< 1 കരിന്ഥിനഃ 15 >
1 ഹേ ഭ്രാതരഃ, യഃ സുസംവാദോ മയാ യുഷ്മത്സമീപേ നിവേദിതോ യൂയഞ്ച യം ഗൃഹീതവന്ത ആശ്രിതവന്തശ്ച തം പുന ര്യുഷ്മാൻ വിജ്ഞാപയാമി|
இப்பொழுதும் பிரியமானவர்களே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியை நான் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அதை நீங்கள் ஏற்றுக்கொண்டு, அதிலேயே உறுதியாய் நிற்கிறீர்கள்.
2 യുഷ്മാകം വിശ്വാസോ യദി വിതഥോ ന ഭവേത് തർഹി സുസംവാദയുക്താനി മമ വാക്യാനി സ്മരതാം യുഷ്മാകം തേന സുസംവാദേന പരിത്രാണം ജായതേ|
நான் உங்களுக்குப் பிரசங்கித்த வார்த்தையில், நீங்கள் உறுதியாய் நின்றால், இந்த நற்செய்தியினால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். அப்படியில்லாவிட்டால், வீணாகவே நீங்கள் விசுவாசித்தீர்கள்.
3 യതോഽഹം യദ് യത് ജ്ഞാപിതസ്തദനുസാരാത് യുഷ്മാസു മുഖ്യാം യാം ശിക്ഷാം സമാർപയം സേയം, ശാസ്ത്രാനുസാരാത് ഖ്രീഷ്ടോഽസ്മാകം പാപമോചനാർഥം പ്രാണാൻ ത്യക്തവാൻ,
நான் பெற்றுக்கொண்டதும், மிக முக்கியமானதும் என்று கருதி உங்களுக்கு ஒப்படைத்ததாவது: வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கிறபடியே, கிறிஸ்து நமது பாவங்களுக்காக இறந்து.
4 ശ്മശാനേ സ്ഥാപിതശ്ച തൃതീയദിനേ ശാസ്ത്രാനുസാരാത് പുനരുത്ഥാപിതഃ|
அவர் அடக்கம் செய்யப்பட்டு, வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, அவர் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்பட்டார்.
5 സ ചാഗ്രേ കൈഫൈ തതഃ പരം ദ്വാദശശിഷ്യേഭ്യോ ദർശനം ദത്തവാൻ|
அவர் கேபாவுக்கு காட்சியளித்தார். பின்பு பன்னிரண்டு அப்போஸ்தலருக்கும் காட்சியளித்தார்.
6 തതഃ പരം പഞ്ചശതാധികസംഖ്യകേഭ്യോ ഭ്രാതൃഭ്യോ യുഗപദ് ദർശനം ദത്തവാൻ തേഷാം കേചിത് മഹാനിദ്രാം ഗതാ ബഹുതരാശ്ചാദ്യാപി വർത്തന്തേ|
அதற்குப் பின்பு, அவர் ஒரே நேரத்தில் ஐந்நூறுக்கும் அதிகமான சகோதரர்களுக்கும் காட்சியளித்தார். அவர்களில் பலர் இன்னும் உயிருடனேயே இருக்கிறார்கள். ஆனால் சிலர் மரண நித்திரையடைந்து விட்டார்கள்.
7 തദനന്തരം യാകൂബായ തത്പശ്ചാത് സർവ്വേഭ്യഃ പ്രേരിതേഭ്യോ ദർശനം ദത്തവാൻ|
பின்பு அவர், யாக்கோபுக்கு காட்சியளித்தார். அதற்குப் பின்பு அவர் எல்லா அப்போஸ்தலர்களுக்கும் காட்சியளித்தார்.
8 സർവ്വശേഷേഽകാലജാതതുല്യോ യോഽഹം, സോഽഹമപി തസ്യ ദർശനം പ്രാപ്തവാൻ|
இறுதியாக, குறைமாதத்தில் பிறந்த பிள்ளை போன்ற எனக்குங்கூட காட்சியளித்தார்.
