< ૧ તીમથિયઃ 1 >

1 અસ્માકં ત્રાણકર્ત્તુરીશ્વરસ્યાસ્માકં પ્રત્યાશાભૂમેઃ પ્રભો ર્યીશુખ્રીષ્ટસ્ય ચાજ્ઞાનુસારતો યીશુખ્રીષ્ટસ્ય પ્રેરિતઃ પૌલઃ સ્વકીયં સત્યં ધર્મ્મપુત્રં તીમથિયં પ્રતિ પત્રં લિખતિ|
நமது இரட்சகராகிய இறைவனுடைய கட்டளையின்படி, நமது எதிர்பார்ப்பாயிருக்கிற கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,
2 અસ્માકં તાત ઈશ્વરોઽસ્માકં પ્રભુ ર્યીશુખ્રીષ્ટશ્ચ ત્વયિ અનુગ્રહં દયાં શાન્તિઞ્ચ કુર્ય્યાસ્તાં|
விசுவாசத்தில் என் உண்மையான மகன் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் உங்களுக்குக் கிருபையும், இரக்கமும், சமாதானமும் உண்டாவதாக.
3 માકિદનિયાદેશે મમ ગમનકાલે ત્વમ્ ઇફિષનગરે તિષ્ઠન્ ઇતરશિક્ષા ન ગ્રહીતવ્યા, અનન્તેષૂપાખ્યાનેષુ વંશાવલિષુ ચ યુષ્માભિ ર્મનો ન નિવેશિતવ્યમ્
நான் மக்கெதோனியாவுக்குப் போனபோது உன்னிடம் வற்புறுத்தி வேண்டிக்கொண்டதுபோல, நீ எபேசுவிலே தங்கியிரு. அங்கே சிலர் பொய்யான கோட்பாடுகளைப் போதிக்கிறார்கள். நீ அவர்களுக்கு இனிமேலும் அப்படிச் செய்யாதபடி கட்டளையிடு.
4 ઇતિ કાંશ્ચિત્ લોકાન્ યદ્ ઉપદિશેરેતત્ મયાદિષ્ટોઽભવઃ, યતઃ સર્વ્વૈરેતૈ ર્વિશ્વાસયુક્તેશ્વરીયનિષ્ઠા ન જાયતે કિન્તુ વિવાદો જાયતે|
கட்டுக்கதைகளிலும், முடிவில்லாத வம்ச வரலாறுகளிலும் அவர்கள் ஈடுபடுவதை விட்டுவிடும்படி கட்டளையிடு. இவை வாக்குவாதத்தைப் பெருகச்செய்யுமேயல்லாமல், விசுவாசத்தின்மூலம் நடைபெற வேண்டிய இறைவனின் வேலைகளைப் பெருகச்செய்யாது.
5 ઉપદેશસ્ય ત્વભિપ્રેતં ફલં નિર્મ્મલાન્તઃકરણેન સત્સંવેદેન નિષ્કપટવિશ્વાસેન ચ યુક્તં પ્રેમ|
இந்தக் கட்டளையின் நோக்கம் அன்பே ஆகும். தூய்மையான இருதயத்திலும், நல்ல மனசாட்சியிலும், உண்மையான விசுவாசத்திலுமிருந்தே அந்த அன்பு உண்டாகிறது.
6 કેચિત્ જનાશ્ચ સર્વ્વાણ્યેતાનિ વિહાય નિરર્થકકથાનામ્ અનુગમનેન વિપથગામિનોઽભવન્,
சிலரோ இவற்றைவிட்டு வழிவிலகிப்போய், பயனற்ற பேச்சில் ஈடுபட்டுள்ளார்கள்.
7 યદ્ ભાષન્તે યચ્ચ નિશ્ચિન્વન્તિ તન્ન બુધ્યમાના વ્યવસ્થોપદેષ્ટારો ભવિતુમ્ ઇચ્છન્તિ|
அவர்கள் மோசேயின் சட்ட ஆசிரியர்களாய் இருக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தாங்கள் எதைப்பற்றிப் பேசுகிறார்கள் என்றும், தாங்கள் மனவுறுதியுடன் வலியுறுத்துவது என்ன என்றும் அறியாதிருக்கிறார்கள்.
