< រោមិណះ 11 >
1 ឦឝ្វរេណ ស្វីកីយលោកា អបសារិតា អហំ កិម៑ ឦទ្ឫឝំ វាក្យំ ព្រវីមិ? តន្ន ភវតុ យតោៜហមបិ ពិន្យាមីនគោត្រីយ ឥព្រាហីមវំឝីយ ឥស្រាយេលីយលោកោៜស្មិ។
௧இப்படியிருக்க, தேவன் தம்முடைய மக்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் வம்சத்திலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.
2 ឦឝ្វរេណ បូវ៌្វំ យេ ប្រទ្ឫឞ្ដាស្តេ ស្វកីយលោកា អបសារិតា ឥតិ នហិ។ អបរម៑ ឯលិយោបាខ្យានេ ឝាស្ត្រេ យល្លិខិតម៑ អាស្តេ តទ៑ យូយំ កិំ ន ជានីថ?
௨தேவன், தாம் முன்குறித்துக்கொண்ட தம்முடைய மக்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை தெரியாமல் இருக்கிறீர்களா? அவன் தேவனைப் பார்த்து:
3 ហេ បរមេឝ្វរ លោកាស្ត្វទីយាះ សវ៌្វា យជ្ញវេទីរភញ្ជន៑ តថា តវ ភវិឞ្យទ្វាទិនះ សវ៌្វាន៑ អឃ្នន៑ កេវល ឯកោៜហម៑ អវឝិឞ្ដ អាសេ តេ មមាបិ ប្រាណាន៑ នាឝយិតុំ ចេឞ្ដនតេ, ឯតាំ កថាម៑ ឥស្រាយេលីយលោកានាំ វិរុទ្ធម៑ ឯលិយ ឦឝ្វរាយ និវេទយាមាស។
௩கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மட்டும் மீதியாக இருக்கிறேன், என் உயிரையும் வாங்கத் தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு எதிராக விண்ணப்பம் செய்தபோது,
4 តតស្តំ ប្រតីឝ្វរស្យោត្តរំ កិំ ជាតំ? ពាល្នាម្នោ ទេវស្យ សាក្ឞាត៑ យៃ រ្ជានូនិ ន បាតិតានិ តាទ្ឫឝាះ សប្ត សហស្រាណិ លោកា អវឝេឞិតា មយា។
௪அவனுக்கு உண்டான தேவனுடைய பதில் என்ன? பாகாலுக்கு முன்பாக முழங்கால்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே.
5 តទ្វទ៑ ឯតស្មិន៑ វត៌្តមានកាលេៜបិ អនុគ្រហេណាភិរុចិតាស្តេឞាម៑ អវឝិឞ្ដាះ កតិបយា លោកាះ សន្តិ។
௫அதுபோல இந்தக்காலத்திலும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாக இருக்கிறது.
6 អតឯវ តទ៑ យទ្យនុគ្រហេណ ភវតិ តហ៌ិ ក្រិយយា ន ភវតិ នោ ចេទ៑ អនុគ្រហោៜននុគ្រហ ឯវ, យទិ វា ក្រិយយា ភវតិ តហ៌្យនុគ្រហេណ ន ភវតិ នោ ចេត៑ ក្រិយា ក្រិយៃវ ន ភវតិ។
௬அது கிருபையினாலே உண்டாயிருந்தால் செயல்களினாலே உண்டாயிருக்காது; அப்படியில்லை என்றால், கிருபையானது கிருபை இல்லையே. அன்றியும் அது செயல்களினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாக இருக்காது; அப்படியில்லை என்றால் செய்கையானது செய்கை இல்லையே.
7 តហ៌ិ កិំ? ឥស្រាយេលីយលោកា យទ៑ អម្ឫគយន្ត តន្ន ប្រាបុះ។ កិន្ត្វភិរុចិតលោកាស្តត៑ ប្រាបុស្តទន្យេ សវ៌្វ អន្ធីភូតាះ។
௭அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமல் இருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றைய நாள்வரை கடினப்பட்டிருக்கிறார்கள்.
8 យថា លិខិតម៑ អាស្តេ, ឃោរនិទ្រាលុតាភាវំ ទ្ឫឞ្ដិហីនេ ច លោចនេ។ កណ៌ៅ ឝ្រុតិវិហីនៅ ច ប្រទទៅ តេភ្យ ឦឝ្វរះ៕
௮தூக்கத்தின் ஆவியையும், பார்க்காமல் இருக்கிற கண்களையும், கேட்காமல் இருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியானது.
