< ଯୋହନଃ 1 >
1 ଆଦୌ ୱାଦ ଆସୀତ୍ ସ ଚ ୱାଦ ଈଶ୍ୱରେଣ ସାର୍ଧମାସୀତ୍ ସ ୱାଦଃ ସ୍ୱଯମୀଶ୍ୱର ଏୱ|
ஆரம்பத்தில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை இறைவனுடன் இருந்தது, அந்த வார்த்தை இறைவனாயிருந்தது.
அந்த வார்த்தையானவர் ஆரம்பத்திலேயே இறைவனோடு இருந்தார்.
3 ତେନ ସର୍ୱ୍ୱଂ ୱସ୍ତୁ ସସୃଜେ ସର୍ୱ୍ୱେଷୁ ସୃଷ୍ଟୱସ୍ତୁଷୁ କିମପି ୱସ୍ତୁ ତେନାସୃଷ୍ଟଂ ନାସ୍ତି|
அந்த வார்த்தையானவர் மூலமாகவே எல்லாம் படைக்கப்பட்டன; படைக்கப்பட்டிருப்பவைகளில் எதுவுமே அவரில்லாமல் படைக்கப்படவில்லை.
4 ସ ଜୀୱନସ୍ୟାକାରଃ, ତଚ୍ଚ ଜୀୱନଂ ମନୁଷ୍ୟାଣାଂ ଜ୍ୟୋତିଃ
அவரில் ஜீவன் இருந்தது; அந்த ஜீவனே எல்லா மனிதருக்கும் வெளிச்சமாயிருந்தது.
5 ତଜ୍ଜ୍ୟୋତିରନ୍ଧକାରେ ପ୍ରଚକାଶେ କିନ୍ତ୍ୱନ୍ଧକାରସ୍ତନ୍ନ ଜଗ୍ରାହ|
அந்த வெளிச்சம் இருளிலே பிரகாசிக்கிறது, ஆனால் இருள் அதை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை.
6 ଯୋହନ୍ ନାମକ ଏକୋ ମନୁଜ ଈଶ୍ୱରେଣ ପ୍ରେଷଯାଞ୍ଚକ୍ରେ|
இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான்; அவனுடைய பெயர் யோவான்.
7 ତଦ୍ୱାରା ଯଥା ସର୍ୱ୍ୱେ ୱିଶ୍ୱସନ୍ତି ତଦର୍ଥଂ ସ ତଜ୍ଜ୍ୟୋତିଷି ପ୍ରମାଣଂ ଦାତୁଂ ସାକ୍ଷିସ୍ୱରୂପୋ ଭୂତ୍ୱାଗମତ୍,
தன் மூலமாய் எல்லா மக்களும் விசுவாசிக்கும்படியாகவே அந்த வெளிச்சத்தைக் குறித்து சாட்சி கொடுக்கும் ஒரு சாட்சியாகவே அந்த யோவான் வந்தான்.
8 ସ ସ୍ୱଯଂ ତଜ୍ଜ୍ୟୋତି ର୍ନ କିନ୍ତୁ ତଜ୍ଜ୍ୟୋତିଷି ପ୍ରମାଣଂ ଦାତୁମାଗମତ୍|
அவன் வெளிச்சமாய் இருக்கவில்லை; அவனோ அந்த வெளிச்சத்திற்கான ஒரு சாட்சியாக மாத்திரமே வந்தான்.
9 ଜଗତ୍ୟାଗତ୍ୟ ଯଃ ସର୍ୱ୍ୱମନୁଜେଭ୍ୟୋ ଦୀପ୍ତିଂ ଦଦାତି ତଦେୱ ସତ୍ୟଜ୍ୟୋତିଃ|
உலகத்திற்குள் வந்து ஒவ்வொரு மனிதனுக்கும் வெளிச்சத்தைக் கொடுத்த வெளிச்சமே அந்த உண்மையான வெளிச்சம்.
