< પ્રેરિતાઃ 21 >
1 તૈ ર્વિસૃષ્ટાઃ સન્તો વયં પોતં બાહયિત્વા ઋજુમાર્ગેણ કોષમ્ ઉપદ્વીપમ્ આગત્ય પરેઽહનિ રોદિયોપદ્વીપમ્ આગચ્છામ તતસ્તસ્માત્ પાતારાયામ્ ઉપાતિષ્ઠામ|
நாங்கள் அவர்களைவிட்டுப் பிரிந்து, கப்பல் மூலம் புறப்பட்டு, நேர்திசையில் பயணம் செய்து, கோஸ்தீவைச் சென்றடைந்தோம். மறுநாள் அங்கிருந்து ரோதுவுக்குப் போனோம். பின்பு அங்கிருந்து பத்தாரா பட்டணத்திற்குப் போனோம்.
2 તત્ર ફૈનીકિયાદેશગામિનમ્ પોતમેકં પ્રાપ્ય તમારુહ્ય ગતવન્તઃ|
அங்கிருந்து பெனிக்கேவுக்கு ஒரு கப்பல் போவதை நாங்கள் கண்டு, அதில் ஏறிப் பயணமானோம்.
3 કુપ્રોપદ્વીપં દૃષ્ટ્વા તં સવ્યદિશિ સ્થાપયિત્વા સુરિયાદેશં ગત્વા પોતસ્થદ્રવ્યાણ્યવરોહયિતું સોરનગરે લાગિતવન્તઃ|
நாங்கள் சீப்புரு தீவைக் கண்டு, அதன் தெற்குப் பக்கமாக அதைக் கடந்துசென்று, சீரியாவுக்குக் கப்பலில் பயணமானோம். தீரு பட்டணத்தில் கரை இறங்கினோம். ஏனெனில், அந்தக் கப்பல் அங்கே பொருட்களை இறக்க வேண்டியிருந்தது.
4 તત્ર શિષ્યગણસ્ય સાક્ષાત્કરણાય વયં તત્ર સપ્તદિનાનિ સ્થિતવન્તઃ પશ્ચાત્તે પવિત્રેણાત્મના પૌલં વ્યાહરન્ ત્વં યિરૂશાલમ્નગરં મા ગમઃ|
அங்கே சீடர்கள் இருப்பதைக் கண்டு, அவர்களுடன் ஏழு நாட்கள் தங்கினோம். அவர்கள் ஆவியானவரின் ஏவுதலினால், எருசலேமுக்குப் போகவேண்டாம் எனப் பவுலைக் கெஞ்சிக் கேட்டார்கள்.
5 તતસ્તેષુ સપ્તસુ દિનેષુ યાપિતેષુ સત્સુ વયં તસ્માત્ સ્થાનાત્ નિજવર્ત્મના ગતવન્તઃ, તસ્માત્ તે સબાલવૃદ્ધવનિતા અસ્માભિઃ સહ નગરસ્ય પરિસરપર્ય્યન્તમ્ આગતાઃ પશ્ચાદ્વયં જલધિતટે જાનુપાતં પ્રાર્થયામહિ|
ஆனால் நாங்களோ, அங்கே தங்கவேண்டிய காலம் முடிந்ததும், அவ்விடத்தைவிட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். அப்பொழுது அங்கேயிருந்த சீடர்கள் அனைவரும் தங்கள் மனைவி, பிள்ளைகளுடனும் பட்டணத்தைவிட்டு வெளியே வந்து, எங்களுடனே வந்தார்கள். நாங்கள் அனைவரும் கடற்கரையில் முழங்காற்படியிட்டு மன்றாடினோம்.
6 તતઃ પરસ્પરં વિસૃષ્ટાઃ સન્તો વયં પોતં ગતાસ્તે તુ સ્વસ્વગૃહં પ્રત્યાગતવન્તઃ|
பின்பு ஒருவருக்கொருவர் விடைபெற்று நாங்கள் கப்பலேறினோம். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
7 વયં સોરનગરાત્ નાવા પ્રસ્થાય તલિમાયિનગરમ્ ઉપાતિષ્ઠામ તત્રાસ્માકં સમુદ્રીયમાર્ગસ્યાન્તોઽભવત્ તત્ર ભ્રાતૃગણં નમસ્કૃત્ય દિનમેકં તૈઃ સાર્દ્ધમ્ ઉષતવન્તઃ|
நாங்கள் தீரு பட்டணத்திலிருந்து தொடர்ந்து பயணம் செய்து, பித்தொலோமாய் பட்டணத்தில் கரையிறங்கினோம். அங்கே சகோதரரைச் சந்தித்து அவர்களை வாழ்த்தி, அவர்களுடனே ஒரு நாள் தங்கினோம்.
