< ମଥିଃ 5 >

1 ଅନନ୍ତରଂ ସ ଜନନିୱହଂ ନିରୀକ୍ଷ୍ୟ ଭୂଧରୋପରି ୱ୍ରଜିତ୍ୱା ସମୁପୱିୱେଶ|
இயேசு திரளான மக்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.
2 ତଦାନୀଂ ଶିଷ୍ୟେଷୁ ତସ୍ୟ ସମୀପମାଗତେଷୁ ତେନ ତେଭ୍ୟ ଏଷା କଥା କଥ୍ୟାଞ୍ଚକ୍ରେ|
அப்பொழுது அவர் அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:
3 ଅଭିମାନହୀନା ଜନା ଧନ୍ୟାଃ, ଯତସ୍ତେ ସ୍ୱର୍ଗୀଯରାଜ୍ୟମ୍ ଅଧିକରିଷ୍ୟନ୍ତି|
“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
4 ଖିଦ୍ୟମାନା ମନୁଜା ଧନ୍ୟାଃ, ଯସ୍ମାତ୍ ତେ ସାନ୍ତ୍ୱନାଂ ପ୍ରାପ୍ସନ୍ତି|
துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
5 ନମ୍ରା ମାନୱାଶ୍ଚ ଧନ୍ୟାଃ, ଯସ୍ମାତ୍ ତେ ମେଦିନୀମ୍ ଅଧିକରିଷ୍ୟନ୍ତି|
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
6 ଧର୍ମ୍ମାଯ ବୁଭୁକ୍ଷିତାଃ ତୃଷାର୍ତ୍ତାଶ୍ଚ ମନୁଜା ଧନ୍ୟାଃ, ଯସ୍ମାତ୍ ତେ ପରିତର୍ପ୍ସ୍ୟନ୍ତି|
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.
7 କୃପାଲୱୋ ମାନୱା ଧନ୍ୟାଃ, ଯସ୍ମାତ୍ ତେ କୃପାଂ ପ୍ରାପ୍ସ୍ୟନ୍ତି|
இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள்.
8 ନିର୍ମ୍ମଲହୃଦଯା ମନୁଜାଶ୍ଚ ଧନ୍ୟାଃ, ଯସ୍ମାତ୍ ତ ଈଶ୍ଚରଂ ଦ୍ରକ୍ଷ୍ୟନ୍ତି|
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
9 ମେଲଯିତାରୋ ମାନୱା ଧନ୍ୟାଃ, ଯସ୍ମାତ୍ ତ ଈଶ୍ଚରସ୍ୟ ସନ୍ତାନତ୍ୱେନ ୱିଖ୍ୟାସ୍ୟନ୍ତି|
சமாதானம் செய்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்.
10 ଧର୍ମ୍ମକାରଣାତ୍ ତାଡିତା ମନୁଜା ଧନ୍ୟା, ଯସ୍ମାତ୍ ସ୍ୱର୍ଗୀଯରାଜ୍ୟେ ତେଷାମଧିକରୋ ୱିଦ୍ୟତେ|
௧0நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
11 ଯଦା ମନୁଜା ମମ ନାମକୃତେ ଯୁଷ୍ମାନ୍ ନିନ୍ଦନ୍ତି ତାଡଯନ୍ତି ମୃଷା ନାନାଦୁର୍ୱ୍ୱାକ୍ୟାନି ୱଦନ୍ତି ଚ, ତଦା ଯୁଯଂ ଧନ୍ୟାଃ|
௧௧“என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவிதமான தீமையான சொற்களையும் உங்கள்மேல் பொய்யாகச் சொல்வார்களானால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்;
