< પ્રેરિતાઃ 24 >

1 પઞ્ચભ્યો દિનેભ્યઃ પરં હનાનીયનામા મહાયાજકોઽધિપતેઃ સમક્ષં પૌલસ્ય પ્રાતિકૂલ્યેન નિવેદયિતું તર્તુલ્લનામાનં કઞ્ચન વક્તારં પ્રાચીનજનાંશ્ચ સઙ્ગિનઃ કૃત્વા કૈસરિયાનગરમ્ આગચ્છત્|
ஐந்து நாட்களுக்குபின், பிரதான ஆசாரியன் அனனியாவும், யூதரின் தலைவரில் சிலரும், தெர்த்துல்லு என்னும் பெயருடைய வழக்கறிஞனும், செசரியாவுக்குச் சென்றார்கள். அவர்கள் அங்கே பவுலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆளுநருக்குமுன் வைத்தார்கள்.
2 તતઃ પૌલે સમાનીતે સતિ તર્તુલ્લસ્તસ્યાપવાદકથાં કથયિતુમ્ આરભત હે મહામહિમફીલિક્ષ ભવતો વયમ્ અતિનિર્વ્વિઘ્નં કાલં યાપયામો ભવતઃ પરિણામદર્શિતયા એતદ્દેશીયાનાં બહૂનિ મઙ્ગલાનિ ઘટિતાનિ,
பவுல் அழைத்து வரப்பட்டபோது, தெர்த்துல்லு என்பவன் பேலிக்ஸின் முன்பாக தன் வழக்கை எடுத்துரைத்தான்: “மாண்புமிகு ஆளுநர் அவர்களே, உமது ஆட்சியின்கீழ் நீண்டகாலமாக நாங்கள் சமாதானத்தை அனுபவித்து வருகிறோம், உம்முடைய முன்விவேகத்தால், இந்த நாட்டில் பல சீர்திருத்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
3 ઇતિ હેતો ર્વયમતિકૃતજ્ઞાઃ સન્તઃ સર્વ્વત્ર સર્વ્વદા ભવતો ગુણાન્ ગાયમઃ|
எல்லா இடங்களிலும், எல்லா விதத்திலேயும், இதை நாங்கள் மிகுந்த நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறோம்.
4 કિન્તુ બહુભિઃ કથાભિ ર્ભવન્તં યેન ન વિરઞ્જયામિ તસ્માદ્ વિનયે ભવાન્ બનુકમ્પ્ય મદલ્પકથાં શૃણોતુ|
நான் உம்மைத் தொடர்ந்து தொல்லைப்படுத்த விரும்பவில்லை. எனவே நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதைத் தயவாய் கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்கிறேன்.
5 એષ મહામારીસ્વરૂપો નાસરતીયમતગ્રાહિસંઘાતસ્ય મુખ્યો ભૂત્વા સર્વ્વદેશેષુ સર્વ્વેષાં યિહૂદીયાનાં રાજદ્રોહાચરણપ્રવૃત્તિં જનયતીત્યસ્માભિ ર્નિશ્ચિતં|
“இந்த பவுல் குழப்பத்தை விளைவிக்கிறவனாய் இருக்கிறதை நாங்கள் கண்டோம். உலகம் முழுவதிலுமுள்ள யூதர்கள் மத்தியில், இவன் குழப்பத்தை மூட்டி வருகிறான். இவனே நசரேய பிரிவினரின் தலைவனாயிருக்கிறான்.
6 સ મન્દિરમપિ અશુચિ કર્ત્તું ચેષ્ટિતવાન્; ઇતિ કારણાદ્ વયમ્ એનં ધૃત્વા સ્વવ્યવસ્થાનુસારેણ વિચારયિતું પ્રાવર્ત્તામહિ;
இவன் ஆலயத்தைக்கூட தூய்மைக்கேடாக்க முயன்றான்; அதனால் எங்கள் சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கவே, நாங்கள் இவனைப் பிடித்தோம்.
