< យោហនះ 7 >

1 តតះ បរំ យិហូទីយលោកាស្តំ ហន្តុំ សមៃហន្ត តស្មាទ៑ យីឝុ រ្យិហូទាប្រទេឝេ បយ៌្យដិតុំ នេច្ឆន៑ គាលីល៑ ប្រទេឝេ បយ៌្យដិតុំ ប្រារភត។
இவைகளுக்குப் பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினதால், அவர் யூதேயாவிலே வசிப்பதற்கு விருப்பம் இல்லாமல் கலிலேயாவிலே வசித்து வந்தார்.
2 កិន្តុ តស្មិន៑ សមយេ យិហូទីយានាំ ទូឞ្យវាសនាមោត្សវ ឧបស្ថិតេ
யூதர்களுடைய கூடாரப்பண்டிகை நெருங்கியிருந்தது.
3 តស្យ ភ្រាតរស្តម៑ អវទន៑ យានិ កម៌្មាណិ ត្វយា ក្រិយន្តេ តានិ យថា តវ ឝិឞ្យាះ បឝ្យន្តិ តទត៌្ហំ ត្វមិតះ ស្ថានាទ៑ យិហូទីយទេឝំ វ្រជ។
அப்பொழுது அவருடைய சகோதரர்கள் அவரைப் பார்த்து: நீர் செய்கிற செயல்களை உம்முடைய சீடர்களும் பார்க்கும்படி, இந்த இடத்தைவிட்டு யூதேயாவிற்கு செல்லும்.
4 យះ កឝ្ចិត៑ ស្វយំ ប្រចិកាឝិឞតិ ស កទាបិ គុប្តំ កម៌្ម ន ករោតិ យទីទ្ឫឝំ កម៌្ម ករោឞិ តហ៌ិ ជគតិ និជំ បរិចាយយ។
பிரபலமாக இருக்கவிரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்வதால் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.
5 យតស្តស្យ ភ្រាតរោបិ តំ ន វិឝ្វសន្តិ។
அவருடைய சகோதரர்களும் அவரை விசுவாசிக்காததினால் இப்படிச் சொன்னார்கள்.
6 តទា យីឝុស្តាន៑ អវោចត៑ មម សមយ ឥទានីំ នោបតិឞ្ឋតិ កិន្តុ យុឞ្មាកំ សមយះ សតតម៑ ឧបតិឞ្ឋតិ។
இயேசு அவர்களைப் பார்த்து: என் நேரம் இன்னும் வரவில்லை, உங்களுடைய நேரமோ எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கிறது.
7 ជគតោ លោកា យុឞ្មាន៑ ឫតីយិតុំ ន ឝក្រុវន្តិ កិន្តុ មាមេវ ឫតីយន្តេ យតស្តេឞាំ កម៌ាណិ ទុឞ្ដានិ តត្រ សាក្ឞ្យមិទម៑ អហំ ទទាមិ។
உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் செயல்கள் பொல்லாதவைகளாக இருக்கிறது என்று நான் சாட்சி கொடுக்கிறதினாலே அது என்னைப் பகைக்கிறது.
8 អតឯវ យូយម៑ ឧត្សវេៜស្មិន៑ យាត នាហម៑ ឥទានីម៑ អស្មិន្នុត្សវេ យាមិ យតោ មម សមយ ឥទានីំ ន សម្បូណ៌ះ។
நீங்கள் இந்த பண்டிகைக்குப் போங்கள்; என் நேரம் இன்னும் வராததினால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார்.
9 ឥតិ វាក្យម៑ ឧក្ត្ត្វា ស គាលីលិ ស្ថិតវាន្
இவைகளை அவர்களிடம் சொல்லி, கலிலேயாவிலே தங்கிவிட்டார்.
10 កិន្តុ តស្យ ភ្រាត្ឫឞុ តត្រ ប្រស្ថិតេឞុ សត្សុ សោៜប្រកដ ឧត្សវម៑ អគច្ឆត៑។
௧0அவருடைய சகோதரர்கள் போனபின்பு, அவர் வெளிப்படையாகப் போகாமல் மறைவாக பண்டிகைக்குப் போனார்.
