< រោមិណះ 4 >

1 អស្មាកំ បូវ៌្វបុរុឞ ឥព្រាហីម៑ កាយិកក្រិយយា កិំ លព្ធវាន៑ ឯតទធិ កិំ វទិឞ្យាមះ?
நமது முற்பிதா ஆபிரகாமைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? இவ்விஷயத்தில் அவனுடைய அனுபவம் என்ன?
2 ស យទិ និជក្រិយាភ្យះ សបុណ្យោ ភវេត៑ តហ៌ិ តស្យាត្មឝ្លាឃាំ កត៌្តុំ បន្ថា ភវេទិតិ សត្យំ, កិន្ត្វីឝ្វរស្យ សមីបេ នហិ។
உண்மையிலேயே ஆபிரகாம் தனது செயல்களின் பொருட்டு நீதிமான் ஆக்கப்பட்டிருந்தால், அவன் பெருமைபாராட்ட இடமுண்டு. ஆனால் இறைவனுக்கு முன்பாக அவன் பெருமைபாராட்ட இடமில்லை.
3 ឝាស្ត្រេ កិំ លិខតិ? ឥព្រាហីម៑ ឦឝ្វរេ វិឝ្វសនាត៑ ស វិឝ្វាសស្តស្មៃ បុណ្យាត៌្ហំ គណិតោ ពភូវ។
வேதவசனம் என்ன சொல்கிறது? “ஆபிரகாம் இறைவனை விசுவாசித்தான். அந்த விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.”
4 កម៌្មការិណោ យទ៑ វេតនំ តទ៑ អនុគ្រហស្យ ផលំ នហិ កិន្តុ តេនោបាជ៌ិតំ មន្តវ្យម៑។
வேலை செய்கிறவனுக்குக் கொடுக்கப்படுகிற கூலி ஒரு நன்கொடையாகக் கணக்கிடப்படுவதில்லை; அது அவனுக்குக் கொடுக்கப்படவேண்டிய கூலி.
5 កិន្តុ យះ បាបិនំ សបុណ្យីករោតិ តស្មិន៑ វិឝ្វាសិនះ កម៌្មហីនស្យ ជនស្យ យោ វិឝ្វាសះ ស បុណ្យាត៌្ហំ គណ្យោ ភវតិ។
ஆனால் ஒருவனுடைய செயல்கள் இல்லாமல், பாவிகளை நீதிமானாக்கும் இறைவனிடம் விசுவாசம் வைக்கிற மனிதனுக்கு, அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்படுகிறது.
6 អបរំ យំ ក្រិយាហីនម៑ ឦឝ្វរះ សបុណ្យីករោតិ តស្យ ធន្យវាទំ ទាយូទ៑ វណ៌យាមាស, យថា,
இதே விஷயத்தைத் தாவீதும் கூறுகின்றான். செயல்கள் ஏதும் செய்யாமலே இறைவனால் நீதிமான் எனக் கணக்கிடப்படும் மனிதனின் ஆசீர்வாதத்தைக் குறித்து தாவீது சொல்லும்போது,
7 ស ធន្យោៜឃានិ ម្ឫឞ្ដានិ យស្យាគាំស្យាវ្ឫតានិ ច។
“தங்கள் குற்றங்களுக்காக மன்னிப்புப் பெற்றவர்களாய், தங்கள் பாவங்கள் மூடப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
8 ស ច ធន្យះ បរេឝេន បាបំ យស្យ ន គណ្យតេ។
ஒருவனுடைய பாவத்தை ஒருபோதும் கர்த்தர் கணக்கில் வைத்திராவிட்டால், அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்கிறான்.
9 ឯឞ ធន្យវាទស្ត្វក្ឆេទិនម៑ អត្វក្ឆេទិនំ វា កំ ប្រតិ ភវតិ? ឥព្រាហីមោ វិឝ្វាសះ បុណ្យាត៌្ហំ គណិត ឥតិ វយំ វទាមះ។
இந்த ஆசீர்வாதம் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமா? இல்லையெனில் விருத்தசேதனம் பெறாதவர்களுக்கும் உரியதா? ஆபிரகாமின் விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது என்று நாம் சொல்கிறோம்.
