< મથિઃ 23 >

1 અનન્તરં યીશુ ર્જનનિવહં શિષ્યાંશ્ચાવદત્,
பின்பு இயேசு மக்களையும் தம்முடைய சீடர்களையும் பார்த்து:
2 અધ્યાપકાઃ ફિરૂશિનશ્ચ મૂસાસને ઉપવિશન્તિ,
வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் மோசேயினுடைய இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள்;
3 અતસ્તે યુષ્માન્ યદ્યત્ મન્તુમ્ આજ્ઞાપયન્તિ, તત્ મન્યધ્વં પાલયધ્વઞ્ચ, કિન્તુ તેષાં કર્મ્માનુરૂપં કર્મ્મ ન કુરુધ્વં; યતસ્તેષાં વાક્યમાત્રં સારં કાર્ય્યે કિમપિ નાસ્તિ|
ஆகவே, நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற எல்லாவற்றையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்களுடைய செய்கையின்படி செய்யாமலிருங்கள்; ஏனென்றால், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.
4 તે દુર્વ્વહાન્ ગુરુતરાન્ ભારાન્ બદ્વ્વા મનુષ્યાણાં સ્કન્ધેપરિ સમર્પયન્તિ, કિન્તુ સ્વયમઙ્ગુલ્યૈકયાપિ ન ચાલયન્તિ|
சுமக்கமுடியாத பாரமான சுமைகளைக் கட்டி மனிதர்களுடைய தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.
5 કેવલં લોકદર્શનાય સર્વ્વકર્મ્માણિ કુર્વ્વન્તિ; ફલતઃ પટ્ટબન્ધાન્ પ્રસાર્ય્ય ધારયન્તિ, સ્વવસ્ત્રેષુ ચ દીર્ઘગ્રન્થીન્ ધારયન્તિ;
தங்களுடைய செயல்களையெல்லாம் மனிதர்கள் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்களுடைய காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்களுடைய ஆடைகளின் தொங்கல்களைப் பெரிதாக்கி,
6 ભોજનભવન ઉચ્ચસ્થાનં, ભજનભવને પ્રધાનમાસનં,
விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும்,
7 હટ્ઠે નમસ્કારં ગુરુરિતિ સમ્બોધનઞ્ચૈતાનિ સર્વ્વાણિ વાઞ્છન્તિ|
சந்தைவெளிகளில் வணக்கங்களையும், மனிதர்களால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்.
8 કિન્તુ યૂયં ગુરવ ઇતિ સમ્બોધનીયા મા ભવત, યતો યુષ્માકમ્ એકઃ ખ્રીષ્ટએવ ગુરુ
நீங்களோ ரபீ என்று அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார், நீங்கள் எல்லோரும் சகோதரர்களாக இருக்கிறீர்கள்.
9 ર્યૂયં સર્વ્વે મિથો ભ્રાતરશ્ચ| પુનઃ પૃથિવ્યાં કમપિ પિતેતિ મા સમ્બુધ્યધ્વં, યતો યુષ્માકમેકઃ સ્વર્ગસ્થએવ પિતા|
பூமியிலே ஒருவனையும் உங்களுடைய பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாக இருக்கிறார்.
10 યૂયં નાયકેતિ સમ્ભાષિતા મા ભવત, યતો યુષ્માકમેકઃ ખ્રીષ્ટએવ નાયકઃ|
௧0நீங்கள் போதகர் என்றும் அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார்.
11 અપરં યુષ્માકં મધ્યે યઃ પુમાન્ શ્રેષ્ઠઃ સ યુષ્માન્ સેવિષ્યતે|
௧௧உங்களில் பெரியவனாக இருக்கிறவன் உங்களுக்கு வேலைக்காரனாக இருக்கவேண்டும்.
12 યતો યઃ સ્વમુન્નમતિ, સ નતઃ કરિષ્યતે; કિન્તુ યઃ કશ્ચિત્ સ્વમવનતં કરોતિ, સ ઉન્નતઃ કરિષ્યતે|
௧௨தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
13 હન્ત કપટિન ઉપાધ્યાયાઃ ફિરૂશિનશ્ચ, યૂયં મનુજાનાં સમક્ષં સ્વર્ગદ્વારં રુન્ધ, યૂયં સ્વયં તેન ન પ્રવિશથ, પ્રવિવિક્ષૂનપિ વારયથ| વત કપટિન ઉપાધ્યાયાઃ ફિરૂશિનશ્ચ યૂયં છલાદ્ દીર્ઘં પ્રાર્થ્ય વિધવાનાં સર્વ્વસ્વં ગ્રસથ, યુષ્માકં ઘોરતરદણ્ડો ભવિષ્યતિ|
௧௩மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, மனிதர்கள் பிரவேசிக்கமுடியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களை பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.
