< ਯੋਹਨਃ 2 >

1 ਅਨਨ੍ਤਰੰ ਤ੍ਰੁਤੀਯਦਿਵਸੇ ਗਾਲੀਲ੍ ਪ੍ਰਦੇਸ਼ਿਯੇ ਕਾੰਨਾਨਾਮ੍ਨਿ ਨਗਰੇ ਵਿਵਾਹ ਆਸੀਤ੍ ਤਤ੍ਰ ਚ ਯੀਸ਼ੋਰ੍ਮਾਤਾ ਤਿਸ਼਼੍ਠਤ੍|
இவை நடந்து மூன்றாவது நாளிலே கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊரிலே ஒரு திருமணம் நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கே இருந்தாள்.
2 ਤਸ੍ਮੈ ਵਿਵਾਹਾਯ ਯੀਸ਼ੁਸ੍ਤਸ੍ਯ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਸ਼੍ਚ ਨਿਮਨ੍ਤ੍ਰਿਤਾ ਆਸਨ੍|
இயேசுவும் அவருடைய சீடர்களுங்கூட அந்தத் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
3 ਤਦਨਨ੍ਤਰੰ ਦ੍ਰਾਕ੍ਸ਼਼ਾਰਸਸ੍ਯ ਨ੍ਯੂਨਤ੍ਵਾਦ੍ ਯੀਸ਼ੋਰ੍ਮਾਤਾ ਤਮਵਦਤ੍ ਏਤੇਸ਼਼ਾਂ ਦ੍ਰਾਕ੍ਸ਼਼ਾਰਸੋ ਨਾਸ੍ਤਿ|
திராட்சைரசம் தீர்ந்துபோனபோது, இயேசுவின் தாய் அவரிடத்தில், “திராட்சைரசம் தீர்ந்துவிட்டது” என்று சொன்னாள்.
4 ਤਦਾ ਸ ਤਾਮਵੋਚਤ੍ ਹੇ ਨਾਰਿ ਮਯਾ ਸਹ ਤਵ ਕਿੰ ਕਾਰ੍ੱਯੰ? ਮਮ ਸਮਯ ਇਦਾਨੀਂ ਨੋਪਤਿਸ਼਼੍ਠਤਿ|
அப்பொழுது இயேசு, அம்மா, நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்? “என் நேரம் இன்னும் வரவில்லையா?” என்றார்.
5 ਤਤਸ੍ਤਸ੍ਯ ਮਾਤਾ ਦਾਸਾਨਵੋਚਦ੍ ਅਯੰ ਯਦ੍ ਵਦਤਿ ਤਦੇਵ ਕੁਰੁਤ|
இயேசுவின் தாயோ வேலைக்காரரைப் பார்த்து, “அவர் உங்களுக்கு எதைச் சொல்கிறாரோ அதைச் செய்யுங்கள்” என்றாள்.
6 ਤਸ੍ਮਿਨ੍ ਸ੍ਥਾਨੇ ਯਿਹੂਦੀਯਾਨਾਂ ਸ਼ੁਚਿਤ੍ਵਕਰਣਵ੍ਯਵਹਾਰਾਨੁਸਾਰੇਣਾਢਕੈਕਜਲਧਰਾਣਿ ਪਾਸ਼਼ਾਣਮਯਾਨਿ ਸ਼਼ਡ੍ਵ੍ਰੁʼਹਤ੍ਪਾਤ੍ਰਾਣਿਆਸਨ੍|
அவ்விடத்தின் அருகில், தண்ணீர் வைக்கும் ஆறு கற்சாடிகள் இருந்தன. இவ்விதமான கற்சாடிகளையே யூதர்கள் சடங்காச்சாரச் சுத்திகரிப்புக்கு உபயோகித்தார்கள். ஒவ்வொரு கற்சாடியும் இருபதிலிருந்து முப்பது குடங்கள்வரைத் தண்ணீர் கொள்ளும்.
