< ប្រេរិតាះ 19 >

1 ករិន្ថនគរ អាបល្លសះ ស្ថិតិកាលេ បៅល ឧត្តរប្រទេឝៃរាគច្ឆន៑ ឥផិឞនគរម៑ ឧបស្ថិតវាន៑។ តត្រ កតិបយឝិឞ្យាន៑ សាក្ឞត៑ ប្រាប្យ តាន៑ អប្ឫច្ឆត៑,
அப்பொல்லோ கொரிந்து பட்டணத்தில் இருந்தபோது பவுல் தரைவழியாகப் பிரயாணம் செய்து, எபேசு பட்டணத்திற்கு வந்தான். அங்கே பவுல் சில சீடர்களைக் கண்டான்.
2 យូយំ វិឝ្វស្យ បវិត្រមាត្មានំ ប្រាប្តា ន វា? តតស្តេ ប្រត្យវទន៑ បវិត្រ អាត្មា ទីយតេ ឥត្យស្មាភិះ ឝ្រុតមបិ នហិ។
அவன் அவர்களிடம், “நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “பரிசுத்த ஆவியானவர் ஒருவர் இருக்கிறார் என்றுகூட நாங்கள் கேள்விப்படவில்லை” என்றார்கள்.
3 តទា សាៜវទត៑ តហ៌ិ យូយំ កេន មជ្ជិតា អភវត? តេៜកថយន៑ យោហនោ មជ្ជនេន។
அப்பொழுது பவுல், “அப்படியானால், நீங்கள் எந்த திருமுழுக்கைப் பெற்றீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “யோவானுடைய திருமுழுக்கு” என்றார்கள்.
4 តទា បៅល ឧក្តវាន៑ ឥតះ បរំ យ ឧបស្ថាស្យតិ តស្មិន៑ អត៌្ហត យីឝុខ្រីឞ្ដេ វិឝ្វសិតវ្យមិត្យុក្ត្វា យោហន៑ មនះបរិវត៌្តនសូចកេន មជ្ជនេន ជលេ លោកាន៑ អមជ្ជយត៑។
எனவே பவுல், “யோவானின் திருமுழுக்கு மனந்திரும்புதலின் திருமுழுக்கே. அவன் மக்களிடம், எனக்குப் பின்வருகிறவரான இயேசுவிலேயே நீங்கள் விசுவாசம் வைக்கவேண்டும் என்று சொன்னான்” என்றான்.
5 តាទ្ឫឝីំ កថាំ ឝ្រុត្វា តេ ប្រភោ រ្យីឝុខ្រីឞ្ដស្យ នាម្នា មជ្ជិតា អភវន៑។
அவர்கள் இதைக் கேட்டு, கர்த்தராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றார்கள்.
6 តតះ បៅលេន តេឞាំ គាត្រេឞុ ករេៜរ្បិតេ តេឞាមុបរិ បវិត្រ អាត្មាវរូឍវាន៑, តស្មាត៑ តេ នានាទេឝីយា ភាឞា ភវិឞ្យត្កថាឝ្ច កថិតវន្តះ។
பின்பு பவுல், அவர்கள்மேல் தனது கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் இறங்கினார். அவர்கள் வேற்று மொழிகளைப் பேசி, இறைவாக்கு உரைத்தார்கள்.
7 តេ ប្រាយេណ ទ្វាទឝជនា អាសន៑។
அங்கே ஏறக்குறைய, பன்னிரண்டு பேர் இருந்தார்கள்.
8 បៅលោ ភជនភវនំ គត្វា ប្រាយេណ មាសត្រយម៑ ឦឝ្វរស្យ រាជ្យស្យ វិចារំ ក្ឫត្វា លោកាន៑ ប្រវត៌្យ សាហសេន កថាមកថយត៑។
பவுல் ஜெப ஆலயத்திற்குள் சென்று துணிவுடன் பேசினான். அங்கே மூன்று மாதங்களாக இறைவனுடைய அரசைக் குறித்து மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் விவாதித்துக் கொண்டிருந்தான்.