7 કિન્તુ લુષિયઃ સહસ્રસેનાપતિરાગત્ય બલાદ્ અસ્માકં કરેભ્ય એનં ગૃહીત્વા
ஆனால் படைத்தளபதி லீசியா வந்து பலவந்தமாக எங்கள் கைகளிலிருந்து இவனை இழுத்துக்கொண்டுபோய்,
8 એતસ્યાપવાદકાન્ ભવતઃ સમીપમ્ આગન્તુમ્ આજ્ઞાપયત્| વયં યસ્મિન્ તમપવાદામો ભવતા પદપવાદકથાયાં વિચારિતાયાં સત્યાં સર્વ્વં વૃત્તાન્તં વેદિતું શક્ષ્યતે|
இவன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களை உமது முன்வரும்படி கட்டளையிட்டான். நீரே இவனை விசாரித்தால், நாங்கள் இந்த பவுலுக்கு எதிராகக் கொண்டுவரும் எல்லாக் குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மையையும் அறிந்துகொள்வீர்” என்றான்.
9 તતો યિહૂદીયા અપિ સ્વીકૃત્ય કથિતવન્ત એષા કથા પ્રમાણમ્|
யூதரும் குற்றம் சாட்டுவதில் வழக்கறிஞனுடனே சேர்ந்து, இவையெல்லாம் உண்மை என்று உறுதிப்படுத்தினார்கள்.
10 અધિપતૌ કથાં કથયિતું પૌલં પ્રતીઙ્ગિતં કૃતવતિ સ કથિતવાન્ ભવાન્ બહૂન્ વત્સરાન્ યાવદ્ એતદ્દેશસ્ય શાસનં કરોતીતિ વિજ્ઞાય પ્રત્યુત્તરં દાતુમ્ અક્ષોભોઽભવમ્|
பவுல் பேசும்படி ஆளுநர் சைகை காட்டியபோது, அவன் சொன்னதாவது: “பலவருடங்களாக இந்த நாட்டின்மேல் நீர் நீதிபதியாய் இருப்பதை நான் அறிவேன்; எனவே நான் மகிழ்ச்சியுடனே எனது சார்பாய்ப் பேசுகிறேன்.
11 અદ્ય કેવલં દ્વાદશ દિનાનિ યાતાનિ, અહમ્ આરાધનાં કર્ત્તું યિરૂશાલમનગરં ગતવાન્ એષા કથા ભવતા જ્ઞાતું શક્યતે;
நான் வழிபாடு செய்யும்படி எருசலேமுக்குப் போய் இன்னும் பன்னிரண்டு நாட்கள் ஆகவில்லை. இதை நீர் விசாரித்து எளிதாக அறிந்துகொள்ளலாம்.
12 કિન્ત્વિભે માં મધ્યેમન્દિરં કેનાપિ સહ વિતણ્ડાં કુર્વ્વન્તં કુત્રાપિ ભજનભવને નગરે વા લોકાન્ કુપ્રવૃત્તિં જનયન્તું ન દૃષ્ટવન્તઃ|
என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள், நான் ஆலயத்திலே யாருடனாவது விவாதம் செய்ததைக் கண்டதில்லை. அல்லது ஜெப ஆலயங்களிலோ, பட்டணத்தின் வேறு இடங்களிலோ மக்களைக் குழப்பம் செய்யத் தூண்டியதையும் இவர்கள் கண்டதில்லை.
13 ઇદાનીં યસ્મિન્ યસ્મિન્ મામ્ અપવદન્તે તસ્ય કિમપિ પ્રમાણં દાતું ન શક્નુવન્તિ|
இவர்கள் இப்பொழுது எனக்கு எதிராகக் கொண்டுவந்த குற்றச்சாட்டுகளை உமக்கு முன்னால் நிரூபிக்கவும் இவர்களால் முடியாது.
14 કિન્તુ ભવિષ્યદ્વાક્યગ્રન્થે વ્યવસ્થાગ્રન્થે ચ યા યા કથા લિખિતાસ્તે તાસુ સર્વ્વાસુ વિશ્વસ્ય યન્મતમ્ ઇમે વિધર્મ્મં જાનન્તિ તન્મતાનુસારેણાહં નિજપિતૃપુરુષાણામ્ ઈશ્વરમ્ આરાધયામીત્યહં ભવતઃ સમક્ષમ્ અઙ્ગીકરોમિ|
ஆனால் இந்த வழியைப் பின்பற்றி, எங்கள் தந்தையரின் இறைவனை வழிபடுகிறேன் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். இதையே இவர்கள், ‘பிரிவினை மார்க்கம்’ என்று சொல்கிறார்கள். மோசேயின் சட்டத்தில் கூறப்பட்டவைகளுடனும், இறைவாக்கினரின் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் நான் நம்புகிறேன்.
