< ရောမိဏး 15 >

1 ဗလဝဒ္ဘိရသ္မာဘိ ရ္ဒုရ္ဗ္ဗလာနာံ ဒေါ်ရ္ဗ္ဗလျံ သောဎဝျံ န စ သွေၐာမ် ဣၐ္ဋာစာရ အာစရိတဝျး၊
விசுவாசத்தில் பலமுள்ளவர்களாயிருக்கிற நாம், பலவீனமாய் இருக்கிறவர்களின் தவறுகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். நம்மைப் பிரியப்படுத்தக் கூடாது.
2 အသ္မာကမ် ဧကဲကော ဇနး သွသမီပဝါသိနော ဟိတာရ္ထံ နိၐ္ဌာရ္ထဉ္စ တသျဲဝေၐ္ဋာစာရမ် အာစရတု၊
நாம் ஒவ்வொருவரும் நமது அயலவனை அவனது நன்மையின் நிமித்தம் விசுவாசத்தில் வளரச்செய்யும்படி, அவனைப் பிரியப்படுத்த வேண்டும்.
3 ယတး ခြီၐ္ဋော'ပိ နိဇေၐ္ဋာစာရံ နာစရိတဝါန်, ယထာ လိခိတမ် အာသ္တေ, တွန္နိန္ဒကဂဏသျဲဝ နိန္ဒာဘိ ရ္နိန္ဒိတော'သ္မျဟံ၊
கிறிஸ்துவுங்கூட, தம்மைப் பிரியப்படுத்துவதற்காக வாழவில்லை, “உம்மை அவமானப்படுத்தியவர்களுடைய அவமரியாதைப் பேச்சுக்கள் என்மேலே விழுந்தன” என்று கிறிஸ்துவைப்பற்றி எழுதியிருக்கின்றன.
4 အပရဉ္စ ဝယံ ယတ် သဟိၐ္ဏုတာသာန္တွနယော ရ္ဇနကေန ၑာသ္တြေဏ ပြတျာၑာံ လဘေမဟိ တန္နိမိတ္တံ ပူရွွကာလေ လိခိတာနိ သရွွဝစနာနျသ္မာကမ် ဥပဒေၑာရ္ထမေဝ လိလိခိရေ၊
முற்காலத்தில் எழுதப்பட்டவை எல்லாம் நம்முடைய போதனைக்காகவே எழுதப்பட்டிருக்கின்றன. இதனால் நாம் வேதவசனங்களில் இருந்து பொறுமையையும், உற்சாகத்தையும் பெற்று, அவற்றின் மூலமாய் நமக்கு எதிர்பார்ப்பு உள்ளவர்களாயிருக்கிறோம்.
5 သဟိၐ္ဏုတာသာန္တွနယောရာကရော ယ ဤၑွရး သ ဧဝံ ကရောတု ယတ် ပြဘု ရျီၑုခြီၐ္ဋ ဣဝ ယုၐ္မာကမ် ဧကဇနော'နျဇနေန သာရ္ဒ္ဓံ မနသ အဲကျမ် အာစရေတ်;
பொறுமையும் உற்சாகத்தையும் கொடுக்கின்ற இறைவன், நீங்கள் கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றுகையில் உங்களுக்கிடையே ஒற்றுமையின் ஆவியைத் தருவாராக.
6 ယူယဉ္စ သရွွ ဧကစိတ္တာ ဘူတွာ မုခဲကေနေဝါသ္မတ္ပြဘုယီၑုခြီၐ္ဋသျ ပိတုရီၑွရသျ ဂုဏာန် ကီရ္တ္တယေတ၊
அப்பொழுது நீங்கள் ஒரே மனதுள்ளவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவீர்கள்.
7 အပရမ် ဤၑွရသျ မဟိမ္နး ပြကာၑာရ္ထံ ခြီၐ္ဋော ယထာ ယုၐ္မာန် ပြတျဂၖဟ္လာတ် တထာ ယုၐ္မာကမပျေကော ဇနော'နျဇနံ ပြတိဂၖဟ္လာတု၊
ஆகவே, இறைவனுக்கு மகிமை உண்டாகும்படி கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டதைப் போலவே நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். இது இறைவனுக்குத் துதியைக் கொண்டுவரும்.