10 ସ ଯଜ୍ଜଗଦସୃଜତ୍ ତନ୍ମଦ୍ୟ ଏୱ ସ ଆସୀତ୍ କିନ୍ତୁ ଜଗତୋ ଲୋକାସ୍ତଂ ନାଜାନନ୍|
அந்த வார்த்தையானவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் படைக்கப்பட்டிருந்தும், உலகமோ அவரை இன்னார் என்று அறிந்துகொள்ளவில்லை.
11 ନିଜାଧିକାରଂ ସ ଆଗଚ୍ଛତ୍ କିନ୍ତୁ ପ୍ରଜାସ୍ତଂ ନାଗୃହ୍ଲନ୍|
அவர் தமக்குரிய இடத்திற்கே வந்தார். ஆனால் அவருடைய சொந்த மக்களோ, அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
12 ତଥାପି ଯେ ଯେ ତମଗୃହ୍ଲନ୍ ଅର୍ଥାତ୍ ତସ୍ୟ ନାମ୍ନି ୱ୍ୟଶ୍ୱସନ୍ ତେଭ୍ୟ ଈଶ୍ୱରସ୍ୟ ପୁତ୍ରା ଭୱିତୁମ୍ ଅଧିକାରମ୍ ଅଦଦାତ୍|
ஆனால் அவர் தம்மை ஏற்றுக்கொண்டு தம்முடைய பெயரில் விசுவாசம் வைத்த அனைவருக்கும், இறைவனுடைய பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார்.
13 ତେଷାଂ ଜନିଃ ଶୋଣିତାନ୍ନ ଶାରୀରିକାଭିଲାଷାନ୍ନ ମାନୱାନାମିଚ୍ଛାତୋ ନ କିନ୍ତ୍ୱୀଶ୍ୱରାଦଭୱତ୍|
இப்பிள்ளைகள் இரத்த உறவினாலோ, மனித தீர்மானத்தினாலோ, புருஷனுடைய விருப்பத்தினாலோ உண்டானவர்கள் அல்ல. மாறாக இவர்கள் இறைவனால் பிறப்பிக்கப்பட்டவர்கள்.
14 ସ ୱାଦୋ ମନୁଷ୍ୟରୂପେଣାୱତୀର୍ୟ୍ୟ ସତ୍ୟତାନୁଗ୍ରହାଭ୍ୟାଂ ପରିପୂର୍ଣଃ ସନ୍ ସାର୍ଧମ୍ ଅସ୍ମାଭି ର୍ନ୍ୟୱସତ୍ ତତଃ ପିତୁରଦ୍ୱିତୀଯପୁତ୍ରସ୍ୟ ଯୋଗ୍ୟୋ ଯୋ ମହିମା ତଂ ମହିମାନଂ ତସ୍ୟାପଶ୍ୟାମ|
வார்த்தையானவரே மனித உடல் எடுத்து நம்மிடையே வாழ்ந்தார். நாங்கள் அவருடைய மகிமையைக் கண்டோம். பிதாவின் ஒரே மகனுக்குரிய அந்த மகிமையைக் கண்டோம். அந்த வார்த்தையானவர் கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் பிதாவிடமிருந்து வந்தவர்.
15 ତତୋ ଯୋହନପି ପ୍ରଚାର୍ୟ୍ୟ ସାକ୍ଷ୍ୟମିଦଂ ଦତ୍ତୱାନ୍ ଯୋ ମମ ପଶ୍ଚାଦ୍ ଆଗମିଷ୍ୟତି ସ ମତ୍ତୋ ଗୁରୁତରଃ; ଯତୋ ମତ୍ପୂର୍ୱ୍ୱଂ ସ ୱିଦ୍ୟମାନ ଆସୀତ୍; ଯଦର୍ଥମ୍ ଅହଂ ସାକ୍ଷ୍ୟମିଦମ୍ ଅଦାଂ ସ ଏଷଃ|
யோவான் அவரைக்குறித்து சாட்சி கொடுத்து: “எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கிறார். ஏனெனில், ‘அவர் எனக்கு முன்னிருந்தவர் என்று இவரைக் குறித்தே நான் சொன்னேன்’ என அவன் சத்தமிட்டுச் சொன்னான்.”