9 ഈശ്വരസ്യ സമിതിം പ്രതി ദൗരാത്മ്യാചരണാദ് അഹം പ്രേരിതനാമ ധർത്തുമ് അയോഗ്യസ്തസ്മാത് പ്രേരിതാനാം മധ്യേ ക്ഷുദ്രതമശ്ചാസ്മി|
ஏனெனில், அப்போஸ்தலரில் நானே மிகச்சிறியவன். நான் அப்போஸ்தலன் என்று அழைக்கப்படத் தகுதியுடையவனும் அல்ல. ஏனெனில் நான் இறைவனுடைய திருச்சபையைத் துன்புறுத்துகிறவனாய் இருந்தேனே.
10 യാദൃശോഽസ്മി താദൃശ ഈശ്വരസ്യാനുഗ്രഹേണൈവാസ്മി; അപരം മാം പ്രതി തസ്യാനുഗ്രഹോ നിഷ്ഫലോ നാഭവത്, അന്യേഭ്യഃ സർവ്വേഭ്യോ മയാധികഃ ശ്രമഃ കൃതഃ, കിന്തു സ മയാ കൃതസ്തന്നഹി മത്സഹകാരിണേശ്വരസ്യാനുഗ്രഹേണൈവ|
ஆனால் இறைவனுடைய கிருபையினாலேயே, நான் இப்பொழுது இந்நிலையில் இருக்கிறேன். அவர் எனக்குக் கொடுத்த கிருபை வீணாய்ப் போகவில்லை. மற்ற அப்போஸ்தலர் எல்லோரையும்விட, நான் அதிகம் பாடுபட்டு ஊழியம் செய்தேன். ஆனால், அந்த ஊழியத்தைச் செய்தது நான் அல்ல, எனக்குள் செயலாற்றுகின்ற இறைவனுடைய கிருபையே அதைச் செய்கிறது.
11 അതഏവ മയാ ഭവേത് തൈ ർവാ ഭവേത് അസ്മാഭിസ്താദൃശീ വാർത്താ ഘോഷ്യതേ സൈവ ച യുഷ്മാഭി ർവിശ്വാസേന ഗൃഹീതാ|
எனவே நானாயிருந்தாலென்ன, அவர்களாயிருந்தாலென்ன, இந்த நற்செய்தியையே நாங்கள் எல்லோரும் பிரசங்கிக்கிறோம். இதையே நீங்கள் விசுவாசித்தீர்கள்.
12 മൃത്യുദശാതഃ ഖ്രീഷ്ട ഉത്ഥാപിത ഇതി വാർത്താ യദി തമധി ഘോഷ്യതേ തർഹി മൃതലോകാനാമ് ഉത്ഥിതി ർനാസ്തീതി വാഗ് യുഷ്മാകം മധ്യേ കൈശ്ചിത് കുതഃ കഥ്യതേ?
ஆனால், கிறிஸ்து இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டார் என்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?
13 മൃതാനാമ് ഉത്ഥിതി ര്യദി ന ഭവേത് തർഹി ഖ്രീഷ്ടോഽപി നോത്ഥാപിതഃ
இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்றால், கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லையே.
14 ഖ്രീഷ്ടശ്ച യദ്യനുത്ഥാപിതഃ സ്യാത് തർഹ്യസ്മാകം ഘോഷണം വിതഥം യുഷ്മാകം വിശ്വാസോഽപി വിതഥഃ|
கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் பிரசங்கம் செய்வதும் வீண். உங்கள் விசுவாசமும் வீணானதே.
15 വയഞ്ചേശ്വരസ്യ മൃഷാസാക്ഷിണോ ഭവാമഃ, യതഃ ഖ്രീഷ്ട സ്തേനോത്ഥാപിതഃ ഇതി സാക്ഷ്യമ് അസ്മാഭിരീശ്വരമധി ദത്തം കിന്തു മൃതാനാമുത്ഥിതി ര്യദി ന ഭവേത് തർഹി സ തേന നോത്ഥാപിതഃ|
அதுவுமல்லாமல், இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படவில்லை என்பது உண்மையானால், இறைவன் கிறிஸ்துவையும் உயிருடன் எழுப்பவில்லை என்றே அர்த்தமாகிறது. எனவே, இறைவன் கிறிஸ்துவை உயிருடன் எழுப்பினார் என்று நாங்கள் சாட்சி கூறியிருக்கிறபடியால், நாங்கள் இறைவனைப்பற்றி பொய்ச்சாட்சி சொல்கிறவர்களாய் காணப்படுவோமே.
