< ਮਾਰ੍ਕਃ 1 >

1 ਈਸ਼੍ਵਰਪੁਤ੍ਰਸ੍ਯ ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਸੁਸੰਵਾਦਾਰਮ੍ਭਃ|
இறைவனுடைய மகன் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.
2 ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਨਾਂ ਗ੍ਰਨ੍ਥੇਸ਼਼ੁ ਲਿਪਿਰਿੱਥਮਾਸ੍ਤੇ, ਪਸ਼੍ਯ ਸ੍ਵਕੀਯਦੂਤਨ੍ਤੁ ਤਵਾਗ੍ਰੇ ਪ੍ਰੇਸ਼਼ਯਾਮ੍ਯਹਮ੍| ਗਤ੍ਵਾ ਤ੍ਵਦੀਯਪਨ੍ਥਾਨੰ ਸ ਹਿ ਪਰਿਸ਼਼੍ਕਰਿਸ਼਼੍ਯਤਿ|
இது ஏசாயா என்ற இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது: “நான் என்னுடைய தூதனை உமக்கு முன்பாக அனுப்புவேன்; அவன் உமது வழியை ஆயத்தப்படுத்துவான்”
3 "ਪਰਮੇਸ਼ਸ੍ਯ ਪਨ੍ਥਾਨੰ ਪਰਿਸ਼਼੍ਕੁਰੁਤ ਸਰ੍ੱਵਤਃ| ਤਸ੍ਯ ਰਾਜਪਥਞ੍ਚੈਵ ਸਮਾਨੰ ਕੁਰੁਤਾਧੁਨਾ| " ਇਤ੍ਯੇਤਤ੍ ਪ੍ਰਾਨ੍ਤਰੇ ਵਾਕ੍ਯੰ ਵਦਤਃ ਕਸ੍ਯਚਿਦ੍ਰਵਃ||
“‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்காகப் பாதைகளை நேராக்குங்கள்’ என்று ஒருவனுடைய குரல் பாலைவனத்திலே சத்தமிட்டது.”
4 ਸਏਵ ਯੋਹਨ੍ ਪ੍ਰਾਨ੍ਤਰੇ ਮੱਜਿਤਵਾਨ੍ ਤਥਾ ਪਾਪਮਾਰ੍ਜਨਨਿਮਿੱਤੰ ਮਨੋਵ੍ਯਾਵਰ੍ੱਤਕਮੱਜਨਸ੍ਯ ਕਥਾਞ੍ਚ ਪ੍ਰਚਾਰਿਤਵਾਨ੍|
அவ்வாறே யோவான் ஸ்நானகன் பாலைவனப் பகுதியில் வந்து, திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் மக்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்கு, அவர்கள் மனந்திரும்பிப் பெறவேண்டிய திருமுழுக்கைக் குறித்துப் பிரசங்கித்தான்.
5 ਤਤੋ ਯਿਹੂਦਾਦੇਸ਼ਯਿਰੂਸ਼ਾਲਮ੍ਨਗਰਨਿਵਾਸਿਨਃ ਸਰ੍ੱਵੇ ਲੋਕਾ ਬਹਿ ਰ੍ਭੂਤ੍ਵਾ ਤਸ੍ਯ ਸਮੀਪਮਾਗਤ੍ਯ ਸ੍ਵਾਨਿ ਸ੍ਵਾਨਿ ਪਾਪਾਨ੍ਯਙ੍ਗੀਕ੍ਰੁʼਤ੍ਯ ਯਰ੍ੱਦਨਨਦ੍ਯਾਂ ਤੇਨ ਮੱਜਿਤਾ ਬਭੂਵੁਃ|
யூதேயா மாகாணத்தின் எல்லா நாட்டுப்புறங்களிலும் எருசலேம் நகரத்திலுமிருந்து எல்லாரும் அவனிடம் சென்றார்கள். அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் ஆற்றிலே அவனால் திருமுழுக்குப் பெற்றார்கள்.