16 ଅପରଞ୍ଚ ତସ୍ୟ ପୂର୍ଣତାଯା ୱଯଂ ସର୍ୱ୍ୱେ କ୍ରମଶଃ କ୍ରମଶୋନୁଗ୍ରହଂ ପ୍ରାପ୍ତାଃ|
அவருடைய நிறைவிலிருந்து, நாம் எல்லோரும் கிருபையின்மேல் கிருபையை பெற்றிருக்கிறோம்.
17 ମୂସାଦ୍ୱାରା ୱ୍ୟୱସ୍ଥା ଦତ୍ତା କିନ୍ତ୍ୱନୁଗ୍ରହଃ ସତ୍ୟତ୍ୱଞ୍ଚ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟଦ୍ୱାରା ସମୁପାତିଷ୍ଠତାଂ|
ஏனெனில் சட்டம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது; கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வந்தது.
18 କୋପି ମନୁଜ ଈଶ୍ୱରଂ କଦାପି ନାପଶ୍ୟତ୍ କିନ୍ତୁ ପିତୁଃ କ୍ରୋଡସ୍ଥୋଽଦ୍ୱିତୀଯଃ ପୁତ୍ରସ୍ତଂ ପ୍ରକାଶଯତ୍|
இறைவனை எவருமே ஒருபோதும் கண்டதில்லை. பிதாவாகிய இறைவனின் இருதயத்தின் அருகில் இருக்கின்ற அவருடைய ஒரே மகனும் தாமே இறைவனுமாயிருக்கிறவர் பிதாவை வெளிப்படுத்தினார்.
19 ତ୍ୱଂ କଃ? ଇତି ୱାକ୍ୟଂ ପ୍ରେଷ୍ଟୁଂ ଯଦା ଯିହୂଦୀଯଲୋକା ଯାଜକାନ୍ ଲେୱିଲୋକାଂଶ୍ଚ ଯିରୂଶାଲମୋ ଯୋହନଃ ସମୀପେ ପ୍ରେଷଯାମାସୁଃ,
எருசலேமைச் சேர்ந்த யூத தலைவர்கள் யோவான் யார் என்று விசாரித்து அறியும்படி, ஆசாரியர்களையும் லேவியரையும் அவனிடத்தில் அனுப்பினார்கள்; அப்பொழுது அவன் கொடுத்த சாட்சி இதுவே:
20 ତଦା ସ ସ୍ୱୀକୃତୱାନ୍ ନାପହ୍ନୂତୱାନ୍ ନାହମ୍ ଅଭିଷିକ୍ତ ଇତ୍ୟଙ୍ଗୀକୃତୱାନ୍|
“நான் கிறிஸ்து அல்ல” என்று ஒளிவுமறைவின்றி மறுக்காமல், அறிக்கை செய்தான்.
21 ତଦା ତେଽପୃଚ୍ଛନ୍ ତର୍ହି କୋ ଭୱାନ୍? କିଂ ଏଲିଯଃ? ସୋୱଦତ୍ ନ; ତତସ୍ତେଽପୃଚ୍ଛନ୍ ତର୍ହି ଭୱାନ୍ ସ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦୀ? ସୋୱଦତ୍ ନାହଂ ସଃ|
அப்பொழுது அவர்கள் யோவானிடம், “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்றார்கள். அதற்கு அவன், “நான் எலியாவும் அல்ல” என்றான். தொடர்ந்து அவர்கள், “நீர் வரவேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டார்கள். அதற்கும் அவன், “இல்லை” என்றான்.
22 ତଦା ତେଽପୃଚ୍ଛନ୍ ତର୍ହି ଭୱାନ୍ କଃ? ୱଯଂ ଗତ୍ୱା ପ୍ରେରକାନ୍ ତ୍ୱଯି କିଂ ୱକ୍ଷ୍ୟାମଃ? ସ୍ୱସ୍ମିନ୍ କିଂ ୱଦସି?