11 អនន្តរម៑ ឧត្សវម៑ ឧបស្ថិតា យិហូទីយាស្តំ ម្ឫគយិត្វាប្ឫច្ឆន៑ ស កុត្រ?
௧௧பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கே இருக்கிறார் என்றார்கள்.
12 តតោ លោកានាំ មធ្យេ តស្មិន៑ នានាវិធា វិវាទា ភវិតុម៑ អារព្ធវន្តះ។ កេចិទ៑ អវោចន៑ ស ឧត្តមះ បុរុឞះ កេចិទ៑ អវោចន៑ ន តថា វរំ លោកានាំ ភ្រមំ ជនយតិ។
௧௨மக்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டானது. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படி இல்லை, அவன் மக்களை ஏமாற்றுகிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள்.
13 កិន្តុ យិហូទីយានាំ ភយាត៑ កោបិ តស្យ បក្ឞេ ស្បឞ្ដំ នាកថយត៑។
௧௩ஆனாலும் யூதர்களுக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்து வெளிப்படையாக பேசவில்லை.
14 តតះ បរម៑ ឧត្សវស្យ មធ្យសមយេ យីឝុ រ្មន្ទិរំ គត្វា សមុបទិឝតិ ស្ម។
௧௪பண்டிகையின் பாதிநாட்கள் முடிந்தபோது, இயேசு தேவாலயத்திற்குச் சென்று, போதனை செய்தார்.
15 តតោ យិហូទីយា លោកា អាឝ្ចយ៌្យំ ជ្ញាត្វាកថយន៑ ឯឞា មានុឞោ នាធីត្យា កថម៑ ឯតាទ្ឫឝោ វិទ្វានភូត៑?
௧௫அப்பொழுது யூதர்கள்: இவர் படிக்காதவராக இருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.
16 តទា យីឝុះ ប្រត្យវោចទ៑ ឧបទេឝោយំ ន មម កិន្តុ យោ មាំ ប្រេឞិតវាន៑ តស្យ។
௧௬இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என் உபதேசம் என்னுடையதாக இல்லாமல், என்னை அனுப்பினவருடையதாக இருக்கிறது.
17 យោ ជនោ និទេឝំ តស្យ គ្រហីឞ្យតិ មមោបទេឝោ មត្តោ ភវតិ កិម៑ ឦឝ្វរាទ៑ ភវតិ ស គនស្តជ្ជ្ញាតុំ ឝក្ឞ្យតិ។
௧௭அவருடைய விருப்பத்தின்படிசெய்ய மனதுள்ளவன் எவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சொந்தமாக பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
18 យោ ជនះ ស្វតះ កថយតិ ស ស្វីយំ គៅរវម៑ ឦហតេ កិន្តុ យះ ប្រេរយិតុ រ្គៅរវម៑ ឦហតេ ស សត្យវាទី តស្មិន៑ កោប្យធម៌្មោ នាស្តិ។
௧௮சொந்தமாக பேசுகிறவன் தன் சொந்த மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மை உள்ளவனாக இருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
19 មូសា យុឞ្មភ្យំ វ្យវស្ថាគ្រន្ថំ កិំ នាទទាត៑? កិន្តុ យុឞ្មាកំ កោបិ តាំ វ្យវស្ថាំ ន សមាចរតិ។ មាំ ហន្តុំ កុតោ យតធ្វេ?
௧௯மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார்.
20 តទា លោកា អវទន៑ ត្វំ ភូតគ្រស្តស្ត្វាំ ហន្តុំ កោ យតតេ?
௨0மக்கள் அவருக்கு மறுமொழியாக: நீ பிசாசு பிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.
21 តតោ យីឝុរវោចទ៑ ឯកំ កម៌្ម មយាការិ តស្មាទ៑ យូយំ សវ៌្វ មហាឝ្ចយ៌្យំ មន្យធ្វេ។
௨௧இயேசு அவர்களைப் பார்த்து: ஒரே செயலை செய்தேன், அதைக்குறித்து எல்லோரும் ஆச்சரியப்படுகிறீர்கள்.