6 ਅਸ੍ਯ ਯੋਹਨਃ ਪਰਿਧੇਯਾਨਿ ਕ੍ਰਮੇਲਕਲੋਮਜਾਨਿ, ਤਸ੍ਯ ਕਟਿਬਨ੍ਧਨੰ ਚਰ੍ੰਮਜਾਤਮ੍, ਤਸ੍ਯ ਭਕ੍ਸ਼਼੍ਯਾਣਿ ਚ ਸ਼ੂਕਕੀਟਾ ਵਨ੍ਯਮਧੂਨਿ ਚਾਸਨ੍|
யோவானின் உடைகள் ஒட்டக முடியினால் செய்யப்பட்டிருந்தன. அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான். அவனது உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனுமாய் இருந்தது.
7 ਸ ਪ੍ਰਚਾਰਯਨ੍ ਕਥਯਾਞ੍ਚਕ੍ਰੇ, ਅਹੰ ਨਮ੍ਰੀਭੂਯ ਯਸ੍ਯ ਪਾਦੁਕਾਬਨ੍ਧਨੰ ਮੋਚਯਿਤੁਮਪਿ ਨ ਯੋਗ੍ਯੋਸ੍ਮਿ, ਤਾਦ੍ਰੁʼਸ਼ੋ ਮੱਤੋ ਗੁਰੁਤਰ ਏਕਃ ਪੁਰੁਸ਼਼ੋ ਮਤ੍ਪਸ਼੍ਚਾਦਾਗੱਛਤਿ|
அவன் அறிவித்த செய்தி என்னவென்றால், “என்னைப் பார்க்கிலும் அதிக வல்லமையுள்ளவர் எனக்குப்பின் வருகிறார். நானோ அவருடைய பாதரட்சைகளின் வாரையும் குனிந்து அவிழ்ப்பதற்குத் தகுதியற்றவன்.
8 ਅਹੰ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਜਲੇ ਮੱਜਿਤਵਾਨ੍ ਕਿਨ੍ਤੁ ਸ ਪਵਿਤ੍ਰ ਆਤ੍ਮਾਨਿ ਸੰਮੱਜਯਿਸ਼਼੍ਯਤਿ|
நான் உங்களுக்குத் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன்; ஆனால் அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு கொடுப்பார்.”
9 ਅਪਰਞ੍ਚ ਤਸ੍ਮਿੰਨੇਵ ਕਾਲੇ ਗਾਲੀਲ੍ਪ੍ਰਦੇਸ਼ਸ੍ਯ ਨਾਸਰਦ੍ਗ੍ਰਾਮਾਦ੍ ਯੀਸ਼ੁਰਾਗਤ੍ਯ ਯੋਹਨਾ ਯਰ੍ੱਦਨਨਦ੍ਯਾਂ ਮੱਜਿਤੋ(ਅ)ਭੂਤ੍|
அக்காலத்தில் இயேசு கலிலேயா மாகாணத்தின் நாசரேத் பட்டணத்திலிருந்து வந்து, யோர்தான் ஆற்றிலே யோவானால் திருமுழுக்கு பெற்றார்.
10 ਸ ਜਲਾਦੁੱਥਿਤਮਾਤ੍ਰੋ ਮੇਘਦ੍ਵਾਰੰ ਮੁਕ੍ਤੰ ਕਪੋਤਵਤ੍ ਸ੍ਵਸ੍ਯੋਪਰਿ ਅਵਰੋਹਨ੍ਤਮਾਤ੍ਮਾਨਞ੍ਚ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਵਾਨ੍|
இயேசு தண்ணீரிலிருந்து கரையேறிய உடனே, வானம் திறக்கப்பட்டதையும் பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் அவர் கண்டார்.
11 ਤ੍ਵੰ ਮਮ ਪ੍ਰਿਯਃ ਪੁਤ੍ਰਸ੍ਤ੍ਵੱਯੇਵ ਮਮਮਹਾਸਨ੍ਤੋਸ਼਼ ਇਯਮਾਕਾਸ਼ੀਯਾ ਵਾਣੀ ਬਭੂਵ|
அப்பொழுது வானத்திலிருந்து ஒரு குரல்: “நீர் என்னுடைய அன்பு மகன்; நான் உம்மில் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்” என்று ஒலித்தது.
