< ૧ યોહનઃ 2 >

1 હે પ્રિયબાલકાઃ, યુષ્માભિ ર્યત્ પાપં ન ક્રિયેત તદર્થં યુષ્માન્ પ્રત્યેતાનિ મયા લિખ્યન્તે| યદિ તુ કેનાપિ પાપં ક્રિયતે તર્હિ પિતુઃ સમીપે ઽસ્માકં એકઃ સહાયો ઽર્થતો ધાર્મ્મિકો યીશુઃ ખ્રીષ્ટો વિદ્યતે|
என் அன்பான பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு நான் உங்களுக்கு இதை எழுதுகிறேன். ஆனால், யாராவது பாவம்செய்தால், நமக்காக பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிற ஒருவர் இருக்கிறார். நீதியுள்ளவரான இயேசுகிறிஸ்துவே அவர்.
2 સ ચાસ્માકં પાપાનાં પ્રાયશ્ચિત્તં કેવલમસ્માકં નહિ કિન્તુ લિખિલસંસારસ્ય પાપાનાં પ્રાયશ્ચિત્તં|
நம்முடைய பாவங்களுக்கான நிவாரணப்பலி அவரே. நம்முடைய பாவங்களுக்கு மாத்திரமல்ல, முழு உலகத்தவருடைய பாவங்களுக்குமான நிவாரணப்பலி அவரே.
3 વયં તં જાનીમ ઇતિ તદીયાજ્ઞાપાલનેનાવગચ્છામઃ|
இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், நாம் அவரை அறிந்திருக்கிறோம் என்பதை உறுதியாய் அறிந்துகொள்கிறோம்.
4 અહં તં જાનામીતિ વદિત્વા યસ્તસ્યાજ્ઞા ન પાલયતિ સો ઽનૃતવાદી સત્યમતઞ્ચ તસ્યાન્તરે ન વિદ્યતે|
“இறைவனை நான் அறிந்திருக்கிறேன்” என்று சொல்லும் ஒருவன், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாவிட்டால் அவன் ஒரு பொய்யன்; சத்தியம் அவனுக்குள் இல்லை.
5 યઃ કશ્ચિત્ તસ્ય વાક્યં પાલયતિ તસ્મિન્ ઈશ્વરસ્ય પ્રેમ સત્યરૂપેણ સિધ્યતિ વયં તસ્મિન્ વર્ત્તામહે તદ્ એતેનાવગચ્છામઃ|
ஆனால் யாராவது, இறைவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தால், இறைவனின் அன்பு உண்மையிலேயே அவனில் முழுநிறைவு பெறுகிறது. நாம் இறைவனில் இருக்கிறோம் என்பதை இவ்விதமாகத்தான் அறிந்துகொள்கிறோம்:
6 અહં તસ્મિન્ તિષ્ઠામીતિ યો ગદતિ તસ્યેદમ્ ઉચિતં યત્ ખ્રીષ્ટો યાદૃગ્ આચરિતવાન્ સો ઽપિ તાદૃગ્ આચરેત્|
ஒருவன் தான் இறைவனில் வாழ்வதாகச் சொல்லிக்கொண்டால், அவன் இயேசுவைப் போலவே தானும் நடக்கவேண்டும்.
7 હે પ્રિયતમાઃ, યુષ્માન્ પ્રત્યહં નૂતનામાજ્ઞાં લિખામીતિ નહિ કિન્ત્વાદિતો યુષ્માભિ ર્લબ્ધાં પુરાતનામાજ્ઞાં લિખામિ| આદિતો યુષ્માભિ ર્યદ્ વાક્યં શ્રુતં સા પુરાતનાજ્ઞા|
அன்பான நண்பர்களே, நான் உங்களுக்கு எழுதும் செய்தி ஒரு புதிய கட்டளை அல்ல; பழைய கட்டளையைத்தான் எழுதுகிறேன். அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்று நீங்கள் கேட்ட செய்தியே அந்த முந்திய கட்டளை.
8 પુનરપિ યુષ્માન્ પ્રતિ નૂતનાજ્ઞા મયા લિખ્યત એતદપિ તસ્મિન્ યુષ્માસુ ચ સત્યં, યતો ઽન્ધકારો વ્યત્યેતિ સત્યા જ્યોતિશ્ચેદાનીં પ્રકાશતે;
ஆனால், இது ஒரு புதிய கட்டளையாகவும் இருக்கிறது; இந்த சத்தியம் கிறிஸ்துவிலும் உங்களிலும் காணப்படுகிறது. ஏனெனில் இருள் அகன்றுபோகிறது, சத்திய ஒளி பிரகாசிக்கத் தொடங்கியிருக்கிறது.