8 સા વ્યવસ્થા યદિ યોગ્યરૂપેણ ગૃહ્યતે તર્હ્યુત્તમા ભવતીતિ વયં જાનીમઃ|
ஒருவன் மோசேயின் சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் அது நல்லது என்று நாம் அறிவோம்.
9 અપરં સા વ્યવસ્થા ધાર્મ્મિકસ્ય વિરુદ્ધા ન ભવતિ કિન્ત્વધાર્મ્મિકો ઽવાધ્યો દુષ્ટઃ પાપિષ્ઠો ઽપવિત્રો ઽશુચિઃ પિતૃહન્તા માતૃહન્તા નરહન્તા
மோசேயின் சட்டம் நீதிமான்களுக்காக அல்ல, சட்டத்தை மீறுபவர்களுக்காகவே ஆக்கப்பட்டது என்பதையும், நாம் அறிவோம். கலகக்காரர், பக்தியில்லாதவர், பாவம் செய்பவர், பரிசுத்தம் இல்லாதவர், நம்பிக்கை இல்லாதவர், தங்கள் தகப்பனையும் தாயையும் கொலைசெய்பவர், கொலைகாரர்,
10 વેશ્યાગામી પુંમૈથુની મનુષ્યવિક્રેતા મિથ્યાવાદી મિથ્યાશપથકારી ચ સર્વ્વેષામેતેષાં વિરુદ્ધા,
விபசாரம் செய்வோர், ஆண்புணர்ச்சியில் ஈடுபடுவோர், அடிமை வியாபாரம் செய்வோர், பொய்யர், பொய் சத்தியம் செய்வோர் ஆகியோருக்காகவும், நலமான போதனைக்கு மாறாக எது உள்ளதோ, அவற்றை வெளிப்படுத்தவுமே மோசேயின் சட்டம் ஆக்கப்பட்டிருக்கிறது.
11 તથા સચ્ચિદાનન્દેશ્વરસ્ય યો વિભવયુક્તઃ સુસંવાદો મયિ સમર્પિતસ્તદનુયાયિહિતોપદેશસ્ય વિપરીતં યત્ કિઞ્ચિદ્ ભવતિ તદ્વિરુદ્ધા સા વ્યવસ્થેતિ તદ્ગ્રાહિણા જ્ઞાતવ્યં|
அந்த நலமான போதனையோ, மகிமையுள்ள இறைவனுடைய மேன்மையான நற்செய்திக்கு ஒத்ததாயிருக்கிறது. இந்த நற்செய்தியை இறைவன் என்னிடம் ஒப்படைத்துள்ளார்.
12 મહ્યં શક્તિદાતા યોઽસ્માકં પ્રભુઃ ખ્રીષ્ટયીશુસ્તમહં ધન્યં વદામિ|
எனது கர்த்தர் கிறிஸ்து இயேசுவுக்கு, நான் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் அவரே எனக்குப் பெலன் கொடுத்து, என்னை உண்மையுள்ளவனென்று கருதியபடியால், தம் பணியில் என்னை நியமித்தார்.
13 યતઃ પુરા નિન્દક ઉપદ્રાવી હિંસકશ્ચ ભૂત્વાપ્યહં તેન વિશ્વાસ્યો ઽમન્યે પરિચારકત્વે ન્યયુજ્યે ચ| તદ્ અવિશ્વાસાચરણમ્ અજ્ઞાનેન મયા કૃતમિતિ હેતોરહં તેનાનુકમ્પિતોઽભવં|
நான் முன்னொரு காலத்தில் இறைவனை நிந்தனை செய்கிறவனாகவும், சபையைத் துன்புறுத்துகிறவனாகவும், வன்முறை செய்கிற மனிதனாகவும் இருந்தேன். ஆனால் நான் அறியாமையினாலும், அவிசுவாசத்தினாலும் அப்படிச் செய்தபடியினால், எனக்கு இரக்கம் காட்டப்பட்டது.
14 અપરં ખ્રીષ્ટે યીશૌ વિશ્વાસપ્રેમભ્યાં સહિતોઽસ્મત્પ્રભોરનુગ્રહો ઽતીવ પ્રચુરોઽભત્|
நமது கர்த்தரின் கிருபை என்மேல் நிறைவாக ஊற்றப்பட்டது. அத்துடன் கிறிஸ்து இயேசுவிலுள்ள விசுவாசமும், அன்பும்கூட கொடுக்கப்பட்டது.