12 ତଦା ଆନନ୍ଦତ, ତଥା ଭୃଶଂ ହ୍ଲାଦଧ୍ୱଞ୍ଚ, ଯତଃ ସ୍ୱର୍ଗେ ଭୂଯାଂସି ଫଲାନି ଲପ୍ସ୍ୟଧ୍ୱେ; ତେ ଯୁଷ୍ମାକଂ ପୁରାତନାନ୍ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନୋଽପି ତାଦୃଗ୍ ଅତାଡଯନ୍|
௧௨சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; உங்களுக்குமுன்பே வாழ்ந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
13 ଯୁଯଂ ମେଦିନ୍ୟାଂ ଲୱଣରୂପାଃ, କିନ୍ତୁ ଯଦି ଲୱଣସ୍ୟ ଲୱଣତ୍ୱମ୍ ଅପଯାତି, ତର୍ହି ତତ୍ କେନ ପ୍ରକାରେଣ ସ୍ୱାଦୁଯୁକ୍ତଂ ଭୱିଷ୍ୟତି? ତତ୍ କସ୍ୟାପି କାର୍ୟ୍ୟସ୍ୟାଯୋଗ୍ୟତ୍ୱାତ୍ କେୱଲଂ ବହିଃ ପ୍ରକ୍ଷେପ୍ତୁଂ ନରାଣାଂ ପଦତଲେନ ଦଲଯିତୁଞ୍ଚ ଯୋଗ୍ୟଂ ଭୱତି|
௧௩நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதர்களால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
14 ଯୂଯଂ ଜଗତି ଦୀପ୍ତିରୂପାଃ, ଭୂଧରୋପରି ସ୍ଥିତଂ ନଗରଂ ଗୁପ୍ତଂ ଭୱିତୁଂ ନହି ଶକ୍ଷ୍ୟତି|
௧௪நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
15 ଅପରଂ ମନୁଜାଃ ପ୍ରଦୀପାନ୍ ପ୍ରଜ୍ୱାଲ୍ୟ ଦ୍ରୋଣାଧୋ ନ ସ୍ଥାପଯନ୍ତି, କିନ୍ତୁ ଦୀପାଧାରୋପର୍ୟ୍ୟେୱ ସ୍ଥାପଯନ୍ତି, ତେନ ତେ ଦୀପା ଗେହସ୍ଥିତାନ୍ ସକଲାନ୍ ପ୍ରକାଶଯନ୍ତି|
௧௫விளக்கைக் கொளுத்தி பாத்திரத்தினாலே மூடிவைக்காமல், விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
16 ଯେନ ମାନୱା ଯୁଷ୍ମାକଂ ସତ୍କର୍ମ୍ମାଣି ୱିଲୋକ୍ୟ ଯୁଷ୍ମାକଂ ସ୍ୱର୍ଗସ୍ଥଂ ପିତରଂ ଧନ୍ୟଂ ୱଦନ୍ତି, ତେଷାଂ ସମକ୍ଷଂ ଯୁଷ୍ମାକଂ ଦୀପ୍ତିସ୍ତାଦୃକ୍ ପ୍ରକାଶତାମ୍|
௧௬இவ்விதமாக, மனிதர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்களுடைய வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
17 ଅହଂ ୱ୍ୟୱସ୍ଥାଂ ଭୱିଷ୍ୟଦ୍ୱାକ୍ୟଞ୍ଚ ଲୋପ୍ତୁମ୍ ଆଗତୱାନ୍, ଇତ୍ଥଂ ମାନୁଭୱତ, ତେ ଦ୍ୱେ ଲୋପ୍ତୁଂ ନାଗତୱାନ୍, କିନ୍ତୁ ସଫଲେ କର୍ତ୍ତୁମ୍ ଆଗତୋସ୍ମି|
௧௭நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று நினைத்துக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு இல்லை, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