22 មូសា យុឞ្មភ្យំ ត្វក្ឆេទវិធិំ ប្រទទៅ ស មូសាតោ ន ជាតះ កិន្តុ បិត្ឫបុរុឞេភ្យោ ជាតះ តេន វិឝ្រាមវារេៜបិ មានុឞាណាំ ត្វក្ឆេទំ កុរុថ។
௨௨விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், முன்னோர்களால் உண்டானது; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனிதனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள்.
23 អតឯវ វិឝ្រាមវារេ មនុឞ្យាណាំ ត្វក្ឆេទេ ក្ឫតេ យទិ មូសាវ្យវស្ថាមង្គនំ ន ភវតិ តហ៌ិ មយា វិឝ្រាមវារេ មានុឞះ សម្បូណ៌រូបេណ ស្វស្ថោៜការិ តត្ការណាទ៑ យូយំ កិំ មហ្យំ កុប្យថ?
௨௩மோசேயின் நியாயப்பிரமாணம் மீறாமல் இருக்கும்படி ஓய்வுநாளில் மனிதன் விருத்தசேதனம் பெறலாம் என்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனிதனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா?
24 សបក្ឞបាតំ វិចារមក្ឫត្វា ន្យាយ្យំ វិចារំ កុរុត។
௨௪தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல், நீதியின்படி தீர்ப்பு செய்யுங்கள் என்றார்.
25 តទា យិរូឝាលម៑ និវាសិនះ កតិបយជនា អកថយន៑ ឥមេ យំ ហន្តុំ ចេឞ្ដន្តេ ស ឯវាយំ កិំ ន?
௨௫அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனைத்தானே கொலைசெய்யத் தேடுகிறார்கள்?
26 កិន្តុ បឝ្យត និព៌្ហយះ សន៑ កថាំ កថយតិ តថាបិ កិមបិ អ វទន្ត្យេតេ អយមេវាភិឞិក្ត្តោ ភវតីតិ និឝ្ចិតំ កិមធិបតយោ ជានន្តិ?
௨௬இதோ, இவன் வெளிப்படையாக பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, உண்மையாக இவன் கிறிஸ்து தான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ?
27 មនុជោយំ កស្មាទាគមទ៑ ឥតិ វយំ ជានោមះ កិន្ត្វភិឞិក្ត្ត អាគតេ ស កស្មាទាគតវាន៑ ឥតិ កោបិ ជ្ញាតុំ ន ឝក្ឞ្យតិ។
௨௭இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவன் என்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவர் என்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள்.
28 តទា យីឝុ រ្មធ្យេមន្ទិរម៑ ឧបទិឝន៑ ឧច្ចៃះការម៑ ឧក្ត្តវាន៑ យូយំ កិំ មាំ ជានីថ? កស្មាច្ចាគតោស្មិ តទបិ កិំ ជានីថ? នាហំ ស្វត អាគតោស្មិ កិន្តុ យះ សត្យវាទី សឯវ មាំ ប្រេឞិតវាន៑ យូយំ តំ ន ជានីថ។
௨௮அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கும்போது சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும் அறிவீர்கள்; நான் நானாகவே வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியம் உள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.
29 តមហំ ជានេ តេនាហំ ប្រេរិត អគតោស្មិ។
௨௯நான் அவரால் வந்திருக்கிறதினாலும், அவர் என்னை அனுப்பி இருக்கிறதினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார்.
30 តស្មាទ៑ យិហូទីយាស្តំ ធត៌្តុម៑ ឧទ្យតាស្តថាបិ កោបិ តស្យ គាត្រេ ហស្តំ នាប៌យទ៑ យតោ ហេតោស្តទា តស្យ សមយោ នោបតិឞ្ឋតិ។
௩0அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய நேரம் இன்னும் வராததினால் ஒருவனும் அவரைத் தொடவில்லை.
31 កិន្តុ ពហវោ លោកាស្តស្មិន៑ វិឝ្វស្យ កថិតវាន្តោៜភិឞិក្ត្តបុរុឞ អាគត្យ មានុឞស្យាស្យ ក្រិយាភ្យះ កិម៑ អធិកា អាឝ្ចយ៌្យាះ ក្រិយាះ ករិឞ្យតិ?
௩௧மக்களில் அநேகர் அவரை விசுவாசித்து: கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைவிட அதிகமாகச் செய்வாரோ என்றார்கள்.