16 യതോ മൃതാനാമുത്ഥിതി ര്യതി ന ഭവേത് തർഹി ഖ്രീഷ്ടോഽപ്യുത്ഥാപിതത്വം ന ഗതഃ|
ஏனெனில், இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகிறது இல்லையென்றால், கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை.
17 ഖ്രീഷ്ടസ്യ യദ്യനുത്ഥാപിതഃ സ്യാത് തർഹി യുഷ്മാകം വിശ്വാസോ വിതഥഃ, യൂയമ് അദ്യാപി സ്വപാപേഷു മഗ്നാസ്തിഷ്ഠഥ|
கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், உங்களுடைய விசுவாசமும் பயனற்றது; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களிலேயே இருக்கிறீர்கள்.
18 അപരം ഖ്രീഷ്ടാശ്രിതാ യേ മാനവാ മഹാനിദ്രാം ഗതാസ്തേഽപി നാശം ഗതാഃ|
அப்படியானால், கிறிஸ்துவில் மரண நித்திரையானவர்களுங்கூட அழிந்துபோனார்கள்.
19 ഖ്രീഷ്ടോ യദി കേവലമിഹലോകേ ഽസ്മാകം പ്രത്യാശാഭൂമിഃ സ്യാത് തർഹി സർവ്വമർത്യേഭ്യോ വയമേവ ദുർഭാഗ്യാഃ|
இவ்வுலக வாழ்வுக்காக மாத்திரமே நாம் கிறிஸ்துவில் நம்பிக்கைகொண்டவர்களாய் இருந்தால், எல்லா மனிதருக்குள்ளும் நாமே மிகவும் பரிதாபத்திற்குள்ளானவர்கள் ஆவோம்.
20 ഇദാനീം ഖ്രീഷ്ടോ മൃത്യുദശാത ഉത്ഥാപിതോ മഹാനിദ്രാഗതാനാം മധ്യേ പ്രഥമഫലസ്വരൂപോ ജാതശ്ച|
ஆனால் உண்மையிலேயே கிறிஸ்து மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டிருக்கிறார். மரண நித்திரை அடைந்தவர்களில், அவரே முதற்கனி ஆவார்.
21 യതോ യദ്വത് മാനുഷദ്വാരാ മൃത്യുഃ പ്രാദുർഭൂതസ്തദ്വത് മാനുഷദ്വാരാ മൃതാനാം പുനരുത്ഥിതിരപി പ്രദുർഭൂതാ|
ஏனெனில் ஒரு மனிதனின் வழியாக மரணம் வந்தது போலவே, ஒரு மனிதனின் வழியாக இறந்தவர்களின் உயிர்த்தெழுதலும் வருகிறது.
22 ആദമാ യഥാ സർവ്വേ മരണാധീനാ ജാതാസ്തഥാ ഖ്രീഷ്ടേന സർവ്വേ ജീവയിഷ്യന്തേ|
ஆதாமுக்குள் எல்லோரும் இறந்து போகிறதுபோல, கிறிஸ்துவில் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
23 കിന്ത്വേകൈകേന ജനേന നിജേ നിജേ പര്യ്യായ ഉത്ഥാതവ്യം പ്രഥമതഃ പ്രഥമജാതഫലസ്വരൂപേന ഖ്രീഷ്ടേന, ദ്വിതീയതസ്തസ്യാഗമനസമയേ ഖ്രീഷ്ടസ്യ ലോകൈഃ|
ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய ஒழுங்கு வரிசையின்படியே உயிருடன் எழுப்பப்படுவார்கள்: கிறிஸ்துவே முதற்கனி; அதற்குப் பின்பு அவர் மீண்டும் வரும்போது, அவருக்குரியவர்கள் உயிருடன் எழுப்பப்படுவார்கள்.