9 ឯតេស្មិន៑ ទាយូទបិ លិខិតវាន៑ យថា, អតោ ភុក្ត្យាសនំ តេឞាម៑ ឧន្មាថវទ៑ ភវិឞ្យតិ។ វា វំឝយន្ត្រវទ៑ ពាធា ទណ្ឌវទ៑ វា ភវិឞ្យតិ៕
௯அன்றியும், “அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும், கண்ணியும், இடறுதற்கான கல்லும், பதிலுக்குப்பதில் கொடுப்பதுமாக இருக்கட்டும்;
10 ភវិឞ្យន្តិ តថាន្ធាស្តេ នេត្រៃះ បឝ្យន្តិ នោ យថា។ វេបថុះ កដិទេឝស្យ តេឞាំ និត្យំ ភវិឞ្យតិ៕
௧0பார்க்காதபடிக்கு அவர்களுடைய கண்கள் இருள் அடையட்டும்; அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும்” என்று தாவீதும் சொல்லியிருக்கிறான்.
11 បតនាត៌្ហំ តេ ស្ខលិតវន្ត ឥតិ វាចំ កិមហំ វទាមិ? តន្ន ភវតុ កិន្តុ តាន៑ ឧទ្យោគិនះ កត៌្តុំ តេឞាំ បតនាទ៑ ឥតរទេឝីយលោកៃះ បរិត្រាណំ ប្រាប្តំ។
௧௧இப்படியிருக்க, விழுந்துபோவதற்காகவா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படி இல்லையே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்புவதற்காக அவர்களுடைய தவறுதலினாலே யூதரல்லாத மக்களுக்கு இரட்சிப்பு கிடைத்தது.
12 តេឞាំ បតនំ យទិ ជគតោ លោកានាំ លាភជនកម៑ អភវត៑ តេឞាំ ហ្រាសោៜបិ យទិ ភិន្នទេឝិនាំ លាភជនកោៜភវត៑ តហ៌ិ តេឞាំ វ្ឫទ្ធិះ កតិ លាភជនិកា ភវិឞ្យតិ?
௧௨அவர்களுடைய தவறு உலகத்திற்கு செல்வமும், அவர்களுடைய குறைவு யூதரல்லாத மக்களுக்கு செல்வமாகவும் இருக்க அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாக அப்படியிருக்கும்.
13 អតោ ហេ អន្យទេឝិនោ យុឞ្មាន៑ សម្ពោធ្យ កថយាមិ និជានាំ ជ្ញាតិពន្ធូនាំ មនះសូទ្យោគំ ជនយន៑ តេឞាំ មធ្យេ កិយតាំ លោកានាំ យថា បរិត្រាណំ សាធយាមិ
௧௩யூதரல்லாத மக்களாகிய உங்களோடு பேசுகிறேன்; யூதரல்லாத மக்களுக்கு நான் அப்போஸ்தலனாக இருக்கிறதினாலே, என் இனத்தார்களுக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று,
14 តន្និមិត្តម៑ អន្យទេឝិនាំ និកដេ ប្រេរិតះ សន៑ អហំ ស្វបទស្យ មហិមានំ ប្រកាឝយាមិ។
௧௪என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்.
15 តេឞាំ និគ្រហេណ យទីឝ្វរេណ សហ ជគតោ ជនានាំ មេលនំ ជាតំ តហ៌ិ តេឞាម៑ អនុគ្ឫហីតត្វំ ម្ឫតទេហេ យថា ជីវនលាភស្តទ្វត៑ កិំ ន ភវិឞ្យតិ?
௧௫அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாக இருக்க, அவர்களை அங்கீகரித்துக்கொள்ளுதல் எப்படி இருக்கும்? மரித்தோருக்கு ஜீவன் உண்டானதுபோல இருக்கும் அல்லவோ?
16 អបរំ ប្រថមជាតំ ផលំ យទិ បវិត្រំ ភវតិ តហ៌ិ សវ៌្វមេវ ផលំ បវិត្រំ ភវិឞ្យតិ; តថា មូលំ យទិ បវិត្រំ ភវតិ តហ៌ិ ឝាខា អបិ តថៃវ ភវិឞ្យន្តិ។
௧௬மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாக இருந்தால், பிசைந்த மாவு முழுவதும் பரிசுத்தமாக இருக்கும்; வேரானது பரிசுத்தமாக இருந்தால், கிளைகளும் பரிசுத்தமாக இருக்கும்.