7 ਤਦਾ ਯੀਸ਼ੁਸ੍ਤਾਨ੍ ਸਰ੍ੱਵਕਲਸ਼ਾਨ੍ ਜਲੈਃ ਪੂਰਯਿਤੁੰ ਤਾਨਾਜ੍ਞਾਪਯਤ੍, ਤਤਸ੍ਤੇ ਸਰ੍ੱਵਾਨ੍ ਕੁਮ੍ਭਾਨਾਕਰ੍ਣੰ ਜਲੈਃ ਪਰ੍ੱਯਪੂਰਯਨ੍|
இயேசு வேலைக்காரரிடம், “அந்தக் கற்சாடிகளில் தண்ணீரை நிரப்புங்கள்” என்றார்; அப்படியே அவர்கள் நிரம்பி வழியத்தக்கதாய் நிரப்பினார்கள்.
8 ਅਥ ਤੇਭ੍ਯਃ ਕਿਞ੍ਚਿਦੁੱਤਾਰ੍ੱਯ ਭੋਜ੍ਯਾਧਿਪਾਤੇਃਸਮੀਪੰ ਨੇਤੁੰ ਸ ਤਾਨਾਦਿਸ਼ਤ੍, ਤੇ ਤਦਨਯਨ੍|
அப்பொழுது இயேசு அவர்களிடம், “இதிலிருந்து மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடம் கொடுங்கள்” என்றார். அவர்கள் அப்படியே செய்தார்கள்.
9 ਅਪਰਞ੍ਚ ਤੱਜਲੰ ਕਥੰ ਦ੍ਰਾਕ੍ਸ਼਼ਾਰਸੋ(ਅ)ਭਵਤ੍ ਤੱਜਲਵਾਹਕਾਦਾਸਾ ਜ੍ਞਾਤੁੰ ਸ਼ਕ੍ਤਾਃ ਕਿਨ੍ਤੁ ਤਦ੍ਭੋਜ੍ਯਾਧਿਪੋ ਜ੍ਞਾਤੁੰ ਨਾਸ਼ਕ੍ਨੋਤ੍ ਤਦਵਲਿਹ੍ਯ ਵਰੰ ਸੰਮ੍ਬੋਦ੍ਯਾਵਦਤ,
பந்தி விசாரிப்புக்காரன், திராட்சை இரசமாய் மாறியிருந்த அந்தத் தண்ணீரை ருசித்துப் பார்த்தான். அது எங்கேயிருந்து வந்தது என்று அவனுக்குத் தெரியாதிருந்தது; ஆனால் தண்ணீரை நிரப்பிய வேலைக்காரருக்கே அது தெரிந்திருந்தது. அப்பொழுது பந்தி விசாரிப்புக்காரன் மணமகனை ஒரு பக்கமாய் கூட்டிக்கொண்டுபோய்,
10 ਲੋਕਾਃ ਪ੍ਰਥਮੰ ਉੱਤਮਦ੍ਰਾਕ੍ਸ਼਼ਾਰਸੰ ਦਦਤਿ ਤਸ਼਼ੁ ਯਥੇਸ਼਼੍ਟੰ ਪਿਤਵਤ੍ਸੁ ਤਸ੍ਮਾ ਕਿਞ੍ਚਿਦਨੁੱਤਮਞ੍ਚ ਦਦਤਿ ਕਿਨ੍ਤੁ ਤ੍ਵਮਿਦਾਨੀਂ ਯਾਵਤ੍ ਉੱਤਮਦ੍ਰਾਕ੍ਸ਼਼ਾਰਸੰ ਸ੍ਥਾਪਯਸਿ|
அவனிடம், “சிறந்த திராட்சை இரசத்தையே எல்லோரும் முதலில் கொடுப்பார்கள். விருந்தாளிகள் நிறைய குடித்த பின்பே தரம் குறைந்த இரசத்தைக் கொடுப்பார்கள். ஆனால் நீரோ சிறந்த இரசத்தை இவ்வளவு நேரமாய் வைத்திருந்திருக்கிறீரே” என்றான்.
11 ਇੱਥੰ ਯੀਸ਼ੁਰ੍ਗਾਲੀਲਪ੍ਰਦੇਸ਼ੇ ਆਸ਼੍ਚਰ੍ੱਯਕਾਰ੍ੰਮ ਪ੍ਰਾਰਮ੍ਭ ਨਿਜਮਹਿਮਾਨੰ ਪ੍ਰਾਕਾਸ਼ਯਤ੍ ਤਤਃ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਸ੍ਤਸ੍ਮਿਨ੍ ਵ੍ਯਸ਼੍ਵਸਨ੍|
இதுவே இயேசு செய்த அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஆகும். அதை அவர் கலிலேயாவிலுள்ள கானாவிலே செய்தார். இவ்விதமாய் இயேசு தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார். இதனால் அவருடைய சீடர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
12 ਤਤਃ ਪਰਮ੍ ਸ ਨਿਜਮਾਤ੍ਰੁਭ੍ਰਾਤ੍ਰੁਸ੍ਸ਼ਿਸ਼਼੍ਯੈਃ ਸਾਰ੍ੱਧ੍ਂ ਕਫਰ੍ਨਾਹੂਮਮ੍ ਆਗਮਤ੍ ਕਿਨ੍ਤੁ ਤਤ੍ਰ ਬਹੂਦਿਨਾਨਿ ਆਤਿਸ਼਼੍ਠਤ੍|
இதற்குப் பின்பு இயேசு தம்முடைய தாயோடும், சகோதரரோடும், தம்முடைய சீடரோடும் கப்பர்நகூமுக்குச் சென்றார். அங்கே அவர்கள் சிலநாட்கள் தங்கினார்கள்.
13 ਤਦਨਨ੍ਤਰੰ ਯਿਹੂਦਿਯਾਨਾਂ ਨਿਸ੍ਤਾਰੋਤ੍ਸਵੇ ਨਿਕਟਮਾਗਤੇ ਯੀਸ਼ੁ ਰ੍ਯਿਰੂਸ਼ਾਲਮ੍ ਨਗਰਮ੍ ਆਗੱਛਤ੍|
யூதருடைய பஸ்கா என்ற பண்டிகைக்கான காலம் நெருங்கி வந்தபோது, இயேசு எருசலேமுக்குச் சென்றார்.
14 ਤਤੋ ਮਨ੍ਦਿਰਸ੍ਯ ਮਧ੍ਯੇ ਗੋਮੇਸ਼਼ਪਾਰਾਵਤਵਿਕ੍ਰਯਿਣੋ ਵਾਣਿਜਕ੍ਸ਼਼੍ਚੋਪਵਿਸ਼਼੍ਟਾਨ੍ ਵਿਲੋਕ੍ਯ
ஆலய முற்றத்திலே ஆடுமாடுகளையும், புறாக்களையும் விற்கிறவர்களை அவர் கண்டார். இன்னும் சிலர் அங்கே உட்கார்ந்து மேஜைகளிலே நாணய மாற்று வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் கண்டார்.
15 ਰੱਜੁਭਿਃ ਕਸ਼ਾਂ ਨਿਰ੍ੰਮਾਯ ਸਰ੍ੱਵਗੋਮੇਸ਼਼ਾਦਿਭਿਃ ਸਾਰ੍ੱਧੰ ਤਾਨ੍ ਮਨ੍ਦਿਰਾਦ੍ ਦੂਰੀਕ੍ਰੁʼਤਵਾਨ੍|
எனவே இயேசு ஒரு கயிற்றைச் சவுக்கைப்போல் முறுக்கி எடுத்துக்கொண்டு, அவர்கள் எல்லோரையும் ஆலயப் பகுதியில் இருந்து துரத்தினார். ஆடுமாடுகளையும் துரத்தினார். நாணயம் மாற்றுவதில் ஈடுபட்டிருந்தவர்களின் நாணயங்களை எல்லாம் அவர் கொட்டிச் சிதறடித்து, அவர்களுடைய மேஜைகளைப் புரட்டித்தள்ளினார்.
16 ਵਣਿਜਾਂ ਮੁਦ੍ਰਾਦਿ ਵਿਕੀਰ੍ੱਯ ਆਸਨਾਨਿ ਨ੍ਯੂਬ੍ਜੀਕ੍ਰੁʼਤ੍ਯ ਪਾਰਾਵਤਵਿਕ੍ਰਯਿਭ੍ਯੋ(ਅ)ਕਥਯਦ੍ ਅਸ੍ਮਾਤ੍ ਸ੍ਥਾਨਾਤ੍ ਸਰ੍ਵਾਣ੍ਯੇਤਾਨਿ ਨਯਤ, ਮਮ ਪਿਤੁਗ੍ਰੁʼਹੰ ਵਾਣਿਜ੍ਯਗ੍ਰੁʼਹੰ ਮਾ ਕਾਰ੍ਸ਼਼੍ਟ|
இயேசு புறாக்களை விற்றுக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து, “இவைகளை இங்கிருந்து அகற்றிவிடுங்கள். என்னுடைய பிதாவின் வீட்டைச் சந்தையாக மாற்ற எப்படித் துணிந்தீர்கள்!” என்றார்.
17 ਤਸ੍ਮਾਤ੍ ਤਨ੍ਮਨ੍ਦਿਰਾਰ੍ਥ ਉਦ੍ਯੋਗੋ ਯਸ੍ਤੁ ਸ ਗ੍ਰਸਤੀਵ ਮਾਮ੍| ਇਮਾਂ ਸ਼ਾਸ੍ਤ੍ਰੀਯਲਿਪਿੰ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਃਸਮਸ੍ਮਰਨ੍|
அப்பொழுது இயேசுவினுடைய சீடர்களுக்கு, “உம்முடைய வீட்டைக் குறித்த பக்தி வைராக்கியம் என்னைச் சுட்டெரித்தது” என்று எழுதப்பட்டிருப்பது நினைவுக்கு வந்தது.
18 ਤਤਃ ਪਰਮ੍ ਯਿਹੂਦੀਯਲੋਕਾ ਯੀਸ਼਼ਿਮਵਦਨ੍ ਤਵਮਿਦ੍ਰੁʼਸ਼ਕਰ੍ੰਮਕਰਣਾਤ੍ ਕਿੰ ਚਿਹ੍ਨਮਸ੍ਮਾਨ੍ ਦਰ੍ਸ਼ਯਸਿ?
பின்பு யூதர்கள் அவரிடம், “இவைகளை எல்லாம் நீர் செய்கிறீரே, இதை எந்த அதிகாரத்தோடு செய்கிறீர் என்று நாங்கள் அறிவதற்கு, நீர் எங்களுக்கு என்ன அற்புத அடையாளத்தைச் செய்துகாட்டுவீர்?” என்று கேட்டார்கள்.
19 ਤਤੋ ਯੀਸ਼ੁਸ੍ਤਾਨਵੋਚਦ੍ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਰੇ ਤਸ੍ਮਿਨ੍ ਮਨ੍ਦਿਰੇ ਨਾਸ਼ਿਤੇ ਦਿਨਤ੍ਰਯਮਧ੍ਯੇ(ਅ)ਹੰ ਤਦ੍ ਉੱਥਾਪਯਿਸ਼਼੍ਯਾਮਿ|
இயேசு அவர்களுக்குப் பதிலாக, “இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள். நான் அதைத் திரும்பவும் மூன்று நாளில் எழுப்புவேன்” என்றார்.
20 ਤਦਾ ਯਿਹੂਦਿਯਾ ਵ੍ਯਾਹਾਰ੍ਸ਼਼ੁਃ, ਏਤਸ੍ਯ ਮਨ੍ਦਿਰਸ ਨਿਰ੍ੰਮਾਣੇਨ ਸ਼਼ਟ੍ਚਤ੍ਵਾਰਿੰਸ਼ਦ੍ ਵਤ੍ਸਰਾ ਗਤਾਃ, ਤ੍ਵੰ ਕਿੰ ਦਿਨਤ੍ਰਯਮਧ੍ਯੇ ਤਦ੍ ਉੱਥਾਪਯਿਸ਼਼੍ਯਸਿ?
அதற்கு யூதர்கள், “இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு நாற்பத்தாறு வருடங்கள் எடுத்தன. நீர் இதை மூன்று நாட்களில் எழுப்புவீரோ?” என்றார்கள்.
21 ਕਿਨ੍ਤੁ ਸ ਨਿਜਦੇਹਰੂਪਮਨ੍ਦਿਰੇ ਕਥਾਮਿਮਾਂ ਕਥਿਤਵਾਨ੍|
ஆனால் இயேசு குறிப்பிட்டுச் சொன்னதோ தமது உடலாகிய ஆலயத்தையே.
22 ਸ ਯਦੇਤਾਦ੍ਰੁʼਸ਼ੰ ਗਦਿਤਵਾਨ੍ ਤੱਛਿਸ਼਼੍ਯਾਃ ਸ਼੍ਮਸ਼ਾਨਾਤ੍ ਤਦੀਯੋੱਥਾਨੇ ਸਤਿ ਸ੍ਮ੍ਰੁʼਤ੍ਵਾ ਧਰ੍ੰਮਗ੍ਰਨ੍ਥੇ ਯੀਸ਼ੁਨੋਕ੍ਤਕਥਾਯਾਂ ਚ ਵ੍ਯਸ਼੍ਵਸਿਸ਼਼ੁਃ|
இயேசு இப்படிச் சொல்லியது அவர் மரித்தவர்களில் இருந்து உயிரோடு எழுந்தபின், சீடர்களுடைய நினைவுக்கு வந்தது, அவர்கள் வேதவசனத்தையும் இயேசு பேசிய வார்த்தைகளையும் விசுவாசித்தார்கள்.
23 ਅਨਨ੍ਤਰੰ ਨਿਸ੍ਤਾਰੋਤ੍ਸਵਸ੍ਯ ਭੋਜ੍ਯਸਮਯੇ ਯਿਰੂਸ਼ਾਲਮ੍ ਨਗਰੇ ਤਤ੍ਕ੍ਰੁਤਾਸ਼੍ਚਰ੍ੱਯਕਰ੍ੰਮਾਣਿ ਵਿਲੋਕ੍ਯ ਬਹੁਭਿਸ੍ਤਸ੍ਯ ਨਾਮਨਿ ਵਿਸ਼੍ਵਸਿਤੰ|
பஸ்கா என்ற பண்டிகையின்போது இயேசு எருசலேமில் இருக்கையில், அநேக மக்கள் அவரால் செய்யப்பட்ட அடையாளங்களைக் கண்டு, அவருடைய பெயரிலே விசுவாசம் வைத்தார்கள்.
24 ਕਿਨ੍ਤੁ ਸ ਤੇਸ਼਼ਾਂ ਕਰੇਸ਼਼ੁ ਸ੍ਵੰ ਨ ਸਮਰ੍ਪਯਤ੍, ਯਤਃ ਸ ਸਰ੍ੱਵਾਨਵੈਤ੍|
ஆனால் இயேசுவோ எல்லா மனிதரையும் அறிந்திருந்தபடியால், அவர்களுக்கு இணங்கவில்லை.
25 ਸ ਮਾਨਵੇਸ਼਼ੁ ਕਸ੍ਯਚਿਤ੍ ਪ੍ਰਮਾਣੰ ਨਾਪੇਕ੍ਸ਼਼ਤ ਯਤੋ ਮਨੁਜਾਨਾਂ ਮਧ੍ਯੇ ਯਦ੍ਯਦਸ੍ਤਿ ਤੱਤਤ੍ ਸੋਜਾਨਾਤ੍|
மனிதனைக் குறித்து இயேசுவுக்கு யாரும் சாட்சி சொல்லவேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏனெனில் அவர் மனிதனின் உள்ளத்தை அறிந்திருந்தார்.

< ਯੋਹਨਃ 2 >