32 តតះ បរំ លោកាស្តស្មិន៑ ឥត្ថំ វិវទន្តេ ផិរូឝិនះ ប្រធានយាជកាញ្ចេតិ ឝ្រុតវន្តស្តំ ធ្ឫត្វា នេតុំ បទាតិគណំ ប្រេឞយាមាសុះ។
௩௨மக்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர்கள் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயர்களும் பிரதான ஆசாரியர்களும் காவலர்களை அனுப்பினார்கள்.
33 តតោ យីឝុរវទទ៑ អហម៑ អល្បទិនានិ យុឞ្មាភិះ សាទ៌្ធំ ស្ថិត្វា មត្ប្រេរយិតុះ សមីបំ យាស្យាមិ។
௩௩அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களோடுகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவர் இடத்திற்குப் போகிறேன்.
34 មាំ ម្ឫគយិឞ្យធ្វេ កិន្តូទ្ទេឝំ ន លប្ស្យធ្វេ រត្រ ស្ថាស្យាមិ តត្រ យូយំ គន្តុំ ន ឝក្ឞ្យថ។
௩௪நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவும் கூடாது என்றார்.
35 តទា យិហូទីយាះ បរស្បរំ វក្ត្តុមារេភិរេ អស្យោទ្ទេឝំ ន ប្រាប្ស្យាម ឯតាទ្ឫឝំ កិំ ស្ថានំ យាស្យតិ? ភិន្នទេឝេ វិកីណ៌ានាំ យិហូទីយានាំ សន្និធិម៑ ឯឞ គត្វា តាន៑ ឧបទេក្ឞ្យតិ កិំ?
௩௫அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் பார்க்காதபடிக்கு எங்கே போவார், கிரேக்கர்களுக்குள்ளே சிதறியிருக்கிற நமது மக்களிடம் போய், கிரேக்கர்களுக்கு உபதேசம் செய்வாரோ?
36 នោ ចេត៑ មាំ គវេឞយិឞ្យថ កិន្តូទ្ទេឝំ ន ប្រាប្ស្យថ ឯឞ កោទ្ឫឝំ វាក្យមិទំ វទតិ?
௩௬நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்ன என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
37 អនន្តរម៑ ឧត្សវស្យ ចរមេៜហនិ អត៌្ហាត៑ ប្រធានទិនេ យីឝុរុត្តិឞ្ឋន៑ ឧច្ចៃះការម៑ អាហ្វយន៑ ឧទិតវាន៑ យទិ កឝ្ចិត៑ ត្ឫឞាត៌្តោ ភវតិ តហ៌ិ មមាន្តិកម៑ អាគត្យ បិវតុ។
௩௭பண்டிகையின் கடைசிநாளாகிய முக்கியமான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாக இருந்தால் என்னிடத்தில் வந்து பானம்பண்ணட்டும்.
38 យះ កឝ្ចិន្មយិ វិឝ្វសិតិ ធម៌្មគ្រន្ថស្យ វចនានុសារេណ តស្យាភ្យន្តរតោៜម្ឫតតោយស្យ ស្រោតាំសិ និគ៌មិឞ្យន្តិ។
௩௮வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
39 យេ តស្មិន៑ វិឝ្វសន្តិ ត អាត្មានំ ប្រាប្ស្យន្តីត្យត៌្ហេ ស ឥទំ វាក្យំ វ្យាហ្ឫតវាន៑ ឯតត្កាលំ យាវទ៑ យីឝុ រ្វិភវំ ន ប្រាប្តស្តស្មាត៑ បវិត្រ អាត្មា នាទីយត។
௩௯தம்மை விசுவாசிக்கிறவர்கள் பெற்றுக்கொள்ளப்போகிற ஆவியானவரைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாமல் இருந்ததினால் பரிசுத்த ஆவியானவர் இன்னும் கொடுக்கப்படவில்லை.
40 ឯតាំ វាណីំ ឝ្រុត្វា ពហវោ លោកា អវទន៑ អយមេវ និឝ្ចិតំ ស ភវិឞ្យទ្វាទី។
௪0மக்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: உண்மையாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.
