< រោមិណះ 4 >

1 អស្មាកំ បូវ៌្វបុរុឞ ឥព្រាហីម៑ កាយិកក្រិយយា កិំ លព្ធវាន៑ ឯតទធិ កិំ វទិឞ្យាមះ?
அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் சரீரத்தின்படி என்னத்தைக் கண்டுபிடித்தான் என்று சொல்லுவோம்?
2 ស យទិ និជក្រិយាភ្យះ សបុណ្យោ ភវេត៑ តហ៌ិ តស្យាត្មឝ្លាឃាំ កត៌្តុំ បន្ថា ភវេទិតិ សត្យំ, កិន្ត្វីឝ្វរស្យ សមីបេ នហិ។
ஆபிரகாம் செயல்களினாலே நீதிமானாக்கப்பட்டான் என்றால் மேன்மைபாராட்ட அவனுக்குக் காரணம் உண்டு; ஆனால் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்டமுடியாது.
3 ឝាស្ត្រេ កិំ លិខតិ? ឥព្រាហីម៑ ឦឝ្វរេ វិឝ្វសនាត៑ ស វិឝ្វាសស្តស្មៃ បុណ្យាត៌្ហំ គណិតោ ពភូវ។
வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறது.
4 កម៌្មការិណោ យទ៑ វេតនំ តទ៑ អនុគ្រហស្យ ផលំ នហិ កិន្តុ តេនោបាជ៌ិតំ មន្តវ្យម៑។
வேலை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபை என்று எண்ணப்படாமல், கடன் என்று எண்ணப்படும்.
5 កិន្តុ យះ បាបិនំ សបុណ្យីករោតិ តស្មិន៑ វិឝ្វាសិនះ កម៌្មហីនស្យ ជនស្យ យោ វិឝ្វាសះ ស បុណ្យាត៌្ហំ គណ្យោ ភវតិ។
ஒருவன் செயல்களைச் செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடம் விசுவாசம் வைக்கிறவனாக இருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
6 អបរំ យំ ក្រិយាហីនម៑ ឦឝ្វរះ សបុណ្យីករោតិ តស្យ ធន្យវាទំ ទាយូទ៑ វណ៌យាមាស, យថា,
அந்தப்படி, செயல்கள் இல்லாமல் தேவனாலே நீதிமான் என்று எண்ணப்படுகிற மனிதனுடைய பாக்கியத்தைக் காண்பிப்பதற்காக:
7 ស ធន្យោៜឃានិ ម្ឫឞ្ដានិ យស្យាគាំស្យាវ្ឫតានិ ច។
எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
8 ស ច ធន្យះ បរេឝេន បាបំ យស្យ ន គណ្យតេ។
எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்” என்று தாவீது சொல்லியிருக்கிறான்.
9 ឯឞ ធន្យវាទស្ត្វក្ឆេទិនម៑ អត្វក្ឆេទិនំ វា កំ ប្រតិ ភវតិ? ឥព្រាហីមោ វិឝ្វាសះ បុណ្យាត៌្ហំ គណិត ឥតិ វយំ វទាមះ។
இந்தப் பாக்கியம் விருத்தசேதனம் உள்ளவனுக்குமட்டும் வருமோ அல்லது விருத்தசேதனம் இல்லாதவனுக்கும் வருமோ? “ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறோமே.
10 ស វិឝ្វាសស្តស្យ ត្វក្ឆេទិត្វាវស្ថាយាំ កិម៑ អត្វក្ឆេទិត្វាវស្ថាយាំ កស្មិន៑ សមយេ បុណ្យមិវ គណិតះ? ត្វក្ឆេទិត្វាវស្ថាយាំ នហិ កិន្ត្វត្វក្ឆេទិត្វាវស្ថាយាំ។
௧0அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோதா அல்லது விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதா? விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோது இல்லை, விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதே.