இறுதியாக அவர்கள், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் போய்ச் சொல்லும்படி நீர் ஒரு பதிலைச் சொல்லும். நீர் உம்மைக் குறித்து என்ன சொல்லுகிறீர்?” என்று கேட்டார்கள்.
23 ତଦା ସୋୱଦତ୍| ପରମେଶସ୍ୟ ପନ୍ଥାନଂ ପରିଷ୍କୁରୁତ ସର୍ୱ୍ୱତଃ| ଇତୀଦଂ ପ୍ରାନ୍ତରେ ୱାକ୍ୟଂ ୱଦତଃ କସ୍ୟଚିଦ୍ରୱଃ| କଥାମିମାଂ ଯସ୍ମିନ୍ ଯିଶଯିଯୋ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦୀ ଲିଖିତୱାନ୍ ସୋହମ୍|
யோவான் அதற்கு, இறைவாக்கினன் ஏசாயா கூறியிருந்த வார்த்தைகள் மூலம் பதிலளித்து, “கர்த்தருக்கு வழியை நேராக்குங்கள் என்று பாலைவனத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம் நானே” என்றான்.
24 ଯେ ପ୍ରେଷିତାସ୍ତେ ଫିରୂଶିଲୋକାଃ|
பரிசேயர்களால் அனுப்பப்பட்ட சிலர்
25 ତଦା ତେଽପୃଚ୍ଛନ୍ ଯଦି ନାଭିଷିକ୍ତୋସି ଏଲିଯୋସି ନ ସ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦ୍ୟପି ନାସି ଚ, ତର୍ହି ଲୋକାନ୍ ମଜ୍ଜଯସି କୁତଃ?
யோவானிடம், “நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, வரவேண்டிய இறைவாக்கினருமல்ல என்றால், ஏன் நீர் திருமுழுக்கு கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள்.
26 ତତୋ ଯୋହନ୍ ପ୍ରତ୍ୟୱୋଚତ୍, ତୋଯେଽହଂ ମଜ୍ଜଯାମୀତି ସତ୍ୟଂ କିନ୍ତୁ ଯଂ ଯୂଯଂ ନ ଜାନୀଥ ତାଦୃଶ ଏକୋ ଜନୋ ଯୁଷ୍ମାକଂ ମଧ୍ୟ ଉପତିଷ୍ଠତି|
யோவான் அதற்குப் பதிலாக, “நான் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன். ஆனால் உங்கள் நடுவில் ஒருவர் நிற்கிறார். நீங்களோ அவரை அறியாதிருக்கிறீர்கள்.
27 ସ ମତ୍ପଶ୍ଚାଦ୍ ଆଗତୋପି ମତ୍ପୂର୍ୱ୍ୱଂ ୱର୍ତ୍ତମାନ ଆସୀତ୍ ତସ୍ୟ ପାଦୁକାବନ୍ଧନଂ ମୋଚଯିତୁମପି ନାହଂ ଯୋଗ୍ୟୋସ୍ମି|
அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிற ஒரு அடிமையாக இருக்கவும் நான் தகுதியற்றவன்” என்றான்.
28 ଯର୍ଦ୍ଦନନଦ୍ୟାଃ ପାରସ୍ଥବୈଥବାରାଯାଂ ଯସ୍ମିନ୍ସ୍ଥାନେ ଯୋହନମଜ୍ଜଯତ୍ ତସ୍ମିନ ସ୍ଥାନେ ସର୍ୱ୍ୱମେତଦ୍ ଅଘଟତ|
இவை எல்லாம் யோர்தானின் அக்கரையிலிருந்த பெத்தானியா என்ற கிராமத்தில் நடைபெற்றது. அங்குதான் யோவான் திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான்.
29 ପରେଽହନି ଯୋହନ୍ ସ୍ୱନିକଟମାଗଚ୍ଛନ୍ତଂ ଯିଶୁଂ ୱିଲୋକ୍ୟ ପ୍ରାୱୋଚତ୍ ଜଗତଃ ପାପମୋଚକମ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ମେଷଶାୱକଂ ପଶ୍ୟତ|
மறுநாளிலே இயேசு தன்னிடம் வருவதை யோவான் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனின் ஆட்டுக்குட்டி! இவரே உலகத்தின் பாவத்தை நீக்குகிறவர்.