9 កិន្តុ កឋិនាន្តះករណត្វាត៑ កិយន្តោ ជនា ន វិឝ្វស្យ សវ៌្វេឞាំ សមក្ឞម៑ ឯតត្បថស្យ និន្ទាំ កត៌្តុំ ប្រវ្ឫត្តាះ, អតះ បៅលស្តេឞាំ សមីបាត៑ ប្រស្ថាយ ឝិឞ្យគណំ ប្ឫថក្ក្ឫត្វា ប្រត្យហំ តុរាន្ននាម្នះ កស្យចិត៑ ជនស្យ បាឋឝាលាយាំ វិចារំ ក្ឫតវាន៑។
ஆனால் அவர்களில் சிலர் பிடிவாதமுள்ளவர்களாகி, விசுவாசிக்க மறுத்தார்கள்; அவர்கள் வெளிப்படையாக கிறிஸ்துவின் வழியைக் குறித்துத் தீமையாய்ப் பேசினார்கள். எனவே பவுல் சீடரைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு அவ்விடத்தை விட்டுப்போய், திறன்னு என்பவனின் கல்விக் கூடத்திலே, ஒவ்வொரு நாளும் கலந்துரையாடல்களை நடத்தினான்.
10 ឥត្ថំ វត្សរទ្វយំ គតំ តស្មាទ៑ អាឝិយាទេឝនិវាសិនះ សវ៌្វេ យិហូទីយា អន្យទេឝីយលោកាឝ្ច ប្រភោ រ្យីឝោះ កថាម៑ អឝ្រៅឞន៑។
இது இரண்டு வருடங்களாக தொடர்ந்து நடைபெற்றது. இதனால், ஆசியா பகுதியில் வாழ்ந்த யூதர்கள், கிரேக்கர் அனைவரும் கர்த்தரின் வார்த்தையைக் கேட்டார்கள்.
11 បៅលេន ច ឦឝ្វរ ឯតាទ្ឫឝាន្យទ្ភុតានិ កម៌្មាណិ ក្ឫតវាន្
இறைவன் பவுலைக் கொண்டு மிகப்பெரிதான அற்புதங்களைச் செய்தார்.
12 យត៑ បរិធេយេ គាត្រមាជ៌នវស្ត្រេ វា តស្យ ទេហាត៑ បីឌិតលោកានាម៑ សមីបម៑ អានីតេ តេ និរាមយា ជាតា អបវិត្រា ភូតាឝ្ច តេភ្យោ ពហិគ៌តវន្តះ។
பவுலின் உடலில் தொடப்பட்ட கைக்குட்டைகளையும், மேலுடைகளையும் கொண்டுபோய் நோயாளிகளின்மேல் போட்டபோது, அவர்களுடைய வியாதிகள் சுகமடைந்தன. தீய ஆவிகள் அவர்களைவிட்டு வெளியேறின.
13 តទា ទេឝាដនការិណះ កិយន្តោ យិហូទីយា ភូតាបសារិណោ ភូតគ្រស្តនោកានាំ សន្និធៅ ប្រភេ រ្យីឝោ រ្នាម ជប្ត្វា វាក្យមិទម៑ អវទន៑, យស្យ កថាំ បៅលះ ប្រចារយតិ តស្យ យីឝោ រ្នាម្នា យុឞ្មាន៑ អាជ្ញាបយាមះ។
பல்வேறு இடங்களுக்குப் போய் அசுத்த ஆவிகளை துரத்தும் சில யூதர்கள், பிசாசு பிடித்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் பெயரை பயன்படுத்த முயன்றார்கள். அவர்கள், “பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின் பெயராலே, வெளியே போகும்படி நான் கட்டளையிடுகிறேன்” என்று சொல்லியே துரத்தினார்கள்.
14 ស្កិវនាម្នោ យិហូទីយានាំ ប្រធានយាជកស្យ សប្តភិះ បុត្តៃស្តថា ក្ឫតេ សតិ
யூத பிரதான ஆசாரியனான ஸ்கேவாவின் ஏழு மகன்களே, இவ்வாறு செய்தார்கள்.
15 កឝ្ចិទ៑ អបវិត្រោ ភូតះ ប្រត្យុទិតវាន៑, យីឝុំ ជានាមិ បៅលញ្ច បរិចិនោមិ កិន្តុ កេ យូយំ?
அந்த அசுத்த ஆவி அவர்களிடம், “இயேசுவை எனக்குத் தெரியும், பவுலையும் எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் யார்?” என்று திருப்பிக் கேட்டது.
