< ૨ કરિન્થિનઃ 2 >
1 અપરઞ્ચાહં પુનઃ શોકાય યુષ્મત્સન્નિધિં ન ગમિષ્યામીતિ મનસિ નિરચૈષં|
ஆகவே, நான் உங்களுக்கு வேதனையை உண்டாக்கும் இன்னுமொரு சந்திப்பை ஏற்படுத்தாமலிருக்க என் மனதில் தீர்மானித்தேன்.
2 યસ્માદ્ અહં યદિ યુષ્માન્ શોકયુક્તાન્ કરોમિ તર્હિ મયા યઃ શોકયુક્તીકૃતસ્તં વિના કેનાપરેણાહં હર્ષયિષ્યે?
நான் உங்களைத் துக்கப்படுத்தினால் என்னை மகிழ்விப்பவர்கள் யார்? என்னை துக்கப்படுத்தியது நீங்கள்தானே.
3 મમ યો હર્ષઃ સ યુષ્માકં સર્વ્વેષાં હર્ષ એવેતિ નિશ્ચિતં મયાબોધિ; અતએવ યૈરહં હર્ષયિતવ્યસ્તૈ ર્મદુપસ્થિતિસમયે યન્મમ શોકો ન જાયેત તદર્થમેવ યુષ્મભ્યમ્ એતાદૃશં પત્રં મયા લિખિતં|
இதனாலேயே, நான் இவ்வாறு உங்களுக்குக் கடிதம் எழுதினேன். நான் உங்களிடம் வரும்போது, என்னை மகிழ்விக்க வேண்டியவர்களால் நான் துக்கமடைய விரும்பவில்லை. நீங்கள் எல்லோரும் என் சந்தோஷத்தில் பங்கு கொள்வீர்கள் என்று, நான் உங்கள் எல்லோரையும் குறித்து மனவுறுதியுள்ளவனாய் இருந்தேன்.
4 વસ્તુતસ્તુ બહુક્લેશસ્ય મનઃપીડાયાશ્ચ સમયેઽહં બહ્વશ્રુપાતેન પત્રમેકં લિખિતવાન્ યુષ્માકં શોકાર્થં તન્નહિ કિન્તુ યુષ્માસુ મદીયપ્રેમબાહુલ્યસ્ય જ્ઞાપનાર્થં|
நான் மிகுந்த துன்பத்தோடும், உள்ளத்தின் வேதனையோடும், அதிக கண்ணீரோடும் உங்களுக்கு அந்தக் கடிதத்தை எழுதினேன். ஆனால், உங்களைத் துக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல, நான் உங்கள்மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை நீங்கள் அறிந்துகொள்ளும்படியாகவே நான் அப்படி எழுதினேன்.
5 યેનાહં શોકયુક્તીકૃતસ્તેન કેવલમહં શોકયુક્તીકૃતસ્તન્નહિ કિન્ત્વંશતો યૂયં સર્વ્વેઽપિ યતોઽહમત્ર કસ્મિંશ્ચિદ્ દોષમારોપયિતું નેચ્છામિ|
யாராகிலும் ஒருவன் துக்கம் உண்டாக்கி இருந்தால், அவன் என்னை மட்டுமல்ல, ஓரளவுக்கு உங்களெல்லோரையுமே துக்கப்படுத்தியிருக்கிறான். இதை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை.
6 બહૂનાં યત્ તર્જ્જનં તેન જનેનાલમ્ભિ તત્ તદર્થં પ્રચુરં|
அப்படிப்பட்டவன் உங்கள் அநேகரால் தண்டனை பெற்றிருக்கிறான். அது போதுமானது.
7 અતઃ સ દુઃખસાગરે યન્ન નિમજ્જતિ તદર્થં યુષ્માભિઃ સ ક્ષન્તવ્યઃ સાન્ત્વયિતવ્યશ્ચ|
ஆதலால், நீங்கள் இப்பொழுது அவனை மன்னித்து ஆறுதல்படுத்தவேண்டும். இல்லையெனில், அவன் அதிகமான துக்கத்தில் மூழ்கிவிடுவான்.
8 ઇતિ હેતોઃ પ્રર્થયેઽહં યુષ્માભિસ્તસ્મિન્ દયા ક્રિયતાં|
ஆனபடியால் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், மீண்டும் நீங்கள் அவனுக்கு உங்கள் அன்பை உறுதிப்படுத்துங்கள்.
9 યૂયં સર્વ્વકર્મ્મણિ મમાદેશં ગૃહ્લીથ ન વેતિ પરીક્ષિતુમ્ અહં યુષ્માન્ પ્રતિ લિખિતવાન્|
நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிகிறீர்களா என்று உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே இப்படி எழுதினேன்.