14 હન્ત કપટિન ઉપાધ્યાયાઃ ફિરૂશિનશ્ચ, યૂયમેકં સ્વધર્મ્માવલમ્બિનં કર્ત્તું સાગરં ભૂમણ્ડલઞ્ચ પ્રદક્ષિણીકુરુથ,
௧௪மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்செய்து, விதவைகளின் வீடுகளை அழித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக தண்டனையை அடைவீர்கள்.
15 કઞ્ચન પ્રાપ્ય સ્વતો દ્વિગુણનરકભાજનં તં કુરુથ| (Geenna g1067)
௧௫மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள். (Geenna g1067)
16 વત અન્ધપથદર્શકાઃ સર્વ્વે, યૂયં વદથ, મન્દિરસ્ય શપથકરણાત્ કિમપિ ન દેયં; કિન્તુ મન્દિરસ્થસુવર્ણસ્ય શપથકરણાદ્ દેયં|
௧௬குருடர்களான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாவது தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்செய்தால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
17 હે મૂઢા હે અન્ધાઃ સુવર્ણં તત્સુવર્ણપાવકમન્દિરમ્ એતયોરુભયો ર્મધ્યે કિં શ્રેયઃ?
௧௭மதிகேடர்களே, குருடர்களே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ?
18 અન્યચ્ચ વદથ, યજ્ઞવેદ્યાઃ શપથકરણાત્ કિમપિ ન દેયં, કિન્તુ તદુપરિસ્થિતસ્ય નૈવેદ્યસ્ય શપથકરણાદ્ દેયં|
௧௮மேலும், எவனாவது பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்செய்தால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
19 હે મૂઢા હે અન્ધાઃ, નૈવેદ્યં તન્નૈવેદ્યપાવકવેદિરેતયોરુભયો ર્મધ્યે કિં શ્રેયઃ?
௧௯மதிகேடர்களே, குருடர்களே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?
20 અતઃ કેનચિદ્ યજ્ઞવેદ્યાઃ શપથે કૃતે તદુપરિસ્થસ્ય સર્વ્વસ્ય શપથઃ ક્રિયતે|
௨0ஆகவே, பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்செய்கிறான்.
21 કેનચિત્ મન્દિરસ્ય શપથે કૃતે મન્દિરતન્નિવાસિનોઃ શપથઃ ક્રિયતે|
௨௧தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான்.
22 કેનચિત્ સ્વર્ગસ્ય શપથે કૃતે ઈશ્વરીયસિંહાસનતદુપર્ય્યુપવિષ્ટયોઃ શપથઃ ક્રિયતે|
௨௨பரலோகத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான்.
23 હન્ત કપટિન ઉપાધ્યાયાઃ ફિરૂશિનશ્ચ, યૂયં પોદિનાયાઃ સિતચ્છત્રાયા જીરકસ્ય ચ દશમાંશાન્ દત્થ, કિન્તુ વ્યવસ્થાયા ગુરુતરાન્ ન્યાયદયાવિશ્વાસાન્ પરિત્યજથ; ઇમે યુષ્માભિરાચરણીયા અમી ચ ન લંઘનીયાઃ|
௨௩மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினாவிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாமலிருக்கவேண்டுமே.
24 હે અન્ધપથદર્શકા યૂયં મશકાન્ અપસારયથ, કિન્તુ મહાઙ્ગાન્ ગ્રસથ|
௨௪குருடர்களான வழிகாட்டிகளே, கொசு இல்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாக இருக்கிறீர்கள்.
25 હન્ત કપટિન ઉપાધ્યાયાઃ ફિરૂશિનશ્ચ, યૂયં પાનપાત્રાણાં ભોજનપાત્રાણાઞ્ચ બહિઃ પરિષ્કુરુથ; કિન્તુ તદભ્યન્તરં દુરાત્મતયા કલુષેણ ચ પરિપૂર્ણમાસ્તે|
௨௫மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.
26 હે અન્ધાઃ ફિરૂશિલોકા આદૌ પાનપાત્રાણાં ભોજનપાત્રાણાઞ્ચાભ્યન્તરં પરિષ્કુરુત, તેન તેષાં બહિરપિ પરિષ્કારિષ્યતે|
௨௬குருடனான பரிசேயனே! உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.
27 હન્ત કપટિન ઉપાધ્યાયાઃ ફિરૂશિનશ્ચ, યૂયં શુક્લીકૃતશ્મશાનસ્વરૂપા ભવથ, યથા શ્મશાનભવનસ્ય બહિશ્ચારુ, કિન્ત્વભ્યન્તરં મૃતલોકાનાં કીકશૈઃ સર્વ્વપ્રકારમલેન ચ પરિપૂર્ણમ્;
௨௭மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாக இருக்கிறீர்கள், அவைகள் வெளியே அலங்காரமாகக் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் எல்லா அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.