24 തതഃ പരമ് അന്തോ ഭവിഷ്യതി തദാനീം സ സർവ്വം ശാസനമ് അധിപതിത്വം പരാക്രമഞ്ച ലുപ്ത്വാ സ്വപിതരീശ്വരേ രാജത്വം സമർപയിഷ്യതി|
அப்பொழுது முடிவுவரும். கிறிஸ்து எல்லா ஆட்சிகளையும், அதிகாரங்களையும், வல்லமைகளையும் அழித்துவிட்டு, பிதாவாகிய இறைவனிடம் அரசை ஒப்படைப்பார்.
25 യതഃ ഖ്രീഷ്ടസ്യ രിപവഃ സർവ്വേ യാവത് തേന സ്വപാദയോരധോ ന നിപാതയിഷ്യന്തേ താവത് തേനൈവ രാജത്വം കർത്തവ്യം|
எனவே, எல்லாப் பகைவர்களையும் இறைவன் கிறிஸ்துவினுடைய கால்களின்கீழ் போடும் வரைக்கும், கிறிஸ்துவே ஆளுகை செய்யவேண்டும்.
26 തേന വിജേതവ്യോ യഃ ശേഷരിപുഃ സ മൃത്യുരേവ|
அழிக்கப்பட வேண்டிய கடைசிப் பகைவன், மரணமே.
27 ലിഖിതമാസ്തേ സർവ്വാണി തസ്യ പാദയോ ർവശീകൃതാനി| കിന്തു സർവ്വാണ്യേവ തസ്യ വശീകൃതാനീത്യുക്തേ സതി സർവ്വാണി യേന തസ്യ വശീകൃതാനി സ സ്വയം തസ്യ വശീഭൂതോ ന ജാത ഇതി വ്യക്തം|
ஏனெனில் இறைவன், “எல்லாவற்றையும்” அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார் என்று எழுதியிருக்கிறது. “எல்லாம்” அவருக்குக் கீழாக கொண்டுவரப்பட்டிருக்கின்றன என்று சொல்லும்போது, அது இறைவனை உள்ளடக்கவில்லை என்பது தெளிவாகின்றது. ஏனெனில், இறைவனே எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படுத்தினார்.
28 സർവ്വേഷു തസ്യ വശീഭൂതേഷു സർവ്വാണി യേന പുത്രസ്യ വശീകൃതാനി സ്വയം പുത്രോഽപി തസ്യ വശീഭൂതോ ഭവിഷ്യതി തത ഈശ്വരഃ സർവ്വേഷു സർവ്വ ഏവ ഭവിഷ്യതി|
அவர் இவற்றையெல்லாம் செய்தபின்பு, மகனாகிய அவரும் எல்லாவற்றையும் தனக்குக் கீழ்ப்படுத்தியவருக்குத் தன்னைக் கீழ்ப்படுத்துவார். எனவே, இறைவனே எல்லாவற்றிலும் எல்லாமாய் இருப்பார்.
29 അപരം പരേതലോകാനാം വിനിമയേന യേ മജ്ജ്യന്തേ തൈഃ കിം ലപ്സ്യതേ? യേഷാം പരേതലോകാനാമ് ഉത്ഥിതിഃ കേനാപി പ്രകാരേണ ന ഭവിഷ്യതി തേഷാം വിനിമയേന കുതോ മജ്ജനമപി തൈരങ്ഗീക്രിയതേ?
உயிர்த்தெழுதல் இல்லையெனில், இறந்தவர்களின் சார்பாக திருமுழுக்கு பெற்றுக்கொள்கிறவர்கள் என்ன செய்வார்கள்? இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால், இறந்தவர்களின் சார்பாக மற்றவர்கள் ஏன் திருமுழுக்கு பெற்றுக்கொள்கிறார்கள்?