8 પરે ઽહનિ પૌલસ્તસ્ય સઙ્ગિનો વયઞ્ચ પ્રતિષ્ઠમાનાઃ કૈસરિયાનગરમ્ આગત્ય સુસંવાદપ્રચારકાનાં સપ્તજનાનાં ફિલિપનામ્ન એકસ્ય ગૃહં પ્રવિશ્યાવતિષ્ઠામ|
மறுநாள் நாங்கள் புறப்பட்டு செசரியா பட்டணத்தைப் போய்ச் சேர்ந்தோம். அங்கே நற்செய்தியாளனான பிலிப்புவின் வீட்டில் தங்கினோம். இவன் முன்பு உணவு பரிமாறும் பணிக்குத் தெரிந்தெடுத்த, அந்த ஏழுபேரில் ஒருவன்.
9 તસ્ય ચતસ્રો દુહિતરોઽનૂઢા ભવિષ્યદ્વાદિન્ય આસન્|
அவனுக்கு கன்னிகைகளான நான்கு மகள்கள் இருந்தார்கள். அவர்கள் இறைவாக்கு உரைப்பவர்கள்.
10 તત્રાસ્માસુ બહુદિનાનિ પ્રોષિતેષુ યિહૂદીયદેશાદ્ આગત્યાગાબનામા ભવિષ્યદ્વાદી સમુપસ્થિતવાન્|
அங்கே சிலநாட்கள் நாங்கள் தங்கியிருக்கையில், அகபு என்னும் பெயருடைய இறைவாக்கினன் யூதேயாவிலிருந்து வந்தான்.
11 સોસ્માકં સમીપમેત્ય પૌલસ્ય કટિબન્ધનં ગૃહીત્વા નિજહસ્તાપાદાન્ બદ્ધ્વા ભાષિતવાન્ યસ્યેદં કટિબન્ધનં તં યિહૂદીયલોકા યિરૂશાલમનગર ઇત્થં બદ્ધ્વા ભિન્નદેશીયાનાં કરેષુ સમર્પયિષ્યન્તીતિ વાક્યં પવિત્ર આત્મા કથયતિ|
அவன் எங்களிடம் வந்து, பவுலின் இடைக்கச்சையை எடுத்து, அதனால் தனது கைகளையும், கால்களையும் கட்டிக்கொண்டு இறைவாக்குரைத்தான். அவன் சொன்னதாவது: “இந்த இடைக்கச்சைக்குச் சொந்தமானவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டி, அவனை யூதரல்லாத மக்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்கிறார்” என்றான்.
12 એતાદૃશીં કથાં શ્રુત્વા વયં તન્નગરવાસિનો ભ્રાતરશ્ચ યિરૂશાલમં ન યાતું પૌલં વ્યનયામહિ;
நாங்கள் இதைக் கேட்டபோது, நாங்களும் அங்கிருந்த மக்களும் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று பவுலைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம்.
13 કિન્તુ સ પ્રત્યાવાદીત્, યૂયં કિં કુરુથ? કિં ક્રન્દનેન મમાન્તઃકરણં વિદીર્ણં કરિષ્યથ? પ્રભો ર્યીશો ર્નામ્નો નિમિત્તં યિરૂશાલમિ બદ્ધો ભવિતું કેવલ તન્ન પ્રાણાન્ દાતુમપિ સસજ્જોસ્મિ|
அப்பொழுது பவுல் எங்களிடம், “நீங்கள் ஏன் அழுது என் இருதயத்தை கலங்கப் பண்ணுகிறீர்கள்? கர்த்தராகிய இயேசுவின் பெயருக்காக நான் எருசலேமில் கட்டி சிறையிடப்படுவதற்கு மட்டுமல்ல, இறப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான்.
14 તેનાસ્માકં કથાયામ્ અગૃહીતાયામ્ ઈશ્વરસ્ય યથેચ્છા તથૈવ ભવત્વિત્યુક્ત્વા વયં નિરસ્યામ|
நாங்கள் சொல்லியும் பவுல் கேட்காததினால், “கர்த்தருடைய சித்தத்தின்படி நடக்கட்டும்” என்று சொல்லி, நாங்கள் பேசாமல் இருந்தோம்.