9 અહં જ્યોતિષિ વર્ત્ત ઇતિ ગદિત્વા યઃ સ્વભ્રાતરં દ્વેષ્ટિ સો ઽદ્યાપિ તમિસ્રે વર્ત્તતે|
தான் இறைவனுடைய ஒளியில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் யாராவது, தன் சகோதரனை வெறுத்தால், அவன் இன்னும் இருளில்தான் இருக்கிறான்.
10 સ્વભ્રાતરિ યઃ પ્રીયતે સ એવ જ્યોતિષિ વર્ત્તતે વિઘ્નજનકં કિમપિ તસ્મિન્ ન વિદ્યતે|
தன் சகோதரனை நேசிக்கிறவனோ, இறைவனுடைய வெளிச்சத்தில் இருக்கிறான். மற்றவர்களை இடறிவிழச் செய்யத்தக்க எதுவும் அவனுக்குள் இல்லை.
11 કિન્તુ સ્વભ્રાતરં યો દ્વેષ્ટિ સ તિમિરે વર્ત્તતે તિમિરે ચરતિ ચ તિમિરેણ ચ તસ્ય નયને ઽન્ધીક્રિયેતે તસ્માત્ ક્ક યામીતિ સ જ્ઞાતું ન શક્નોતિ|
ஆனால் யாராவது தன் சகோதரனை வெறுத்தால், அவன் இருளிலேயே இருக்கிறான், அவன் இருளிலேயே நடக்கிறான்; தான் எங்கு போகிறான் என்றும் அவன் அறியாதிருக்கிறான். ஏனெனில், இருள் அவனைக் குருடாக்கிவிட்டது.
12 હે શિશવઃ, યૂયં તસ્ય નામ્ના પાપક્ષમાં પ્રાપ્તવન્તસ્તસ્માદ્ અહં યુષ્માન્ પ્રતિ લિખામિ|
அன்பான பிள்ளைகளே, அவருடைய பெயரின் நிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
13 હે પિતરઃ, ય આદિતો વર્ત્તમાનસ્તં યૂયં જાનીથ તસ્માદ્ યુષ્માન્ પ્રતિ લિખામિ| હે યુવાનઃ યૂયં પાપત્માનં જિતવન્તસ્તસ્માદ્ યુષ્માન્ પ્રતિ લિખામિ| હે બાલકાઃ, યૂયં પિતરં જાનીથ તસ્માદહં યુષ્માન્ પ્રતિ લિખિતવાન્|
தந்தையரே, தொடக்கத்திலிருந்தே இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞரே, தீயவனை நீங்கள் மேற்கொண்டிருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
14 હે પિતરઃ, આદિતો યો વર્ત્તમાનસ્તં યૂયં જાનીથ તસ્માદ્ યુષ્માન્ પ્રતિ લિખિતવાન્| હે યુવાનઃ, યૂયં બલવન્ત આધ્વે, ઈશ્વરસ્ય વાક્યઞ્ચ યુષ્મદન્તરે વર્તતે પાપાત્મા ચ યુષ્માભિઃ પરાજિગ્યે તસ્માદ્ યુષ્માન્ પ્રતિ લિખિતવાન્|
அன்பான பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். தந்தையரே, தொடக்கத்திலிருந்தே இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞரே, நீங்கள் பலம் உள்ளவர்களாகவும், இறைவனுடைய வார்த்தை உங்களுக்குள் குடியிருப்பதாலும், நீங்கள் தீயவனை மேற்கொண்டிருப்பதாலும், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
15 યૂયં સંસારે સંસારસ્થવિષયેષુ ચ મા પ્રીયધ્વં યઃ સંસારે પ્રીયતે તસ્યાન્તરે પિતુઃ પ્રેમ ન તિષ્ઠતિ|
உலகத்திலும் உலகத்திலுள்ள எவற்றிலும் அன்புகொள்ள வேண்டாம். யாராவது உலகத்தில் அன்புகொள்வானாகில், பிதாவின் அன்பு அவனில் இல்லை.