8 ယထာ လိခိတမ် အာသ္တေ, အတော'ဟံ သမ္မုခေ တိၐ္ဌန် ဘိန္နဒေၑနိဝါသိနာံ၊ သ္တုဝံသ္တွာံ ပရိဂါသျာမိ တဝ နာမ္နိ ပရေၑွရ။
நான் உங்களுக்குச் சொல்கிறேன், இறைவன் உண்மையுள்ளவர் என்பதைக் காண்பிப்பதற்காக, கிறிஸ்து யூதருக்கு ஊழியக்காரனாக வந்தார். இவ்விதம் இறைவன் முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை அவர் உறுதிப்படுத்தினார்.
9 တသျ ဒယာလုတွာစ္စ ဘိန္နဇာတီယာ ယဒ် ဤၑွရသျ ဂုဏာန် ကီရ္တ္တယေယုသ္တဒရ္ထံ ယီၑုး ခြီၐ္ဋသ္တွက္ဆေဒနိယမသျ နိဃ္နော'ဘဝဒ် ဣတျဟံ ဝဒါမိ၊ ယထာ လိခိတမ် အာသ္တေ, အတော'ဟံ သမ္မုခေ တိၐ္ဌန် ဘိန္နဒေၑနိဝါသိနာံ၊ သ္တုဝံသ္တွာံ ပရိဂါသျာမိ တဝ နာမ္နိ ပရေၑွရ။
இதனால், யூதரல்லாதவர்களும் இறைவனுடைய இரக்கத்திற்காக இறைவனை மகிமைப்படுத்தும்படி இப்படிச் செய்தார். இதைப்பற்றி வேதவசனத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறது: “ஆகையால், யூதரல்லாதவர்களிடையே நான் உம்மைத் துதிப்பேன்; நான் உமது பெயருக்குத் துதிப்பாடல் பாடுவேன்.”
10 အပရမပိ လိခိတမ် အာသ္တေ, ဟေ အနျဇာတယော ယူယံ သမံ နန္ဒတ တဇ္ဇနဲး၊
மேலும், பரிசுத்த வேதம் சொல்லுகிறதாவது: “யூதரல்லாத மக்களே! கர்த்தருடைய மக்களுடன் நீங்களும் சந்தோஷப்படுங்கள்.”
11 ပုနၑ္စ လိခိတမ် အာသ္တေ, ဟေ သရွွဒေၑိနော ယူယံ ဓနျံ ဗြူတ ပရေၑွရံ၊ ဟေ တဒီယနရာ ယူယံ ကုရုဓွံ တတ္ပြၑံသနံ။
மேலும், பரிசுத்த வேதம் சொல்லுகிறதாவது: “யூதரல்லாத மக்களே, நீங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதித்துப் பாடுங்கள்.”
12 အပရ ယီၑာယိယော'ပိ လိလေခ, ယီၑယသျ တု ယတ် မူလံ တတ် ပြကာၑိၐျတေ တဒါ၊ သရွွဇာတီယနၖဏာဉ္စ ၑာသကး သမုဒေၐျတိ၊ တတြာနျဒေၑိလောကဲၑ္စ ပြတျာၑာ ပြကရိၐျတေ။
இன்னும் ஏசாயா, “ஈசாயின் வேர் முளைத்தெழும்பும். ஜனங்களை ஆளுகை செய்கிறவராய் அவர் எழும்புவார்; யூதரல்லாத மக்கள் அவரில் நம்பிக்கை வைப்பார்கள்” என்று சொல்கிறான்.
13 အတဧဝ ယူယံ ပဝိတြသျာတ္မနး ပြဘာဝါဒ် ယတ် သမ္ပူရ္ဏာံ ပြတျာၑာံ လပ္သျဓွေ တဒရ္ထံ တတ္ပြတျာၑာဇနက ဤၑွရး ပြတျယေန ယုၐ္မာန် ၑာန္တျာနန္ဒာဘျာံ သမ္ပူရ္ဏာန် ကရောတု၊
எதிர்பார்ப்பைக் கொடுக்கும் இறைவன், நீங்கள் அவரில் நம்பிக்கையாயிருக்கும்போது, உங்களை எல்லாச் சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்புவாராக. அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் உங்கள் எதிர்பார்ப்பில் பெருகுவீர்கள்.