15 ધાર્મ્મિકાણામ્ અધાર્મ્મિકાણાઞ્ચ પ્રમીતલોકાનામેવોત્થાનં ભવિષ્યતીતિ કથામિમે સ્વીકુર્વ્વન્તિ તથાહમપિ તસ્મિન્ ઈશ્વરે પ્રત્યાશાં કરોમિ;
நீதிமான்களும் அநீதிமான்களும் இறந்தோரில் இருந்து உயிர்த்தெழுவார்கள் என்ற அதே எதிர்பார்ப்பு இவர்களைப் போல் எனக்கும் இறைவனில் இருக்கிறது.
16 ઈશ્વરસ્ય માનવાનાઞ્ચ સમીપે યથા નિર્દોષો ભવામિ તદર્થં સતતં યત્નવાન્ અસ્મિ|
அதனால்தான் இறைவனுக்கு முன்பாகவும், மனிதனுக்கு முன்பாகவும், என் மனசாட்சியைச் சுத்தமுள்ளதாகக் காத்துக்கொள்ள நான் எப்பொழுதும் பிரயாசப்படுகிறேன்.
17 બહુષુ વત્સરેષુ ગતેષુ સ્વદેશીયલોકાનાં નિમિત્તં દાનીયદ્રવ્યાણિ નૈવેદ્યાનિ ચ સમાદાય પુનરાગમનં કૃતવાન્|
“நானோ பல வருடங்களுக்குப்பின், என் மக்களுக்கும், ஏழைகளுக்கும் நன்கொடைகளையும் காணிக்கைகளையும் கொடுப்பதற்கு எருசலேமுக்கு வந்தேன்.
18 તતોહં શુચિ ર્ભૂત્વા લોકાનાં સમાગમં કલહં વા ન કારિતવાન્ તથાપ્યાશિયાદેશીયાઃ કિયન્તો યિહુદીયલોકા મધ્યેમન્દિરં માં ધૃતવન્તઃ|
இதை நான் ஆலய முற்றத்தில் செய்யும்போது, இவர்கள் என்னைக் கண்டார்கள். அப்பொழுது நான், பாரம்பரிய முறைப்படி சுத்தமாகவே இருந்தேன். என்னுடனே மக்கள் கூட்டம் எதுவும் இருக்கவில்லை. எந்தவிதக் குழப்பத்திலும் நான் ஈடுபடவும் இல்லை.
19 મમોપરિ યદિ કાચિદપવાદકથાસ્તિ તર્હિ ભવતઃ સમીપમ્ ઉપસ્થાય તેષામેવ સાક્ષ્યદાનમ્ ઉચિતમ્|
ஆனால் ஆசியா பகுதியிலிருந்து சில யூதர்கள் அங்கே வந்தார்கள். எனக்கு எதிராய் அவர்களுக்கு ஏதாவது இருந்தால், அக்குற்றத்தை என்மேல் சுமத்துவதற்கு, அவர்கள் இங்கே உமக்கு முன்பு இருக்கவேண்டும்.
20 નોચેત્ પૂર્વ્વે મહાસભાસ્થાનાં લોકાનાં સન્નિધૌ મમ દણ્ડાયમાનત્વસમયે, અહમદ્ય મૃતાનામુત્થાને યુષ્માભિ ર્વિચારિતોસ્મિ,
அப்படியில்லாவிட்டால், இங்கிருக்கும் இவர்கள் நான் ஆலோசனைச் சங்கத்தின்முன் நின்றபோது, என்ன குற்றத்தைக் கண்டார்கள் என்று கூறவேண்டும்.
21 તેષાં મધ્યે તિષ્ઠન્નહં યામિમાં કથામુચ્ચૈઃ સ્વરેણ કથિતવાન્ તદન્યો મમ કોપિ દોષોઽલભ્યત ન વેતિ વરમ્ એતે સમુપસ્થિતલોકા વદન્તુ|
‘இறந்தவர்கள் உயிரோடு எழுந்திருப்பதைக் குறித்தே இன்று நான் உங்களுக்கு முன்பாக விசாரணை செய்யப்படுகின்றேன்’ என்று நான் அவர்கள்முன் நின்றபோது, அன்று சத்தமிட்டுச் சொன்னேன். இந்த ஒரு குற்றச்சாட்டையே அவர்கள் எனக்கெதிராகக் கொண்டுவரலாம்” என்று பவுல் சொல்லி முடித்தான்.