16 યતઃ સંસારે યદ્યત્ સ્થિતમ્ અર્થતઃ શારીરિકભાવસ્યાભિલાષો દર્શનેન્દ્રિયસ્યાભિલાષો જીવનસ્ય ગર્વ્વશ્ચ સર્વ્વમેતત્ પિતૃતો ન જાયતે કિન્તુ સંસારદેવ|
ஏனெனில் உலகத்திலுள்ளவைகளான சரீர ஆசைகள், கண்களின் ஆசை, வாழ்வின் பெருமை ஆகிய எல்லாம் பிதாவினிடத்திலிருந்து வருவதில்லை; இவை உலகத்திலிருந்தே வருகின்றன.
17 સંસારસ્તદીયાભિલાષશ્ચ વ્યત્યેતિ કિન્તુ ય ઈશ્વરસ્યેષ્ટં કરોતિ સો ઽનન્તકાલં યાવત્ તિષ્ઠતિ| (aiōn g165)
உலகமும் உலகத்திற்குரிய ஆசைகளும் நிலையற்று மறைந்துபோகின்றன. ஆனால் இறைவனுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் வாழ்கிறான். (aiōn g165)
18 હે બાલકાઃ, શેષકાલોઽયં, અપરં ખ્રીષ્ટારિણોપસ્થાવ્યમિતિ યુષ્માભિ ર્યથા શ્રુતં તથા બહવઃ ખ્રીષ્ટારય ઉપસ્થિતાસ્તસ્માદયં શેષકાલોઽસ્તીતિ વયં જાનીમઃ|
அன்பான பிள்ளைகளே, இதுவே கடைசி மணிவேளை; கிறிஸ்து விரோதி வருவான் என நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறபடி, கிறிஸ்து விரோதிகள் பலர் இப்பொழுதே வந்திருக்கிறார்கள். இதனாலேயே, இதுவே கடைசி மணிவேளை என்று நாம் அறிந்துகொள்கிறோம்.
19 તે ઽસ્મન્મધ્યાન્ નિર્ગતવન્તઃ કિન્ત્વસ્મદીયા નાસન્ યદ્યસ્મદીયા અભવિષ્યન્ તર્હ્યસ્મત્સઙ્ગે ઽસ્થાસ્યન્, કિન્તુ સર્વ્વે ઽસ્મદીયા ન સન્ત્યેતસ્ય પ્રકાશ આવશ્યક આસીત્|
நம்மைவிட்டு அவர்கள் பிரிந்து போனார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களாய் இருந்திருந்தால், அவர்கள் நம்மோடு தொடர்ந்து இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் பிரிந்துபோனது, அவர்களில் எவருமே நம்மைச் சேர்ந்தவர்களல்ல என்பதைக் காட்டியது.
20 યઃ પવિત્રસ્તસ્માદ્ યૂયમ્ અભિષેકં પ્રાપ્તવન્તસ્તેન સર્વ્વાણિ જાનીથ|
ஆனால் நீங்களோ, பரிசுத்த ஆவியானவரிடமிருந்து அபிஷேகம் பெற்றிருக்கிறீர்கள். மேலும் நீங்கள் எல்லோரும் சத்தியத்தை அறிந்திருக்கிறீர்கள்.
21 યૂયં સત્યમતં ન જાનીથ તત્કારણાદ્ અહં યુષ્માન્ પ્રતિ લિખિતવાન્ તન્નહિ કિન્તુ યૂયં તત્ જાનીથ સત્યમતાચ્ચ કિમપ્યનૃતવાક્યં નોત્પદ્યતે તત્કારણાદેવ|
உங்களுக்கு சத்தியம் தெரியாது என்பதற்காக அல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறீர்கள் என்பதாலும், சத்தியத்திலிருந்து பொய் ஒருபோதும் வருவதில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பதாலுமே நான் இதை எழுதுகிறேன்.
22 યીશુરભિષિક્તસ્ત્રાતેતિ યો નાઙ્ગીકરોતિ તં વિના કો ઽપરો ઽનૃતવાદી ભવેત્? સ એવ ખ્રીષ્ટારિ ર્યઃ પિતરં પુત્રઞ્ચ નાઙ્ગીકરોતિ|
யார் பொய்யன்? மனிதனாக வந்த இயேசுவை கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனே பொய்யன். இப்படிப்பட்டவனே கிறிஸ்து விரோதி, அவன் பிதாவையும் அவருடைய மகனையும் மறுதலிக்கிறான்.
