< ප්රේරිතාඃ 26 >
1 තත ආග්රිප්පඃ පෞලම් අවාදීත්, නිජාං කථාං කථයිතුං තුභ්යම් අනුමති ර්දීයතේ| තස්මාත් පෞලඃ කරං ප්රසාර්ය්ය ස්වස්මින් උත්තරම් අවාදීත්|
அப்பொழுது அகிரிப்பா பவுலிடம், “உன் வழக்கை எடுத்துரைக்க உனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றான். எனவே பவுல் தனது கையினால் சைகை காட்டி தனது சார்பாகப் பேசத் தொடங்கினான்:
2 හේ ආග්රිප්පරාජ යත්කාරණාදහං යිහූදීයෛරපවාදිතෝ (අ)භවං තස්ය වෘත්තාන්තම් අද්ය භවතඃ සාක්ෂාන් නිවේදයිතුමනුමතෝහම් ඉදං ස්වීයං පරමං භාග්යං මන්යේ;
“அகிரிப்பா அரசனே, யூதருடைய குற்றச்சாட்டுகள் எல்லாவற்றிற்கும் எதிராக, நான் எனது சார்பாக பேசும்படி, இன்று உமக்கு முன்பாக நிற்பது, ஒரு வாய்ப்பு என கருதுகிறேன்.
3 යතෝ යිහූදීයලෝකානාං මධ්යේ යා යා රීතිඃ සූක්ෂ්මවිචාරාශ්ච සන්ති තේෂු භවාන් විඥතමඃ; අතඒව ප්රාර්ථයේ ධෛර්ය්යමවලම්බ්ය මම නිවේදනං ශෘණෝතු|
ஏனெனில், யூதருடைய எல்லா முறைகளைக் குறித்தும், கருத்து முரண்பாடுகளைக் குறித்தும், நீர் நன்றாய் அறிந்திருக்கிறீர். எனவே, நான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்கும்படி உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன்.
4 අහං යිරූශාලම්නගරේ ස්වදේශීයලෝකානාං මධ්යේ තිෂ්ඨන් ආ යෞවනකාලාද් යද්රූපම් ආචරිතවාන් තද් යිහූදීයලෝකාඃ සර්ව්වේ විදන්ති|
“நான் சிறுபிள்ளையாக இருந்ததிலிருந்து, என் வாழ்க்கையின் ஆரம்பத்தில் என் நாட்டிலும், பின்பு எருசலேமிலும் நான் எப்படி வாழ்ந்தேன் என்பதை எல்லா யூதரும் அறிவார்கள்.
5 අස්මාකං සර්ව්වේභ්යඃ ශුද්ධතමං යත් ඵිරූශීයමතං තදවලම්බී භූත්වාහං කාලං යාපිතවාන් යේ ජනා ආ බාල්යකාලාන් මාං ජානාන්ති තේ ඒතාදෘශං සාක්ෂ්යං යදි දදාති තර්හි දාතුං ශක්නුවන්ති|
நீண்டகாலமாக அவர்கள் என்னை அறிந்திருக்கிறார்கள். அதனால் நான் எப்படி எங்கள் சமயத்திலுள்ள கண்டிப்பான பிரிவின்படி, ஒரு பரிசேயனாக வாழ்ந்தேன் என்பதை, அவர்கள் விரும்பினால் சாட்சியாகச் சொல்லலாம்.
6 කින්තු හේ ආග්රිප්පරාජ ඊශ්වරෝ(අ)ස්මාකං පූර්ව්වපුරුෂාණාං නිකටේ යද් අඞ්ගීකෘතවාන් තස්ය ප්රත්යාශාහේතෝරහම් ඉදානීං විචාරස්ථානේ දණ්ඩායමානෝස්මි|
எங்கள் தந்தையருக்கு இறைவன் வாக்குத்தத்தம் பண்ணியதில், நான் கொண்டிருக்கும் நம்பிக்கை காரணமாகவே, இன்று நான் இங்கே விசாரணை செய்யப்படுகிறேன்.
