< រោមិណះ 15 >
1 ពលវទ្ភិរស្មាភិ រ្ទុព៌្ពលានាំ ទៅព៌្ពល្យំ សោឍវ្យំ ន ច ស្វេឞាម៑ ឥឞ្ដាចារ អាចរិតវ្យះ។
விசுவாசத்தில் பலமுள்ளவர்களாயிருக்கிற நாம், பலவீனமாய் இருக்கிறவர்களின் தவறுகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். நம்மைப் பிரியப்படுத்தக் கூடாது.
2 អស្មាកម៑ ឯកៃកោ ជនះ ស្វសមីបវាសិនោ ហិតាត៌្ហំ និឞ្ឋាត៌្ហញ្ច តស្យៃវេឞ្ដាចារម៑ អាចរតុ។
நாம் ஒவ்வொருவரும் நமது அயலவனை அவனது நன்மையின் நிமித்தம் விசுவாசத்தில் வளரச்செய்யும்படி, அவனைப் பிரியப்படுத்த வேண்டும்.
3 យតះ ខ្រីឞ្ដោៜបិ និជេឞ្ដាចារំ នាចរិតវាន៑, យថា លិខិតម៑ អាស្តេ, ត្វន្និន្ទកគណស្យៃវ និន្ទាភិ រ្និន្ទិតោៜស្ម្យហំ។
கிறிஸ்துவுங்கூட, தம்மைப் பிரியப்படுத்துவதற்காக வாழவில்லை, “உம்மை அவமானப்படுத்தியவர்களுடைய அவமரியாதைப் பேச்சுக்கள் என்மேலே விழுந்தன” என்று கிறிஸ்துவைப்பற்றி எழுதியிருக்கின்றன.
4 អបរញ្ច វយំ យត៑ សហិឞ្ណុតាសាន្ត្វនយោ រ្ជនកេន ឝាស្ត្រេណ ប្រត្យាឝាំ លភេមហិ តន្និមិត្តំ បូវ៌្វកាលេ លិខិតានិ សវ៌្វវចនាន្យស្មាកម៑ ឧបទេឝាត៌្ហមេវ លិលិខិរេ។
முற்காலத்தில் எழுதப்பட்டவை எல்லாம் நம்முடைய போதனைக்காகவே எழுதப்பட்டிருக்கின்றன. இதனால் நாம் வேதவசனங்களில் இருந்து பொறுமையையும், உற்சாகத்தையும் பெற்று, அவற்றின் மூலமாய் நமக்கு எதிர்பார்ப்பு உள்ளவர்களாயிருக்கிறோம்.
5 សហិឞ្ណុតាសាន្ត្វនយោរាករោ យ ឦឝ្វរះ ស ឯវំ ករោតុ យត៑ ប្រភុ រ្យីឝុខ្រីឞ្ដ ឥវ យុឞ្មាកម៑ ឯកជនោៜន្យជនេន សាទ៌្ធំ មនស ឰក្យម៑ អាចរេត៑;
பொறுமையும் உற்சாகத்தையும் கொடுக்கின்ற இறைவன், நீங்கள் கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றுகையில் உங்களுக்கிடையே ஒற்றுமையின் ஆவியைத் தருவாராக.
6 យូយញ្ច សវ៌្វ ឯកចិត្តា ភូត្វា មុខៃកេនេវាស្មត្ប្រភុយីឝុខ្រីឞ្ដស្យ បិតុរីឝ្វរស្យ គុណាន៑ កីត៌្តយេត។
அப்பொழுது நீங்கள் ஒரே மனதுள்ளவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவீர்கள்.
7 អបរម៑ ឦឝ្វរស្យ មហិម្នះ ប្រកាឝាត៌្ហំ ខ្រីឞ្ដោ យថា យុឞ្មាន៑ ប្រត្យគ្ឫហ្លាត៑ តថា យុឞ្មាកមប្យេកោ ជនោៜន្យជនំ ប្រតិគ្ឫហ្លាតុ។
ஆகவே, இறைவனுக்கு மகிமை உண்டாகும்படி கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டதைப் போலவே நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். இது இறைவனுக்குத் துதியைக் கொண்டுவரும்.