41 កេចិទ៑ អកថយន៑ ឯឞឯវ សោភិឞិក្ត្តះ កិន្តុ កេចិទ៑ អវទន៑ សោភិឞិក្ត្តះ កិំ គាលីល៑ ប្រទេឝេ ជនិឞ្យតេ?
௪௧வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்?
42 សោភិឞិក្ត្តោ ទាយូទោ វំឝេ ទាយូទោ ជន្មស្ថានេ ពៃត្លេហមិ បត្តនេ ជនិឞ្យតេ ធម៌្មគ្រន្ថេ កិមិត្ថំ លិខិតំ នាស្តិ?
௪௨தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.
43 ឥត្ថំ តស្មិន៑ លោកានាំ ភិន្នវាក្យតា ជាតា។
௪௩இவ்விதமாக அவரைக்குறித்து மக்களுக்குள்ளே பிரிவினை உண்டானது.
44 កតិបយលោកាស្តំ ធត៌្តុម៑ ឰច្ឆន៑ តថាបិ តទ្វបុឞិ កោបិ ហស្តំ នាប៌យត៑។
௪௪அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க விருப்பமாக இருந்தார்கள்; ஆனாலும் ஒருவனும் அவரைத் தொடவில்லை.
45 អនន្តរំ បាទាតិគណេ ប្រធានយាជកានាំ ផិរូឝិនាញ្ច សមីបមាគតវតិ តេ តាន៑ អប្ឫច្ឆន៑ កុតោ ហេតោស្តំ នានយត?
௪௫பின்பு அந்தக் காவலர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் பரிசேயர்களிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களைப் பார்த்து: நீங்கள் அவனை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்டார்கள்.
46 តទា បទាតយះ ប្រត្យវទន៑ ស មានវ ឥវ កោបិ កទាបិ នោបាទិឝត៑។
௪௬காவலர்கள் மறுமொழியாக: அந்த மனிதன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருபோதும் பேசினது இல்லை என்றார்கள்.
47 តតះ ផិរូឝិនះ ប្រាវោចន៑ យូយមបិ កិមភ្រាមិឞ្ដ?
௪௭அப்பொழுது பரிசேயர்கள்: நீங்களும் ஏமாற்றப்பட்டீர்களா?
48 អធិបតីនាំ ផិរូឝិនាញ្ច កោបិ កិំ តស្មិន៑ វ្យឝ្វសីត៑?
௪௮அதிகாரிகளிலாவது பரிசேயர்களிலாவது யாரேனும் ஒருவர் அவனை விசுவாசித்ததுண்டா?
49 យេ ឝាស្ត្រំ ន ជានន្តិ ត ឥមេៜធមលោកាឯវ ឝាបគ្រស្តាះ។
௪௯வேதத்தை அறியாதவர்களாகிய இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.
50 តទា និកទីមនាមា តេឞាមេកោ យះ ក្ឞណទាយាំ យីឝោះ សន្និធិម៑ អគាត៑ ស ឧក្ត្តវាន្
௫0இரவிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களில் ஒருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களைப் பார்த்து:
51 តស្យ វាក្យេ ន ឝ្រុតេ កម៌្មណិ ច ន វិទិតេ ៜស្មាកំ វ្យវស្ថា កិំ កញ្ចន មនុជំ ទោឞីករោតិ?
௫௧ஒரு மனிதன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனைத் தண்டனைக்கு உட்படுத்தலாம் என்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான்.
52 តតស្តេ វ្យាហរន៑ ត្វមបិ កិំ គាលីលីយលោកះ? វិវិច្យ បឝ្យ គលីលិ កោបិ ភវិឞ្យទ្វាទី នោត្បទ្យតេ។
௫௨அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவில் இருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறது இல்லை என்பதை ஆராய்ந்து பாரும் என்றார்கள்.
53 តតះ បរំ សវ៌្វេ ស្វំ ស្វំ គ្ឫហំ គតាះ កិន្តុ យីឝុ រ្ជៃតុននាមានំ ឝិលោច្ចយំ គតវាន៑។
௫௩பின்பு அவரவர் தங்கள், தங்கள் வீட்டிற்குப் போனார்கள்.

< យោហនះ 7 >