7 තස්යාඞ්ගීකාරස්ය ඵලං ප්රාප්තුම් අස්මාකං ද්වාදශවංශා දිවානිශං මහායත්නාද් ඊශ්වරසේවනං කෘත්වා යාං ප්රත්යාශාං කුර්ව්වන්ති තස්යාඃ ප්රත්යාශායා හේතෝරහං යිහූදීයෛරපවාදිතෝ(අ)භවම්|
இந்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதைக் காணும் எதிர்பார்ப்புடனேயே, எங்கள் பன்னிரண்டு கோத்திரத்தினரும், இரவும் பகலுமாய் இறைவனுக்கு ஆர்வத்துடன் பணிசெய்கிறார்கள். அரசே, அந்த எதிர்பார்ப்பின் காரணமாகவே, யூதர்கள் என்மேல் குற்றம் சுமத்துகிறார்கள்.
8 ඊශ්වරෝ මෘතාන් උත්ථාපයිෂ්යතීති වාක්යං යුෂ්මාකං නිකටේ(අ)සම්භවං කුතෝ භවේත්?
இறந்தவர்களை இறைவன் உயிருடன் எழுப்புவது நம்பமுடியாத செயல் என்று நீங்கள் கருதுவது ஏன்?
9 නාසරතීයයීශෝ ර්නාම්නෝ විරුද්ධං නානාප්රකාරප්රතිකූලාචරණම් උචිතම් ඉත්යහං මනසි යථාර්ථං විඥාය
“நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் பெயருக்கு எதிராக இயன்றதையெல்லாம் செய்யவேண்டும் என்று நானும் எண்ணியிருந்தேன்.
10 යිරූශාලමනගරේ තදකරවං ඵලතඃ ප්රධානයාජකස්ය නිකටාත් ක්ෂමතාං ප්රාප්ය බහූන් පවිත්රලෝකාන් කාරායාං බද්ධවාන් විශේෂතස්තේෂාං හනනසමයේ තේෂාං විරුද්ධාං නිජාං සම්මතිං ප්රකාශිතවාන්|
அதையே நான் எருசலேமில் செய்தேன். தலைமை ஆசாரியரின் அதிகாரத்தைப் பெற்று, பரிசுத்தவான்களில் பலரைச் சிறையில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படும்போது, அவர்களுக்கு எதிராக நானும் என் ஒப்புதலை வழங்கியிருந்தேன்.
11 වාරං වාරං භජනභවනේෂු තේභ්යෝ දණ්ඩං ප්රදත්තවාන් බලාත් තං ධර්ම්මං නින්දයිතවාංශ්ච පුනශ්ච තාන් ප්රති මහාක්රෝධාද් උන්මත්තඃ සන් විදේශීයනගරාණි යාවත් තාන් තාඩිතවාන්|
பலமுறை அவர்களைத் தண்டனைக்கு உட்படுத்தும்படி, ஒவ்வொரு ஜெப ஆலயத்திற்கும் போனேன். இறைவனை அவமதித்துப் பேசும்படி அவர்களை வற்புறுத்தினேன். நான் அவர்களுக்கு எதிராகக் கடுங்கோபம் கொண்டிருந்ததால், அவர்களைத் துன்புறுத்தும்படி வெளிநாட்டின் பட்டணங்களுக்கும் போனேன்.
12 ඉත්ථං ප්රධානයාජකස්ය සමීපාත් ශක්තිම් ආඥාපත්රඤ්ච ලබ්ධ්වා දම්මේෂක්නගරං ගතවාන්|
“இப்படியாக ஒருமுறை நான் தலைமை ஆசாரியரின் அதிகாரத்துடனும், ஆணையுடனும் தமஸ்கு பட்டணத்திற்கு போய்க்கொண்டிருந்தேன்.
13 තදාහං හේ රාජන් මාර්ගමධ්යේ මධ්යාහ්නකාලේ මම මදීයසඞ්ගිනාං ලෝකානාඤ්ච චතසෘෂු දික්ෂු ගගණාත් ප්රකාශමානාං භාස්කරතෝපි තේජස්වතීං දීප්තිං දෘෂ්ටවාන්|
அரசே, நான் போகும் வழியில், மத்தியான வேளையில், வானத்திலிருந்து ஒரு ஒளியைக் கண்டேன். அது சூரியனைவிடப் பிரகாசமுடையதாய், என்னையும் என்னுடன் வந்தவர்களையும் சுற்றிப் பிரகாசித்தது.
14 තස්මාද් අස්මාසු සර්ව්වේෂු භූමෞ පතිතේෂු සත්සු හේ ශෞල හෛ ශෞල කුතෝ මාං තාඩයසි? කණ්ටකානාං මුඛේ පාදාහනනං තව දුඃසාධ්යම් ඉබ්රීයභාෂයා ගදිත ඒතාදෘශ ඒකඃ ශබ්දෝ මයා ශ්රුතඃ|
நாங்கள் அனைவரும் தரையில் விழுந்தோம். ஒரு குரல் எபிரெய மொழியில் என்னுடன் பேசுவதைக் கேட்டேன். அது, ‘சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முட்களை உதைப்பது உனக்குக் கடினமே’ என்றது.
15 තදාහං පෘෂ්ටවාන් හේ ප්රභෝ කෝ භවාන්? තතඃ ස කථිතවාන් යං යීශුං ත්වං තාඩයසි සෝහං,
“அப்பொழுது நான், ‘ஆண்டவரே, நீர் யார்?’ என்று கேட்டேன். “‘ஆண்டவர் அதற்கு மறுமொழியாக, நான் இயேசு, நீ என்னையே துன்புறுத்துகிறாய்.
16 කින්තු සමුත්තිෂ්ඨ ත්වං යද් දෘෂ්ටවාන් ඉතඃ පුනඤ්ච යද්යත් ත්වාං දර්ශයිෂ්යාමි තේෂාං සර්ව්වේෂාං කාර්ය්යාණාං ත්වාං සාක්ෂිණං මම සේවකඤ්ච කර්ත්තුම් දර්ශනම් අදාම්|
இப்பொழுது நீ எழுந்து காலூன்றி நில். நான் உன்னை என் ஊழியனாகவும், சாட்சியாகவும் நியமிப்பதற்கே, உனக்குக் காட்சியளித்தேன். என்னைக் கண்டது குறித்தும், நான் உனக்குக் காண்பிக்கப் போகிறவற்றிற்கும், நீ சாட்சியாய் இருக்கவேண்டும்.
17 විශේෂතෝ යිහූදීයලෝකේභ්යෝ භින්නජාතීයේභ්යශ්ච ත්වාං මනෝනීතං කෘත්වා තේෂාං යථා පාපමෝචනං භවති
நான் உன்னை உன் சொந்த மக்களிடமிருந்தும், யூதரல்லாதவர்களிடமிருந்தும் காப்பாற்றுவேன்.
18 යථා තේ මයි විශ්වස්ය පවිත්රීකෘතානාං මධ්යේ භාගං ප්රාප්නුවන්ති තදභිප්රායේණ තේෂාං ඥානචක්ෂූංෂි ප්රසන්නානි කර්ත්තුං තථාන්ධකාරාද් දීප්තිං ප්රති ශෛතානාධිකාරාච්ච ඊශ්වරං ප්රති මතීඃ පරාවර්ත්තයිතුං තේෂාං සමීපං ත්වාං ප්රේෂ්යාමි|
நீ அவர்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கும், சாத்தானின் அதிகாரத்திலிருந்து இறைவனிடத்திற்கும் திரும்பும்படி அவர்களுடைய கண்களைத் திறக்கவும், அவர்கள் தங்களுடைய பாவமன்னிப்பைப் பெற்று, என்மேலுள்ள விசுவாசத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுடன் இடத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாகவே, நான் உன்னை அனுப்புகிறேன்’ என்றார்.
19 හේ ආග්රිප්පරාජ ඒතාදෘශං ස්වර්ගීයප්රත්යාදේශං අග්රාහ්යම් අකෘත්වාහං
“அகிரிப்பா அரசே, ஆகவே அந்த பரலோக தரிசனத்திற்கு நான் கீழ்ப்படியாதவனாய் இருக்கவில்லை.
20 ප්රථමතෝ දම්මේෂක්නගරේ තතෝ යිරූශාලමි සර්ව්වස්මින් යිහූදීයදේශේ අන්යේෂු දේශේෂු ච යේන ලෝකා මතිං පරාවර්ත්ත්ය ඊශ්වරං ප්රති පරාවර්ත්තයන්තේ, මනඃපරාවර්ත්තනයෝග්යානි කර්ම්මාණි ච කුර්ව්වන්ති තාදෘශම් උපදේශං ප්රචාරිතවාන්|
எனவே முதலாவது தமஸ்குவில் இருந்தவர்களுக்கும், பின்பு எருசலேமிலும் முழு யூதேயாவில் இருந்தவர்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும்கூட நான் பிரசங்கித்தேன். அவர்கள் மனந்திரும்பி இறைவனிடம் திரும்பவேண்டும் என்றும், தங்களுடைய மனந்திரும்புதலை அவர்கள் தங்கள் செயல்களினால் நிரூபிக்கவேண்டும் என்றும் அறிவித்தேன்.
21 ඒතත්කාරණාද් යිහූදීයා මධ්යේමන්දිරං මාං ධෘත්වා හන්තුම් උද්යතාඃ|
இதனாலேயே யூதர்கள், ஆலய முற்றத்தில் இருந்த என்னைப் பிடித்துக் கொலைசெய்ய முயற்சித்தார்கள்.
22 තථාපි ඛ්රීෂ්ටෝ දුඃඛං භුක්ත්වා සර්ව්වේෂාං පූර්ව්වං ශ්මශානාද් උත්ථාය නිජදේශීයානාං භින්නදේශීයානාඤ්ච සමීපේ දීප්තිං ප්රකාශයිෂ්යති
ஆனால், இன்றுவரை, நான் இறைவனுடைய உதவியைப் பெற்றவனாய், இங்கே நின்று சிறியவர்கள் பெரியவர்கள் எல்லோருக்கும் சாட்சி கொடுக்கிறேன். இறைவாக்கினரும், மோசேயும் என்ன நடக்கும் என்று சொன்னார்களோ, அதையேதான் நானும் சொல்கிறேன். வேறு எதையும் நான் சொல்லவில்லை.
23 භවිෂ්යද්වාදිගණෝ මූසාශ්ච භාවිකාර්ය්යස්ය යදිදං ප්රමාණම් අදදුරේතද් විනාන්යාං කථාං න කථයිත්වා ඊශ්වරාද් අනුග්රහං ලබ්ධ්වා මහතාං ක්ෂුද්රාණාඤ්ච සර්ව්වේෂාං සමීපේ ප්රමාණං දත්ත්වාද්ය යාවත් තිෂ්ඨාමි|
கிறிஸ்து வேதனைகள் அனுபவித்து, பின் இறந்தவர்களிலிருந்து முதலாவதாய் எழுந்திருப்பவராய், தனது சொந்த மக்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும் ஒளியைப் பிரசித்தப்படுத்துவார் என்றே அவர்களும் சொன்னார்கள்” என்றார்.
24 තස්යමාං කථාං නිශම්ය ඵීෂ්ට උච්චෛඃ ස්වරේණ කථිතවාන් හේ පෞල ත්වම් උන්මත්තෝසි බහුවිද්යාභ්යාසේන ත්වං හතඥානෝ ජාතඃ|
அந்நேரத்தில் பெஸ்து குறுக்கிட்டு பவுலிடம், “பவுலே, உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது!” உனது அதிக படிப்பினால் “உனக்கு மூளை குழம்பிவிட்டது” என்று சத்தமிட்டுச் சொன்னான்.
25 ස උක්තවාන් හේ මහාමහිම ඵීෂ්ට නාහම් උන්මත්තඃ කින්තු සත්යං විවේචනීයඤ්ච වාක්යං ප්රස්තෞමි|
அதற்குப் பவுல், “மதிப்புக்குரிய பெஸ்து அவர்களே, எனக்கு மூளை குழம்பவில்லை. நான் சொல்வது உண்மையும், நியாயமானதுமாய் இருக்கிறது.