8 យថា លិខិតម៑ អាស្តេ, អតោៜហំ សម្មុខេ តិឞ្ឋន៑ ភិន្នទេឝនិវាសិនាំ។ ស្តុវំស្ត្វាំ បរិគាស្យាមិ តវ នាម្និ បរេឝ្វរ៕
நான் உங்களுக்குச் சொல்கிறேன், இறைவன் உண்மையுள்ளவர் என்பதைக் காண்பிப்பதற்காக, கிறிஸ்து யூதருக்கு ஊழியக்காரனாக வந்தார். இவ்விதம் இறைவன் முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை அவர் உறுதிப்படுத்தினார்.
9 តស្យ ទយាលុត្វាច្ច ភិន្នជាតីយា យទ៑ ឦឝ្វរស្យ គុណាន៑ កីត៌្តយេយុស្តទត៌្ហំ យីឝុះ ខ្រីឞ្ដស្ត្វក្ឆេទនិយមស្យ និឃ្នោៜភវទ៑ ឥត្យហំ វទាមិ។ យថា លិខិតម៑ អាស្តេ, អតោៜហំ សម្មុខេ តិឞ្ឋន៑ ភិន្នទេឝនិវាសិនាំ។ ស្តុវំស្ត្វាំ បរិគាស្យាមិ តវ នាម្និ បរេឝ្វរ៕
இதனால், யூதரல்லாதவர்களும் இறைவனுடைய இரக்கத்திற்காக இறைவனை மகிமைப்படுத்தும்படி இப்படிச் செய்தார். இதைப்பற்றி வேதவசனத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறது: “ஆகையால், யூதரல்லாதவர்களிடையே நான் உம்மைத் துதிப்பேன்; நான் உமது பெயருக்குத் துதிப்பாடல் பாடுவேன்.”
10 អបរមបិ លិខិតម៑ អាស្តេ, ហេ អន្យជាតយោ យូយំ សមំ នន្ទត តជ្ជនៃះ។
மேலும், பரிசுத்த வேதம் சொல்லுகிறதாவது: “யூதரல்லாத மக்களே! கர்த்தருடைய மக்களுடன் நீங்களும் சந்தோஷப்படுங்கள்.”
11 បុនឝ្ច លិខិតម៑ អាស្តេ, ហេ សវ៌្វទេឝិនោ យូយំ ធន្យំ ព្រូត បរេឝ្វរំ។ ហេ តទីយនរា យូយំ កុរុធ្វំ តត្ប្រឝំសនំ៕
மேலும், பரிசுத்த வேதம் சொல்லுகிறதாவது: “யூதரல்லாத மக்களே, நீங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதித்துப் பாடுங்கள்.”
12 អបរ យីឝាយិយោៜបិ លិលេខ, យីឝយស្យ តុ យត៑ មូលំ តត៑ ប្រកាឝិឞ្យតេ តទា។ សវ៌្វជាតីយន្ឫណាញ្ច ឝាសកះ សមុទេឞ្យតិ។ តត្រាន្យទេឝិលោកៃឝ្ច ប្រត្យាឝា ប្រករិឞ្យតេ៕
இன்னும் ஏசாயா, “ஈசாயின் வேர் முளைத்தெழும்பும். ஜனங்களை ஆளுகை செய்கிறவராய் அவர் எழும்புவார்; யூதரல்லாத மக்கள் அவரில் நம்பிக்கை வைப்பார்கள்” என்று சொல்கிறான்.
13 អតឯវ យូយំ បវិត្រស្យាត្មនះ ប្រភាវាទ៑ យត៑ សម្បូណ៌ាំ ប្រត្យាឝាំ លប្ស្យធ្វេ តទត៌្ហំ តត្ប្រត្យាឝាជនក ឦឝ្វរះ ប្រត្យយេន យុឞ្មាន៑ ឝាន្ត្យានន្ទាភ្យាំ សម្បូណ៌ាន៑ ករោតុ។
எதிர்பார்ப்பைக் கொடுக்கும் இறைவன், நீங்கள் அவரில் நம்பிக்கையாயிருக்கும்போது, உங்களை எல்லாச் சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்புவாராக. அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் உங்கள் எதிர்பார்ப்பில் பெருகுவீர்கள்.