10 યસ્ય યો દોષો યુષ્માભિઃ ક્ષમ્યતે તસ્ય સ દોષો મયાપિ ક્ષમ્યતે યશ્ચ દોષો મયા ક્ષમ્યતે સ યુષ્માકં કૃતે ખ્રીષ્ટસ્ય સાક્ષાત્ ક્ષમ્યતે|
நீங்கள் யாரையாவது மன்னித்தால், நானும் அவனை மன்னிக்கிறேன். நான் மன்னிக்கவேண்டியது ஏதேனும் இருந்தால், அதை நான் உங்கள் நிமித்தம் கிறிஸ்துவினுடைய சமுகத்தில் மன்னித்திருக்கிறேன்.
11 શયતાનઃ કલ્પનાસ્માભિરજ્ઞાતા નહિ, અતો વયં યત્ તેન ન વઞ્ચ્યામહે તદર્થમ્ અસ્માભિઃ સાવધાનૈ ર્ભવિતવ્યં|
சாத்தான் நம்மைத் தனது தந்திரத்தால் வஞ்சிக்காதபடி அவ்வாறு செய்தேன். ஏனெனில், சாத்தானின் வஞ்சகதிட்டங்களை நாம் அறியாதவர்கள் அல்ல.
12 અપરઞ્ચ ખ્રીષ્ટસ્ય સુસંવાદઘોષણાર્થં મયિ ત્રોયાનગરમાગતે પ્રભોઃ કર્મ્મણે ચ મદર્થં દ્વારે મુક્તે
நான் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காகத் துரோவா பட்டணத்துக்குப் போனபோது, கர்த்தர் எனக்கு ஒரு கதவு திறந்ததைக் கண்டேன்.
13 સત્યપિ સ્વભ્રાતુસ્તીતસ્યાવિદ્યમાનત્વાત્ મદીયાત્મનઃ કાપિ શાન્તિ ર્ન બભૂવ, તસ્માદ્ અહં તાન્ વિસર્જ્જનં યાચિત્વા માકિદનિયાદેશં ગન્તું પ્રસ્થાનમ્ અકરવં|
ஆனாலும், அங்கே என் சகோதரன் தீத்துவைக் காணாதபடியால், என் உள்ளத்தில் சமாதானம் இல்லாதிருந்தது. ஆதலால், நான் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போனேன்.
14 ય ઈશ્વરઃ સર્વ્વદા ખ્રીષ્ટેનાસ્માન્ જયિનઃ કરોતિ સર્વ્વત્ર ચાસ્માભિસ્તદીયજ્ઞાનસ્ય ગન્ધં પ્રકાશયતિ સ ધન્યઃ|
இறைவனுக்கே நன்றி. அவர் எப்பொழுதும் எங்களைக் கரம்பிடித்து, கிறிஸ்துவின் வெற்றி பவனிக்குள் வழிநடத்துகிறார். இப்படி அவரைப்பற்றிய அறிவின் நறுமணம்போல் எங்கள் மூலமாக எல்லா இடங்களிலும் பரவச்செய்கிறார்.
15 યસ્માદ્ યે ત્રાણં લપ્સ્યન્તે યે ચ વિનાશં ગમિષ્યન્તિ તાન્ પ્રતિ વયમ્ ઈશ્વરેણ ખ્રીષ્ટસ્ય સૌગન્ધ્યં ભવામઃ|
ஏனெனில், இரட்சிக்கப்படுகிறவர்கள் மத்தியிலும், அழிந்து போகிறவர்கள் மத்தியிலும் நாம் இறைவனுக்கு கிறிஸ்துவின் நறுமணமாயிருக்கிறோம்.
16 વયમ્ એકેષાં મૃત્યવે મૃત્યુગન્ધા અપરેષાઞ્ચ જીવનાય જીવનગન્ધા ભવામઃ, કિન્ત્વેતાદૃશકર્મ્મસાધને કઃ સમર્થોઽસ્તિ?
ஒரு சிலருக்கு மரணத்தை ஏற்படுத்தும் துர்நாற்றமாகவும் மற்றவருக்கு வாழ்வளிக்கும் நறுமணமாகவும் இருக்கிறோம். இப்படிப்பட்ட பணியை செய்யும் ஆற்றலுள்ளவன் யார்?
17 અન્યે બહવો લોકા યદ્વદ્ ઈશ્વરસ્ય વાક્યં મૃષાશિક્ષયા મિશ્રયન્તિ વયં તદ્વત્ તન્ન મિશ્રયન્તઃ સરલભાવેનેશ્વરસ્ય સાક્ષાદ્ ઈશ્વરસ્યાદેશાત્ ખ્રીષ્ટેન કથાં ભાષામહે|
அநேகர் இறைவனுடைய வார்த்தையை, மலிவான கடைச்சரக்காக கருதி இலாபம் பெற விற்கிறார்கள். நாங்கள் அவர்களைப் போன்றவர்கள் அல்ல. மாறாக, நாங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட மனிதரைப்போல், கிறிஸ்துவில் இறைவனுக்கு முன்பாக நேர்மையுடன் அதைப் பேசுகிறோம்.