15 પરેઽહનિ પાથેયદ્રવ્યાણિ ગૃહીત્વા યિરૂશાલમં પ્રતિ યાત્રામ્ અકુર્મ્મ|
இதன்பின், நாங்கள் பயணத்திற்கு ஆயத்தமாகி எருசலேமுக்குப் புறப்பட்டோம்.
16 તતઃ કૈસરિયાનગરનિવાસિનઃ કતિપયાઃ શિષ્યા અસ્માભિઃ સાર્દ્ધમ્ ઇત્વા કૃપ્રીયેન મ્નાસન્નામ્ના યેન પ્રાચીનશિષ્યેન સાર્દ્ધમ્ અસ્માભિ ર્વસ્તવ્યં તસ્ય સમીપમ્ અસ્માન્ નીતવન્તઃ|
செசரியாவிலிருந்து சில சீடர்கள் எங்களுடனேகூட வந்து, நாங்கள் தங்குவதற்கு எங்களை மினாசோனுடைய வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். அவன் சீப்புரு தீவைச் சேர்ந்தவனும், தொடக்கத்திலேயே சீடர்களானவர்களில் ஒருவனுமாய் இருந்தான்.
17 અસ્માસુ યિરૂશાલમ્યુપસ્થિતેષુ તત્રસ્થભ્રાતૃગણોઽસ્માન્ આહ્લાદેન ગૃહીતવાન્|
நாங்கள் எருசலேமுக்கு வந்து சேர்ந்தபோது, அங்கிருந்த சகோதரர் எங்களை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.
18 પરસ્મિન્ દિવસે પૌલેઽસ્માભિઃ સહ યાકૂબો ગૃહં પ્રવિષ્ટે લોકપ્રાચીનાઃ સર્વ્વે તત્ર પરિષદિ સંસ્થિતાઃ|
மறுநாள் பவுலும், நாங்களும் யாக்கோபைச் சந்திக்கும்படி போனோம். எருசலேம் திருச்சபையின் தலைவர்கள் அனைவரும் அங்கே இருந்தார்கள்.
19 અનન્તરં સ તાન્ નત્વા સ્વીયપ્રચારણેન ભિન્નદેશીયાન્ પ્રતીશ્વરો યાનિ કર્મ્માણિ સાધિતવાન્ તદીયાં કથામ્ અનુક્રમાત્ કથિતવાન્|
பவுல் அவர்களை வாழ்த்தி, தனது ஊழியத்தின் மூலம் இறைவன் யூதரல்லாதவர் மத்தியில் செய்தவற்றைக் குறித்து விவரமாய் விளக்கிச்சொன்னான்.
20 ઇતિ શ્રુત્વા તે પ્રભું ધન્યં પ્રોચ્ય વાક્યમિદમ્ અભાષન્ત, હે ભ્રાત ર્યિહૂદીયાનાં મધ્યે બહુસહસ્રાણિ લોકા વિશ્વાસિન આસતે કિન્તુ તે સર્વ્વે વ્યવસ્થામતાચારિણ એતત્ પ્રત્યક્ષં પશ્યસિ|
அவர்கள் இதைக் கேட்டபோது, இறைவனைத் துதித்தார்கள். பின்பு அவர்கள் பவுலிடம்: “சகோதரனே, யூதருக்குள் ஆயிரக்கணக்கானோர் விசுவாசித்திருக்கிறார்கள் என்று நீ காண்கிறாயே. அவர்கள் அனைவரும் மோசேயின் சட்டத்தைக்குறித்து ஆர்வம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
21 શિશૂનાં ત્વક્છેદનાદ્યાચરણં પ્રતિષિધ્ય ત્વં ભિન્નદેશનિવાસિનો યિહૂદીયલોકાન્ મૂસાવાક્યમ્ અશ્રદ્ધાતુમ્ ઉપદિશસીતિ તૈઃ શ્રુતમસ્તિ|
யூதரல்லாதவர்களின் மத்தியில் வாழும் யூதருக்கும், அவர்கள் மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்வதை விட்டுவிட வேண்டும் என்று நீ போதிக்கிறதாக இங்குள்ள யூதருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும், அவர்களுடைய பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்யக்கூடாது என்றும், யூத முறைகளைக் கைக்கொள்ளக்கூடாது என்றும் நீ போதிக்கிறதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
22 ત્વમત્રાગતોસીતિ વાર્ત્તાં સમાકર્ણ્ય જનનિવહો મિલિત્વાવશ્યમેવાગમિષ્યતિ; અતએવ કિં કરણીયમ્? અત્ર વયં મન્ત્રયિત્વા સમુપાયં ત્વાં વદામસ્તં ત્વમાચર|
ஆகவே நாம் செய்யக்கூடியது என்ன? நீ இங்கே வந்திருப்பதை அவர்கள் நிச்சயமாய் கேள்விப்படுவார்கள்.