14 ហេ ភ្រាតរោ យូយំ សទ្ភាវយុក្តាះ សវ៌្វប្រការេណ ជ្ញានេន ច សម្បូណ៌ាះ បរស្បរោបទេឝេ ច តត្បរា ឥត្យហំ និឝ្ចិតំ ជានាមិ,
எனக்கு பிரியமானவர்களே, நீங்கள் நன்மையினால் நிறைந்தவர்கள் என்றும், அறிவில் நிறைவுபெற்றவர்களென்றும், ஒருவருக்கொருவர் அறிவுறுத்தலைக் கொடுக்கும் ஆற்றல் உடையவர்கள் என்றும் உறுதியாக நான் நம்புகிறேன்.
15 តថាប្យហំ យត៑ ប្រគល្ភតរោ ភវន៑ យុឞ្មាន៑ ប្រពោធយាមិ តស្យៃកំ ការណមិទំ។
ஆனால் நான் சில விஷயங்களைத் திரும்பவும் உங்களுக்கு நினைப்பூட்டுவதற்காகவேத் துணிவுடன் இங்கே எழுதியிருக்கிறேன். ஏனெனில் இறைவன் எனக்குக் கொடுத்த கிருபையின்படி,
16 ភិន្នជាតីយាះ បវិត្រេណាត្មនា បាវិតនៃវេទ្យរូបា ភូត្វា យទ៑ គ្រាហ្យា ភវេយុស្តន្និមិត្តមហម៑ ឦឝ្វរស្យ សុសំវាទំ ប្រចារយិតុំ ភិន្នជាតីយានាំ មធ្យេ យីឝុខ្រីឞ្ដស្យ សេវកត្វំ ទានំ ឦឝ្វរាត៑ លព្ធវានស្មិ។
யூதரல்லாதவர்களுக்கு இறைவனுடைய நற்செய்தியைப் பிரசித்தம் பண்ணும் ஆசாரிய ஊழியத்தைச் செய்துகொண்டிருக்கும் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாய் நான் இருக்கிறேன். யூதரல்லாத மக்கள் பரிசுத்த ஆவியானவராலே பரிசுத்தம் பண்ணப்பட்டு இறைவனுக்கு ஏற்ற ஒரு காணிக்கையாகும்படி, நான் அவர்களை அர்ப்பணிக்கிறேன்.
17 ឦឝ្វរំ ប្រតិ យីឝុខ្រីឞ្ដេន មម ឝ្លាឃាករណស្យ ការណម៑ អាស្តេ។
ஆகவே நான் இறைவனுக்குச் செய்கின்ற இந்தப் பணியின் நிமித்தம், கிறிஸ்து இயேசுவில் பெருமிதம் அடைகிறேன்.
18 ភិន្នទេឝិន អាជ្ញាគ្រាហិណះ កត៌្តុំ ខ្រីឞ្ដោ វាក្យេន ក្រិយយា ច, អាឝ្ចយ៌្យលក្ឞណៃឝ្ចិត្រក្រិយាភិះ បវិត្រស្យាត្មនះ ប្រភាវេន ច យានិ កម៌្មាណិ មយា សាធិតវាន៑,
யூதரல்லாதவர்களை இறைவனுக்குக் கீழ்ப்படிய வழிநடத்தும்படி, கிறிஸ்து என் மூலமாய் சொன்னவைகளினாலும், செய்தவைகளினாலும் செய்திருக்கிற
19 កេវលំ តាន្យេវ វិនាន្យស្យ កស្យចិត៑ កម៌្មណោ វណ៌នាំ កត៌្តុំ ប្រគល្ភោ ន ភវាមិ។ តស្មាត៑ អា យិរូឝាលម ឥល្លូរិកំ យាវត៑ សវ៌្វត្រ ខ្រីឞ្ដស្យ សុសំវាទំ ប្រាចារយំ។
அவை அடையாளங்களையும் அற்புதங்களையும் ஆவியானவருடைய வல்லமையினாலேயே நடந்தேறினதைத் தவிர, வேறு எதையும் குறித்து நான் பேசத்துணிய மாட்டேன். எனவே எருசலேமிலிருந்து இல்லிரிக்கம் என்னும் நாடுவரைக்கும், முழுவதுமாய் நான் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தேன்.
