< ឥព្រិណះ 4 >

1 អបរំ តទ្វិឝ្រាមប្រាប្តេះ ប្រតិជ្ញា យទិ តិឞ្ឋតិ តហ៌្យស្មាកំ កឝ្ចិត៑ ចេត៑ តស្យាះ ផលេន វញ្ចិតោ ភវេត៑ វយម៑ ឯតស្មាទ៑ ពិភីមះ។
ஆகவே, இறைவனுடைய இளைப்பாறுதலுக்குள் செல்வதைக் குறித்த வாக்குத்தத்தம் இன்னும் நமக்கு செல்லுபடியானதாகவே இருக்கிறது. அதனால் உங்களில் ஒருவரும் அதை இழந்துபோகாதபடிக்கு, நாம் எல்லோரும் எச்சரிக்கையாய் இருப்போமாக.
2 យតោ ៜស្មាកំ សមីបេ យទ្វត៑ តទ្វត៑ តេឞាំ សមីបេៜបិ សុសំវាទះ ប្រចារិតោ ៜភវត៑ កិន្តុ តៃះ ឝ្រុតំ វាក្យំ តាន៑ ប្រតិ និឞ្ផលម៑ អភវត៑, យតស្តេ ឝ្រោតារោ វិឝ្វាសេន សាទ៌្ធំ តន្នាមិឝ្រយន៑។
இஸ்ரயேலர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது போலவே, நமக்கும் அறிவிக்கப்பட்டது; ஆனால் அவர்கள் கேட்ட செய்தியோ அவர்களுக்கு எவ்வித பயனையும் அளிக்கவில்லை. ஏனெனில் அதைக் கேட்டவர்களோ, விசுவாசத்தில் பங்குபெறாமல் போனார்கள்.
3 តទ៑ វិឝ្រាមស្ថានំ វិឝ្វាសិភិរស្មាភិះ ប្រវិឝ្យតេ យតស្តេនោក្តំ, "អហំ កោបាត៑ ឝបថំ ក្ឫតវាន៑ ឥមំ, ប្រវេក្ឞ្យតេ ជនៃរេតៃ រ្ន វិឝ្រាមស្ថលំ មម។ " កិន្តុ តស្យ កម៌្មាណិ ជគតះ ស្ឫឞ្ដិកាលាត៑ សមាប្តានិ សន្តិ។
ஆனால் விசுவாசம் உள்ளவர்களாகிய நாமோ, உண்மையாகவே இப்பொழுது அந்த இளைப்பாறுதலுக்குள் நுழைவோம். இறைவன் விசுவாசிக்காதவர்களைக் குறித்து சொன்னதாவது: “அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் ஒருபோதும் பிரவேசிப்பதில்லை என்று, என்னுடைய கோபத்திலே நான் ஆணையிட்டு அறிவித்தேன்.” அப்படியிருந்தும் அவருடைய கிரியைகள், உலகம் படைக்கப்பட்டதிலிருந்தே நிறைவாக்கப்பட்டு இருக்கிறது.
4 យតះ កស្មិំឝ្ចិត៑ ស្ថានេ សប្តមំ ទិនមធិ តេនេទម៑ ឧក្តំ, យថា, "ឦឝ្វរះ សប្តមេ ទិនេ ស្វក្ឫតេភ្យះ សវ៌្វកម៌្មភ្យោ វិឝឝ្រាម។ "
ஏனெனில் ஏழாம்நாளைக் குறித்து ஓரிடத்தில்: “இறைவன் தான் செய்துகொண்டிருந்த வேலையை முடித்து, ஏழாம்நாளில் எல்லா வேலையிலிருந்தும் ஓய்ந்திருந்தார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
5 កិន្ត្វេតស្មិន៑ ស្ថានេ បុនស្តេនោច្យតេ, យថា, "ប្រវេក្ឞ្យតេ ជនៃរេតៃ រ្ន វិឝ្រាមស្ថលំ មម។ "
மேலும் மேற்கூறிய வசனத்தைத் தொடர்ந்து, “அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் ஒருபோதும் பிரவேசிப்பதில்லை” என்றும் இறைவன் சொல்லியிருக்கிறார்.