23 વ્રતં કર્ત્તું કૃતસઙ્કલ્પા યેઽસ્માંક ચત્વારો માનવાઃ સન્તિ
எனவே, நாங்கள் உனக்குச் சொல்வதைச் செய். இங்கே நேர்த்திக்கடன் செய்திருக்கிற நான்குபேர் எங்களிடம் இருக்கிறார்கள்.
24 તાન્ ગૃહીત્વા તૈઃ સહિતઃ સ્વં શુચિં કુરુ તથા તેષાં શિરોમુણ્ડને યો વ્યયો ભવતિ તં ત્વં દેહિ| તથા કૃતે ત્વદીયાચારે યા જનશ્રુતિ ર્જાયતે સાલીકા કિન્તુ ત્વં વિધિં પાલયન્ વ્યવસ્થાનુસારેણેવાચરસીતિ તે ભોત્સન્તે|
இவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், இவர்கள் செய்யும் பாரம்பரிய சுத்திகரிப்பு முறைமைகளில் நீயும் சேர்ந்துகொள்; இவர்கள் மொட்டையடிப்பதற்கான செலவை நீ செலுத்து. அப்பொழுது அனைவரும் உன்னைப்பற்றித் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட காரியங்களில் எவ்வித உண்மையும் இல்லையென்றும், நீயும் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்தே வாழ்கிறாய் என்றும் அறிந்துகொள்வார்கள்.
25 ભિન્નદેશીયાનાં વિશ્વાસિલોકાનાં નિકટે વયં પત્રં લિખિત્વેત્થં સ્થિરીકૃતવન્તઃ, દેવપ્રસાદભોજનં રક્તં ગલપીડનમારિતપ્રાણિભોજનં વ્યભિચારશ્ચૈતેભ્યઃ સ્વરક્ષણવ્યતિરેકેણ તેષામન્યવિધિપાલનં કરણીયં ન|
யூதரல்லாத விசுவாசிகளைக் குறித்தோ, நாங்கள் எங்கள் தீர்மானத்தை அவர்களுக்கு எழுதியிருக்கிறோம்; அவர்கள் இறைவன் அல்லாதவைகளுக்குப் பலியிடப்பட்ட உணவையும் இரத்தத்தையும் நெரிக்கப்பட்ட மிருகத்தின் இறைச்சியையும் தவிர்க்கவேண்டும் என்றும், முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடக்கூடாது என்றும் எழுதியிருக்கிறோம்” என்றார்கள்.
26 તતઃ પૌલસ્તાન્ માનુષાનાદાય પરસ્મિન્ દિવસે તૈઃ સહ શુચિ ર્ભૂત્વા મન્દિરં ગત્વા શૌચકર્મ્મણો દિનેષુ સમ્પૂર્ણેષુ તેષામ્ એકૈકાર્થં નૈવેદ્યાદ્યુત્સર્ગો ભવિષ્યતીતિ જ્ઞાપિતવાન્|
மறுநாள் பவுல் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுடனே தானும் பாரம்பரிய முறைப்படி தன்னைச் சுத்திகரித்துக் கொண்டான். பின்பு அவன் சுத்திகரிப்புக்கான நாட்கள் எப்பொழுது முடிவடையும் என்றும், அவர்கள் ஒவ்வொருவருக்குமான காணிக்கை எப்பொழுது செலுத்தப்படும் என்றும் அறிவிப்பதற்கு ஆலயத்திற்குப் போனான்.
27 તેષુ સપ્તસુ દિનેષુ સમાપ્તકલ્પેષુ આશિયાદેશનિવાસિનો યિહૂદીયાસ્તં મધ્યેમન્દિરં વિલોક્ય જનનિવહસ્ય મનઃસુ કુપ્રવૃત્તિં જનયિત્વા તં ધૃત્વા
அந்த ஏழு நாட்கள் முடியப்போகும் வேளையில், ஆசியா பகுதியைச் சேர்ந்த சில யூதர்கள் பவுலை ஆலயத்தில் கண்டார்கள். அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களைத் தூண்டியெழுப்பி, பவுலைப் பிடித்தார்கள்.