30 വയമപി കുതഃ പ്രതിദണ്ഡം പ്രാണഭീതിമ് അങ്ഗീകുർമ്മഹേ?
நாங்களும் ஏன் ஒவ்வொரு மணிநேரமும் ஆபத்துக்கு உள்ளாகிறோம்?
31 അസ്മത്പ്രഭുനാ യീശുഖ്രീഷ്ടേന യുഷ്മത്തോ മമ യാ ശ്ലാഘാസ്തേ തസ്യാഃ ശപഥം കൃത്വാ കഥയാമി ദിനേ ദിനേഽഹം മൃത്യും ഗച്ഛാമി|
ஒவ்வொரு நாளும் நான் சாவை சந்திக்கிறேன். இது உண்மையே. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் உங்கள்மேல் நான் கொண்டுள்ள பெருமையைப்போல், அதுவும் உண்மையே.
32 ഇഫിഷനഗരേ വന്യപശുഭിഃ സാർദ്ധം യദി ലൗകികഭാവാത് മയാ യുദ്ധം കൃതം തർഹി തേന മമ കോ ലാഭഃ? മൃതാനാമ് ഉത്ഥിതി ര്യദി ന ഭവേത് തർഹി, കുർമ്മോ ഭോജനപാനേഽദ്യ ശ്വസ്തു മൃത്യു ർഭവിഷ്യതി|
நான் எபேசுவில் உலக வாழ்வுக்காக மாத்திரம் கொடிய மிருகங்களோடு போராடியிருந்தால், எனக்குக் கிடைத்த பலன் என்ன? இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால், “நாமும் உண்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்று சொல்லலாமே.
33 ഇത്യനേന ധർമ്മാത് മാ ഭ്രംശധ്വം| കുസംസർഗേണ ലോകാനാം സദാചാരോ വിനശ്യതി|
ஏமாந்து போகவேண்டாம்: “கெட்டவர்களின் நட்பு நல்லொழுக்கங்களைக் கெடுத்துவிடும்.”
34 യൂയം യഥോചിതം സചൈതന്യാസ്തിഷ്ഠത, പാപം മാ കുരുധ്വം, യതോ യുഷ്മാകം മധ്യ ഈശ്വരീയജ്ഞാനഹീനാഃ കേഽപി വിദ്യന്തേ യുഷ്മാകം ത്രപായൈ മയേദം ഗദ്യതേ|
ஆகவே, புத்தியாய் நடவுங்கள். பாவம் செய்வதை நிறுத்துங்கள். உங்களில் சிலர் இறைவனைப்பற்றிய அறிவு இல்லாதவர்களாய் இருக்கிறார்கள். இதை உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படியே நான் சொல்கிறேன்.
35 അപരം മൃതലോകാഃ കഥമ് ഉത്ഥാസ്യന്തി? കീദൃശം വാ ശരീരം ലബ്ധ്വാ പുനരേഷ്യന്തീതി വാക്യം കശ്ചിത് പ്രക്ഷ്യതി|
ஆனால், “இறந்தவர்கள் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? அவர்கள் எப்படியான உடலைப் பெற்றுக்கொள்வார்கள்?” என்று சிலர் கேட்கலாம்.
36 ഹേ അജ്ഞ ത്വയാ യദ് ബീജമ് ഉപ്യതേ തദ് യദി ന മ്രിയേത തർഹി ന ജീവയിഷ്യതേ|
இது மூடத்தனமான கேள்வியே. நீங்கள் விதைக்கின்ற விதை, முதலில் செத்தால்தானே அது முளைவிட்டு வளரும்.
37 യയാ മൂർത്ത്യാ നിർഗന്തവ്യം സാ ത്വയാ നോപ്യതേ കിന്തു ശുഷ്കം ബീജമേവ; തച്ച ഗോധൂമാദീനാം കിമപി ബീജം ഭവിതും ശക്നോതി|
நீங்கள் விதைக்கும்போது, முழு வளர்ச்சி பெறப்போகும் செடியை நீங்கள் விதைக்கவில்லையே. நீங்கள் வெறும் விதையையே விதைக்கிறீர்கள். அது கோதுமையாகவோ, அல்லது வேறு தானியமாகவோ இருக்கலாம்.