30 ଯୋ ମମ ପଶ୍ଚାଦାଗମିଷ୍ୟତି ସ ମତ୍ତୋ ଗୁରୁତରଃ, ଯତୋ ହେତୋର୍ମତ୍ପୂର୍ୱ୍ୱଂ ସୋଽୱର୍ତ୍ତତ ଯସ୍ମିନ୍ନହଂ କଥାମିମାଂ କଥିତୱାନ୍ ସ ଏୱାଯଂ|
‘எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கிறார். அவர் எனக்கு முன்னமே இருந்தார்’ என்று நான் இவரைக் குறித்தே சொன்னேன்.
31 ଅପରଂ ନାହମେନଂ ପ୍ରତ୍ୟଭିଜ୍ଞାତୱାନ୍ କିନ୍ତୁ ଇସ୍ରାଯେଲ୍ଲୋକା ଏନଂ ଯଥା ପରିଚିନ୍ୱନ୍ତି ତଦଭିପ୍ରାଯେଣାହଂ ଜଲେ ମଜ୍ଜଯିତୁମାଗଚ୍ଛମ୍|
நானும் அவரை அறியாதிருந்தேன். அவரை இஸ்ரயேலருக்கு வெளிப்படுத்தவே, நான் வந்து தண்ணீரில் திருமுழுக்கு கொடுத்தேன்” என்றான்.
32 ପୁନଶ୍ଚ ଯୋହନପରମେକଂ ପ୍ରମାଣଂ ଦତ୍ୱା କଥିତୱାନ୍ ୱିହାଯସଃ କପୋତୱଦ୍ ଅୱତରନ୍ତମାତ୍ମାନମ୍ ଅସ୍ୟୋପର୍ୟ୍ୟୱତିଷ୍ଠନ୍ତଂ ଚ ଦୃଷ୍ଟୱାନହମ୍|
பின்பு யோவான் இந்த சாட்சியை சொன்னான்: “பரலோகத்திலிருந்து ஆவியானவர் ஒரு புறாவைப்போல் தம்மேல் இறங்கி, இயேசுவின்மேல் அமர்வதைக் கண்டேன்.
33 ନାହମେନଂ ପ୍ରତ୍ୟଭିଜ୍ଞାତୱାନ୍ ଇତି ସତ୍ୟଂ କିନ୍ତୁ ଯୋ ଜଲେ ମଜ୍ଜଯିତୁଂ ମାଂ ପ୍ରୈରଯତ୍ ସ ଏୱେମାଂ କଥାମକଥଯତ୍ ଯସ୍ୟୋପର୍ୟ୍ୟାତ୍ମାନମ୍ ଅୱତରନ୍ତମ୍ ଅୱତିଷ୍ଠନ୍ତଞ୍ଚ ଦ୍ରକ୍ଷଯସି ସଏୱ ପୱିତ୍ରେ ଆତ୍ମନି ମଜ୍ଜଯିଷ୍ୟତି|
தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கும்படி என்னை அனுப்பினவர் எனக்குச் சொல்லியிருக்காவிட்டால், நானும் அவரை அறிந்திருக்கமாட்டேன். என்னை அனுப்பினவரோ, ‘பரிசுத்த ஆவியானவர் இறங்கி யார்மீது தங்குவதை நீ காண்கிறாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு கொடுக்கிறவர்’ என்று சொல்லியிருந்தார்.
34 ଅୱସ୍ତନ୍ନିରୀକ୍ଷ୍ୟାଯମ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ତନଯ ଇତି ପ୍ରମାଣଂ ଦଦାମି|
இதை நான் கண்டேன். இவரே இறைவனின் மகன் என்று சாட்சி கூறுகிறேன்” என்றான்.