12 ਤਸ੍ਮਿਨ੍ ਕਾਲੇ ਆਤ੍ਮਾ ਤੰ ਪ੍ਰਾਨ੍ਤਰਮਧ੍ਯੰ ਨਿਨਾਯ|
உடனே ஆவியானவர் இயேசுவைப் பாலைவனத்துக்கு அனுப்பினார்.
13 ਅਥ ਸ ਚਤ੍ਵਾਰਿੰਸ਼ੱਦਿਨਾਨਿ ਤਸ੍ਮਿਨ੍ ਸ੍ਥਾਨੇ ਵਨ੍ਯਪਸ਼ੁਭਿਃ ਸਹ ਤਿਸ਼਼੍ਠਨ੍ ਸ਼ੈਤਾਨਾ ਪਰੀਕ੍ਸ਼਼ਿਤਃ; ਪਸ਼੍ਚਾਤ੍ ਸ੍ਵਰ੍ਗੀਯਦੂਤਾਸ੍ਤੰ ਸਿਸ਼਼ੇਵਿਰੇ|
இயேசு பாலைவனத்தில் நாற்பது நாட்கள் இருந்து சாத்தானால் சோதிக்கப்பட்டார். அங்கு அவர் காட்டு மிருகங்களுடன் இருந்தார்; இறைவனுடைய தூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
14 ਅਨਨ੍ਤਰੰ ਯੋਹਨਿ ਬਨ੍ਧਨਾਲਯੇ ਬੱਧੇ ਸਤਿ ਯੀਸ਼ੁ ਰ੍ਗਾਲੀਲ੍ਪ੍ਰਦੇਸ਼ਮਾਗਤ੍ਯ ਈਸ਼੍ਵਰਰਾਜ੍ਯਸ੍ਯ ਸੁਸੰਵਾਦੰ ਪ੍ਰਚਾਰਯਨ੍ ਕਥਯਾਮਾਸ,
யோவான் சிறையில் அடைக்கப்பட்ட பின்பு, இயேசு இறைவனுடைய நற்செய்தியை அறிவித்துக்கொண்டு கலிலேயாவுக்கு வந்து,
15 ਕਾਲਃ ਸਮ੍ਪੂਰ੍ਣ ਈਸ਼੍ਵਰਰਾਜ੍ਯਞ੍ਚ ਸਮੀਪਮਾਗਤੰ; ਅਤੋਹੇਤੋ ਰ੍ਯੂਯੰ ਮਨਾਂਸਿ ਵ੍ਯਾਵਰ੍ੱਤਯਧ੍ਵੰ ਸੁਸੰਵਾਦੇ ਚ ਵਿਸ਼੍ਵਾਸਿਤ|
“காலம் நிறைவேறிவிட்டது, இறைவனுடைய அரசு சமீபித்திருக்கிறது. மனந்திரும்பி நற்செய்தியை விசுவாசியுங்கள்” என்றார்.
16 ਤਦਨਨ੍ਤਰੰ ਸ ਗਾਲੀਲੀਯਸਮੁਦ੍ਰਸ੍ਯ ਤੀਰੇ ਗੱਛਨ੍ ਸ਼ਿਮੋਨ੍ ਤਸ੍ਯ ਭ੍ਰਾਤਾ ਅਨ੍ਦ੍ਰਿਯਨਾਮਾ ਚ ਇਮੌ ਦ੍ਵੌ ਜਨੌ ਮਤ੍ਸ੍ਯਧਾਰਿਣੌ ਸਾਗਰਮਧ੍ਯੇ ਜਾਲੰ ਪ੍ਰਕ੍ਸ਼਼ਿਪਨ੍ਤੌ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾ ਤਾਵਵਦਤ੍,
இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது சீமோனையும் அவனது சகோதரன் அந்திரேயாவையும் கண்டார்; மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.
17 ਯੁਵਾਂ ਮਮ ਪਸ਼੍ਚਾਦਾਗੱਛਤੰ, ਯੁਵਾਮਹੰ ਮਨੁਸ਼਼੍ਯਧਾਰਿਣੌ ਕਰਿਸ਼਼੍ਯਾਮਿ|
இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” என்றார்.