38 ഈശ്വരേണേവ യഥാഭിലാഷം തസ്മൈ മൂർത്തി ർദീയതേ, ഏകൈകസ്മൈ ബീജായ സ്വാ സ്വാ മൂർത്തിരേവ ദീയതേ|
இறைவனே தாம் தீர்மானித்தபடி, அதற்கு உடலைக் கொடுக்கிறார். ஒவ்வொருவிதமான விதைக்கும், அதற்குச் சொந்தமான உடலை அவர் கொடுக்கிறார்.
39 സർവ്വാണി പലലാനി നൈകവിധാനി സന്തി, മനുഷ്യപശുപക്ഷിമത്സ്യാദീനാം ഭിന്നരൂപാണി പലലാനി സന്തി|
உயிரினங்களின் சதைகள் எல்லாம் ஒரே விதமானவை அல்ல: மனித உடலின் சதை ஒரு விதமானது, மிருகங்களுக்கு ஒருவிதமும், பறவைகளுக்கு இன்னொரு விதமும், மீன்களுக்கு மற்றொரு விதமாகவும் சதையுள்ளது.
40 അപരം സ്വർഗീയാ മൂർത്തയഃ പാർഥിവാ മൂർത്തയശ്ച വിദ്യന്തേ കിന്തു സ്വർഗീയാനാമ് ഏകരൂപം തേജഃ പാർഥിവാനാഞ്ച തദന്യരൂപം തേജോഽസ്തി|
வானுலக உருவங்களும் உண்டு, பூவுலக உருவங்களும் உண்டு. வானுலக உருவங்களின் சிறப்பு ஒரு விதமானது, பூவுலக உருவங்களின் சிறப்பு இன்னொரு விதமானது.
41 സൂര്യ്യസ്യ തേജ ഏകവിധം ചന്ദ്രസ്യ തേജസ്തദന്യവിധം താരാണാഞ്ച തേജോഽന്യവിധം, താരാണാം മധ്യേഽപി തേജസസ്താരതമ്യം വിദ്യതേ|
சூரியனின் சிறப்பு ஒரு விதமானது, சந்திரனின் சிறப்பு மற்றொரு விதமானது, நட்சத்திரங்களின் சிறப்பும் இன்னொரு விதமானது; நட்சத்திரங்களும்கூட சிறப்பில் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகிறது.
42 തത്ര ലിഖിതമാസ്തേ യഥാ, ‘ആദിപുരുഷ ആദമ് ജീവത്പ്രാണീ ബഭൂവ,’ കിന്ത്വന്തിമ ആദമ് (ഖ്രീഷ്ടോ) ജീവനദായക ആത്മാ ബഭൂവ|
இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படும்போது, இவ்விதமாகவே இருக்கும். புதைக்கப்படும் உடல் அழிவுக்குரியது, அது அழியாமைக்குரியதாய் எழுப்பப்படுகிறது.
43 യദ് ഉപ്യതേ തത് തുച്ഛം യച്ചോത്ഥാസ്യതി തദ് ഗൗരവാന്വിതം; യദ് ഉപ്യതേ തന്നിർബ്ബലം യച്ചോത്ഥാസ്യതി തത് ശക്തിയുക്തം|
அது மதிப்பற்றதாய் புதைக்கப்படுகிறது, மகிமையில் எழுப்பப்படுகிறது. அது பலவீனமானதாய் புதைக்கப்படுகிறது, பலமுள்ளதாய் எழுப்பப்படுகிறது.
44 യത് ശരീരമ് ഉപ്യതേ തത് പ്രാണാനാം സദ്മ, യച്ച ശരീരമ് ഉത്ഥാസ്യതി തദ് ആത്മനഃ സദ്മ| പ്രാണസദ്മസ്വരൂപം ശരീരം വിദ്യതേ, ആത്മസദ്മസ്വരൂപമപി ശരീരം വിദ്യതേ|
அது இயற்கை உடலாய்ப் புதைக்கப்படுகிறது, ஆவிக்குரிய உடலாய் எழுப்பப்படுகிறது. மனிதனுக்கு இயற்கை உடல் இருப்பதுபோலவே, ஆவிக்குரிய உடலும் இருக்கிறது.