18 ଅପରଂ ଯୁଷ୍ମାନ୍ ଅହଂ ତଥ୍ୟଂ ୱଦାମି ଯାୱତ୍ ୱ୍ୟୋମମେଦିନ୍ୟୋ ର୍ଧ୍ୱଂସୋ ନ ଭୱିଷ୍ୟତି, ତାୱତ୍ ସର୍ୱ୍ୱସ୍ମିନ୍ ସଫଲେ ନ ଜାତେ ୱ୍ୟୱସ୍ଥାଯା ଏକା ମାତ୍ରା ବିନ୍ଦୁରେକୋପି ୱା ନ ଲୋପ୍ସ୍ୟତେ|
௧௮வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறும்வரை, அதில் ஒரு சிறு எழுத்தாவது, ஒரு எழுத்தின் உறுப்பாவது ஒழிந்துபோகாது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
19 ତସ୍ମାତ୍ ଯୋ ଜନ ଏତାସାମ୍ ଆଜ୍ଞାନାମ୍ ଅତିକ୍ଷୁଦ୍ରାମ୍ ଏକାଜ୍ଞାମପୀ ଲଂଘତେ ମନୁଜାଂଞ୍ଚ ତଥୈୱ ଶିକ୍ଷଯତି, ସ ସ୍ୱର୍ଗୀଯରାଜ୍ୟେ ସର୍ୱ୍ୱେଭ୍ୟଃ କ୍ଷୁଦ୍ରତ୍ୱେନ ୱିଖ୍ୟାସ୍ୟତେ, କିନ୍ତୁ ଯୋ ଜନସ୍ତାଂ ପାଲଯତି, ତଥୈୱ ଶିକ୍ଷଯତି ଚ, ସ ସ୍ୱର୍ଗୀଯରାଜ୍ୟେ ପ୍ରଧାନତ୍ୱେନ ୱିଖ୍ୟାସ୍ୟତେ|
௧௯ஆகவே, இந்தக் கட்டளைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாவது மீறி, அவ்விதமாக மனிதர்களுக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லோரையும்விட சிறியவன் எனப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான்.
20 ଅପରଂ ଯୁଷ୍ମାନ୍ ଅହଂ ୱଦାମି, ଅଧ୍ୟାପକଫିରୂଶିମାନୱାନାଂ ଧର୍ମ୍ମାନୁଷ୍ଠାନାତ୍ ଯୁଷ୍ମାକଂ ଧର୍ମ୍ମାନୁଷ୍ଠାନେ ନୋତ୍ତମେ ଜାତେ ଯୂଯମ୍ ଈଶ୍ୱରୀଯରାଜ୍ୟଂ ପ୍ରୱେଷ୍ଟୁଂ ନ ଶକ୍ଷ୍ୟଥ|
௨0வேதபண்டிதர்கள் பரிசேயர்கள் என்பவர்களுடைய நீதியைவிட உங்களுடைய நீதி அதிகமாக இல்லாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
21 ଅପରଞ୍ଚ ତ୍ୱଂ ନରଂ ମା ୱଧୀଃ, ଯସ୍ମାତ୍ ଯୋ ନରଂ ହନ୍ତି, ସ ୱିଚାରସଭାଯାଂ ଦଣ୍ଡାର୍ହୋ ଭୱିଷ୍ୟତି, ପୂର୍ୱ୍ୱକାଲୀନଜନେଭ୍ୟ ଇତି କଥିତମାସୀତ୍, ଯୁଷ୍ମାଭିରଶ୍ରାୱି|
௨௧கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான் என்பதும், முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
22 କିନ୍ତ୍ୱହଂ ଯୁଷ୍ମାନ୍ ୱଦାମି, ଯଃ କଶ୍ଚିତ୍ କାରଣଂ ୱିନା ନିଜଭ୍ରାତ୍ରେ କୁପ୍ୟତି, ସ ୱିଚାରସଭାଯାଂ ଦଣ୍ଡାର୍ହୋ ଭୱିଷ୍ୟତି; ଯଃ କଶ୍ଚିଚ୍ଚ ସ୍ୱୀଯସହଜଂ ନିର୍ବ୍ବୋଧଂ ୱଦତି, ସ ମହାସଭାଯାଂ ଦଣ୍ଡାର୍ହୋ ଭୱିଷ୍ୟତି; ପୁନଶ୍ଚ ତ୍ୱଂ ମୂଢ ଇତି ୱାକ୍ୟଂ ଯଦି କଶ୍ଚିତ୍ ସ୍ୱୀଯଭ୍ରାତରଂ ୱକ୍ତି, ତର୍ହି ନରକାଗ୍ନୌ ସ ଦଣ୍ଡାର୍ହୋ ଭୱିଷ୍ୟତି| (Geenna g1067)