35 ପରେଽହନି ଯୋହନ୍ ଦ୍ୱାଭ୍ୟାଂ ଶିଷ୍ୟାଭ୍ୟାଂ ସାର୍ଦ୍ଧେଂ ତିଷ୍ଠନ୍
மறுநாளிலே மீண்டும் யோவான் தன்னுடைய சீடர்களில் இரண்டு பேருடன் அங்கு நின்றுகொண்டிருந்தான்.
36 ଯିଶୁଂ ଗଚ୍ଛନ୍ତଂ ୱିଲୋକ୍ୟ ଗଦିତୱାନ୍, ଈଶ୍ୱରସ୍ୟ ମେଷଶାୱକଂ ପଶ୍ୟତଂ|
இயேசு அவ்வழியாய் கடந்துபோகிறதை அவன் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனுடைய ஆட்டுக்குட்டி!” என்றான்.
37 ଇମାଂ କଥାଂ ଶ୍ରୁତ୍ୱା ଦ୍ୱୌ ଶିଷ୍ୟୌ ଯୀଶୋଃ ପଶ୍ଚାଦ୍ ଈଯତୁଃ|
அந்த இரண்டு சீடர்களும் அவன் இப்படிச் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்கள்.
38 ତତୋ ଯୀଶୁଃ ପରାୱୃତ୍ୟ ତୌ ପଶ୍ଚାଦ୍ ଆଗଚ୍ଛନ୍ତୌ ଦୃଷ୍ଟ୍ୱା ପୃଷ୍ଟୱାନ୍ ଯୁୱାଂ କିଂ ଗୱେଶଯଥଃ? ତାୱପୃଚ୍ଛତାଂ ହେ ରବ୍ବି ଅର୍ଥାତ୍ ହେ ଗୁରୋ ଭୱାନ୍ କୁତ୍ର ତିଷ୍ଠତି?
இயேசு திரும்பிப்பார்த்து, அவர்கள் தம்மைப் பின்பற்றி வருகிறதைக் கண்டு, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், “போதகரே, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள்.
39 ତତଃ ସୋୱାଦିତ୍ ଏତ୍ୟ ପଶ୍ୟତଂ| ତତୋ ଦିୱସସ୍ୟ ତୃତୀଯପ୍ରହରସ୍ୟ ଗତତ୍ୱାତ୍ ତୌ ତଦ୍ଦିନଂ ତସ୍ୟ ସଙ୍ଗେଽସ୍ଥାତାଂ|
இயேசு அவர்களுக்குப் பதிலாக, “வந்து, நீங்களே பாருங்கள்” என்றார். எனவே அவர்கள் அவருடன் போய், இயேசு தங்கும் இடத்தைக் கண்டு, அந்த நாளை அவருடன் கழித்தார்கள். அப்பொழுது நேரம் பிற்பகல் நான்கு மணியாயிருந்தது.
40 ଯୌ ଦ୍ୱୌ ଯୋହନୋ ୱାକ୍ୟଂ ଶ୍ରୁତ୍ୱା ଯିଶୋଃ ପଶ୍ଚାଦ୍ ଆଗମତାଂ ତଯୋଃ ଶିମୋନ୍ପିତରସ୍ୟ ଭ୍ରାତା ଆନ୍ଦ୍ରିଯଃ
யோவான் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்ற அந்த இருவரில் ஒருவனின் பெயர் அந்திரேயா; இவன் சீமோன் பேதுருவின் சகோதரன்.
41 ସ ଇତ୍ୱା ପ୍ରଥମଂ ନିଜସୋଦରଂ ଶିମୋନଂ ସାକ୍ଷାତ୍ପ୍ରାପ୍ୟ କଥିତୱାନ୍ ୱଯଂ ଖ୍ରୀଷ୍ଟମ୍ ଅର୍ଥାତ୍ ଅଭିଷିକ୍ତପୁରୁଷଂ ସାକ୍ଷାତ୍କୃତୱନ୍ତଃ|
அந்திரேயா போய், முதலில் தன் சகோதரன் சீமோனைக் கண்டு அவனிடம், “நாங்கள் மேசியாவைக் கண்டோம்” என்று சொன்னான். மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம்.