45 തത്ര ലിഖിതമാസ്തേ യഥാ, ആദിപുരുഷ ആദമ് ജീവത്പ്രാണീ ബഭൂവ, കിന്ത്വന്തിമ ആദമ് (ഖ്രീഷ്ടോ) ജീവനദായക ആത്മാ ബഭൂവ|
ஏனெனில் எழுதப்பட்டிருக்கிறபடி: “முதல் மனிதனாகிய ஆதாம் உயிருள்ளவனானான்”; கடைசி ஆதாமோ, உயிர்கொடுக்கும் ஆவியானார்.
46 ആത്മസദ്മ ന പ്രഥമം കിന്തു പ്രാണസദ്മൈവ തത്പശ്ചാദ് ആത്മസദ്മ|
முதலில் வந்தது ஆவிக்குரிய உடல் அல்ல, மனிதனின் இயற்கை உடலே. பின்பே ஆவிக்குரிய உடல் வந்தது.
47 ആദ്യഃ പുരുഷേ മൃദ ഉത്പന്നത്വാത് മൃണ്മയോ ദ്വിതീയശ്ച പുരുഷഃ സ്വർഗാദ് ആഗതഃ പ്രഭുഃ|
முதல் மனிதன் பூமியின் புழுதியினால் ஆனவன். இரண்டாவது வந்த மனிதரோ, பரலோகத்திலிருந்து வந்தவர்.
48 മൃണ്മയോ യാദൃശ ആസീത് മൃണ്മയാഃ സർവ്വേ താദൃശാ ഭവന്തി സ്വർഗീയശ്ച യാദൃശോഽസ്തി സ്വർഗീയാഃ സർവ്വേ താദൃശാ ഭവന്തി|
பூமியின் மனிதன் எப்படியோ, பூமியைச் சேர்ந்தவர்களும் அப்படியே; பரலோகத்திலிருந்து வந்தவரைப் போலவே, பரலோகத்துக்குரியவர்களும் இருக்கிறார்கள்.
49 മൃണ്മയസ്യ രൂപം യദ്വദ് അസ്മാഭി ർധാരിതം തദ്വത് സ്വർഗീയസ്യ രൂപമപി ധാരയിഷ്യതേ|
நாம் பூமியிலிருந்து படைக்கப்பட்ட மனிதனின் தன்மையை உடையவர்களாய் இருக்கிறது போலவே, நாம் பரலோகத்திற்குரிய மனிதரின் தன்மையையும் பெறுவோம்.
50 ഹേ ഭ്രാതരഃ, യുഷ്മാൻ പ്രതി വ്യാഹരാമി, ഈശ്വരസ്യ രാജ്യേ രക്തമാംസയോരധികാരോ ഭവിതും ന ശക്നോതി, അക്ഷയത്വേ ച ക്ഷയസ്യാധികാരോ ന ഭവിഷ്യതി|
பிரியமானவர்களே, நான் உங்களுக்கு அறிவிக்கிறதாவது, மாம்சமும், இரத்தமும் இறைவனுடைய அரசை உரிமையாகப் பெற்றுக்கொள்வதில்லை. அழிவுக்குரியது அழியாமையை உரிமையாகப் பெற்றுக்கொள்ள முடியாது.
51 പശ്യതാഹം യുഷ്മഭ്യം നിഗൂഢാം കഥാം നിവേദയാമി|
கேளுங்கள், நான் உங்களுக்கு ஒரு இரகசியத்தைச் சொல்கிறேன்: நாம் எல்லோரும் மரண நித்திரையடைவதில்லை. நாம் எல்லோரும் மாற்றமடைவோம்.