16 ឥត្យុក្ត្វា សោបវិត្រភូតគ្រស្តោ មនុឞ្យោ លម្ផំ ក្ឫត្វា តេឞាមុបរិ បតិត្វា ពលេន តាន៑ ជិតវាន៑, តស្មាត្តេ នគ្នាះ ក្ឞតាង្គាឝ្ច សន្តស្តស្មាទ៑ គេហាត៑ បលាយន្ត។
பின்பு அசுத்த ஆவியுள்ள மனிதன் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எல்லோரையும் மேற்கொண்டான். அவன் அவர்களை அதிகமாக அடித்ததினால், அவர்கள் அந்த வீட்டைவிட்டு இரத்தக் காயங்களுடன் உடைகளின்றி ஓடிப்போனார்கள்.
17 សា វាគ៑ ឥផិឞនគរនិវាសិនសំ សវ៌្វេឞាំ យិហូទីយានាំ ភិន្នទេឝីយានាំ លោកានាញ្ច ឝ្រវោគោចរីភូតា; តតះ សវ៌្វេ ភយំ គតាះ ប្រភោ រ្យីឝោ រ្នាម្នោ យឝោ ៜវទ៌្ធត។
எபேசு பட்டணத்திலுள்ள யூதரும் கிரேக்கரும் இதை அறிந்தபோது, அவர்கள் எல்லோருக்கும் பயமுண்டாயிற்று. கர்த்தராகிய இயேசுவின் பெயர் மகிமைப்பட்டது.
18 យេឞាមនេកេឞាំ លោកានាំ ប្រតីតិរជាយត ត អាគត្យ ស្វៃះ ក្ឫតាះ ក្រិយាះ ប្រកាឝរូបេណាង្គីក្ឫតវន្តះ។
விசுவாசித்த பலர் முன்வந்து, தாங்கள் செய்த தீயசெயல்களை வெளியரங்கமாக அறிக்கையிட்டார்கள்.
19 ពហវោ មាយាកម៌្មការិណះ ស្វស្វគ្រន្ថាន៑ អានីយ រាឝីក្ឫត្យ សវ៌្វេឞាំ សមក្ឞម៑ អទាហយន៑, តតោ គណនាំ ក្ឫត្វាពុធ្យន្ត បញ្ចាយុតរូប្យមុទ្រាមូល្យបុស្តកានិ ទគ្ធានិ។
மந்திரவித்தையில் ஈடுபட்டிருந்த பலர் தங்களுடைய புத்தகச்சுருள்களைக் கொண்டுவந்து வெளியரங்கமாக எரித்தார்கள். அந்தப் புத்தகச்சுருள்களின் மதிப்பை அவர்கள் கணக்கிட்டபோது, ஐம்பதாயிரம் வெள்ளிக்காசு மதிப்புடையதாய் இருந்தது.
20 ឥត្ថំ ប្រភោះ កថា សវ៌្វទេឝំ វ្យាប្យ ប្រពលា ជាតា។
இவ்விதமாய், கர்த்தரின் வார்த்தை எங்கும் பரவி வல்லமையாய்ப் பெருகியது.
21 សវ៌្វេឞ្វេតេឞុ កម៌្មសុ សម្បន្នេឞុ សត្សុ បៅលោ មាកិទនិយាខាយាទេឝាភ្យាំ យិរូឝាលមំ គន្តុំ មតិំ ក្ឫត្វា កថិតវាន៑ តត្ស្ថានំ យាត្រាយាំ ក្ឫតាយាំ សត្យាំ មយា រោមានគរំ ទ្រឞ្ដវ្យំ។
இவையெல்லாம் நடந்தபின்பு, பவுல் மக்கெதோனியா அகாயா நாடுகள் வழியாக எருசலேமுக்குப் போகத் தீர்மானித்தான். “நான் அங்கு போனபின், ரோமுக்கும் போகவேண்டும்” என்று சொன்னான்.
22 ស្វានុគតលោកានាំ តីមថិយេរាស្តៅ ទ្វៅ ជនៅ មាកិទនិយាទេឝំ ប្រតិ ប្រហិត្យ ស្វយម៑ អាឝិយាទេឝេ កតិបយទិនានិ ស្ថិតវាន៑។
அவன் தனது உதவியாளர்களில் தீமோத்தேயு, எரஸ்து ஆகிய இருவரையும் மக்கெதோனியாவுக்கு அனுப்பினான். அவனோ ஆசியாவின் பகுதியிலே, இன்னும் சிறிதுகாலம் தங்கினான்.
23 កិន្តុ តស្មិន៑ សមយេ មតេៜស្មិន៑ កលហោ ជាតះ។
அக்காலத்தில் கிறிஸ்துவின் வழியைக் குறித்து ஒரு பெரிய குழப்பம் உண்டாயிற்று.