10 ស វិឝ្វាសស្តស្យ ត្វក្ឆេទិត្វាវស្ថាយាំ កិម៑ អត្វក្ឆេទិត្វាវស្ថាយាំ កស្មិន៑ សមយេ បុណ្យមិវ គណិតះ? ត្វក្ឆេទិត្វាវស្ថាយាំ នហិ កិន្ត្វត្វក្ឆេទិត្វាវស្ថាយាំ។
அவன் எந்த சூழ்நிலையில் இருந்தபோது இது அவனுக்குக் கணக்கிடப்பட்டது? அவன் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டதின் பின்பு நடந்ததா? அல்லது பெற்றுக்கொள்வதற்கு முன்பு நடந்ததா? விருத்தசேதனம் பெற்றுக்கொண்டதின் பின்பு அல்ல, அதற்குமுன்புதான் அது நடந்தது.
11 អបរញ្ច ស យត៑ សវ៌្វេឞាម៑ អត្វក្ឆេទិនាំ វិឝ្វាសិនាម៑ អាទិបុរុឞោ ភវេត៑, តេ ច បុណ្យវត្ត្វេន គណ្យេរន៑;
ஆபிரகாம் விருத்தசேதனம் பெறாமல் இருந்தபோதே, விசுவாசத்தினால் பெற்றுக்கொண்ட நீதியின் சான்றாக, விருத்தசேதனத்தை ஒரு அடையாளமாகப் பின்பு பெற்றான். ஆகவே விருத்தசேதனம் பெறாதவர்களாயிருந்தும், விசுவாசிகளான எல்லோருக்கும் ஆபிரகாம் ஆவிக்குரிய தகப்பனாயிருக்கிறான். இதனால் அப்படியே அவர்களுடைய விசுவாசம் அவர்களுக்கும் நீதியாகக் கணக்கிடப்படுகிறது.
12 យេ ច លោកាះ កេវលំ ឆិន្នត្វចោ ន សន្តោ ៜស្មត្បូវ៌្វបុរុឞ ឥព្រាហីម៑ អឆិន្នត្វក៑ សន៑ យេន វិឝ្វាសមាគ៌េណ គតវាន៑ តេនៃវ តស្យ បាទចិហ្នេន គច្ឆន្តិ តេឞាំ ត្វក្ឆេទិនាមប្យាទិបុរុឞោ ភវេត៑ តទត៌្ហម៑ អត្វក្ឆេទិនោ មានវស្យ វិឝ្វាសាត៑ បុណ្យម៑ ឧត្បទ្យត ឥតិ ប្រមាណស្វរូបំ ត្វក្ឆេទចិហ្នំ ស ប្រាប្នោត៑។
விருத்தசேதனம் பெற்றுக்கொண்டவர்களுக்கும் அவன் தந்தையாய் இருக்கிறான். அவர்கள் விருத்தசேதனத்தைப் பெற்றுக்கொண்டபடியினால் அல்ல. ஆபிரகாம் தான் விருத்தசேதனம் பெற்றுக்கொள்ளும் முன்னதாக அப்படியே விசுவாசத்தின் அடிச்சுவட்டிலே நடந்தான். நம்முடைய தந்தையாகிய ஆபிரகாமுக்கு இருந்த விசுவாசத்தினால் வரும் அடிச்சுவட்டில் நடக்கிறவர்களுக்கும் அவன் தந்தையாய் இருக்கிறான்.
13 ឥព្រាហីម៑ ជគតោៜធិការី ភវិឞ្យតិ យៃឞា ប្រតិជ្ញា តំ តស្យ វំឝញ្ច ប្រតិ បូវ៌្វម៑ អក្រិយត សា វ្យវស្ថាមូលិកា នហិ កិន្តុ វិឝ្វាសជន្យបុណ្យមូលិកា។
உலகத்தின் உரிமையாளனாயிருப்பான் என்ற வாக்குத்தத்தத்தை இறைவன் அவனுக்கும், அவன் சந்ததிகளுக்கும் கொடுத்தார். இந்த வாக்குத்தத்தம் மோசேயின் சட்டத்தினால் அல்ல, விசுவாசத்தினால் வரும் நீதியினால் கொடுக்கப்பட்டது.
