட சவக்குழிகளைப் போல் இருக்கிறீர்கள். அதனால், மனிதர்கள் அது என்ன என்பதை அறியாமல், அதன்மேல் நடந்து போகிறார்கள்.”
45 තදානීං ව්යවස්ථාපකානාම් ඒකා යීශුමවදත්, හේ උපදේශක වාක්යේනේදෘශේනාස්මාස්වපි දෝෂම් ආරෝපයසි|
மோசேயின் சட்ட அறிஞரில் ஒருவன் அவரிடம், “போதகரே, நீர் இவற்றைச் சொல்லுகிறபோது, எங்களையும் அவமானப்படுத்துகிறீர்” என்றான்.
46 තතඃ ස උවාච, හා හා ව්යවස්ථාපකා යූයම් මානුෂාණාම් උපරි දුඃසහ්යාන් භාරාන් න්යස්යථ කින්තු ස්වයම් ඒකාඞ්ගුල්යාපි තාන් භාරාන් න ස්පෘශථ|
அதற்கு இயேசு, “மோசேயின் சட்ட அறிஞர்களே, உங்களுக்கு ஐயோ! ஏனெனில், மக்களால் சுமக்க முடியாத சமயச்சடங்குகளை நீங்கள் அவர்கள்மேல் சுமத்துகிறீர்கள். நீங்களோ, அவர்களுக்கு உதவி செய்வதற்காக உங்கள் ஒரு விரலைக்கூட அசைப்பதில்லை.
47 හන්ත යුෂ්මාකං පූර්ව්වපුරුෂා යාන් භවිෂ්යද්වාදිනෝ(අ)වධිෂුස්තේෂාං ශ්මශානානි යූයං නිර්ම්මාථ|
“உங்களுக்கு ஐயோ! ஏனெனில், நீங்கள் இறைவாக்கினர்களுக்காக கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். அவர்களைக் கொலைசெய்தவர்கள், உங்கள் முற்பிதாக்களே.
48 තේනෛව යූයං ස්වපූර්ව්වපුරුෂාණාං කර්ම්මාණි සංමන්යධ්වේ තදේව සප්රමාණං කුරුථ ච, යතස්තේ තානවධිෂුඃ යූයං තේෂාං ශ්මශානානි නිර්ම්මාථ|
உங்கள் முற்பிதாக்கள் செய்ததை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று இவ்விதமாய்ச் சாட்சி கொடுக்கிறீர்கள்; அவர்களோ, இறைவாக்கினரைக் கொன்றார்கள். நீங்களோ, அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.
49 අතඒව ඊශ්වරස්ය ශාස්ත්රේ ප්රෝක්තමස්ති තේෂාමන්තිකේ භවිෂ්යද්වාදිනඃ ප්රේරිතාංශ්ච ප්රේෂයිෂ්යාමි තතස්තේ තේෂාං කාංශ්චන හනිෂ්යන්ති කාංශ්චන තාඩශ්ෂ්යින්ති|
இதன் காரணமாகவே, இறைவன் தம்முடைய ஞானத்தின்படி சொன்னதாவது, ‘நான் அவர்களிடம் இறைவாக்கினரையும், அப்போஸ்தலரையும் அனுப்புவேன். அவர்களில் சிலரை, இவர்கள் கொலைசெய்வார்கள். மற்றவர்களையோ இவர்கள் துன்புறுத்துவார்கள்’ என்றார்.
50 ඒතස්මාත් කාරණාත් හාබිලඃ ශෝණිතපාතමාරභ්ය මන්දිරයඥවේද්යෝ ර්මධ්යේ හතස්ය සිඛරියස්ය රක්තපාතපර්ය්යන්තං
ஆகையால், உலகம் தொடங்கியதிலிருந்து இறைவாக்கினர் அனைவருடைய சிந்தப்பட்ட இரத்தத்திற்கும், இந்தத் தலைமுறையினரிடமே கணக்குக் கேட்கப்படும்.
51 ජගතඃ සෘෂ්ටිමාරභ්ය පෘථිව්යාං භවිෂ්යද්වාදිනාං යතිරක්තපාතා ජාතාස්තතීනාම් අපරාධදණ්ඩා ඒෂාං වර්ත්තමානලෝකානාං භවිෂ්යන්ති, යුෂ්මානහං නිශ්චිතං වදාමි සර්ව්වේ දණ්ඩා වංශස්යාස්ය භවිෂ්යන්ති|
ஆபேலுடைய இரத்தம் முதல், ஆலயத்தில் பலிபீடத்திற்கும் பரிசுத்த இடத்திற்கும் இடையே கொலைசெய்யப்பட்ட சகரியாவின் இரத்தம் வரைக்கும், இவர்களிடமே கணக்குக் கேட்கப்படும். ஆம், இதை நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்தத் தலைமுறையினரிடமே இவையெல்லாவற்றிற்கும் கணக்குக் கேட்கப்படும்.
52 හා හා ව්යවස්ථපකා යූයං ඥානස්ය කුඤ්චිකාං හෘත්වා ස්වයං න ප්රවිෂ්ටා යේ ප්රවේෂ්ටුඤ්ච ප්රයාසිනස්තානපි ප්රවේෂ්ටුං වාරිතවන්තඃ|
“மோசேயின் சட்ட அறிஞரே உங்களுக்கு ஐயோ, அறிவிற்குரிய சாவியை மக்களிடமிருந்து நீங்கள் எடுத்துப்போட்டீர்கள். அதற்குள் நீங்களும் செல்வதில்லை. செல்கிறவர்களையும் தடைசெய்து விடுகிறீர்கள்” என்றார்.
53 ඉත්ථං කථාකථනාද් අධ්යාපකාඃ ඵිරූශිනශ්ච සතර්කාඃ
இயேசு அங்கிருந்து புறப்படும்போது பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியரும் அவரைக் கடுமையாக எதிர்க்கவும், பல கேள்விகளைக் கேட்டுத் தாக்கவும் தொடங்கினார்கள்.
54 සන්තස්තමපවදිතුං තස්ය කථායා දෝෂං ධර්ත්තමිච්ඡන්තෝ නානාඛ්යානකථනාය තං ප්රවර්ත්තයිතුං කෝපයිතුඤ්ච ප්රාරේභිරේ|
அவருடைய வார்த்தைகளிலிருந்தே, இயேசுவைக் குற்றம் கண்டுபிடிப்பதற்குத் தருணம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.