28 પ્રોચ્ચૈઃ પ્રાવોચન્, હે ઇસ્રાયેલ્લોકાઃ સર્વ્વે સાહાય્યં કુરુત| યો મનુજ એતેષાં લોકાનાં મૂસાવ્યવસ્થાયા એતસ્ય સ્થાનસ્યાપિ વિપરીતં સર્વ્વત્ર સર્વ્વાન્ શિક્ષયતિ સ એષઃ; વિશેષતઃ સ ભિન્નદેશીયલોકાન્ મન્દિરમ્ આનીય પવિત્રસ્થાનમેતદ્ અપવિત્રમકરોત્|
அவர்கள் சத்தமிட்டு, “இஸ்ரயேலரே, எங்களுக்கு உதவிசெய்யுங்கள்! நமது மக்களுக்கும், மோசேயின் சட்டத்திற்கும், இந்த இடத்திற்கும் விரோதமாக, எல்லா இடங்களிலும் எல்லா மக்களுக்கும் போதிக்கிறவன் இவன்தான். இவன் ஆலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த இடத்தையும் தூய்மைக் கேடாக்கிவிட்டான்” என்றார்கள்.
29 પૂર્વ્વં તે મધ્યેનગરમ્ ઇફિષનગરીયં ત્રફિમં પૌલેન સહિતં દૃષ્ટવન્ત એતસ્માત્ પૌલસ્તં મન્દિરમધ્યમ્ આનયદ્ ઇત્યન્વમિમત|
ஏனெனில் அவர்கள் எபேசியனான துரோப்பீமும், பவுலுடனே பட்டணத்தில் இருந்ததை முன்பு கண்டிருந்தார்கள். இதனால் பவுல், அவனையும் ஆலயத்திற்குள் கூட்டிக்கொண்டு வந்திருப்பான் என்று அவர்கள் நினைத்தார்கள்.
30 અતએવ સર્વ્વસ્મિન્ નગરે કલહોત્પન્નત્વાત્ ધાવન્તો લોકા આગત્ય પૌલં ધૃત્વા મન્દિરસ્ય બહિરાકૃષ્યાનયન્ તત્ક્ષણાદ્ દ્વારાણિ સર્વ્વાણિ ચ રુદ્ધાનિ|
முழுப்பட்டணமும் குழப்பமடைந்தது, எல்லாப் பகுதிகளிலும் இருந்த மக்கள் அங்கு ஓடிவந்தார்கள். அவர்கள் பவுலைப் பிடித்து, ஆலயத்திலிருந்து இழுத்துக்கொண்டு சென்றார்கள். உடனே ஆலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டன.
31 તેષુ તં હન્તુમુદ્યતેષુ યિરૂશાલમ્નગરે મહાનુપદ્રવો જાત ઇતિ વાર્ત્તાયાં સહસ્રસેનાપતેઃ કર્ણગોચરીભૂતાયાં સત્યાં સ તત્ક્ષણાત્ સૈન્યાનિ સેનાપતિગણઞ્ચ ગૃહીત્વા જવેનાગતવાન્|
அவர்கள் அவனைக் கொலைசெய்ய முயற்சிக்கையில் எருசலேம் நகரம் முழுவதும் குழப்பம் அடைந்திருக்கிறது என்ற செய்தி ரோமப் படைத்தளபதிக்கு எட்டியது.
32 તતો લોકાઃ સેનાગણેન સહ સહસ્રસેનાપતિમ્ આગચ્છન્તં દૃષ્ટ્વા પૌલતાડનાતો ન્યવર્ત્તન્ત|
அவன் உடனடியாகச் சில அதிகாரிகளையும், படைவீரரையும் கூட்டிக்கொண்டு மக்கள் கூட்டத்தை நோக்கி ஓடிவந்தான். குழப்பம் விளைவித்தவர்கள் படைத்தளபதியையும் படைவீரர்களையும் கண்டபோது, பவுலை அடிப்பதை நிறுத்திவிட்டார்கள்.
33 સ સહસ્રસેનાપતિઃ સન્નિધાવાગમ્ય પૌલં ધૃત્વા શૃઙ્ખલદ્વયેન બદ્ધમ્ આદિશ્ય તાન્ પૃષ્ટવાન્ એષ કઃ? કિં કર્મ્મ ચાયં કૃતવાન્?