24 តត្ការណមិទំ, អត៌្តិមីទេវ្យា រូប្យមន្ទិរនិម៌្មាណេន សវ៌្វេឞាំ ឝិល្បិនាំ យថេឞ្ដលាភម៑ អជនយត៑ យោ ទីមីត្រិយនាមា នាឌីន្ធមះ
தெமேத்திரியு என்னும் பெயருள்ள ஒரு தட்டான் இருந்தான். அவன் அர்த்தமிஸ் தேவதையின் கோவிலை வெள்ளியினால் வடிவமைத்து, அந்தத் தொழிலைச் செய்பவர்களுக்கு நல்ல வியாபாரத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தான்.
25 ស តាន៑ តត្កម៌្មជីវិនះ សវ៌្វលោកាំឝ្ច សមាហូយ ភាឞិតវាន៑ ហេ មហេច្ឆា ឯតេន មន្ទិរនិម៌្មាណេនាស្មាកំ ជីវិកា ភវតិ, ឯតទ៑ យូយំ វិត្ថ;
அவன் அந்தத் தொழில் செய்கிறவர்களையும், இந்த வியாபாரத்தில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களையும் ஒன்றுகூட்டி அவர்களிடம், “மனிதரே, இந்த வியாபாரத்திலிருந்து, நாம் நல்ல வருமானத்தைப் பெற்றுவருகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும்.
26 កិន្តុ ហស្តនិម៌្មិតេឝ្វរា ឦឝ្វរា នហិ បៅលនាម្នា កេនចិជ្ជនេន កថាមិមាំ វ្យាហ្ឫត្យ កេវលេផិឞនគរេ នហិ ប្រាយេណ សវ៌្វស្មិន៑ អាឝិយាទេឝេ ប្រវ្ឫត្តិំ គ្រាហយិត្វា ពហុលោកានាំ ឝេមុឞី បរាវត៌្តិតា, ឯតទ៑ យុឞ្មាភិ រ្ទ្ឫឝ្យតេ ឝ្រូយតេ ច។
இந்தப் பவுல் என்பவன், கைகளினால் செய்யப்பட்டவை தெய்வங்கள் அல்ல என்று சொல்லி பெருந்திரளான மக்களை நம்பப்பண்ணி, தன் பக்கமாகத் திரும்பச் செய்திருக்கிறான். எபேசுவில் மட்டுமல்ல, முழு ஆசியா பகுதியிலும் அவன் இப்படிச் செய்திருக்கிறான். இதை நீங்கள் கண்டும், கேட்டும் இருக்கிறீர்கள்.
27 តេនាស្មាកំ វាណិជ្យស្យ សវ៌្វថា ហានេះ សម្ភវនំ កេវលមិតិ នហិ, អាឝិយាទេឝស្ថៃ រ្វា សវ៌្វជគត្ស្ថៃ រ្លោកៃះ បូជ្យា យាត៌ិមី មហាទេវី តស្យា មន្ទិរស្យាវជ្ញានស្យ តស្យា ឰឝ្វយ៌្យស្យ នាឝស្យ ច សម្ភាវនា វិទ្យតេ។
நம் வியாபாரத்தின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படும் ஆபத்து உருவாகியிருக்கிறது மட்டுமல்ல, மாபெரும் தேவதையான அர்த்தமிஸின் கோவில் மதிப்பிழந்தும் போகப்போகிறது. ஆசியா முழுவதிலும், உலகமெங்கும் வணங்கப்படும் அந்தத் தேவதையின் மகத்துவமும் இல்லாது போய்விடும்” என்றான்.
28 ឯតាទ្ឫឝីំ កថាំ ឝ្រុត្វា តេ មហាក្រោធាន្វិតាះ សន្ត ឧច្ចៃះការំ កថិតវន្ត ឥផិឞីយានាម៑ អត៌្តិមី ទេវី មហតី ភវតិ។
அவர்கள் இதைக் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு, “எபேசியரின் அர்த்தமிஸ் தேவதையே வாழ்க!” என்று சத்தமிட்டார்கள்.