26 යස්ය සාක්ෂාද් අක්ෂෝභඃ සන් කථාං කථයාමි ස රාජා තද්වෘත්තාන්තං ජානාති තස්ය සමීපේ කිමපි ගුප්තං නේති මයා නිශ්චිතං බුධ්යතේ යතස්තද් විජනේ න කෘතං|
அரசர் இவற்றையெல்லாம் அறிந்திருக்கிறார். அதனால்தான் நான் அவருடன் தாராளமாய் பேசுகிறேன். நான் பேசும் இவை ஒன்றும் அவருக்குத் தெரியாமல் நடந்தவை அல்ல என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், இவை மூலைமுடுக்கில் நடந்தவை அல்ல.
27 හේ ආග්රිප්පරාජ භවාන් කිං භවිෂ්යද්වාදිගණෝක්තානි වාක්යානි ප්රත්යේති? භවාන් ප්රත්යේති තදහං ජානාමි|
அகிரிப்பா அரசே, நீர் இறைவாக்கினரை நம்புகிறீரா? நீர் நம்புகிறீர் என்று எனக்குத் தெரியும்” என்றான்.
28 තත ආග්රිප්පඃ පෞලම් අභිහිතවාන් ත්වං ප්රවෘත්තිං ජනයිත්වා ප්රායේණ මාමපි ඛ්රීෂ්ටීයං කරෝෂි|
அப்பொழுது அகிரிப்பா பவுலிடம், “என்ன! இந்தக் கொஞ்ச நேரத்திலே, நீ என்னைக் கிறிஸ்துவை பின்பற்றுகிறவனாக்க நினைக்கிறாயா?” என்றான்.
29 තතඃ සෝ(අ)වාදීත් භවාන් යේ යේ ලෝකාශ්ච මම කථාම් අද්ය ශෘණ්වන්ති ප්රායේණ ඉති නහි කින්ත්වේතත් ශෘඞ්ඛලබන්ධනං විනා සර්ව්වථා තේ සර්ව්වේ මාදෘශා භවන්ත්විතීශ්වස්ය සමීපේ ප්රාර්ථයේ(අ)හම්|
அதற்குப் பவுல், “கொஞ்ச நேரமோ, அதிக நேரமோ, நீர் மட்டுமல்ல, இன்று நான் சொல்வதைக் கேட்கும் அனைவரும், என்னைப்போல் ஆகவேண்டும்; ஆனால் இவ்விதம் சங்கிலிகளால் மட்டும் கட்டப்படக்கூடாது என்றே இறைவனிடம் மன்றாடுகிறேன்” என்றான்.
30 ඒතස්යාං කථායාං කථිතායාං ස රාජා සෝ(අ)ධිපති ර්බර්ණීකී සභාස්ථා ලෝකාශ්ච තස්මාද් උත්ථාය
அரசன் தன் இடத்தைவிட்டு எழுந்தான். அவனுடன் ஆளுநரும், பெர்னிக்கேயாளும், அவர்களுடன் இருந்தவர்களுங்கூட இருக்கைகளை விட்டு எழுந்தார்கள்.
31 ගෝපනේ පරස්පරං විවිච්ය කථිතවන්ත ඒෂ ජනෝ බන්ධනාර්හං ප්රාණහනනාර්හං වා කිමපි කර්ම්ම නාකරෝත්|
அவர்கள் அவ்விடத்தை விட்டுப்போகையில் ஒருவரோடொருவர், “இவன் மரணதண்டனையையோ, சிறைத் தண்டனையையோ பெறுவதற்கான எதையும் செய்யவில்லை” என்று பேசிக்கொண்டார்கள்.
32 තත ආග්රිප්පඃ ඵීෂ්ටම් අවදත්, යද්යේෂ මානුෂඃ කෛසරස්ය නිකටේ විචාරිතෝ භවිතුං න ප්රාර්ථයිෂ්යත් තර්හි මුක්තෝ භවිතුම් අශක්ෂ්යත්|
அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவிடம், “இவன் ரோமப் பேரரசனுக்கு மேல்முறையீடு செய்யாமல் இருந்திருந்தால், இவனை விடுவித்திருக்கலாம்” என்றான்.