படைத்தளபதி வந்து அவனைக் கைதுசெய்து, அவனை இரண்டு சங்கிலிகளினால் கட்டும்படி உத்தரவிட்டான். பின்பு அவன், இவன் யார் என்றும், என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.
34 તતો જનસમૂહસ્ય કશ્ચિદ્ એકપ્રકારં કશ્ચિદ્ અન્યપ્રકારં વાક્યમ્ અરૌત્ સ તત્ર સત્યં જ્ઞાતુમ્ કલહકારણાદ્ અશક્તઃ સન્ તં દુર્ગં નેતુમ્ આજ્ઞાપયત્|
மக்கள் கூட்டத்திலிருந்த சிலர் சத்தமிட்டு ஏதோ ஒன்றைச் சொன்னார்கள். மற்றவர்கள் வேறு எதையோ சொன்னார்கள். ஏற்பட்டிருந்த குழப்பத்தினால், படைத்தளபதிக்கு உண்மையை அறியமுடியவில்லை. எனவே அவன் பவுலைப் படையினரின் முகாமுக்குக் கொண்டுசெல்லும்படி உத்தரவிட்டான்.
35 તેષુ સોપાનસ્યોપરિ પ્રાપ્તેષુ લોકાનાં સાહસકારણાત્ સેનાગણઃ પૌલમુત્તોલ્ય નીતવાન્|
பவுல் படிக்கட்டுகளை அடைந்தபோது, கலகக்காரரை அடக்க முடியாதிருந்ததால், பவுலை படைவீரர் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது.
36 તતઃ સર્વ્વે લોકાઃ પશ્ચાદ્ગામિનઃ સન્ત એનં દુરીકુરુતેતિ વાક્યમ્ ઉચ્ચૈરવદન્|
பின்னாலே சென்ற மக்கள் கூட்டம், “அவனைக் கொல்லுங்கள்” என்று சத்தமிட்டார்கள்.
37 પૌલસ્ય દુર્ગાનયનસમયે સ તસ્મૈ સહસ્રસેનાપતયે કથિતવાન્, ભવતઃ પુરસ્તાત્ કથાં કથયિતું કિમ્ અનુમન્યતે? સ તમપૃચ્છત્ ત્વં કિં યૂનાનીયાં ભાષાં જાનાસિ?
படைவீரர் பவுலை முகாமுக்குள் கொண்டுசெல்ல முயலுகையில், அவன் படைத்தளபதியிடம், “நான் உம்முடன் கொஞ்சம் பேசலாமா?” என்று கேட்டான். அதற்கு அவன், “உனக்கு கிரேக்க மொழி தெரியுமா?
38 યો મિસરીયો જનઃ પૂર્વ્વં વિરોધં કૃત્વા ચત્વારિ સહસ્રાણિ ઘાતકાન્ સઙ્ગિનઃ કૃત્વા વિપિનં ગતવાન્ ત્વં કિં સએવ ન ભવસિ?
சிறிது காலத்துக்குமுன் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி, நாலாயிரம் பயங்கரவாதிகளை பாலைவனத்திற்கு வழிநடத்திப்போன எகிப்தியன் நீ தானா?” என்று கேட்டான்.
39 તદા પૌલોઽકથયત્ અહં કિલિકિયાદેશસ્ય તાર્ષનગરીયો યિહૂદીયો, નાહં સામાન્યનગરીયો માનવઃ; અતએવ વિનયેઽહં લાકાનાં સમક્ષં કથાં કથયિતું મામનુજાનીષ્વ|
அதற்குப் பவுல், “நான் ஒரு யூதன், சிலிசியா நாட்டைச் சேர்ந்த தர்சு பட்டணத்தைச் சேர்ந்தவன். ஒரு பிரபலமான பட்டணத்தின் குடிமகன். தயவுசெய்து இந்த மக்களுடன் நான் பேச என்னை அனுமதியும்” என்றான்.
40 તેનાનુજ્ઞાતઃ પૌલઃ સોપાનોપરિ તિષ્ઠન્ હસ્તેનેઙ્ગિતં કૃતવાન્, તસ્માત્ સર્વ્વે સુસ્થિરા અભવન્| તદા પૌલ ઇબ્રીયભાષયા કથયિતુમ્ આરભત,
படைத்தளபதியின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு, பவுல் படிக்கட்டுகளில் நின்று கூடியிருந்த மக்களுக்கு சைகை காட்டினான். அவர்கள் அனைவரும் அமைதியடைந்தபோது, அவன் எபிரெய மொழியில் அவர்களுடன் பேசத் தொடங்கினான்.