23 યઃ કશ્ચિત્ પુત્રં નાઙ્ગીકરોતિ સ પિતરમપિ ન ધારયતિ યશ્ચ પુત્રમઙ્ગીકરોતિ સ પિતરમપિ ધારયતિ|
மகனை மறுதலிக்கிற எவனுடனும் பிதா இருப்பதில்லை; மகனை ஏற்றுக்கொள்கிறவனோடுதான் பிதாவும் இருக்கிறார்.
24 આદિતો યુષ્માભિ ર્યત્ શ્રુતં તદ્ યુષ્માસુ તિષ્ઠતુ, આદિતઃ શ્રુતં વાક્યં યદિ યુષ્માસુ તિષ્ઠતિ, તર્હિ યૂયમપિ પુત્રે પિતરિ ચ સ્થાસ્યથ|
எனவே, நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்தவை, உங்களில் நிலைத்திருக்கும்படி கவனமாயிருங்கள். அவை அப்படி நிலைத்திருந்தால், நீங்கள் மகனாகிய கிறிஸ்துவிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.
25 સ ચ પ્રતિજ્ઞયાસ્મભ્યં યત્ પ્રતિજ્ઞાતવાન્ તદ્ અનન્તજીવનં| (aiōnios g166)
அவர் நமக்குத் தருவதாக வாக்குக்கொடுத்திருக்கிற நித்தியவாழ்வு இதுவே. (aiōnios g166)
26 યે જના યુષ્માન્ ભ્રામયન્તિ તાનધ્યહમ્ ઇદં લિખિતવાન્|
உங்களை வழிவிலகப்பண்ண முயற்சிக்கிறவர்களின் சூழ்ச்சியை எண்ணியே உங்களுக்கு இவற்றை நான் எழுதுகிறேன்.
27 અપરં યૂયં તસ્માદ્ યમ્ અભિષેકં પ્રાપ્તવન્તઃ સ યુષ્માસુ તિષ્ઠતિ તતઃ કોઽપિ યદ્ યુષ્માન્ શિક્ષયેત્ તદ્ અનાવશ્યકં, સ ચાભિષેકો યુષ્માન્ સર્વ્વાણિ શિક્ષયતિ સત્યશ્ચ ભવતિ ન ચાતથ્યઃ, અતઃ સ યુષ્માન્ યદ્વદ્ અશિક્ષયત્ તદ્વત્ તત્ર સ્થાસ્યથ|
உங்களைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகம் உங்களில் இன்னும் நிலைத்திருக்கிறது. அதனால், வேறு யாரும் உங்களுக்குக் போதிக்கவேண்டிய அவசியம் இல்லை; பரிசுத்த ஆவியானவரே உங்களுக்கு எல்லாவற்றையும் போதிப்பார். அவருடைய போதனை சத்தியமாயிருக்கிறது; அது போலியானது அல்ல. ஆகவே, ஆவியானவர் போதித்தபடி, கிறிஸ்துவில் நிலைத்திருங்கள்.
28 અતએવ હે પ્રિયબાલકા યૂયં તત્ર તિષ્ઠત, તથા સતિ સ યદા પ્રકાશિષ્યતે તદા વયં પ્રતિભાન્વિતા ભવિષ્યામઃ, તસ્યાગમનસમયે ચ તસ્ય સાક્ષાન્ન ત્રપિષ્યામહે|
இப்பொழுதும் அன்பான பிள்ளைகளே, நீங்கள் தொடர்ந்து கிறிஸ்துவில் வாழுங்கள். அப்படியானால், அவர் மீண்டும் வரும்போது, நாம் அவருக்கு முன்பாக மனவுறுதி உடையவர்களாயும் வெட்கப்படாதவர்களாயும் இருப்போம்.
29 સ ધાર્મ્મિકો ઽસ્તીતિ યદિ યૂયં જાનીથ તર્હિ યઃ કશ્ચિદ્ ધર્મ્માચારં કરોતિ સ તસ્માત્ જાત ઇત્યપિ જાનીત|
இறைவன் நீதியுள்ளவர் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், நீதியாய் நடக்கிற ஒவ்வொருவனும் அவரால் பிறந்த அவருடைய பிள்ளையாய் இருக்கிறான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

< ૧ યોહનઃ 2 >