42 ପଶ୍ଚାତ୍ ସ ତଂ ଯିଶୋଃ ସମୀପମ୍ ଆନଯତ୍| ତଦା ଯୀଶୁସ୍ତଂ ଦୃଷ୍ଟ୍ୱାୱଦତ୍ ତ୍ୱଂ ଯୂନସଃ ପୁତ୍ରଃ ଶିମୋନ୍ କିନ୍ତୁ ତ୍ୱନ୍ନାମଧେଯଂ କୈଫାଃ ୱା ପିତରଃ ଅର୍ଥାତ୍ ପ୍ରସ୍ତରୋ ଭୱିଷ୍ୟତି|
அவன் சீமோனை இயேசுவினிடத்திற்குக் கூட்டிக்கொண்டு வந்தான். இயேசு சீமோனைப் பார்த்து, “யோவானின் மகனாகிய சீமோனே, நீ கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். கேபா என்றால் கற்பாறை என்று பொருள்படும். அது கிரேக்க மொழியிலே பேதுரு எனப்படும்.
43 ପରେଽହନି ଯୀଶୌ ଗାଲୀଲଂ ଗନ୍ତୁଂ ନିଶ୍ଚିତଚେତସି ସତି ଫିଲିପନାମାନଂ ଜନଂ ସାକ୍ଷାତ୍ପ୍ରାପ୍ୟାୱୋଚତ୍ ମମ ପଶ୍ଚାଦ୍ ଆଗଚ୍ଛ|
மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப் போகத் தீர்மானித்தார். அவர் பிலிப்புவைக் கண்டு அவனிடம், “என்னைப் பின்பற்று” என்றார்.
44 ବୈତ୍ସୈଦାନାମ୍ନି ଯସ୍ମିନ୍ ଗ୍ରାମେ ପିତରାନ୍ଦ୍ରିଯଯୋର୍ୱାସ ଆସୀତ୍ ତସ୍ମିନ୍ ଗ୍ରାମେ ତସ୍ୟ ଫିଲିପସ୍ୟ ୱସତିରାସୀତ୍|
அந்திரேயாவையும் பேதுருவையும் போன்றே பிலிப்புவும் பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்தவன்.
45 ପଶ୍ଚାତ୍ ଫିଲିପୋ ନିଥନେଲଂ ସାକ୍ଷାତ୍ପ୍ରାପ୍ୟାୱଦତ୍ ମୂସା ୱ୍ୟୱସ୍ଥା ଗ୍ରନ୍ଥେ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନାଂ ଗ୍ରନ୍ଥେଷୁ ଚ ଯସ୍ୟାଖ୍ୟାନଂ ଲିଖିତମାସ୍ତେ ତଂ ଯୂଷଫଃ ପୁତ୍ରଂ ନାସରତୀଯଂ ଯୀଶୁଂ ସାକ୍ଷାଦ୍ ଅକାର୍ଷ୍ମ ୱଯଂ|
பின்பு பிலிப்பு நாத்தான்யேலைக் கண்டு அவனிடம், “மோசே தமது சட்டத்தில் குறிப்பிட்டிருந்தவரை நாங்கள் கண்டோம். அவரைக் குறித்தே இறைவாக்கினர்களும் எழுதியிருக்கிறார்கள். நாசரேத் ஊரைச் சேர்ந்தவரும், யோசேப்பின் மகனுமான இயேசுவே அவர்” என்றான்.
46 ତଦା ନିଥନେଲ୍ କଥିତୱାନ୍ ନାସରନ୍ନଗରାତ କିଂ କଶ୍ଚିଦୁତ୍ତମ ଉତ୍ପନ୍ତୁଂ ଶକ୍ନୋତି? ତତଃ ଫିଲିପୋ ଽୱୋଚତ୍ ଏତ୍ୟ ପଶ୍ୟ|
நாத்தான்யேலோ அவனிடம், “நாசரேத்தா! அங்கிருந்து நன்மை ஏதும் வரக்கூடுமோ?” என்று கேட்டான். அதற்கு பிலிப்பு, “வா, வந்து பார்” என்றான்.