14 យតោ វ្យវស្ថាវលម្ពិនោ យទ្យធិការិណោ ភវន្តិ តហ៌ិ វិឝ្វាសោ វិផលោ ជាយតេ សា ប្រតិជ្ញាបិ លុប្តៃវ។
ஏனெனில், மோசேயின் சட்டத்திற்கு கீழ்ப்படிகிறவர்கள் அதற்கு உரிமையாளர்களானால் விசுவாசம் உபயோகமற்றதாகிறது. வாக்குத்தத்தமும் அர்த்தமற்றதாகிறது.
15 អធិកន្តុ វ្យវស្ថា កោបំ ជនយតិ យតោ ៜវិទ្យមានាយាំ វ្យវស្ថាយាម៑ អាជ្ញាលង្ឃនំ ន សម្ភវតិ។
ஆனால் மோசேயின் சட்டம் இறைவனின் கோபத்தையே கொண்டுவருகிறது. ஆனால் மோசேயின் சட்டம் இல்லாத இடத்தில், மீறுதலும் இல்லை.
16 អតឯវ សា ប្រតិជ្ញា យទ៑ អនុគ្រហស្យ ផលំ ភវេត៑ តទត៌្ហំ វិឝ្វាសមូលិកា យតស្តថាត្វេ តទ្វំឝសមុទាយំ ប្រតិ អត៌្ហតោ យេ វ្យវស្ថយា តទ្វំឝសម្ភវាះ កេវលំ តាន៑ ប្រតិ នហិ កិន្តុ យ ឥព្រាហីមីយវិឝ្វាសេន តត្សម្ភវាស្តានបិ ប្រតិ សា ប្រតិជ្ញា ស្ថាស្នុព៌្ហវតិ។
ஆதலால் வாக்குத்தத்தம் விசுவாசத்தினால் வருகிறது. இதனால் இந்த வாக்குத்தத்தம் இலவசமான கிருபையினால், ஆபிரகாமின் சந்ததிகள் அனைவருக்கும் கொடுக்கப்படும் என்ற உறுதியையும் காட்டுகிறது. மோசேயின் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கு மாத்திரமல்ல, ஆபிரகாமின் விசுவாசம் விசுவாசிக்கிறவர்களுக்கும் அது கொடுக்கப்படுகிறது. ஆபிரகாம் நம் எல்லோருக்கும் தந்தையாயிருக்கிறார்.
17 យោ និជ៌ីវាន៑ សជីវាន៑ អវិទ្យមានានិ វស្តូនិ ច វិទ្យមានានិ ករោតិ ឥព្រាហីមោ វិឝ្វាសភូមេស្តស្យេឝ្វរស្យ សាក្ឞាត៑ សោៜស្មាកំ សវ៌្វេឞាម៑ អាទិបុរុឞ អាស្តេ, យថា លិខិតំ វិទ្យតេ, អហំ ត្វាំ ពហុជាតីនាម៑ អាទិបុរុឞំ ក្ឫត្វា និយុក្តវាន៑។
“அநேக நாடுகளுக்கு நான் உன்னைத் தந்தையாக்கினேன்” என்று எழுதப்பட்டிருக்கிற வேதவசனத்தின்படியே ஆபிரகாம் தான் விசுவாசித்த இறைவனின் பார்வையில், நம்முடைய தந்தையாய் இருக்கிறான். இறைவனே இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறவர்; முன்பில்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைக்கிறார் என்று ஆபிரகாம் விசுவாசித்தான்.