29 តតះ សវ៌្វនគរំ កលហេន បរិបូណ៌មភវត៑, តតះ បរំ តេ មាកិទនីយគាយារិស្តាក៌្ហនាមានៅ បៅលស្យ ទ្វៅ សហចរៅ ធ្ឫត្វៃកចិត្តា រង្គភូមិំ ជវេន ធាវិតវន្តះ។
உடனேயே முழுப்பட்டணமும் கலவரமடைந்தது. கூடியிருந்த மக்களோ, பவுலுடன் பயணம் செய்தவர்களான மக்கெதோனியாவைச் சேர்ந்த காயு, அரிஸ்தர்க்கு என்பவர்களைப் பிடித்துக்கொண்டார்கள். மக்கள் இவர்களை இழுத்துக்கொண்டு, ஒருமிக்க அரங்க மண்டபத்திற்குள் கொண்டுசென்றார்கள்.
30 តតះ បៅលោ លោកានាំ សន្និធិំ យាតុម៑ ឧទ្យតវាន៑ កិន្តុ ឝិឞ្យគណស្តំ វារិតវាន៑។
பவுல் மக்கள் கூட்டத்தின்முன் போய் அவர்களுடன் பேச விரும்பினான். ஆனால் சீடரோ, அவனைப் போகவிடவில்லை.
31 បៅលស្យត្មីយា អាឝិយាទេឝស្ថាះ កតិបយាះ ប្រធានលោកាស្តស្យ សមីបំ នរមេកំ ប្រេឞ្យ ត្វំ រង្គភូមិំ មាគា ឥតិ ន្យវេទយន៑។
பவுலின் நண்பர்களான அந்த மாநிலத்தின் அதிகாரிகளில் சிலரும்கூட அவனை அரங்க மண்டபத்திற்குள் போகவேண்டாம் என்று கூறி, அவனுக்குச் செய்தியனுப்பினார்கள்.
32 តតោ នានាលោកានាំ នានាកថាកថនាត៑ សភា វ្យាកុលា ជាតា កិំ ការណាទ៑ ឯតាវតី ជនតាភវត៑ ឯតទ៑ អធិកៃ រ្លោកៃ រ្នាជ្ញាយិ។
அங்கே கூடியிருந்த மக்கள் மிகக் குழப்பமடைந்திருந்தார்கள்; சிலர் ஏதோ சொல்லிச் சத்தமிட்டார்கள், மற்றவர்கள் வேறு ஏதோ சொல்லிச் சத்தமிட்டார்கள். அவர்களில் அநேகருக்குத் தாங்கள் ஏன் அங்கு வந்தார்கள் என்பதுகூட தெரிந்திருக்கவில்லை.
33 តតះ បរំ ជនតាមធ្យាទ៑ យិហូទីយៃព៌ហិឞ្ក្ឫតះ សិកន្ទរោ ហស្តេន សង្កេតំ ក្ឫត្វា លោកេភ្យ ឧត្តរំ ទាតុមុទ្យតវាន៑,
யூதரோ, அலெக்சந்தர் என்பவனை கூட்டத்திற்குமுன் தள்ளிவிட்டார்கள். ஜனக்கூட்டத்திலுள்ள சிலர் அவனைப் பார்த்து சத்தமிட்டார்கள். அவன் மக்களை மவுனமாய் இருக்கும்படி சைகை காட்டி, அவர்களுக்குத் தமது சார்பான நியாயத்தை எடுத்துக்கூற முயற்சித்தான்.
34 កិន្តុ ស យិហូទីយលោក ឥតិ និឝ្ចិតេ សតិ ឥផិឞីយានាម៑ អត៌្តិមី ទេវី មហតីតិ វាក្យំ ប្រាយេណ បញ្ច ទណ្ឌាន៑ យាវទ៑ ឯកស្វរេណ លោកនិវហៃះ ប្រោក្តំ។
ஆனால் அவன் ஒரு யூதன் என்று அவர்கள் அறிந்தபோது, அவர்கள் இரண்டு மணிநேரம், “எபேசியர்களின் அர்த்தமிஸ் தேவதையே வாழ்க!” என்று ஒரே குரலில் சத்தமிட்டார்கள்.
35 តតោ នគរាធិបតិស្តាន៑ ស្ថិរាន៑ ក្ឫត្វា កថិតវាន៑ ហេ ឥផិឞាយាះ សវ៌្វេ លោកា អាកណ៌យត, អត៌ិមីមហាទេវ្យា មហាទេវាត៑ បតិតាយាស្តត្ប្រតិមាយាឝ្ច បូជនម ឥផិឞនគរស្ថាះ សវ៌្វេ លោកាះ កុវ៌្វន្តិ, ឯតត៑ កេ ន ជានន្តិ?