18 ਤਤਸ੍ਤੌ ਤਤ੍ਕ੍ਸ਼਼ਣਮੇਵ ਜਾਲਾਨਿ ਪਰਿਤ੍ਯਜ੍ਯ ਤਸ੍ਯ ਪਸ਼੍ਚਾਤ੍ ਜਗ੍ਮਤੁਃ|
உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினார்கள்.
19 ਤਤਃ ਪਰੰ ਤਤ੍ਸ੍ਥਾਨਾਤ੍ ਕਿਞ੍ਚਿਦ੍ ਦੂਰੰ ਗਤ੍ਵਾ ਸ ਸਿਵਦੀਪੁਤ੍ਰਯਾਕੂਬ੍ ਤਦ੍ਭ੍ਰਾਤ੍ਰੁʼਯੋਹਨ੍ ਚ ਇਮੌ ਨੌਕਾਯਾਂ ਜਾਲਾਨਾਂ ਜੀਰ੍ਣਮੁੱਧਾਰਯਨ੍ਤੌ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾ ਤਾਵਾਹੂਯਤ੍|
இயேசு சற்று தூரம் போனபின்பு, செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார்; அவர்கள் ஒரு படகிலிருந்து தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
20 ਤਤਸ੍ਤੌ ਨੌਕਾਯਾਂ ਵੇਤਨਭੁਗ੍ਭਿਃ ਸਹਿਤੰ ਸ੍ਵਪਿਤਰੰ ਵਿਹਾਯ ਤਤ੍ਪਸ਼੍ਚਾਦੀਯਤੁਃ|
உடனே இயேசு அவர்களையும் அழைத்தார்; அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினார்கள்.
21 ਤਤਃ ਪਰੰ ਕਫਰ੍ਨਾਹੂਮ੍ਨਾਮਕੰ ਨਗਰਮੁਪਸ੍ਥਾਯ ਸ ਵਿਸ਼੍ਰਾਮਦਿਵਸੇ ਭਜਨਗ੍ਰਹੰ ਪ੍ਰਵਿਸ਼੍ਯ ਸਮੁਪਦਿਦੇਸ਼|
பின்பு அவர்கள் கப்பர்நகூம் நகரத்திற்குச் சென்றார்கள்; ஓய்வுநாளில் இயேசு யூத ஜெப ஆலயத்திற்குச் சென்று, அங்கு போதித்தார்.
22 ਤਸ੍ਯੋਪਦੇਸ਼ਾੱਲੋਕਾ ਆਸ਼੍ਚਰ੍ੱਯੰ ਮੇਨਿਰੇ ਯਤਃ ਸੋਧ੍ਯਾਪਕਾਇਵ ਨੋਪਦਿਸ਼ਨ੍ ਪ੍ਰਭਾਵਵਾਨਿਵ ਪ੍ਰੋਪਦਿਦੇਸ਼|
அங்கிருந்த மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஏனெனில், அவர் மோசேயின் சட்ட ஆசிரியர்களைப்போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் அவர்களுக்கு போதித்தார்.
23 ਅਪਰਞ੍ਚ ਤਸ੍ਮਿਨ੍ ਭਜਨਗ੍ਰੁʼਹੇ ਅਪਵਿਤ੍ਰਭੂਤੇਨ ਗ੍ਰਸ੍ਤ ਏਕੋ ਮਾਨੁਸ਼਼ ਆਸੀਤ੍| ਸ ਚੀਤ੍ਸ਼ਬ੍ਦੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਕਥਯਾਞ੍ਚਕੇ
அப்பொழுது, அந்த ஜெப ஆலயத்தில் தீய ஆவி பிடித்தவனாயிருந்த ஒருவன் சத்தமிட்டு,
24 ਭੋ ਨਾਸਰਤੀਯ ਯੀਸ਼ੋ ਤ੍ਵਮਸ੍ਮਾਨ੍ ਤ੍ਯਜ, ਤ੍ਵਯਾ ਸਹਾਸ੍ਮਾਕੰ ਕਃ ਸਮ੍ਬਨ੍ਧਃ? ਤ੍ਵੰ ਕਿਮਸ੍ਮਾਨ੍ ਨਾਸ਼ਯਿਤੁੰ ਸਮਾਗਤਃ? ਤ੍ਵਮੀਸ਼੍ਵਰਸ੍ਯ ਪਵਿਤ੍ਰਲੋਕ ਇਤ੍ਯਹੰ ਜਾਨਾਮਿ|
“நசரேயனாகிய இயேசுவே, எங்களிடம் உமக்கு என்ன? எங்களை அழிப்பதற்காகவா வந்தீர்? நீர் யார் என்பது எனக்குத் தெரியும், நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான்.
