< ရောမိဏး 2 >

1 ဟေ ပရဒူၐက မနုၐျ ယး ကၑ္စန တွံ ဘဝသိ တဝေါတ္တရဒါနာယ ပန္ထာ နာသ္တိ ယတော ယသ္မာတ် ကရ္မ္မဏး ပရသ္တွယာ ဒူၐျတေ တသ္မာတ် တွမပိ ဒူၐျသေ, ယတသ္တံ ဒူၐယန္နပိ တွံ တဒွဒ် အာစရသိ၊
மற்றவர்களை நியாயந்தீர்க்கிறவனே, நீ சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. ஏனெனில் எந்தக் காரியங்களில் நீ மற்றவர்களை நியாயந்தீர்க்கிறாயோ, அதே காரியங்களை நீ செய்கிறபடியால், நீ உன்னையே குற்றவாளியெனத் தீர்ப்புச் செய்கிறாய்.
2 ကိန္တွေတာဒၖဂါစာရိဘျော ယံ ဒဏ္ဍမ် ဤၑွရော နိၑ္စိနောတိ သ ယထာရ္ထ ဣတိ ဝယံ ဇာနီမး၊
இப்படி நடக்கிறவர்களுக்கு விரோதமான இறைவனுடைய நியாயத்தீர்ப்பு, சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம்.
3 အတဧဝ ဟေ မာနုၐ တွံ ယာဒၖဂါစာရိဏော ဒူၐယသိ သွယံ ယဒိ တာဒၖဂါစရသိ တရှိ တွမ် ဤၑွရဒဏ္ဍာတ် ပလာယိတုံ ၑက္ၐျသီတိ ကိံ ဗုဓျသေ?
ஆகவே நீ ஒரு அற்ப மனிதனாயிருந்தும், நீ மற்றவர்களை நியாயந்தீர்க்கிறாயே. அதே காரியங்களை நீயே செய்யும்போது, இறைவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்புவாய் என்று நினைக்கிறாயா?
4 အပရံ တဝ မနသး ပရိဝရ္တ္တနံ ကရ္တ္တုမ် ဣၑွရသျာနုဂြဟော ဘဝတိ တန္န ဗုဒ္ဓွာ တွံ ကိံ တဒီယာနုဂြဟက္ၐမာစိရသဟိၐ္ဏုတွနိဓိံ တုစ္ဆီကရောၐိ?
அல்லது, இறைவனுடைய தயவு உன்னை மனந்திரும்புதலுக்கு வழிநடத்துகிறது என்று உணராமல், அவருடைய தயவு, சகிப்புத்தன்மை, பொறுமை ஆகியவற்றின் நிறைவை ஏளனம் பண்ணுகிறாயா?
5 တထာ သွာန္တးကရဏသျ ကဌောရတွာတ် ခေဒရာဟိတျာစ္စေၑွရသျ နျာယျဝိစာရပြကာၑနသျ ကြောဓသျ စ ဒိနံ ယာဝတ် ကိံ သွာရ္ထံ ကောပံ သဉ္စိနောၐိ?
நீயோ உன் பிடிவாதத்தினாலும், மனந்திரும்பாத இருதயத்தினாலும், இறைவனின் கோபத்தை அவருடைய கோபத்தின் நாளுக்கென குவித்துக்கொண்டு வருகிறாய். அந்த நாளிலே அவருடைய நீதியான நியாயத்தீர்ப்பு வெளிப்படும்.
6 ကိန္တု သ ဧကဲကမနုဇာယ တတ္ကရ္မ္မာနုသာရေဏ ပြတိဖလံ ဒါသျတိ;
இறைவன், “ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பவே பலன் கொடுப்பார்.”
7 ဝသ္တုတသ္တု ယေ ဇနာ ဓဲရျျံ ဓၖတွာ သတ္ကရ္မ္မ ကုရွွန္တော မဟိမာ သတ္ကာရော'မရတွဉ္စဲတာနိ မၖဂယန္တေ တေဘျော'နန္တာယု ရ္ဒာသျတိ၊ (aiōnios g166)
நன்மை செய்வதில் சோர்ந்துபோகாமல், மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு இறைவன் நித்திய வாழ்வைக் கொடுப்பார். (aiōnios g166)
8 အပရံ ယေ ဇနား သတျဓရ္မ္မမ် အဂၖဟီတွာ ဝိပရီတဓရ္မ္မမ် ဂၖဟ္လန္တိ တာဒၖၑာ ဝိရောဓိဇနား ကောပံ ကြောဓဉ္စ ဘောက္ၐျန္တေ၊
ஆனால் சுயநலக்காரருக்கும், சத்தியத்தை புறக்கணித்துத் தீமையைப் பின்பற்றுகிறவர்களுக்கும் கோபமும், உக்கிரகோபமுமே இருக்கும்.