17 កិយតីនាំ ឝាខានាំ ឆេទនេ ក្ឫតេ ត្វំ វន្យជិតវ្ឫក្ឞស្យ ឝាខា ភូត្វា យទិ តច្ឆាខានាំ ស្ថានេ រោបិតា សតិ ជិតវ្ឫក្ឞីយមូលស្យ រសំ ភុំក្ឞេ,
௧௭சில கிளைகள் முறித்துப் போடப்பட்டிருக்க, காட்டு ஒலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும், சாரத்திற்கும் உடன்பங்காளியாக இருந்தால்,
18 តហ៌ិ តាសាំ ភិន្នឝាខានាំ វិរុទ្ធំ មាំ គវ៌្វីះ; យទិ គវ៌្វសិ តហ៌ិ ត្វំ មូលំ យន្ន ធារយសិ កិន្តុ មូលំ ត្វាំ ធារយតីតិ សំស្មរ។
௧௮நீ அந்தக் கிளைகளுக்கு எதிராகப் பெருமைப்படாதே; பெருமைப்பட்டால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறது என்று நினைத்துக்கொள்.
19 អបរញ្ច យទិ វទសិ មាំ រោបយិតុំ តាះ ឝាខា វិភន្នា អភវន៑;
௧௯நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டது என்று சொல்லுகிறாயே.
20 ភទ្រម៑, អប្រត្យយការណាត៑ តេ វិភិន្នា ជាតាស្តថា វិឝ្វាសការណាត៑ ត្វំ រោបិតោ ជាតស្តស្មាទ៑ អហង្ការម៑ អក្ឫត្វា សសាធ្វសោ ភវ។
௨0நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப் போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாக இல்லாமல் பயந்திரு.
21 យត ឦឝ្វរោ យទិ ស្វាភាវិកីះ ឝាខា ន រក្ឞតិ តហ៌ិ សាវធានោ ភវ ចេត៑ ត្វាមបិ ន ស្ថាបយតិ។
௨௧சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாமல் இருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாக இரு.
22 ឥត្យត្រេឝ្វរស្យ យាទ្ឫឝី ក្ឫបា តាទ្ឫឝំ ភយានកត្វមបិ ត្វយា ទ្ឫឝ្យតាំ; យេ បតិតាស្តាន៑ ប្រតិ តស្យ ភយានកត្វំ ទ្ឫឝ្យតាំ, ត្វញ្ច យទិ តត្ក្ឫបាឝ្រិតស្តិឞ្ឋសិ តហ៌ិ ត្វាំ ប្រតិ ក្ឫបា ទ្រក្ឞ្យតេ; នោ ចេត៑ ត្វមបិ តទ្វត៑ ឆិន្នោ ភវិឞ្យសិ។
௨௨எனவே, தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடம் கண்டிப்பையும், உன்னிடத்தில் தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருந்தால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைக்காவிட்டால் நீயும் வெட்டப்பட்டுப் போவாய்.
23 អបរញ្ច តេ យទ្យប្រត្យយេ ន តិឞ្ឋន្តិ តហ៌ិ បុនរបិ រោបយិឞ្យន្តេ យស្មាត៑ តាន៑ បុនរបិ រោបយិតុម៑ ឥឝ្វរស្យ ឝក្តិរាស្តេ។
௨௩அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மீண்டும் ஒட்டவைக்கிறதற்கு தேவன் வல்லவராக இருக்கிறாரே.
24 វន្យជិតវ្ឫក្ឞស្យ ឝាខា សន៑ ត្វំ យទិ តតឝ្ឆិន្នោ រីតិវ្យត្យយេនោត្តមជិតវ្ឫក្ឞេ រោបិតោៜភវស្តហ៌ិ តស្យ វ្ឫក្ឞស្យ ស្វីយា យាះ ឝាខាស្តាះ កិំ បុនះ ស្វវ្ឫក្ឞេ សំលគិតុំ ន ឝក្នុវន្តិ?
௨௪சுபாவத்தின்படி காட்டு ஒலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு எதிராக நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்களுடைய சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?
25 ហេ ភ្រាតរោ យុឞ្មាកម៑ អាត្មាភិមានោ យន្ន ជាយតេ តទត៌្ហំ មមេទ្ឫឝី វាញ្ឆា ភវតិ យូយំ ឯតន្និគូឍតត្ត្វម៑ អជានន្តោ យន្ន តិឞ្ឋថ; វស្តុតោ យាវត្កាលំ សម្បូណ៌រូបេណ ភិន្នទេឝិនាំ សំគ្រហោ ន ភវិឞ្យតិ តាវត្កាលម៑ អំឝត្វេន ឥស្រាយេលីយលោកានាម៑ អន្ធតា ស្ថាស្យតិ;
௨௫மேலும், சகோதரர்களே, நீங்கள் உங்களையே புத்திமான்கள் என்று நினைக்காதபடி ஒரு இரகசியத்தை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று இருக்கிறேன்; அது என்னவென்றால், யூதரல்லாத மக்களுடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பகுதி மக்களுக்கு கடினமான மனது உண்டாயிருக்கும்.