25 ਤਦਾ ਯੀਸ਼ੁਸ੍ਤੰ ਤਰ੍ਜਯਿਤ੍ਵਾ ਜਗਾਦ ਤੂਸ਼਼੍ਣੀਂ ਭਵ ਇਤੋ ਬਹਿਰ੍ਭਵ ਚ|
“அமைதியாயிரு! இவனைவிட்டு வெளியே போ” என்று இயேசு அவனை அதட்டினார்.
26 ਤਤਃ ਸੋ(ਅ)ਪਵਿਤ੍ਰਭੂਤਸ੍ਤੰ ਸਮ੍ਪੀਡ੍ਯ ਅਤ੍ਯੁਚੈਸ਼੍ਚੀਤ੍ਕ੍ਰੁʼਤ੍ਯ ਨਿਰ੍ਜਗਾਮ|
அப்பொழுது தீய ஆவி, அந்த மனிதனை வலிப்புடன் வீழ்த்தி, பெருங்கூச்சலிட்டுக் கொண்டு, அவனைவிட்டு வெளியேறியது.
27 ਤੇਨੈਵ ਸਰ੍ੱਵੇ ਚਮਤ੍ਕ੍ਰੁʼਤ੍ਯ ਪਰਸ੍ਪਰੰ ਕਥਯਾਞ੍ਚਕ੍ਰਿਰੇ, ਅਹੋ ਕਿਮਿਦੰ? ਕੀਦ੍ਰੁʼਸ਼ੋ(ਅ)ਯੰ ਨਵ੍ਯ ਉਪਦੇਸ਼ਃ? ਅਨੇਨ ਪ੍ਰਭਾਵੇਨਾਪਵਿਤ੍ਰਭੂਤੇਸ਼਼੍ਵਾਜ੍ਞਾਪਿਤੇਸ਼਼ੁ ਤੇ ਤਦਾਜ੍ਞਾਨੁਵਰ੍ੱਤਿਨੋ ਭਵਨ੍ਤਿ|
எல்லோரும் வியப்படைந்து ஒருவரோடொருவர், “இது என்ன? இது அதிகாரமுடைய ஒரு புதிய போதனையாக இருக்கிறதே! இயேசு தீய ஆவிகளுக்குக்கூட கட்டளையிடுகிறார்; அவைகளும் அவருக்குக் கீழ்ப்படிகின்றனவே” என்று பேசிக்கொண்டார்கள்.
28 ਤਦਾ ਤਸ੍ਯ ਯਸ਼ੋ ਗਾਲੀਲਸ਼੍ਚਤੁਰ੍ਦਿਕ੍ਸ੍ਥਸਰ੍ੱਵਦੇਸ਼ਾਨ੍ ਵ੍ਯਾਪ੍ਨੋਤ੍|
இயேசுவைப்பற்றிய இச்செய்தி கலிலேயா பகுதிகள் முழுவதும் விரைவாய் பரவியது.
29 ਅਪਰਞ੍ਚ ਤੇ ਭਜਨਗ੍ਰੁʼਹਾਦ੍ ਬਹਿ ਰ੍ਭੂਤ੍ਵਾ ਯਾਕੂਬ੍ਯੋਹਨ੍ਭ੍ਯਾਂ ਸਹ ਸ਼ਿਮੋਨ ਆਨ੍ਦ੍ਰਿਯਸ੍ਯ ਚ ਨਿਵੇਸ਼ਨੰ ਪ੍ਰਵਿਵਿਸ਼ੁਃ|
ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்ட உடனே அவர்கள், யாக்கோபு மற்றும் யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.