9 အာ ယိဟူဒိနော'နျဒေၑိနး ပရျျန္တံ ယာဝန္တး ကုကရ္မ္မကာရိဏး ပြာဏိနး သန္တိ တေ သရွွေ ဒုးခံ ယာတနာဉ္စ ဂမိၐျန္တိ;
தீமைசெய்கிற ஒவ்வொரு மனிதருக்கும் பிரச்சனையும் துன்பமுமே இருக்கும்: அது முதலாவது யூதருக்கும், பின்பு யூதரல்லாத மக்களுக்குமாக இருக்கும்;
10 ကိန္တု အာ ယိဟူဒိနော ဘိန္နဒေၑိပရျျန္တာ ယာဝန္တး သတ္ကရ္မ္မကာရိဏော လောကား သန္တိ တာန် ပြတိ မဟိမာ သတ္ကာရး ၑာန္တိၑ္စ ဘဝိၐျန္တိ၊
ஆனால், நன்மை செய்கிற ஒவ்வொருவருக்கும் மகிமையும், கனமும், சமாதானமும் இருக்கும். அதுவும் முதலாவது யூதருக்கும், பின்பு யூதரல்லாத மக்களுக்குமாக இருக்கும்.
11 ဤၑွရသျ ဝိစာရေ ပက္ၐပါတော နာသ္တိ၊
ஏனென்றால், இறைவன் பாரபட்சம் காட்டுவதில்லை.
12 အလဗ္ဓဝျဝသ္ထာၑာသ္တြဲ ရျဲး ပါပါနိ ကၖတာနိ ဝျဝသ္ထာၑာသ္တြာလဗ္ဓတွာနုရူပသ္တေၐာံ ဝိနာၑော ဘဝိၐျတိ; ကိန္တု လဗ္ဓဝျဝသ္ထာၑာသ္တြာ ယေ ပါပါနျကုရွွန် ဝျဝသ္ထာနုသာရာဒေဝ တေၐာံ ဝိစာရော ဘဝိၐျတိ၊
யூத சட்டத்தை அறியாதவர்களாய்ப் பாவம் செய்கிற எல்லோரும் அந்தச் சட்டத்திற்குப் புறம்பாகவே அழிவார்கள். யூத சட்டத்திற்கு உட்பட்டவர்களாய்ப் பாவம் செய்கிற எல்லோரும் அந்தச் சட்டத்தினாலேயே நியாயந்தீர்க்கப்படுவார்கள்.
13 ဝျဝသ္ထာၑြောတာရ ဤၑွရသျ သမီပေ နိၐ္ပာပါ ဘဝိၐျန္တီတိ နဟိ ကိန္တု ဝျဝသ္ထာစာရိဏ ဧဝ သပုဏျာ ဘဝိၐျန္တိ၊
ஏனெனில் மோசேயின் சட்டத்தைக் கேட்கிறவர்கள் இறைவனுடைய பார்வையில் நீதிமான்கள் அல்ல; மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்படிகிறவர்கள்தான் நீதிமான்கள் ஆக்கப்படுவார்கள்.
14 ယတော 'လဗ္ဓဝျဝသ္ထာၑာသ္တြာ ဘိန္နဒေၑီယလောကာ ယဒိ သွဘာဝတော ဝျဝသ္ထာနုရူပါန် အာစာရာန် ကုရွွန္တိ တရှျလဗ္ဓၑာသ္တြား သန္တော'ပိ တေ သွေၐာံ ဝျဝသ္ထာၑာသ္တြမိဝ သွယမေဝ ဘဝန္တိ၊
உண்மையாகவே யூதரல்லாத மக்களிடம் யூத சட்டம் இல்லாதிருந்தாலும், சட்டம் இல்லாத அவர்கள் சட்டம் சொல்லுகிற காரியங்களை இயல்பாகவே செய்கிறபொழுது, அவர்களே தங்களுக்கான சட்டமாய் இருக்கிறார்கள்.