11 អបរញ្ច ស យត៑ សវ៌្វេឞាម៑ អត្វក្ឆេទិនាំ វិឝ្វាសិនាម៑ អាទិបុរុឞោ ភវេត៑, តេ ច បុណ្យវត្ត្វេន គណ្យេរន៑;
௧௧மேலும், விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனம் இல்லாதவர்களாக விசுவாசிக்கிற எல்லோருக்கும் நீதி எண்ணப்படுவதற்காக அவர்களுக்கு அவன் தகப்பனாக இருப்பதற்கும்,
12 យេ ច លោកាះ កេវលំ ឆិន្នត្វចោ ន សន្តោ ៜស្មត្បូវ៌្វបុរុឞ ឥព្រាហីម៑ អឆិន្នត្វក៑ សន៑ យេន វិឝ្វាសមាគ៌េណ គតវាន៑ តេនៃវ តស្យ បាទចិហ្នេន គច្ឆន្តិ តេឞាំ ត្វក្ឆេទិនាមប្យាទិបុរុឞោ ភវេត៑ តទត៌្ហម៑ អត្វក្ឆេទិនោ មានវស្យ វិឝ្វាសាត៑ បុណ្យម៑ ឧត្បទ្យត ឥតិ ប្រមាណស្វរូបំ ត្វក្ឆេទចិហ្នំ ស ប្រាប្នោត៑។
௧௨விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாக மட்டுமில்லை, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாகவும் இருக்கிறவர்களுக்குத் தகப்பனாக இருப்பதற்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.
13 ឥព្រាហីម៑ ជគតោៜធិការី ភវិឞ្យតិ យៃឞា ប្រតិជ្ញា តំ តស្យ វំឝញ្ច ប្រតិ បូវ៌្វម៑ អក្រិយត សា វ្យវស្ថាមូលិកា នហិ កិន្តុ វិឝ្វាសជន្យបុណ្យមូលិកា។
௧௩அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கோ அல்லது அவன் வம்சத்திற்கோ நியாயப்பிரமாணத்தினால் கிடைக்காமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது.
14 យតោ វ្យវស្ថាវលម្ពិនោ យទ្យធិការិណោ ភវន្តិ តហ៌ិ វិឝ្វាសោ វិផលោ ជាយតេ សា ប្រតិជ្ញាបិ លុប្តៃវ។
௧௪நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்தவர்கள் வாரிசுகளானால் விசுவாசம் வீணாகப்போகும், வாக்குத்தத்தமும் இல்லாமல்போகும்.
15 អធិកន្តុ វ្យវស្ថា កោបំ ជនយតិ យតោ ៜវិទ្យមានាយាំ វ្យវស្ថាយាម៑ អាជ្ញាលង្ឃនំ ន សម្ភវតិ។
௧௫மேலும் நியாயப்பிரமாணம் கோபத்தை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணம் இல்லை என்றால் கீழ்ப்படியாமையும் இல்லை.
16 អតឯវ សា ប្រតិជ្ញា យទ៑ អនុគ្រហស្យ ផលំ ភវេត៑ តទត៌្ហំ វិឝ្វាសមូលិកា យតស្តថាត្វេ តទ្វំឝសមុទាយំ ប្រតិ អត៌្ហតោ យេ វ្យវស្ថយា តទ្វំឝសម្ភវាះ កេវលំ តាន៑ ប្រតិ នហិ កិន្តុ យ ឥព្រាហីមីយវិឝ្វាសេន តត្សម្ភវាស្តានបិ ប្រតិ សា ប្រតិជ្ញា ស្ថាស្នុព៌្ហវតិ។
௧௬எனவே, சுதந்திரமானது கிருபையினால் உண்டாகிறதாக இருப்பதற்காக அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்த வம்சத்தினர்களுக்குமட்டும் இல்லை, நம் எல்லோருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சேர்ந்தவர்களான எல்லா வம்சத்தினர்களுக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாக இருப்பதற்காக அப்படி வருகிறது.