30 ਤਦਾ ਪਿਤਰਸ੍ਯ ਸ਼੍ਵਸ਼੍ਰੂਰ੍ਜ੍ਵਰਪੀਡਿਤਾ ਸ਼ੱਯਾਯਾਮਾਸ੍ਤ ਇਤਿ ਤੇ ਤੰ ਝਟਿਤਿ ਵਿਜ੍ਞਾਪਯਾਞ੍ਚਕ੍ਰੁਃ|
அங்கே சீமோனுடைய மாமியார் காய்ச்சலுடன் படுக்கையில் கிடந்தாள். உடனே அவர்கள் அவளைப்பற்றி இயேசுவுக்குச் சொன்னார்கள்.
31 ਤਤਃ ਸ ਆਗਤ੍ਯ ਤਸ੍ਯਾ ਹਸ੍ਤੰ ਧ੍ਰੁʼਤ੍ਵਾ ਤਾਮੁਦਸ੍ਥਾਪਯਤ੍; ਤਦੈਵ ਤਾਂ ਜ੍ਵਰੋ(ਅ)ਤ੍ਯਾਕ੍ਸ਼਼ੀਤ੍ ਤਤਃ ਪਰੰ ਸਾ ਤਾਨ੍ ਸਿਸ਼਼ੇਵੇ|
எனவே இயேசு அவளிடத்தில் சென்று, அவளுடைய கையைப் பிடித்து, அவள் எழுந்துகொள்ள உதவினார். உடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று; அவள் அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள்.
32 ਅਥਾਸ੍ਤੰ ਗਤੇ ਰਵੌ ਸਨ੍ਧ੍ਯਾਕਾਲੇ ਸਤਿ ਲੋਕਾਸ੍ਤਤ੍ਸਮੀਪੰ ਸਰ੍ੱਵਾਨ੍ ਰੋਗਿਣੋ ਭੂਤਧ੍ਰੁʼਤਾਂਸ਼੍ਚ ਸਮਾਨਿਨ੍ਯੁਃ|
அன்று மாலை கதிரவன் மறைந்தபின்பு, வியாதிப்பட்டவர்கள், பிசாசு பிடித்தவர்கள் எல்லோரையும் மக்கள் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.
33 ਸਰ੍ੱਵੇ ਨਾਗਰਿਕਾ ਲੋਕਾ ਦ੍ਵਾਰਿ ਸੰਮਿਲਿਤਾਸ਼੍ਚ|
பட்டணத்திலுள்ள அனைவரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடியிருந்தார்கள்.
34 ਤਤਃ ਸ ਨਾਨਾਵਿਧਰੋਗਿਣੋ ਬਹੂਨ੍ ਮਨੁਜਾਨਰੋਗਿਣਸ਼੍ਚਕਾਰ ਤਥਾ ਬਹੂਨ੍ ਭੂਤਾਨ੍ ਤ੍ਯਾਜਯਾਞ੍ਚਕਾਰ ਤਾਨ੍ ਭੂਤਾਨ੍ ਕਿਮਪਿ ਵਾਕ੍ਯੰ ਵਕ੍ਤੁੰ ਨਿਸ਼਼ਿਸ਼਼ੇਧ ਚ ਯਤੋਹੇਤੋਸ੍ਤੇ ਤਮਜਾਨਨ੍|
பலவித வியாதி உடையவர்களாயிருந்த அநேகரை, இயேசு குணமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்தினார். அந்தப் பிசாசுகள் தம்மை யாரென்று அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு இயேசு அனுமதிக்கவில்லை.