15 တေၐာံ မနသိ သာက္ၐိသွရူပေ သတိ တေၐာံ ဝိတရ္ကေၐု စ ကဒါ တာန် ဒေါၐိဏး ကဒါ ဝါ နိရ္ဒောၐာန် ကၖတဝတ္သု တေ သွာန္တရ္လိခိတသျ ဝျဝသ္ထာၑာသ္တြသျ ပြမာဏံ သွယမေဝ ဒဒတိ၊
சட்டத்தில் சொல்லப்பட்டவைகள் தங்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருக்கின்றன என்று அவர்கள் நடைமுறைகளில் காண்பிக்கிறார்கள். அவர்களுடைய மனசாட்சியும் அதற்கு சாட்சியிடுகிறது. அவர்களுடைய சிந்தனைகளும் அவர்களை குற்றம் உண்டென்றும் குற்றம் இல்லையென்றும், சுட்டிக்காட்டுகிறது.
16 ယသ္မိန် ဒိနေ မယာ ပြကာၑိတသျ သုသံဝါဒသျာနုသာရာဒ် ဤၑွရော ယီၑုခြီၐ္ဋေန မာနုၐာဏာမ် အန္တးကရဏာနာံ ဂူဎာဘိပြာယာန် ဓၖတွာ ဝိစာရယိၐျတိ တသ္မိန် ဝိစာရဒိနေ တတ် ပြကာၑိၐျတေ၊
ஆகவே என்னுடைய நற்செய்தி அறிவிக்கிறபடியே இயேசுகிறிஸ்துவின் மூலமாக, இறைவன் மனிதர்களுடைய இரகசிய சிந்தனைகளைக்குறித்து நியாயந்தீர்க்கும் நாளில் இவ்விதமாக எல்லோருக்கும் தீர்ப்பளிப்பார்.
17 ပၑျ တွံ သွယံ ယိဟူဒီတိ ဝိချာတော ဝျဝသ္ထောပရိ ဝိၑွာသံ ကရောၐိ,
இப்பொழுது நீ உன்னை யூதன் என்று சொல்லிக்கொள்ளுகிறாய். மோசேயின் சட்டத்தின்மேல் நம்பிக்கை வைத்து இறைவனுடன் உனக்குள்ள உறவைக்குறித்து பெருமை பேசுகிறாய்.
18 ဤၑွရမုဒ္ဒိၑျ သွံ ၑ္လာဃသေ, တထာ ဝျဝသ္ထယာ ၑိက္ၐိတော ဘူတွာ တသျာဘိမတံ ဇာနာသိ, သရွွာသာံ ကထာနာံ သာရံ ဝိဝိံက္ၐေ,
அவருடைய திட்டத்தை அறிந்து மோசேயின் சட்டத்தினால் நீ அறிவுறுத்தப்பட்டு இருப்பதனால், மேன்மையானவைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாகச் சொல்லிக்கொள்ளுகிறாய்.
19 အပရံ ဇ္ဉာနသျ သတျတာယာၑ္စာကရသွရူပံ ၑာသ္တြံ မမ သမီပေ ဝိဒျတ အတော 'န္ဓလောကာနာံ မာရ္ဂဒရ္ၑယိတာ
நீ உன்னை பார்வையற்றோர்களுக்கு ஒரு வழிகாட்டி என்றும், இருளில் இருக்கிறவர்களுக்கு ஒரு வெளிச்சம் என்றும் திட்டமாய் நம்புகிறாய்.
20 တိမိရသ္ထိတလောကာနာံ မဓျေ ဒီပ္တိသွရူပေါ'ဇ္ဉာနလောကေဘျော ဇ္ဉာနဒါတာ ၑိၑူနာံ ၑိက္ၐယိတာဟမေဝေတိ မနျသေ၊
அப்படி மோசேயின் சட்டத்திலுள்ள அறிவின் உள்ளடக்கத்தையும், சத்தியத்தையும் நீ பெற்றுக்கொண்டதால், மூடர்களுக்கு அறிவு புகட்டுகிறவனாகவும், குழந்தைகளுக்கான ஆசிரியனாகவும் இருப்பதாக எண்ணுகிறாய்.
21 ပရာန် ၑိက္ၐယန် သွယံ သွံ ကိံ န ၑိက္ၐယသိ? ဝသ္တုတၑ္စော်ရျျနိၐေဓဝျဝသ္ထာံ ပြစာရယန် တွံ ကိံ သွယမေဝ စောရယသိ?
ஆகவே, மற்றவர்களுக்குப் போதிக்கிற நீ உனக்கே போதிக்கிறதில்லையா? களவு செய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்கிறாயா?
22 တထာ ပရဒါရဂမနံ ပြတိၐေဓန် သွယံ ကိံ ပရဒါရာန် ဂစ္ဆသိ? တထာ တွံ သွယံ ပြတိမာဒွေၐီ သန် ကိံ မန္ဒိရသျ ဒြဝျာဏိ ဟရသိ?
விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்கிறாயா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ, கோவில்களைக் கொள்ளையிடுகிறாயா?
23 ယသ္တွံ ဝျဝသ္ထာံ ၑ္လာဃသေ သ တွံ ကိံ ဝျဝသ္ထာမ် အဝမတျ နေၑွရံ သမ္မနျသေ?
மோசேயின் சட்டத்தைக்குறித்து பெருமை பேசுகிற நீ, மோசேயின் சட்டத்தை மீறுகிறதினால் இறைவனை கனவீனம் பண்ணலாமா?
24 ၑာသ္တြေ ယထာ လိခတိ "ဘိန္နဒေၑိနာံ သမီပေ ယုၐ္မာကံ ဒေါၐာဒ် ဤၑွရသျ နာမ္နော နိန္ဒာ ဘဝတိ၊ "
அதனால் வேதத்தில் எழுதியிருக்கிறபடி, “உங்கள் நிமித்தம் யூதரல்லாத மக்களிடையே இறைவனுடைய பெயர் நிந்திக்கப்படுகிறதே.”
25 ယဒိ ဝျဝသ္ထာံ ပါလယသိ တရှိ တဝ တွက္ဆေဒကြိယာ သဖလာ ဘဝတိ; ယတိ ဝျဝသ္ထာံ လင်္ဃသေ တရှိ တဝ တွက္ဆေဒေါ'တွက္ဆေဒေါ ဘဝိၐျတိ၊
மோசேயின் சட்டத்தை நீ கடைப்பிடித்தால் விருத்தசேதனம் பயனுள்ளதுதான். ஆனால், மோசேயின் சட்டத்தை நீ மீறுகிறபோது, விருத்தசேதனம் செய்யப்படாதவனைப்போல் ஆகிவிடுகிறாய்.
26 ယတော ဝျဝသ္ထာၑာသ္တြာဒိၐ္ဋဓရ္မ္မကရ္မ္မာစာရီ ပုမာန် အတွက္ဆေဒီ သန္နပိ ကိံ တွက္ဆေဒိနာံ မဓျေ န ဂဏယိၐျတေ?
விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள் மோசேயின் சட்டத்தில் சொல்லப்பட்டவைகளைக் கைக்கொண்டால், அவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களைப்போல எண்ணப்படமாட்டார்களா?
27 ကိန္တု လဗ္ဓၑာသ္တြၑ္ဆိန္နတွက် စ တွံ ယဒိ ဝျဝသ္ထာလင်္ဃနံ ကရောၐိ တရှိ ဝျဝသ္ထာပါလကား သွာဘာဝိကာစ္ဆိန္နတွစော လောကာသ္တွာံ ကိံ န ဒူၐယိၐျန္တိ?
தன் உடலிலே விருத்தசேதனம் செய்துகொள்ளாதவனாயிருந்தும், மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்படிகிறவன், உன்னைக் குற்றவாளியெனத் தீர்ப்பான். ஏனெனில் நீ எழுதப்பட்ட ஒழுங்குவிதியையும் விருத்தசேதனத்தையும் உடையவனாயிருந்தும்கூட அதை மீறுகிறவனாகிவிட்டாயே.
28 တသ္မာဒ် ယော ဗာဟျေ ယိဟူဒီ သ ယိဟူဒီ နဟိ တထာင်္ဂသျ ယသ္တွက္ဆေဒး သ တွက္ဆေဒေါ နဟိ;
வெளித்தோற்றத்தில் மாத்திரம் ஒருவன் யூதனாயிருந்தால், அவன் யூதனல்ல; வெறும் வெளித்தோற்றத்திற்காக உடலில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.
29 ကိန္တု ယော ဇန အာန္တရိကော ယိဟူဒီ သ ဧဝ ယိဟူဒီ အပရဉ္စ ကေဝလလိခိတယာ ဝျဝသ္ထယာ န ကိန္တု မာနသိကော ယသ္တွက္ဆေဒေါ ယသျ စ ပြၑံသာ မနုၐျေဘျော န ဘူတွာ ဤၑွရာဒ် ဘဝတိ သ ဧဝ တွက္ဆေဒး၊
ஒருவன் உள்ளத்தில் யூதனாயிருந்தால், அவனே யூதன்; எழுதப்பட்ட ஒழுங்குவிதியினால் அல்ல, பரிசுத்த ஆவியானவரால் இருதயத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே விருத்தசேதனம். இப்படிப்பட்ட மனிதனுக்குரிய புகழ்ச்சி மனிதரிடமிருந்து அல்ல, இறைவனிடமிருந்தே வருகிறது.

< ရောမိဏး 2 >