14 ဟေ ဘြာတရော ယူယံ သဒ္ဘါဝယုက္တား သရွွပြကာရေဏ ဇ္ဉာနေန စ သမ္ပူရ္ဏား ပရသ္ပရောပဒေၑေ စ တတ္ပရာ ဣတျဟံ နိၑ္စိတံ ဇာနာမိ,
எனக்கு பிரியமானவர்களே, நீங்கள் நன்மையினால் நிறைந்தவர்கள் என்றும், அறிவில் நிறைவுபெற்றவர்களென்றும், ஒருவருக்கொருவர் அறிவுறுத்தலைக் கொடுக்கும் ஆற்றல் உடையவர்கள் என்றும் உறுதியாக நான் நம்புகிறேன்.
15 တထာပျဟံ ယတ် ပြဂလ္ဘတရော ဘဝန် ယုၐ္မာန် ပြဗောဓယာမိ တသျဲကံ ကာရဏမိဒံ၊
ஆனால் நான் சில விஷயங்களைத் திரும்பவும் உங்களுக்கு நினைப்பூட்டுவதற்காகவேத் துணிவுடன் இங்கே எழுதியிருக்கிறேன். ஏனெனில் இறைவன் எனக்குக் கொடுத்த கிருபையின்படி,
16 ဘိန္နဇာတီယား ပဝိတြေဏာတ္မနာ ပါဝိတနဲဝေဒျရူပါ ဘူတွာ ယဒ် ဂြာဟျာ ဘဝေယုသ္တန္နိမိတ္တမဟမ် ဤၑွရသျ သုသံဝါဒံ ပြစာရယိတုံ ဘိန္နဇာတီယာနာံ မဓျေ ယီၑုခြီၐ္ဋသျ သေဝကတွံ ဒါနံ ဤၑွရာတ် လဗ္ဓဝါနသ္မိ၊
யூதரல்லாதவர்களுக்கு இறைவனுடைய நற்செய்தியைப் பிரசித்தம் பண்ணும் ஆசாரிய ஊழியத்தைச் செய்துகொண்டிருக்கும் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாய் நான் இருக்கிறேன். யூதரல்லாத மக்கள் பரிசுத்த ஆவியானவராலே பரிசுத்தம் பண்ணப்பட்டு இறைவனுக்கு ஏற்ற ஒரு காணிக்கையாகும்படி, நான் அவர்களை அர்ப்பணிக்கிறேன்.
17 ဤၑွရံ ပြတိ ယီၑုခြီၐ္ဋေန မမ ၑ္လာဃာကရဏသျ ကာရဏမ် အာသ္တေ၊
ஆகவே நான் இறைவனுக்குச் செய்கின்ற இந்தப் பணியின் நிமித்தம், கிறிஸ்து இயேசுவில் பெருமிதம் அடைகிறேன்.
18 ဘိန္နဒေၑိန အာဇ္ဉာဂြာဟိဏး ကရ္တ္တုံ ခြီၐ္ဋော ဝါကျေန ကြိယယာ စ, အာၑ္စရျျလက္ၐဏဲၑ္စိတြကြိယာဘိး ပဝိတြသျာတ္မနး ပြဘာဝေန စ ယာနိ ကရ္မ္မာဏိ မယာ သာဓိတဝါန်,
யூதரல்லாதவர்களை இறைவனுக்குக் கீழ்ப்படிய வழிநடத்தும்படி, கிறிஸ்து என் மூலமாய் சொன்னவைகளினாலும், செய்தவைகளினாலும் செய்திருக்கிற
19 ကေဝလံ တာနျေဝ ဝိနာနျသျ ကသျစိတ် ကရ္မ္မဏော ဝရ္ဏနာံ ကရ္တ္တုံ ပြဂလ္ဘော န ဘဝါမိ၊ တသ္မာတ် အာ ယိရူၑာလမ ဣလ္လူရိကံ ယာဝတ် သရွွတြ ခြီၐ္ဋသျ သုသံဝါဒံ ပြာစာရယံ၊
அவை அடையாளங்களையும் அற்புதங்களையும் ஆவியானவருடைய வல்லமையினாலேயே நடந்தேறினதைத் தவிர, வேறு எதையும் குறித்து நான் பேசத்துணிய மாட்டேன். எனவே எருசலேமிலிருந்து இல்லிரிக்கம் என்னும் நாடுவரைக்கும், முழுவதுமாய் நான் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தேன்.