17 យោ និជ៌ីវាន៑ សជីវាន៑ អវិទ្យមានានិ វស្តូនិ ច វិទ្យមានានិ ករោតិ ឥព្រាហីមោ វិឝ្វាសភូមេស្តស្យេឝ្វរស្យ សាក្ឞាត៑ សោៜស្មាកំ សវ៌្វេឞាម៑ អាទិបុរុឞ អាស្តេ, យថា លិខិតំ វិទ្យតេ, អហំ ត្វាំ ពហុជាតីនាម៑ អាទិបុរុឞំ ក្ឫត្វា និយុក្តវាន៑។
௧௭“அநேக தேசமக்களுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன்” என்று எழுதியிருக்கிறபடி, அவன், தான் விசுவாசித்தவருமாக, மரித்தோரை உயிரோடு எழுப்பி, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவருமாக இருக்கிற தேவனுக்குமுன்பாக நம்மெல்லோருக்கும் தகப்பன் ஆனான்.
18 ត្វទីយស្តាទ្ឫឝោ វំឝោ ជនិឞ្យតេ យទិទំ វាក្យំ ប្រតិឝ្រុតំ តទនុសារាទ៑ ឥព្រាហីម៑ ពហុទេឝីយលោកានាម៑ អាទិបុរុឞោ យទ៑ ភវតិ តទត៌្ហំ សោៜនបេក្ឞិតវ្យមប្យបេក្ឞមាណោ វិឝ្វាសំ ក្ឫតវាន៑។
௧௮“உன் வம்சம் இவ்வளவாக இருக்கும் என்று சொல்லப்பட்டபடியே,” தான் அநேக தேசமக்களுக்கு தகப்பனாவதை நம்புகிறதற்கு வழியில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடு விசுவாசித்தான்.
19 អបរញ្ច ក្ឞីណវិឝ្វាសោ ន ភូត្វា ឝតវត្សរវយស្កត្វាត៑ ស្វឝរីរស្យ ជរាំ សារានាម្នះ ស្វភាយ៌្យាយា រជោនិវ្ឫត្តិញ្ច ត្ឫណាយ ន មេនេ។
௧௯அவன் விசுவாசத்திலே பலவீனமாக இருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாக இருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் நினைக்காமல் இருந்தான்.
20 អបរម៑ អវិឝ្វាសាទ៑ ឦឝ្វរស្យ ប្រតិជ្ញាវចនេ កមបិ សំឝយំ ន ចការ;
௨0தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாகச் சந்தேகப்படாமல்,
21 កិន្ត្វីឝ្វរេណ យត៑ ប្រតិឝ្រុតំ តត៑ សាធយិតុំ ឝក្យត ឥតិ និឝ្ចិតំ វិជ្ញាយ ទ្ឫឍវិឝ្វាសះ សន៑ ឦឝ្វរស្យ មហិមានំ ប្រកាឝយាញ្ចការ។
௨௧தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்று முழுநிச்சயமாக நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவன் ஆனான்.
22 ឥតិ ហេតោស្តស្យ ស វិឝ្វាសស្តទីយបុណ្យមិវ គណយាញ្ចក្រេ។
௨௨எனவே, அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
23 បុណ្យមិវាគណ្យត តត៑ កេវលស្យ តស្យ និមិត្តំ លិខិតំ នហិ, អស្មាកំ និមិត្តមបិ,
௨௩“அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது,” என்பது, அவனுக்காகமட்டும் இல்லை, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
24 យតោៜស្មាកំ បាបនាឝាត៌្ហំ សមប៌ិតោៜស្មាកំ បុណ្យប្រាប្ត្យត៌្ហញ្ចោត្ថាបិតោៜភវត៑ យោៜស្មាកំ ប្រភុ រ្យីឝុស្តស្យោត្ថាបយិតរីឝ្វរេ
௨௪நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.
25 យទិ វយំ វិឝ្វសាមស្តហ៌្យស្មាកមបិ សឯវ វិឝ្វាសះ បុណ្យមិវ គណយិឞ្យតេ។
௨௫அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.

< រោមិណះ 4 >