28 તથૈવ યૂયમપિ લોકાનાં સમક્ષં બહિર્ધાર્મ્મિકાઃ કિન્ત્વન્તઃકરણેષુ કેવલકાપટ્યાધર્મ્માભ્યાં પરિપૂર્ણાઃ|
௨௮அப்படியே நீங்களும் வெளியே மனிதர்களுக்கு நீதிமான்களாகக் காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
29 હા હા કપટિન ઉપાધ્યાયાઃ ફિરૂશિનશ્ચ, યૂયં ભવિષ્યદ્વાદિનાં શ્મશાનગેહં નિર્મ્માથ, સાધૂનાં શ્મશાનનિકેતનં શોભયથ
௨௯மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளை அலங்கரித்து:
30 વદથ ચ યદિ વયં સ્વેષાં પૂર્વ્વપુરુષાણાં કાલ અસ્થાસ્યામ, તર્હિ ભવિષ્યદ્વાદિનાં શોણિતપાતને તેષાં સહભાગિનો નાભવિષ્યામ|
௩0எங்களுடைய பிதாக்களின் நாட்களில் இருந்திருந்தோமானால், அவர்களோடு நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.
31 અતો યૂયં ભવિષ્યદ્વાદિઘાતકાનાં સન્તાના ઇતિ સ્વયમેવ સ્વેષાં સાક્ષ્યં દત્થ|
௩௧ஆகவே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் பிள்ளைகளாக இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள்.
32 અતો યૂયં નિજપૂર્વ્વપુરુષાણાં પરિમાણપાત્રં પરિપૂરયત|
௩௨நீங்களும் உங்களுடைய பிதாக்களின் அக்கிரமத்தின் அளவை நிறைவாக்குங்கள்.
33 રે ભુજગાઃ કૃષ્ણભુજગવંશાઃ, યૂયં કથં નરકદણ્ડાદ્ રક્ષિષ્યધ્વે| (Geenna g1067)
௩௩சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? (Geenna g1067)
34 પશ્યત, યુષ્માકમન્તિકમ્ અહં ભવિષ્યદ્વાદિનો બુદ્ધિમત ઉપાધ્યાયાંશ્ચ પ્રેષયિષ્યામિ, કિન્તુ તેષાં કતિપયા યુષ્માભિ ર્ઘાનિષ્યન્તે, ક્રુશે ચ ઘાનિષ્યન્તે, કેચિદ્ ભજનભવને કષાભિરાઘાનિષ્યન્તે, નગરે નગરે તાડિષ્યન્તે ચ;
௩௪ஆகவே, இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபண்டிதர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்களுடைய ஜெப ஆலயங்களில் சாட்டையினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்;
35 તેન સત્પુરુષસ્ય હાબિલો રક્તપાતમારભ્ય બેરિખિયઃ પુત્રં યં સિખરિયં યૂયં મન્દિરયજ્ઞવેદ્યો ર્મધ્યે હતવન્તઃ, તદીયશોણિતપાતં યાવદ્ અસ્મિન્ દેશે યાવતાં સાધુપુરુષાણાં શોણિતપાતો ઽભવત્ તત્ સર્વ્વેષામાગસાં દણ્ડા યુષ્માસુ વર્ત્તિષ્યન્તે|
௩௫நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.
36 અહં યુષ્માન્ત તથ્યં વદામિ, વિદ્યમાનેઽસ્મિન્ પુરુષે સર્વ્વે વર્ત્તિષ્યન્તે|
௩௬இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
37 હે યિરૂશાલમ્ હે યિરૂશાલમ્ નગરિ ત્વં ભવિષ્યદ્વાદિનો હતવતી, તવ સમીપં પ્રેરિતાંશ્ચ પાષાણૈરાહતવતી, યથા કુક્કુટી શાવકાન્ પક્ષાધઃ સંગૃહ્લાતિ, તથા તવ સન્તાનાન્ સંગ્રહીતું અહં બહુવારમ્ ઐચ્છં; કિન્તુ ત્વં ન સમમન્યથાઃ|
௩௭எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச்சேர்த்துக்கொள்ளுவதுபோல நான் எத்தனைமுறையோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள விருப்பமாக இருந்தேன்; உங்களுக்கோ விருப்பமில்லாமல்போனது.
38 પશ્યત યષ્માકં વાસસ્થાનમ્ ઉચ્છિન્નં ત્યક્ષ્યતે|
௩௮இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.
39 અહં યુષ્માન્ તથ્યં વદામિ, યઃ પરમેશ્વરસ્ય નામ્નાગચ્છતિ, સ ધન્ય ઇતિ વાણીં યાવન્ન વદિષ્યથ, તાવત્ માં પુન ર્ન દ્રક્ષ્યથ|
௩௯கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் போற்றப்பட்டவர் என்று நீங்கள் சொல்லும்வரை, இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

< મથિઃ 23 >