20 အနျေန နိစိတာယာံ ဘိတ္တာဝဟံ ယန္န နိစိနောမိ တန္နိမိတ္တံ ယတြ ယတြ သ္ထာနေ ခြီၐ္ဋသျ နာမ ကဒါပိ ကေနာပိ န ဇ္ဉာပိတံ တတြ တတြ သုသံဝါဒံ ပြစာရယိတုမ် အဟံ ယတေ၊
வேறொருவர் போட்ட அஸ்திபாரத்தின்மேல் நான் கட்டக்கூடாது என்பதற்காக கிறிஸ்துவைக்குறித்து அறிவிக்கப்படாத இடங்களிலே, நற்செய்தியை அறிவிப்பதே எப்பொழுதும் என் விருப்பமாயிருக்கிறது.
21 ယာဒၖၑံ လိခိတမ် အာသ္တေ, ယဲ ရွာရ္တ္တာ တသျ န ပြာပ္တာ ဒရ္ၑနံ တဲသ္တု လပ္သျတေ၊ ယဲၑ္စ နဲဝ ၑြုတံ ကိဉ္စိတ် ဗောဒ္ဓုံ ၑက္ၐျန္တိ တေ ဇနား။
வேதவசனத்தில் எழுதியிருக்கிறபடியே: “அவரைக்குறித்து அறிவிக்கப்படாதவர்கள் காண்பார்கள், கேள்விப்படாதவர்கள் விளங்கிக்கொள்வார்கள்.” இதன்படியே நான் இப்படிச் செய்தேன்.
22 တသ္မာဒ် ယုၐ္မတ္သမီပဂမနာဒ် အဟံ မုဟုရ္မုဟု ရ္နိဝါရိတော'ဘဝံ၊
இதனாலேயே நான் உங்களிடம் வருவதற்கு பலமுறைகள் நினைத்தும் அடிக்கடி தடைகள் ஏற்பட்டன.
23 ကိန္တွိဒါနီမ် အတြ ပြဒေၑေၐု မယာ န ဂတံ သ္ထာနံ ကိမပိ နာဝၑိၐျတေ ယုၐ္မတ္သမီပံ ဂန္တုံ ဗဟုဝတ္သရာနာရဘျ မာမကီနာကာင်္က္ၐာ စ ဝိဒျတ ဣတိ ဟေတေား
ஆனால் இப்பொழுதோ இந்தப் பகுதிகளில் நான் பணிசெய்ய வேண்டிய எந்தவொரு இடமும் இல்லை. அத்துடன் பலவருடங்களாக நான் உங்களைக் காணவும் ஆவலாயிருக்கிறேன்.
24 သ္ပာနိယာဒေၑဂမနကာလေ'ဟံ ယုၐ္မန္မဓျေန ဂစ္ဆန် ယုၐ္မာန် အာလောကိၐျေ, တတး ပရံ ယုၐ္မတ္သမ္ဘာၐဏေန တၖပ္တိံ ပရိလဘျ တဒ္ဒေၑဂမနာရ္ထံ ယုၐ္မာဘိ ရွိသရ္ဇယိၐျေ, ဤဒၖၑီ မဒီယာ ပြတျာၑာ ဝိဒျတေ၊
எனவே நான் ஸ்பெயினுக்குப் போகும்போது, உங்களிடமும் வருவதற்குத் திட்டமிட்டிருக்கிறேன். போகும் வழியில் உங்களையும் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கின்றேன். உங்களோடு சிறிது காலத்தை மகிழ்ச்சியாய் கழித்துவிட்டு, அங்கிருந்து உங்கள் உதவியோடு, எனது பயணத்தைத் தொடருவதற்கு தீர்மானித்திருக்கிறேன்.
25 ကိန္တု သာမ္ပြတံ ပဝိတြလောကာနာံ သေဝနာယ ယိရူၑာလမ္နဂရံ ဝြဇာမိ၊
ஆனால் இப்பொழுது எருசலேமில் இருக்கிற பரிசுத்தவான்களுக்கு பணிசெய்வதற்காக நான் அங்கு போகின்றேன்.
26 ယတော ယိရူၑာလမသ္ထပဝိတြလောကာနာံ မဓျေ ယေ ဒရိဒြာ အရ္ထဝိၑြာဏနေန တာနုပကရ္တ္တုံ မာကိဒနိယာဒေၑီယာ အာခါယာဒေၑီယာၑ္စ လောကာ အဲစ္ဆန်၊
மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள திருச்சபைகள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களிடையே ஏழைகளாய் இருக்கிறவர்களுக்கு உதவிசெய்ய முன்வந்திருக்கிறார்கள்.