22 તદા ફીલિક્ષ એતાં કથાં શ્રુત્વા તન્મતસ્ય વિશેષવૃત્તાન્તં વિજ્ઞાતું વિચારં સ્થગિતં કૃત્વા કથિતવાન્ લુષિયે સહસ્રસેનાપતૌ સમાયાતે સતિ યુષ્માકં વિચારમ્ અહં નિષ્પાદયિષ્યામિ|
அப்பொழுது இந்த வழியை நன்றாக அறிந்திருந்த பேலிக்ஸ் விசாரணையை ஒத்திப்போட்டான். அவன், “படைத்தளபதி லீசியா வரும்போது, உங்கள் வழக்கிற்குத் தீர்ப்பு கூறுவேன்” என்று சொன்னான்.
23 અનન્તરં બન્ધનં વિના પૌલં રક્ષિતું તસ્ય સેવનાય સાક્ષાત્કરણાય વા તદીયાત્મીયબન્ધુજનાન્ ન વારયિતુઞ્ચ શમસેનાપતિમ્ આદિષ્ટવાન્|
பேலிக்ஸ் பவுலைக் காவலில் வைக்கும்படி நூற்றுக்குத் தலைவனுக்கு உத்தரவிட்டான். ஆனால் பவுலுக்கு ஓரளவு சுதந்திரம் கொடுக்கும்படியும், அவனுடைய தேவைகளைக் கொடுத்து, உதவுவதற்கு அவனது நண்பர்களை அனுமதிக்கும்படியும் பேலிக்ஸ் சொல்லியிருந்தான்.
24 અલ્પદિનાત્ પરં ફીલિક્ષોઽધિપતિ ર્દ્રુષિલ્લાનામ્ના યિહૂદીયયા સ્વભાર્ય્યયા સહાગત્ય પૌલમાહૂય તસ્ય મુખાત્ ખ્રીષ્ટધર્મ્મસ્ય વૃત્તાન્તમ્ અશ્રૌષીત્|
சில நாட்களுக்குப்பின்பு, பவுல் பேசுவதைக் கேட்பதற்காக, பேலிக்ஸ் யூதப்பெண்ணான தன் மனைவி துருசில்லாளுடன் வந்தான். அவன் பவுலை அழைத்து வரச்சொல்லி, கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தைக் குறித்துப் பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
25 પૌલેન ન્યાયસ્ય પરિમિતભોગસ્ય ચરમવિચારસ્ય ચ કથાયાં કથિતાયાં સત્યાં ફીલિક્ષઃ કમ્પમાનઃ સન્ વ્યાહરદ્ ઇદાનીં યાહિ, અહમ્ અવકાશં પ્રાપ્ય ત્વામ્ આહૂસ્યામિ|
பவுல் நீதியைக் குறித்தும், சுயக்கட்டுப்பாட்டைக் குறித்தும், வரப்போகின்ற நியாயத்தீர்ப்பைக் குறித்தும் பேசியபொழுது, பேலிக்ஸ் பயமடைந்தான். அவன் பவுலிடம், “இப்போதைக்கு இது போதும். நீ போகலாம். எனக்கு வசதியான ஒரு நேரம் கிடைக்கும்போது, நான் உன்னைத் திரும்பவும் கூப்பிடுவேன்” என்றான்.
26 મુક્તિપ્રપ્ત્યર્થં પૌલેન મહ્યં મુદ્રાદાસ્યન્તે ઇતિ પત્યાશાં કૃત્વા સ પુનઃ પુનસ્તમાહૂય તેન સાકં કથોપકથનં કૃતવાન્|
அதே நேரத்தில், பவுல் தனக்கு பணம் கொடுப்பான் என்று பேலிக்ஸ் எதிர்பார்த்து, பவுலை அடிக்கடி வரவழைத்து அவனிடம் பேசினான்.
27 કિન્તુ વત્સરદ્વયાત્ પરં પર્કિયફીષ્ટ ફાલિક્ષસ્ય પદં પ્રાપ્તે સતિ ફીલિક્ષો યિહૂદીયાન્ સન્તુષ્ટાન્ ચિકીર્ષન્ પૌલં બદ્ધં સંસ્થાપ્ય ગતવાન્|
இப்படி இரண்டு வருடங்கள் கடந்துசென்றன. பேலிக்ஸின் இடத்தில் பொர்க்கியு பெஸ்து என்பவன் பதவிக்கு வந்தான். ஆனால் பேலிக்ஸ் யூதருக்குத் தயவுகாட்ட விரும்பி, பவுலை சிறையிலேயே விட்டுச்சென்றான்.

< પ્રેરિતાઃ 24 >