47 ଅପରଞ୍ଚ ଯୀଶୁଃ ସ୍ୱସ୍ୟ ସମୀପଂ ତମ୍ ଆଗଚ୍ଛନ୍ତଂ ଦୃଷ୍ଟ୍ୱା ୱ୍ୟାହୃତୱାନ୍, ପଶ୍ୟାଯଂ ନିଷ୍କପଟଃ ସତ୍ୟ ଇସ୍ରାଯେଲ୍ଲୋକଃ|
அப்படியே நாத்தான்யேலும், தன்னை நோக்கி வருவதை இயேசு கண்டு, அவனைக்குறித்து, “இவன் ஒரு உண்மையான இஸ்ரயேலன், கபடம் ஏதுமில்லாதவன்” என்றார்.
48 ତତଃ ସୋୱଦଦ୍, ଭୱାନ୍ ମାଂ କଥଂ ପ୍ରତ୍ୟଭିଜାନାତି? ଯୀଶୁରୱାଦୀତ୍ ଫିଲିପସ୍ୟ ଆହ୍ୱାନାତ୍ ପୂର୍ୱ୍ୱଂ ଯଦା ତ୍ୱମୁଡୁମ୍ବରସ୍ୟ ତରୋର୍ମୂଲେଽସ୍ଥାସ୍ତଦା ତ୍ୱାମଦର୍ଶମ୍|
அப்பொழுது நாத்தான்யேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான். இயேசு அவனுக்கு மறுமொழியாக, “பிலிப்பு உன்னைக் கூப்பிடுமுன், நீ அத்திமரத்தின்கீழ் இருக்கும்போதே நான் உன்னைக் கண்டுகொண்டேன்” என்றார்.
49 ନିଥନେଲ୍ ଅଚକଥତ୍, ହେ ଗୁରୋ ଭୱାନ୍ ନିତାନ୍ତମ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ପୁତ୍ରୋସି, ଭୱାନ୍ ଇସ୍ରାଯେଲ୍ୱଂଶସ୍ୟ ରାଜା|
அப்பொழுது நாத்தான்யேல், “போதகரே, நீரே இறைவனின் மகன்; நீரே இஸ்ரயேலின் அரசன்” என்று அறிவித்தான்.
50 ତତୋ ଯୀଶୁ ର୍ୱ୍ୟାହରତ୍, ତ୍ୱାମୁଡୁମ୍ବରସ୍ୟ ପାଦପସ୍ୟ ମୂଲେ ଦୃଷ୍ଟୱାନାହଂ ମମୈତସ୍ମାଦ୍ୱାକ୍ୟାତ୍ କିଂ ତ୍ୱଂ ୱ୍ୟଶ୍ୱସୀଃ? ଏତସ୍ମାଦପ୍ୟାଶ୍ଚର୍ୟ୍ୟାଣି କାର୍ୟ୍ୟାଣି ଦ୍ରକ୍ଷ୍ୟସି|
அதற்கு இயேசு அவனிடம், “நான் அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று உனக்குச் சொன்னதினாலேயா நீ என்னை விசுவாசிக்கிறாய்? நீ இதைப் பார்க்கிலும் பெரிதான காரியங்களைக் காண்பாய்” என்றார்.
51 ଅନ୍ୟଚ୍ଚାୱାଦୀଦ୍ ଯୁଷ୍ମାନହଂ ଯଥାର୍ଥଂ ୱଦାମି, ଇତଃ ପରଂ ମୋଚିତେ ମେଘଦ୍ୱାରେ ତସ୍ମାନ୍ମନୁଜସୂନୁନା ଈଶ୍ୱରସ୍ୟ ଦୂତଗଣମ୍ ଅୱରୋହନ୍ତମାରୋହନ୍ତଞ୍ଚ ଦ୍ରକ୍ଷ୍ୟଥ|
அவர் தொடர்ந்து சொன்னதாவது, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், பரலோகம் திறந்திருக்கிறதையும், இறைவனுடைய தூதர்கள் மானிடமகனாகிய என்னிடத்திலிருந்து மேலே போவதையும், இறங்கி வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார்.