27 ဧၐာ တေၐာံ သဒိစ္ဆာ ယတသ္တေ တေၐာမ် ၒဏိနး သန္တိ ယတော ဟေတော ရ္ဘိန္နဇာတီယာ ယေၐာံ ပရမာရ္ထသျာံၑိနော ဇာတာ အဲဟိကဝိၐယေ တေၐာမုပကာရသ္တဲး ကရ္တ္တဝျး၊
அவர்கள் அதைச் செய்ய விருப்பம் கொண்டிருக்கிறார்கள்; உண்மையில் அப்படிச் செய்வதற்கு அவர்கள் கடமைப்பட்டும் இருக்கிறார்கள். ஏனெனில் யூதரல்லாத மக்கள் யூதர்களுடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களில் பங்கு பெற்றிருப்பதினால், இவர்கள் தங்கள் உலகப் பொருட்களை யூதர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
28 အတော မယာ တတ် ကရ္မ္မ သာဓယိတွာ တသ္မိန် ဖလေ တေဘျး သမရ္ပိတေ ယုၐ္မန္မဓျေန သ္ပာနိယာဒေၑော ဂမိၐျတေ၊
எனவே நான் இந்தப் பணியை முடித்துக் கொண்டபின்பு, அவர்கள் இந்தப் பண உதவியைப் பெற்றுக்கொண்டார்கள் என்பதையும் உறுதிப்படுத்தியபின், ஸ்பெயினுக்குப் போகும் வழியில் உங்களையும் வந்து சந்திப்பேன்.
29 ယုၐ္မတ္သမီပေ မမာဂမနသမယေ ခြီၐ္ဋသျ သုသံဝါဒသျ ပူရ္ဏဝရေဏ သမ္ဗလိတး သန် အဟမ် အာဂမိၐျာမိ ဣတိ မယာ ဇ္ဉာယတေ၊
நான் உங்களிடம் வரும்போது, கிறிஸ்துவினுடைய முழுநிறைவான ஆசீர்வாதத்துடன் வருவேன் என்பது நிச்சயம்.
30 ဟေ ဘြာတၖဂဏ ပြဘော ရျီၑုခြီၐ္ဋသျ နာမ္နာ ပဝိတြသျာတ္မာနး ပြေမ္နာ စ ဝိနယေ'ဟံ
பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், பரிசுத்த ஆவியானவருடைய அன்பினாலும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறதாவது: “எனக்காக இறைவனிடத்தில் மன்றாடி, எனது போராட்டத்தில் என்னுடன் இணைந்துகொள்ளுங்கள்.
31 ယိဟူဒါဒေၑသ္ထာနာမ် အဝိၑွာသိလောကာနာံ ကရေဘျော ယဒဟံ ရက္ၐာံ လဘေယ မဒီယဲတေန သေဝနကရ္မ္မဏာ စ ယဒ် ယိရူၑာလမသ္ထား ပဝိတြလောကာသ္တုၐျေယုး,
யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளிடமிருந்து நான் தப்புவிக்கப்பட வேண்டும் என்றும், எருசலேமில் நான் செய்கின்ற பணி அங்கிருக்கிற பரிசுத்தவான்களுக்கு ஏற்புடையதாய் இருக்கவேண்டும் என்றும் மன்றாடுங்கள்.
32 တဒရ္ထံ ယူယံ မတ္ကၖတ ဤၑွရာယ ပြာရ္ထယမာဏာ ယတဓွံ တေနာဟမ် ဤၑွရေစ္ဆယာ သာနန္ဒံ ယုၐ္မတ္သမီပံ ဂတွာ ယုၐ္မာဘိး သဟိတး ပြာဏာန် အာပျာယိတုံ ပါရယိၐျာမိ၊
அப்பொழுது இறைவனுடைய திட்டத்தின்படியே நான் மகிழ்ச்சியுடன் உங்களிடம் வந்து, உங்களுடன் சேர்ந்து உற்சாகமடைவேன்.
33 ၑာန္တိဒါယက ဤၑွရော ယုၐ္မာကံ သရွွေၐာံ သင်္ဂီ ဘူယာတ်၊ ဣတိ၊
சமாதானத்தையும் அமைதியையும் கொடுக்கும் இறைவன் உங்கள் அனைவருடனும் இருப்பாராக” ஆமென்.

< ရောမိဏး 15 >