18 ត្វទីយស្តាទ្ឫឝោ វំឝោ ជនិឞ្យតេ យទិទំ វាក្យំ ប្រតិឝ្រុតំ តទនុសារាទ៑ ឥព្រាហីម៑ ពហុទេឝីយលោកានាម៑ អាទិបុរុឞោ យទ៑ ភវតិ តទត៌្ហំ សោៜនបេក្ឞិតវ្យមប្យបេក្ឞមាណោ វិឝ្វាសំ ក្ឫតវាន៑។
“உனது சந்ததிகள் வானத்து நட்சத்திரங்களைப்போல் அதிகமாயிருக்கும்” என்று இறைவன் ஆபிரகாமுக்குக் கூறியபோது யாரும் நம்புகிறதற்கு கூடாதிருந்தும் ஆபிரகாம் எதிர்பார்ப்புடன் விசுவாசித்தான். அதனால் ஆபிரகாம் அநேக நாடுகளுக்கு தந்தையானான்.
19 អបរញ្ច ក្ឞីណវិឝ្វាសោ ន ភូត្វា ឝតវត្សរវយស្កត្វាត៑ ស្វឝរីរស្យ ជរាំ សារានាម្នះ ស្វភាយ៌្យាយា រជោនិវ្ឫត្តិញ្ច ត្ឫណាយ ន មេនេ។
அவன் ஏறத்தாழ நூறு வயதுள்ளவனாயிருந்தான். இதனால் அவனுடைய உடல் சக்தியற்றுப் போயிருந்தது. சாராளுடைய கருப்பையும் கருத்தரிக்கும் சக்தியை இழந்திருந்தது. இதை அவன் நன்றாய் அறிந்திருந்தும், அவனுடைய விசுவாசம் தளரவில்லை.
20 អបរម៑ អវិឝ្វាសាទ៑ ឦឝ្វរស្យ ប្រតិជ្ញាវចនេ កមបិ សំឝយំ ន ចការ;
இறைவனுடைய வாக்குறுதியைக்குறித்து அவிசுவாசத்தினால் அவன் தடுமாற்றம் அடையவில்லை. ஆனால் அவன் தனது விசுவாசத்தில் வலிமை அடைந்து, இறைவனுக்கே மகிமையைச் செலுத்தினான்.
21 កិន្ត្វីឝ្វរេណ យត៑ ប្រតិឝ្រុតំ តត៑ សាធយិតុំ ឝក្យត ឥតិ និឝ្ចិតំ វិជ្ញាយ ទ្ឫឍវិឝ្វាសះ សន៑ ឦឝ្វរស្យ មហិមានំ ប្រកាឝយាញ្ចការ។
தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இறைவனுக்கு வல்லமை உண்டு என்பதை அவன் முழு நிச்சயமாய் நம்பினான்.
22 ឥតិ ហេតោស្តស្យ ស វិឝ្វាសស្តទីយបុណ្យមិវ គណយាញ្ចក្រេ។
இதனால்தான், “அவனுடைய விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.
23 បុណ្យមិវាគណ្យត តត៑ កេវលស្យ តស្យ និមិត្តំ លិខិតំ នហិ, អស្មាកំ និមិត្តមបិ,
அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது” என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பது அவனுக்காக மட்டுமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
24 យតោៜស្មាកំ បាបនាឝាត៌្ហំ សមប៌ិតោៜស្មាកំ បុណ្យប្រាប្ត្យត៌្ហញ្ចោត្ថាបិតោៜភវត៑ យោៜស្មាកំ ប្រភុ រ្យីឝុស្តស្យោត្ថាបយិតរីឝ្វរេ
நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பிய இறைவன்மேல் விசுவாசம் வைக்கும் நமக்கும் நம்முடைய விசுவாசத்தை நீதியாகக் கணக்கிடுவார் என்றே அது எழுதப்பட்டுள்ளது.
25 យទិ វយំ វិឝ្វសាមស្តហ៌្យស្មាកមបិ សឯវ វិឝ្វាសះ បុណ្យមិវ គណយិឞ្យតេ។
இறைவன் இயேசுவை நம்முடைய பாவங்களுக்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, நம்மை நீதிமான்கள் ஆக்குவதற்காக உயிரோடு எழுப்பினார்.

< រោមិណះ 4 >