26 បឝ្ចាត៑ តេ សវ៌្វេ បរិត្រាស្យន្តេ; ឯតាទ្ឫឝំ លិខិតមប្យាស្តេ, អាគមិឞ្យតិ សីយោនាទ៑ ឯកោ យស្ត្រាណទាយកះ។ អធម៌្មំ យាកុពោ វំឝាត៑ ស តុ ទូរីករិឞ្យតិ។
௨௬இப்படியே இஸ்ரவேல் மக்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள். “மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு நீக்குவார் என்றும்;
27 តថា ទូរីករិឞ្យាមិ តេឞាំ បាបាន្យហំ យទា។ តទា តៃរេវ សាទ៌្ធំ មេ និយមោៜយំ ភវិឞ្យតិ។
௨௭நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கை” என்றும் எழுதியிருக்கிறது.
28 សុសំវាទាត៑ តេ យុឞ្មាកំ វិបក្ឞា អភវន៑ កិន្ត្វភិរុចិតត្វាត៑ តេ បិត្ឫលោកានាំ ក្ឫតេ ប្រិយបាត្រាណិ ភវន្តិ។
௨௮நற்செய்தியைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைவர்களாக இருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக்குறித்து அவர்கள் முற்பிதாக்களினிமித்தம் நேசிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
29 យត ឦឝ្វរស្យ ទានាទ៑ អាហ្វានាញ្ច បឝ្ចាត្តាបោ ន ភវតិ។
௨௯தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.
30 អតឯវ បូវ៌្វម៑ ឦឝ្វរេៜវិឝ្វាសិនះ សន្តោៜបិ យូយំ យទ្វត៑ សម្ប្រតិ តេឞាម៑ អវិឝ្វាសការណាទ៑ ឦឝ្វរស្យ ក្ឫបាបាត្រាណិ ជាតាស្តទ្វទ្
௩0எனவே, நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம் பெற்றிருக்கிறதுபோல,
31 ឥទានីំ តេៜវិឝ្វាសិនះ សន្តិ កិន្តុ យុឞ្មាភិ រ្លព្ធក្ឫបាការណាត៑ តៃរបិ ក្ឫបា លប្ស្យតេ។
௩௧அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமல் இருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம்பெறுவார்கள்.
32 ឦឝ្វរះ សវ៌្វាន៑ ប្រតិ ក្ឫបាំ ប្រកាឝយិតុំ សវ៌្វាន៑ អវិឝ្វាសិត្វេន គណយតិ។ (eleēsē )
௩௨எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். (eleēsē )
33 អហោ ឦឝ្វរស្យ ជ្ញានពុទ្ធិរូបយោ រ្ធនយោះ កីទ្ឫក៑ ប្រាចុយ៌្យំ។ តស្យ រាជឝាសនស្យ តត្ត្វំ កីទ្ឫគ៑ អប្រាប្យំ។ តស្យ មាគ៌ាឝ្ច កីទ្ឫគ៑ អនុបលក្ឞ្យាះ។
௩௩ஆ! தேவனுடைய செல்வம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாக இருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளந்துபார்க்க முடியாதவைகள், அவருடைய வழிகள் ஆராய்ந்துபார்க்க முடியாதவைகள்!
34 បរមេឝ្វរស្យ សង្កល្បំ កោ ជ្ញាតវាន៑? តស្យ មន្ត្រី វា កោៜភវត៑?
௩௪“கர்த்தருடைய சிந்தையைத் தெரிந்துகொண்டவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாக இருந்தவன் யார்?
35 កោ វា តស្យោបការី ភ្ឫត្វា តត្ក្ឫតេ តេន ប្រត្យុបកត៌្តវ្យះ?
௩௫தனக்குத் திரும்பக்கிடைக்கும் என்று முதலில் அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?”
36 យតោ វស្តុមាត្រមេវ តស្មាត៑ តេន តស្មៃ ចាភវត៑ តទីយោ មហិមា សវ៌្វទា ប្រកាឝិតោ ភវតុ។ ឥតិ។ (aiōn )
௩௬எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )