< ប្រកាឝិតំ 5 >

1 អនន្តរំ តស្យ សិហាសនោបវិឞ្ដជនស្យ ទក្ឞិណស្តេ ៜន្ត រ្ពហិឝ្ច លិខិតំ បត្រមេកំ មយា ទ្ឫឞ្ដំ តត៑ សប្តមុទ្រាភិរង្កិតំ។
பின்னும், உள்ளேயும் வெளியேயும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரை போடப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கையிலே பார்த்தேன்.
2 តត្បឝ្ចាទ៑ ឯកោ ពលវាន៑ ទូតោ ទ្ឫឞ្ដះ ស ឧច្ចៃះ ស្វរេណ វាចមិមាំ ឃោឞយតិ កះ បត្រមេតទ៑ វិវរីតុំ តម្មុទ្រា មោចយិតុញ្ចាហ៌តិ?
புத்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதியானவர் யார்? என்று அதிக சத்தமாகக் கேட்கிற பலமுள்ள ஒரு தூதனையும் பார்த்தேன்.
3 កិន្តុ ស្វគ៌មត៌្ត្យបាតាលេឞុ តត៑ បត្រំ វិវរីតុំ និរីក្ឞិតុញ្ច កស្យាបិ សាមត៌្ហ្យំ នាភវត៑។
வானத்திலோ, பூமியிலோ, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புத்தகத்தைத் திறக்கவும், அதைப் படிக்கவும் முடியாமல் இருந்தது.
4 អតោ យស្តត៑ បត្រំ វិវរីតុំ និរីក្ឞិតុញ្ចាហ៌តិ តាទ្ឫឝជនស្យាភាវាទ៑ អហំ ពហុ រោទិតវាន៑។
ஒருவனும் அந்தப் புத்தகத்தைத் திறக்கவும் படிக்கவும் தகுதியானவனாக இல்லாததினால் நான் மிகவும் அழுதேன்.
5 កិន្តុ តេឞាំ ប្រាចីនានាម៑ ឯកោ ជនោ មាមវទត៑ មា រោទីះ បឝ្យ យោ យិហូទាវំឝីយះ សិំហោ ទាយូទោ មូលស្វរូបឝ្ចាស្តិ ស បត្រស្យ តស្យ សប្តមុទ្រាណាញ្ច មោចនាយ ប្រមូតវាន៑។
அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்தின் சிங்கமும், தாவீதின் வேருமானவர் புத்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
6 អបរំ សិំហាសនស្យ ចតុណ៌ាំ ប្រាណិនាំ ប្រាចីនវគ៌ស្យ ច មធ្យ ឯកោ មេឞឝាវកោ មយា ទ្ឫឞ្ដះ ស ឆេទិត ឥវ តស្យ សប្តឝ្ឫង្គាណិ សប្តលោចនានិ ច សន្តិ តានិ ក្ឫត្ស្នាំ ប្ឫថិវីំ ប្រេឞិតា ឦឝ្វរស្យ សប្តាត្មានះ។
அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட நிலையில் இருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் நடுவிலே நிற்பதைக் கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாக இருந்தது; அந்தக் கண்கள் பூமியெல்லாம் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளே.
7 ស ឧបាគត្យ តស្យ សិំហាសនោបវិឞ្ដជនស្យ ទក្ឞិណករាត៑ តត៑ បត្រំ គ្ឫហីតវាន៑។
அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கரத்திலிருந்து அந்தப் புத்தகத்தை வாங்கினார்.
8 បត្រេ គ្ឫហីតេ ចត្វារះ ប្រាណិនឝ្ចតុវ៌ិំំឝតិប្រាចីនាឝ្ច តស្យ មេឞឝាវកស្យាន្តិកេ ប្រណិបតន្តិ តេឞាម៑ ឯកៃកស្យ ករយោ រ្វីណាំ សុគន្ធិទ្រវ្យៃះ បរិបូណ៌ំ ស្វណ៌មយបាត្រញ្ច តិឞ្ឋតិ តានិ បវិត្រលោកានាំ ប្រាត៌្ហនាស្វរូបាណិ។
அந்தப் புத்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்களுடைய சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக முகங்குப்புறவிழுந்து:
9 អបរំ តេ នូតនមេកំ គីតមគាយន៑, យថា, គ្រហីតុំ បត្រិកាំ តស្យ មុទ្រា មោចយិតុំ តថា។ ត្វមេវាហ៌សិ យស្មាត៑ ត្វំ ពលិវត៑ ឆេទនំ គតះ។ សវ៌្វាភ្យោ ជាតិភាឞាភ្យះ សវ៌្វស្មាទ៑ វំឝទេឝតះ។ ឦឝ្វរស្យ ក្ឫតេ ៜស្មាន៑ ត្វំ ស្វីយរក្តេន ក្រីតវាន៑។
“தேவரீர் புத்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதி உள்ளவராக இருக்கிறீர்; ஏனென்றால், நீர் அடிக்கப்பட்டு, எல்லாக் கோத்திரங்களிலும், மொழிகளிலும், மக்களிலும், தேசங்களிலும் இருந்து எங்களை தேவனுக்காக உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
10 អស្មទីឝ្វរបក្ឞេ ៜស្មាន៑ ន្ឫបតីន៑ យាជកានបិ។ ក្ឫតវាំស្តេន រាជត្វំ ករិឞ្យាមោ មហីតលេ៕
௧0எங்களுடைய தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம்” என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
11 អបរំ និរីក្ឞមាណេន មយា សិំហាសនស្យ ប្រាណិចតុឞ្ដយស្យ ប្រាចីនវគ៌ស្យ ច បរិតោ ពហូនាំ ទូតានាំ រវះ ឝ្រុតះ, តេឞាំ សំខ្យា អយុតាយុតានិ សហស្រសហស្ត្រាណិ ច។
௧௧பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சுற்றியிருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய எண்ணிக்கை கோடானகோடியாக இருந்தது.
12 តៃរុច្ចៃរិទម៑ ឧក្តំ, បរាក្រមំ ធនំ ជ្ញានំ ឝក្តិំ គៅរវមាទរំ។ ប្រឝំសាញ្ចាហ៌តិ ប្រាប្តុំ ឆេទិតោ មេឞឝាវកះ៕
௧௨அவர்களும் அதிக சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவராக இருக்கிறார் என்று சொன்னார்கள்.
13 អបរំ ស្វគ៌មត៌្ត្យបាតាលសាគរេឞុ យានិ វិទ្យន្តេ តេឞាំ សវ៌្វេឞាំ ស្ឫឞ្ដវស្តូនាំ វាគិយំ មយា ឝ្រុតា, ប្រឝំសាំ គៅរវំ ឝៅយ៌្យម៑ អាធិបត្យំ សនាតនំ។ សិំហសនោបវិឞ្ដឝ្ច មេឞវត្សឝ្ច គច្ឆតាំ។ (aiōn g165)
௧௩அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன். (aiōn g165)
14 អបរំ តេ ចត្វារះ ប្រាណិនះ កថិតវន្តស្តថាស្តុ, តតឝ្ចតុវ៌ិំឝតិប្រាចីនា អបិ ប្រណិបត្យ តម៑ អនន្តកាលជីវិនំ ប្រាណមន៑។
௧௪அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின. இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புறவிழுந்து எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.

< ប្រកាឝិតំ 5 >