௨௨நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். (Geenna g1067)
23 ଅତୋ ୱେଦ୍ୟାଃ ସମୀପଂ ନିଜନୈୱେଦ୍ୟେ ସମାନୀତେଽପି ନିଜଭ୍ରାତରଂ ପ୍ରତି କସ୍ମାଚ୍ଚିତ୍ କାରଣାତ୍ ତ୍ୱଂ ଯଦି ଦୋଷୀ ୱିଦ୍ୟସେ, ତଦାନୀଂ ତୱ ତସ୍ୟ ସ୍ମୃତି ର୍ଜାଯତେ ଚ,
௨௩ஆகவே, நீ பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயானால்,
24 ତର୍ହି ତସ୍ୟା ୱେଦ୍ୟାଃ ସମୀପେ ନିଜନୈୱୈଦ୍ୟଂ ନିଧାଯ ତଦୈୱ ଗତ୍ୱା ପୂର୍ୱ୍ୱଂ ତେନ ସାର୍ଦ୍ଧଂ ମିଲ, ପଶ୍ଚାତ୍ ଆଗତ୍ୟ ନିଜନୈୱେଦ୍ୟଂ ନିୱେଦଯ|
௨௪அங்கே பலிபீடத்தின்முன்பு உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முதலில் உன் சகோதரனோடு ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
25 ଅନ୍ୟଞ୍ଚ ଯାୱତ୍ ୱିୱାଦିନା ସାର୍ଦ୍ଧଂ ୱର୍ତ୍ମନି ତିଷ୍ଠସି, ତାୱତ୍ ତେନ ସାର୍ଦ୍ଧଂ ମେଲନଂ କୁରୁ; ନୋ ଚେତ୍ ୱିୱାଦୀ ୱିଚାରଯିତୁଃ ସମୀପେ ତ୍ୱାଂ ସମର୍ପଯତି ୱିଚାରଯିତା ଚ ରକ୍ଷିଣଃ ସନ୍ନିଧୌ ସମର୍ପଯତି ତଦା ତ୍ୱଂ କାରାଯାଂ ବଧ୍ୟେଥାଃ|
௨௫எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாக அவனோடு சமாதானமாகு.
26 ତର୍ହି ତ୍ୱାମହଂ ତଥ୍ଥଂ ବ୍ରୱୀମି, ଶେଷକପର୍ଦକେଽପି ନ ପରିଶୋଧିତେ ତସ୍ମାତ୍ ସ୍ଥାନାତ୍ କଦାପି ବହିରାଗନ୍ତୁଂ ନ ଶକ୍ଷ୍ୟସି|
௨௬இல்லாவிட்டால், நீ ஒரு காசும் குறைவில்லாமல் செலுத்தித்தீர்க்கும்வரைக்கும் சிறைச்சாலையிலிருந்து வெளியே வரமாட்டாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
27 ଅପରଂ ତ୍ୱଂ ମା ୱ୍ୟଭିଚର, ଯଦେତଦ୍ ୱଚନଂ ପୂର୍ୱ୍ୱକାଲୀନଲୋକେଭ୍ୟଃ କଥିତମାସୀତ୍, ତଦ୍ ଯୂଯଂ ଶ୍ରୁତୱନ୍ତଃ;
௨௭விபசாரம் செய்யாதிருப்பாயாக என்பது முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
28 କିନ୍ତ୍ୱହଂ ଯୁଷ୍ମାନ୍ ୱଦାମି, ଯଦି କଶ୍ଚିତ୍ କାମତଃ କାଞ୍ଚନ ଯୋଷିତଂ ପଶ୍ୟତି, ତର୍ହି ସ ମନସା ତଦୈୱ ୱ୍ୟଭିଚରିତୱାନ୍|
௨௮நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரம் செய்துவிட்டான்.