52 സർവ്വൈരസ്മാഭി ർമഹാനിദ്രാ ന ഗമിഷ്യതേ കിന്ത്വന്തിമദിനേ തൂര്യ്യാം വാദിതായാമ് ഏകസ്മിൻ വിപലേ നിമിഷൈകമധ്യേ സർവ്വൈ രൂപാന്തരം ഗമിഷ്യതേ, യതസ്തൂരീ വാദിഷ്യതേ, മൃതലോകാശ്ചാക്ഷയീഭൂതാ ഉത്ഥാസ്യന്തി വയഞ്ച രൂപാന്തരം ഗമിഷ്യാമഃ|
கடைசி எக்காளம் தொனிக்கும்போது, கண்ணிமைக்கும் ஒரு நொடிப்பொழுதில் இது நடைபெறும். ஏனெனில், எக்காளம் தொனிக்கும்போது, இறந்து போனவர்கள் அழியாமையுடன் எழுப்பப்படுவார்கள். அப்பொழுது நாமும் மாற்றமடைவோம்.
53 യതഃ ക്ഷയണീയേനൈതേന ശരീരേണാക്ഷയത്വം പരിഹിതവ്യം, മരണാധീനേനൈതേന ദേഹേന ചാമരത്വം പരിഹിതവ്യം|
ஏனெனில் அழிவுக்குரியது தன்னை அழியாமையினால் உடுத்திக்கொள்ளவேண்டும். சாகும் தன்மையுடையது சாகாநிலையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
54 ഏതസ്മിൻ ക്ഷയണീയേ ശരീരേ ഽക്ഷയത്വം ഗതേ, ഏതസ്മൻ മരണാധീനേ ദേഹേ ചാമരത്വം ഗതേ ശാസ്ത്രേ ലിഖിതം വചനമിദം സേത്സ്യതി, യഥാ, ജയേന ഗ്രസ്യതേ മൃത്യുഃ|
அழிவுக்குரியது அழியாமையை அணிந்துகொள்ளும்போதும், சாகும் தன்மையுள்ளது சாகாமையைப் பெற்றுக்கொள்ளும்போதும், எழுதப்பட்ட வசனங்கள் இவ்வாறு நிறைவேறும்: “மரணம் வெற்றியினால் விழுங்கப்பட்டது.”
55 മൃത്യോ തേ കണ്ടകം കുത്ര പരലോക ജയഃ ക്ക തേ|| (Hadēs )
“மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே, துன்புறுத்தும் உன் கொடுக்கு எங்கே?” (Hadēs )
56 മൃത്യോഃ കണ്ടകം പാപമേവ പാപസ്യ ച ബലം വ്യവസ്ഥാ|
மரணத்தின் கொடுக்கு பாவம். பாவத்திற்கு பெலன் கொடுப்பது மோசேயின் சட்டமே.
57 ഈശ്വരശ്ച ധന്യോ ഭവതു യതഃ സോഽസ്മാകം പ്രഭുനാ യീശുഖ്രീഷ്ടേനാസ്മാൻ ജയയുക്താൻ വിധാപയതി|
ஆனால் இறைவனுக்கே நன்றி, அவரே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நமக்கு வெற்றியைக் கொடுக்கிறார்.
58 അതോ ഹേ മമ പ്രിയഭ്രാതരഃ; യൂയം സുസ്ഥിരാ നിശ്ചലാശ്ച ഭവത പ്രഭോഃ സേവായാം യുഷ്മാകം പരിശ്രമോ നിഷ്ഫലോ ന ഭവിഷ്യതീതി ജ്ഞാത്വാ പ്രഭോഃ കാര്യ്യേ സദാ തത്പരാ ഭവത|
ஆகவே பிரியமானவர்களே! உறுதியாய் நில்லுங்கள். எதுவும் உங்களை அசைக்கிறதற்கு இடங்கொடாதேயுங்கள். கர்த்தருடைய பணிக்கே எப்பொழுதும் உங்களை முற்றுமாய் ஒப்புக்கொடுங்கள். ஏனெனில், கர்த்தரில் உங்கள் உழைப்பு வீணாகப் போகாது என்பது உங்களுக்குத் தெரியுமே.