35 ਅਪਰਞ੍ਚ ਸੋ(ਅ)ਤਿਪ੍ਰਤ੍ਯੂਸ਼਼ੇ ਵਸ੍ਤੁਤਸ੍ਤੁ ਰਾਤ੍ਰਿਸ਼ੇਸ਼਼ੇ ਸਮੁੱਥਾਯ ਬਹਿਰ੍ਭੂਯ ਨਿਰ੍ਜਨੰ ਸ੍ਥਾਨੰ ਗਤ੍ਵਾ ਤਤ੍ਰ ਪ੍ਰਾਰ੍ਥਯਾਞ੍ਚਕ੍ਰੇ|
விடியுமுன் இருட்டாய் இருக்கையிலேயே இயேசு எழுந்து புறப்பட்டு ஒரு தனிமையான இடத்திற்குப் போய், அங்கே மன்றாடினார்.
36 ਅਨਨ੍ਤਰੰ ਸ਼ਿਮੋਨ੍ ਤਤ੍ਸਙ੍ਗਿਨਸ਼੍ਚ ਤਸ੍ਯ ਪਸ਼੍ਚਾਦ੍ ਗਤਵਨ੍ਤਃ|
சீமோனும் அவனுடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச்சென்றார்கள்.
37 ਤਦੁੱਦੇਸ਼ੰ ਪ੍ਰਾਪ੍ਯ ਤਮਵਦਨ੍ ਸਰ੍ੱਵੇ ਲੋਕਾਸ੍ਤ੍ਵਾਂ ਮ੍ਰੁʼਗਯਨ੍ਤੇ|
அவர்கள் இயேசுவைக் கண்டபோது, “எல்லோரும் உம்மைத் தேடிக்கொண்டு இருக்கிறார்களே” என்றார்கள்.
38 ਤਦਾ ਸੋ(ਅ)ਕਥਯਤ੍ ਆਗੱਛਤ ਵਯੰ ਸਮੀਪਸ੍ਥਾਨਿ ਨਗਰਾਣਿ ਯਾਮਃ, ਯਤੋ(ਅ)ਹੰ ਤਤ੍ਰ ਕਥਾਂ ਪ੍ਰਚਾਰਯਿਤੁੰ ਬਹਿਰਾਗਮਮ੍|
இயேசு அவர்களிடம், “நாம் வேறுசில கிராமங்களுக்குப் போவோம்; அங்கேயும் நான் பிரசங்கிக்க வேண்டும். அதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்றார்.
39 ਅਥ ਸ ਤੇਸ਼਼ਾਂ ਗਾਲੀਲ੍ਪ੍ਰਦੇਸ਼ਸ੍ਯ ਸਰ੍ੱਵੇਸ਼਼ੁ ਭਜਨਗ੍ਰੁʼਹੇਸ਼਼ੁ ਕਥਾਃ ਪ੍ਰਚਾਰਯਾਞ੍ਚਕ੍ਰੇ ਭੂਤਾਨਤ੍ਯਾਜਯਞ੍ਚ|
எனவே, இயேசு கலிலேயா முழுவதிலும் பயணம் செய்து, ஜெப ஆலயங்களில் நற்செய்தியை அறிவித்து, பிசாசுகளையும் துரத்தினார்.
40 ਅਨਨ੍ਤਰਮੇਕਃ ਕੁਸ਼਼੍ਠੀ ਸਮਾਗਤ੍ਯ ਤਤ੍ਸੰਮੁਖੇ ਜਾਨੁਪਾਤੰ ਵਿਨਯਞ੍ਚ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਕਥਿਤਵਾਨ੍ ਯਦਿ ਭਵਾਨ੍ ਇੱਛਤਿ ਤਰ੍ਹਿ ਮਾਂ ਪਰਿਸ਼਼੍ਕਰ੍ੱਤੁੰ ਸ਼ਕ੍ਨੋਤਿ|
குஷ்டவியாதி உள்ளவன் இயேசுவினிடத்தில் வந்து முழங்காற்படியிட்டு, நீர் விரும்பினால், “என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்று கெஞ்சி வேண்டிக்கொண்டான்.
41 ਤਤਃ ਕ੍ਰੁʼਪਾਲੁ ਰ੍ਯੀਸ਼ੁਃ ਕਰੌ ਪ੍ਰਸਾਰ੍ੱਯ ਤੰ ਸ੍ਪਸ਼਼੍ਟ੍ਵਾ ਕਥਯਾਮਾਸ
இயேசு மனதுருகினவராய் தன் கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்றார்.
42 ਮਮੇੱਛਾ ਵਿਦ੍ਯਤੇ ਤ੍ਵੰ ਪਰਿਸ਼਼੍ਕ੍ਰੁʼਤੋ ਭਵ| ਏਤਤ੍ਕਥਾਯਾਃ ਕਥਨਮਾਤ੍ਰਾਤ੍ ਸ ਕੁਸ਼਼੍ਠੀ ਰੋਗਾਨ੍ਮੁਕ੍ਤਃ ਪਰਿਸ਼਼੍ਕ੍ਰੁʼਤੋ(ਅ)ਭਵਤ੍|
உடனே குஷ்டவியாதி அவனைவிட்டு நீங்கியது, அவன் குணமடைந்தான்.
43 ਤਦਾ ਸ ਤੰ ਵਿਸ੍ਰੁʼਜਨ੍ ਗਾਢਮਾਦਿਸ਼੍ਯ ਜਗਾਦ
இயேசு அவனுக்கு ஒரு கண்டிப்பான எச்சரிப்பைக் கொடுத்து:
44 ਸਾਵਧਾਨੋ ਭਵ ਕਥਾਮਿਮਾਂ ਕਮਪਿ ਮਾ ਵਦ; ਸ੍ਵਾਤ੍ਮਾਨੰ ਯਾਜਕੰ ਦਰ੍ਸ਼ਯ, ਲੋਕੇਭ੍ਯਃ ਸ੍ਵਪਰਿਸ਼਼੍ਕ੍ਰੁʼਤੇਃ ਪ੍ਰਮਾਣਦਾਨਾਯ ਮੂਸਾਨਿਰ੍ਣੀਤੰ ਯੱਦਾਨੰ ਤਦੁਤ੍ਸ੍ਰੁʼਜਸ੍ਵ ਚ|
“நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி பார்த்துக்கொள். ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, உன்னுடைய சுத்திகரிப்புக்காக மோசே கட்டளையிட்ட பலிகளைச் செலுத்து. அது அவர்களுக்கு நீ சுகமடைந்ததற்கான ஒரு சாட்சியாய் இருக்கும்” என்று சொல்லி அவனை உடனே அனுப்பிவிட்டார்.
45 ਕਿਨ੍ਤੁ ਸ ਗਤ੍ਵਾ ਤਤ੍ ਕਰ੍ੰਮ ਇੱਥੰ ਵਿਸ੍ਤਾਰ੍ੱਯ ਪ੍ਰਚਾਰਯਿਤੁੰ ਪ੍ਰਾਰੇਭੇ ਤੇਨੈਵ ਯੀਸ਼ੁਃ ਪੁਨਃ ਸਪ੍ਰਕਾਸ਼ੰ ਨਗਰੰ ਪ੍ਰਵੇਸ਼਼੍ਟੁੰ ਨਾਸ਼ਕ੍ਨੋਤ੍ ਤਤੋਹੇਤੋਰ੍ਬਹਿਃ ਕਾਨਨਸ੍ਥਾਨੇ ਤਸ੍ਯੌ; ਤਥਾਪਿ ਚਤੁਰ੍ੱਦਿਗ੍ਭ੍ਯੋ ਲੋਕਾਸ੍ਤਸ੍ਯ ਸਮੀਪਮਾਯਯੁਃ|
ஆனால் அவன் புறப்பட்டுப்போய் தாராளமாய் பேசத்தொடங்கி, தனக்கு நடந்த செய்தியை எங்கும் பரப்பினான். இதன் காரணமாக, இயேசுவினால் ஒரு பட்டணத்திற்குள்ளும் வெளிப்படையாக செல்லமுடியாமல், வெளியே தனிமையான இடங்களிலேயே தங்கினார். ஆனால் எல்லா இடங்களிலும் இருந்து மக்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.

< ਮਾਰ੍ਕਃ 1 >