அந்த நகரத்தின் ஆணையாளர், மக்கள் கூட்டத்தை அமைதிப்படுத்தி அவர்களிடம், “எபேசு பட்டணத்தாரே, பெரிதான அர்த்தமிஸ் உருவச்சிலை வானத்திலிருந்து விழுந்தது என்பதையும், இந்த தேவதைக்கும் உருவச்சிலைக்கும், எபேசு பட்டணமே பாதுகாப்பு இடமாக இருக்கிறது என்பதையும் இந்த முழு உலகமும் அறியுமே.
36 តស្មាទ៑ ឯតត្ប្រតិកូលំ កេបិ កថយិតុំ ន ឝក្នុវន្តិ, ឥតិ ជ្ញាត្វា យុឞ្មាភិះ សុស្ថិរត្វេន ស្ថាតវ្យម៑ អវិវិច្យ កិមបិ កម៌្ម ន កត៌្តវ្យញ្ច។
இவை மறுக்கமுடியாத உண்மைகளாய் இருப்பதனால், நீங்கள் முன்யோசனையின்றி எதையுமே செய்யாமல், அமைதியாய் இருக்கவேண்டும்.
37 យាន៑ ឯតាន៑ មនុឞ្យាន៑ យូយមត្រ សមានយត តេ មន្ទិរទ្រវ្យាបហារកា យុឞ្មាកំ ទេវ្យា និន្ទកាឝ្ច ន ភវន្តិ។
நீங்கள் இந்த மனிதரை இங்கு கொண்டுவந்திருக்கிறீர்கள். ஆனால் இவர்களோ, ஆலயங்களைக் கொள்ளையடிக்கவும் இல்லை, நமது தேவதையை அவதூறாய் பேசவும் இல்லை.
38 យទិ កញ្ចន ប្រតិ ទីមីត្រិយស្យ តស្យ សហាយានាញ្ច កាចិទ៑ អាបត្តិ រ្វិទ្យតេ តហ៌ិ ប្រតិនិធិលោកា វិចារស្ថានញ្ច សន្តិ, តេ តត៑ ស្ថានំ គត្វា ឧត្តរប្រត្យុត្តរេ កុវ៌្វន្តុ។
எனவே தெமேத்திரியுவுக்கும், அவனுடைய உடன் தொழிலாளிகளுக்கும், யார் மீதாவது ஒரு வழக்கு இருக்குமானால், அதற்காக நீதிமன்றங்கள் திறந்தே இருக்கின்றன. அங்கே அதிபதிகளும் இருக்கிறார்கள். எனவே அவர்கள் தங்கள் குற்றச்சாட்டுகளை அங்கே எடுத்துச் சொல்லட்டும்.
39 កិន្តុ យុឞ្មាកំ កាចិទបរា កថា យទិ តិឞ្ឋតិ តហ៌ិ និយមិតាយាំ សភាយាំ តស្យា និឞ្បត្តិ រ្ភវិឞ្យតិ។
இதைவிட வேறு ஏதாவது உங்களுக்கிருந்தால், அது சட்ட மன்றம் கூடியே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
40 កិន្ត្វេតស្យ វិរោធស្យោត្តរំ យេន ទាតុំ ឝក្នុម៑ ឯតាទ្ឫឝស្យ កស្យចិត៑ ការណស្យាភាវាទ៑ អទ្យតនឃដនាហេតោ រាជទ្រោហិណាមិវាស្មាកម៑ អភិយោគោ ភវិឞ្យតីតិ ឝង្កា វិទ្យតេ។
இப்பொழுது இன்று நடந்த இந்த சம்பவத்தினால், நாமே கலகம் செய்ததாக குற்றம் சாட்டப்படக்கூடிய ஒரு ஆபத்தில் இருக்கிறோம். அவ்வாறு குற்றஞ்சாட்டினால், இந்தக் கலகம் நியாயமானது எனக் காட்டுவதற்கு நம்மால் முடியாது, ஏனெனில், நாம் சொல்லக்கூடிய காரணம் எதுவும் இல்லை” என்றான்.
41 ឥតិ កថយិត្វា ស សភាស្ថលោកាន៑ វិស្ឫឞ្ដវាន៑។
அவன் இதைச் சொல்லி முடித்தபின்பு, கூடியிருந்தவர்களைக் கலைந்து போகும்படி செய்தான்.

< ប្រេរិតាះ 19 >