6 ផលតស្តត៑ ស្ថានំ កៃឝ្ចិត៑ ប្រវេឞ្ដវ្យំ កិន្តុ យេ បុរា សុសំវាទំ ឝ្រុតវន្តស្តៃរវិឝ្វាសាត៑ តន្ន ប្រវិឞ្ដម៑,
முற்காலத்தில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதைக் கேட்டவர்கள் தங்களுடைய கீழ்ப்படியாமையினால் அதற்குள் பிரவேசிக்காதிருந்தார்கள். எனினும் சிலர் இன்னும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள் என்பது நிச்சயம்.
7 ឥតិ ហេតោះ ស បុនរទ្យនាមកំ ទិនំ និរូប្យ ទីគ៌្ហកាលេ គតេៜបិ បូវ៌្វោក្តាំ វាចំ ទាយូទា កថយតិ, យថា, "អទ្យ យូយំ កថាំ តស្យ យទិ សំឝ្រោតុមិច្ឆថ, តហ៌ិ មា កុរុតេទានីំ កឋិនានិ មនាំសិ វះ។ "
ஆகையால் இறைவன், அதற்கென வேறொரு நாளை நியமித்தார். அதையே, “இன்று” எனக் குறிப்பிடுகிறார். அதனால்தான் நீண்டகாலத்திற்குப் பின்பு இறைவன், தாவீதின்மூலம் பேசியபோது, முன்பு கூறப்பட்டபடியே: “இன்று நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்பீர்களானால், நீங்கள் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்” என்றார்.
8 អបរំ យិហោឝូយោ យទិ តាន៑ វ្យឝ្រាមយិឞ្យត៑ តហ៌ិ តតះ បរម៑ អបរស្យ ទិនស្យ វាគ៑ ឦឝ្វរេណ នាកថយិឞ្យត។
யோசுவா அவர்களுக்கு அந்த இளைப்பாறுதலைக் கொடுத்திருந்தால், இறைவன் பிற்காலத்தில் இன்னொரு நாளைக்குறித்து அப்படிச் சொல்லியிருக்கமாட்டார்.
9 អត ឦឝ្វរស្យ ប្រជាភិះ កត៌្តវ្យ ឯកោ វិឝ្រាមស្តិឞ្ឋតិ។
ஆகவே, இறைவனுடைய மக்களுக்கான ஓய்வு இனி வரவேண்டியதாயிருக்கிறது.
10 អបរម៑ ឦឝ្វរោ យទ្វត៑ ស្វក្ឫតកម៌្មភ្យោ វិឝឝ្រាម តទ្វត៑ តស្យ វិឝ្រាមស្ថានំ ប្រវិឞ្ដោ ជនោៜបិ ស្វក្ឫតកម៌្មភ្យោ វិឝ្រាម្យតិ។
ஏனெனில், இறைவனுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் ஒருவன், இறைவன் ஓய்ந்திருந்தது போலவே, தனது வேலையிலிருந்து ஓய்ந்திருக்கிறான்.
11 អតោ វយំ តទ៑ វិឝ្រាមស្ថានំ ប្រវេឞ្ដុំ យតាមហៃ, តទវិឝ្វាសោទាហរណេន កោៜបិ ន បតតុ។
ஆகையால், அந்த இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும்படி, நாம் ஊக்கத்துடன் முயற்சிசெய்வோம். முன்னோர்களுடைய கீழ்ப்படியாமையைப் பின்பற்றி, நாம் ஒருவரும் விழுந்துபோகக் கூடாது.