20 អន្យេន និចិតាយាំ ភិត្តាវហំ យន្ន និចិនោមិ តន្និមិត្តំ យត្រ យត្រ ស្ថានេ ខ្រីឞ្ដស្យ នាម កទាបិ កេនាបិ ន ជ្ញាបិតំ តត្រ តត្រ សុសំវាទំ ប្រចារយិតុម៑ អហំ យតេ។
வேறொருவர் போட்ட அஸ்திபாரத்தின்மேல் நான் கட்டக்கூடாது என்பதற்காக கிறிஸ்துவைக்குறித்து அறிவிக்கப்படாத இடங்களிலே, நற்செய்தியை அறிவிப்பதே எப்பொழுதும் என் விருப்பமாயிருக்கிறது.
21 យាទ្ឫឝំ លិខិតម៑ អាស្តេ, យៃ រ្វាត៌្តា តស្យ ន ប្រាប្តា ទឝ៌នំ តៃស្តុ លប្ស្យតេ។ យៃឝ្ច នៃវ ឝ្រុតំ កិញ្ចិត៑ ពោទ្ធុំ ឝក្ឞ្យន្តិ តេ ជនាះ៕
வேதவசனத்தில் எழுதியிருக்கிறபடியே: “அவரைக்குறித்து அறிவிக்கப்படாதவர்கள் காண்பார்கள், கேள்விப்படாதவர்கள் விளங்கிக்கொள்வார்கள்.” இதன்படியே நான் இப்படிச் செய்தேன்.
22 តស្មាទ៑ យុឞ្មត្សមីបគមនាទ៑ អហំ មុហុម៌ុហុ រ្និវារិតោៜភវំ។
இதனாலேயே நான் உங்களிடம் வருவதற்கு பலமுறைகள் நினைத்தும் அடிக்கடி தடைகள் ஏற்பட்டன.
23 កិន្ត្វិទានីម៑ អត្រ ប្រទេឝេឞុ មយា ន គតំ ស្ថានំ កិមបិ នាវឝិឞ្យតេ យុឞ្មត្សមីបំ គន្តុំ ពហុវត្សរានារភ្យ មាមកីនាកាង្ក្ឞា ច វិទ្យត ឥតិ ហេតោះ
ஆனால் இப்பொழுதோ இந்தப் பகுதிகளில் நான் பணிசெய்ய வேண்டிய எந்தவொரு இடமும் இல்லை. அத்துடன் பலவருடங்களாக நான் உங்களைக் காணவும் ஆவலாயிருக்கிறேன்.
24 ស្បានិយាទេឝគមនកាលេៜហំ យុឞ្មន្មធ្យេន គច្ឆន៑ យុឞ្មាន៑ អាលោកិឞ្យេ, តតះ បរំ យុឞ្មត្សម្ភាឞណេន ត្ឫប្តិំ បរិលភ្យ តទ្ទេឝគមនាត៌្ហំ យុឞ្មាភិ រ្វិសជ៌យិឞ្យេ, ឦទ្ឫឝី មទីយា ប្រត្យាឝា វិទ្យតេ។
எனவே நான் ஸ்பெயினுக்குப் போகும்போது, உங்களிடமும் வருவதற்குத் திட்டமிட்டிருக்கிறேன். போகும் வழியில் உங்களையும் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கின்றேன். உங்களோடு சிறிது காலத்தை மகிழ்ச்சியாய் கழித்துவிட்டு, அங்கிருந்து உங்கள் உதவியோடு, எனது பயணத்தைத் தொடருவதற்கு தீர்மானித்திருக்கிறேன்.
25 កិន្តុ សាម្ប្រតំ បវិត្រលោកានាំ សេវនាយ យិរូឝាលម្នគរំ វ្រជាមិ។
ஆனால் இப்பொழுது எருசலேமில் இருக்கிற பரிசுத்தவான்களுக்கு பணிசெய்வதற்காக நான் அங்கு போகின்றேன்.
26 យតោ យិរូឝាលមស្ថបវិត្រលោកានាំ មធ្យេ យេ ទរិទ្រា អត៌្ហវិឝ្រាណនេន តានុបកត៌្តុំ មាកិទនិយាទេឝីយា អាខាយាទេឝីយាឝ្ច លោកា ឰច្ឆន៑។
மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள திருச்சபைகள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களிடையே ஏழைகளாய் இருக்கிறவர்களுக்கு உதவிசெய்ய முன்வந்திருக்கிறார்கள்.