29 ତସ୍ମାତ୍ ତୱ ଦକ୍ଷିଣଂ ନେତ୍ରଂ ଯଦି ତ୍ୱାଂ ବାଧତେ, ତର୍ହି ତନ୍ନେତ୍ରମ୍ ଉତ୍ପାଟ୍ୟ ଦୂରେ ନିକ୍ଷିପ, ଯସ୍ମାତ୍ ତୱ ସର୍ୱ୍ୱୱପୁଷୋ ନରକେ ନିକ୍ଷେପାତ୍ ତୱୈକାଙ୍ଗସ୍ୟ ନାଶୋ ୱରଂ| (Geenna g1067)
௨௯உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
30 ଯଦ୍ୱା ତୱ ଦକ୍ଷିଣଃ କରୋ ଯଦି ତ୍ୱାଂ ବାଧତେ, ତର୍ହି ତଂ କରଂ ଛିତ୍ତ୍ୱା ଦୂରେ ନିକ୍ଷିପ, ଯତଃ ସର୍ୱ୍ୱୱପୁଷୋ ନରକେ ନିକ୍ଷେପାତ୍ ଏକାଙ୍ଗସ୍ୟ ନାଶୋ ୱରଂ| (Geenna g1067)
௩0உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
31 ଉକ୍ତମାସ୍ତେ, ଯଦି କଶ୍ଚିନ୍ ନିଜଜାଯାଂ ପରିତ୍ୟକ୍ତ୍ତୁମ୍ ଇଚ୍ଛତି, ତର୍ହି ସ ତସ୍ୟୈ ତ୍ୟାଗପତ୍ରଂ ଦଦାତୁ|
௩௧தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவனும், அவளுக்கு விடுதலைப்பத்திரம் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது.
32 କିନ୍ତ୍ୱହଂ ଯୁଷ୍ମାନ୍ ୱ୍ୟାହରାମି, ୱ୍ୟଭିଚାରଦୋଷେ ନ ଜାତେ ଯଦି କଶ୍ଚିନ୍ ନିଜଜାଯାଂ ପରିତ୍ୟଜତି, ତର୍ହି ସ ତାଂ ୱ୍ୟଭିଚାରଯତି; ଯଶ୍ଚ ତାଂ ତ୍ୟକ୍ତାଂ ସ୍ତ୍ରିଯଂ ୱିୱହତି, ସୋପି ୱ୍ୟଭିଚରତି|
௩௨நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தனக் காரணத்தினாலொழிய தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன், அவளை விபசாரம்செய்யத் தூண்டுகிறவனாக இருப்பான்; அப்படி விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்.
33 ପୁନଶ୍ଚ ତ୍ୱଂ ମୃଷା ଶପଥମ୍ ନ କୁର୍ୱ୍ୱନ୍ ଈଶ୍ଚରାଯ ନିଜଶପଥଂ ପାଲଯ, ପୂର୍ୱ୍ୱକାଲୀନଲୋକେଭ୍ୟୋ ଯୈଷା କଥା କଥିତା, ତାମପି ଯୂଯଂ ଶ୍ରୁତୱନ୍ତଃ|
௩௩அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையில் செலுத்துவாயாக என்று முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
34 କିନ୍ତ୍ୱହଂ ଯୁଷ୍ମାନ୍ ୱଦାମି, କମପି ଶପଥଂ ମା କାର୍ଷ୍ଟ, ଅର୍ଥତଃ ସ୍ୱର୍ଗନାମ୍ନା ନ, ଯତଃ ସ ଈଶ୍ୱରସ୍ୟ ସିଂହାସନଂ;
௩௪நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; எதையும் செய்வேன் என்று சத்தியம் செய்யவேண்டாம்; பரலோகத்தின்பேரில் சத்தியம் செய்யவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.