15 પાપિનઃ પરિત્રાતું ખ્રીષ્ટો યીશુ ર્જગતિ સમવતીર્ણોઽભવત્, એષા કથા વિશ્વાસનીયા સર્વ્વૈ ગ્રહણીયા ચ|
இதோ, இது ஒரு நம்பத்தகுந்த வார்த்தை, எல்லோரும் இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டியதாகும்: பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். அவர்களில் மிக மோசமானவன் நானே.
16 તેષાં પાપિનાં મધ્યેઽહં પ્રથમ આસં કિન્તુ યે માનવા અનન્તજીવનપ્રાપ્ત્યર્થં તસ્મિન્ વિશ્વસિષ્યન્તિ તેષાં દૃષ્ટાન્તે મયિ પ્રથમે યીશુના ખ્રીષ્ટેન સ્વકીયા કૃત્સ્ના ચિરસહિષ્ણુતા યત્ પ્રકાશ્યતે તદર્થમેવાહમ્ અનુકમ્પાં પ્રાપ્તવાન્| (aiōnios g166)
பாவிகளில் மிக மோசமானவனான எனக்கு இந்தக் காரணத்தினாலேயே இரக்கம் காட்டப்பட்டது. ஏனெனில் இனிமேல், கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைப்பதனால் நித்திய வாழ்வைப் பெறுகிறவர்களுக்கு, அவர் அளவற்ற பொறுமையைக் காண்பிப்பார் என்பதன் எடுத்துக்காட்டாய் நான் இருக்கவேண்டும் என்றே என்மேல் முடிவில்லாத பொறுமை காட்டப்பட்டது. (aiōnios g166)
17 અનાદિરક્ષયોઽદૃશ્યો રાજા યોઽદ્વિતીયઃ સર્વ્વજ્ઞ ઈશ્વરસ્તસ્ય ગૌરવં મહિમા ચાનન્તકાલં યાવદ્ ભૂયાત્| આમેન્| (aiōn g165)
அழியாமையுடையவரும், பார்வைக்கு காணப்படாதவரும், நித்திய அரசருமாய் இருக்கிற, ஒரே ஒருவரான இறைவனுக்கே என்றென்றும் கனமும், மகிமையும் கொடுக்கப்படுவதாக. ஆமென். (aiōn g165)
18 હે પુત્ર તીમથિય ત્વયિ યાનિ ભવિષ્યદ્વાક્યાનિ પુરા કથિતાનિ તદનુસારાદ્ અહમ્ એનમાદેશં ત્વયિ સમર્પયામિ, તસ્યાભિપ્રાયોઽયં યત્ત્વં તૈ ર્વાક્યૈરુત્તમયુદ્ધં કરોષિ
என் மகனாகிய தீமோத்தேயுவே, முன்பு உன்னைப்பற்றிக் கூறப்பட்ட இறைவாக்கின்படியே, இந்தக் கட்டளையை நான் உனக்குக் கொடுக்கிறேன். நீ இவற்றைக் கைக்கொள்வதனால் நல்ல போராட்டத்தை போராடு.
19 વિશ્વાસં સત્સંવેદઞ્ચ ધારયસિ ચ| અનયોઃ પરિત્યાગાત્ કેષાઞ્ચિદ્ વિશ્વાસતરી ભગ્નાભવત્|
விசுவாசத்தையும் நல்மனசாட்சியையும் பற்றிப்பிடித்துக்கொண்டு, உறுதியுடன் போராடு. சிலரோ நல்ல மனசாட்சியைப் புறக்கணித்ததால், தங்கள் விசுவாசத்தைப் பாறையில் மோதிய கப்பலைப்போல் ஆக்கினார்கள்.
20 હુમિનાયસિકન્દરૌ તેષાં યૌ દ્વૌ જનૌ, તૌ યદ્ ધર્મ્મનિન્દાં પુન ર્ન કર્ત્તું શિક્ષેતે તદર્થં મયા શયતાનસ્ય કરે સમર્પિતૌ|
அவர்களில் இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள். அவர்கள் இறைவனைப்பற்றி நிந்தித்து பேசாதிருக்கும்படி, நான் அவர்களை சாத்தானிடம் ஒப்புக்கொடுத்தேன்.

< ૧ તીમથિયઃ 1 >