12 ឦឝ្វរស្យ វាទោៜមរះ ប្រភាវវិឝិឞ្ដឝ្ច សវ៌្វស្មាទ៑ ទ្វិធារខង្គាទបិ តីក្ឞ្ណះ, អបរំ ប្រាណាត្មនោ រ្គ្រន្ថិមជ្ជយោឝ្ច បរិភេទាយ វិច្ឆេទការី មនសឝ្ច សង្កល្បានាម៑ អភិប្រេតានាញ្ច វិចារកះ។
ஏனெனில், இறைவனுடைய வார்த்தை உயிருள்ளதும் செயலாற்றல் உடையதுமாய் இருக்கிறது. அது இருபக்கமும் கூர்மையுள்ள வாளைவிடக் கூர்மையானது. அது ஆத்துமாவையும், ஆவியையும், எலும்பின் மூட்டுக்களையும், மஜ்ஜையையும் பிரிக்கத்தக்கதாய் துளைத்துச் செல்கிறது; அது இருதயத்தின் சிந்தனைகளையும் உள்நோக்கங்களையும் நிதானித்துத் தீர்ப்பிடுகிறது.
13 អបរំ យស្យ សមីបេ ស្វីយា ស្វីយា កថាស្មាភិះ កថយិតវ្យា តស្យាគោចរះ កោៜបិ ប្រាណី នាស្តិ តស្យ ទ្ឫឞ្ដៅ សវ៌្វមេវានាវ្ឫតំ ប្រកាឝិតញ្ចាស្តេ។
படைப்பு எல்லாவற்றிலும் எதுவும் இறைவனின் பார்வையிலிருந்து மறைவாய் இருப்பதில்லை. எல்லாம் அவருடைய கண்களுக்கு முன்பாக மறைக்கப்படாமலும், வெளியரங்கமாக்கப்பட்டும் இருக்கின்றன. அவருக்கே நாம் செய்த எல்லாவற்றிற்கும் கணக்குக் கொடுக்கவேண்டும்.
14 អបរំ យ ឧច្ចតមំ ស្វគ៌ំ ប្រវិឞ្ដ ឯតាទ្ឫឝ ឯកោ វ្យក្តិរត៌្ហត ឦឝ្វរស្យ បុត្រោ យីឝុរស្មាកំ មហាយាជកោៜស្តិ, អតោ ហេតោ រ្វយំ ធម៌្មប្រតិជ្ញាំ ទ្ឫឍម៑ អាលម្ពាមហៃ។
ஆதலால், பரலோகத்திற்குள் சென்றிருக்கிற ஒரு பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறார். அவர் இறைவனுடைய மகனான இயேசுவே; ஆகவே நாம், அவரில் அறிக்கையிடுகிற விசுவாசத்தை உறுதியாய் பற்றிக்கொள்வோமாக.
15 អស្មាកំ យោ មហាយាជកោ ៜស្តិ សោៜស្មាកំ ទុះខៃ រ្ទុះខិតោ ភវិតុម៑ អឝក្តោ នហិ កិន្តុ បាបំ វិនា សវ៌្វវិឞយេ វយមិវ បរីក្ឞិតះ។
ஏனெனில் நமக்கிருக்கிற இந்த பிரதான ஆசாரியர், நம்முடைய பலவீனங்களைக்குறித்து அனுதாபப்பட முடியாதவர் அல்ல. அவரோ நம்மைப்போலவே, எல்லாவிதத்திலும் சோதனைகளின் மூலமாகச் சென்றவர். ஆனால், அவர் பாவம் செய்யவில்லை.
16 អតឯវ ក្ឫបាំ គ្រហីតុំ ប្រយោជនីយោបការាត៌្ហម៑ អនុគ្រហំ ប្រាប្តុញ្ច វយម៑ ឧត្សាហេនានុគ្រហសិំហាសនស្យ សមីបំ យាមះ។
ஆகவே நாம் இரக்கத்தை பெறவும், நமக்கு ஏற்றவேளையில் உதவக்கூடிய கிருபையை நாம் அடையும்படியும் அவருடைய கிருபையின் அரியணையை பயமின்றி துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

< ឥព្រិណះ 4 >