35 ପୃଥିୱ୍ୟା ନାମ୍ନାପି ନ, ଯତଃ ସା ତସ୍ୟ ପାଦପୀଠଂ; ଯିରୂଶାଲମୋ ନାମ୍ନାପି ନ, ଯତଃ ସା ମହାରାଜସ୍ୟ ପୁରୀ;
௩௫பூமியின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்.
36 ନିଜଶିରୋନାମ୍ନାପି ନ, ଯସ୍ମାତ୍ ତସ୍ୟୈକଂ କଚମପି ସିତମ୍ ଅସିତଂ ୱା କର୍ତ୍ତୁଂ ତ୍ୱଯା ନ ଶକ୍ୟତେ|
௩௬உன் தலையின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அதின் ஒரு முடியையாவது வெண்மையாக்கவும் கருமையாக்கவும் உன்னால் முடியாதே.
37 ଅପରଂ ଯୂଯଂ ସଂଲାପସମଯେ କେୱଲଂ ଭୱତୀତି ନ ଭୱତୀତି ଚ ୱଦତ ଯତ ଇତୋଽଧିକଂ ଯତ୍ ତତ୍ ପାପାତ୍ମନୋ ଜାଯତେ|
௩௭உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
38 ଅପରଂ ଲୋଚନସ୍ୟ ୱିନିମଯେନ ଲୋଚନଂ ଦନ୍ତସ୍ୟ ୱିନିମଯେନ ଦନ୍ତଃ ପୂର୍ୱ୍ୱକ୍ତମିଦଂ ୱଚନଞ୍ଚ ଯୁଷ୍ମାଭିରଶ୍ରୂଯତ|
௩௮கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
39 କିନ୍ତ୍ୱହଂ ଯୁଷ୍ମାନ୍ ୱଦାମି ଯୂଯଂ ହିଂସକଂ ନରଂ ମା ୱ୍ୟାଘାତଯତ| କିନ୍ତୁ କେନଚିତ୍ ତୱ ଦକ୍ଷିଣକପୋଲେ ଚପେଟାଘାତେ କୃତେ ତଂ ପ୍ରତି ୱାମଂ କପୋଲଞ୍ଚ ୱ୍ୟାଘୋଟଯ|
௩௯நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு.
40 ଅପରଂ କେନଚିତ୍ ତ୍ୱଯା ସାର୍ଧ୍ଦଂ ୱିୱାଦଂ କୃତ୍ୱା ତୱ ପରିଧେଯୱସନେ ଜିଘୃତିତେ ତସ୍ମାଯୁତ୍ତରୀଯୱସନମପି ଦେହି|
௪0உன்னோடு வழக்காடி உன் ஆடையை எடுத்துக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறவனுக்கு உன் மேலாடையையும் கொடுத்துவிடு.
41 ଯଦି କଶ୍ଚିତ୍ ତ୍ୱାଂ କ୍ରୋଶମେକଂ ନଯନାର୍ଥଂ ଅନ୍ୟାଯତୋ ଧରତି, ତଦା ତେନ ସାର୍ଧ୍ଦଂ କ୍ରୋଶଦ୍ୱଯଂ ଯାହି|
௪௧ஒருவன் உன்னை ஒரு மைல்தூரம் வரக் கட்டாயப்படுத்தினால், அவனோடுகூட இரண்டு மைல்தூரம் போ.