27 ឯឞា តេឞាំ សទិច្ឆា យតស្តេ តេឞាម៑ ឫណិនះ សន្តិ យតោ ហេតោ រ្ភិន្នជាតីយា យេឞាំ បរមាត៌្ហស្យាំឝិនោ ជាតា ឰហិកវិឞយេ តេឞាមុបការស្តៃះ កត៌្តវ្យះ។
அவர்கள் அதைச் செய்ய விருப்பம் கொண்டிருக்கிறார்கள்; உண்மையில் அப்படிச் செய்வதற்கு அவர்கள் கடமைப்பட்டும் இருக்கிறார்கள். ஏனெனில் யூதரல்லாத மக்கள் யூதர்களுடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களில் பங்கு பெற்றிருப்பதினால், இவர்கள் தங்கள் உலகப் பொருட்களை யூதர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
28 អតោ មយា តត៑ កម៌្ម សាធយិត្វា តស្មិន៑ ផលេ តេភ្យះ សមប៌ិតេ យុឞ្មន្មធ្យេន ស្បានិយាទេឝោ គមិឞ្យតេ។
எனவே நான் இந்தப் பணியை முடித்துக் கொண்டபின்பு, அவர்கள் இந்தப் பண உதவியைப் பெற்றுக்கொண்டார்கள் என்பதையும் உறுதிப்படுத்தியபின், ஸ்பெயினுக்குப் போகும் வழியில் உங்களையும் வந்து சந்திப்பேன்.
29 យុឞ្មត្សមីបេ មមាគមនសមយេ ខ្រីឞ្ដស្យ សុសំវាទស្យ បូណ៌វរេណ សម្ពលិតះ សន៑ អហម៑ អាគមិឞ្យាមិ ឥតិ មយា ជ្ញាយតេ។
நான் உங்களிடம் வரும்போது, கிறிஸ்துவினுடைய முழுநிறைவான ஆசீர்வாதத்துடன் வருவேன் என்பது நிச்சயம்.
30 ហេ ភ្រាត្ឫគណ ប្រភោ រ្យីឝុខ្រីឞ្ដស្យ នាម្នា បវិត្រស្យាត្មានះ ប្រេម្នា ច វិនយេៜហំ
பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், பரிசுத்த ஆவியானவருடைய அன்பினாலும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறதாவது: “எனக்காக இறைவனிடத்தில் மன்றாடி, எனது போராட்டத்தில் என்னுடன் இணைந்துகொள்ளுங்கள்.
31 យិហូទាទេឝស្ថានាម៑ អវិឝ្វាសិលោកានាំ ករេភ្យោ យទហំ រក្ឞាំ លភេយ មទីយៃតេន សេវនកម៌្មណា ច យទ៑ យិរូឝាលមស្ថាះ បវិត្រលោកាស្តុឞ្យេយុះ,
யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளிடமிருந்து நான் தப்புவிக்கப்பட வேண்டும் என்றும், எருசலேமில் நான் செய்கின்ற பணி அங்கிருக்கிற பரிசுத்தவான்களுக்கு ஏற்புடையதாய் இருக்கவேண்டும் என்றும் மன்றாடுங்கள்.
32 តទត៌្ហំ យូយំ មត្ក្ឫត ឦឝ្វរាយ ប្រាត៌្ហយមាណា យតធ្វំ តេនាហម៑ ឦឝ្វរេច្ឆយា សានន្ទំ យុឞ្មត្សមីបំ គត្វា យុឞ្មាភិះ សហិតះ ប្រាណាន៑ អាប្យាយិតុំ បារយិឞ្យាមិ។
அப்பொழுது இறைவனுடைய திட்டத்தின்படியே நான் மகிழ்ச்சியுடன் உங்களிடம் வந்து, உங்களுடன் சேர்ந்து உற்சாகமடைவேன்.
33 ឝាន្តិទាយក ឦឝ្វរោ យុឞ្មាកំ សវ៌្វេឞាំ សង្គី ភូយាត៑។ ឥតិ។
சமாதானத்தையும் அமைதியையும் கொடுக்கும் இறைவன் உங்கள் அனைவருடனும் இருப்பாராக” ஆமென்.