42 ଯଶ୍ଚ ମାନୱସ୍ତ୍ୱାଂ ଯାଚତେ, ତସ୍ମୈ ଦେହି, ଯଦି କଶ୍ଚିତ୍ ତୁଭ୍ୟଂ ଧାରଯିତୁମ୍ ଇଚ୍ଛତି, ତର୍ହି ତଂ ପ୍ରତି ପରାଂମୁଖୋ ମା ଭୂଃ|
௪௨உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
43 ନିଜସମୀପୱସିନି ପ୍ରେମ କୁରୁ, କିନ୍ତୁ ଶତ୍ରୁଂ ପ୍ରତି ଦ୍ୱେଷଂ କୁରୁ, ଯଦେତତ୍ ପୁରୋକ୍ତଂ ୱଚନଂ ଏତଦପି ଯୂଯଂ ଶ୍ରୁତୱନ୍ତଃ|
௪௩உனக்கடுத்தவனைச் நேசித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
44 କିନ୍ତ୍ୱହଂ ଯୁଷ୍ମାନ୍ ୱଦାମି, ଯୂଯଂ ରିପୁୱ୍ୱପି ପ୍ରେମ କୁରୁତ, ଯେ ଚ ଯୁଷ୍ମାନ୍ ଶପନ୍ତେ, ତାନ, ଆଶିଷଂ ୱଦତ, ଯେ ଚ ଯୁଷ୍ମାନ୍ ଋତୀଯନ୍ତେ, ତେଷାଂ ମଙ୍ଗଲଂ କୁରୁତ, ଯେ ଚ ଯୁଷ୍ମାନ୍ ନିନ୍ଦନ୍ତି, ତାଡଯନ୍ତି ଚ, ତେଷାଂ କୃତେ ପ୍ରାର୍ଥଯଧ୍ୱଂ|
௪௪நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்களுடைய சத்துருக்களை நேசியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
45 ତତ୍ର ଯଃ ସତାମସତାଞ୍ଚୋପରି ପ୍ରଭାକରମ୍ ଉଦାଯଯତି, ତଥା ଧାର୍ମ୍ମିକାନାମଧାର୍ମ୍ମିକାନାଞ୍ଚୋପରି ନୀରଂ ୱର୍ଷଯତି ତାଦୃଶୋ ଯୋ ଯୁଷ୍ମାକଂ ସ୍ୱର୍ଗସ୍ଥଃ ପିତା, ଯୂଯଂ ତସ୍ୟୈୱ ସନ୍ତାନା ଭୱିଷ୍ୟଥ|
௪௫இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவிற்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் தீயவர்கள்மேலும் நல்லவர்கள்மேலும் தமது சூரியனை உதிக்கச்செய்து, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
46 ଯେ ଯୁଷ୍ମାସୁ ପ୍ରେମ କୁର୍ୱ୍ୱନ୍ତି, ଯୂଯଂ ଯଦି କେୱଲଂ ତେୱ୍ୱେୱ ପ୍ରେମ କୁରୁଥ, ତର୍ହି ଯୁଷ୍ମାକଂ କିଂ ଫଲଂ ଭୱିଷ୍ୟତି? ଚଣ୍ଡାଲା ଅପି ତାଦୃଶଂ କିଂ ନ କୁର୍ୱ୍ୱନ୍ତି?
௪௬உங்களை நேசிக்கிறவர்களையே நீங்கள் நேசிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
47 ଅପରଂ ଯୂଯଂ ଯଦି କେୱଲଂ ସ୍ୱୀଯଭ୍ରାତୃତ୍ୱେନ ନମତ, ତର୍ହି କିଂ ମହତ୍ କର୍ମ୍ମ କୁରୁଥ? ଚଣ୍ଡାଲା ଅପି ତାଦୃଶଂ କିଂ ନ କୁର୍ୱ୍ୱନ୍ତି?
௪௭உங்களுடைய சகோதரர்களைமட்டும் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
48 ତସ୍ମାତ୍ ଯୁଷ୍ମାକଂ ସ୍ୱର୍ଗସ୍ଥଃ ପିତା ଯଥା ପୂର୍ଣୋ ଭୱତି, ଯୂଯମପି ତାଦୃଶା ଭୱତ|
௪௮ஆகவே, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா பூரண சற்குணராக இருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராக இருக்கக்கடவீர்கள்.

< ମଥିଃ 5 >